Showing posts with label சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ. Show all posts
Showing posts with label சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ. Show all posts

சென்னை வெள்ளத்துக்கு காரணம் காசி தியேட்டர் தரைப்பாலமா ?






சென்னை காசி தியேட்டர்ல  புது படம் போட்டா... ஜெயா டிவி வரை டிராபிக்  தேவுடு காக்கும்..

  சட்டுன்னு தரை பாலத்தை புடுச்சி ஜபர்கான்  பேட் பக்கமா போயி சைதாட்பேட்டை இல்லை அசோக் நகர் போயிடுலாம்... 

அதே போல இந்த பக்கம்  இந்திராதியேட்டர் உள்ள இருந்து வருகின்றவர்கள்  தரைபாலத்து வழியா   மெயின் பாலத்து வழியா  பூந்து புதியதலைமுறை பக்கமா  கிண்டி போயிடலாம்...

அந்த அளவுக்கு  அந்த தரைப்பாலம் பெருமளவு பீக் அவர்ல  இருசக்ர வாகன ஓட்டிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையில்லை...


சென்னை சில்க்ஸ் தீ விபத்து.




20 மணி நேரம் போராடியும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்.? நேற்று இரவு சாதர்ன் கிரைஸ்ட் ஓட்டலின் மொட்டை மாடியில் இரவு பதினொன்றரைக்கு மேல் வரை இருந்தேன்..அப்போது வரை தீ கொழுந்து விட்டு எரிந்துக்கொண்டுதான் இருந்தது…

என் கால்கள்.


மதியம் இரண்டு மணிக்கு இரக்கமற்று காயும் வெயிலில் சாலிகிராமம் பிரசாத் லேபிள் இருந்து மயிலைக்கு டூவிலரில் செல்வது பெரும் கொடுமை. 

வேறு வழியில்லை கிளம்பியே ஆக வேண்டும்.
ஏவிஎம் சிக்னல் வடபழனி பஸ் டிப்போ சிக்னல் இரண்டையும் தாண்டுவதற்குள்ளே டரியல் ஆகி விட்டேன்..

போட்டோகிராபியில் பவுன்ஸ் லைட் என்று ஒன்று உண்டு.. அதாவது வெள்ளை தெர்மோக்கோள் அல்லது வெள்ளை சாட்டின் கிளாத்தின் மேல் ஒளியை பாச்சினால்… அது சப்ட்டாக ரிப்லைக்ட் செய்யும்… குளோசப் காட்சிகள் எடுக்க இந்த புவுன்ஸ் லைட் அதிகம் உதவும்…


சென்னை புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் நகர்வலம்... 2016




 
புத்தாண்டு தினத்தின் இரவில் பழைய நியாபகங்கள் கிளிறிய படி சென்னையை வலம் வருவது வழக்கம்..
அப்படி  வேளச்சேரிக்கு சென்று கொண்டு இருந்த போது..

கடந்த ஆறு நாட்களில் மழை பாதித்த நனைந்து போன முகநூல் பதிவுகள்.. #‎chennai‬ ‪#‎chennairains‬ ‪#‎chennaiflood‬ ‪#‎chennaifloodhelp‬




நகரின் மத்தியில் இருக்கும் சைதாபேட்டை பாலமே வெள்ளத்தில் மூழ்கி உள்ளது... ஆற்றங்கரையோரம் இருக்கும் மக்களின் நிலைமையை புரிந்துகொள்ளுங்கள்....
எல்லோரும் மொட்டை மாடியில் தவம் கிடக்கின்றனர்.... மின்சாரம் இல்லாத காரணத்தால் தகவல் தெரிவிக்க முடியாமல் விழி பிதுங்கி உள்ளனர்..

வெள்ளக்காடானது சென்னை...




எட்டுமணிக்கே வீட்டுக்கு வந்து விட்டேன்.... ஆனாலும் விலைஉயர்ந்த கார்  மூழ்கும் ஆபாயத்தில் இருப்பதாகவும்... கணவர்  ஓஎம்ஆர் ரோட்டில் சிக்கிக்கொண்டு இருப்பதாக தோழி உதவிக்கு அழைக்க...

THIS NOVEMBER HEAVY RAIN AT CHENNAI மறக்க முடியாத மாமழை…23/11/2015





23/11/2015 அன்று இரண்டு மணிக்கு  ஆரம்பித்த மழை… இரவு பதினோரு மணிவரை கொட்டிதீர்க்க… 
முப்பது நாளில் பெய்ய வேண்டிய மழை மூன்று நாளில் பேய்ந்து விட்டது என்று அம்மா சொன்னதற்கு ஆமாம் சாமி  போட்ட போது புளியோதரையும் பொங்கலும் மழைக்கு  வீட்டில்  உட்கார்ந்து சுட சுட சாப்பிட்டவர்கள் எல்லாம் திங்கட்கிழமை வேலை  நேரம் எலிப்பொறியில் சிக்கியது போல   சிக்கிக்கொண்டார்கள்…

HE - அவன்






 மயிலை
30/10/2015
 இரவு பதினோரு மணி..
========
 தம்பியும்… தம்பி மனைவியும் வீட்டுக்கு வருகின்றார்கள் என்பதால் வீட்டிற்கு வெளியே நானும் யாழினியும் காத்திருந்தோம்..

 அந்த பையன்  காரணீஸ்வரர் கோவில் பக்கத்தில் இருந்து வந்துக்கொண்டு இருந்தான்… கருப்பு சட்டையும் வெள்ளை பேண்டுமாய்…
இன்  செய்து இருந்தான்…. நவநாகரிகமாய் இருந்தான்… 
 உதாரணத்துக்கு  சொல்ல  வேண்டும் என்றால்..?
 பார்க் ஓட்டல் பப்பில் இருந்து வெளி வந்த  பையனை போல இருந்தான்…



சென்னை மயிலையில் அதிகரிக்கும் நடமாடும் டீக்கடைகள்.

சென்னை மயிலை வாசிகள்... கண்டிப்பாக  இந்த  மாற்றத்தை கடந்த மூன்று மாதங்களாக பார்த்து இருக்க  வாய்ப்புண்டு...  இளம் வயது சல்மான்கான் ஷாருக்கான் போன்று இருக்கும்   சின்ன வயது  பசங்கள் டீ  விற்று அலைவதை பார்த்து இருப்பீர்கள்....


கோவம்.



மனைவியை ஓஎம்ஆரில்  உள்ள  அவர் அலுவலகத்தில் பைக்கில்  விட செல்கையில் இரண்டு மூதேவிகளை சந்தித்தேன்..


எல்லை மீறுகின்றதா? புத்தாண்டு கொண்டாட்டம்...


புத்தாண்டு கொண்டாட்டம்  எல்லை மீறி போகின்றதா ??? என்று சன்டிவி நியூஸ் சேனலில் இளைஞர்கள் சிலர்  எல்லை மீறிய காட்சிகளை காட்டினார்கள்…


இரண்டு விபத்துகள்.



 நேற்று இரவு பாரிஸ் வரை ஒரு வேலை…. 


மன்ரோ சிலை வழியாக பாரிஸ் சென்று விட்டு கடற்கரை சாலை , லைட் ஹவுஸ் வழியாக வீடு திரும்ப திட்டம்.

உடல்கள்...



சென்னை அரசு பொது மருத்துவமனை மார்ச்சுவரி பக்கத்தில் சற்று நேரம் நின்றுக்கொண்டு இருந்தால் போதும்... வாழ்க்கை மீதான கேள்விகள் ஏகத்துக்கு எகிறி தினறடிக்கின்றன..

விடியற்காலை 5 மணிமுதல் மதியம் மூன்று மணி வரை அரசு மருத்துவமனையை நானும் தம்பி பாலாவும் சுற்றிக்கொண்டு வர சங்கர் மச்சியும் பதினோரு மணியளவில் எங்களோடு சேர்ந்துக்கொண்டான்...

பெரிய புடுங்கி மயிறு போல நான் தான் நான்தான்னு புதுப்பேட்டை தனுஷ் போல கத்திக்கொண்டு இருப்பவனை ஒரு மணி நேரம் அரசு மருத்துவமணை மார்ச்சுவரி பக்கம் சும்மா காத்திருக்க வைத்தால் போதும்... மனம் திடிர் என்று ஜென் நிலைக்கு செல்வது சர்வ நிச்சயம்.

பெருங்களத்தூர் பைக் ஸ்டேன்ட் பக்கிங்க... ஜாக்கிரதை மக்களே...





பெருங்களத்தூர் ஒரு முக்கிய ஜங்கஷனாக உருவெடுக்கும் என்று யாரும் நினைத்துக்கூட பார்த்து இருக்க மாட்டார்கள்..


முக்கியமா என்றைக்கு மதுரவாயல் பைபபாஸ் தொடங்கியதால்  கோயம்பேடு செல்லும் பேருந்துகள் நகரத்தினுள் நுழையாமல் பைபாஸ் சாலையில் செல்ல ஆரம்பித்ததோ...??

என்றைக்கு தென்மாவட்ட பேருந்துகள்... கோயம்பேட்டில் இருந்து கிளம்பி.... வடபழனி கிண்டி தாம்பரம், வழியாகக  செல்லாமல் பைபாஸ் வழியாக செல்ல ஆரம்பித்ததோ.. அன்றில் இருந்து பெருங்களத்தூர் ஜங்ஷன் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற ஆரம்பித்தது....

காணமல் போன ஆட்டோ மீட்டர்.... டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு வாழ்த்துகள்...




2013 ஆண்டில்  தமிழக ஊடகங்களின் முயற்சியினால் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு எது என்று கேட்டால்?  ஆட்டோ மீட்டர் என்று தைரியமாக  சொல்லலாம்...

சென்னையில் பெருகி வரும் வட மாநிலத்து இளைஞர் கூட்டம்....



சென்னையில் முன் எப்போதும் இல்லாத வகையில்  தற்போது  வட இந்திய இளைஞர்களின் கூட்டத்தை நாம்  அதிகம்  காண்கிறோம்....

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner