அங்காடி தெரு துன்பியலின் உச்சம்...(பார்த்தே தீர வேண்டிய படம்)

செக்யூரிட்டி வேலைக்கு 1993 டிசம்பர் 31ம் தேதி பையை தூக்கி கொண்டு கடலூரில் இருந்து சென்னைக்கு கிளம்பிய போது இரண்டே நாட்களில் சென்னை பட்டணம் என் காலடியில் வந்து விழுந்து விடும் என்று தப்பு கணக்கு போட்டது என் தவறுதான்... பேசிய கூலியை கொடுக்காமல் கனவுகளோடு வந்த தென்மாவட்டத்து இளைஞர்களை வயிற்றில் அடித்தது இங்கு இருக்கும் செக்யூரிட்டி நிறுவனம்...

அவர்கள் முதலில் செய்தது வேலைக்கு வரும் இளைஞர்களின் சர்டிபிகேட்டை முதலில் வாங்கி வைத்துக்கொள்வார்கள்.... அதன் பிறகு அடிமைதான்... அது ஒரு பெரிய கதை அந்த வலி வேறு ஒரு சந்தர்பத்தில் பதிவிகின்றேன்.....ஒரே அறையில் 25 பேருக்கு மேல் படுத்து உறங்கும் கொடுமை...ஒரே டாய்லட்டில் 150 பேர் மேல் போய்விட்டு வருவதும்... அப்படி போய் போய் அடைத்துக்கொண்டு எல்லாம் மிதக்கும் போது, அதிலேயே 2க்கு சகித்துகொண்டு போய் விட்டு வரும் இளைஞர்கள்... பலரது குடும்ப சூழல் மற்றும் சென்னைக்கு வேலைக்கு போகின்றேன் என்று ஊரில் சொல்லி விட்டு வரும் பில்டப், அனைத்தையும் சகித்துக்கொள்ள வைத்துவிடும்..
எப்படி டாயலட் இருந்தாலும் டயத்துக்கு செக்யூரிட்டி வேலைக்கு போக எல்லாவற்றையும் சகித்துகொள்ளும் அவர்கள் சகிப்புதன்மையை என்னவென்று சொல்வது.... உள்ளே எட்டி பார்த்து விட்டு மெரினா கட்டண கழிவறைக்கு போனவன் நான்....
அதன் பிறகு கொடுத்த எனது சர்டிபிகேட்டை அவர்களிடம் இருந்து வாங்கி அவர்களை விட்டு நகவதற்க்குள் போதும் போதும் என்றாகிவிட்டது..

முதலில் சென்னைக்கு வேலை என்றவுடன் எனை வசீகரித்த விஷயம்.. சென்னையின் பரபரப்பும், அழகு பெண்களும்தான்.... சென்னை எல்ஐசி எதிரில் உள்ள தாஸ்பிரகாஷ் (இப்போதுஅந்த ஓட்டல் இல்லை) ஓட்டலின் வாசலில் இறுக்கமான டீ சர்ட் ஜீன்ஸ்அணிந்து ஸ்டைலாக சிகரெட் பிடித்த பெண்களை பார்த்து மயங்கி போனேன்...எந்த இலக்கும் இல்லாமல், எதாவது வேலை செய்து, தங்க நல்ல இடமும், மூன்று வேலை சாப்பாடுமே அப்போது எனக்கு பிரதான இலக்காக இருந்தது....சென்னைக்கு போகும் முன் எப்படி பட்ட கனவுகளோடு மஞ்சள் பை தூக்கினேனோ அப்படி பட்ட கனவுகளை அங்காடி தெரு படத்தில் பாண்டி கேரக்டர் மூலம் கண்முன் நிறுத்திவிட்டார்....வசந்த பாலன்...பொதுவாக சென்னை ரங்கநாதன் தெருவுக்கு நான் பகலில் போவது அரிது... இரவு எட்டரைக்கு போய் ஜன சந்தடி குறைந்து ரயில் பிடிக்கும் அவசரத்தில் போகும் மக்களுக்கு எதிர் திசையில் நடந்து சாவகாசமாக பர்சேஸ் செய்ய போகும்பார்ட்டி நான்... ஆனால் என் மனைவிக்கு ஜனத்திரளில் நடந்து போய் பர்சேஸ் செய்ய ஆசை... இருப்பினும் இரவில்தான் அதிகம் போய்விட்டு வருவோம்... இப்போது கூட வீட்டின் கிரகபிரவேசத்திற்க்கு உறவினர்களுக்கு துணி எடுக்க இரவு நேரத்தில் சரவணா ஸ்டோர்ஸ் சென்றோம்... இரவு பத்தேகாலுக்கு கடை சாத்தும் நேரத்தில் எல்லா மாடியிலும், வாங்கிய துணிகளுக்கு தரைதளத்தில் பில் போடுமாறு ஸ்பிக்கரில் கர கர குரல் ஒலிக்க, தரை தளத்தில் நாங்கள் பில் போட்டுக்கொண்டு இருக்கும் போது... கடையில் வேலை செய்யும் பெண்கள் பணி முடிந்து இருப்பிடம் திரும்பும் அந்த நேரத்தில், ஒரு 200க்கும் அதிகமான பெண்கள் ஒரே சீருடையில் பள்ளி சிறுமிகள் சுற்றுலா செல்வது போல் படிக்கட்டில் இருந்து தாளம் தப்பாமல் நடந்து போய் கொண்டு இருந்தனர்..


கூட்ஸ் ரயிலின் பெட்டிகள் கடக்கும் போது இப்போது முடிந்து விடும், இப்போது முடிந்து விடும், என்று நினைத்துக்கொண்டு ஆளில்லாத லெவல் கிராசிங்கில் நிற்க்கும் போது கூட்ஸ் பெட்டிகள் நம்மை வெறிப்பேற்றிய படி நம்மை கடந்து போய் கொண்டே இருக்கும் போது, ஒரு வெறுப்பு வருமே அது போல், அந்த பெண்கள் நடைவரிசை முடியாத ஒரு கூட்ஸ் ரயில் பெட்டிகள் போல் முடியாமல் போய்கொண்டே இருந்தது....

அந்த பெண்கள் நடக்கும் போது நடை சத்தம் கேட்டதே தவிர அவர்கள் பேச்சு குரலும் சிரிப்பும் சத்தமும் இல்லவே இல்லை...அப்படி ஒரு டிசிப்ளின் நடை...எனக்கு ஆச்சர்யம் இவர்கள் எல்லோரும் எந்த இடத்தில் படுத்து குளித்து, சாப்பிட்டு,கழிவறைக்கு போய்... ஏனெனில் இதே அனுபவம் எனக்கும் உண்டு என்ற காரணத்தால் அந்த பெண் பிள்ளைகளை பற்றி யோசித்து கொண்டே இருந்தேன்.... அப்படி யோசித்து கொண்டு இருந்த இரண்டு வாரத்தில், அவர்களின் மறு பக்கத்தை நார் நாராக கிழத்து தொங்க விட்ட படி ஒரு படம் வந்து இருக்கின்றது... அந்த படத்தின் பெயர் அங்காடி தெரு....

பொதுவாக ரங்கநாதன் தெருவில் உள்ள எந்த கடையிலும் கஸ்டமர் கேர் என்று ஒன்று இருக்கவே இருக்காது.. அவர்கள் அலட்சிய பதில் அளிக்கும் முறைக்கு,எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வரும்... முன்பு எல்லாம் அவர்கள் பேசும் அலட்சிய பேச்சுக்கு, எனக்கு அவர்கள் மேல் கோபம் வந்து இருக்கின்றது...ஆனால் அவர்களின் ஒரு சிலரின் வெள்ளை சிரிப்பும்,அறியாமை பேச்சுகளும் அவர்கள் மேல் ஏற்படும் கோபத்தை சட்டென குறைத்து விடும்...

இயக்குனர் சேரன் எழுதிய டூரிங் டாக்கிஸ் புத்தகத்தில் துணிக்கடையில் வேலை செய்வது என்பது உலக விஷயமே தெரியாமல் கிணற்றுதவளையாக காலை பத்து மணிக்கு உள்ளே போய் இரவு பத்து மணிக்கு வெளியே வரும் அடிமை வாழ்க்கை என்று தனது புத்தகத்தில் குறிப்பிட்டு இருப்பார்.... அதை படித்ததில் இருந்து துணிக்கடையில் வேலை செய்யும் இளைஞர்களின் அலட்சிய பேச்சுகளையும், சிறு சோம்பேறிதனத்தையும் மன்னிப்பது என்பது என் வழக்கமாகிவிட்டது...
என் அப்பா கடலூரில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த செல்லமய்யர் சில்க்ஸ்,மற்றும் ஜெயஸ்ரீ சில்க்ஸ் போன்றவற்றில் 30 வருடம் துணிக்கடை குமாஸ்தாவாக வேலை செய்தவர் ... அதனால் எனக்கு துணிக்கடை பிரச்சனைகள் தெரியும்... களைத்து போட்டு துணி டிசைன் தேடும் ரங்கநாதன் தெருவில், ரேக்கில் இருந்த படியே துணிகளை செலக்ட் செய்யும் குடும்பம் என்னுடையதாகதான் இருக்கும்....
அங்காடி தெரு படத்தின் கதை இதுதான்....

ஜோதிலிங்கம்(மகேஷ் அறிமுகம்) கனி(கற்றது தமிழ் அஞ்சலி) இருவரும் ரங்கநாதன் தெருவில் உள்ள செந்தில் முருகன் துணிக்கடையில் வேலை செய்கின்றார்கள்...இருவர் குடும்பமும் மிகவும் ஏழ்மையானது... இருவர் சம்பளமும் மிக முக்கியமானது...ஆனால் வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நடுவில் இருவருக்கும் காதல் பூ பூக்கின்றது...கடையின் அண்ணாச்சிக்கு லாபம் மட்டுமே குறிக்கோள்..அவருக்கு அல்லக்கையாக வரும் கருங்காலி(இயக்குனர் வெங்கடேஷ்) அங்கு வேலை செய்யும் பெண்களையும் ஆண்களையும் மனதாபிமானம் இன்றி அடிமைகள் போல் நடத்துகின்றான்...கருங்கலி பார்வையில் இருவரும் சிக்க அவர்கள் இருவரும் என்னவானார்கள் என்பதை வரிவிலக்கு அளித்தும் கொள்ளை விலைக்கு டிக்கெட் விற்க்கும், தியேட்டரில் பார்க்கவும்.. அல்லதுபார்மாபஜார் குட்டி திரையில் இரண்டு மாதம் கழித்து தேடவும்...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
நாம் ஒரு கடைக்கு போக நினைத்து நடக்கும் போதே வேறு ஒரு கடைக்கு நம்மை வழி நடத்தி் செல்லும் ஜனத்திரள் அதிகம் உள்ள தெருவில் படபிடிப்பு நடத்திய குழுவுக்கும், ஒளிபதிவாளர் ரிச்சர்டுக்கும் எனது முதல் பாராட்டு... இதில் கவனிக்க வேண்டிய மற்றும் பாராட்டும் அம்சம் யாரும் கேமராவை பார்க்காமல் நடப்பது....

விண்ணைதாண்டி வருவாய் படத்தை விட இதில் நிறைய கட் ஷாட்டுகள்... ஒரு விடியலில் இருந்து ரங்கநாதன் தெரு எப்படி பரபரப்பாக மாறுகின்றது என்பதை நிறைய கட் ஷாட்டுகள் மூலம் செல்லுலாய்டில் பதிந்து இருக்கின்றார்கள்...

ரங்கநாதன் தெரு கடையில் வேலை செய்யும் பிரச்சனைகளை அதே போல் ஒரு கடையில் பெயர் மாற்றி எடுத்து இருப்பதற்க்கு துணிச்சல் வேண்டும்.. துணிக்கடை செட் எதாவது போட்டு இருந்து இருந்தால், இந்த படம் நம் மனதில் இந்தளவுக்கு ஒட்டி இருக்காது..... இந்த படத்தின் பலமே அந்த துணிக்கடையின் ரியாலிட்டிதான்....ஆனால் சினேகா சிரிக்கும் அந்த ஹோர்டிங்குகள் ஒரு குறியீடாக வேறு ஒரு கடையை நினைவு படுத்தி தொலைக்கின்றன....
வேலை செய்பவர்களுக்கு இடையே நடக்கும் ராகிங் பிரச்சனை.... அதில் பூக்கும் காதல்... என்று படம் முழுவதும் இயல்பு மீறாத நிலை படம் எங்கும் வியாபித்து இருக்கின்றது....ஒருநிமிடம் லேட்டாக வந்தால் ஒரு ரூபாய் பிடித்தம் எனும் போதும்...4ம்கட்ட ஈழ போரில் குவியல் குவியலாக பினங்கள் கிடப்பது போல் ஒரே ஹாலில் 100 பேருக்கு மேல் உறங்குவதும், சாப்பாடு இடத்தில் இரண்டு சட்டை இல்லாத மாமிச மலைகளை போட்டு ஒரு அக்மார்க் மெஸ் நம் கண் முன் வந்து நிற்கின்றது...அவர்கள் அக்குளை சொறியாதது மட்டும்தான் பாக்கி....

படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் அந்த முகங்களும் கொஞ்சமும் சினிமாதனம் இல்லாதவை...
படத்தின் நிறைய விஷயங்கள் மெனெக்கெட்டு செய்து இருக்கின்றார்கள்.... இங்கே படுப்பவர்கள் எல்லாம் கொலுத்து வேலை செய்து விட்டு படுப்பவர்கள்... அதனால் காலில் சிமெண்ட் பூசிக்கொண்டு படுப்பதில் நிறைய செய்திகளை சேகரித்து இருக்கின்றார்கள்...

ஒரு தொப்பை போலிஸ்காரர் ரங்கநாதன் தெருவில் காலையில் வந்து நிற்க்கும் போது பின்புலத்தில் சரவணாஸ்டோர் அண்ணாச்சி போட்டோ தலைக்கு பதில் இவர் தலை நிற்பது போல் அமைத்து, உண்மை உழைப்பு உயர்வு என்ற வாசகங்கள் அவர் தலை சுற்றி வருவது போல் காண்பித்து விட்டு அடுத்த காட்சியில் அவர் எல்லா கடைகளிலும் மாமுல் வாங்குவது போல் காட்டி இருப்பது செம நக்கல்....
மாத மாதம் ஒரு பேப்பரில் டிராபிக் போலிஸ், மாம்பலம் இன்ஸ்பெக்டர் ,மின்சார துறை, தொலைபேசி லைன்மேன், என்று எழுதி அவர்கள் துறை வாரியாக எவ்வளவு லஞ்சம் மாதா மாதம் எவ்வளவு பைசல் பண்ணி இருக்கின்றார்கள் என்பதை போகிற போக்கில் காட்டும் காட்சிகள் மெனெக்கெடலுக்கும் நல்ல உதாரணம்...

விளிம்புநிலை மனிதனின் காமமும் காதலும் படும் பாட்டை நினைக்கும் போது நம் கண்கள் கலங்குவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை...

ஒரு துணிக்கடையில் நாம் இருப்பது போன்ற உணர்வை கொடுக்கும் பின்னனி இசை மற்றும் சிறப்பு சப்தம் பராட்டுக்குறியது....

சினேகா ஆடும் போது அண்ணாச்சி இப்படி இழுத்து போத்தி நடிச்சா எவ்னயா பார்ப்பான் என்று சொல்ல.... அடுத்த காட்சியில் முந்தி பறக்க வயிறும் தொப்புளும் தெரிய சினேகா நடப்பது இன்றைய விளம்பர உலக எதார்த்தம் காட்சிகளாய் நம் கண்முன்...நீங்களே அடுத்த படம் எடுக்கலாம் அண்ணாச்சி என்று சொல்லும் அந்த காட்சியும்,அதற்க்கு விளம்பர டைரக்டர் பதறுவதும் ஏ ஒன்.....

வசனங்கள் ஜெயமோகன்... இதுவரை ஜெயமோகனையும் சாருவையும் நான் வாசித்ததே இல்லை...ஆனால் ஜெயமோகன் வசனங்கள் படத்தின் பெரிய பலம்...

ஒரு பெரியவர், 30 வருஷங்களுக்கு முன்னே இதே ரங்கநாதன் தெருவில் மனுஷங்களை நம்பி கடை போட்டேன் எனக்கு எந்த கொறையும் இதுவரை இல்லை...

“விற்க்க தெரிஞ்சவனாலதான் வாழ்க்கை வாழ முடியும்...”

என் தங்கிச்சிதான் உன்னைய யாருன்னு கேட்டுச்சி?
நீ என்ன சொன்னே???
நான் சிரிச்சேன்.....

பாரு போட்டு பத்திரிக்கையில் கிழி கிழின்னு கிழிச்சி தொங்கவிட்டுட்டான்... இந்த இடத்துல கால் ஊன எனக்கு 25 வருஷம் ஆச்சி....

“உலகத்திலேயே குசுவுக்காக ஒரு காதல் தோத்திச்சின்னா அது உன்னோடுதுதான்”

இந்த இடத்துல பிச்சைகாரியை கூட விட்டு வைக்கமாட்டனுங்க... என்று மனிதர் பின்னி எடுத்து விட்டார்...

அஞ்சலி சூப்ரவைசரிடம் மாட்டிக்கொண்டு தலை கலைந்து வெளியே வரும் போது, லிங்கம் எப்படி தப்பினே? என்று திரும்ப திரும்ப கேட்க,
“ மாரை புடிச்சி கசக்கினான் நான் அமைதியா நின்னேன்” போதுமா என்ற கேட்டபடி விழியில் வழியும் நீரை துடைத்தபடி கஸ்டமர்களுக்கு துணி எடுத்து போட்டு காட்டும் அந்த இடத்துக்காக அஞ்லிக்காக தேசிய விருதுக்கு பரிந்துரை செய்யலாம்...
ஏன்டி ஒரு வாரமா லிங்கத்தை அலைய வைக்கிறே என்று நண்பி கேட்கும் போது, துணி துவைத்துக்கொண்டே அந்த அம்பிளை கிட்டாயவது ரோஷம் மானத்தோடு வாழறேன் என்று சொல்லும் அந்த காட்சி சான்சே இல்லை.. சட்டென விழியில் நீர் கோர்த்துக்கொண்ட இடம் அது....

ரங்கநாதன் தெருவில் வெவ்வேறு கேரக்டர்கள் அறிமுகம் ஆவது கிளைக்கதை என்றாலும், ரசிக்கும் படியாகவே இருக்கின்றது... அதிலும் அந்த கட்டணகழிப்பிட ஸ்டைல் பார்ட்டி....வேலை கேட்கும் போது, ஒரு பழக்கார பெண்மணி ஆப்பிள் பழம் தர அந்த பழ பிச்சை வேண்டாம் என்று தட்டிவிடும் அந்த காட்சி அற்புதம்...

புதுமுகம் மகேஷ் ஊரில் கிரிகெட் விளையாடும் காட்சியிலும்...கிராமத்து காதல் காட்சியிலும் நன்றாகவே நடித்து இருக்கின்றார்....

ஆல்பம் படம் இயக்கிய இயக்குனரா? என்று ஆச்சர்யபட்டு அதை வெயிலில் உடைத்த வசந்தபாலன், இப்போது அங்காடிதெரு படம் மூலம் பேர் சொல்லும் இயக்குனர் வரிசையில் இவரும்...

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை சாங் இசையருவி,சன்மியூசிக் போன்றவற்றில் போட்டு இனி தேயவிட போகின்றார்கள்...

விளம்பர ஷுட்டிங் முடிந்து கடையில் மாட்டிக்கொள்ளும் இருவரும் பாடலின் போது, குளோஸ் சர்க்கியூட் கேமரா இயங்குவதும்,சோத்துக்ககே வழியில்லாத கேரக்டர் சடங்கு செய்ய ஆசைப்படுவதுமாக சில சறுக்கல்கள் படத்தில் உண்டு....

அயங்கரன் நிறுவனத்துக்கு இந்த படம் நல்ல பெயர்.... பெரிய பட்ஜெட் இல்லாமல் இது போல் சின்ன பட்ஜெட் படங்கள் நிறைய எடுக்கலாம்...
அடுத்து நந்தலாலா....எதிர்பார்ப்போம்...

என்னதான் ரியாலிட்டி என்றாலும் கடைசிகாட்சிவரை சோகத்தை பிழிந்து இருக்க வேண்டாம். என்பது என் எண்ணம்...

இன்னும் நிறைய எழுதிக்கொண்டே போகலாம்.... உண்மை தமிழனோடு போட்டி போடும் எண்ணம் எனக்கு இல்லை என்பதால் இத்தோடு நிப்பாட்டிக்கிறேன்...
படத்தின் டிரைலர்...



படக்குழுவினர் விபரம்...
Banner: Ayangaran International
Cast: Magesh, Anjali
Direction: Vasantha Balan
Music: G V Prakash Kumar, Vijay Antony

தியேட்டர் டிஸ்க்கி...

சென்னை கமலா தியேட்டர்லதான் இந்த படத்தை பாத்தேன் ...பச்சைகிளி முத்துச்சரம் படத்துக்கு அப்புறம் தியேட்டர் புதுப்பிச்ச பின்னாடி இப்பதான் முத முறையா போறேன்....போனதும் ஒரு அதிர்ச்சி...பைக் டோக்கன் 15ரூபாய்...2அரைமணிநேரம் வண்டி நிப்பாட்ட 15 ரூபாய்... சத்தியம், தேவி தியேட்டர்லேயே பைக் டோக்கன் 10 ரூபாய்தான்... இந்த டோக்கன் கொள்ளையை எல்லாம் எப்படி? யார் கேட்பாங்கன்னு தெரியலை?....அதன் வரைமுறை அதுவும் தெரியலை... 15 ரூபாய் என்பது சாதாரணம் இல்லை ...மூன்று நண்பர்கள் கிளாசில் பாதி நுரை படிந்த 3 டீயை 15ரூபாய்க்கு குடிக்கலாம்.... இப்படி எல்லாம் இருந்தால் தியேட்டருக்கு கூட்டம் வருவது கஷ்டம்தான்... அது தியேட்டரிலும் தெரிந்தது... பாதி இருக்கைகள் காலி...

படம் நல்லா இருக்கு என்று மக்கள் வாய் வழியாக சொல்லி தியேட்டருக்கு மக்கள் வருவது பெரிய விஷயம்... மல்டிபிளக்ஸ் என்று சொல்லி ஒரு டிக்கெட் 100 என்றால் எப்படி தியேட்டருக்கு கூட்டம் வரும்...
100ரூபாய் என்பது ஒரு மாதத்துக்கான கேபிள்கட்டணம்... அதை தமிழக தியேட்டர் நிர்வாகத்தினர் புரிந்து கொள்ள வேண்டும்....

பழைய வீட்டு நினைப்பிலேயே லேட்டாக கிளம்ப புது வீடு 6 கிலோ மீட்டர் தள்ளி இருப்பது மறந்து போனதால் டைட்டில் கோவிந்தா கோவிந்தா.....

அன்புடன்
ஜாக்கிசேகர்

(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்18+(31/03/2010)

ஆல்பம்....

பென்னகரம் இடை தேர்தலில் 36 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றாலும்.. இதற்க்கு பணம் பெரிதும் பயன் பட்டது என்று பலரும் சொல்லலாம்... இருப்பினும் கவனிக்க படவேண்டிய விஷயம் என்னவென்றால் பிரதான எதிர்கட்சியாக இருக்க வேண்டிய அதிமுக டெப்பாசிட் இழந்து இருக்கி்ன்றது...மக்களை சந்திப்பதையே தவிர்த்து விட்டு, தேர்தலின் போது மட்டும் சந்திப்பதால் இதுதான் பதிலாக மக்களிடம் இருந்த வெளிப்படும் என்பதை புரிந்து கொள்ள வெண்டும்....
=========================
பெரம்பூர் மேம்பாலம் திறப்பு விழாவுக்கு முதல் இரண்டு நாட்களுக்கு முன் அந்த பாலத்தின் மேல் நடந்து சந்தோஷத்தில் உற்சாகத்தில் கூச்சலிட்ட மக்களை பார்த்த போது, அந்த மக்களின் பல வருடத்திய டிராபிக் வலியை என்னால் உணர முடிந்தது... இதே பாலத்தை அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெ அரசு விரைந்து கட்டு முடித்து இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை... திமுகவை பழிவாங்குவதற்க்காக அந்த பாலத்தில் ஊழல், கைது என்று அலப்பரை செய்தது... ஆனால் பாலத்தில் எந்த ஊழலும நடக்கவில்லை என்று அதே ஜெ அரசு ஒப்புக்கொண்டது வரலாறு...ஆனால் அதே இடத்தில் அந்த பாலம் இன்று பிரமாண்டமாக உயர்ந்து நிற்க்கின்றது... பெர்முபூர் வாசிகளின் சந்தோஷத்தை நேரில் பார்த்தால் அந்த உண்மை புரியும்....
==========================
நளினி விடுதலைக்கு தமிழக அரசு சொல்லி இருக்கும் சொத்தை காரணங்கள் ஏற்புடையது இல்லை என்று நேற்று பிறந்த குழந்தை கூட சொல்லி விடும்...

==============================
மிக்சர்.....
காலவதியான மருந்துகளை எடுத்து வந்து, எப்படி எல்லாம் டகால்ட்டி வேலை செய்து இருக்கின்றான்கள் என்று படிக்கும் போதும், கேள்வி படும் போதும், வயிறு எல்லாம் எரிகின்றது... எத்தனை உயிர்களிடம் விலையாடி இருக்கின்றார்கள்.. என் வீட்டு நபர்கள் சாப்பிட போவதில்லை.. எவன் வீட்டுல எழவு விழந்தா என்ன? என்ற மெத்தனத்தில் ,அந்த நெட் ஒர்க் இயங்கி இருக்கின்றது... இதில் ஒரு குடும்பம் குடிசை தொழில் போல் காலாவத மாத்திரைகளை தரம் பிரித்து இருக்கின்றது...மக்கா நல்ல இருங்கடா??? இவன்க பணத்தாசைக்கு பொழைப்புக்கும், அப்பாவி சிறுமி ஒருத்தி இறந்து போய் இருக்கின்றாள்...ங்கோத்தா உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா?
========================
இலங்கையில சைனாகாரன் வந்து சடுகுடு ஆடிக்கினு இருக்கான்...புலிகள் அழிப்பை கை கட்டி வேடிக்கை பார்த்த இந்தியாவுக்கு இன்னும் பல பிரச்சனைகள் காத்து இருக்கின்றது... இலங்கை எப்போதுமே இந்தியாவுக்கு நேச நாடாக நடந்து கொண்டதில்லை.. அது பாக்கிஸ்தானுக்கும், சைனாவுக்கும்தான் இதுவரை பாலும் பீரும் வார்த்துக்கொண்டு இருக்கின்றது என்று எல்லோருக்கும் தெரியும்... இந்தியா இப்போதும் விழித்து கொள்ளவில்லை என்றால் அமைதியான தென் பக்கம் அமைதி இழக்கும் என்பது மட்டும் நன்றாக தெரிகின்றது...

====================

ஒரு நண்பரிடம் இருந்து எப்போதும் போன் மற்றும் மெயில் வந்து கொண்டு இருக்கின்றது ... இயக்குனருக்கான தகுதி பற்றி எழுத வேண்டும் என்று சொல்லி வருகின்றார்...எனக்கு அந்த அளவுக்கு எல்லாம் தகுதி இல்லை நண்பரே இருப்பினும்... ஒரு இயக்குனர் எல்லா வற்றையும் கூர்ந்து கவனிக்க வேண்டும் நிறைய படிக்க வேண்டும் என்பதே அடிப்படை தகுதி....
=========================
இந்த வார வீடியோ.....

விஜய் நடிக்கும் 50 வது படம் சுறா... சுறா பாடல்கள் சில நாடக்ளுக்கு முன் வெளியிட்டார்கள்.. அதில்( பொம்மாயி) தஞ்சாவூர் ஜில்லாக்காரி கச்சேரிக்கு வாயேன்டி என்ற பாடல் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் என்பது என் கருத்து.. சுறா பொம்மாயி பாடல்தான் நான் தமிழ் சினிமாவில், முழு பாடலுக்கும் வேலை செய்த பாடல்...இது தெலுங்கில் சூப்பர் டுப்பர் ஹிட்டான பில்லா படத்தில் இடம் பெற்றபாடல்...இந்த தெலுங்கு பில்லாவின் ஒளிப்பதிவு நம்ம ஊர் சௌந்தர்....இவர் கேமராமேன் கேவி ஆனந் சார் அசி்ஸ்டென்ட்.... சுறா தமிழ் பாடல் வரும் வரை தெலுங்கில் வெளியான அதே பாடல்
அந்த தெலுங்கு பாடல் இங்கே...




=====================
படித்ததில் பிடித்தது...

எந்த சேனலில் செய்திகள் பார்பது பெஸ்ட்.--??

சன்நியூஸ்,கலைஞர் செய்திகள், ஜெயாசெய்திகள், இவை மூன்றில் நேரம் மட்டும் பாருங்கள்... மூன்றுக்கும் இரண்டு நிமிடங்கள் வித்யாசம் வருகின்றன... நேரமே இப்படி என்றால் செய்திகள்???

பா ஜெயகுமார் வந்தவாசி...
========================
பிடித்த கவிதை...

இடது கையில்
திருநீறு எடுத்தீர்கள்
வலது கையால்
குங்குமம் எடுத்தீர்கள்
வாயிலிருந்து
சிவலிங்கம் எடுத்தீர்கள்
உங்களை ஜாமினீல்
எடுக்க முடியவில்லையே???

பா.. இசக்கி முத்து.. வெள்ளானைக்கோட்டை...

நானே கேள்வி நானே பதில் பகுதி.... கடந்து போன ஆனந்த விகடனில் இருந்து
=============================
நான்வெஜ்...

ஜோக்..1

ஒரு கஷ்டமான ஆண்களுக்கான கேள்வி.....
நீங்கள் படுக்கையின் நடுவில் படுத்து இருக்கின்றீர்கள்.... இந்த பக்கம் ரொம்ப ரொம்ப அழகான, ரொம்ப ரொம்ப அழகான பெண் படுத்து இருக்கின்றாள்.... அந்த பக்கம் ஒரு காம வெறி பிடித்த ஹோமோ படுத்து இருக்கின்றான் இப்போது கேள்வி நீங்கள் எந்த பக்கம் உங்கள் பின்புறத்தை வைத்துக்கொள்வீர்கள்...
====================
ஜோக் 2..

ஆண்களுக்கு பெண்களின் நெஞ்சு பிடிக்கும்
பெண்களுக்கு ஆண்களின்
கு
கு
கு
கு
குணம் பிடிக்கும்.. சாரி காய்ஸ் எனக்கு திக்குவாய்...

=======================

அன்புடன்
ஜாக்கிசேகர்

(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....

என் சங்கத்துஆளை அடிச்சவன் எவன்டா?

ஒரு வாரத்துக்கு மேல் ஆகி விட்டது... பதிவுலகில் என்ன நடக்கின்றது என்று எனக்கு தெரியவில்லை... கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருக்கின்றது.. ஒரு வாரத்துக்கு முன்னே புது வீட்டுக்கு போய் விட்டேன்... நேற்று இரவுதான் நெட் கனெக்ஷன் வந்தது...சிபியில் 499 பிளான் ஓய் மேக்ஸ் தொழில் நுட்பம் போல் இருக்கின்றது...199 கேபிபபிஸ் என்பதால் நெட் ரொம்ப ஸ்லோ.... பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று நெருங்கிய நண்பர்களிடம் இருந்து அழைப்பு வந்தது.... அதனால் சனிக்கிழமை பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டேன்...தினமும் ஒரு 4 பேராவது கைபைசி்யில் என்னை அழைத்து ஏன் போஸ்ட் போடவில்லை என்று நலம் விசாரித்த நல்ல உள்ளங்களுக்கு என் நன்றிகள்...


சனிக்கிழமை நடந்த பதிவர் ச்நிதிப்பு பற்றி அங்கு நடந்த பிரச்சனைகளை பற்றி எழுதி ஆளு ஆளுக்கு கும்மி அடித்து விட்டார்கள்...முதலிலலேயே சங்கம் வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்று சொல்லி அண்ணன் உண்மைதமிழன் இரண்டு பக்க பேப்பர் கொடுக்கும் போது,ஏற்கனவே நீங்கள் எப்படி திட்டம் இட்டுக்கொண்டு வரலாம்..என்ற கேள்வியாக நண்பர் பைத்தியக்காரன் கேள்வி எழுப்ப??? சங்கம் அல்லது குழுமம் அந்த நொடியில் தீப்பிடித்துக்கொண்டது... பலரது வாதங்கள் சலசலப்புக்கு ஊடே நடை பெற்று கொண்டு இருந்தது... ஒரு வருடத்துக்கு முன் சற்றே யோசித்து பார்க்கின்றேன்...

முதன் முதலில் பதிவ்ர் சந்திப்புக்கு நான் போன போது இப்ப்போது வந்த கூட்டம் போல் எல்லாம் அப்போது வரவில்லை...நானே முத்துக்குமார் இறந்த போது பிளாக்கர் சார்பாக நடந்த இரங்கல் கூட்டத்தில்தான் நான் முதன் முதலில் கலந்து கொண்டேன்... அப்போதுதான் பல பிளாக்கர்களை நேரில் பார்த்தேன்...
அப்போது எல்லாம் பதிவர் அதிஷா எனக்கு போன் செய்து என்னை ஒவ்வோரு சந்திப்பின் போதும் என்னை மறக்கமால்கூப்பிடுவார்... அப்போது எல்லாம் 5 பேர் பத்து பேர் வந்த பதிவர் சந்திப்பு.... முத்துக்குமார் இறப்புக்கு பிறகு நடந்த கடற்கரை கூட்டத்தில் உட்கார இடம் இல்லாமல் போனது... அப்புறம் 20 பேருக்கு குறையாமல் கூட்டம் சந்திப்பில் அதிகரிக்க துவங்கியது... அதன் பிறகுதான்... அப்போது எல்லாம் அவ்வை சண்முகி மணிவண்ணன் போல் எனக்கு கூச்ச சுபாவம்... அதனால் பல கூட்டங்களை தவிர்த்து இருக்கின்றேன்...ஆனால் அததிஷா எல்லோருக்கும் போன் செய்து கூப்பிடுவார்....அதன் பிறகு கூடிய கூட்டங்களில் அதிக எண்ணிக்கையில் பதிவர்கள் கலந்து கொண்டார்கள்..
டிஸ்க்கவரி புக் பேலசில் நடந்த பதிவர் சந்திப்புதான் நான்கு சுவற்றுக்கு கிழே நடந்த முதல் பதிவர் சந்திப்பு என்பேன்..
இத்தனை பேர் சந்திக்கும் இந்த கூட்டத்தை சில வரையரைகளுடன் சங்கமாகவோ அல்லது குழுமமாகவோ ஆரம்பிக்க வேண்டும் என்ற கருத்து நல்ல கருத்து என்றாலும்... சரியான புரிதல் இன்றி... நிறைய கேள்விகள் கேட்கபட்டன... உதாரணத்துக்கு சொன்னவார்த்தைகள் எல்லாம் எடுத்துக்கொண்டு கூர்தீட்டி குளிர்காய்ந்தார்கள்...எவருமே அவர்கள் தனிதன்மையை விட்டுக்கொடுக்க முன்வரவில்லை...

இது எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டாலும்... பதிவர்களில் அசோக் போட்ட சாதி சாய பதிவு ரொம்பவும் கவலை அளித்தது... அசோக் எழுதுவது அவரது உரிமை என்றாலும்... இப்படி ஒரு சாயம் பதிவர்களில் இதுவரை வந்தது இல்லை...ஈழ பிரச்சனையில் துக்ளக்,இந்து,தினமலர் போன்றவை நடந்து கொண்ட விதம் கண்டனத்துக்கு உரியது... அந்த கோபத்தின் போது பிராமணர்கள் நடத்தும் பத்திரிக்கை இலங்கை பிரச்சனையில் நடந்து கொண்ட விதம் என்று எழுதி இருந்தால் பராவாயில்லை...ஆகால் பதிவர் சந்திப்பில் சரியான நேரத்துக்கு வந்து முன் சீட்டில் உட்காருவதை கூட தவறு என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்??? அப்போது அவர்கள் பதிவர்கள் இல்லையா? அவர்கள் முன் சீட்டில் உட்கார கூடாதா? அப்புறம் எதெச்சையாக நாளைக்கு எட்டு வன்னியர்கள் முன் வரிசையில் உட்கார்ந்து விட்டால்?? பத்து முதலியார்கள் உட்கார்ந்து விட்டால்? முன் சீட்டு முழுவதும் பறையர்கள் உட்கார்ந்து விட்டால்??? முன் சீட்டை ஆக்கிரமித்துகொண்ட வன்னியர்கள், முதலியார்கள்,பறையர்கள்,பிள்ளைகள் என்று அடித்துக்கொள்ள வழி வகுத்ததாய் இது அமையும்.... பதிவுலகத்தில் இந்த சாதி சாயம் வேண்டாம்... வேண்டவே வேண்டாம்....

ஞானி பேச்சு கொஞ்சம் நீளம் என்றாலும்... சங்கத்தை பற்றி ரொம்ப அற்புதமாக விளக்கி சொன்னார்...அவர் அளவிற்க்கு அந்த கூட்டத்தில் சங்கத்தின் பிரச்சனைகளையும் அதன் நெளிவு சுளிவுகளையும் பேசவில்லை... அல்லது அது பற்றிய புரிதல் இல்லை அல்லது அதற்க்கான வாய்ப்பு இல்லை என்று சொல்லலாம்...
ஒரு கட்டத்தில் பிள்ளை பிறக்கவே இல்லை அதற்க்குள், அதற்க்கு என்ன பெயர் வைக்கலாம்... அது பக்கத்து வீட்டு ஹாலில் ஆய் போய் விட்டால் என்ன செய்வது? எந்த பேப்பரில் துடைப்பது....??ஆபிஸ் போகும் போது யார் கவனித்து கொள்வார்கள்.. எந்த டாக்டர் இடத்தில் காட்டலாம் என்பது வரை பிரித்து மேய்ந்து கொண்டு இருந்தார்கள்... அதில் பெங்களுர் அரவிந் சங்கம் வேண்டும் என்று வைத்த கருத்து ஏற்புடையதாக இருந்தது...
ஞானி முதலில் சங்கம் வேண்டுமா? வேண்டாமா? என்று ஞானி அவர்கள் கை தூக்க சொல்ல, ஒரு பத்து பேராவது வேண்டாம் என்று கைதூக்குவார்கள் என்று எதிர்பார்த்தேன்.... இரண்டு பேர் மட்டுமே கைதூக்கினார்கள்....
அடுத்து பலர் பேசினார்கள் முடிவில் பேசிய நான்... சங்கம் ஆரம்பிக்க பதிவர்கள் ஏகமனதாக ஒத்துக்கொண்டது இதன் மூலம் தெரிகின்றது.... என்று பேசி முடித்தேன்.. இனி பெயர், லோகோ, சங்கத்திற்கான வரையறை போன்றவற்றை இனிதான் முடிவு செய்ய வேண்டும்.... அதை இனி வரும் சந்திப்புகளில் முடிவு செய்யலாம் என்று முடிவு செய்யபட்டது....

வெளியில் டீக்கடையில், என் சங்கத்து ஆளை அடிச்சவன் எவன்டா? என்று இனி யாராவது கேள்வி கேட்க வருவார்களோ? இனி சங்கம் தன் கடமையை செய்யும்...என்றும்.... டிராப்புக்கு காத்து இருந்த பதிவரை சங்கத்துக்கு இன்னும் வண்டி வாங்கலை... வண்டி வாங்கனதுக்கு அப்புறம் உங்களை டிராப் செய்வோம் என்று நக்கல் விட்டு கொண்டு இருந்தார்கள்.... இன்னும் நிறைய காமடி காட்சிகள் வரும் காலங்களில் நிச்சயம் நிகழும் என்று எனக்கு தொன்றுகின்றது...

உண்மை தமிழன் அமங்கலம் துயரம் என்று எல்லாம் எழுதி பதிவு போட்டு இருக்கின்றார்...அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு ஏன் இப்படி எல்லாம் பதிவு போடறிங்க???தாய புள்ளையா பழகறவங்களே இந்த காலத்துல அடிச்சிக்கிறாங்க... பல்வேறு கருத்துடைய நண்பர்களை இணைப்பது என்பது சாதாரண செயல் இல்லை....

அன்புடன்
ஜாக்கிசேகர்

(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....

புதிய வீடு வாழ்த்திய உள்ளங்களுக்கு என் நன்றிகள்....


புதுமனை புகுவிழா நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது...இன்னும் கனவு போல்தான் எனக்கு படுகின்றது...இன்னும் என்னால் நம்ப முடியவில்லை...மெரினா பீச்சின் பிளாட்பாரத்தில் படுத்து கிடந்து மல்லாந்து வானத்தை பார்த்துக்கொண்டு உறக்கம் வராத வேலைகளில் நான் யோசித்து இருக்கின்றேன்... அப்போது நான் அதிகம் யோசித்தது அடுத்த வேளை உணவையும், வாடகைக்கு தங்க ஒரு நல்ல இடத்தையும்தான்.... அப்போது கூட சொந்த வீட்டை பற்றி நான் கனவிலும் நினைத்து பார்த்தது இல்லை....கல்லூரியில் வேலை செய்யும் போதும், வாடகை வீட்டுகாரர்கள் தொல்லை கொடுக்கும் போது மட்டுமே... சொந்த வீட்டடை பற்றி யோசித்து இருக்கின்றேன்.... அது கூட விடியல் கனவு போல் சடுதியில் மறைந்து விடும்...ஆனால் எனக்கு திருமணமான ஒன்றரை வருடத்தில் சொந்த வீட்டுக்கனவு சாத்தியமாகி இருக்கின்றது....அந்த கனவின் சாத்தியத்துக்கு நீங்களும் உதவி இருக்கின்றீர்கள்... பணம் கொடுத்து உதவி செய்வது ஒரு வகை என்றாலும், மனதாரவாழ்த்த ஒரு பெரிய மனது வேண்டும்.... ஒரு பின்னுட்டத்தில் உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள உங்கள் ஆசிகளை வழங்க பெரிய மனது வேண்டும்....புதிய புதிய நண்பர்கள் பெயர்கள்... ஆசிகளின் பட்டியலில் இருந்த போது...நான் நன்றாக எழுதுகின்றேன் என்று கர்வபடவில்லை..என்னோடு சக பயணிகளாய் என் பதிவை படிப்பவர்களும் பயணிக்கின்றார்கள்... என் வாழ்க்கையோடு அவர்களும் வாழ்க்கின்றார்கள்... எனும் போது மனதுக்கு சந்தோஷமாக இருக்கின்றது....மனதுக்கு நிறைவாய் இருக்கின்றது....

இலக்கிய தரமாய் எனக்கு எழுத வராது...பெரிய வாசகர் கூட்டம் இல்லை.. பதிவு போட்டதும் எல்லோருக்கும் போன் செய்து ஓட்டு போடுங்கள் என்று கேட்டது இல்லை....எனக்கு இருக்கும் வேலை பளுவில் பலரது பதிவுகளை வாசித்தது கூட இல்லை....ஆனாலும் என் எழுத்தை வாசித்து நன்றாக இருந்தால் ஓட்டு போடும் அந்த முகம் தெரியாத வாசகர்களுக்கும், பதிவர்களுக்கும் என் நன்றிகள்...

நான் இதுவரை என் பின்னுட்டஙகளில் அதிகம் பார்க்காத அந்த பெயர்களில் இருக்கும் வெள்ளந்தி மனிதர்களின் ஆசிர்வாதங்கள் கீழே...

ஜீவன் (தமிழ்அமுதன்), ஜெ.ஜெயமார்த்தாண்டன்,(இனி எல்லாம் சுகமே என்று கேச்சியாக சொல்லி நெகிழவைத்தார்...)சரவணசக்தி,ரவிச்சந்திரன், மாணவி தீப்தி,இளங்கோ,ரமேஷ், எனது அம்மாவை பற்றிய பதிவை படித்து விட்டு தினசரி பார்வையாளனாய் வந்து எனக்காக ஜிமெயில் முகவரி தொடங்கி இந்த சந்தோஷபகிர்வுக்கு எனக்கு முதல் பின்னுட்டம் இட்ட அன்பு,ரவி,செல்வன் நம்பி...சௌரி,என் பதிவை பார்த்து விட்டு வீடு வாங்கியே தீருவேன் என்று அடம் பிடிக்கும் மோகன்...,பாபு, எனது வாசக நண்பர் வெங்கட், மேரி ஜோசப்,மகராஜன்,சுதா,கருவாச்சி மாதேவி,சுந்தரா,இராமசாமி கண்ணன்,கோவைஅரன்,பதிவுலகில் தெரிஞ்சவனுக்க எப்படி இவ்வளவு நம்பிக்கையோட பணம் கொடுக்கறாங்க என்று ஆச்சர்யத்தை வெளிபடுத்திய பப்பு,இரவீ,சீவேல்,சாராம்மாஎன்கின்ற பிரான்சில் வாழும்அனிதா,நானானி,ரஞ்சிட், என் அத்தைமகன் அரவிந்,சுப்பராமன்,நிலாமதி,ஒருகாசு,ஜஹிர்ஜி,குட்டி,ராஜபிரியன்,எனக்குஉதவ துடித்த தமிழ்,சிம்பிள்மேன்,தமிழ்உதயன்,நிர்மல்,ராம்குமார்அனிதா, யாசவி,புரட்சிகவி என்கின்ற அறிவுடைநம்பி,பாலாராஜன்கீதா,ரமேஷ், ஈழம்,போன்ற நண்பர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்



எனக்கு தெரிந்த பதிவர்கள் மற்றும் வாசகர்கள்...
மனோ, உண்மைதமிழன், தன்ஸ் , ஆர்கே.சதிஷ்குமார்,ராம்ஜியாஹு,துளசிகோபால்,கோவிகண்ணன்,தராசு,பட்டர்பிளை சூர்யா,டிவிராதாகிருஷ்ணன்,வெள்ளிநிலாஷர்புதீன்,ரிஷி,என் உலகநாதன்,பாலகுமார்,டிஆர் அஷோக்,நட்புடன் ஜமால்,ராகவன் நைஜீரியா,சைவ கொத்துபரோட்டா,அமுதாகிருஷ்ணன்,கல்ப் தமிழன் , அண்ணாமலையான்,ராஜேஸ்வரி, புண்ணாக்கு மூட்டை,வரதராஜுலு, எனது பெங்களுர் வாசகி சச்சனா, மலர், கண்மணி,டாகால்டி, செந்தழல்ரவி,சையத்,மைதீன்,நிகழ்காலத்தில்,தாமோதர் சந்ரு,தனா,சின்னபையன்,விசா,ஸ்ரீராம்,பபுட்டியான்,பிளாக்பாண்டி,சந்தனமுல்லை,
சங்கரராம்,தர்ஷன்,கக்குமாணிக்கம்,தீப்பெட்டி,கார்திகை பாண்டியன்,கதிரவன்,கார்த்திகேயனும் அறிவுதேடலும்,ஆர்டிஎக்ஸ்பனிதுளி,வந்தியதேவன்,பின்னோக்கி,பிரதீப்பாண்டியன்,ஹாலிபாலா,ஹைதரபாத் கைலாஷ்,அகல்விளக்கு,நான்ஆதவன், முத்துலட்சுமி,மங்களுர் சிவா, போன்றவர்கள் அழைப்புக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்....

பதிவர்களில் முன்னாள் பதிவர் நித்யகுமாரன்மற்றும்இன்னாள் பதிவர் அதிஷா தம்பதி சகிதமாய் வந்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்...வாசக நண்பர் போர்டு வெங்கட் தனது மனைவி குழந்தையுடன் வந்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்..


விழா நடைபெறும் போதே பதிவர்கள் பைத்தியக்காரன், உண்மைதமிழன்,எறும்பு ராஜகோபால் முதலிலேயே வந்து வாழ்த்து தெரிவித்தனர்...
பதிவர்கள் பைத்தியக்காரன், உண்மைதமிழன்,எறும்பு ராஜகோபால் வாழ்த்திய போது...

லக்கியும் அதிஷாவும் வந்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்....
லக்கி அதிஷா வருகையும் வாழ்த்தும்...

தண்டோரா மற்றும் அகநாழிகை வாசு போன்றவர்கள் திருவண்ணமலையில் ஒரு இலக்கிய சந்திப்பில் கலந்து கொண்டதையும் போனில் தெரிவித்தனர்....

பணம் கொடுத்து உதவிய நண்பர்களில்ஹரிராஜகோபாலன் தனது மனைவியுடனும்,மற்றும் பெயர் சொல்ல வேண்டாம் என்ற சிங்கை பதிவுலக நண்பர் வாழ்த்துக்களை போனில் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.... நண்பரே புது வீட்டில் நெட்ஒர்க் ரொம்ப லோ என்பதால் நாம் பேசிய போதே கட் ஆகிவிட்டது... இன்னும் இரண்டு தினங்களில் பேசுகின்றேன்... மற்றும் பாஸ்டன் ஸ்ரீராம்போனில் தொடர்பு கொண்டு விழா பற்றி விசாரித்தார்... அதே போல் பெங்களுர் அரவிந்... விழா பற்றி கேட்டு வாழ்த்து தெரிவித்தார்.... அதுமட்டும் அல்ல அவர் பாஸ்டன் ஸ்ரீராமுக்கு போன் செய்து ஜாக்கிக்கு நீங்க 3 லட்சம் கொடுத்தமைக்கு அரவிந் அவரது நன்றிகளை சொல்ல... நான் நெகிழ்ந்து விட்டேன்....மற்றும் சினனபையன் போன்றவர்கள் வாழ்த்துக்களைபகிர்ந்து கொண்டார்கள்..உங்கள் எல்லோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்...

அதே போல் ஜாக்கி விழா பணத்துக்கு என்ன செய்விங்க அக்கவுணட் நம்பர் கொடுங்க என்று சொல்லி நெகிழ வைத்த நணப்ர் வாசகர் ராஜ்க்கு என் நன்றிகள்..
அமதே போல் பதிவர் ஜெர்ரி அவர் வரமுடியாது என்ற காரணத்தால் அவர் சார்பாக ஒரு சென்னை நண்பரை அனுப்பி பரிசு பொருளை கொடுக்க செய்து வாழ்த்தியது மறக்கமுடியாத அன்பு பரிசுகள்...


மற்றும் மெயி்லில் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட அதியமான்,முகு எண்ணத்து பூச்சி,சிவராம் ,ராஜவைரக்கண்ணு,பிரசன்னகுமார்,வித்யாசாகர்... போன்றவர்களுக்கும் என் நன்றிகள்...

மற்றும் எஸ் எம் எஸ்களில் வாழ்த்திய...கிருஷ்னா,சூர்யா,சூர் கன்னிராசி பிளாக் ஸ்பாட்,எங்கள் ஊர்காரார் சீ வேல்... பதிவர் ரோமியோ,திருச்சி ராஜேஷ் கண்ணன்,மும்பை தீபக் சண்முகம்,பஹ்ரைன் பாண்டியன்,எல்லோருக்கும் என் நன்றிகள்... பெயர் விடுபட்டு இருந்தாலோ அல்லது பிழையாக மாற்றி எழுதி இருந்தாலும் மன்னிக்கவும்....

இந்த விழா உண்மையான நட்புகளை இனம் கண்டு கொள்ளவும் இது ஒரு வாய்பாக இருந்தது என்பது கூடுதல் சிறப்பு.... மற்றும் விழா சிறப்பாக நடந்தது மகிழ்ச்சியை கொடுத்து... அந்த விழா முடிந்து காரடையான் நோம்புக்கு இரவு மனைவியை பெருங்களத்தூர் அவள் அத்தை வீட்டுக்கு அழைத்து போய் அப்படியே பெருங்களத்தூரில் இருந்து மச்சானை அழைத்து போய் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விட்டு விட்டுபுது வீட்டுக்கு வந்து அன்று இரவு அந்த வீடடில் படுக்கும் போது வந்த தூக்கம் இருக்கின்றேதே...அது ஒரு சுகமான தூக்கம்....

அன்புடன்
ஜாக்கிசேகர்

(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....

தமிழ்நாடு புதிய சட்டபேரவை ஒரு பார்வை....

புதுமனை புகுவிழாவுக்கு சில ஏற்பாடுகளை செல்ல சென்னை அண்ணாசாலை செல்ல நேர்ந்தது... அப்படியே புதிய தலைமை செயலகத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது....(இதுசிலமணி நேரத்துக்கு முன்ன எடுத்து )

நாளை திறக்க இருக்கும் தமிழ்நாடு புதிய தலைமை செயலகத்தை திறக்க இருப்பதால் இரவு பகலாகவே வேலைகள் நடந்து வருகின்றன...போர்கால அடிப்படையில் வேலைகள் விரைந்து நடப்பதை என் ஆயுலில் இன்றுதான் பார்க்கின்றேன்...

பல்லாயிரக்கணக்கான வட இந்திய முகங்கள் இரவு பகல் பற்றி கவலைபடாமல் இந்த பணியில் ஈடுபட்டு இருப்பதை அந்த பக்கம் கடக்கும் யாவருக்கும் தெரியும்...

முதலில் புதிய சட்டசபை கட்ட ஜெ அரசு சென்னை இராணி மேரி கல்லூரியி்ன் இடத்தை கை வைக்க முயல பலதரப்பட்ட பழங்கால மாணவிகள் மற்றம் எதிர்ப்பு காரணமாக அந்த திட்டம் கைவிடபட்டது... அப்போது ஸ்டாலின் உள்ளே சென்று போராடும் மாணவிகளுக்கு ஆதரவு தெரிவிக்க... அவரின் மீது கேஸ் கூட பைல் செய்யபட்டது என்பது வரலாறு.....
அதன் பிறகு புதிய சட்டசபை வளாகம் அனாதை குழந்தை போல இடம் இல்லாமல் அலைய, மகாபலிபுரம் பக்கம் புதிய தலைமைசெயலகம் கட்ட முடிவு எடுக்கபட்டதாக சொல்ல அவ்வளவுதான் ரியல் எஸ்டேட்காரர்கள் கொழுத்த விலை வைத்து கிழக்கு கடற்கரைசாலை மனைகளை விற்க்க ஆரம்பித்தார்கள்...அதன் பிறகு அந்த திட்டம் கைவிட பட்டது....

கலைஞர் தலைமையில் ஆட்சி அமைந்ததும் மக்களுக்கு அரும்பணி ஆற்ற அந்த இடம் போதாமல் தமிழக அரசு தவிக்க, திரும்பவும்புதிய தலைமை செயலகம் கட்டம் கட்ட அடி போடபட்டது...இந்த முறை சென்னையின் இதயமான அண்ணாசாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் சட்டசபை அமைத்து மைக் சேரை வைத்து அடித்துகொள்ள இடம் கிடைத்தது....(நம்ம கிளிக்)

இந்த புதிய கட்டிடம் கட்ட அங்கு எற்க்கனவே இயங்கி வந்த பழமை வாய்ந்த சிபிஐ கட்டிடம்... இடித்து இந்த கட்டிடம் கட்டபட்டது..

முதலில் 425 கோடிக்கு திட்ட மதிப்பு போடபட்டு அப்புறம் கல் ,கம்பி, சிமென்ட் விலையேற்றத்தின் காரணமாக எக்ஸ்ட்ரா 25 கோடி கொடுத்து ரவுண்டா 450 கோடிக்கு தொகை செலவிட உத்தேசித்து 12/11/2008 அன்று அடிக்கல் நாட்டபட்டது.... அப்போதே தலைவர் கலைஞர் 2010மற்றும்2011 ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்ய போவதாக சொன்னார்....ஏவிஎம் படநிறுவனம் அறிவிப்பது போல் புதிய தலைமை செயலகத்தின் ரிலீ்ஸ் தேதியை அப்போதே அறிவித்து பணிகள் தூரித கதியில் இயங்க ஆரம்பித்தன.....
(நம்ம கிளிக்)

ஒரு சில விபத்துக்களும் ஏற்பட முதல்வர் காயம் பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்...சென்னை சங்கமத்தின் போது வேலை செய்த வடநாட்டு தொழிலாளர்களை மகிழ்வூட்டும் விதமாக... சென்னை சங்கம நிகழ்ச்சி நடத்தி காட்டப்பட்டு தமிழர்களின் பாரம்பரிய கலைகளை வடநாட்டு தொழிலாளர்கள் வாயில்பான்பராக் ஹான்ஸ் போட்டு குதப்பிய வாயுடன் ரசித்தார்கள்......

சட்டசபை கோபுரம் வேலைகள் இன்னும் பாக்கி இருக்க, திறப்பு விழா தேதிகள் முடிவு செய்யபட்டு விட்ட படியால் இரண்டு கோடிக்கு செட் போட்டு மொட்டையாக இல்லாமல் செட் போட்டு அழகு படுத்தியிருந்தார்கள்...செட்போட்டதையும் அதற்க்கு 2 கோடிக்கு செய்த செலவையும் ஞானி இந்தவார குமுதத்தில் குட்டி கண்டித்து இருக்கின்றார்..... அந்த கோபுரம் 100 அடி உயரம் கொண்டது...


இரண்டாம் மாடியிர் பாபிலோனின் தொங்கு தோட்டம் போல் அமைக்க போகின்றார்களாம்.. பச்சை பசேல் என செடி கொடிகள் வைக்க போகின்றார்கள்... பச்சையை பார்த்தாலாவது கோபம் குறைந்து மைக் பிடுங்குவது குறையும் என்பதாலோ என்னவோ???? இது 6 தளங்களை கொண்டது.. இது 9லட்சத்து 31 ஆயிரம் சதுரஅடி பரப்பளவு கொண்டது....எனக்கு கொளப்பாகக்த்தில் 1000 சதுர அடி வாங்வதற்க்குள் நாக்கு தள்ளிவிட்டது... தலைமை செயலக இடத்தின் கிரவுண்ட் வேல்யூ மதி்ப்பை கணக்கு போட்டால் தலைசுற்றுகின்றது...(நம்ம கிளிக்)
எது எப்படி இருந்தாலும் ஜார்ஜ் கோட்டை கட்டியதை நான் பார்க்கவில்லை...இந்த தலைமை செயலகம் கட்டியதை நேரில் பார்க்கும் வாய்ப்புஎல்லோருக்கும் கிடைத்து இருக்கின்றது...கட்டிடம் கட்டுமான வேலையை போட்டோ எடுத்ததும் மறக்கமுடியாதவை...ஒரு சாண்ட்வெஜ் நான் வெஜ் பதிவில் இரவு நேர கட்டிட வேலையை போட்டோ எடுத்து போட்டு இருக்கின்றேன்...

தலைமை செயலகம் சுத்தி ஒரே தூசியாக இருக்கின்றது... செலவோடு செலவாக மரத்தின் இலைகளின் மேல் அப்பி இருக்கும் துசியை சினிமா செயற்க்கை மழை பெய்யவித்து அலம்பி விட்டாலே ஒரு அழகிய லுக் கிடைக்கும்...
(நம்ம கிளிக்)

பிரதமர், சோனியா வருகை என்பதால் எங்கு பார்த்தாலும் போலிஸ் தலைகளாக இருக்கின்றன... 4 அடுக்கு பாதுகாப்பு போடபட்டுள்ளது... வளாகத்தை என் வாகனத்தில் சுற்றி வந்தேன்... ஒரே இரு சக்கர வாகனமயம்.

எல்லாம் பாதுகாப்புக்கு வந்த போலிஸ்காரர்கள் வந்த வாகனங்கள்... எல்லா வாகனமும் விதம்விதமாக இருந்தது... அவரவர் வருமாணத்துக்கு ஏற்றபடி வெரைட்டியாக வாகனத்தை வாங்கி நிறுத்தி இருந்தார்கள்... எல்லா வாகனத்திலும் போலிஸ் என்று மறக்காமல் எழுதிவைத்து இருந்தார்கள்.....சித்தப்பா பையன் வாகனத்தை எடுத்துக்கொண்டு எவர் மீதாவது மோதினால் காப்பற்றுவதற்க்காக என்று நினைக்கின்றேன்...
(நம்ம கிளிக்)
சபாரியில் பல மப்டி போலிஸ்காரர்களை பார்த்தேன்... எல்லோரும் நீட்டாக ஷேவ் செய்து இருந்தார்கள்...தான் கருப்பு என்று தெரிந்தும் அடிக்கும் கலரில் சபாரி உடை அணிந்து மிரட்டிக்கொண்டு இருந்தார்கள்...கொஞ்சம் லைட் கலர் எடுத்து இருக்கலாம்...

தலைமை செயலகம் அருகில் இருக்கும் சிம்சன் பேருந்து நிறுத்த சுரங்க நடைபாதையை ஹைடெக்காக மாற்றி கொண்டு இருந்தார்கள்...

சென்னை தொலைகாட்சி நிலையம் இருக்கும் சுவாமி சிவானந்தா சாலைக்கு இப்படி ஒரு வாழ்வு வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை... அண்ணா சாலையில் இருந்து வலபக்கம் திரும்பினாலே...ஹோமோ, திருநங்கை, போன்றவர்களும் அழைப்புகளை இனி பார்க்க முடியாது... கோகுல் பவுடர் அதிகம் அப்பிய முகத்துடன் சினுங்கி அழைத்து பக்கத்து முள்புதர் ஓரம் அழைத்து சென்று வயிற்றை கழுபவர்கள் வாழ்க்கையில் மண் விழுந்து விட்டது.... தொழில் நிமித்தமாக பாம்பே போய் இரண்டு ஆண்டு கழித்து அந்த இடம் வரும் திருநங்கை நிச்சயம் அந்த இடத்தை பார்த்து விட்டு மயக்கம் போட்டு விழுந்து விடுவார்...

(நம்ம கிளிக்)

வட்டம், மாவட்டம்,ஒன்றியம் போன்றவைகள், அமைச்சரின் அடிபொடிகள், குவாட்டர் அல்லது ஆப் அடித்து விட்டு, பக்கத்து ஹோட்டல் நான்வெஜ்கடையில் வயிறு முட்ட தின்று விட்டு ,தேவி தியேட்டரில் படம் பார்க்க டிக்கெட் வாங்கிவிட்டு போதையில் வேட்டி நழுவ குறட்டை விட்டு அந்த சத்தம் காதை பிளக்க தூங்கும் நிகழ்ச்சியும்... படம் ஓடும் போதே டிடிஎஸ் சவுண்டையும் மீறி வாந்தி எடுக்கும் சத்தத்தையும் இனி தேவி தியேட்டர் வளாகத்தில் அடிக்கடி கேட்கலாம்... எதற்கும் தேவி தியேட்டர் நிர்வாகம் இரண்டு ஹவுஸ் கீப்பிங் ஸ்டாப்புகளையும், இரண்டு பவுண்சர்களையும் இப்போதே நியமித்துக்கொள்வது நல்லது என்பேன்...

(நம்ம கிளிக்)
அண்ணாசாலையில் பணி புரியும் மக்களுக்கு இனி ஆப்புதான்...பழைய படியே கடற்க்கரை சாலையை பயண்படுத்தினால் எந்த பிரச்சனையும் இல்லை.. முதல்வரோ அல்லது துணை முதல்வரோ சட்டென மூட் மாறி வண்டியை, அண்ணாசாலை பக்கம் திருப்ப சொன்னால்... அன்னைக்கு அண்ணாசாலை பயணிக்கு அரோகராதான்...

அண்ணாசாலையில் சிகப்பு விளக்கு சுற்றிக்கொண்டு பல கார்கள் பவணி வர வாய்ப்பு இருக்கின்றது.... என்ன வாசப்படியை சிவானந்தா ரோட்டில் வைத்து இருப்பதால் தப்பித்தோம்....வடக்கு பார்த்த வாயிலை புதிய தலைமை செயலகம் வாஸ்து படி பெற்று இருக்கின்றது என்று நினைக்கின்றேன்...

காப்ரேட் கம்பெனி போல் சட்டசபை லுக் இருப்பது மகிழ்ச்சியே... அதேபோல் ஓமந்தூரார் மளிகையில் ஒரு கீறல் கூட படவில்லை.. அது என்ன என்று கேட்கின்றீர்களா? எல்லா தமிழ் படத்திலும் நிறைய படிகட்டுகளுடன் ஒரு கோர்ட்டை காண்பிப்பார்களே... அதே தான்... எப்படியும் அந்த படிக்கட்டில் யாராவது உளுவது போல் எதாவது ஒரு காட்சியாவது எடுத்து இருப்பார்கள்...

நாளை மாலை விழா திறப்பு விழா நடக்க இருக்கின்றது...தலைமை செயலர் நேரில் பத்தி்ரிக்கை கொடுத்தும் எதிர்கட்சிதலைவர் ஜெ நேரில் வருவாரா? வந்தால் அது பெரிய விஷயம்....அந்த அரசியல் உள் குத்து என்ன என்பதும், அறிக்கை போரும் சாமி சத்தியமாக எனக்கு தெரியாது...

(நம்ம கிளிக்)

எது எப்படி இருந்தாலும் முதல்வர் கலைஞர் வாழ்க்கையில் நாளை மறக்கமுடியாத நாள்தான்... இனி வரும் அரசியல் தலைமுறை அவர் திறந்து வைத்த சட்டசபையில்தான் அரசியல் நடத்தும்...

குறிப்பு ..
இன்னும் கொஞ்சம் போட்டோ எடுத்து போட்டு இருப்பேன்... ஓ நீதான் பாம் வைக்க வந்தவனான்னு சொல்லி ஸ்டேசன்ல உட்கார வச்சிட்டா???


அன்புடன்
ஜாக்கிசேகர்

(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....

திருவண்ணாமலை,சாத்தனூர்டேம்,புதர்காமம்...


நித்யானந்தா சுவாமிகள்... தன்னை வெளிபடுத்திக்கொண்ட இடமான திருவண்ணாமலைக்கு ஒரு நண்பியின் திருமணத்துக்கு போய்வந்தேன்... அதையும் அப்போதே பதிவிட்டேன்... ஆனால் பல விஷயங்கள் விரிவாய் எழுதவில்லை என்பதே உண்மை...

திருவண்ணாமலைக்கு நான், என் மனைவி, மச்சான் என்று மூன்று பேர் மட்டும் சென்று இருந்தோம்... முதலில் பைக்கில் செல்வதாக இருந்தது.. ஆனால் அதீத பனி காரணமாக அந்த திட்டம் கைவிடபட்டு,பேருந்தில் செல்வதாக முடிவானது...என் மச்சான் பெங்களூரில் இருந்து வந்து சேர்ந்துக்கொண்டான்...

ஒரு காலத்தில் பெரிய பேருந்து வசதிகள் எல்லாம் அப்போது திருவண்ணாமலைக்கு கிடையாது... முதலில் இளையராஜா திருவண்ணாமலை கிரிவல பாதையை பற்றி வெளியே சொல்ல அப்புறம் நடிகர் ரஜினி அந்த பாதைக்கு விளக்கு எல்லாம் போட்டு கொடுக்க.... அப்புறம் எழுத்தாளர் பாலகுமாரன் விசிறி சாமியார் பற்றி சொல்ல.. எப்போதும் விசிறி பற்றி எழுத.. திருவண்ணாமலை என்ற அந்த ஊர் கொஞ்சம் கொஞ்சமாக லைம் லைட்டுக்கு வந்தது....

அண்ணாமலை தீபமும், ரமணமகரிஷியும் எற்க்கனவே பேர் பெற்று இருந்தாலும்...20 வருடங்களில் ரஜினி, இளையராஜா,பாலகுமாரன் போன்றவர்கள்... திருவண்ணாமலைக்கு கொடுத்த முக்கியத்துவமே இவ்வளவு அதீத புகழுக்கு காரணம் என்பேன்...


அதன் பிறகு கிரிவலபாதை மக்கள் மத்தியில் பேச்சாக இது காட்டு தீ போல பரவ.... திருமணம் செய்ய, நல்ல மணமகன் கிடைக்க, நல்ல மணமகள் கிடைக்க,குழந்தையின்மை, கடன்தொல்லை, பிசினஸ் லாஸ்,அது இது என மன அமைதி தேடி திண்டாடிய மக்கள் திருவண்ணாமலை கிரிவலபாதை நோக்கி படை எடுக்க ஆரம்பித்தார்கள்...அதன் விளைவு... திருவண்ணாமலை பெமஸ் ஆக ஆரம்பித்தது...... இந்த பெருமை எல்லாம் பத்தாது என்று இயக்குனர் பேரரசு இயக்கத்தில் அர்ஜுன் நடிக்க... திருவண்ணாமலை என்ற படம் வெளிவந்த பிறகு அந்த ஊருக்கு இன்னும் செம ரெஸ்பான்ஸ்......


கிண்டியில் எனது சொந்த ஊர் கடலூருக்கு போக பேருந்துக்காக காத்து இருக்கும் போது... பாண்டி, கடலூர் பேருந்துக்காக தவம் கிடப்பேன்.. ஆனால் 5 நிமிடத்துக்கு ஒரு பேருந்து திருவண்ணாமலைக்கு போய் கொண்டே இருக்கும்...வயிறு எல்லாம் எரியும்... அப்படி என்ன அங்க இருக்குன்னு இத்தனை பஸ் போகுன்னு தெரியலை என்று நினைத்துக்கொள்வேன்...

அதன் பிறகு கோவில் பக்கத்தில் மலையில் இருக்கும் சாமியார்களை பற்றி டாக்குமென்ட்ரி எடுக்க போய் கேமரா ஸ்டேன்டை தூக்கி கொண்டு வாயில் நுரை தள்ள, ஏறி திருவண்ணாமலை கோவில் கோபுரத்தை இரண்டு ஷாட் எடுக்க மலை மீது ஏறியதை என் வாழ்வில் எப்போதும் மறக்க முடியாது...

என் நண்பர்கள் பலமுறை அழைத்தும் திருவண்ணாமலை கிரிவலத்துக்கு நான் சென்றது இல்லை...


கிரிவலம் போய் என்ன செய்விங்க---??
மலையை சுத்துவோம்...
அப்ப சாமி பாக்க மாட்டிங்களா?
இல்லை பயங்கர கூட்டம் அப்ப போய் சாமி எல்லாம் பாக்க முடியாது....

மலையை சுத்தி 16 கிலோமீட்டர் நடப்போம்....

மலையை சுத்தி நடக்கத்தான் இவ்வளவு கூட்டமா?

ஆமாம்...

அதனாலோ என்னவோ நான் இதுவரை கிரிவலம் போனதில்லை....



இருப்பினும் அண்ணாமலையானை தரிசிக்க உள்ளே சென்றோம்.... அந்த கோவிலின் முழுக்க முழுக்க எங்கள் ஊர் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவில் போலவே அதன் கட்டட அமைப்பு இருந்தது... ஒரு வேளை சிவன் கோவில் எல்லாம் அதே போல்தான் இருக்கும் போல.....நிறைய வெளிநாட்டவர்.... ரொம்பவும் பக்தி சிரத்தையாக சாமிகும்பிட்டனர்...யானையிடம் காசு கொடுத்து ஆசிர்வாதம் வாங்கினார்கள்...ஒரு வெளிநாட்டு பெண் ....குடுமி வைத்துக்கொண்டு நாக்கில், புருவத்தில் கடுக்கன் மற்றும் வளையம் மாட்டியபடி வளைய வந்தாள்.... வேற எங்க எல்லாம் வளையம் போட்டு இருக்கின்றாள் என்று அறிய.... இந்த ஜாக்கியோட மனசு துடித்தாலும்... வலப்புறம் மனைவி சாமி கூம்பிடுவதை பார்த்ததும் ஆர்வம் திடும் என வடிந்து போனது...எனக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது...ஒரு மலையை சுற்றி நடக்க இவ்வளவு கூட்டமா? இவ்வளவு நம்பிக்கையா? திருமணம் முடிந்ததும் வெளியே வந்ததும் ஒரு ஆட்டோ பிடித்தோம்.... பேருந்து நிலையம் செல்ல அல்ல... கிரிவலபாதையை பார்பதற்க்கு... ஆட்டோகாரரிடம் 150க்கு பேசி, ஏறி உட்கார்ந்து கொண்டோம்.... ஆட்டோ மலையை சுற்றி ஓடத்துவங்கியது.... அந்த மலையை சுற்றி செல்லும் சாலையில் ஏகபட்ட துறவிகளும் சாதுக்களும் இளைப்பாறிக்கொண்டும்.... நடந்துக்கொண்டும் இருந்தார்கள்... ரோட்டைசுற்றி நிறைய கோவில்கள்... எல்லாம் சடுதியில் தோன்றியது போல் என் மனதுக்கு பட்டது..

ஏக்கர் கணக்கில் இருக்கும் நம்ம நித்யா ஆசிர்மத்தை சுட்டி காட்டியபடி வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தார் ஆட்டோ டிரைவர்...எனக்கு அதில் எல்லாம் கவணம் இல்லாமல் மலையை கவனித்துகொண்டு வந்தேன்.. அப்படியே இரவில் நடப்பதாக கற்பனை செய்தேன்... நிறைய கூட்டத்தோடு நடக்கும் போது 20 கிலோ மீட்டர் நடைபயணம் சாத்தியம் என்று பட்டது.... வீட்டில் கீரைகட்டு எடுத்து தனியாக சுத்தம் செய்ய ஆரம்பித்தால் போர் அடித்து விடும்... இதுவே 3 பேர் உட்கார்ந்து பேசிக்கொண்டே கீரை ஆய ஆரம்பித்தால் சீக்கரமாக கீரையை சுத்தம் செய்து விடுவோம்... அது போலத்தான் இந்த நடைபயணமும் என்று மனதுக்கு பட்டது... ஒரு வேளை அந்த அதிர்வு வைபரேஷன் என்று எல்லாம் சொல்லுகின்றார்களே அது இருந்தாலும் இருக்கலாம்.... ஒரு நாள் ஒரு பவுர்ணமிக்கு வர வேண்டும்... மக்களோடு மக்களாக கலந்து நடந்து அதை பற்றி வேறு ஒரு பதிவில் எழுதுவோம்....
=========================================
சாத்தனூர் டேம்....

பேருந்து நிலையம் சென்று நேரம் இருந்த காரணத்தால்... சாத்தனூர் டேம் செல்ல தீர்மானித்தோம்....பனல் ஒரு மணிக்கு ஒரு தனியார் பேருந்தில் எறி உட்கார்ந்து குண்டும் குழியுமான ரோட்டில் பயணித்து சாத்தனூர் வந்த போதே... கொளுத்தும் வெயிலில் தலைகாய்ந்து ஷாலை தலையில் போர்த்தியபடி வட்டர் பாட்டில் சகிதம் வந்து கொண்டு இருந்தது...

அந்த பெண் ரொம்ப களைப்பாக காணப்பட்டாள்... அவனும்தான்...கொஞ்ச நேரத்தில் களைப்பையும் மீறி ஓடி பி்டித்து விளையாடினார்கள்... எனக்கு ஒன்று மட்டும் புரிந்து போனது... சென்னைக்கு ஒரு மகாபலிபுரம்... திருவண்ணாமலைக்கு ஒரு சாத்தனூர்....

நல்ல பசி தமிழ்நாடு ஓட்டல் என்று ஒன்று பக்கத்தில் இருக்க அதன் பக்கத்திலேயே டாஸ்மார்க்... எல்லா குடி மகன்களும் அங்குதான் தாகம் போக்கி பசி போக்கி கொண்டு இருந்தார்கள்... ஓட்டலை ஒரு மலையாள பெண்மணி நிர்வாகித்து கொண்டு இருந்தார்... அவரை விட அவர் பெண் அழகாக கொஞ்சம் பூசினால் போல நிர்வாகம் செய்கின்றார்... என்ன எந்த பொருளையும் வாயில் வைக்க முடியவில்லை.. என் மனைவியும் என் மச்சானும் ரொம்ப சிரம பட்டார்கள்...

சாத்தனூர் டேம் போனோம்... அப்படியே மைசூர் பிருந்தாவன கார்டனை போல வடிவமைத்து இருந்தார்கள்... இப்போதுதான்... நான் முதன் முதலாக சாத்தனூர் டேமை பார்த்தேன்... எதையும் பராமரிக்காமல் வைத்து இருந்தார்கள்... அனையில் முதலைகள் வெயிலில் சன் பாத் எடுத்துக்கொண்டு இருந்தன... ஆற்றில் முதலைகள் இருப்பதால் இறங்க வேண்டாம் என்று பொதுமக்களை எச்சரித்துக்கேட்டுக்கொண்டது அணை நிர்வாகம்... ஆனாலும் ஆற்றில் குடும்பம் குடும்பமாக இறங்கி குளித்துக்கொண்டு இருந்தனர்... ஏதாவது நடந்தால் சன் நீயூஸ் மைக் முன்னாடி அரசாங்கம் ஆத்தை சுத்தி வேலி போட்டு பொது மக்களை காக்க வேண்டும் என்று வீரமாக பேசுவார்கள்...

அணையில் இருக்கும் தண்ணீரை சொட்டு நீர் பாசனம் போல் வைத்து இருந்தால் கூட, பூங்காக்களை அழகாக பராமிரித்து இருக்கலாம்... எல்லாம் காய்ந்து போய் கிடக்கின்றன... மனசு ஒட்டவில்லை

டேம் முழுவதும் பிஞ்சில் பழுத்த காதலர்கள் புற்றிசல் போல சுற்றி திரிந்து கொண்டு இருந்தார்கள்....முதலை பண்ணை பக்கம் போனால் ஒவ்வொறு புதரிலிருந்தும் தலை கலைந்து களைப்பாக எழுந்து செல்லும் ஜோடிகளை பார்க்கும் போது என்ன சொல்வது...

நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள்... எந்த பெண்ணுக்கும் மார்பகமே வளராத சிறுமிகள்... மொட்டுக்கள்... எல்லாம் கிராமத்து பெண்கள்....எல்லாம் காம சூட்டோடு அலைவதை பார்க்கும் போது மனது வருத்தம் கொண்டது....சென்னை பெண்கள்தான் பிச்சிலேயே பழுத்தவர்கள் என்று ஒரு சாரர் இன்னமும் நினைத்துக்கொண்டு இருக்கலாம்... அப்படி இதுநாள்வரையில் நினைத்து இருந்தால் அதை ரப்பர் போட்டு அழித்து விடுங்கள்...


பெண்களை கூட்டிக்கொண்டு சுற்றும் பசங்களை பார்க்கும் போது...எதையும் கல்யாணம் செய்து கொண்டு செட்டில் அகும் எண்ணம் இருப்து போல் தெரியவில்லை....எல்லோரிடமும் சத்தமாக பாடும் விதமாக சைனா மொபைல் வைத்த இருந்தார்கள்... சொல்லி வைத்தது போல் எல்லோரிடமும் இளையராஜாவின் நான் தேடும் செவ்வத்தி பூவிது இருந்தது.... அந்த பாடலை சத்தமாக செல்லில் கேட்டபடி அந்த கிராமத்து பெண்கள் தோள்களில் கை போட்டுக்கொண்டு அலைந்து கொண்டு இருந்தார்கள்....



எதாவது ஒரு புதரில் அவன் சொல்லுவதை அந்த பெண் செய்யவில்லை என்றால்... அங்கேயே உணர்ச்சி வேகத்தில், காம போதையில் அவள் கழுத்தை அழுத்தி கொன்று போட்டால் நாலாவது நாளுக்கு பிறகு நாற்றம் எடுத்துதான் அந்த பெண் இறந்து போன விஷயம் வெளியே தெரிய வரும்...... இவ்வளவு அடர்த்தியான புதர்கள்.... இதை எல்லாம் பார்த்து வெறுத்து போய் அனை நிர்வாகம் பல புதர்களை அழித்து இருக்கின்றது...
முதலை பண்ணை போகும் வழியில் கொஞ்சம் இளைப்பாற பக்கத்தில் உள்ள பாறை மீது உட்கார்ந்தால்.... அந்த வழியில் சட்டென இரண்டு ஜோடிகள் புதரில் இருந்து வந்து தலை சரி செய்து கொண்டு நடப்பார்கள்..அதே போல் அந்த பெண் நடையில் எனக்கும் லவ்வர் இருக்கின்றான் என்று எங்களுக்கு காட்டும் அலட்சியம் இருந்தது...

அணையில் நீர் குறைவாக இருந்தது... காதலர்கள் அதிகமாக இருந்தார்கள்..

அணையின் டாப் அங்கிளில் இருந்து பார்த்து ரசித்தோம்... அப்போது ஒரு வெள்ளை சுடிதார் போட்ட பெண்ணின் மடியில் படுத்துக்கொண்டு சைனாமொபைலில் சேது படத்தில்...விக்கரமிடம் அந்த பெண் காதலை சொல்ல நினைச்சு நினைச்சு தவிச்சு தவிச்சுன்னு ஒரு பாடல் வரும் அந்த பாடலை போட்டு விட்டு..... அந்த பெண்ணிடம்...

நைட்டு எல்லாம் தூக்கம் வரலை..
ஓரே பீலிங்ஸ்..
நீ நல்லா தூங்கினியா???
அந்த பெண் இல்லை என்று சொல்லிவிட்டு அவனை மார்போடு இன்னும் அனைத்துகொள்கின்றது....நிறைய பேர் வந்து நடந்து போகின்றார்களே... என்று எந்த கூச்சமும் இல்லை....
எனக்கும்தான் தூக்கம் வரலை...
நீ என்ன பாட்டு கேட்ட?
ராசவே உன்னை விட மாட்டேன்.... என்று சொல்லி விட்டு இன்னும் மார்போடு இருக்கும் போது....
அவர்கள் தைரியத்தை மெச்சுவதை தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை...


அன்புடன்
ஜாக்கிசேகர்

(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner