Blog  காலத்திலும் சரி இந்த youtube காலத்திலும் சரி....
நிறைய வலி மிகுந்த பெண்களையும் அவர்களின் ரணங்களையும் நான் அறிவேன்...

அந்த வலிகளை சொல்ல.... புரிந்து கொள்ள.... என்னால் முடியும் என்று அவர்கள் திடமாக நம்புகிறார்கள்...

கூடுமானவரை இத்தகைய பெண்கள்... பத்து பொருத்தம் பார்த்து பெற்றோர் நடத்தி வைத்த அரேஞ்ச் மேரேஜ் திருமணங்களில் அகப்பட்டவர்கள் தான்....
இரண்டு மாதங்களுக்கு முன் சென்னை அடையாறில் ஒரு வலி மிகுந்த பெண்ணை நான் சந்தித்தபோது...

நிறைய பேசிக் கொண்டிருந்தோம் கலகலப்பாகத்தான் அன்றைய சூழல் இருந்தது
ஆனால் கிளம்பும் நேரத்தில் ஏதோ ஒரு விஷயத்தை இருவரும் பேச ஆரம்பிக்க....

நான் இருந்த ஏதோ ஒரு மனநிலையில்  அந்தப் பெண்ணின் இயலாமையை லாஜிக்காக பேசுகிறேன் என்ற நினைப்பில்  குத்திக்காட்டி அவளை எரிச்சல் அடைய செய்து விட்டேன்...

நம்மை நாமே ஒரு செயலுக்காக அதிகமாக திட்டிக்கொண்டு நம்மை நாமே மனதுக்குள் அசிங்கப்படுத்திக் கொள்வோம் அல்லவா... அப்படியான நிலையை அன்று நடந்த அந்த செயலுக்காக சூழலுக்காக இன்று வரை என்னை நானே திட்டிக் கொள்கிறேன்.

என்னை அவளுக்கு ரொம்பவே பிடிக்கும்...

காயத்துக்கு களிம்பு தடவுவேன் என்று என்னை நம்பி வந்தவளை... 
அவளின் புரையோடி போன காயத்தை மேலும் கிளரி... ஆழப்படுத்தி என் மேட்டிமையை வெளிப்படுத்தும் விதமாக பேசி...

 அவளை எரிச்சல் அடைய செய்து நிறைய நிறைய காயப்படுத்தி விட்டேன் 😔 
அடுத்த நாளே அவள் வழக்கம் போல இயல்பாக வெளிவந்து விட்டாள்....
நான் தான் எப்போதும் போல அந்த சூழ்நிலையை.... லாஜிக்காக பேசுவதை சரி என்று நினைத்து காயப்படுத்தியதை நினைத்து நினைத்து வருந்துகிறேன்...
காயத்ரியின் இந்த கட்டுரை இந்த பதிவை எழுதத் தூண்டியது... ஒருவேளை வலித்தவள்... இந்த பதிவை படிக்க நேர்ந்தால்... அன்றைய தினத்திற்கும்... அன்றைய சூழலுக்கும்..

அன்றைய எனது பேச்சுக்கும் 
 என் வருத்தங்கள்🙏 
எப்போதும் பிரியங்களுடன் ஜாக்கிசேகர் 🥰
 நன்றி காயத்ரி
Gayathri Mahathi 
-----------------------------
வலி மிகுந்த பெண்கள் தனக்கு பிடித்த ஆணைப் பார்த்தவுடன், என்னைப் எப்படியாவது காப்பாற்றி விடு, எனக்கு இத்தனை துரோகங்கள் நடந்து இருக்கு, அதை எல்லாம் கடந்து, உன் பார்வையில் நல்லபடியா வாழணும் என்று சொல்வதுண்டு. 

அப்படி சொல்லும் நேரம் எல்லாம் விதம் விதமா ஒவ்வொரு பெண்ணுக்கும் நடக்கும். 

இங்கு உள்ள ஒரு பெண் தன் அனுபவத்தை சொல்லி எழுதச் சொன்னாங்க. 
அவளுக்கு பிடிக்காத திருமணம், அவள் வாழ்வில் பெற்றோருக்காக மட்டுமே நடந்து முடிந்தது. ஆணுக்கு பெண் தொட விட்டதும் அவள் மனதுக்குப் பிடித்த காதலன் ஆகி விட்டோம் என்று பலரும் நினைத்து விடுகிறார்கள். 
உண்மையில் பெண்ணின் கிளிட்டோரிஸ் தொட்டதும் பெண்ணின் உடல் ஒத்துழைப்பு தர ஆரம்பித்து விடும். ஆனால் மனதுக்கு பிடித்து விட்டதா என்றால் கண்டிப்பாக இல்லை என்பார்கள். இவளுக்கும் அது போல் தான் திருமண வாழ்க்கையில் இருக்க நேர்ந்தது. இது புரியாமல் கணவனும், குடும்பமும் அவள் சந்தோசமாக இருக்கிறாள் என்று முழுதாக நம்பவும் ஆரம்பித்து விட்டார்கள். இப்ப வரை அப்படித் தான் நம்புகிறார்கள். 


இது எல்லாம் கடந்து ஒரு நாள் அவளும் கர்ப்பமாகி விடுகிறாள். அப்ப டெலிவரி அன்று ஹாஸ்பிடலில் அவளுக்கு டெலிவரி பார்க்க வந்த டாக்டர் ஒரு ஆண். 
இவள் வலியில் துடிக்கும் போது, அவர் ஆறுதலா பேசுகிறார். இதோ இன்னும் ரெண்டு மணி நேரத்தில் குழந்தை பிறந்து விடும் என்கிறார்.
அப்ப நர்ஸ், டாக்டர் இருக்க, டாக்டரை அருகில் வரச் சொல்லி, அவரது கைகளை இறுகப் பற்றிக் கொண்டு, தனக்கு பிடிக்காமல் இந்த திருமணத்தை நடத்தி வைத்து விட்டார்கள் என்றும், தன் வாழ்வில் தனக்கு பிடித்த விசயங்கள் எதுவும் செய்தது இல்லை என்றும், அப்படி நடந்த மாதிரி எதுவும் வாய்ப்பு கூட அமைக்க முடியாத சூழலில் இருப்பதாகவும் சொல்லி அழுது, அவரது கைகளை இறுக்க பிடித்தபடி இருக்கிறாள்.



அவருக்கோ என்ன சொல்வது என்று தெரியாமல், பரவாயில்லை இனி உன் கனவுகள், ஆசைப்பட்ட அனைத்தையும் உன் குழந்தை மூலம் நிறைவேற்ற முடியும் என்று சொல்லி இருக்கிறார்.


இப்படியாக அந்த லேபர் வார்டில் அவளுக்கான நியாத்தையும், அவள் பட்ட கஷ்டங்களையும் சொல்லவும், மரண வாக்குமூலம் மாதிரி, அவள் குடும்ப நபர்களை பற்றியும் அந்த ஆண் டாக்டர் கிட்ட சொல்லி இருக்கிறாள். 
அதன் பின் குழந்தை பிறந்து, தற்போது அவனுக்கு 20 வயது ஆகி விட்டது என்றும் சொல்லி விட்டார். குடும்ப வாழ்க்கை முதலில் இருந்தது போல் தான், எதுவும் மாறவில்லை, தன் வாழ்க்கையை எப்படி மாற்ற முடியும் என்று யோசிக்கிறார். 



ஆனால் அந்த லேபர் வார்டில் அவர்கிட்ட மனசு விட்டு வலியிலும், அழுதும் பேசிய முதல் ஆணாக தன் வாழ்வில் இருக்கிறார் என்று சொல்லும் போது, 
தன் வாழ்வில் நடந்த விசயங்களுக்கு நியாயங்களை தட்டிக் கேட்க அவளுக்கு பிடித்த உருவத்தில் எந்த நேரத்தில் ஹீரோ வந்தாலும் காப்பாற்ற சொல்லித் தான் கேட்டு இருக்கேன். அப்படி பேசிய பின் ஒரு வலிமையான வாழ்வை வாழவும், மனதுக்கு பிடித்த மாதிரி இருக்கவும் ஒரு சில மணி நேரங்கள் மட்டும் ஹீரோ வந்தால் போதும் என்கிறார். 



இந்தச் சம்பவமே அவருக்கு பிடித்த மாதிரி சாப்பிட, பெற்றோர் வீட்டுக்கு வரவும், பிடித்த ட்ரஸ் போடவும் முடிந்தது என்கிறார். இதுவே மிகப் பெரிய விஷயமாக அவர் வாழ்க்கையில் இருக்கிறது. 


இப்படியாக ஹீரோ, ஹீரோயின் எல்லாம் எந்த நேரத்தில் வந்தாலும் அது அவரவர் மனதுக்கு பிடித்து இருக்கும் போது, அந்த நிகழ்வில் ஒரு நொடியைக் கூட மனிதர்கள் தவற விடுவதில்லை.
காயத்ரி மனநல ஆலோசகர்... மதுரை




நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

#oruthekkanthallucase malayalam 2022 film explanation and review in tamil by jackiesekar jackiecinemas review




#oruthekkanthallucase malayalam  2022 film  explanation  and review in tamil  by jackiesekar jackiecinemas review
1980 கதை நடக்கும் காலகட்டம்...
மலையாளத்தில் இலக்கியத்தில் பெயர் பெற்ற இந்து கோபன் எழுதிய சிறுகதையின் திரைக்கதையாக்கம்
ஐயப்பன் கோஷியும் போல ஈகோ கொண்ட கதை தான் என்றாலும் இது வேறு விதம்..
தன்னை அடித்த நாளளு பேரை எப்படி ஹீரோ பழிக்கு பழி வாங்குகிறான் என்பதுதான் கதை...
ஐந்து வருடத்திற்கு பிறகு பத்மப்ரியா நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய மலையாள படம்.
வீடியோ விமர்சன
லிங்க் முதல் கமெண்ட்டில்
#oruthekkanthallucasemovie
#oruthekkanthallucasemoviereview
#oruthekkanthallucasemoviereviewintamil
#Jackiesekarreview 
#jackiecinemasReview
#Oruthekkanthallukesu #bijumenon #padmapriya





நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

#emergencydeclation movie review in tamil by #jackiesekar #jackiecinemas #jackiesekarreview



Executive decision, Air force one, போன்ற திரைப்படங்களில் தீவிரவாதிகள் ஏதோ ஒரு போர்வையில் ஏரோபிளேன் உள்ளேன் சென்று... ஏரோபிளேன் கடத்தி விடுவார்கள்...
ஆனால் கொரியாவில் வெளியாகி இருக்கும் emergency declaration திரைப்படம் கொஞ்சம் வித்தியாசமானது...
ஒரே ஒரு சைக்கோ விமானத்தில் உள்ளே சென்று கொரோனா போல ஒரு வைரஸை பரப்பி விடுகிறான்...
அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் நிலை என்ன என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை.
சாதாரணமாகவே கொரியர்கள் தங்கள் திரைப்படங்களில் சென்டிமென்ட் விசயத்தில் சலங்கை கட்டி ஆடுவார்கள்...
இதில் ஊடு கட்டி ஆடி இருக்கிறார்கள்.... தவறவிடாமல் பார்த்தே தீர வேண்டிய படம்.
எல்லா களேபரம் முடிந்து கடைசியில் ஒலிக்கும் பியானோ இசை உங்களை என்னவோ செய்யும்...
படத்தில் இரண்டு கொரிய சூப்பர் ஸ்டார்கள் நடித்திருக்கிறார்கள்...
2022 ஆம் ஆண்டு கொரியாவில் அதிகம் சம்பாதித்து கொட்டும் ஐந்தாவது திரைப்படம் இது.
படத்தின் வீடியோ விமர்சனம் முதல் கமெண்ட்டில்...







நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

பிரம்மாஸ்திரா சினிமா விமர்சனம்

#Brahmastra tamil film 2022 explanation and review by jackiesekar |
பிரம்மாஸ்திரா சினிமா விமர்சனம்
மார்வெல் டிசி காமிக்ஸ் போல களமிறங்க வேண்டும் என்று ஹிந்திவாலாக்கள் முடிவு செய்து எடுத்த படம்....
துஜூக்கோ என்ற ஒரு பாட்டை தவிர... பெரிதாய் மனதில் நிற்கவில்லை
சில நேரத்தில் தியேட்டரில் இருக்கின்றோமா அல்லது கோயிலில் இருக்கின்றோமா என்று குழப்பமாக இருக்கிறது...
கிராபிக்ஸ் காட்சிகள் குழந்தைகளுக்கு பிடிக்க வாய்ப்பு இருக்கு...




நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

Kanam tamil film 2022 explaination & review by jackiesekar jackiecinemas review #scifi #Amala #கனம்


டைம் ட்ராவலர் கதை...
எடுத்துக்கொண்ட கதைக்காக உழைத்து இருக்கிறார்கள்...
வாழ்த்துக்கள்
அதிகமாக அம்மா சென்டிமென்ட் இருக்கிறது... அதை குறைத்து இருக்கலாம்.
அமலா ரசிகர்கள் இந்த படத்தை தவிர்ப்பது நலம்... ஹீரோ வந்தாச்சு டி ரதி தேவியே... ஜீவா படத்தை பார்த்து ரசிகர் ஆனவன் நான்....
அமலா மீண்டும் நடிக்க வருகிறார் என்று ஆர்வமாக பார்க்க போனேன்....
அமலா என்ற பெயரில் ஏதோ பூட்டான் மாநிலத்துப் பெண்ணை நடிக்க வைத்திருக்கிறார்கள்...சோ சேட் 😂



நினைப்பது அல்ல நீ நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

தேங்ஸ் அண்ணே !!!



யாழினியை பள்ளியில் விட்டுவிட்டு...
 சென்னை மயிலை நாகேஸ்வரராவ் பார்க் பக்கம் பெட்ரோல் போட போய்க்கொண்டிருந்தேன்...

கழுத்தில் வேர்வை வழிய ஒரு பையன் ஓடிக்கொண்டே  இருசக்கர வாகன ஓட்டிகளிடம் லிஃப்ட் கேட்டு கொண்டிருந்தான்....
 நீல கலர் ஷார்ட்சும் பச்சை கலர் பனியனும் அணிந்திருந்தான்...
பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அம்மாஞ்சி ராஜா என்று பாடலில் அம்மாஞ்சி ராஜா என்று ஒரு வார்த்தை வரும் அல்லவா? 

அந்த அம்மாஞ்சி ராஜா வரிக்கு இலக்கணமாக அவனது முகம் இருந்தது... முகத்திலும் வியர்வை ஆறு ஓடிக் கொண்டிருந்தது !
கண்ணாடி அறிந்திருந்தான்....


 நேற்று நள்ளிரவு அவனுக்கு மூத்திரம் வந்து மூத்திரம் அடித்து விட்டு பக்கத்தில் இருக்கும் சுவரை சப்போட்டுக்கு பிடித்துக் கொண்டு கடைசி உலுக்கு உலுக்கும்போது !!!


ஒருவேளை சுவற்றில் இருந்த ஸ்பைடர் கடித்திருந்தால்..!
 அம்மாஞ்சியாக இருந்து கொண்டு ஸ்பைடர்மேன் ஆகக்கூடிய அனைத்து சாத்தியக்கூறுகளும் அவன் முகத்துக்கு பொருந்தி இருந்தன...
இங்கே ஏன்  "ஸ்பைடர்" மேன் வந்தான் என்று நீங்கள் கேட்கலாம்?!!!

அவன் ஸ்பைடர் மேன் அணிந்திருக்கும் கண்ணாடி பிரேம்தான் அணிந்திருந்தான்...!

நான் அவன் பக்கத்தில் வண்டியை நிறுத்தினேன்....
எங்க போற?

விவேகானந்தா காலேஜ்...
வண்டியில் ஏறி உட்கார சொன்னேன்...

 தேங்க்ஸ் முகத்தில் தெரிய...  ஏறி உட்கார்ந்தான்.

காலேஜுக்கு டைம் ஆயிடுச்சா என்றேன்?

இல்ல ஈவினிங் காலேஜ் தான்...!

பின்ன எதுக்கு ஓடற என்றேன்...

NCC யில் இருக்கிறேன்... எட்டே காலுக்கு அசெம்பிள் டைம்...என்றான்...
லேட்டா போனா மூணு ரவுண்டு ஓட உட போறானுங்கடா என்றேன்....
ஓட விட மாட்டாங்க ரெண்டு நாளைக்கு முன்னாடி எனக்கு ஆக்சிடன்ட் ஆயிடுச்சு அதனால வாய்ப்பு இல்லை என்றான்...

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கம்பியும் பேட்டை செயின்ட் ஜோசப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் போது என் சி சி நேவல் யூனிட்டில் சேர்ந்தேன்...

செல்வமூர்த்தி சார் தான் வாத்தியார்...
எதிர்காலத்தில் நாட்டுக்கு கப்பலில் ஏதாவது மயிரு புடுங்க போகிறேன் என்ற நினைப்பில் விறைப்பான சல்யூட் எல்லாம் செய்திருக்கிறேன்!!! 
ஒரு நிமிடம் லேட்டாக வந்தாலும் மைதானத்தை 3 ரவுண்டு ஓட விடுவார்கள்.... தவழ விடுவார்கள் பல்டி அடிக்க வைப்பார்கள்... மார்ச் பாஸ்ட் செய்து செய்து கால் கையெல்லாம் விட்டுப் போகும்!

ஒரு மணி நேரம் வைத்து செய்வார்கள்.... ஏண்டா இந்த பேரேடுக்கு வந்தோம் என்று யோசிக்க வைத்து விடுவார்கள்...!

எல்லாம் வைத்து செய்துவிட்டு ஒரு கிச்சடி ஒன்று தருவார்கள்... உண்மையில் தேவாமிர்தம் என்ற பொருளுக்கு அந்த கிச்சடி தான் அந்த கணத்தில் அமிர்த்தமாக  இருக்க வேண்டும்...

அது எப்படி என்று நீங்கள் வினவலாம்?

யோசித்துப் பாருங்கள் மேட்டர் செய்யும் போது அடித்து, உடைத்து, கிழித்து, வெறித்தனமாக இயங்கி... கடைசியில் ஊத்தி.... இணையை விட்டு பிரியும் நேரத்தில்... ஒரு முத்தம் அவனோ அவளோ கொடுத்துக் கொள்வார்களே....
அதற்கு முன்பு செய்த அத்தனை விஷயங்களையும் தூக்கி சாப்பிட்டு விடும் அந்த தேவாமிர்தமான ஒரு முத்தம்...


வாழ்க்கையில் கூட நீங்கள் பொறுத்தி பார்த்துக் கொள்ளலாம்...
ஒரு பெரிய சண்டைக்கு பிறகு வாங்கி பருகும் காபி கூட தேவாமிர்த்த சுவை கொண்டதாகத்தான் இருக்கும்...!



சார் அந்த பையன் என்ன ஆனான்?
சரியான நேரத்தில் இறக்கி விட்டீர்களா என்பீர்கள்? 
இரண்டு நிமிடத்துக்கு முன்னதாக விவேகானந்தா காலேஜ் வாசலில் இறக்கி விட்டேன்....

சார் ஏதோ ஒரு பையன்  லிப்ட் கேட்டான்... அதுக்கு காலம் காத்தால இவ்வளவு பெரிய பதிவா ? 


என்று உங்கள் மண்டையில் ஓடும் மைண்ட் வாய்ஸ் கேட்ச் செய்து விட்டேன்!!!
எத்தனையோ பசங்களுக்கு லிப்ட் கொடுத்து கீழே இறங்கி செல்லும் போது ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாத  வேஸ்ட் லேண்டுகளை இறக்கிவிட்டு இருக்கிறேன்....


சில பசங்களை இறக்கிவிட்டு தேங்க்ஸ் என்று சொல்லிவிட்டு உடனே நகராமல்...நின்று நிதானித்து நம் முகம் பார்த்து... தேங்க்ஸ் அங்கிள் என்று சொல்லி காலையில் ஆய் வருவதற்கு முன்பாக கஷ்டப்பட்டு முகத்தை வைத்துக் கொள்வோமே..? அப்படியான நம் முகத்தை அவர்கள் பார்த்து செல்வதற்கு அவர்களுக்கு ஆளாதியான பிரியம்... அப்படியான பசங்களையும் நான் பார்த்து இருக்கிறேன்.


இந்த பதிவை இவ்வளவு தூரம் நீட்டி முழங்க காரணம் ஒரே விஷயம் தான்...
விவேகானந்தா காலேஜ் வாசலில் அந்த ஸ்பைடர் மேன் பையன் 
"ரொம்ப தேங்க்ஸ் அண்ணா" என்றான்.


பிரியங்களுடன் 
ஜாக்கிசேகர்
#chennai #சென்னை #mylapore



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner