சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(30•11•09)

ஆல்பம்.....

முதல் இரவு அறைக்குவரும் கணவன் உடல் நிலை சரியில்லை என்று சொல்கின்றான்... சரி படுத்து உறங்குங்கள்... நாளை பார்த்து கொள்ளலாம் என்று சொல்கின்றாள் புது மனைவி... காலையில் கண் விழித்து பார்த்தால் கட்டில் மேலே இருக்கும் மின் விசிறியில் புது கணவன் தூக்கு போட்டு இறந்து போய் தொங்கி கொண்டு இருந்தால் எப்படி இருக்கும்?.... சேலத்தில்ஒரு புது பெண்ணுக்கு முந்தாநாள் நடந்து சம்பவம் இது...அந்த பெண்ணின் பார்வையில் இந்த பிரச்சனையை பாருங்கள்.. பிரச்சனை தீவிரம் மற்றும் அதிர்ச்சி உங்களுக்கு புரியும்...


சென்னை....
சென்னையில் டீ விலை திடிர் என்று ரூபாய் 6 க்கு நுரை தளும்பிய டீயை விற்க்க ஆரம்பித்த வி்ட்டார்கள்... ஒருஇடத்தில் ரூபாய் 4க்கும்... ஒரு சில இடங்களிலில் ரூபாய் 5க்கும் என இஷ்டம் போல் விலை ஏற்றி விற்று வருகி்ன்றார்கள்... இதை கேட்பதற்க்கு யாரும் இல்லை... இதில் அதிகம் பாதிக்கபடுபவர்கள் கொளுத்து வேலை செய்பவர்கள் மற்றும் தினக்கூலிகள் ... அந்த ஆறு ரூபாய் டீயில் பாதி கிளாசில் நுரைதான் இருக்கின்றது....


வெறிநாய்கடி மருந்தும்...அரசின் அலட்சியமும்....

இன்னும் நாய்கடிக்கு நமது மாநிலத்தில் பலர் இறந்து கொண்டுதான் இருக்கின்றனர்...காரணம் அந்த மருந்து விலை அதிகம்... கல்யாணத்துக்கு முன் பத்திரிக்கை வைக்க நானும் என் மனைவியும் நண்பர் வீ்ட்டுக்கு செல்லும் போது தெரு நாய் லேசாக பயமுறுத்த அப்போது என் மனைவி காலில் லேசாக நாயின் பல்லோ அல்லது நகமோ பட நாங்கள் ஜோசியம் ஏதும் பார்க்காமல் உடனே 1200ரூபாய் மதிப்பு கொண்ட ஊசி போட்டு விட்டோம்... ஆனால் அன்னாடம் காச்சி மக்களுக்கு அது ஒரு மாத வீட்டு வாடகை தொகை அவ்வளவு தொகைக்கு எங்கு போவார்கள்...
அதனால் நாய் கடித்ததும் எதாவது நல்ல எண்ணை குடித்துவிட்டு ,நாட்டு வைத்தியம் பார்த்துவிட்டு அலட்சியமாக விட்டு விடுகின்றனர் வெறிநாய் கடித்து இருந்ததால் பாதிப்பு 6மாதத்தில்ரொம்ப பயங்கரமான சாவாக இருக்கும்....

அரசு பொது மருத்துவமனையில் வெறிநாய்கடிக்கு ஊசி போட விடியலில்3 மணிக்கு இடம் போட்டு காத்து ,இருக்கும் கொடுமை இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது... மருந்து தட்டுப்பாடு ஒரு காரணம்... இந்த மருந்து தட்டு பாடுகளை அரசு விரைந்து கலைய வேண்டும்...




மிக்சர்....

அமிதாப் நடிக்கும் இந்திபடம் பா வில் வரும் ராஜா பாடல்கள் அவருக்கு இந்தியில் மறுபடியும் ஒரு எழுச்சியை ஏற்படுத்தும் என்று எண்ணுகின்றேன்... முக்கியமாக முடி முடி என்ற பாடல் அற்புதம் ....

வாழ்த்துக்கள்...
பதிவர் லவ்மேடி என்னை அவர் திருமணத்துக்கு தொலைபேசியிலும், மெயில் அனுப்பியும் அழைப்புவிடுத்தார்... எனக்கு ஹைதரபாத்தில் ஷுட்டிங் இருந்த காரணத்தால் என்னால் திருமணத்துக்கு போக முடியவில்லை.... பதிவர் ரம்யா திருமணத்துக்கு போக போவதாக சொன்னார்கள்.. அப்படி செல்லும் பட்சத்தில் எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவிக்க சொல்லி இருந்தேன்..... இப்போதும் எனதுஉள்ளப்பூர்வமான வாழ்த்துக்களை அந்த தம்பதிகளுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்...
வாழ்த்துக்கள்...
கணிணி மென்பொருட்களின் கூடம் எழுதும் பிளாக்கர் வடிவேலன் ஆர் அவர்கள் என்டிடிவி இந்து வில் பிளாக் எழுதுவது குறித்து நேர்காணல் ஒன்றை தந்துள்ளார்... அது வரும் வெள்ளி 4ம் தேதி இரவு 9,30க்கு ஒளிபரப்பாகும் என்பதை பேட்டி எடுத்தவர்கள் சொன்னதாக தெரிவித்தார்... அவருக்கும் எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள் ...


விஷுவல் டெஸ்ட் எடுத்ததில் பிடித்தது....

ஹைதராபாத்தில் ஜுப்ளி ஹில்சில் உள்ள பெத்தம்மா கோவில்...விடியலில் போன போது சன் லைட் அந்த கோவிலுக்கு மட்டும் வருவது போல் இருந்த அந்த தருணத்தில் கிளிக்கியது

ஒரு பணக்கார வீட்டின் உட்புற தோற்றம்...


லோ ஆங்கிளில்
இரண்டுமே மனிதன் பயணிக்கத்தான் என்றாலும்....மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இது....

நான்வெஜ்...

அவன் எப்போதுமே நெட்டில் செக்ஸ, சிடியில் பிட் பார்க்கின்றவன்... காம புத்தகம் வாசிக்கின்றவன்...அவன் சவாசிப்பது... நேசிப்பது...தூங்குவது எல்லாம் அந்த புத்தகத்தை வைத்துதான்...அவனுக்கு கனவில்... படித்த கதாபாத்திரங்களில் அணுக்கு பதில் இவன் இருப்பான்.... அந்த அளவுக்கு செக்ஸ் போதை அதிகம் கொண்டவன்... செக்ஸ் புத்தகமும் பாத்ரூமும் என்று யாரவது கட்டுரை எழுதினால் எராளமான டீப்ஸ் கொடுப்பவன்...பல எதிர்கால டாக்டர்,வக்கில்,என்சினியர் ,விஞ்ஞானி,பொறிக்கி ,மொள்ளமாறி போன்ற கேரக்கடர்களை பாத்ரூமில் அழித்தவன்...
அவனுக்கு திருமணம் செய்துவைக்க அவன் பெற்றோர் முடிவெடுத்தனர்...அவனுக்கு ஜாதகம் இல்லை என்பதால் கைரேகை பார்ப்வனிடம் கை காட்டி நாள் குறிக்க சொன்னார்கள்...

அவனும் கை ரெகை பார்க்கும் ஜோசியகாரனிடம் போனான்...கைரேகை பார்க்க எவ்வளவு என்று கேட்க..150 ரூபாய் என்று சொன்னான்....கையை பார்த்த ஜோசியகாரன் அதிர்ந்து போனான் பாதிரேகையை காணவில்லை....உடனே அசராத ஜோசியக்காரன் இந்தகாலத்து பிள்ளைங்களை பத்தி் எனக்கு தெரியும்..உன் பெண்ட் ஜிப்பை அவுறு என்றான்.. பயந்த போன அவன் ஏன் என்று கேட்க? அதற்க்கு ஜோசியகாரன் மீதி பாதி ரேகை அதுலதானே இருக்கும் என்றான்....

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

ஹைதராபாத் ஒரு பார்வை....(பாகம்...1) புகைபடங்களுடன்...



போலியாவால் பாதிக்கபட்ட சென்னை போல் இல்லாமல் எத்திராஜ் கல்லூரி பெண்ணை போல் ஹைதராபாத் மிக அழகாக இருந்தது...

எல்லா இடத்திலும் கட்டிடம் கட்டிக்கொண்டே இருக்கின்றார்கள்.. எங்கிருந்து மணல் கிடைக்கின்றது என்று தெரியவில்லை...ஹைதராபாத்தில் நுழைந்ததும் நம்ம ஊர் சூர்யா பாரத் சிமெண்ட் விளம்பரத்துக்கு செயற்க்கை சிரிப்பில் பல விளம்பர ஹோர்டிங்குகளில் காணப்படும் போதே...ஹைதராபாத் ரியல் எஸ்டேட் பலத்தையும்... அதன் மூலம் புரளும் கோடிகளையும் நினைத்துபார்க்க மலைப்பாக இருக்கின்றது.....

அமீர் பேட் வரை வழி எங்கும் நான் கவனித்த வகையில் நிறைய கார்டனுடன் கூடிய திருமண மண்டபங்கள் மற்றும் பார்ட்டி ஹால்கள் ரெட்டிகாருகளின் பேங்க் பேலன்சை சொற்பமாய் கறக்க பேருதவி புரிகின்றன...இவ்வளவு பார்ட்டிஹால்கள் இருக்கும் போது அவர்கள் திருமண விழாக்கள் எவ்வளவு கிராண்டாக நடத்துகின்றார்கள் என்பதை பார்க்கும் போது... வரதட்சனை எந்தளவுக்கு அதிகம் பரவி கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்...

இங்கு மாப்பிள்ளை ரேட் என்ன என்று விசாரித்தேன்... எல்லாம் கிலோ கணக்குகளில் பவுன் கொடுக்கின்றார்கள்....வீடுகள் மற்றும் நிலங்கள் வேறு....முக்கியமாக முஸ்லீம் சமுகத்து மக்களிடம் இன்னும் அதிகமாம்.... அதே போல் மாப்பிள்ளை பையன்...சென்னையில் கல்லூரியில் படித்தவன் என்றால் இன்னும் 50 பவுன் எக்ஸ்ட்ரா கொடுப்பார்களாம்... நம் தமிழ்நாட்டின் கல்வி தரத்தின் மேல் அவ்வளவு மரியாதையோ என்ன மண்ணாங்கட்டியோ தெரியவில்லை...

அதே போல் அலப்புழாவில் தமிழன் என்ற அலட்சியம் காட்டும் கேரளாவாசிகள் போல் இல்லாமல் சென்னைவாசி, தமிழன் என்ற அலட்சியம் இங்கு இல்லை...

எங்களுக்கு ஜுப்ளி ஹில்ஸ் அருகில் இருக்கும் கிருஷ்ணா நகர் அருகில் ஒரு கெஸ்ட் ஹவுசில் ரூம் போட்டு இருந்தார்கள்... சென்னையில் எப்படி அடையாறு,பெசண்ட்நகர்,அண்ணநகரோ அது போல் அரிசி விலைஉயர்வு பற்றியோ, பெட்ரோல் விலைஉயர்வையும் பற்றி கிஞ்சித்தும் கவலைபடாத மேல்தட்டிலேயே மேல்தட்டு மக்கள் வசிக்கும் இடம்..ஹைதராபாத்தில் ஜுப்ளி ஹில்ஸ்ம், பஞ்சார ஹில்ஸ்ம்......


இங்கு யராவது வந்து இங்கு கட்ட பட்ட வீடுகளை பார்த்தால் சடட்டென தலையில் ரெட் ரிப்பன் கட்டி நக்ஸைலைட்டுகளாக உடனே மாறிவிடுவார்கள்...வீடுகள் என்றால் மன்னிக்கவும் இங்கு வீடு கட்டி வாழுங்கள் என்றால் எல்லோரும் கல்யாண மண்டபம் கட்டி அதில் வாழ்கின்றார்கள்...

குன்றின் மீது இருக்கும் நகரம் என்பதால் எல்லா இடங்களிலும் சாலைகள் எறி இறங்கி பார்பதற்கு மிக அழகாக இருக்கின்றது... இதுவும் சோம்பல் நகரம்தான் என்றாலும் ஆலப்புழா போல் அவ்வளவு மோசம் இல்லை... காலை 5 மணிக்கு டீ கிடைக்கின்றது....

எல்லா இடத்திலும் பாறைகளால் ஆன நகரம் என்பதால் பல இடங்களில் வெடிகளை வைத்து தகர்த்து அந்த இடத்தை சம படுத்தி வீடு மன்னிக்கவும் பங்களா கட்டிகொள்கின்றார்கள்...

மலைகளை உடைத்த வெடி வைத்து தகர்த்து சாலைகள் அமைக்கின்றார்கள்.... ஹைதரபாத்தில் எல்லா இடத்திலும் பாலம் கட்டி போக்குவரத்தை நெரிசலை முடிந்த அளவுக்கு குறைத்து இருக்கின்றார்கள்... முக்கியமாக புதிய ஏர்போர்ட் போக ஒரு நான்கு வழிப்பாதை அமைக்கின்றார்கள்.... பிரமாண்டம்...

இங்கு ஹெல்மெட் போட்டுக்கொண்டு வாகனம் ஓட்ட வேண்டும் என்ற சட்டம் இல்லை.... இருப்பினும் இந்த பெப்பி கடைக்கு அருகில் 3 நாட்களுக்கு முன் போகும் போது இரண்டு இளைஞர்கள் யூ டேர்னில் திரும்பும் போது பஸ் மோதி ஸ்தலத்தில் இறந்து போக அந்த பையனின் அம்மா அந்த இறந்து போன சடலத்துக்கு அருகில் உட்கார்ந்து கதறி அழுதது மனதை கசக்கியது...
மேலுள்ள படத்தில் இருப்பது ஒரு பள்ளி பஸ் என்றால் என்னால் நம்ப முடியவில்லை.. அது ஒரு ஓல்வோ பஸ்... அது போல் 50க்கு மேல் இருக்கின்றதாம்....பள்ளி முழுவதும் குளிர்சாதனம் செய்யபட்டு இருக்குமாம்...
வாழ்வுதான்....


பெண்கள் இங்கு ரொம்பவும் குறைந்தவிலையில் தங்கள் உடலை விற்க்கின்றார்கள்... சார்மினார் பகுதியில் இன்னும் குறைந்த விலைக்கு கிடைப்பார்களாம்... எல்லாம் சொல் கேள்விதான்....அதுவும் தனியாக வாயில் நீர் ஒழுக போனால்... எல்லாத்தையும் தொலைத்து விட்டு வெறும் ஜட்டியுடன் ரிட்டர்ன் ஆக வேண்டுமாம்... அப்படியும் அடங்காதவர்கள் தன் கையை உதவிக்கு வைத்துக்கொள்ளவேண்டும்....மற்ற மாநிலங்களை கம்பேர் செய்யும் போது தமிழகத்தில் விபச்சாரம் அந்தளவுக்கு வெளிப்படையாக இல்லை....

ஹைதராபாத் பெண்கள் அடுத்த பகுதியில்.....

தொடரும்

சாண்ட்விச் அண்டு நான்வெஜ் (18/11/09) (ஒருவாரம் விடுப்பு)

ஆல்பம்....

கேபிளாரின் தந்தை இறுதி அஞ்சலிக்கு உதவிசெய்ததிற்க்கு எனக்கு பலர் தொலைபேசியில் நன்றி தெரிவித்து கொண்டு இருக்கின்றார்கள்...விழுப்புரத்தில் ராஜபிரியன் எனும் நண்பர் சாட்டில் வந்து நன்றி தெரிவித்தார்...இணைய எழுத்தாளர்களின் பலமும் அவர்களின் உணர்ச்சிகளை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது....

இரண்டு நாளுக்கு பிறகு நேற்று கேபிளுக்கு போன் செய்து பேசினேன்... எனது பதிவுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்... அவர் அம்மா எனது பதிவை படித்து விட்டு அழுது விட்டதாக சொன்னார்.... அதே போல் அவர் வீட்டு மாப்பிள்ளை எப்படி இப்படி எல்லாம் கவனித்து எழுதுகின்றார்கள்... என்ற கேள்வி எழுப்ப.. எங்கள் ஆட்கள் மிகவும் திறமைசாலிகள் என்று அடித்து விட்டு இருக்கின்றார்...

நன்றி...

சென்னை சாலைகள் பற்றி நாம் சுட சுட பதிவு போட்டாலும் அதனை மக்கள் மத்தியில் பரிந்துரை செய்த திரட்டிமற்றும் தெனாலி தளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்....பத்திரிக்கைகளும் மோசமான சாலைகள் பற்றி எழுதி கிழிக்கின்றார்கள்... எப்போது விமோசனம் கிடைக்கம் என்று தெரியவில்லை...

செல்போன் நிறுவனங்கள் வைத்த ஆப்பு.....

ஒரு செகன்டுக்கு ஒரு பைசா என்ற விளம்பர படுத்த எல்லாரும் போய் விழுந்தடித்து போய் பிளான் மாற்றியவர்கள் எல்லாம் தலையில் கை வைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.... லோக்கலில் ஒரு நிமிடத்துக்கு அதே நெட்ஒர்க்கில் பேச..10 பைசா... மற்ற நெட்ஒர்கக்கு பேச50 பைசா எஸ்டிடி 1 ரூபாய்.... ஆனால் இங்கு லோக்கலில் அதே நெட்ஒர்க்கில் பேச ஒரு செகன்டுக்கு 1 பைசா என்றால் ஒரு நிமிடத்துக்கு60 பைசா ஆகி விடுகின்றது..ஆப்பு வைத்த குரங்காக எல்லோரும் பிளானை மாற்ற எல்லோரும் ஓடிக்கொண்டு இருக்கின்றார்கள்... ஒரு செகன்டுக்கு ஒரு பைசா யாருக்கு பொறுந்தும் என்றால்? நான் சத்தியம் தியேட்டர்ல இருக்கின்றேன் பத்து நிமிஷத்துல வெளியே ந்துடுவேன் என்று போனை கட் செய்பவர்களுக்கு ஓகே...
ஆனால் என்ன படத்துக்கு போனே? எதாவது நல்ல பிகர் வந்து இருக்கா? என்று பேச்சு நீண்டால்......................... நஷ்டம் உங்களுக்கு லாபம் நெட்ஒர்க் வழங்கும் நிறுவனத்துக்கு...

திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி தொகுதிகாரர்களுக்கு அதிஷ்டம் கூரையை பிச்சிகிட்டு கொட்டபோகின்றது... ஒன்னுமில்லை... இடைதேர்தல் அங்கு நடைபெற போகின்றது.... அப்ப அந்த தொகுதி வாசிங்க அதிஷ்ட வாசிங்க தானே..?
மிக்சர்....

2012 படம் நானும் என் மனைவியும்... ஜோதி தியேட்டரில் பார்த்தோம்... எல்லா தியேட்டர்களும் ஹவுஸ்புல்..... அதனால் ஜோதி....தியேட்டர் ஏசி செய்யபட்டுள்ளது...மேல்தட்டு மக்கள் குடும்பத்தினருடன்
தியேட்டருக்கு வர ஆரம்பித்து விட்டார்கள்.. இரவு காட்சிக்கு
மழை வேறு அதனால் கூட்டம் குறைவாக இருக்கும் என்று நான் போட்ட கணக்கு தப்பாக விட்டது...பயங்கர கூட்டம்... ஒரு சீட் கூட காலி இல்லை. நல்ல ஓப்பனிங் படத்திற்க்கு கிடைத்துவிட்டது.... படம் வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு கொழுத்த லாபம் இந்த படம்... படத்தில் பனியனோடு வந்த பெண்ணை பார்த்ததும்ஒரே காட்டு கத்தல்... இருவரும் முத்தம் இட்டு கொள்ளும் போது இன்னும் கத்தல்... நம்மவர்கள் இன்னும் காய்ந்து போய் கிடக்கின்றார்கள்...தியேட்டரில் இரண்டு ரீலை முதலில் ஓட்டி பிழை கண்டு பிடித்து இரண்டாவது முறை அதே காட்சிகளை திருமபவும் ஓட்டினார்கள்... தலையெழுத்து.. அது முதல் காட்சியாக இருந்தாலும் பரவாயில்லை இரண்டாம் நாள் இரவு காட்சிக்கு இந்த கூத்து....தியேட்டரில் ஒரே காட்டு கத்தல்...

மதுரை காமராஜர் அஞ்சல் வழி கல்வியில் மாஸ்டர் ஆப் கம்யூனிகேஷன் ஜேர்னலிசம் படித்து கொண்டு இருக்கின்றேன்.. சில பல காரணங்களால் டுயூ டேட் தள்ளி டிடி எடுக்க இப்போது நான் எக்சாம் எழுதுவதில் சிக்கல்... இங்கு சென்னை சென்டரில் வாங்கி கொள்ள மறுக்கின்றார்கள்... எனது வீட்டில் தண்ணீர் வந்த பிரச்சனை எல்லாம் காரணமாக சொல்லி ஒரு கவரிங் லட்டர் வைத்து மதுரையில் உள்ள வாசகர் நண்பர் முருகன்...மூலம் அங்கே பல்கலைகழகத்தில் எனது பிரச்சனை குறித்து சொல்ல சொல்லி இருக்கின்றேன்... பார்ப்போம் என்ன ரிசல்ட் வருகின்றது என்று???? வேண்டிக்கொள்ளுங்கள் அடுத்த மாதம் எனக்கு எக்சாம்... இல்லையென்றால் அடுத்த வருடம் மே மாசம்தான் எழுத வேண்டும்.... எது எப்படி இருந்தாலும் மதுரை முருகனுக்கு என் நன்றிகள்...

காஞ்சிபுரம் கடவுளின் கருவரையில் செய்த லீலைகளுக்காக இப்போது கம்பி எண்ணிக்கொண்டு இருக்கின்றார்...... செல்போனில் அவரே எடுத்து ரசித்த கொள்ள எடுத்தது.. பின்பு செல் மக்கார் செய்ய சர்விஸ் சென்டரில்... கொடுக்க அங்குதான் அவருக்கு விதி விளையாடியது... அவன் செல்லில் உள்ள பைல்கள் காப்பி செய்து கொள்ள இப்போது.. அவரே போய் சரண்டர்... ஆகிவிட்டார்....சரி இவரை நம்பி ஏமாந்த பெண்களையும் விசாரிக்க வேண்டும் என்று போலிசார் குண்டை தூக்கி போட்டு இருக்கின்றார்கள்...

சென்னை கடற்கரை அழகு படுத்தபட்டுவிட்டது.... அங்கு எடுத்த படங்கள் விஷுவல் டேஸ்ட்டில் போட்டு இருக்கின்றேன்... வெளிநாட்டு வாழ் தமிழர்கள் பார்த்து பயன்பெறவும்...


விஷுவல் டேஸ்ட்..... சென்னை கடற்கரை....
எல்லாம் மழை வருகின்ற அவசரத்தில் எடுத்து.. இன்னொருநாள் ரிலாக்ஸ் ஆக எடுக்கின்றேன்.... படத்தை கிளிக்கி பார்க்கவும்...
நான்வெஜ்.....

ஜோக்கு....

உலக அளவில் ஒரு ஆராய்சி நடந்து கொண்டு இருந்தது.. அதாவது செமனில் எந்தளவுக்கு குளுக்கோஸ் இருக்கின்றது என்ற ஆராய்சி... அதற்க்கான கருத்து அரங்கு நடந்து கொண்டு இருந்தது... உலகம் எங்கும் உள்ள ஆராய்சியாளர்கள் அங்கு ஆண் பெண் பேதம் இல்லாமல் குழுமி இருந்தனர்.... கருத்தரங்கில் ஒரு பெண் எழுந்து கேட்டாள்? சார் உண்மையிலேயே... அதில் குளுக்கொஸ் இருக்கா? கருத்தரங்கை நடத்திக்கொண்டு இருந்த பேராசிரியர்.. சில ஆதாரங்களை ஸ்லைடு போட்டு காட்டினார்... அப்படியம் அந்த பெண் கேட்டாள்? அது இனிப்பாக இல்லையே என்றாள்... உடனே ஆண்கள் பக்கம் சிரிப்பொலி வர... அவள் சட்டென்ற அந்த அரங்கை விட்டு வெட்கத்துடன் வெளியேறினாள்... அவள் போனதும்.. அந்த பேராசிரியர் சொன்னார்... எதையும் நாக்கின் நுனியில் வைத்தாள்தான் சுவை உணர முடியும் என்றார்...

குறிப்பு...ஹைதராபாத்தில் ஷுட்டிங்.. உடனே போகின்றேன்...எப்படியும் ஒரு வாரத்துக்கு மேல் ஷுட்டிங் நடக்கும் என்ற நினைக்கின்றேன்... இன்னும் ஒரு வாரம் ஹைதராபாத் வாசம்...திரும்ப நேரம் கிடைக்கும் போது உங்களை சந்திக்கின்றேன்...
நன்றி

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

ஷாட் என்றால் என்ன???(சினிமா சுவாரஸ்யங்கள் /பாகம்3)


ஷாட் என்றால் என்ன? ஷாட்டை பற்றி குப்பனும் சுப்பனும் பேசிக்கொண்டு இருப்பான்... அந்த படத்துல அந்த ஷாட் நல்லா இருந்துச்சு .. இந்த படத்துல இந்த ஷாட் நல்ல இருந்துச்சு... இப்படி பலர் சொல்ல கேட்டு இருக்கோம்...சினிமா ரசிகனா இருந்தா? இந்த விஷயத்தை பத்தி் அல்லது இந்த வார்த்தையை பற்றி நல்லா தெரிஞ்சி இருக்கனும்...

சரி ஷாட் என்றால் என்ன? கேமராவுல பிலிம் எல்லாம் லோட் பண்ணி அல்லது வீடியோ கேமராவுல கேசட் எல்லாம் போட்டு ரெடியா வச்சி.... எதை எடுக்க போறோமோ? அதுக்கான கோணத்தை எல்லாம் பார்த்து.... கேமராவுல ரெக்கார்டிங் பட்டனை ஆன் பண்ணி அது பிலிமிலயோ அல்லது கேசட்லயோ ரெக்கார்ட் ஆகும்... அதுக்கப்புறம்..நாம் என்ன நினைச்சமோ அதை காட்சிகளா செல்லுலாய்டில் சிறைபிடித்த பின்னாடி நாம் கேமராவை ஆப் செய்வோம்...

அதாவது கேமரா ஆன் பண்ணி அப் பண்ணும் போது நடுவில் பிலிமில் பதிந்த காட்சிகளுக்கு பேர்தான் ஷாட் என்று சொல்லுவார்கள்... போதுமா ஷாட் என்பது பெரிய கம்ப சூத்தரம் எல்லாம் இல்லைங்க...

சரி ஒரு ஷாட் என்பதற்க்கு எதாவது கால அளவு என்பது இருக்கின்றதா? இல்லை இல்லவே இல்லை... ஒரு ஷாட்டை ஒரு இயக்குனர் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்..

அதே போல் ஷாட்களில் பல சப் டிவிஷன்கள் இருக்கின்றது.. லோ ஆங்கிள் ஷாட், ஐஆங்கில் ஷாட்,லாங்ஷாட், குளோஸ்ஷாட், கட் ஷாட் , இண்டர்கட் ஷாட்,மிட்ஷாட் என்று பல விஷயங்கள் இதில் வரும்.... அதனை வரும் எபிசோட்களில் ஜஸ்ட் லைக்தட்டாக பார்க்கலாம்...

சரி இப்படி குட்டி குட்டியா எடுத்த காட்சிகளை ஒன்ன சேர்த்தா அதுக்கு சிக்வெண்ஸ்ன்னு பேரு... அந்த சீக்வெண்ஸ்க்கு அப்புறம் அது ஒரு சீனா உருவெடுக்கும்... ஒரு படத்துல ஒரு சீன் நல்லா இருக்குன்னு சொல்லறதுக்கு முன்ன ஒரு விஷயம் கவனிக்கனும்...

ஒரு சீன் என்பது பல ஷாட்டுகளுடைய கோர்வைதான் ஒரு சீன் என்பதாகும்....ஒரு சீன் எடுக்க பல ஷாட்டுகள் எடுக்க வேண்டும்...ஒரு படத்தில் 60லிருந்து 70பதுவரை சீன்கள் இருக்கும்...அப்படி இருக்கும் போது எத்தனை ஷாட்டுகள் எடுக்க வேண்டும் என்பதை நீங்களே யோசித்து கொள்ளுங்கள்...

ஒரு லீவிஸ் பேண்ட் ஆட் அதை பாருங்கள்.... முதலில் அதில் எத்தனை ஷாட் வருகின்றது என்பதை சொல்லுங்கள்... மிகச்சரியாக சொல்ல வேண்டும்... இவ்வளவு நேரம் கிளிபிள்ளைக்கு சொல்வது போல் சொல்லியதற்க்கு பலன் உங்கள் ஈடுபாட்டை வைத்துதான் இந்த தொடரின் அடுத்த கட்டம் டெக்னிக்கலாகவும் போகும்... வாய்ப்பு இருக்கின்றது....



தொடரும்.....
இன்டியா கிளிட்ஸ் படங்களுக்கு என் நன்றிகள்


அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

கேபிள் சங்கர் தந்தை மரணமும்...இணைய எழுத்தாளர்கள் பலமும்...


நேற்று ஞாயிறு விடியலில் இருந்தே மழை வலுக்க தொடங்கி விட்டு இருந்தது... உண்மை தமிழனுக்கு போன் செய்தேன்.. அவர் வீட்டில் இருந்து கிளம்பிவிட்டதாகவும் கேபிள் வீட்டுக்கு வரமுடியாவிட்டாலும் கண்ணம்மாபேட்டை மயான பூமிக்கு வந்துவிட சொன்னார்... நான் சனிக்கிழமை தகவல் கிடைத்ததும் என்னால் போக முடியவில்லை...


சனிக்கிழமை அன்று என் மனைவியின் அத்தை வீடு பெருங்களத்தூரில் இருப்பதால் அங்கு செல்வதற்க்காக மெரினா பீச்சில் இருந்து செல்லும் போதுதான்... கேபிள் சங்கர் தந்தையாரின் மரண செய்தி.. குறுந்தகவலாக என் கைபேசியில் வந்து என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது... அதன் பிறகு (வண்ணத்துபூச்சி)சூர்யா கேபிளாரின் வீட்டு விலாசத்தை குறுந்தகவல் மூலம் தெரியபடுததினார்...

நல்ல மழை என்பதால் சாலை எங்கும் வெள்ளம்..நான் பெருங்களத்ததூர் போகவே மாலை 4.30 ஆகிவிட்டபடியால் என்னால் சனிக்கிழுமை கேபிளார் வீட்டுக்கு போக முடியிவில்லை...அப்படியும் நானும் என் மனைவியும் இரவு எழு மணிக்கு சைதாபேட்டை ஜெயராஜ் தியேட்டர் அருகில் இருந்து தண்டோராவுக்கு போன் செய்தால்... எல்லோரும் கிளம்பி விட்டதாகவும்... மறுநாள் ஞாயிறு காலை வந்து விட சொன்னார்....

ஞாயிறு காலை நல்ல மழை...பகல் ஒன்பது மணிக்கு இரவு 6,30க்கு ஒரு இருட்டு இருக்குமே அது போல் இருந்தது...மழை வெளுத்துக்கட்டிக்கொண்டு இருந்த போது... நான் கேபிளாரின் வீட்டுக்கு போனேன்.. அவர்கள் உறவுகூட்டம் மட்டும் இருந்தது..பதிவர்கள் யாரையும் காணவில்லை...தண்டோராவுக்கு போன் செய்தால் வந்து கொண்டு இருப்பதாக தெரிவித்தார்..

சடங்கு கீழே தொடங்கும் போது உண்மை தமிழன், வெண்பூ போன்றவர்கள் கேபிளாரின் உடன் வர கொஞ்சம் நேரத்தில் பதிவர் முரளிகண்ணனும், அதிபிரதாபனும் வந்து சேர்ந்தார்கள்...

கேபிளின் தந்தையார் உடலை சுற்றி அவர் வீட்டு பெண்கள்.. . தங்கள் பிரிவு துயரை அழுகை மூலம் வெளிபடுத்த.. கேபிள் கொள்ளிசட்டியுடன் விசும்ப... வெண்பூமற்றும் முரளி கண்ணன் முதுகு பிடித்து ஆறுதல் சொல்லி தேற்றிக்கொண்டு இருந்தார்கள்...உள்ளகரத்தில் இருந்து வந்த ஒரு டிரஸ்ட் ஆம்பூலன்சில் கேபிள் தந்தையார் உடல் ஏற்றபட்டது... முரளி மற்றும் அதிபிரதாபன் வேறுவாகனத்தில் வர.... நான்,வெண்பூ மற்றும் உண்மைதமிழன் அந்த ஆம்பூலன்ஸ் வாகனத்தை பின் தொடர்ந்து கண்ணம்மா பேட்டை இடுகாட்டிற்கு வந்து விட்டோம்....

அங்கு அவர் உடலை வைத்து சில சடங்குகள் மேற்க்கொள்ளபட்டன... அப்பா இல்லாதவங்க வாய்க்கு அரிசி இடலாம் என்ற குரல் கேட்க... அப்பா உயிரோடு இருப்பவர்களை தவிர எல்லோரும் போய் வாய்க்கு அரிசி இட்டனர்..கேபிளாரும்..அவர் வீட்டு மாப்பிள்ளையும் அழத்தொடங்க..
எல்லோரும் ஆறுதல் படுத்த...கேபிளார் தந்தையார் உடலுக்கு கொள்ளி வைக்க மின் அடுப்பில்உள் செலுத்தபட்டது...

அதன் பிறகு ஒரு மணி நேரம் கழித்து சாம்பலுடன் பெசன்ட் நகர் அறுபடை முருகன் கோவிலுக்கு கேபிளும் ஒரு சில உறவுகளும் காரில் வர.. நான்,அதிபிரதாபன், தண்டோரா, வண்ணத்துபூச்சி, வெண்பூ, முரளிகண்ணன்,பைத்தியக்காரன் எல்லோரும் வந்து சேர்ந்தோம்... பெசன்ட் நகர் கடலில் கேபிளாரின் தந்தை சாம்பல் கரைக்கபட்டு...கேபிளார் கடலில் மூன்று முழுக்கு போட்டு அவர் அப்பாவை ஒரு குறையும் இல்லாமல் வழி அனுப்பி வைத்தார்...


கேபிளாரின் அப்பா....

கேபிளாரின் இந்த அளவு சினிமா மோகத்துக்கு முதல் காரணம்.. அவரின் அப்பாதான்..அவர் தமிழ்நாடு மின்சார துறையில் வேலை பார்த்தவர்... பல நாடகங்கள் எழுதி இயக்கி இருக்கின்றார்...கேபிளின் ஜெயாடிவி பேட்டியின் போது எவர் மனதையும் புண்படுத்தாமல் பேசினாய் என்று தன் மகனுக்கு வாழ்த்து கூறியவர்... தன் மகனை பற்றிய எந்த பத்திரிக்கை செய்தியானாலும் அதனை ஜெராக்ஸ் போட்டு ஒரு பைலை பாலோ செய்வாராம்...பல சினிமாக்களை கேபிளும் அவர் அப்பாவும்சைக்கிளில் போய் பார்த்து விட்டு வருவார்களாம்....கேபிள் அப்பா ஒரு சினிமா இயக்க முயற்ச்சி எடுத்த போது சில பல காரணங்களால்... அது நின்று போய்விட்டது... இருப்பினும் கேபிளும் அவர் அப்பாவும் நல்ல நண்பர்கள் போல் பழகுவார்களாம்...உடலுக்கு முடியவில்லை என்று சொல்லி இருக்கின்றார்... கேபிள் அப்பாவை மருத்துவமனைக்கு அழைத்து போக கார் எடுத்து கொண்டு வருவதற்குள் தன் உயிரை விட்டு இருக்கின்றார்...
நல்ல சாவு.. சட்டென இறந்து போய் விட்டார்.... கேபிள்மற்றும் அவர் சகோதரிகள் அழுவது என்பது ஒரு பெரிய விஷயம் அல்ல ... ஆனால் அவரின் மாப்பிள்ளை தன் மாமனாரின் பிரிவுக்கு அழுகின்றார் என்றால் கேபிள் அப்பாவின் நல்ல உள்ளத்தை புரிந்து கொள்ளலாம்.. கடைசி வரை அங்கு உடன் இருந்த அதாவது கண்ணம்மா பேட்டை இடுகாடுவரை வந்து இருந்த சினிமா பிரபலம்... பிரமிட் நடராஜன்அவர்கள்...



இணைய எழுத்தாளர்களின் பலம்.....

1.கேபிளின் தந்தை மரண செய்தி கேட்டு... அந்த அடை மழையிலும், அவனின் அலுவலக வேலைகள்மற்றும் பர்சனல் வேலைகளை ஒதுக்கி விட்டு,மோசமான சென்னை சாலையில் பயணித்து 50க்கு மேற்பட்டவர்கள்,விலாசம் தெரியாத வீட்டுக்கு வழி கண்டு பிடித்து, எல்லோரும் வந்து கூடியதை பார்த்து பைத்தியக்காரன் நெகி்ழுந்து போய் என்னிடம் பேசிக்கொண்டு இருந்தார்....

2.கேபிளுக்கு ...கைபேசி மற்றும் குறுந்தகவல் மூலம் பல பதிவர்கள் மற்றும் வாசகர்கள் தங்கள் வருத்தங்களை பகிர்ந்து கொண்டார்கள்....

3. பதிவர்களில் விஷயம் கேள்விபட்டதும் நேரே வீட்டுக்கு போய் தன் எடிஎம் கார்டை கேபிள்கையி்ல் கொடுத்து செலவுக்கு எவ்வளவு வேண்மானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்ன நர்சிம்.... ஒரு படி மேலே போய்விட்டார்...கேபிளிடம் காசு இருக்கின்றது இல்லை என்பது வேறு விஷயம்.. ஆனால் அந்த மனது வரவேண்டுமே.... பாராட்டுக்கள் நர்சிம்...

4.பதிவர்களில் பக்கவாக மாலைமரியாதை செய்தவர் தண்டோராதான்...

5. முரளிகண்ணன் இரவு வீட்டுக்கு செல்லாமல் சைதாபேட்டையில் உள்ள தன் நண்பர் வீட்டிலேயே படுத்துக்கொண்டார்... ஏனென்னறால் எந்த நேரத்திலும் உதவி தேவை படும் அல்லவா???

6.மழையில் பலரை தன் காரில் அழைத்து வந்தது.. தண்டோரா....

7. ஒரு சொந்தக்காரன் துக்க வீட்டுக்கு வருவது என்பது கடமை... அப்படி வரவில்லை என்றால் அது பின்னாளில் நடக்கும் வீ்ட்டு விசேஷத்தில் சொல்லிகாட்டி நக்கல் விடப்படும்... அனால் வேவ்வேறு பின்புலங்களில் இருந்து பதிவர்கள் வந்து தங்கள் வருத்தங்களை பகிர்ந்து கொண்டார்கள் பாருங்கள் அதுதான் கேபிளின் அப்பாவுக்கு பெரிய மரியாதை என்பேன்...

8. இந்த பதிவு எழுதும் இப்போதுவரை எனக்கு கேபிளின் அப்பா பெயர் தெரியாது...அவரை சிதையில் வைத்து விட்டு கேபிளோடு பேசும் போதுதான் அவரை பற்றி ஒரளவுக்கு தெரியும்...மின் அடுப்பில் வைக்க கால் பக்கம் உள்ள மூங்கிலை இருபுறமும் பிடித்து நின்றவர்கள்.. நானும் முரளிகண்ணனும்... இரண்டு பேருமே வெவ்வேறு பின்புலம்.... அவரின் கடைசி வழியனுப்பதலுக்கு நாங்கள் உதவி செய்கின்றோம்..... காரணம் வலை மற்றும் நண்பர்கள்... அவவ்ளவுதான்...

8. நேரில் 50க்கு மேற்ப்பட்ட பதிவர்கள் மற்றும் வாசகர்கள் வந்தார்களே... கேபிளுக்கு,அவர்கள் போனில் பேசியோ, பின்னுட்டம் இட்டோ இருப்பவர்கள் அல்ல... அதுதான் அந்த ஒழுங்குதான்... அந்த ஒற்றுமைதான் வலைபதிவர்களின் பலம் என்பதை கேபிளாரின் தந்தையின் மரணம் உணர்த்தியது...

9. பதிவர் ரம்யா கேபிளுக்கு தன் வருத்தங்களை தெரிவிக்க சொன்னார்... தெரிவத்துவிட்டேன்...

10.எழுத்தாளர்களிடம் இருக்கும் அந்த ஈகோ... இனணய எழுத்தாளர்களிடம் அதிகம் இல்லை என்பதை இந்த செயல் மீண்டும் உறுதி செய்து உள்ளது...
பைத்தியக்காரன் நெகி்ழ்வதில் அர்த்தம் இல்லாமல் இல்லை...

அஸ்த்தி கடலில் கரைத்து கேபிளாரையும் அவர் உறவினர்களையும் காரில் ஏற்றி அனுப்பி விட்டு, கொட்டும் மழையில் குடை பிடித்த படி பெசன்ட்நகர் அறுபடை வீடு முருகன் கோவில் வாசலில் ஒரு அரைமணி நேரம்... நான், தண்டோரா,பைத்தியக்காரன்,வண்ணத்து பூச்சி,முரளிகண்ணன்,வெண்பூ, அதிபிரதாபன் போன்றவர்கள் பேசினோம்...
தண்டோராவின் இடைவெளி இல்லாத பேச்சு எல்லோருடைய மனதையும் லேசாக்கியது எனலாம்...

கடலில் குளித்த உடை ஈரத்துட்ன் வாகனத்தில் வந்து கொண்டு இருந்தேன்
கிண்டி அருகில் சட்டென வானை கிழித்து கொண்டு சென்ற விமானத்தை பார்த்ததும் மீண்டும் ஒரு முறை கேபிளாரின் அப்பா ஆன்மா சாந்தி அடைய மனதில்பிரார்த்தனை செய்து கொண்டேன்...


அன்புடன்
ஜாக்கிசேகர்

(12 ROUNDS) போலிசுக்கு தண்ணி காட்டும் வில்லன்...



பாசம் வைத்து இருக்கும் எந்த பொருளை நாம் இழந்தாலும் ஒரு வருத்தம் நெஞ்சில் குடி கொண்டபடி இருக்கும்... அது இயற்க்கையாக நம்மை விட்டு போனால் நம் மனம் தாங்காது... அதுவே பொருளாக இல்லாமல் காதலியாக இருந்து அவள் சாவுக்கு ஒரு போலிஸ் ஆபிசர் காரணம் என்றால்.....அந்த காதலி ஒரு டானுக்கு காதலியாக இருந்தாள்????

12ரவுண்ட் படத்தின் கதை இதுதான்....

Miles Jackson (Aidan Gillen) எப்பிஐயால் தேடப்பட்டு வரும் சர்வதேச குற்றவாளி... எதெச்சையாக அவனை நெருங்குகையில் அவன் அவனது காதலியோடு காரில் தப்பி சென்று கொண்டு இருக்கும் போது...Danny Fisher (John Cena) ஒரு நேர்மையான போலிஸ் அதிகாரி.. அவரும் இந்த துரத்தல் வேட்டையில் ஈடுபட ... வழக்கம் போல் எப் பி் ஐ யை ஏமாற்றி தப்பி செல்ல முயற்ச்சிக்க....Danny Fisher (John Cena)இடம் மாட்டிக்கொள்கின்றான்.. இந்த முற்றுகையில் எதிர்பாபராத விதமாக அவன் காதலி இறந்து விடுகின்றாள்.. அத ஒரு விபத்து என்றாலும்.. இவன் மட்டும் தலையிடவில்லை என்றால் தான் தப்பி இருக்கலாமே... தன் காதலியும் தன்னை விட்டு போய் இருக்க மாட்டாளே.. என்ற கோபம் .. அவனை சிறையில் அடைக்கின்றார்கள்.. சிறைக்கு போகும் முன் பிஷ்ஷர் பெயரை படுத்து விட்டு செல்கின்றான்.... ஒரு வருடத்தில் அவன் சிறையில் இருந்து தப்பிக்க... அவன் பிஷ்ஷர் மனைவியை கடத்திக்கொண்டு போய் வைத்துக்கொண்டு 12 ரவுண்ட் கேம் ஒன்றை ஸ்டார்ட் செய்து அதில் ஜெயித்தால் உன் மனைவி உயிரோடு கிடைப்பாள்.. என்று செக் வைக்கின்றான்... செக்கில்Danny Fisher (John Cena) ஜெயித்தானா? மனைவியை காப்பாற்றினானா? என்பதை வெண்திரையில்....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....

இந்த படத்தின் டைரக்டர்Renny Harlin டை ஹார்டு இரண்டாம் பாகத்தை எடுத்தவர்...

இவரின் முந்தைய படைப்புகளில் குறிப்பிட்டு சொல்ல வேண்டமாயின்... ஸ்டோலன் நடித்த கிளிப்ஹேங்கர், லாங்கிஸ் குட் நைட் போன்ற படங்களை இயக்கியவர் ..
லாங்கிஸ் குட் நைட் படத்தின் விமர்சனம் நமது தளத்தில் எழுதி இருக்கின்றேன்... கிளிப்ஹேங்கர் விரைவில் எழுதுவோம்....

Renny Harlinஒரு டைரக்டர் மட்டும் அல்ல ஒரு புரொடெக்ஷன் கம்பெனி வைத்து இருக்கி்ன்றார்... நிறைய படங்களை தயாரித்து வருபவர்..

இந்த படம் ஸ்பீட் படத்தை ஞாபகபடுத்துவதை தவிர்க்க முடியவில்லை என்றாலும்... அந்த படத்தின் சாயல் சிறிதும் இந்த படத்தில் வராமல் இருக்கு ரொம்பவே மெனக்கெட்டு இருக்கின்றார்...

டிராம் வண்டி பிரேக் இல்லாமல் வரு வது.. அதில் ஒருவன் அசந்து தூங்குவது காமெடிக்கு என்றாலும் டன் கணக்காகன பூ நம் காதுகளில்...

காதாநாயகன் ஜான் சினா தன் பாடி பில்ட் உடம்பை வைத்துக்கொண்டு நன்றாக ஒடுகின்றார் சண்டை போடுகின்றார்...

வில்லன் பணத்தை அபேஸ் செய்வது நல்ல ஐடியா...

வழக்கமான படம் கதை என்றாலும் .. சில இடங்களில் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கின்றார் இயக்குனர்...

மிக முக்கியமாக இரவு காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் உழைப்பு தெரிகின்றது..

பணம் தெருவில் கொட்டி கிடக்கும் கடைசி காட்சி ஹெலிகாப்டரில் இருந்து வைத்து இருக்கும் கடைசி ஷாட்டில் கண்டினியுட்டி சூப்பர்..

படத்தின் டிரைலர்...

படத்தின் குழுவினர் விபரம்..

directed by Renny Harlin
Produced by Becki Cross Trujillo
Mark Gordon
Renny Harlin
Mike Lake
Josh McLaughlin
Vince McMahon
Written by Daniel Kunka
Starring John Cena
Ashley Scott
Steve Harris
Gonzalo Menendez
Aidan Gillen
Brian J. White
Taylor Cole
Vincent Flood
Music by Trevor Rabin
Cinematography David Boyd
Editing by Brian Berdan
Studio WWE Studios
Distributed by 20th Century Fox
Release date(s) New Zealand:
March 26, 2009
North America:
March 27, 2009
United Kingdom:
May 29, 2009
United Arab Emirates:
April 2, 2009
Running time 108 min.
Country United States
Language English
Budget $20 million
Gross revenue $17,037,910

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

மிக ஆபத்தான சென்னை வெளிவட்ட சாலை.. காதலர்கள் ஜாக்கிரதை...

பொதுவாக சென்னையில் காதலர்கள் சந்தித்து பேச சரியான இடம் இல்லை என்பேன்...முன்பு போல் இப்போது எல்லாம் காதலர்கள் பேசுவது மட்டும் இல்லை... அடுத்த படியாக முத்தம், கழுத்துக்கு கீழே கை என்று போய் வெகு நாட்கள் ஆகிவிட்டது...


மீடியாவி்ன் ஆதிக்கம் அதிகமானாதால் இப்போது வளரும் பருவத்தினரின் மனக்கட்டமைப்பு மாறி போய் விட்டது...கடந்த பத்து வருடங்களில் எல்க்ட்ரானிக் மீடியாவின் அசுர வளர்ச்சியே இதற்கு காரணம்...

உலகமயமாக்கல் பல துறைகளில் வேரூன்ற காதல் மட்டும் என்ன பாவம் செய்தது... அது பரிமாணம் பெற்றுவிட்டது... என்ன... கலாசச்சார முகமூடியால் என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடி போய் கிடக்கின்றது... அதை கட்டுடைத்து வெளிவர நாள் நேரம் பார்க்காமல் மெல்ல மெல்ல வந்து கொண்டு இருக்கின்றது...

முன்பெல்லாம் பெண்கள் உள்ளே போடும் பிரா பட்டை வெளியே தெரிந்தாலே.. சட்டென மனம் தந்தி அடிக்கும்.. மனம் கிளர்ச்சி கொள்ளும்... சட்டென நம் தலையில் தட்டி கொண்டு ... தெரியாத பெண்ணாக இருந்தாலும் செய்கையில் நாம் உணர்த்தினால் அவள் சரி செய்து கொண்டு ஒரு நன்றி பார்வை வீசுவாள்.. இப்போது எல்லாம் என்ன சமாச்சாரம் உள்ளே என்பதை அறிவிப்பது போலான உடை சர்வசாதாரணமாகிவிட்டது...


ஆணும் இப்போது பர பரவெனமாறிவிட்டான்... காதலித்து மேட்டர் முடித்து, காதலித்து மேட்டர் முடித்து, அதே போல் பெண்களும்....ஆனால் ஒன்றை கவனிக்க வேண்டும்... இன்னும் ஒழுக்கமான காதலும், பெண்களும் ,ஆண்களும் மிக டிசன்டாக காதலி்த்தபடி இருக்கின்றார்கள்...

மனதை கட்டு படுத்த முடியாதவர்கள்.. மகாபலிபுரம் சவுக்கு தோப்பு,பூங்கா புதர், என்று மறைவிடம் நோக்கி போகின்றார்கள்...

சென்னையில் ஒரு சாலை இருக்கின்றது... சரியாக பதினெட்டு கிலோமீட்டர் நீளம்...பெரிதான வாகன போக்குவரத்து அதிகம் இல்லை...லாரிகள் மற்றும் கார்கள் மட்டும் அதிகம் பயண்படுத்தபடும் சாலை அது... ஆறு மணிக்கு மேல் அந்த சாலையில் விளக்கு இருக்காது.. வரும் வாகனங்களின் வெளிச்சம்தான்...

பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் கிண்டி விழியாக செல்லாமல்...மதுரவயல் செல்லும் அந்த சென்னையின் வெளிவட்டசாலைதான் அது...வாகனங்கள் சீறி பாய்ந்து செல்லும் டபுள் ரோடு அது...

பெருங்களத்தூரில் இருந்து...
விருகம்பாக்கம்,வளசவாக்கம் வர... நாம் எப்போதும்....தாம்பரம் வழியாக வந்து குரோம்பட்டை, பல்லாவரம்,கிண்டி , அசோக்நகர், கே கேநகர், விருகம்பாக்கம் ,வளசரவாக்கம்... வர வேண்டும்...இந்த விழியில் அதிகமான போக்குவரத்து மற்றும் சிக்னல்கள்.. டூவிலரில் வர ஒன்றரை மணிநேரம் எப்படியும் அகி விடும்... ஆனால் வளசரவாக்கத்தில் இருந்து போரூர் போய் இந்த டபுள் ரோட்டை பிடித்தால் அரை மணி நேரத்தில் பெருங்களத்தூர்....

அதனால் நான் பெருங்களத்தூர் செல்ல இந்த சாலையைதான் தேர்ந்து எடுப்பேன்... அதன் வாகன நெரிசலற்ற போக்குவரத்து... என்னை அதிகம் கவரும்...

பெருங்களத்தூரில் என் மனைவியின் அத்தை வீடு இருக்கின்றது... அங்கு இரவு உணவை முடித்து குசாலம் எல்லாம் விசாரித்து கிளம்ப கொஞ்சம் நேரம் ஆயிற்று... மணி இரவு பத்து... தாம்பரம் வழியாக சென்றால் லேட் அகும் என்பதால்... நான் மதுரவயல் பைபாசை தேர்ந்து எடுத்தேன்... அந்த சாலை பற்றியும் அதன் தனிமையும் எனக்கு தெரியும் இருந்தாலும்.. எதாவது ஒரு லாரிக்கு முன்னால் அதன் வெளிச்சத்தில்....சென்று கொண்டே இருக்கலாம் என்று நினைத்து போக... அந்த நேரத்தில் எந்த லாரியும் வரவில்லை... சரி என நானும் என் மனைவியும் பைக்கில் வேகம் எடுத்து செல்கையில்....ரிவர்யூ மீரரில் அந்த இரண்டு தடிப்பயல்களை பார்த்தேன்...ரோட்டில் வாகனத்தில் அளப்பறை செய்த கொண்டு வந்தார்கள்... நல்ல போதை என்பது தெரிந்து போயிற்று.. நான் எனது வண்டியை வேகம் எடுக்க அவர்களும் வேகம் எடுத்து எங்கள் வண்டி அருகில் மோதுவது போலும், நிறுத்துமாறும் செய்கை செய்ய செய்து கொண்டு இருக்க... ஒரு வேனும் ஒரு லாரியும் முன் சென்று கொண்டு இருக்க நான் வேகம் எடுத்து அதன் முன் சென்று விட அதன் பிறகு அவர்களை கானோம்... என் மனைவி கொஞ்சம் பயந்து விட்டாள்....

அதிலிருந்து இரவு பத்துக்கு மேல் இரவு பயணத்தை அந்த சாலையில் தவிர்த்துவிட்டோம்...இரவு வருவதாய் இருந்தால் தாம்பரம் வழியாகவே வருகின்றோம்.. ஆனால் மாலையில் அந்தி சாயும் வேலையில் அந்த பக்கம் எப்போதாவது போகும் போது... இப்போதெல்லாம் பின்னால் உட்கார்ந்து இருக்கும் பெண் முழுதாய் வண்டி ஓட்டும காதலனைஅனைத்த படி மெதுவாய் செல்கின்றார்கள்... அந்த வாகனம் 20 அல்லது 30 கீலோமீட்டா வேகத்தில்தான் செல்கின்றது. அதற்கு நடந்தே போய் விடலாம்...

அந்த சாலையின் பிரச்சனைகள்....

1.பதினெட்டு கிலோமீட்டருக்கு இரவில் விளக்கு இருக்காது...

2. காதல் போதையில் பெட்ரோல் போட மறந்து விட்டால்.... நடராஜா சர்விஸ்தான்...

3.தாம்பரம் அருகில் ஒரு பெட்ரோல் பங்கு உள்ளது.

4. பஞ்சர் ஆனால் எந்த இடத்திலும் கடை கிடையாது..

5. இவ்வளவு ஏன் அந்த சாலையில் ஒரு டீக்கடை கூட கிடையாது....
6.மழைவந்தால் எங்கேயும் ஒதுங்க முடியாது...

இப்படி பட்ட சாலையில் சமீபகாலமாக இரு சக்கர வாகனத்தில் பல காதலர்களை இப்போது பார்க்கின்றேன்... பொதுவாக புறநகர் கல்லூரி மாணவ மாணவிகளை பார்க்கின்றேன்...

போலிஸ் வாகனம் எப்போதாவது அந்த வழியாக கிராஸ் ஆகின்றது.... அந்த யாருமற்ற தனிமை...பல இளவட்டங்கள் தண்ணி அடித்து ஆட்டம் போட அந்த வழி ஏதுவாக இருக்கின்றது..... அந்த சாலைகளை இப்போது பல குடும்பத்தினர் பயண்படு்த்த ஆரம்பித்து விட்டார்கள்... வாகனங்கள் விரைவாய் செல்லும் சாலை இது....

இருப்பினும் காதலர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்வேன்... அந்த வழி வேண்டாம்...பாதுகாப்பு ரொம்ப குறைவாக இருக்கின்றது...குடும்பஸ்தர்களுக்கு ஒரு எச்சரிக்கை... குழந்தைகள்.. மனைவியுடன் அந்த வழியே இரவில் செல்ல வேண்டுமாயின்.. அந்த பாதையை தவிர்த்து விட்டு ஜன நடமாட்டம் அதிகம் உள்ள பாதையை தேர்ந்து எடுங்கள்.. வண்டி பஞ்சர் ஆனால் அவ்வளவுதான்...


மூன்று மாதங்களுக்கு முன் கூட பெருங்களத்தூரில் இருந்து அந்த வழியாக இரவு7 மணிக்கு அந்த சாலையில் நான் வந்து கொண்டு இருந்த போது.. திருநீர்மலை அருகில் அந்த கைனட்டிக்ஹோண்டாவை பார்த்தேன்...

அந்த பெண் வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருந்தாள்... பின்னால் அவளை கட்டி பிடித்தபடி அவன் உட்கார்ந்து இருந்தான்...எனது வாகனத்தின் வெளிச்சம் அவனின் மேல் பட்டும் அந்த பெண் மீது இழைந்து கொண்டு இருப்பதை அவன் நிறுத்தவில்லை... அவர்களை கடக்கையில் நான் பார்த்தேன்... அவள்தலை அநியாயத்திற்க்கு கலைந்து போய் இருந்தது... பின்னால் உட்கார்ந்து இருந்தவனின்.. ஒரு கை அந்த பெண்ணின் இடு்ப்பிலும்.. ஒரு கை சுடிதார்.......................................................... இருந்தது... எப்படியும் அந்த பெண் அவள் வீட்டில்... ஸ்பெஷல் கிளாஸ் என்று சொல்லிவிட்டு வந்து இருக்கும்...ஸ்ஸஸஸஸ் பெஷல் கிளாஸ்தான் அந்த பெண் அட்டென்ட் செய்து கொண்டு இருந்தது... பட் எதாவது ஒரு தண்ணி அடிச்ச குருப் பார்த்தா... அந்த பெண்ணை தேவிடியா ரேஞ்சுக்கு...சுத்தி வளைச்சி முழு துணியை அவுக்க வச்சிடுவானுங்க...

தயவு செய்து பெண்கள் காதல் போதையில் காதலருடன்.. தனிமையான இடம் செல்வதை தவிருங்கள்...

நான் அவர்களுக்கு இந்த சாலை பற்றி எச்சரிக்கலாம் என்று நினைத்தேன்... இந்த நேரத்தில் யார் சொன்னாலும் அவர்கள் காதில் வாங்கி கொள்ளமாட்டார்கள் என்பதாலும்... நம்மை கரடி ரேஞ்சுக்கு நினைப்பார்கள் என்பதாலும் நான் வந்து விட்டேன்...

அந்த பையன் எப்படியாவது எதையாவது செய்து விட்டு தூங்கினாலும்... அந்த பெண் நிச்சயம் அந்த இரவில் தூங்கி இருக்கமாட்டாள் என்பது மட்டும் நிச்சயம்...

(புகைபடங்கள்... ஜாக்கிசேகர்)

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

பப்பரபப்பே என பல் இளிக்கும் சென்னை சாலைகள்...


சென்னையின் உள்கட்டமைப்பை இப்போது யாராவது ஒரு வெளிநாட்டவர் வந்து பார்த்து இருந்தால் தூ என்று காரி துப்பி இருப்பார்.... அந்தளவுக்கு படு கேவலமாக இருக்கின்றது....

எல்லா இடத்திலும் தோண்டி வைத்து அதில் ஒப்புக்கு ஒரு காண்டிராக்டர் மண் போட்டு முடி வைக்க.... அந்த இடங்கள் எல்லாம் மழையில் சென்னைவாசிகளுக்கு மரணக்குழிகளாயின...

எவன் சொன்னான் என்று தெரியவில்லை சென்னையில் தங்கம் கிடைக்கின்றது என்று எப்போது பார்த்தாலும் தொண்டி எழவெடுத்துக்கொண்டே இருக்கின்றார்கள்...

மழையால் சேதமாகிவிட்ட சாலைகள் என்று சொல்கின்றார்கள்... அப்படி சொல்ல வெட்கமாக இல்லை... ஒரு மூன்றுநாள் மழைக்கு சாலைகள் சேதமாகிவிடுமா?... அப்போது இதற்கு முன் சாலைகள் ஒழுங்காக இருந்தனவா?... அதற்கு முன்னும் அதே லட்சனம்தான்... இப்போது மழையால் இன்னும் கொடுமை...

இரண்டு சக்கரவாகனத்தில் பயணிக்கும் போது எந்த இடத்தில் பள்ளம் இருக்குமோ? என்று வாகனம் ஓட்டி செல்கையில் ஒரு வீத பீதியுடன்தான் செல்ல வேண்டும்....


வளசரவாக்கம் கேசவர்த்தினி பஸ் நிறுத்தம் அருகே... நடு ரோட்டில் ஒரு பெரிய பள்ளம்... வாகனத்தில் வேகமாக தண்ணீரை கிழித்து வந்தவர்கள் எல்லாம்...ஓ பன்னீர் செல்வம் போல் பொட்டிபாம்பாய் மாறி போனது பார்க்க கண் கொள்ளா காட்சிகள்.. அதே வேகத்துடன் வந்து மட்டென்று சத்தம் கேட்டு நிலை தடுமாறி முகம் வெளிறி மரணபயத்துடன் பல பொதுஜனங்கள், அந்த இடம் விட்டு நகர்ந்தார்கள்...

அது எப்படித்தான் சாலைக்கு நடுலே எரிக்கல் விழுந்தது போல் குழி விழும் என்று தெரியவில்லை...முதலில் சின்னதாக உருவாகும் பள்ளம் அதன் பிறகு இரண்டாம் நாள் மழைக்கு அரை அடி பள்ளத்திற்க்கு மாறிப்போனது...

வேளச்சேரியில் இருந்து தரமனி செல்லும் சாலை.. அப்படி ஒரு மோசம் எப்படித்தான் இந்த ஐடி வாலாலக்கள் அதில் காரிலும் பைக்கிலும் சென்று வருகின்றார்களோ? தெரியவில்லை

ரொம்பவும் கொடுமையானவர்கள்.. மவுன்ட் ரயில்வே ஸ்டேசனில் இருந்து வாணுவம்பேட்டை வழியாக, மடிப்பாக்கம், கீ்ழ் கட்டளை செல்பவர்கள்தான்... எவனாவது அரசாங்கத்தில் இருந்து வந்து மழையால் சாலை பழுதடைந்தது என்று சொன்னால் அவனை ஏறி மிதித்து விடுங்கள்...

ஏனென்னறால் மழையினால் மட்டும் அந்த சாலைகள் பழுதடையவில்லை... கடந்த பல வருடங்களாக அந்த சாலைகள் அப்படியேதான் இருக்கின்றது....

சரி மழையில ரோடு வீணாயிடுச்சி... நாங்க என்ன பண்ண முடியம் என்று நெடு்ஞ்சலைதுறை ஊழியர்கள் கேட்ககின்றார்களா?.. நியாயமான கேள்விதான்... ஆனால் பள்ளம் இங்கே இருக்கின்றது என்று அறி்விக்க எந்த இடத்திலும் அறிவிப்பு பலகை சென்னை மற்றும் தமிழகத்தில் எங்கும் இல்லையே... அப்ப நீங்க எல்லாம் எங்க போயிடறிங்க... மாதா கோயில்ல மணி ஆட்டவா?... வெயில்லதான் வேலை செய்வோம்.. மழையில நாங்க வேலை செய்யமா கையில புடிச்சிகிட்டு... அதான் செல்போனை நிப்போம்ன்னு சொன்னா என்ன அர்த்தம்?...

ஒரு சாலையில் பள்ளம் இருக்கின்றது என்று பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்வது நெடுஞ்சலைதுறையின் வேலை... ஆனால் தமிழகத்தை பொறுத்த மட்டில்... பொதுமக்கள் அந்த பள்ளத்தில் விழுந்து எழுந்து பக்கத்தில் எதாவது ஒரு மரத்தின் கிளையை ஒடித்து அதில் நட்டு வைத்து விட்டு இனி வரும் வாகன ஓட்டிகளுக்கு அறிவிப்பு செய்து விட்டு செல்வார்கள்... “எச்சரிக்கை இங்கே பெரிய பள்ளம் இருக்கின்றது” என்று... அந்த மரக்கிளைகள் உணர்த்தும்...


இந்த மழையில் சென்னை முழுவதும் சாலைகளின் நடுவே மரம் நடு விழாவை பொது மக்களே செய்தார்கள்.... என்ன வழக்கமாக சாலை ஓரத்தில் மரம் நடுவார்கள்..இப்போது ரோட்டுக்கு நடுவே....என்ன ஒரு கொடுமை என்றால் மரம் நட்டு தண்ணீர் ஊற்ற வில்லை... அதான் ஊரே தண்ணியில மெதக்குதே...


மழைன்னா சட்டென ஆட்கள் கோதாவில் இறங்க வேண்டும்... பள்ளம் உள்ள இடத்தில் அறிவிப்பு பலகைகள் வைத்து பொது மக்களை எச்சரிக்க வேண்டும்... அந்த பழக்கமே நம்மிடத்தில் இல்லை,...

எங்கள் ஊர் கடலூரில் இன்னும் கூட சாலைகள் சரிசெய்யபடவில்லை.... என் கல்யாணத்துக்கு வந்தவர்கள்... என் ஊர் சாலை லட்சனத்தை பார்த்து முகம் சுளித்து விட்டு போனார்கள்.. திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆயிற்று இன்னும் எவன்...........................ன்னு தெரியலை....

போர்கால நடவடிக்கை என்று ஒரு வார்த்தையை அடிக்கடி தினத்தந்தியில் பார்த்து இருக்கலாம்... போர்ன்னு சொன்னா ... பொதுவா தமி்ழ்நாட்டுகாரனக்கு என்னன்னு தெரியும்?.... அந்த வலி , இடப்பெயர்வு,எதுவும் அவனுக்கு தெரியாது...

போர்கால நடவடிக்கை என்றால்... முடியாது என்ற வார்த்தையை சொல்லவே கூடாது... கட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடும் போது அதில் மிதவை பாலம் அமைத்து... பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்க்கு அழைத்து செல்ல வேண்டும்...போர்நடக்கும் இடத்திற்க்கு மருந்து மற்றும் உணவுபொருட்கள் எந்த தடை வந்தாலும் எடுத்து செல்ல வேண்டும்.. இல்லையென்றால் போரில் தோற்க்க வேண்டி வரும்...

அதாவது விரைவாய் செயலாற்றுவதற்க்கு போர்கால நடவடிக்கை என்று சொல்லுவார்கள்... ஆனால் தமிழகத்தில் அந்த வார்த்தையை எல்லா இடத்திலும் சர்வசாதாரணமாக பயண்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்...
இன்னும் கொஞ்சம்நாளில் போர்கால நடவடிக்கையில் இலவச டிவி கொடுப்போம் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்...

மழை முடிந்து நேற்றுதான் எல்லா இடங்களிலும்... பள்ளங்களில் மண்ணையும் கல்லையும் கொட்டிவிட்டு போனார்கள் அந்த புண்ணியவான்கள்....


நெடுஞ்சாலை துறை மற்றும் உள்ளாட்சி ஊழியர்களுக்கு,மழையில் களப்பணி ஆற்றாதவர்களுக்கு? எதற்கு போனஸ் லொட்டு லொசுக்கு எல்லாம்??? ஆனால் இதே கொட்டும் மழையில் களப்பணி ஆற்றியவர்களை நான் பார்த்தேன்... அந்த ஊழியர்களுக்கு என் நன்றிகள்..

ஏன் இங்கு சாலை பராமாரிப்பு என்பதே இல்லாமல் போய் விட்டது... அப்படியே பராமரித்தாலும் எல்லா வற்றிலும் லஞ்சபேய் தலைவிரித்து ஆடி...பொதுமக்கள் உயிரை எடுக்கின்றது..


நல்ல சாலைகள் மற்றும் குடிக்க குடிநீர் இதுதானே... ஒரு அரசிடம் பொதுமக்கள் வேண்டுவது..... அனால் இதை எந்த அரசும் சரியாய் செயல்ப டுத்தவில்லை என்பதுதான் உண்மை...

சரி நாமதான் இப்படி கஷ்டபடறோம் தலைவர்கள் வீட்டு பக்கம் எல்லாம் எப்படி இருக்கின்றது என்று பார்க்க போனேன்... கோபாலபுரத்து பக்கமும், போஸ்கார்டன் பக்கம் போய் பார்த்தேன் சாலைகளில் தண்ணீர் சிறிதளவுக்கு தேங்கி இருந்தததே தவிர.... சாலைகளில் பள்ளம் எங்கேயும் இல்லை....மிக நேர்த்தியாக இருந்தது...


(குறிப்பு) படங்கள் நெட்டில் சுட்டது.....

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி...

சாண்ட்விச் அன்டு நான்வெஜ் 18+ (11/11/2009)

ஆல்பம்....

பதிவர் அண்புடன் மணிகண்டன் வேண்டு கோளுக்கு இணங்க... இந்த கலக்கல் சாண்ட்விச்....


மெரினா கடற்கரை கிரிக்கெட்....
வழக்கம் போல் மெரினாவில் கிரிக்கெட் விளையாட தடையை ரொம்பவும் மும்முரமாக அமுல் படுத்தி உள்ளனர்...அவர்கள் கிரிக்கெட் விளையாடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை... ஆனால் அந்த சர்விஸ் லேனில் வாகனம் ஓட்டி செல்கையில் எந்த பக்கத்தில் இருந்து பந்து வந்து உதை கொடுக்கும் என்று தெரியாமல் பயந்தே செல்ல வேண்டும் ...

ஒரு பொட்டிக்கடை அம்மாவின் கண் கீழே பெரிய வீக்கம் என்ன வென்று கேட்க கிரிக்கெட் கார்க் பால் பட்டுவிட்டதாகவும் கொஞ்சம் மேலே பட்டு இருந்தால் கண் போய் இருக்கும் என்று சொல்லி கண்ணீர் விட்டார்... அதற்கு என் மனைவியே சாட்சி... அந்த அண்ணாடம் காட்சி என்ன பாவம் செய்தார்....

பலதரப்ட்ட இடங்களில் இருந்து மாணவர்கள் வந்து அந்த மூன்று கிலோமீட்டர் ரோட்டில் விளையாடுகின்றனர்... எந்த தெரு, எந்த நகர் எதுவும் தெரியாது...ஒரு சிலர் டென்னிஸ் பாலில் விளையாடுகின்றனர்... அது கூட பிரச்சனை இல்லை.. ஆனால் கார்க் பால் ரொம்பவும் ஆபத்தானது... அத்த பாலில் உதைவாங்கியவர்களுக்கே அது தெரியும்... ஒரு திரில்லுக்காக ஒரு சில கிரிக்கெட் குழுக்கள் இந்த பாலை மெரினாவில் பயண்படுத்துகி்ன்றார்கள்...பல்லாயிரக்ணக்கான மக்கள் ஒன்று கூடும் இடத்தில் இந்த கார்க் பால் பிரச்சனைதான்... எந்த திசையில் இருந்து பால் உதை விழும் என்று பயந்து உட்கார்ந்து இருக்கின்றேன்....

எல்லாம் ஓக்கே அதற்க்காக மாணவர்கள் விளையாட வருவதை தடுக்க.... ஏதோ திவிரவாதிகளை பிடிக்கும் அளவுக்கு அல்லது மிரட்டும் அளவுக்கு போலிசை குவித்தது கொஞ்சம் ஓவர் என்று சொல்லலாம்...

ரிலையன்ஸ்ஆபர்...
ரிலையன்ஸ் பிரஷ்ல் ஒரு அபர் போட்டு இருக்கின்றார்கள்... அதாவது பிலிப்ஸ் 29இன்ச் டிவி மற்றும் டிவிடி பிளேயர் மற்றும் 5,1 மல்டி மீடியா ஸ்பீக்கர் எல்லாம் சேர்த்து ரூ...14990க்கு கொடுக்கின்றார்கள்.... நல்ல சகாய விலை வாங்குபவர்கள் வாங்கலாம்....

ஊட்டி நிலசரிவு...40 பேர் பலி...
சட்டென்று அந்த பெருந்துயரம் நிகழ்ந்து விட்டது... ஊட்டியில் வரலாறுகாணாத மழை பெய்து கொண்டு இருக்கின்றது... எல்லா இடத்திலும் 30 செமீட்டருக்கு மேல் பெய்து கொண்டு இருக்கின்றது.... மரங்கள் அழித்து காண்கிரிட் காடுகளாக மாறும் போது இது போன்ற நிலச்சரிவுகள் தொடர்கதையாகும் வாய்புகள் உள்ளன...

யாரும் மண்ணின் தன்மை ... அது இருக்கும் இடத்தின் புவியியல் பிரச்சனைகள் ... என்று யாரும் அலசி பார்த்து வீடுகளை கட்டுவதில்லை... அரசும் அதனை முறைபடுத்துவது இல்லை.... இப்போது கண் இமைக்கும் நேரத்தில் 40பேர் பலி... இது தொடர்கதையாகமல் இருக்க இனிமேலாவது அரசு விழித்து கொள்ள வேண்டும்...

மிக்சர்...
அந்த வீட்டு ஓனர் நாதாரியை உதைச்சா என்ன?

எனது நண்பர் கேசவர்த்தினி அருகில் ஒரு வீட்டில் வசித்து வருகின்றார்... வீட்டில் கேபி்ள் டிவியில் படம் பார்த்து கொண்டு இருந்தாலும்.. விரும்பும் சேனலை பார்க்க முடியவில்லை என்பதால்... ஏர்டெல் டிஷ் டிவியை வாங்கி வீட்டின் மீது டிஷ் ஆண்டெனாவை வைக்கும் போது... என் வீட்டில் டிஷ் வைக்க கூடாது... அதே போல் இன்னும் ஒரு வாரத்தில் இந்த வீட்டில் வரும் கேபிள் ஒயர்களையும் அறுத்து எரிந்து விடுவேன்... டிவி பார்த்து எல்லோரும் கெட்டு போய் கொண்டு இருக்கின்றார்கள் என்று விளக்க உரை வேறு அந்த ஹவுஸ் ஓனர் நாதாரி... சொற்பொழிவு ஆற்றிக்கொண்டு இருக்கின்றான்....
என்ன செய்வது சிலது இப்படியும் உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.. இப்போது நண்பர் திரிசங்கு சொர்க்க நிலையில் இருக்கின்றார்.. டிஷ் விற்பனையை திரும்ப பெற முடியாது என்று ஏர்டெல் டீலர் கை விரிக்க... இப்போது நண்பர் ஏர்டெல் டீலராக மாறி ...
யாருக்காவது ஏர்டெல் டிஷ்டிவி வேனுமா?.. இது சன் டிடிஎச்சை விட நல்லா இருக்கும் என்று எல்லோரிடத்திலும் செல்லில் பேசி வருகின்றார்...

இன்னொறு நாதாரி...

மனைவியை ஆபிசில் விட்டு விட்டு திரும்புகின்றேன்... லோனில் கார் வாங்கி இருக்கும் ஒரு ஜென்மம்.. காருக்குள்ளே உட்கார்ந்து கொண்டு அது வீட்டு பெட்ரூம் அட்டாச்சுடு பாத்ரூமை திறப்பது போல் திறக்க... நான் எனது டூவிலரில் இடிக்க என் கைகளில் காயம் வராத வரையில் நல்ல அடி...கூடவே என் வாகன இண்டி்கேட்டர்கள் சரவணபவன் ஹோட்டல் அப்பளம் போல் நொறுங்கின..அந்த ஆள் கதவு திறக்கும் போது நான் வந்ததாக அந்த ஆள் சொன்ன போது... நான் ஒன்றே ஒன்று சொன்னேன்.....கதவு திறக்கும் முன் பின்னாடி என்ன வண்டி வருகின்றது என்று அந்த நாதாரி பார்த்து திறந்து இருக்க வேண்டும்... ஆனால் திறக்க வில்லை..


நான் அந்த நாதாரியிடம் சொன்னேன்....

1. நான் சண்டை போடும் மூடில் இல்லை...

2.பக்கத்தில் ஏதாவது வண்டி வருதான்னு பார்த்து கதவை திறக்க வேண்டியது நீ...

3, தப்பு உன் மேல...

4. கண்டிப்பா லோன்ல சமீபத்துல கார் வாங்கினவனதான் நீ இருப்ப....

5.இதுக்கு மேல நீ ஒரு வார்த்தை பேசினாலும்.. டீ கடையில டீ குடிக்கற உன் ஆபிஸ் பொண்ணுங்க எதிரில் நீ கேவலமா என் கிட்ட உதை வாங்குவ... ஆனா தப்பு நான் செஞ்சு இருந்தா... கண்டிப்பா.. இந்நேரம் உன்கிட்ட சாரிகேட்டு இருப்பேன்... உன் பணக்கார திமிரை போல் நான் காட்டி இருக்க மாட்டேன் என்றேன்...

6. ஒழுங்கா சாரி சொல்லிட்டு போயிடு... எனக்கு அது போதும் என்றேன்... என் வலியை பொறுத்த படி...

அவனும் அதே போல் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை சாரி சொன்னான்....


விஷுவல் டேஸ்ட் நான் எடுத்ததில் பிடித்தது....




நான்வெஜ்....

ஒருத்தன் எப்போதும் கட்டிலில் விளக்கு அனைத்தும்தான்.. எந்த வேலையும் செய்வான்.. அவன் மனைவி காரணம் தெரியாமல் நகத்தை கடித்து கொண்டு இருந்தாள்... பல வருடங்களுக்கு பின் அவளுக்கே ஒரு சலிப்பு வந்து.. இன்னைக்கு எப்படியும்... மேட்டர் நடக்கும் போது லைட்ட போட்டுடனும் என்று நினைத்து கொண்டாள்... அதே போல் மேட்டர் நடக்கும் போது லைட்ட போட்டு விட்டாள்....

தலைவர் ஒரு ரப்பர் சமாச்சாரத்தை கையில் வைத்து கொண்டு அசடு வழிந்தான்... உனக்கு வெட்கமா இல்லை என்று அவள் கேட்டாள்.. இத்தனை வருசமா இதை வச்சிதான் உன்கதையை ஓட்டினியா என்றாள்... அதற்கு கணவன் நான் அப்படிதான்... உன் கிட்ட ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்... நமக்கு 3புள்ளைங்க எப்படி பொறந்துச்சு???????????


அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner