அன்புள்ள அம்மா. 23/09/2014



23/09/1996....இதே தேதியில் பதினெட்டு வருடங்களுக்கு முன் அந்த காலையை என்னால் மறக்கவே முடியாது....


அழுதே பார்க்காத என் அப்பா உடைந்து அழுததை பார்த்தேன்...


பாண்டி ஜிப்மர் எதிரில் இருக்கும் நெஞ்சக நோய் மருத்துவமனையில் நேற்றுவரை மூன்றாம் நம்பர் பெட்டில் படுத்து வலி பொருத்து என்னோடு வேதனையோடு பேசிய என் தாய் ....


படுத்து இருந்த படுக்கை காலியாய் கிடந்தது...


சின்ன சிறுகதை.(( நிறைய உண்மை சம்பவங்கள்))



அவர்  ஒரு எடிட்டர்.பேரு பாலுன்னு வச்சிக்குவோம்.. சென்னையில் இருக்கும் பல மாடி கட்டிடத்தில் இயங்கும் தொலைகாட்சியில்  வேலை பார்த்தவர்... 

திடிர் என்று வேலையை விட்டு விட்டு   உப்புமா படங்கள் எடிட் செய்ய செல்லுவார்...

பாலுவுக்கு வேலை தெரியும் என்றாலும் நிறைய அள்ளி விடுவார்... எப்படி என்றால் ? எனக்கு கமிஷ்னரை தெரியும் என்ற ரேஞ்சிக்கு...பாலுவுக்கு சினிமா வேலை இல்லாத காரணத்தால்  அவசரத்து வேறு ஒரு தொலைகாட்சியில்  வேலைக்கு சேர்ந்தார்....

அங்கே  சேவியர்  என்ற எடிட்டர்   வேலை பார்த்தார் ....

சேவியருக்கு சம்பளம் கம்மி...

ஒர்க் லோட் அதிகம்...


சாண்ட் வெஜ் அண்டு நான் வெஜ்/17/09/2014


நீண்ட நாட்கள்  ஆகி விட்டது... இனி நேரம்  கிடைக்கும் போதாவது சாண்வெஜ் நான் வெஜ் எழுதி வைப்போம்.
  ஆல்பம்.
 ஆசை60 வது நாள் மோகம்  முப்பது நாள்ன்னு சொல்லுவாங்க...  இந்தியாவில் மோடி பீவர் முடிந்து விட்டது என்று கட்டியம் கூறுவது போல 9 மாநிலங்களில் நடந்த இடை தேர்தல்களில் பாரதீய ஜனதாவுக்கு பெருத்த  பின்னடைவு ஏற்பட்டுள்ளது..நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவை ரட்சிக்க வந்த பிதாமகன் மோடிதான் என்று நினைத்து  பொருவாரியான தொகுதிகளில் வாக்களித்த மக்கள்... 100 நாட்களில் இப்படி ஒரு முடிவை கொடுத்து  பிஜேபிக்கு வயிற்றில் புளியை கரைத்து விட்டனர்.
====

HOW OLD ARE YOU-2014/உலகசினிமா/மலையாளம்/இந்தியா/35 வயதை கடந்த பெண்கள் அவசியம் காண வேண்டிய சித்திரம்.





பொதுவாக இந்தியாவில் எல்லாவற்றிர்க்கும்  புனித பிம்பம்கள் கொடுத்த விட்டு   பின்னால்  எல்லா களவானி  தனங்களும் அனுதினமும் நடக்கும்  தேசம்.

 இங்கு எல்லாம புனிதம்தான்...

 ரோஜா படத்தில் தேசிய கொடியை எறித்தால் உணர்ச்சி வசப்பட்டு அதனை  நாயகன் அணைப்பான் படம் பார்க்கும் நமக்கு ஜிவ் என்று இருக்கும்...

 ஆனால் அமெரிக்காவில் கொடியை எரிப்பார்கள்....  அவர்கள் நாட்டு  கொடியில்  ஜட்டி செய்துக்கூட போட்டுக்கொள்ளுவார்கள்... ஆனால்  நகரம் தூய்மையாக   இருக்கும்...

எதற்கு புனித பிம்பம் கொடுக்க வேண்டுமோ...? அதற்கு கொடுப்பார்கள்... எல்லாத்தையும்  புனிதமான பார்க்கமாட்டார்கள்...

எர்போர்ஸ் ஒன் திரைப்படத்தில்  அமெரிக்க  அதிபரை அசிங்கமாக திட்டுவார்கள்... எச்சி துப்புவார்கள்... அடிப்பார்கள் துவைப்பார்கள்... வில்லன் சரிக்கு சரியாக பேசுவான்... எல்லாம் இருக்கும் ஆனாலும் அவர்கள்  சொல்ல வந்த விஷயத்தை  வாழை பழத்தில்  ஊசி ஏற்றுவது போல ஏற்றி விட்டு சென்று விடுவார்கள்..

KILLERS-2014/ (18+)உலகசினிமா/ஜப்பான்/ தன் வினை தன்னைச்சுடும்.



கண்டிப்பாக வயது வந்தோருக்கான சைக்லாஜிக்கல் திரைப்படம்...
ஜப்பானின் லேட்டஸ்ட் சைக்கலாஜிக்கல் திரில்லர்...2014 பிப்ரிவரி ஒன்னாம் தேதி ரிலிஸ் ஆன  இந்த திரைப்படம்  உலகம் எங்கும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது...

SIGARAM THODU-2014/ சிகரம் தொடு. சினிமா விமர்சனம்.






பொதுவாக தற்போது  எந்த படத்தை பார்த்தாலும் ரசிக மகாஜனங்கள்...  பேஸ்புக் பக்கங்களில் எங்கே இருந்து இந்த   படத்தை உருவினார்கள் என்று ஷெர்லக் ஹோம்ஸ் ஆக மாறி கண்டு பிடித்து  பாடல் ஓடுகின்றதோ இல்லையோ??? அதற்குள் இயக்குனர்ரை ஓட்டு ஓட்டு என்று ஓட்டி தள்ளி விடுகின்றனர்...

 அந்த அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்து இருப்பது ஒரு முக்கியகாரணம்....

 என்னதான் ரசித்து  ரசித்து  இழைத்து இழைத்து  ஒரு  திரைப்படத்தை எடுத்தாலும்  ஏதோ ஒரு பாரின் படத்தின் தழுவல் இந்த திரைப்படம் என்று மனதில் ரசிகனுக்கு  தொன்றியதுமே படம் பார்க்கும் ஆசையே  ரசிகர்களுக்கு போய் விடுவதும் உண்மை.

அதே போல் இப்போதைய ரசிகர்கள்.. வா மச்சி படத்துக்கு போலாம் என்று எல்லாம் திடிர் என்று கிளம்புவதில்லை...

120 டிக்கெட், பார்கிங் 20,  பாப்கார்ன் கோக் 200 என்றால் ஆன் லைன் என்றால் ஒரு டிக்கெட்டுக்கு 30 ரூபாய்  சர்விஸ் கட்டனம்... அதாவது ஒருவன்  தனியாக படம் பார்க்க சென்றலே 500  ரூபாய் செலவு ஆகின்றது... 

அப்படி இருக்கையில் எவனும் வா மச்சி படத்துக்கு போயிட்டு வரலாம் போர்  அடிக்குது என்று யாரும் இப்போது சொல்வதில்லை.. அந்த வாக்கியமே வழக்கொழிந்து வருகின்றது என்று வேண்டுமானால் சொல்லலாம். 

 முதல் காட்சியில்  படம் பார்த்து விட்டு பேஸ்புக்கிலும் , டூவிட்டரிலும்  ஒத்த அலைவரிசையுள்ள   நண்பர்கள் படத்தை பற்றி எழுதும் ஒரு வரி விமர்சனத்தை வைத்தே... அந்த  படத்தின் அடுத்த காட்சிக்கான  டிக்கெட்டை இப்போது எல்லாம் ரசிகர்கள் புக் செய்கின்றார்கள்..


DAGLICHT-2013/உலகசினிமா/நெதர்லேன்ட்/சில ரகசியங்கள் வெளிச்சம் பெறாமல் இருக்கின்றன.


உங்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது...

உங்களுக்கு என்று சொல்கின்றீர்களே...? நான் ஆனா? அல்லது பெண்ணா??

பெண்....

 நீங்கள் உங்கள் அம்மாவுக்கு ஒரே பெண்..

சரி...

 சொல்லுங்க...

 அப்புறம் சொல்ல மறந்துட்டேன் ... நீங்கள் வக்கில் தொழில் செய்கினறீர்கள்.

அமலா



1986 ஆம் வருடம் கடலூர் ரமேஷ் திரையரங்கம்... பின்பு பாலஜி தியேட்டராக மாறி இப்போது மண்ணோடு மண்ணாகி கேவிடெக்ஸ் துணிக்கடை கார்பார்க்கிங் ஆக இருக்கின்றது.

மைதிலி என்னைகாதலி படம் ரிலிஸ்...

Air Force One/1997 நான் ரசித்தக் காட்சிகள்


1997 ஆம்  ஆண்டு  வெளியான ஏர் போர்ஸ் ஒன்  திரைப்படம் பார்த்துஇருக்கின்றீர்களா,-??

 அதில் ஒரு காட்சி அப்படியே மெய் சிலிர்க்க வைக்கும்... அதை எத்தனை பேர் ரசித்தார்கள் என்று தெரியவில்லை... எந்தனை முறை அந்த படம் பார்த்தாலும் நான் அந்த காட்சியை  மெய் மறந்து ரசிப்பேன்...

நல்ல திரைக்கதைக்கும்  நல்ல இசைக்கும் மேக்கிங் மற்றும் எடிட்டிங்க்கும் அந்த காட்சியை உதாரணமாக சொல்லுவேன்....

தன்னம்பிக்கையின் மறுபெயர் இயக்குனர் அனுராக் காஷ்யப்



அனுராக் காஷ்யப் இந்திய சினிமா பெருமீதத்தோடு உச்சரிக்கும் பெயர்.

இந்திய சென்சார் போர்ட்   செய்த  இரட்டை வேடத்தால் இவரின்  முதல் படத்தை  இன்றுவரை  ரிலிஸ்   செய்ய முடியவில்லை..

இரண்டாம் படத்தை வெளியிட முடியாது என்று தடை  சென்சார் போர்டு கங்கனம் கட்டிக்கொண்டு தடை போட்டது.. 

சினிமாவில் சாதிக்க  மும்பையின் பிளாட்பாரங்களில்  வாழ்ந்து....பாய்ஸ் ஹாஸ்டல்  மாடியில்   உள்ள தண்ணீர் தொட்டிக்கீழே  தன்  வாழ்க்கையை ஆரம்பித்து ,மெல்ல மெல்ல ககையில் காலில்   விழுந்து சான்ஸ் பெற்று திரைப்படம் இயக்கினால்  அந்த படத்தை வெளியிட சென்சார் போர்டு   தடை போட்டால் ஒரு இயக்குனர் என்ன செய்வான்..???

ஏக்கப்பார்வை.

இன்று காலையில் மனைவியை அழைக்க  சென்னை விமான  நிலையம் சென்று இருந்தேன்...

மனைவியின் வருகைக்கு   யாழினியும் நானும் காத்திருக்கும் வேளையில்...

அவரை  பார்த்தேன்.


அவருக்கு 45 வயது இருக்கும்...

கலைந்த தலை... தூக்கம் இல்லா கண்கள்... அயர்ன் செய்யப்படாத பேன்ட் சர்ட்....

வெளியே வருவதற்கு முன்னே தன் உறவுகளை பார்க்க ஆர்வம் கொண்டார்.. அடிக்கடி பார்வையாளிர் பக்கம்  தன் உறவுகளை கண்டு விட  மாட்டோமா ? என்ற ஏக்கம் அவர் கண்களில் வியாபித்து இருந்தது..


Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner