(BABEL-உலகசினிமா18+)கோழி குப்பையை கலைத்தது போன்ற ஒரு திரைக்கதை...

அம்மாவசைக்கும் அப்துல்காதருக்கும் சம்பந்தம் உண்டா? என்று கேட்க வைக்கும் திரைக்கதை. அதை செதுக்கி இருக்கும் விஷயத்தில் இந்த படத்தின் இயக்குநர் பெரும் வெற்றி பெற்றுள்ளார்.... அதே போல் கவிதைதனமான காட்சி அமைப்புகள் மூலம் மேலும் உயர்ந்து இருக்கின்றார்....


ஜப்பான்,மொராக்கோ,அமெரிக்கா,மெக்சிக்கோ இந்த நான்கு நாடுகளில் நடக்கும் முன்னுக்கு பின் முரனான சம்பவங்களை, மல்லிகை சரம் போல் ஒன்றுக்கு ஒன்று சம்மந்தபடுத்தி ,சரம் கோர்த்து படையல் வைத்து இருக்கின்றார்கள்...


எல்லா பொருட்களுக்கும் ஒரு வரலாறு நிச்சயம் உண்டு... அதன் தரம் ,அது ஜனித்த இடம், அதன் தன்மை என்று நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் எல்லா பொருட்களுக்கும் ஒரு வரலாறு இருக்கத்தான் செய்கின்றது....

இந்த படத்தில் ஒரு துப்பாக்கியின் வரலாறு பற்றி மண்டை குழப்புவது போல் குழப்பி, சுவாரஸ்யமாக கதை சொல்லி இருக்கின்றார்கள்....

ஒரு விளிம்புநிலை குடும்பம்,ஒரு செல்வசெழிப்புள்ள இரண்டு குடும்பம் அவர்களின் பிரச்சனையை மையப்படுத்தி அதன் மூலம் திரைக்கதை அமைத்து இருக்கின்றார் இயக்குனர்....
Babel படத்தின் கதை இதுதான்....


மொரோக்கோ பாலைவண தேசத்தில் ஆடு் மேய்த்து குடும்பம் நடத்தும் அப்துல்லா என்பவருக்கு ஒரு பெண் இரண்டு மகன்கள்.... ஆடுகளை ,தினமும் பாலைவனத்து நரிகள், அப்துல்லா ஆட்டு மந்தையை டிபன் சாப்பிடும் இடமாகவும் டின்னர் சாப்பிடும் இடமாகவும் அந்த நரிகள் தேர்ந்து எடுத்து, அப்துல்லாவுக்கு டார்சர் கொடுக்கின்றன... அதனால் பக்கத்து ஊரில் இருக்கும் இப்ராஹீம் என்பவரிடம் இருக்கும் ரைபிளை விலைக்கு வாங்கி தனது இரு மகன்களிடமும் நரி சுடுவதற்க்கு கொடுக்க....நிற்க்க

ஜப்பானில் பெரிய பணக்காரார் Yasujiro Wataya (Kōji Yakusho அவருடைய ஒரே மகள் Chieko Wataya (Rinko Kikuchi) பருவப்பெண் அவளுக்கு காது கேட்காது... அவள் சமுகத்தால் புறக்கனிக்க படுகின்றாள், பல இடங்களில் அவமானப்படுத்த படுகின்றாள்...அவள் வயது ஒத்த ஆண்கள் கூட அவள் குறைப்பாட்டை கேலி பேச, பொறுத்துக்கொள்ள முடியாமல் அவள் காமத்தை கையில் எடுக்கின்றாள்...

கீழே உள்ளாடை போடாமல் தன உறுப்பினை காட்டுவது மூலம் பல ஆண்கள் அவளை ரசிப்பதை தெரிந்து, அவள் ஆண்களை மயக்க ஒரே வழி காமமும், அடை அவிழ்ப்பு என்பதை தெரிந்து ,அவள் யாரிடமாவது தன் இச்சை தீர்க்க ஆண் துனை தேடுகின்றாள்... அவள் அம்மா வேறு சமீபத்தில் தற்க்கொலை செய்து கொண்டு விட்டாள்....அதரவு தேடும் அந்த காது கேட்காத பெண் தேர்ந்து எடுத்த வழி காமம்... நிற்க்க....அமெரிக்காவில் தன் இரு பிள்ளைகளையும் வீட்டு வேலைக்கார பெண்ணிடம் விட்டு விட்டு மொரோக்காவில் சுற்றுபயணம் மேற்கொள்ளும் ஜோடிRichard Jones (Brad Pitt) Susan Jones (Cate Blanchett), இருவரும் பேருந்தில் போகும் போது அவள் ஜன்னல் ஓரச்சீட்டில் உட்கார்ந்து இருப்பாள்.....
அந்த பஸ் வரும் எதிர் திசை மலையில் அந்த ரைபிளை கையில் வைத்துக்கொண்டு, அந்த ஆட மேய்க்கும் சிறுவர்கள் இருவரும்
“இந்த ரைபிள் மூனு கிலோமீட்டர் தூரம் சூடும்னு அப்பா சொன்னாரே”
என்று ஒருவன் சொல்ல, அதை ஒருவன் விளையாட்டுக்கு டெஸ்ட் செய்ய மீதியில் வெண்திரையில் காண்க....


படத்தின் சுவாரஸ்யங்களில் சில....


கோழி குப்பையை கலைப்பது போல், கதையை கலைத்து போட்டு அதனைஒன்றுக்கு ஒன்று தொடர்பு படுத்தி திரைக்கதையாக்கும் ஸ்டைல், இயக்குனர் அமரோஸ்பேரோஸ்க்கு சொந்தமானது....

அவர் இந்த படம் போல் கதையை குப்பை போல் கலைத்து போட்டு திரைக்கதை கோர்க்கும் பாணி, படமான 21 கிராம்ஸ் விரைவில் நமது வலைதளத்தில்....

இது போன்ற திரைக்கதையின் ஆதார சுருதி என்று பார்த்தால் அது திரையுலக பிதாமகர் அகிரா குரோசேவையே சாரும்.....

இந்தபடம் சிறந்தபடமாக கோல்டன் குளோப் விருது பெற்றது..., எழு அக்காடமி விருதுக்கு இந்த படம் பரிந்துரைக்கபட்டது....
ஒரே ஒரு அமெரிக்க பிரஜை பிரச்சனையில் இருக்கின்றான் என்றால், அந்த தேசம் எப்படி எல்லாம் துடிதுடித்து போய் விடுகின்றது.... ஆஸ்த்திரேலியாவில் தினமும் நமது மாணவ செல்வங்களின் பருப்புகளை இறைத்த வண்ணம் உள்ளனர்...

நமது மாணவ செல்வங்களும், உதை வாங்கி உதடு வீங்கி உப்பிய முகத்தோடு நாம் இதுவரை பலரை பார்த்து விட்டோம்...இன்னமும் நம் அரசு கண்டனம் தெரிவித்து கொண்டு இருக்கின்றது...

சரிடா, இலங்கையில இருக்கறவன் தமிழன் அவனை கேட்க நாதியில்லைன்னு பார்த்தா? இந்திய மாணவர்கள் கதியும் நாதி அத்துதான் போயிடுச்சி....

அந்த காது கேட்காத ஜப்பான் பெண் முழுநிர்வாணமாய் அந்த போலிஸ் ஆபிசர் முன் வந்து நிற்க்க, அவன் அந்த பெண்ணை குழந்தையை போல் டிரிட் செய்வது கவிதையான காட்சி...

அதே போல் நிர்வாணமாய் தன் மகள் பால்கனியில் நின்று இருக்க மெல்ல போய் ஆதராவாய் அனைக்கும் அந்த அப்பன் கேரக்டரும் அதன் பின் கேமரா சூம் பேக் ஆகும் காட்சியும் கவிதை.....

ஆட்டுக்கார அப்துல்லா வீட்டில் இரவில் உணவு உண்ணும் காட்சியும் பாலைவண வெளிப்புற காட்டசிகளும் நல்ல ஒளிப்பதிவு கவிதை என்பேன்...

பிராட் பிட் மற்றும் வேலைக்காரியாக நடித்த பெண் நடிப்பில் வெளுத்து வாங்கி இருக்கின்றார்கள்...

அடக்கபட்ட காமம், பறக்கனிப்பின் வலி, எல்லை மீறும் என்பதை மிக அழகாக பல காட்சிகளில் சொல்லி இருக்கிறார் இயக்குனர்...

சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை ....அந்த வேலைக்கார பெண்ணை விசாரிக்கும் போது அந்த வாக்கியத்தின் அர்த்தத்தை நீங்களே உணர்வீர்கள்.......

வலியால் துடிக்கும் பெண்ணிடம் சுருட்டை பத்த வைத்து அவளை இரண்டு இழுப்பு இழுக்க வைக்கும் போது அவளுக்கு அந்த போதையில் வலி மறக்கும் போது, அந்த பாலைவணகிழவி நம் நெஞ்சில் நிற்க்கின்றார்...

ஹெலிகாப்டரில் ஏறப்போகும் போது செய்த உதவிக்கு நன்றி தெரிவித்து பணத்தை அந்த கெய்டு இடம் பிராட் பிட்அள்ளிக் கொடுக்கும் போது அதனை மறுப்பது கவிதை... அதே போல் அந்த காடசிகளின் போது பின்னனி இசை சூப்பர்...

அந்த இரண்டு சிறுவர்களில் இளையவன், தன் அக்கா குளிப்பதை மறைந்து இருந்து பார்த்து ரசிப்பதும், அதனை அவள் கண்ட கொள்ளாமல் விடுவதும், ஆடு மேய்க்கும் போது கைமைதுனம் செய்வதும்,அதனை பிரச்சனையின் போது அண்ணன்காரன் குடும்பத்தில் போட்டு உடைப்பதும், அதற்க்கு அந்த அப்பா கேரக்டர் வெளிபடுத்துவது நடிப்பு அல்ல.... அது வாழ்ந்த வாழ்கையை அப்படியே காட்டி இருப்பார்....


எல்லா காட்சிகளையும் மிக இயல்பாக எடுத்ததும் எந்த காட்சிக்கும், கொஞ்சமும் காம்பிரமைஸ் பண்ணிக்கொள்ளாமல் படம் எடுத்துள்ளதற்க்கு இயக்குனரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்...
Directed by Alejandro González Iñárritu
Produced by Steve Golin
Jon Kilik
Written by Guillermo Arriaga
Starring Brad Pitt
Cate Blanchett
Gael García Bernal
Kōji Yakusho
Music by Gustavo Santaolalla
Editing by Douglas Crise
Stephen Mirrione
Distributed by Paramount Vantage
Release date(s) May 23, 2006 (premiere at Cannes)
October 27, 2006 (US, limited)
November 10, 2006 (US, wide)
November 10, 2006 (Mexico)
November 15, 2006 (France)
December 7, 2006 (MIFF)
December 26, 2006 (Australia)
January 19, 2007 (UK)
April 28, 2007 (Japan)[1]
Running time 143 minutes
Country Japan
Mexico
Morocco
USA
Language English
Spanish
Arabic
French
Japanese
Japanese Sign Language
Berber
Budget US$25 million (estimated)
Gross revenue $135,330,182

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி....

சாண்ட்விச் (29,06,09)

தற்போதுதான் தெரிய வந்தது திரு வடகரை வேலன் அவர்கள் பதிவர் கார்க்கி அவ்ர்கள் காக்டெயில் என்ற அந்த தலைப்பில் வெகுகாலமாய் எழுது வருகிறார் என்று சொன்னார்... அதனால் கார்க்கியிடம் இப்படி நடந்து விட்டது என்ற வருத்தப்பட்டடேன்...

அதற்க்கு அவர் பெருந்தன்மையாக அது என்ன காப்பிரைட்டா? என்றும் கலக்கல் காக்டெயில் தலைப்பால் குழுப்பம் வராது என்றார் இருப்பினும்...எப்போதுமே நாம் கொஞசம் கோபத்தோடும், எகனை முகனையாகவும் எழுதுவோம் அதை பதிவர் கார்க்கியை பாதித்து விடக்கூடாது அல்லவா? அதனால் தலைப்பை சாண்ட்விச் என்று மாற்றிவிட்டேன்... கார்கிக்குநன்றி




ஒரு நல்ல பேர் கேட்டதற்க்கு நிறைய போ் நிறைய ஐடியாக்கள்,எல்லாம் சொல்லி,ஒரு வழியாக பதிவர்கள் முரளி தண்டோரா,கேபிள் சொன்ன சாண்ட்விச் என்ற தலைப்பில் சில, பல, சின்ன சின்ன விஷயங்கள் மற்றும் ஜோக் எல்லாம் இதில் எழுதபோகின்றேன்.... அதே போல் உள்ளே இருக்கும் விஷயஙகளுக்கு ஆல்பம், சான்ட்விச் சால்னா போன்ற பெயர்களை பரிந்துரைத்த கலையரசன்,கேபிள்,முரளிகண்ணன்,தண்டோரா,அக்னிபார்வை போன்ற பதிவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்....


மற்றபடி தலைப்பு கேட்டதும் வாரி வழங்கி, ஐடியா கொடுத்த அனைத்து பதிவர்களுக்கும் வாசக நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல...

ஆல்பம்...
சில நாட்கள் முன்வரை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற நம்பிக்கையை, இப்போது வரும் சில செய்திகள் என்னையும் அசைத்து பார்க்கின்றன... உண்மை சுடும் என்பது இதுதானோ.....போன சனிக்கிழமை ஜுனியர் விகடனில் தலை மேல் வெட்டுப்பட்ட படம் பார்த்த போதும் அதன் செய்திகளை வாசித்த போதும் மனம் ரொம்பவும் வருத்தம் கொள்ளசெய்கின்றது.....


மைக்கேல் ஜாக்சன் பாடல் பிரபலம் ஆன நேரம் அது.... அப்போது எங்கள் அத்தை வீட்டில் டிவி வாங்கிய நேரமும் கூட...அப்போது ஒரு மைக்கேல் ஜாக்சன் பாடல் டிவியில் ஒளிபரப்பானது என் அத்தை...
“ஏன்டா எப்ப பார்த்தாலும் அவன் அங்கயே கையை வச்சி்கிட்டு ஆடறான்? அதை போய், வச்சகண்ணு மாறாம பாத்துகிட்டே இருக்க.... இரு சாயிந்திரம் உங்க அப்பன் வரட்டும் அவன்கிட்ட சொல்லறென்”
என்று என் அத்தை பயமுறுத்தியது இன்னும் என் நினைவுகளில்....எப்படி இருப்பினும் வீடியோ ஆல்பங்களில் மைக்கேல் ஆல்பம் என்றால், எப்போது வேண்டுமானாலும் இமைக்க மறந்து பார்த்துக்கொண்டே இருக்கலாம்....

மிக்சர்...

பதிவர்கள் பலரின் படைப்புகள் சிறுகதைகளாக வாரப்பத்திரிக்கைகளில் வந்தாலும் பதிவர் லக்கி அவர்கள் குமுதம் ரிப்போர்டரி்ல் தொடராக சைபர் கிரைம் எனும் தலைப்பில் எழுதுவது பாராட்டுக்கு உரியது.... மிக மிக சந்தோஷமாகவும் இருக்கின்றது... சகபதிவர் கண்களுக்கு எதிரில் வளர்வது குறி்த்து மிக்க மகிழ்ச்சி அவருக்கும் அவர் வாசகர்களுக்கு என் வாழ்த்துக்கள்....


விக்ரமாதித்யன் வேதாளம் கதையாக தொடர்ந்து கதை சொல்லும் கேபிள் விரைவில் வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..... அதே போல் கால சூழலில் சில பல விஷயங்களை விட்டு வெளியே வந்து அதே துறையில் திரும்பவும் சாதிக்க வாய்பு கிடைக்க பெற்ற தண்டோராவுக்கும்...என் வாழ்த்துக்கள்....


ஒரு பதிவர் அதுவும் சபையில் மற்ற பதிவருடைய எழுத்துக்களை சிலாகித்து பேச, நல்ல மனசு வேண்டும். அந்த வகையில் நேற்று பதிவர் கனேஷ் அவர்கள்,நர்சிம் எழுத்துக்களை சிலாகித்த பேசியது எனக்கு மகிழ்வை தந்தது...வாழ்த்துக்கள் நர்சிம் மற்றும் கனேஷ்.....

சால்னா...
அந்த கல்லூரியில் பாயாலஜி வகுப்பு நடந்து கொண்டு இருந்தது... பேண்ட் போட்ட வாத்தியார் எல்லோரும் ஆணின் ரீபுரெடெக்ஷன் உறுப்பை வரைந்து பாகம் குறிக்க வேண்டிக்கொண்டார்...

அப்போது கடைசி பெஞச் மாணவர்கள் ...

“சார், முதல்ல உங்க பேண்ட் ஜிப்பை போடுங்க பஸ்ட் பெஞ்சுல உட்கார்ந்து இருக்கற பொம்பளை பசங்க, அதை காப்பி அடிச்சி அப்பட்டமா அப்படியே வரையுதுங்க என்றனர்....

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

சென்னை பதிவர் சந்திப்பு ஒரு பார்வை (28,06,09) புகைபடங்களுடன்...

இந்த முறையும் பதிவர் சந்திப்பு சொன்ன நேரத்துக்கு துவங்காமல் சரியாக சொல்வது என்றால் 5•40க்கு பதிவர் சந்திப்பு வட்டம் தொடங்கியது...
இந்த முறை பேசும் போது சரியாக தலைப்பு இல்லாமல் என்ன பேசுவது என்று ஆள் ஆளுக்கு மண்டையை பிய்த்து கொண்டு இருந்த போது, எதிரில் அக்னிபார்வையும்,அதிஷாவும் உட்கார்ந்து இருந்தார்கள்....

நான் அதிஷாவிடம் கதை ரொம்ப நன்றாக இருப்பதாக சொல்ல... அப்போது பார்த்து அக்னி அதிஷா, இருவரும் ஈஷிக்கொண்டு உட்கார்ந்து இருக்க, பதிவர் வெண்பூ சின்னதாக கொடு காட்ட, அதிஷா அக்னிபார்வை இருவரையும் பதிவர்கள் ஓட்டு ஓட்டு என்று ஓட்டி விட்டார்கள்...

அதன் பிறகு சைதாப்பேட்டை சாந்தி மேட்டர் போஸ்டர் பற்றி கேபிள் சங்கர் கருத்து தெரிவிக்க அவரை எல்லோரும் ஓட்டினார்கள்... நான் முதன் முறையாக சமுகப்பொறுப்புடன் பேசும் கேபிளை பேசவிடுங்கள் என்று சொன்னேன்...அப்புறமும் அவரை ஓட்டிக்கொண்டுதான் இருந்தோம்....


தமிழ் ஸ்டுடியோ டாட்காம் சார்பாக சிறந்த பதிவராக தேர்ந்து எடுக்கபட்ட பதிவர் நர்சிமுக்கு, மூத்த பதிவர் டோண்டு கையால் பரிசை கொடுக்க சொன்னார் தண்டோரா....நடுவில் டீ விற்க்கும் பழனி என்பவர் டீ வேண்டுமா? என்று கேட்க நர்சிம் எல்லோருக்கும் கொடுக்க சொல்லி அதற்க்கான தொகையையும் அவரே கொடுத்தார்.... இதில் டெஸ்ட் பீசாக எனக்கு முதலில் டீ வழங்கப்பட்டு நான் குடித்த பிறகே அனைவரும் குடித்தனர்.....
பதிவர்களில் நேற்று நல்ல பாமில் இருந்தது... வெண்பூ,நர்சிம்,புருனோ மற்றும் தண்டோரா.....எல்லா கேள்வி முடிவுகளிலும் அல்லது பதில் முடிவுகளில் எதாவது ஒரு வார்த்தை சொல்லி நக்கல் விட்டுக்கொண்டு இருந்தார்கள்...நர்சிம் ஆயுத எழுத்து நல்லபடமா? என்று கேட்க நான் ஆதார தழுவல் இல்லாமல் யாராலும் படம் எடுக்க முடியாது... இங்கு யாரும் சுயம்பு அல்ல... யாரோ,எங்கோ, பார்த்த, படித்த, கேட்ட விஷயங்கள்தான் இங்கு மட்டும் அல்ல, உலகம் எங்கும் திரைப்படங்களாக வருகின்றன என்றேன்.... அந்த வகையில் கேபிளும் நானும் அது நல்லபடம் என்றோம்....
லக்கியின் ரிப்போர்டர் தொடர் குறித்து பாராட்டு தெரிவித்து ,டிரிட் கோராப்பட்டது...
எழுத்தாளர் பாஸ்கர்சக்தி மற்றும் பதிவர் தங்கமணி பிரபு போண்றவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு தங்கள் தரப்பு கருத்துக்களை எடுத்து வைத்தனர்.....
ஹெச்பியில் வேலைபார்க்கும் ஒரு பதிவர் கவிதை சொன்னார்... உலக பொருளாதாரம் குறித்து கொஞ்சம் பேசப்பட்டது...

எப்போதும் போல் பதிவர் வருகை பற்றி டோண்டு சார் குறிப்பெடுத்துக்கொண்டார்.... அவர் நடேச முதலியார் பூங்கா பற்றியும் அதில் உள்ள ஜாதி பெயருடன்தான் அதை அழைக்க வேண்டும் என்று டோண்டு கூற நர்சிம் எப்படி சொல்லாம் என்று கேட்க ? சில பல விளக்கங்களுடன் வேறு கேள்விக்கு போனோம்....

நான் போட்டோ எடுத்தேன்... என் போட்டோவை “என் தமிழ் ஸ்ரீ” எடுத்தார்... அவருக்கு ராகவன் நைஜீரியா போட்டோ சம்பந்தமாக அவருக்கு நன்றி கூறினார்....
போட்டோ எடுத்து பதிவு போடும் போது பெயர் போட வேண்டும் என்று பல வெளிநாட்டு பதிவர்கள் கோரிக்கைபற்றி, நான் கேட்ட போது பதிவர் லக்கி பெயர் போட வேண்டாம் என்றும்.. அப்படி போட்டால் ? யார் அந்த பதிவர் என்று தெரிந்து கும்முவார்கள் என்றும் அதனால் போட்டோவிற்க்கு பெயர் போடவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளபட்டது....பாலபாரதிஅவருடைய வலைப்பக்கம் திரும்ப வந்தது குறி்த்து சந்தோஷம் கொண்டார்....அவர் போட்டோ எடுக்கும் போது எதோ செய்து கொண்டு இருக்க...
“போட்டோ எடுக்கும் போது எங்காவது பாரு ,அப்புறம் என்போட்டாவை போடலைன்னு பின்னுட்டம் போடு... ”
என்று நான் அன்பாய் கடிந்து கொள்ள அப்புறம் போஸ் கொடுத்தார்...

பைத்தியக்காரனிடம் சில கேள்விகளை நர்சிம்,புருனோ மற்றும் லக்கி கேட்க சபையில் வேண்டாம் என்று மறுதளித்தார்.... ஆசிப் அண்ணாச்சி கொஞ்சம் லேட்டாக வந்து கலந்து கொண்டார்.... ஆசிப்பிடம் அதிஷா..
“ அண்ணாச்சி இந்த பார்க்கல கிஸ் அடிக்க சான்ஸ் இருக்கு, பிஸ் அடிக்க சான்ஸ் இல்லை”
என்று சொல்லி விட்டு சான்ஸ் தேடி அதிஷா எழந்து போனார்.....


காவேரி கனேஷ் பதிவர் நர்சிம் எழுத்துக்களை பாராட்டினார்...
பதிவர் தன்டோரா டைமிங் காமெடி செய்து அசத்தினார்.... பட்டர்பிளை,தன்டோரா இருவரிடமும் மட்டும் கொஞ்சம் என் வேலை குறித்து பேசினேன்...

டீக்கடையில் எப்போதும் போல் நான், டாக்டர் புருனோ, அக்னி போன்றவர்கள் ஒரு வட்டமேசை போடுவோம் அதில் இந்த முறை காவேரி கனேஷ் கலந்து கொண்டார்... ஈழம் பற்றி கனேஷ் அவர்கள் நிறைய தகவல்களை சொன்னார்....அதே போல் நிறைய பெயர்கள் மறந்து விட்டேன்... மேலும் நிறைய தகவல் பெற டோண்டு சார் வலைதளத்துக்கு செல்லுங்கள்...

பைத்தியக்காரனிடம் அடுத்த படம் என்ன ? பல பேர் கேட்க நாங்கள் அஞ்சரைக்குள்ள வண்டி என்று சொன்ன போது பதிவர்கள் அனைவரும் கொள்...

ஆசிப் அண்ணாச்சி ஊருக்கு போகப்போவதாக சொல்லி எங்களிடம் விடைபெற்றார்.... அதிஷா, லக்கி, கேபிள் போன்றவர்கள் விடை பெற்று சென்றார்கள்.... கேபிள் என்னை, தண்டோரா சென்ற தாக சாந்தி இடத்திற்க்கு அழைக்க நான் முறையான அழைப்பு இல்லை என்று மறுத்துவிட்டேன்...எப்போதும் போல்கடைசியாக நான், அக்னி, புருனோ அந்த இடம் விட்டு அகன்றோம்....

அப்புறம் டாக்டரை மாம்பலம் ஸ்டேஷனில் இறக்கிவிட என் இருசக்கர வாகனத்தில் அவரை அழைத்து செல்ல, என்னை பற்றி திடிர் ஞாபகம் வந்து தண்டோரா என்னை, அழைக்க எனக்கு வேலை இருப்பதாக சொல்லி விட்டு புருனோவை அழைத்துக்கொண்டு சென்றேன்....

போகஸ்...1

துரைசாமி சப்வே அருகில் அந்த இரு பெண்கள் சுடிதார் அணிந்து கொஞசம் வெள்ளை தோலுடன் இருந்தனர்... அவர்கள் குடு்ம்பத்துடன் நடந்து போகும் போது, யாரோ நடந்து போன இரண்டு பேரில் ஒருவன், அந்த பெண்களின் உடம்பில் எதையோ அமுக்கி வைக்க...
அமுக்கினவன் ஓடி விட... கூட வந்தவன் மாட்டிக்கொள்ள அவன் முகத்தில் சொத்,நச்,பட் போன்ற சத்தங்கள் கேட்க்கொண்டு இருந்தது....
அந்த சுடிதார்பெண்...
“ இவன் இல்லை, அந்த ராஸ்கல் ஓடிட்டான்” என்று அவனை அடிக்காமல் தடுத்துக்கொண்டு இருந்தாள் பாதிக்கபட்ட அந்த சுடிதார் பெண்...
டாக்டர் புருனோ சொன்னார்....
“என்னால சட்னு அங்க என்ன நடக்குதுன்னு புரிஞ்சிக்க முடியலை” என்றார்....
ஏன்னா அது அப்படித்தான்....சிலதை சிலராலதான் சட்னு புரிஞ்சிக்க முடியும் என்றேன்....


போகஸ்..2,3,4,......

எல்லோரையும் உசுப்பிவிட்ட பதிவர் முரளி கண்ணன் வரவில்லை...

அந்தகால ரஜினி ஹேர் ஸ்டைலில் வந்தார்.. அக்னி பார்வை....

இந்த முறை லக்கி அதிகம் பேசவில்லை...

பாஸ்கர் சக்தி எழுத்தாளர் ஞானி வீ்ட்டு கேனி இலக்கிய கூட்டம் பற்றி அறிமுகம் செய்தார்....



அன்புடன்/ஜாக்கிசேகர்

தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

விஜயகாந்த் கேட்ட நறுக் கேள்வி???


இது சிரிக்க மட்டுமே......



ஹாலிவுட் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதுவும் சென்னையில் படம் தயாரிக்க விரும்பியது...

பொதுவாக ஹாலிவுட்காரர்கள் கதாபாத்திரங்கள் மூக்கை சிந்துவதில் இருந்து முகம் துடைப்பது வரை, எல்லாவற்றையும் ரைட்டிங்கில் அதாவது ஸ்ரிரிப்டில் இருக்க வேண்டும் என்று ஆசைபடுபவர்கள்....
அது நம் நாட்டில் வேலைக்கு ஆக வில்லை... அதனால் அவர்கள் வீம்புக்கு தமிழ் நாட்டில் ஒரு படம் எடுக்க அசைபட்டார்கள்....

சரி இந்தியாவில் ஏற்க்கனவே ஷுட்டிங் எடுத்த அனுபவம் கொண்ட ஸ்லம் டாக் இயக்குனர் டேனிபாயலை இயக்குநராக புக் செய்யதார்கள். வார்னர் நிறுவனம்,இயக்குநர் டேனியிடம்,

“ செலவை பற்றி கவலை படவேண்டாம், படம் மிக மிக பிரமாண்டமாக இருக்க வேண்டும்”

என்று இயக்குநரை வேண்டிக்கொண்டார்கள்....


அவர் இசைக்கு நம்ம இசைப்புயலை புக் செய்து கொண்டார்.....நம்ம ஜாக்கிசான்,ஆர்னால்டு,டாம்குரூஸ் ஹீரோக்களாகவும், ஏன்ஜலினா ஜுலியை ஹீரோயினாக புக் செய்து ஏவிஎம் ஸ்டுடியோ பிள்ளையார்கோவில்ல பூஜை போடாம, நம்ம தமிழ் நாட்டுல ஷுட்டிங் ஆரம்பிச்சு போயிகிட்டே இருந்துச்சு.....

இது ஒரு ஆக்ஷன் படம்....

நம்ம கோயம்பேடு பஸ்டாண்டு பக்கத்துல அதாவது பழைய விஜயகாந்த் கல்யாண மண்டபமா இருந்து, இப்போது அவரோட கட்சி ஆபிசா மாறிட்ட பில்டிங்கோட பக்கத்து ரோட்ல சேசிங் சீன் எடுத்துக்கிட்டு இருந்தாங்க...

அங்க வந்த நம்ம போக்குவரத்துதுறை அதிகாரிகள் ரிஜிஸ்டர் இல்லாம வச்சி இருந்த 4 கேரவேனையும் ஜப்தி பண்ணி எடுத்துக்கிட்ட போயிட்டாங்க...

அர்னால்டு,டாம்,ஜாக்கி, ஜுலி எல்லாம் நடு ரோட்ல நிக்க, அதை பெரிய அவமானமா எடுத்துக்கிட்ட ஜுலி தேம்பி தேம்பி அழ ஆராம்பிச்சட்டாங்க...அப்ப நம்ம ஊரு புரடெக்ஷன் மேனேஜர் அந்த டீம்ல இருக்க பக்கத்துல விஜயகாந்த கட்சி ஆபிஸ்ல இருக்கறதை கேள்வி பட்டு,

“சார் நம்ம ஊருக்கு வந்த ஹாலிவுட் நடிகர்கள் எல்லாம் நடு ரோட்டல அனாதை பசங்களா நிக்கறாங்க, உங்க ஆபிஸ்ல ரூம்களை கொஞ்சம் நேரத்துக்கு ஒதுக்க முடியுமா? ” என்று கேட்க, விஜயகாந்த் தலை ஆட்ட ,எல்லா நடிகர்களும் விஜயகாந்த் ஆபிஸ்ல, அவரு இருக்கற ஏசி ரூமுக்கு வந்துட்டாங்க....


இருந்தும் ஜுலி பாப்பா மட்டும அந்த அவமானத்தை நினைச்சு தேம்பி தேம்பி அழுதுச்சு.....
இயக்குநர் டேனிபாயல் எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும் முடியாம போக, இன்னைக்கு ஷுட்டிங் நடக்குமா? என்ற கவலையில தலையில கை வச்சிக்கிட்டு எழுந்து வெளிய போய் ஒரு தம்ம பத்த வச்சிகிட்டு செம டென்ஷனா இருந்தார்....

இவரு டென்ஷனை பார்த்த ஜாக்கி,அர்னால்டு, டாம் எல்லாரும் ஜுலிகிட்ட போக, அங்க விஜயகாந்த், எப்படி ஜுலி புள்ளையை சமாதானப்டுத்துவது என்று புரியாமல் தவிச்சிகிட்டு,அந்த அறையில குறுக்கும் நெடுக்குமா நடந்துகிட்டு இருந்தார்....

ஜாக்கி ஜுலி கிட்ட போய், hey, why are you crying? என்றார் அதன் பிறகு டாம் அவள் கிட்டே வந்து , ஜுலி, what happen to you? என்ற கேட்க அப்போதும் ஜுலி ஏதும் பேசாமல் குலுங்கி குலுங்கி அழ, வெறுத்து போன அர்னால்டு சற்றே கோபமாக ஜுலி கிட்டே வந்து ,why are you weeping jolie? என்று கேட்க, இதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த நம்ம விஜயகாந்த்....

“டேய், நிறுத்தங்கடா... ஆள் ஆளுக்கு அந்த புள்ள கிட்ட எதை எதையோ கேட்டிங்கலே... அந்த புள்ள எதுக்கு அழுவதுன்னு எவனாவது கேட்டிங்கலாடா???”

என்று விஜயகாந்த் கேட்க, தசவதாரம் சாங் ரிலீஸ்க்கு சென்னை வந்து ஒரளவு தமிழ் கற்றுக்கொண்ட நம்ம தலைவர் ஜாக்கி, விஜயகாந்த் கேட்ட கேள்வியை ஜீரனிக்காமல் மயக்கமானார்



அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(NADINE.. உலக சினிமா/ நெதர்லேண்ட்) காதலில் தோற்று போனவள் என்ன செய்யவாள்???




எல்லோருடைய காதலும் வெற்றி பெறுவதில்லை... அப்படி வெற்றிப் பெறாதவர்கள் யாரும் சோர்ந்துப் போய் விடுவதில்லை...அதன் பிறகு இருக்கும் சொற்ப காலத்தில் அந்த நினைவுகளோடு வாழ்பவர்களும் உண்டு.. அல்லது வேறு ஒருவரை மணந்து கொண்டுச் சிறப்பான வாழ்க்கை வாழ்ந்தவர்களும் உண்டு....

நான் கடலூரில் ஒரு பெண்ணைக் காதலித்தேன் அந்த பெண்ணின் பெயர் மாலதி... அந்த பெண் பணக்கார வீட்டு பெண். என் வீடு கூரை வீடு, அவள் கான்வென்ட் படிப்பு, நானோ அரசு உதவிப்பெறும் நடுநிலைப்பள்ளியில் படிப்பு...

அப்போ நான் ஒரு லூனா டிரைவர் அந்த வேலையை சொன்னால், அது ஒரு பெரிய கதை அதை அப்புறம் பார்க்கலாம் .தினமும் பஸ்ஸில் போகும் போது அந்த பெண்ணுக்கும் எனக்கும் பழக்கம்...எல்லா காலியான இருக்கைகளையும் விட்டு விட்டு என் பக்கத்தில் வந்து உட்காருவாள்.... எனக்கு கூச்சம் பிடுங்கி தின்னும் நம்ம பர்சனாலிட்டி பத்தி எனக்கு ரொம்பவே தெரியும்...

அப்ப அந்த பொண்ணு பிளஸ் ஒன் படிச்சா...தினமும் பள்ளி முடிந்து இவ்னிங் நான் போகும் பேருந்தில் வருவாள்.. கைபிடிக்கும் கம்பியில் ஐ லவ்யு எழுதி காண்பிப்பாள்.. அப்போது அந்தக் காதலை ஒத்துக்கொண்டு இருந்தாள், இருவர் வாழ்க்கையும் நரகமாகி இருக்கும்....

நான் என் வேலை ,படிப்பு ,நிலையானத் தொழில் இல்லாமைப் போன்ற காரணங்களால் அந்த காதலை நான் ஏற்றக்கொள்ளவில்லை... அதன் பிறகு இரண்டு வருடம் கழித்து நான் ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருந்த போது

“ஏய் ஆட்டோ என்று ஒரு குரல் கூப்பிட, எனக்கு ரொம்ப பழக்கப்பட்ட குரலாக இருந்ததால் நான் எனது ஆட்டோவை திரும்ப , எதிரே அவள்”

நான் ஆட்டோவில் கைலியுட்ன் உட்கார்ந்து இருக்கின்றேன். அவளோ மிக அழகாக உடை உடுத்தி் இருந்தாள், கூடவே அவள் நண்பர்களுடன்..ஒரு பத்து வினாடிகள்அந்த இடம் அமைதியாய் இருந்தது...நான் சட்டென அவள் பேசுவதற்க்கு முன் ஆட்டோவை பஸ்ட் கியர் போட்டு ஒரு குலுக்கி குலுக்கி வேகம் எடுத்து போய் வேகத்துடன் வெறும் ஆட்டோவை ஓட்டி நேராக எங்கள் கடலூர் சில்வர் பீச்சில் என் ஆட்டோவை நிறுத்தினேன்...

அரைமணிநேரம் என்னுள்ளே மனதுடன் ஒரு பனிப்போர் நடந்தது ..என் இயலாமை நினைத்து என்னை நானே திட்டிக்கொண்டேன்... அரைமணிநேரம் கழித்து நான் ஆட்டோ எடுத்த போது என் கண்களில் கண்ணீர்... என் புறங்கையால் துடைத்து விட்டு அப்போது நான் ஆட்டோ எடுத்தவன்தான் இன்று வரை அந்த நினைவுகள் என்னை பாதிக்கவில்லை...இப்போது அந்த நினைவுகளை நினைக்கையில் உதட்டோரம் மெல்லிய புன்னகை மட்டு்மே....அப்படி தோற்றக் காதல் கூட சுகம்தான் ஒரு சிலருக்கு....

nadine என்ற நெதர்லெண்ட் படத்தின் கதை இதுதான் ...

காதலில் தோற்று திருமணமே செய்து கொள்ளாத 40 வயது பெண்மணி தனது பழையக் காதலனை ஒரு டிப்பார்ட்மென்ட் ஸ்டோரில் பார்க்கின்றாள்... அவன் குழந்தையுடன் பொருள்வாங்க வந்து இருக்கின்றான். அவன் தன் ஒன்றரை வயது குழந்தை சாமை அறிமுகப்டுத்துகின்றான்... அவள் பொருள் வாங்கி அவனிடம் விடை பெற்று போகும் போது சட்டென சாத்தான் மனதில் குரல் கொடுக்க திரும்பவும் உள்ளே போய் அந்த குழந்தையை கடத்திக்கொண்டு வந்து விடுகின்றாள்....

குழந்தை கடத்திக்கொண்டு வந்தாகி விட்டது ஆனால் குழந்தை வளர்த்து பழக்கம் இல்லாதவள்... அந்த குழந்தை அழ அவள் துடிக்கின்றாள்.... அவளை போலீஸ் வலை வீசி தேடுகின்றது.. அவள் அந்த குழந்தையை வைத்துக்கொண்டு நாய் படாத பாடுப் படுகின்றாள்... வெவ்வேறு ஊர்களுக்கு காரில் பயணம் செய்து மறைந்து வாழ்கிறாள்...

அவள் போலீஸில் பிடிப்பட்டாளா?
அவள் குழந்தையைப் பெற்றோரிடம் ஒப்படைத்தாளா?

என்பதை படத்தை டவுன்லோடு செய்து பாருங்கள்....
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

இந்த படத்தில் nadine என்ற கதாபாத்திரத்துக்கு மூன்று ஒரே சாயல் கொண்ட பெண்களை தேர்ந்து எடுத்து நடிக்க வைத்து இருப்பார்...இயக்குனர்Erik de Bruyn..

உணர்வுகளை மட்டுமே வைத்து கதையை நகர்த்துவதற்க்கு சாமர்த்தியம் வேண்டும்... அதை நன்றாகவே செய்து இருக்கின்றார்...

குழந்தையை காரில் கடத்திக்கொண்டு போகும் போது குழந்தை அழ அதை சமாதானம் செய்ய தெரியாமல் நேஷ்னல் ஹைவேசில் காரை நிறுத்தி...வெளியே வந்து தன் இயலாமையை நினைத்து சத்தம் போட்டு கத்துவது ரொம்ப அற்புதமான காட்சி இது....

தனிமையும் குழந்தை இல்லாத வேதனையையும் ஒரு பெண்ணின் பார்வையில் எவ்வளவு அழகாக சொல்லி இருப்பார்....Director:
Erik de Bruyn


இந்த படத்தின் இயக்குனர் என்னை போலவே விருப்ப பாடம் சோசியாலஜி படித்தவர்....


குழந்தையை கடற்கரையில் தொலைத்து விட்டு அவள்(nadine)கதறும் கதறல் இருக்கேஅந்த நடிப்புக்காகவே விருது கொடுக்கலாம்...


படம் வெளியான ஆண்டு 2007....


இந்த படத்தின் டிரைலர் பார்க்கhttp://www.moviestrailer.org/nadine-movie-trailer.html இங்கே சென்று கண்டு களிக்கவும்...

அந்த படத்தின் மேலாதிக்க தகவல் பெற..http://www.nadinethemovie.com/


Director:
Erik de Bruyn
Writers:
Gwen Eckhaus (scenario)
Erik de Bruyn (scenario)

Release Date:
25 October 2007 (Netherlands) more
Genre:
Drama


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(INDIANA JONES AND THE LAST CRUSAD)இயேசு நாதர் ரத்தம் சேகரித்த குவளை எங்ககே???...

பழம் பெரும் பொருட்கள் மீதான காதல் என்பது எல்லாதேசத்திலும் இது போன்ற விஷயங்களை ரசிக்க சேகரிக்க என்று ஒரு மாபெரும் கூட்டமே உண்டு...
இது போன்ற விஷயங்களுக்காக பல கோடிகள் செலவு செய்து வாங்குபவர்களும், அந்த வாங்குபவர்களின் ஆசையை புரிந்து கொண்டு அவர்களுக்காக கள்ள மார்க்கெட்டில் அது போன்ற பொருட்கள் கடத்தபடுவதும் தினசரி நடந்து கொண்டுதான் இருக்கின்றன.... அதற்க்கு மிகப்பெரிய உதாரணம் நம் நாட்டின் ஐம்பொன் சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தபடுவதுதான்....

நான் கூட பல வருடங்களுக்கு முன் அலங்கார்,தேவி, தியேட்டர்களில் பிளாக்கில் டிக்கெட் விற்றுக்கொண்டு இருந்தேன். அப்போது விற்க்காத பல டிக்கெட்டுகளை பத்திரப்படுத்தி பல வருடங்கள் ப்த்திரமாக பாதுகாத்து வைத்து இருந்தேன்....சில வருடங்களுக்கு முன் நான் வீடு காலி செய்த போது அந்த பொக்கிஷங்கள் காணாமல் போய்விட்டன... அன்று முழுவதும் நான் ரொம்பவும் வருத்தப்பட்டேன்....

இந்த சின்ன விஷயத்துக்கே நான் பீலிங் காட்டி வருத்தப்படும் போது, இயேசுநாதர் சிலுவையில் வைத்து அறைந்த போது அப்போது சிந்திய இரத்தத்தை
சேகரித்த குவளை என்றால் அந்த குவளைக்கு எவ்வளவு மதிப்பு இருக்கும் என்று சற்றே எண்ணி பாருங்கள்....
INDIANA JONES AND THE LAST CRUSADE படத்தின் கதை இதுதான்...


(Sean Connery) Professor Henry Jones பழமையான பொருட்கள் மீது ஈடுபாடும் அதனை பற்றிய ஆராய்ச்சிகளிலேயே வாழ்வின் பெரும் பகுதியை செலவு செய்பவர்... அவர் பல வருடங்களாக செய்து வரும் ஆராய்ச்சி இயேசுநாதர் சிலவையில் உயிர் துறக்கும் போது அவர் ரத்தம் சேகரித்த குவளை எங்கே இருக்கின்றது என்பதை பற்றிய ஆராய்கிறார்... ஓரளவு அதன் இருப்பிடத்தையும் கண்டு பிடித்து விட்டார்.... அவர்மகன் (Harrison Ford ) Indiana Jones நேர்மையான ஆள் எந்த காலகட்டத்திலும் இது போன்ற பொக்கிஷங்கள் கொள்ளைக்காரர்கள் கையில் சிக்கிவிடக்கூடாது என்றும் அது எல்லாம் அரசு பொருட்காட்சிகளில் இருக்க வேண்டும் என்று போரடுபவன்....

இயேசு ரத்தம் சேகரித்த குவளையை கண்டுபிடிக்க போகும் நெடும் பயணமும் அதில் அவர்கள் சந்திக்கும் ஆபத்துகளையும் அழகாக சொல்வதுதான் இந்த படத்தின் மீதி கதை..,

அந்த குவளையை காலம் காலமாக பாதுகாத்து வரும் காவல் கூட்டமும், அதை கொள்ளை அடித்து அதன் சக்திகளை தன் வசப்படுத்த நினைக்க முயலும் இன்னொரு கொள்ளைகூட்டமும் அதனை கெட்டவர்களிடம் சிக்க கூடாது என்று போராடும் ஜோன்ஸ் குடும்பமும் இந்த போராட்த்தில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை வெள்ளித்திரையில் பாத்து மகிழவும்.....


படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....


இன்டியான ஜோன்ஸ் பட வரிசையில் இது மூன்றாவது படம் ...இந்த படத்தின் இயக்குனர் ஸ்டிவன் ஸ்பீல்பெர்க் ...

ஸ்பில்பெர்க் திரையுலகின் பிதாமகன் என்றால் அது மிகையில்லை...பிரமான்டத்தினை திரையில் புகுத்திய சாதனைக்கு சொந்தக்காரார்...

ஒரு கௌபாய் பாத்திர படைப்பு போல் இருந்தாலும் இந்த கேரக்டர் அதிகம் துப்பாக்கி எடுக்காமல் முடிந்த வரை சாட்டை வைத்து விளையாடும் ரகம்....

எவ்வளவு ஆக்ஷன் படம் என்றாலும் அந்த படத்தில் காமெடி காட்சிகளை மெலிதாக இழையோட விடுவது ஸ்பில் பெர்க் இயல்பு....

இந்த படத்தை மூலமாக வைத்துக்கொண்டு பல காட்சிகள் தமிழ் திரைபடத்தில் ஆதார தழுவலாக உபயோகப்டுத்தி இருப்பார்கள்.... அதற்க்கு மிகச்சிறந்த உதாரணம் மணிரத்னம் இயக்கிய திருடா திருடா படம்.....

அப்பா மகன் காட்சிகள் எல்லாம் மிக மிக ரசிக்கதக்கவகையில் எடுக்கப்பட்டு இருக்கும்...



இந்த படம் 1989ம் வருடம் வெளியாது.... இப்போது பார்த்தாலும் இந்த படம் உங்களுக்கு வியப்பை கொடுக்க வல்லது என்று உறுதி கூறுகின்றேன்....


படம் போகிற போக்கில் ஹிட்லரையும் நக்கல் விட ஸ்பில் பெர்க் தவறவில்லை...

அதே போல் இந்த படத்தில் ஜெர்மனில் இருந்துஜோன்ஸ் இருவரும் தப்பிக்கும் போது ஒரு பெரிய பலூன் போன்ற விமானத்தை காட்டுவார்கள் அது ஏதோ பெரிய விபத்து ஏற்பட்டதால் அது தோல்வியுற்றது என்றார்கள் அது பற்றிய விவரங்கள் உங்கள் மூலம் ஆறிய ஆவலாய் உள்ளேன்

மிக முக்கியமாக நூலகத்தில் சீல் குத்தும் போது எடுத்த சீன் சூப்பர்....

படம் முழுவதும் ஜுனியர் என்யே அழைக்கும் அப்பா அவன் உயிருக்கு போராடும் போது இன்டியான என அழைக்கும் போது அப்பாவை ஹரிசன் கனிவோடு பார்க்கும் காட்சி கவி நயம்...

ஹரிசன் அதாவது ,ஹீரோ அறிமுகக் காட்சி ரொம்பவும் அற்புதம்....

இந்த படத்தில் அப்பாவாக நடித்த பழைய 007, சீன் கானெரி கோல்டன் குளோப் விருது பெற்றார்...

பெஸ்ட் சவுன்ட், பெஸ்ட் எடிட்டிங், பெஸ்ட் ஒரிஜினல் ஸ்கோருக்காக இந்த படம் அக்காடமி விருது பெற்றது..

Directed by Steven Spielberg
Produced by Robert Watts
Executive producers:
George Lucas
Frank Marshall
Written by Screenplay:
Jeffrey Boam
Tom Stoppard
(uncredited)
Story:
George Lucas
Menno Meyjes
Starring Harrison Ford
Sean Connery
Alison Doody
Denholm Elliott
Julian Glover
River Phoenix
John Rhys-Davies
Music by John Williams
Cinematography Douglas Slocombe
Editing by Michael Kahn
Studio Lucasfilm Ltd.
Distributed by Paramount Pictures
Release date(s) United States:
May 24, 1989
Australia:
June 8, 1989
United Kingdom:
June 30, 1989
Running time 127 min.
Country United States
Language English
Budget $55,364,887[1]
Gross revenue $474.17 million


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி...

டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள்...(பதிவர் லக்கிக்கு இந்த பதிவு சமர்பணம்)


தமிழக அரசியலைபற்றி பேசும் போது, ஏதாவது திட்ட வேண்டுமானாலும் அல்லது பாராட்ட வேண்டுமானாலும் கலைஞர் என்ற பெயரை பயன்படுத்தாமல் நீங்கள் தமிழக அரசியலை பற்றி பேசவும் எழுதவும் முடியாது என்பதே நிதர்சன உண்மை...


முதன் முறையாக நான் எங்கள் ஊர் கடலூரில்தான் அவரை நேரில் பார்த்தேன்...தேர்தல் பிரசாரத்துக்கு வந்தவரை காரில் வைத்துபார்த்தேன்..

எங்கள் ஊரில் என் உறவுக்கூட்டம் அத்தனையும் திமுக அபிமானிகள்...நானாவது திமுக தவறு செய்தால் ஆம் அவர்கள் தவறு செய்தார்கள் என்று உறக்க சொல்லுவேன்.. என் அத்தை,மாமாக்கள் எல்லாம் அவரை ஒரு அவதார புருஷராகவே பார்ப்பார்கள்....

எவன்தான் தவறு செய்யலை? ,யார்தான் தவறு செய்யலை? என்று கலைஞருக்கு வக்காலத்து வாங்குவார்கள்...

தேர்தல் காலங்களில் எனக்கு பிடித்தபாடல்... பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே அஞ்சாமல் இருந்தது யாரு ? நம்ம தலைவரின் ....என்று தொடங்கும் பாடல்....

நான் சென்னையில் வீடியா கேமராமேனாக, போட்டோகிராபராக, இருந்த போது, பல தலைவர்கள் வீட்டு விசேஷங்களை படம் பிடித்து இருந்தாலும், எனக்கு என்னவோ எவருடன் புகைபடம் எடுத்துக்கொள்ளவேதோனாது...எதிராளியை மனிதராக பாவித்தே பழக்கபட்டு விட்டேன் நீ உன் தொழிலில் பெஸ்ட் என்றால் நான் என் தொழிலில் பெஸ்ட் என்ற தன்னம்பிக்கை மனோபாவம்தான் காரணம்....

இருப்பினும் சிலருடன் நான் விருப்பப்பட்டு எடுத்துக்கொண்டவையும் உண்டு அவர்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் என்பதால்... ஒரு மலரும் நினைவுக்காக...

இப்பவும் நடிகர் ஜாக்கிசானுடன் புகைபடம் எடுத்துக்கொள்ள மிக ஆவலாய் உள்ளேன்...

தலைவர் கலைஞருடன் நான் நிற்க்கும் இந்த படம் சென்னை ஜி ஆர் டி ஓட்டலில் எடுத்தது... எப்போதும், இப்போதும் கலைருடன் வாழும் உதவியாளர் சண்முகசுந்தரம் அவர்கள் மணிவிழாவில் நான் வீடியோ கேமராமேனாக பணி புரிந்த போது எடுத்தபடம் இது ...

அபி என்பவர்தான் இந்த படத்தை எடுத்தார். அப்போது என் கையில் கேமரா இருந்த காரணத்தால் துரைமுருகன் என்னை அப்புறப்படுத்துவதில் குறியாக இருந்தார்...

நான் கலைஞரிடம்,

“ ஐயா,ஒரு நிழற்படம் உங்க கூட எடுத்துக்கனும் கொஞ்சம் நில்லுங்க... என்றேன்”

கொஞ்சம் சத்தமான என் குரலும் என் தமிழும் அவரை வசீகரப்படுத்தி இருக்க வேண்டும்...

அவர் சட்டென என்னோடு 3 வினாடிகள் நின்றார்.... என்னோடு போஸ் கொடுத்தார்... இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது...


தலைவருக்கு ஆர்டர் போட இவன்யார்? என்று என்னை ஒரு மாதிரியாக அமைச்சர் துரை முருகன் பார்ப்பதை நீங்கள் பார்க்கலாம்...

சில புகைப்படங்கள் பொக்கிஷங்கள்... அந்த வகையில் இந்த படம் எனக்கு சேரனின் பொக்கிஷத்தை விட மேலானது....


குறிப்பு /
பதிவர் லக்கி இது போல் ஏதாவது படம் வைத்து இருக்கின்றாரா? அவர் உயிர் மூச்சில் தலைவர் இருக்கும் போது நிழற்படம் எதற்கு????


அன்புடன்/ஜாக்கிசேகர்

(ABSOLUTE POWER) அமெரிக்க அதிபர் உத்தமரா?


நம்ம ஊரில் இப்படி ஒரு தலைப்பு வைத்து படம் எடுத்தால் அவ்வளவுதான், அந்த படம் வெளியே வரவே வராது...எனென்றால் நாம் ஒரு வகையில் பச்சையாக நடித்துக்கொண்டு இருக்கின்றோம்...

பொதுவாழ்க்கையில் வந்து விட்டதாலேயே நாம் பெரிய பொறுப்புகளில் உள்ள எலலோரையும் நாம் தெய்வங்களாக பார்க்கும் மனநிலை நம்மிடம் நிறையவே உண்டு.... அவர்கள் கடவுள்கள் அல்ல அவர்களும் மனிதர்கள்....
அவர்களுக்கும் அடிமனது ஆசைகள், இச்சைகள், காமம், காதல், துரோகம் எல்லாம் உண்டு என்று தைரியமாக சொல்ல வந்த படம் “அப்சலூட்பவர்”

ABSOLUTE POWER படத்தின் கதை இதுதான்....


அவன் ஒரு திருடன்Luther Whitney (Clint Eastwood) அற்புதமாக வீடு பூந்து கொள்ளை அடிப்பதில் வல்லவன்.. பொதுவாக எல்லோருமே அழகான பெண்களை அடைகளைந்து பார்க்க ஆசைப்பட்டால், லூதருக்கு பூட்டிய வீடுகளை திறந்து கொள்ளை அடிப்பதில் அவ்வளவு இஷ்டம்....

அது ஒரு தனியான வீடு...
(சாரி,மன்னிக்வும் என் ரேஞ்சிலே யோசித்துவிட்டதால் அதனை வீடு என்று சொல்லி விட்டேன்) அது ஒரு ஆடம்பர பங்களா... ஆம் திருட வந்த லூதருக்கு நன்றாகவே தெரியும் அது ஒரு பெரிய பணக்கார பி்ல்லியனரின் வீடு என்று ....

ஒரு சுபயோக சுப தினத்தின் இரவில் பௌர்னமி வெளிச்சத்தை மட்டும் சாட்சியாக வைத்து அந்த வீட்டில் போய் திருடுகின்றான். அந்த பங்களாவின் பெட்ரூமில் ஒரு ரகசிய அறை இருக்கின்றது அதில்தான் விலை மதிக்க முடியாத வைரங்கள் ஆபரணங்கள் இருக்கின்றன...

அதாவது வெளியில் பெட்ரூமில் இருந்து பார்க்க, அது வெறும் கண்ணாடி போல்தெரியும். அதில் உங்கள் கலைந்த தலையையும், உடையையும் பார்த்து சரிபண்ணிக்கொள்ளலாம்... அதே போல் அந்த கண்ணாடி பின்புறம் உள்ள ரகசிய அறையில் ஒருவர் இருந்தால் பெட்ரூமில் என்ன நடக்கின்றது என்பதை மிக துள்ளியமாக பார்க்கலாம். ஆனால், பெட்ரூமில் இருப்பவர்களுக்கு அது ஒரு கண்ணாடி அவ்வளவுதான்...


லூதர் இன்ட்ரஸ்ட்டாக திருடிக்கொண்டு இருக்கும் போதுதான், சனியன் அவனுக்கு மணி அடித்தான்...

அந்த ஆடம்பர பங்களா வாசலில் ஒரு கார் வந்து நிற்க்கின்றது . அதில் இரண்டு ஆண் பெண் பேச்சுக்குரல்களும், சிரிப்பு சத்தமும் கேட்டவண்ணம் இருக்கின்றது,அவர்கள் வீட்டினுள் வந்து பெட்ரூமை நோக்கி வருகிறார்கள் என்று தெரிந்து உடன், அந்த ரகசிய அறையில் நம்ம ஆள் திரும்பவும் போய் மறைந்து கொள்கின்றான்...


அந்த பெட்ரூமுக்கு வந்தது சாதாரன ஆளு இல்லை யுனைட்டேட் ஸ்டேட் ஆப் ஆமெரிக்காவின் பிரசிடென்ட், அடுத்தவன் பொண்டாட்டி கூட அதாவது அந்த ஆடம்பர பங்களா மில்லியினர் பொண்டாட்டிதான் அந்த பொம்பளை... பிரசிடென்ட் செம போதையில அந்த பொம்பளையோட பெட்ரூமுக்கு வருகிறார். அதிபர் கண்ணுல காம போதை தலைக்கு எறி இருக்குது...இந்த கூத்தை ரகசிய அறையில பார்க்கற லூதருக்கு நெத்தியில வேர்வை பூத்து நிலத்துல சிந்துகின்றது ...

முதலில் முத்தம் போன்ற சமாச்சாரங்களாக போர்பிளே மும்மரமாக நடக்கின்றது....முதலில் சந்தோஷமாக ஆரம்பிக்கும் அந்த கூடலில் அமெரிக்க அதிபர் அந்த பெண்ணை அவள் விருப்பத்துக்கு மாறான முறையில்  வெறித்தனமாக, மிருகத்தனமாக  செக்சுக்கு உட்படுத்த முயல, அவள் மறுக்க இப்போது பிரசிடென்ட்டுக்கு ஈகோ பொத்துக்கொண்டு வருகின்றது....

நான் ஒரு பிரசிடென்ட் நீ ஆப்டர் ஆல் நீ ஒரு பொம்பளை என் விருப்பத்துக்ககு ஈடு கொடுக்க மாட்டயா? என்ற வெறியோடு அவளை இழுத்து முரட்டததனமாக ஹென்டில் செய்ய அவள் பிரசிடன்டோடு போராடுகின்றாள் பக்கத்தில் இருக்கும் பழத்தை வெட்டும் கத்தியை எடுத்து பிரசிடென்ட்டை கீழே தள்ளி அவர் மேல் உட்கார்ந்து கத்தியை உயர்த்தவும், பிரசிடென்ட் பயத்தில் கத்தவும், வெளியே இருந்த பாதுகாலல் படையினர் உள்ளே வந்து அந்த பெண் பிரசிடென்டை கொலை செய்ய முயலுவதாக நினைத்து , துப்பாக்கியால் சுட்டு அவளை நொடியில் சாகடித்து விடுகின்றனர்.....

இந்த நிலையில் பிரசிடென்ட் தலமை அதிகாரிக்குGloria Russell (Judy Davis) தகவல் போய் , அவள் அங்கு வந்து முக்கிய தடயங்களை அழித்து, பாடியை டிஸ்போஸ் செய்ய சொல்லி, அந்த அறையில் இருந்த ரத்த கறைகளை அகற்றி.....


இவ்வளவு கூத்து நடக்கும் போது அந்த ரகசிய அறையில் நம்ம லூதர் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்கின்றான்... அவர்கள் அந்த பங்களாவிட்டு கிளம்பும் போது இந்த் கொலைக்கான முக்கிய ஆதாரத்தை மாடியில் விட்டு விட்டு வந்தது தெரியவர, அதை எடுக்க இரண்டு செக்யூரிட்டிகள் மேலே வர அதற்க்குள் , நம் லூதர் அந்த எவிடென்சைஎடுத்துக்கொண்டு கொள்ளையடித்த பொருட்களுடன் பின்புறம் வழியாக தப்பிக்க அவனை பிடிக்க அந்த செக்யூரிட்டிக்ள் துரத்த...

1 லூதர் பிடிபட்டானா?
2அந்த கொலை மூடி மறைக்க பட்டதா?
3.பிரசிடென்ட் என்ன ஆனார்?
4அந்த எவிடென்சை பணத்தை வாங்கி கொண்டு லூதர் கொடுத்து விட்டானா? இது போன் ற பல விட்டானாக்களுக்கு விடை தெரிய ,இந்த படத்தை ஏதாவது வீடியோ லைப்பேரரியில் எடுத்து பார்த்து ரசிக்கவும்...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....

இந்த படம் 1997 ஆம் ஆண்டு வெளிவந்து ஒரு புயலை கிளப்பிய படம்...

இந்த படத்தின் இயக்குன்ர் கிளின்ட் ஈஸ்ட்வுட் அவரே தயாரிப்பாளருட் கூட...

அந்த திருடன் பாத்திரத்தில் நடித்து இருப்பது இந்த படத்தின் இயக்குனரே...

அந்த கொலைக்காட்சியை மிக நேர்த்தியாக படமாக்கிய விதம் அருமையிலும் அருமை...

நல்ல அற்புதமான விறு விறுப்பான காட்சி அமைப்புகள் கொண்ட படம்...


திருடன் ,கொள்ளைக்காரன் என்பதாலேயே அவனுக்கு மனிதாபிமானம் இல்லை என்று எவரும் சொல்லக்கூடாது என்று வலியுறுத்தும் படமும் கூட....

படத்தில் அப்பா மகளுக்கான பாச காட்சிகள்  படத்தை மேலும் ரசிக்க வைக்கும்... அதே போல டிடெக்டிவ் வக்கில் பெண்ணிடம் நான் தனியாகத்தான் இருக்கேன் என்று திரும்ப திரும்ப சொல்லும் காட்சி அழகான காதல் கவிதை

அந்த எவிடென்சை அவர் எடுத்துக்கொண்டு ஓட அவரை பிரசிடென்ட் ஆட்கள் துரத்த அது ஒரு நல்ல சேசிங் காட்சி.. அந்த காட்சியின் ஒளிப்பதிவும், படத்தில் பல காட்சிகளின் ஒளிப்பதிவும் (Cinematography Jack N. Green) பாரட்டபடவேண்டிய ஒன்று....

 இந்த படம்  தமிழ்நாட்டில்  எடுத்தால் படம் வெளியே வரவே வராது..  ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும் நபரை இப்படியா  கேவலமாக சித்தரிப்பது  ஐயகோ என்று ஒப்பாரி வைத்து இருப்பார்கள்.



Directed by Clint Eastwood
Produced by Clint Eastwood
Karen Spiegel
Written by Novel:
David Baldacci
Screenplay:
William Goldman
Starring Clint Eastwood
Gene Hackman
Ed Harris
Laura Linney
Scott Glenn
Dennis Haysbert
Judy Davis
and E.G. Marshall
Music by Lennie Niehaus
Cinematography Jack N. Green
Editing by Joel Cox
Studio Castle Rock Entertainment
Malpaso Productions
Distributed by Columbia Pictures (later Warner Bros.)
Release date(s) February 14, 1997
Running time 121 min
Country United States
Language English
Budget $50 million

 வீடியோ விமர்சனம்.




அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(FOUR MINUTES) உலகசினிமா/ஜெர்மன்...கடைசி நாலு நிமிடத்தில் என்னை கண் கலங்க வைத்தபடம்...

முரட்டுதனம், திமிர், ஆணவம்,அகங்காரம் என்பது ஆண்களுக்கு மட்டும் பட்டா போட்ட விஷயம் அல்ல அது மனிதனாய் பிறந்து எல்லோருக்கும் இயல்பான ஒன்று என்பதுடன் அது பெண்களுக்கும் பொதுவானது என்பதை சொல்ல வந்த படம் இது..


கோபமும் வெறியும் இருபாலருக்கும் பொது ஆனால் ஆணின் வெறி வேறு, ஒரு பெண்ணின் வெறி வேறு... அது எப்படி? பெண்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல என்று நீங்கள் சொல்லுகின்றீர்கள் என்றே வைத்துக்கொள்வோம், ஆணின் கோபத்தை விட பெண்ணின் கோபம் கொஞ்சம் கம்மிதான்... ஒரு ஆண் கோபத்தில் அடித்தே பத்து கொலை செய்தால் பெண் இரண்டு கொலை செய்வாள்...


ஆனால் கோபம் பொதுவானது... பெண் சற்றே யோசித்து பார்பவள்.. ஆண் அவனிடத்தில் அந்த யோசிக்கும் குணம் கூட இல்லை...பெண் எப்போதுமே நிறைய பொறுத்து ஒரு கட்டத்தில் எல்லை தாண்டும் போதுதான் அவள் வேறு வழியில்லாமல் கொலைகாரி ஆகின்றாள்...

போர் மினிட்(ஜெர்மன்) படத்தின் கதை இதுதான்....

இந்த படத்தின் நாயகி Jenny (Herzsprung) கோபத்தில் ஒரே ஒரு கொலை செய்து விட்டாள் அதற்க்கு காரணம் அவ்ள் சின்ன வயதில் அவளிடம் காட்டிய சில சில்மிஷங்களால் அவள் கொலை செய்ய நேர்கின்றது... அவளுக்கு சிறை தண்டனை கொடுக்கின்றது கோர்ட்..... கதை 1944 ல் நடக்கின்றது....

80 வயது மூதாட்டிக்கு Traude Krüger (Bleibtreu)வேலை தினமும் பெண்கள் சிறையில் இருக்கும் பெண் கைதிகளுக்கு பியானோ கற்றுக்கொடுப்பதுதான் வேலை... அவள் கற்றுக்கொடப்பவர்கள் யாரும் யோக்கிய சீலர்கள் இல்லை.. எல்லாம் கொலை, கொள்ளை, போன்ற வழக்குகளில் குற்றம்சாட்டபட்ட கொடுர குற்றவாளிகள்.

ட்ராவுட் நம்ம முரட்டு கதாநாயகி ஜென்னிக்கு பியனோ கற்றுக்கொடுக்க முயல முதலில் எதையும் வெறியோடு எதிர்க்கும் ஜென்னி பியானோவில் விருப்பம் இருந்தும் கற்றுக்கொள்ள எதிர்ப்பு தெரிவிக்க ,அவளை போட்டு ஜெயில் நிர்வாகம் அவள் திமிரை அடக்க, பல கொடுமைகளை செய்கின்றது...


பொதுவாக ஆண் தவறு செய்தாலே அதாவது முறைத்தாலே, அவனை பெண்டு நிமிர்த்தும் சமுக அமைப்பு நம்முடையது இதில் இந்தியா என்ன ஜெர்மன் எல்லா இடத்திலும் ஆண் என்ற ஆதிக்க மனோபாவம்தான்...அதாவது சேரி பாஷையில் சொல்வதென்றால் ஜென்னியை போட்டு கும்மாங்குத்து குத்துகின்றார்கள்...

அதன் பிறகு அந்த கிழவி மேல் கொஞ்சம் கொஞ்சமாக ஜெனிக்கு அன்பு பிறக்கின்றது அதற்க்கு காரணம் கிழவியின் முதுமை கொடுத்த அனுபவம்...அதன் பிறகு அவள் பியானோ கற்றுக்கொள்கிறாள்.., ஜெயில் நிர்வாகம் ஜென்னியை வளர விட்டதா? அவள் தன் பியனோ நிகழ்ச்சியை அரங்கேற்றினாளா? என்பதை எப்படியாவது அடித்து பிடித்து டிவிடி வாங்கி பார்க்கவும்

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....
http://www.flicks.co.nz/movie/four-minutes-vier-minuten/ படத்தின் டிரைலர் பார்க்க இங்கே செல்லவும். அல்லது இந்த தளத்திற்க்கு செல்லவும்http://www.apple.com/trailers/independent/fourminutes/

இந்த படத்தின் பெண் கைதிக்கும் 80 வயது பியானோ டீச்சருக்கான ஊடல் என்பது பூவே பூச்சூடவா படத்தில் நதியா, பத்மினி ஊடலுக்கு சமம்...

அவர்களுக்குள் எற்படும் மெல்லிய உணர்வுகளை கண்களில் நீர் முட்ட சொல்லி இருக்கின்றார் இந்த படத்தின் இயக்குனர் Chris Kraus...

அந்த பெண்ணை படுத்தும் சித்ரவதை காட்சிகள் பார்க்கும் போது அவள் முரட்டுதனத்துக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்பதாய் இருக்கும். பிளாஷ் பேக்கில் சிறு வயதில் பாலியல் ரீதீயாக அவள் துன்புறுத்த பட்டதால்தான் அவள் இந்த நிலைக்கு மாறினால் என்பதை காட்டும் போது நம் மனது கனத்து விடுகின்றது..

வயதான கேரக்டர் பண்ண பெண்மணியின் நடிப்பு அற்புதம்.... அந்த பொறுமை அவள் கொண்ட நம்பிக்கையை கண்களில் காட்டுவது... என்னமா நடிக்கறா? அந்த கிழவி... (எனக்கு பாசம் அதிகரிச்சா, அவுங்களை நான் வாடி போடி என்று கூப்பிடுவது என் இயல்பு)

எந்த கோபத்துக்கும் ஒரு எதிர்வினை உண்டுன்னு சொல்லும் படம் இது....


இந்த படத்தின் கிளைமாக்ஸ் ஆன அந்த 4 நிமிடம் படம் பார்த்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி அந்த படத்தின்(Chris Kraus) இயக்குனருக்கு மரியாதை செய்தார்கள் சென்னை உலகபடவிழா ரசிகர்கள்....

குழந்கைளிடம் சில கயவர்கள் காட்டும் பாலியல் துன்புறுத்தல்கள் அந்த குழந்தை வளர்ந்தால் அது சமுகத்திடம், எவ்விதமாக பிரதிபலிக்கும் என்பதை ஜென்னி கேரக்டர் மூலம் புரியவைத்துள்ளார் Chris Kraus...

இன்னும் கொஞ்சம் கதை சொன்னாலும் படத்தின் சுவாரஸ்யம் போய் விடும் என்பதால் நான் இத்தோட நிப்பாட்டிக்கிறேன்...

கடைசி அந்த நாலு நிமிடம் நீங்கள் கண்களில் கண்ணீரோடு எழுந்து நின்று கைதட்டுவீர்கள் என்று நான் மீண்டும் உறுதி அளிக்கின்றேன்...
Directed by Chris Kraus
Produced by Alexandra Kordes, Meike Kordes
Written by Chris Kraus
Starring Monica Bleibtreu
Hannah Herzsprung
Sven Pippig
Richy Müller
Distributed by Flag of Europe EuropaCorp Distribution Flag of the United States Senator International
Release date(s) Flag of GermanyFebruary 1, 2006
Flag of the United StatesApril 18, 2008
Running time 112 min.
Country Germany
Language German
Budget €1,400,000


இந்த படம் வாங்கிய விருதுகள்....
2006

* Bavarian Film Awards
o "Best Actress" (Monica Bleibtreu)
o "Best New Actress" (Hannah Herzsprung)
o "Best Screenplay"
o "Best New Director"[1]
* "Jin Jue Award (Shanghai International Film Festival)
o "Best Feature Film"
* "Best Feature Film" at the Reykjavik International Film Festival
* Golden Biber (28th Biberach Film Festival)
o "Best Film"
o "Audience Award"
* Golden Heinrich (20th International Film Festival Brunswick)
o "Audience Award"
* "Best Set Design" (Silke Buhr) at the 40th Hofer International Film Festival
* State of Baden-Wuerttemberg
o "Best Screenplay"

2007

* German Film Awards
o "Best Feature Film in Gold"
o "Best outstanding performances - female leading role" (Monica Bleibtreu)



அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... அப்போதுதான் இந்த செய்தி வெகுஜன மக்களிடம் போய்சேரும்
நன்றி

(BLUE STREAK) திருட வந்த இடத்தில் தேள் கொட்டினால்?????







ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க திரு்டனுக்கு தேள் கொட்டினா மாதிரி...
ஏன் அப்படி சொல்லறாங்கன்னா? திருட வந்த இடத்துல சத்தமே இல்லாம காரியத்தை முடிக்கனும் . திருட வந்த இடத்துல தேள் பாம்பு என்று எது கடிச்சாலும், அங்க கத்தனா? உடனடி சங்குதான்....

அப்படி ஒரு திருடனுக்கு தேள்கொட்ன கதையைதான் இப்ப நாம சந்தோஷமா பார்க்க போறோம்... திருடனுக்கு ள் கொட்டனா வலி எப்படி இருக்கும்? அது சாதரண வலியில்லை மெல்லவும் முடியாம, முழுங்கவும் முடியாம ஒரு வலி இருக்குமே அது போன்ற ஒரு வலி....

வைரமுத்து சொன்னது காதலுக்கு....

“வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவம் இல்லாதொறு உருண்டையும் உருளுதடி”


அது இப்ப நாம பார்க்க போற படா திருடனுக்கும் பொருந்தும்....

அவன் ஒரு பிரபல திருடன்Miles Logan (மார்ட்டின் Lawrence) அவன் ஒரு 20 மில்லியன் மதிப்புள்ள வைரத்தை திருடும் போது போலீஸ் ஸ்மெல் பண்ணி அவனை நெருங்குறாங்க... அப்ப வைரத்தை கொள்ளை அடிச்ச கட்டத்துக்கு எதிர் கட்டத்துல (அப்பதான் அந்த கட்டிடடத்தை கட்டிகிட்டு இருக்காங்க...) கயிறு மூலமா எதிர் கட்டிடத்துக்கு போய், அங்க இருந்து அந்த விலைமதிக்க முடியாத வைரத்தோட எஸ்கேப் ஆவரதுதான் அவனோட பிளான்...

அவன் அந்த புதுசா கட்டிக்கினு இருக்கற கட்டத்துக்கும் போயிட்டான்.
பாவம் அவன் எண்ணத்துல இடி உழுந்துடுச்சி, அந்த புதுசா கட்டிக்குனு இருக்குற கட்டத்தை சுத்தி போலீஸ் ரவுண்டப் பண்ணிடுச்சி.

இவன் இருக்குறது மூனாவது மாடியில, அதுல புதுசா கண்ஸ்ட்ரக்ட் பண்ணற ஏசி பிளான்ட் உள்ளே, அந்த வைரத்தை உள்ள வச்சி சல்லோ டேப் அடிச்சிட்டு அந்த இடத்தை விட்டு கிழே அவன் இறங்க, சில வினாடிகள் கழிச்சிஅமெரிக்க போலிஸ் வந்து நம்ம தலைவர் கையில விலங்கை மாட்டுது .

தலைவர் வெளியில வந்து ஜீப்ல ஏத்தும் போது அந்த தெருவோட பேரு.. அந்த புதுசா கட்டிக்கினு இருக்கற கட்டத்தோட பிளாட் ஏண் எல்லாத்தையும் மனசுல குறிச்சி வச்ச்க்கி்றான்.... தலைவருக்கு ரெண்டு வருஷம் களி திங்க சொல்லி கோர்ட்டு உத்தரவு போடுது....

திரையில் இரண்டு வருடம் கழித்து என்று டைட்டில் தெரிய , இரண்டு வருடம் கழிச்சி தலைவர் செம குஜால வெளிய, அடிப்பாடிக்கினே வர்ரார். நேரா அந்த பில்டிங்கு போய், அந்த வைரத்தை எடு்த்து அதை வித்து லைப்ல செட்டில் ஆகனும். வேற எந்த வேலையே அவனுக்கு இல்லை....

நேரா அந்த தெருவுக்கு போன அந்த புது கட்டிடத்தை பார்த்ததும் அவனுக்கு மயக்கம் வராத குறைதான் பூமியே அவன் காலை விட்டு நழுவனா போல இருந்தது... காரணம் அந்த கட்டத்துலதான் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தோட போலீஸ் ஹெட் குவாட்டர்ஸ் இயங்கிட்டு இருக்கு...

இவன் திருடன், இவன் டைமண்ட் வச்சி இருக்கறது ஒரு போலிஸ் ஹெட் குவாட்ர்ஸ்... எப்படி அந்த டைமண்ட் எடுத்தான்? அந்த டைமண்ட் இவன் வச்ச இடத்துல இருந்ததா? என்பதை திருட்டு டிவிடியில் பார்த்து மகிழவும்....

படத்தின் சுவாராஸ்யங்களில் சில...

சிரி்ச்சி வயிறு புண்ணா போகனும்னு ஆசைப்படறவங்க இந்த படத்தை மொதல்ல பாருங்க...
முக்கியமா நகைச்சுவை உணர்வு இல்லை என்றால் இப்படி ஒரு படத்தை எடுக்க முடியாது. அந்த வகையில் இயக்குநர் Les Mayfield கை வலிக்கும் வரை பாராட்ட பட வேண்டியவர்...
இப்படிக்கூட யோசிக்க முடியுமாங்கற அளவுக்கான திரைக்கதை....

இரண்டு வருஷம் களி தின்னுட்டு வெளிய வந்ததும் சந்தோஷத்துல ஒர ஆட்டம் ஆடுவார் பாருங்க அந்த மகிழ்ச்சி உங்களையும் தொத்திக்கும்

மார்ட்டின் லாரன்சின் முக சேஷ்டை கடவுள் அவருக்கு மட்டுமே கொடுத்த வரம்.

அந்த இடம் போலிஸ் ஸ்டேஷன்னு தெரிஞ்சதும் ரொடுன்னுகூட பார்க்காம அவர் போடற சோக ஆட்டம் இருக்கே அதை இன்னைக்கு எல்லாம் ரிவைன்ட் பண்ணி பாத்துக்கிட்டே இருக்கலாம்...


மிக அற்புதமான சமாளிப்போடு அந்த வைரத்தை எடுக்க மார்டின் போடும் திட்டங்கள் வெகு அழகு...

எசி பிளான்ட் உள்ளே வைரம் தேடி போக அந்த ரூமில் இருக்கும் ஒரு அதிகாரி இட்சு கார்டை அவர் பேன்ட் உள்ளே கையை விட்டு துழவி தடவுவதை பார்க்கும் மார்டின், அடுத்த சில நொடிகளில் அவர் கை கழுவாத கையை பற்றிக் குலுக்க வேண்டிய கட்டாயம் வர, அதற்க்கு அவர் காட்டும் முக சேஷ்ட்டை, எல்லோருக்கும் சிரிப்பை வர வைக்கும்

போர்ஜரி செய்து போலிசில் வேலைக்கு சேரும் மார்ட்டின் அங்கு போனதும் ஒருவன் துப்பாக்கி முனையில் ஒரு ஷாப்பிங்கில் கொள்ளை அடிப்பதாக தகவல் வர அங்கு போய் பார்த்தால் அந்த கொள்ளையன் இவன் பழைய கூட்டாளி, அதை போலி்சுக்கு தெரியாமல் அவர் சமாளிக்கும் அழகே அழகு...

அதை விட காமெடி எல்லா போலி்சுக்கும் இவர் வகுப்பெடுப்பது வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவை...
காமெடியில் மார்ட்டின் லாரன்சை அடித்துகொள்ள முடியாது....


கிளைமாக்ஸ் ரொம்ப ரொம்ப அற்புதம்.... வேற என்ன? படம் பாத்து என்ஜாய் செய்யுங்கள்....

Directed by Les Mayfield
Produced by Daniel Melnick,
Allen Shapiro
Written by Michael Berry,
John Blumenthal,
Stephen Carpenter
Starring Martin Lawrence,
Luke Wilson,
Dave Chappelle
Peter Greene
Olek Krupa
Nicole Ari Parker
Music by Ed Shearmur
Distributed by Columbia Pictures
Release date(s) September 17, 1999
(See release history)
Running time 93 min.
Language English
Budget $36,000,000 (estimated)


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... அப்போதுதான் இந்த செய்தி வெகுஜன மக்களிடம் போய்சேரும்
நன்றி

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner