கமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது ?




தமிழ்நாட்டில்  அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...
எல்லோரையும் போல அவர் நடித்து   விட்டு போய் இருந்தால் இந்த பிரச்சனையே இருக்காது...  அவர்  கற்ற  திரை அனுபவம் அப்படி இருக்க விடுவதில்லை....  


சரி கமலை விட்டு தள்ளுங்கள்... அவர் கோர்ட்டுக்கும், டிஸ்ட்டிக் கலெக்டர்கிட்டேயும் கெஞ்சிக்கிட்டு அலைபாயட்டும்..  சரி நமக்கு யாரெல்லாம் பிடிக்காது...


எனக்கு எல்லரையும் பிடிக்கும்.... எனக்கு இந்த உலகத்துல பிடிக்காதவங்களே கிடையாது... சார் நான் அப்படி பட்ட ஆள் எல்லாம் இல்லை.. அக்மார்க் சுத்தம்... நான் எல்லாரையும்  நேசிப்பவன்... அப்படியா சரி.. டாட்டா பை பை ... நண்பர்களே இந்த பதிவு  அந்த மாதிரி ரொம்ப நல்லவங்கன்னு வாழ்நாள் முழுக்க கடைசி வரை பொய் சொல்லிக்கினே இருக்ககறாங்க பாருங்க அவுங்களுக்கு இந்த பதிவு இல்லை...


கொஞ்சம் உளவியல் ரீதியா அலசுவோம்... பொது புத்தியில பேசுவோம்... நமக்கு யாரெல்லாம் பிடிக்காது...


 சின்ன  வயசுல.... நமக்கு முக்கியத்துவம் தராம நம்ம தம்பியோ அல்லது தங்கச்சி பாப்பாவையோ அம்மா கொஞ்சினா  தூக்கி வச்சிக்கிட்டா, நமக்கு அம்மாவை  சுத்தமா புடிக்காது...


நமக்கு வாங்கி கொடுத்த பொம்மையை தங்கச்சி எடுத்து விளையாட கொடுத்த அப்பனை  நமக்கு பிடிக்காது...

வாங்கி வந்த அல்வாவை  நம்ம எதிர்க்கவே சின்ன குழந்தைதானேன்னு  நம்ம தம்பிக்கு  அதிகமா கொடுத்த தாத்தா பாட்டியை  நமக்கு பிடிக்கறதில்லை...


நமக்கு  சொந்தக்கார புள்ளைங்க படிச்ச பழைய புஸ்தகம்.. ஆனா தங்கச்சிக்கு புது புத்தகம் நோட்டு பென்சில் எப்படி  பிடிக்கும்? காண்டாயிட மாட்டோம்...?


 பள்ளியில் முன் ஸ்மார்ட்டா எல்லா வேள்விக்கு ஆன்சர்  சொல்லற முன் பெஞ்சு படிப்பு கோவிந்தன்களை நம்ம யாருக்கும் சுத்தமா பிடிக்காது...

அதே பசங்க நல்லா படிக்கறாங்கன்னு அவுங்க கிட்ட போய் பல் இளிச்சி பேசற பொண்ணுங்களையும் நமக்கு  பிடிக்காது....


கிளாஸ்ல  நல்லா படிக்கற பசங்களையும் நமக்கு  பிடிக்கவே பிடிக்காது...காரணம் நமக்கு படிப்பு சுட்டு போட்டாலும் வராது... அதனால படிக்கறவனை  கண்டா நமக்கு ஆகவே ஆகாது...


சரி நமக்கு யாரேல்லாம் புடிக்கும் நம்மல மாதிரியே லாஸ்ட் பெஞ்சு பசங்களை நமக்கு பிடிக்கும் இல்லையா? காரணம் அவங்க நம்மளை போல  மக்கா இருக்காங்க,... நம்ம போல வே எபயில் ஆகறாங்க... அதனால அவுங்களை ரொம்ப பிடிக்கும் ஆனா நம் எஜ் குருப், முன் பெஞ்சு பசங்க மட்டும் நல்லா படிச்சா நல்லா  படிக்கறவனை எப்படி பிடிக்கும்..?



தமிழே ததிகனதோம் போட்டுக்கிட்டு இருக்கும் போது... நம்ம கூடவே படிச்ச புள்ளை யாராவது ஒருத்தன்  இந்தி பேசினா அவனை  எப்படி பார்ப்போம்... ஓத்தா நம்ம கூடத்தான் இந்த எருமையும் படிச்சது... எங்க இருந்து கத்துக்கிட்டான்? எப்படி  பேசுறான்?  ஒரிஜினில் இந்திக்காரன்  மாதிரியே பேசறானே? எப்படி?   மொழியை  கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை விட பொறாமைதான் மேலோங்கி இருக்கும்...



 அதே போல நம்ம கூட படிச்ச பொண்ணு திடிர்ன்னு அவ மட்டும் இங்கிலிஷ்ல  பொளந்து கட்டினா எப்படி  இருக்கும் கடுப்பாயிடும்.. நாம என்ன செய்வோம் பேச வக்கில்லாட்டாலும் , கத்துக்க தில் இல்லாட்டாலும்  செமையா அலட்டுறாடா என்று சொல்லி நக்கல்  விடுவோம்... அவ கேரக்டரை அசாசினேஷன் பண்ணுவோம்...   


நேத்து டீயூஷன்ல கரண்ட் போயிடுச்சி...மச்சி  இங்கிலிஷ் பீட்டர் அனு  இல்லை... சட்டுன்னு  அவ மாரை  தடுவுனேன்.... அமைதியா இருக்கா  மச்சி..? எந்த எதிர்ப்பு இல்லை...எனக்கு தெரிஞ்சி மடங்கிடும்ன்னு பட்சி  சொல்லுது என்பான்... ஆனா அவ இங்கிலிஷ் கத்துக்கனும்ன்னு ரெண்டு வருஷம் இங்கிலிஷ் பேப்பர் வரிக்கு வரி படிச்சதையும் இப்ப ஸ்போகன் இங்கிலிஷ்க்கு சரளமா பேச டிரை பண்ணறதையும், நக்கல் விட்டவர்கள்  அந்த பெண்ணின் பக்கம்  யோசிக்க வாய்ப்பே இல்லை...



So , till now  I tell all true factors about why the most of people hate the indlegent person -?

சரி இப்படி எழுதிக்கிட்டு வரும் போதே இங்கிலிபீச்ல இரண்டு வார்த்தை சொல்லிட்டேன் இல்லை... இப்ப என்னை விட நல்லா படிச்சவன்  என்ன நினைப்பான்.... ? பத்தாவதுல 277 மார்க்கு எடுத்த பொறம் போக்கு இது... இதுக்கு  எதுக்கு இந்த அலட்டல்? இதுல கிராமர் மிஸ்ட்டேக் வேற , எஸ் மிஸ்சாயிடுச்சி.. என்று ஏதாவது குற்றம் கண்டு பிடிக்கலாம்...
எனக்கே இந்த நிலைமைன்னா கமலை யோசிச்சி பாருங்க.....


மாட்டை மேச்சோமோ கோலைப்போட்டோமான்னு கமல் போய்  இருந்தா எந்த பிரச்சனையும் இல்லை...மாடு வெயிட், எத்தனை லிட்டர் பால் கரக்கும், மாட்டு மேல ஓட்டிக்கிட்டு இருக்கற  உனியை எப்படி வலிக்காம எடுக்கறது, மாட்டை எப்படி குளிப்பாட்டறது... பிரசவகாலத்துல எப்படி பார்த்துக்கனும்ன்னு பேசினா தப்பு... சில நேரம் அப்படி  பேசினது சொற்குற்றம் பொருள் குற்றம் இருந்து இருக்கலாம் ஆனா பேசவே கூடாதுன்னு சொன்னா? எப்படி ?

 அடிப்படையா  என்னை போல லாஸ்ட் பெஞ்சு டைப் பசங்க எல்லாருக்குமே..அந்த ஆளு மேல கோவம்  இருக்கும் .... அந்த ஆளு எதுக்கு பாடனும்... அதுவும் அட்சர சுத்தமா.. எதுக்கு பாடனும்... அப்புறம் டைரக்ஷ்ன் எதுக்கு பண்ண்ணும்..? அவ்வளவு பெரிய அப்பாடக்கரா நீ...
  உன் படம் வெளியே வரட்டும்  நான் கிழி கிழி ன்னு  கிழிக்கறேன்...50 வருஷம் நீ சினிமாவுல இருந்தா பெரிய அப்பாடக்கரா?  என்று கருவிக்கொள்வார்கள்.

தமிழ் சினிமா போல கேடுகெட்ட உலகம் வேற எங்கேயும்  இல்லை....   தமிழ் சினிமாக்காரன் எந்த படத்தையும் நல்ல படம்ன்னு சொல்லவே மாட்டான்.. ஏதாவது நொட்டை சொல்லிக்கிட்டே இருக்கனும்... அப்பதான் அவனுக்கு திருப்தி... படம் பார்த்துட்டு வெளியே  வந்ததுமே படம் நல்லா இருந்தாலும் படம் ஊத்திக்கிச்சின்னு   சொல்லறதுல அவ்வளவு  சந்தோஷம்...

 இந்த வார விகடன்ல சினிமா வாய்ப்பு பத்தி ராஜுமுருகன்  வட்டியும் முதலும்  தொடர்ல ரொம்ப அழகா எழுதி இருந்தார்... இன்பேக்ட் நானே ஒரு படத்தை பார்க்காமலே அப்படி சொல்லி அதன் பிறகு படம் பார்த்த போது நான் சொன்னது கரேக்ட் அப்படின்னாலும், பார்க்காமலே  அப்படி சொன்னதில் எனக்கே வருத்தம்தான்...



பொதுவா மனிதர்களுடைய பொது புத்தி நம்மள போலவே இருக்கனும் .... அப்படியே குழச்சி போட்டா சானி போல அப்படியே இருக்கனும் நினைப்பதுதான்....கொஞ்சம்  வித்தியாசமா  யோசிச்சாலும்,  கொஞ்சம் வித்யாசமா  செஞ்சாலும் வடிவேலு கணக்கா மாறிடுவாங்க..

  எப்படின்னா என்ன???? ஒரு படத்துல நானே சிந்திச்சேன்னு கோவை சரளா சொல்ல பளார்ன்னு ஒரு அறை விடுவார்...ஒன்னும் ரெண்டும்   மூனு...  அது பள்ளிக்கூடத்துக் கணக்கு ஆனா ஒன்னும்  ரெண்டும்  நாளு... இது புருசன்காரன் கணக்கு.....  இப்படியே பாலோ செஞ்சா என் பொண்டாட்டியும் பத்தினின்னு கண்ணகி  சிலைக்கு பக்கத்துல உனக்கு ஒரு சிலை வைப்பேன். த்ப்பா  சிந்திச்சா கண்ணம்மா பேட்டையில சமாதி கட்டிடுவேன்னு  சொல்லுவார்...


சரியா ஆன்சர் சொன்ன கோவை சரளாவை வடிவேலு  அடிச்சி வலுக்கட்டாயமா சொல்ல வைப்பார்... உதை வாங்கினது தெரியாம கோவை சரளா போல சிரிச்சிக்கிட்டே போனா  பிரச்சனை இல்லை... அதே போல  நிறைய பேர் பத்தினியாக முயற்சி செய்து நமக்கு ஏன் பொல்லாப்பு என்று  அமைதியாக சென்று விடுகின்றார்கள்.. இப்படித்தான் நம்மில் பலர் வித்யாசமாக செயல்படும் நபர்களை வடிவேலு போல அடித்து பெண்டு நிமிர்த்த வேண்டும் என்று ஆசைக்கொள்கின்றோம்... அதில் கமலும்  அடிக்கடி பாதிக்கப்பட்டு இருக்கின்றார்...புருசன்காரன் கணக்கை போட  வேண்டும் என்று சொல்லுகின்றோம்.. ஆனால் பாவம் கமலுக்கு குடிகார புருசன்காரன் கணக்கு சுட்டு பேட்டாலும் வருவதில்லை..



எனக்கு கூட கமலை பிடிக்காது..நானும் லாஸ்ட் பெஞ்சுதான்... காரணம் கமல்  5 ஆம் வகுப்பு படிச்சிட்டு எப்படி இப்படி  எல்லா  லாங்கவேஜ்லயும் பேசமுடியுதுன்னு ஒரு கோவம் ..? ஒரு பொறாமை...?. அதான் எனக்கு கடுப்பே... இது போல அவர் பல பேரின் கடுப்பை சம்பாதிச்சி இருக்கார்...
=========================


=========================
மேல இருக்கற வீடியோவை அப்படியே பாருங்க... அதுல நாகேஷ்  கேரக்டர் போலத்தான் இங்க நிறைய பேரு இருக்காங்க.. அந்த ஆளு என்ன சொன்ன வரான்னு தெரியாம தெரிஞ்சா போல காட்டிக்க அவரை விமர்சனம்  செய்யறது... அத்தனை லாங்வேஜ் பேசறவனை மடக்கிட்டோம்ன்னு நாகேஷ்க்கு ஏற்ப்படுற ஒரு அல்ப  சந்தோஷம் அவுங்களுக்கு.... அவ்வளவுதான்..


50 வருட திரை வரலாற்றில்  அதுவும் தமிழ்சினிமாவில் நிற்பது என்பது சாதாரணமான விஷயம் இல்லை.. திறமை இல்லாமல் அது  சாத்தியமே இல்லை... அதே போல இந்த 50 வருட காலத்தில் எத்தனை பேரை  வயிற்று எரிச்சல் பட வைத்து  இருப்பார், பொறாமை பட வைத்து இருப்பார்... எத்தனை பேர் மனதில் கருவிக்கொண்டு இருந்து இருப்பான்,...  எத்தனை பேரை  தன் சுயலபாத்துக்கும் ஈகோவுக்கு எத்தனை பேரை கமல் பலி வாங்கி இருப்பார்.... என்னங்க கமலை பத்தி எழுதிக்கிட்டு இருக்கும் போது  அப்படியே அவரை கவுத்திட்டிங்க... கமல் என்ன கடவுளா-? அவரும் மனுசன்தானே..? 50 வருஷ சினிமாவுல தாக்குபிடிக்கனும்ன்னா தன் இருப்பை தக்க வச்சிக்கனும்ன்னா சிலரை காலி பண்ணி இருக்க நிறைய வாய்ப்பு இருக்கு. அதே போல குடுமியும் பூனுலும் அவர் அறியாமலும் அவர் அறிந்தே கூட  வெளிப்பட்டு இருக்கும் என்பது தவிர்க்க முடியாத உண்மை...



ஆனந் சார் ஒன்னியும் கவலை படாதிங்க...இந்த டாக்டருங்க ரெண்டு பொஸ்தகத்தை படிச்சிட்டு நான்தான் கடவுள்ன்னு சொல்லிக்கிட்டு  இருப்பானுங்க இமேல்லாம் நம்பாதிங்க....,..கடவுள் இல்லைன்னு சொல்லறான் பாருங்க... அவனை நம்பலாம்...கடவுள் இருக்குன்னு சொல்லறான் பாருங்க.. அவனையும் நம்பலாம்.. ஆனா நான்தான் கடவுள்ன்னு சொல்லறான் பாருங்க அவனை மட்டும் நம்பாதிங்க பூட்ட கேஸூ ஆயிடுவிங்க என்பார்...





ஆனால் நிறைய பேர்  தான்தான் கடவுள் என்று சொல்லிக்கொண்டு  இருக்கின்றார்கள்...


இன்னைக்குதான் இந்த வீடியோவை பார்த்தேன்.... கமல் மீது எனக்கு பொறாமையே வந்துடுச்சி... ஆயர்தம் மாயா நீ வா என்பதை  எத்தனை மாடுலேஷன்ல சொல்லறான் இந்த ஆளு... சான்சே இல்லை...


இப்படி எல்லாம் திறமையா பாடுவும் செஞ்சி திரைக்கதை எழுதி டைரக்ட்டும் செஞ்சா விட்டு விடுவோமா? இப்படி முத பெஞ்சு பசங்க போல ஸ்மார்ட்டா  இருந்தா என்ன செய்ய முடியும்....?சமயம் கிடைக்கும் போது  இழுத்து  போட்டு ரெண்டு  சாத்து சாத்துனும்ன்னு தோனும் இல்லையா?

லாஸ்ட் பெஞ்சு ஸ்டுடன்ட்ஸ் மனசுல....


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.




நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

21 comments:

  1. எல்லாம் சரி.. விஸ்வரூபம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா...

    லேபிளில் "கமல்" என்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்...

    ReplyDelete
  2. yappa jackie!!! ennamma yosikare.. nane eppidithan yosichen.
    rgds-Surya

    ps: you have better marks than me in sslc..

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. உங்களால மட்டும் தான் இப்படி எல்லாம் யோசிக்க முடியும்....Genius...

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  5. கமல் என்ற பெயர் ஒட்டகத்தை(camel) ஞாபகப்படுத்துவதால் கமலுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும். ஒட்டக வியாபாரிகள் சங்கம்..

    ReplyDelete
  6. கமல் என்ற பெயர் ஒட்டகத்தை(camel) ஞாபகப்படுத்துவதால் கமலுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும். ஒட்டக வியாபாரிகள் சங்கம்..

    ReplyDelete
  7. well written ...psychologiclly analyzed article ...thums up

    ReplyDelete
  8. நாமெல்லாம் திராவிட கருப்பு , கமல் வெள்ள தோலு. அதனால கமல புடிக்காது.
    பொண்ணுங்களுக்கு கமல புடிக்கும் , அதனால நம்பளுக்கு கமல புடிக்காது.

    கருப்பா இருக்குறவன் கிட்ட சாதாரண திறமை இருந்தா போதும். வெள்ள தோலு குட்டி கரணம் அடிச்சாலும் நமக்கு புடிக்காது.

    சோ கமல புடிக்கதுய்யா , அவ்வளோதான். நீ இன்னதான் கூவுனாலும் சில ஜென்மங்களுக்கு புரியாது.

    ReplyDelete
  9. ஆஹா... புடிக்காதுய்யா... புடிக்காது இந்தக் கமலை எனக்குப் புடிக்காதுன்னு போட்டுத் தாக்கிட்டீங்க போங்க...
    அருமையான பதிவு...
    வாழ்த்துக்கள் அண்ணா...

    ReplyDelete
  10. யானைக்கும் அடி சறுக்கும் ஜாக்கி சார், ஒரு சின்ன உதாரணம், படத்துல அமெரிக்கன் ஆர்மி ஒரு பெண்ணை தவறாக சுட்டுட்டோம்ன்னு ரொம்ப பீல் பண்ணுவது போல காட்சி வச்சி இருக்கார். ( படத்தை dvd ல பார்த்துவிட்டு தான் சொல்கிறேன்)

    ReplyDelete
  11. ha ha!!! heroinai kaapaththa hero varumpothu heroine veetu aalungalae avanai pottu adichaa audience naanga feel aavame appdiyirukku sir nadakkarathai paaththu! purinchukongappaa!!!

    ReplyDelete
  12. கமலுக்கு என் சார் இந்த வேண்டாத வேலை? தமிழும் தமிழனும் என்னவானாலும் அவருக்கு என்ன? நாங்கெல்லாம் இல்லை? 4 பாட்டு , காமெடி 4 பைட்டு எண்டு வேலையை முடிச்சமா, காசு வாங்கினமா எண்டு போக வேண்டியது தானே! அத விட்டுட்டு உலகத்தரத்தில சினிமா எடுக்கிரீங்களா ? நல்லா வேணும் சார் . மார்க்கெட்ல தான் கடை வைக்கனும்னு அடம் புடிக்கிறவனை ட்வின் டவருக்கு என் சார் கூட்டிட்டு போகணும்னு ஆசைப்படுறீங்க? நமக்கெல்லாம் இவளவு தான் சார்..தமிழன் உருப்பட மாட்டான் எண்டு எண்டைக்கோ எழுதி வச்சிட்டாரு கடவுள் !

    ReplyDelete
  13. நிதர்சனம்...ரசித்தேன்...

    ReplyDelete
  14. புடிக்கல .... நீங்க புடிக்களன்னு சொன்ன விதம் ரெம்ப புடுச்சிருக்குசார்

    ReplyDelete
  15. இதுதான் வஞ்சக புகழ்ச்சி அணி, கீழே நிக்கறவன் மேல இருக்கறவனை பார்த்து எச்சில் துப்பின கீழே இருக்கறவன் முகத்துல தான் விழும்,இந்த நியூட்டன் விதி நிறைய பேருக்கு தெரியாது தலைவரே!என்ன இருந்தாலும் இந்த வயசுலயும் அந்த மனிதனுக்கு பெண் ரசிகைகள் அதிகம் அதுதான் தலை எனக்கு இந்த மனிதன் மேல பொறாமை....

    ReplyDelete
  16. அனைவர் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  17. கமலை பிடிக்காது அவருடைய நடிப்பைப் பிடிக்கும் என்று தானே சொல்ல வருகிறிர்கள்

    ReplyDelete
  18. கமலை பிடிக்காது அவருடைய நடிப்பைப் பிடிக்கும் என்று தானே சொல்ல வருகிறிர்கள்

    ReplyDelete
  19. your writing shows a biasagainst a community man

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner