தஞ்சை பெரிய கோவில்.


1995 ஆம் ஆண்டு உலக தமிழ் மாநாடு இதே அம்மாவின் ஆட்சியில் நடைபெற்றது... கடலூரில் இருந்து நண்பர்களோடு தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றேன்... அன்று முழுவதும் அந்த பிரமாண்டத்தை விட்டு எங்கேயும் போகவில்லை...

In Order of Disappearance ( 2014 ) movie review by jackiesekar | world movie norway










இன் ஆர்டர் ஆப் டிஸ் அப்பியரன்ஸ்.

 
அழகான மனைவி….
ஒரே ஒரு பையன்…
நார்வேயின் புற நகரில்   தேசிய நெடுஞ்சாலைகளில்  பனி குவிந்து இருந்தால்… அதனை  விலக்கி பாதை ஏற்படுத்தி கொடுக்கும் வேலையை 60 வயது  நீல்ஸ் செய்கிறார்… அவருக்கு பனி விலக்கும்  வேலையும்.. அவரது குடும்பமும்தான் பிரதானம்.
பனி என்றால்  நம்ம  ஊர் மார்கழி மாதம் போல மப்ளர் கட்டிக்கொண்டு வாங்கிங் போய்விடலாம் என்று நினைக்கும் ரகம் அல்ல….  தாளிக்க கடுகு உளுத்தம் பருப்பு வாங்க வேண்டும் என்றாலும் கூட பத்துக்கு மேற்ப்பட்ட  சமாச்சரங்களை அணிந்துக்கொண்டு வெளியே சென்று வர வேண்டும்… இல்லை என்றால் விரைத்துக்கொள்வீர்கள்..
நம்ம ஊர்ல சின்ன மழை பேஞ்சி லைட்டா ஜில்லிப்பா இருந்தாலே…  கொடைக்கானலில்  ஹெட் போன் போல காதை அடைத்துக்கொண்டு   இருக்கும் சமாச்சாரத்தை  சென்னையில் போட்டுக்கொண்டு திரிபவர்களுக்கும், பனி பெய்தால் காதில் பஞ்சி வைத்துக்கொண்டு செல்லும்  புண்ணியவான்களுக்கும்  நார்வே வாழ தகுதி இல்லாத நாடு என்பதை அறிக…
அப்படியான இடத்தில் நீல்ஸ் தன் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கின்றார்….
ஒருநாள் அவரது  பிள்ளை இறந்து விட்டாதாக  போன் வருகின்றது.
பையன் என்றால் 20 வயது மதிக்கத்தக்க பிள்ளை…  எர்போர்ட்டில் லக்கேஜ் ஏற்றிக்கொண்டு செல்லும் வண்டியை இயக்குபவன்…
ஒரே ஒரு ஆண் பிள்ளை…   நானே இன்னும் சாவாம இருக்கேன்.. அதுக்குள்ள அவன் எப்படி இறப்பான் என்ற கேள்விக்குழப்பத்தோடு… ஆனால் தெளிவாக நீல்ஸ் தன்   மனைவியை அழைத்துக்கொண்டு  பிரேத பரிசோதனை  இடத்துக்கு வருகிறான்..
வந்து பார்த்தால் மகனுக்கு எந்த சின்ன கீறலும் இல்லாமல் இறந்து கிடக்கின்றான்… அட ஒரு விபத்தில் போய்  சேர்ந்து இருந்தாலும் விபத்து  நடந்து விட்டது .. யார் என்ன  செய்யமுடியும் ? என்று மனதை தேத்திக்கொள்ளலாம்.. ஆனால்  எந்த பிரச்சனையும் அவனுக்கு இல்லை… காதல் கத்திரிக்காய், உடல் உபாதையும்  ஏதும் இல்லாமல்  வாழவேண்டிய பையன் இறந்து கிடக்கின்றான்.
 அது மட்டுமல்ல  கேஸ் ஆப் டெத்  என்ன? என்று விசாரித்தால்.. உங்க பையன் அளவுக்கு அதிகமான  போதை பொருள் எடுத்துக்கொண்டதால் இறப்பு சாத்தியமாகியுள்ளது என்று மருத்துவர் கை விரிக்கின்றார்..
நீல்ஸ் என் மகனுக்கு அந்த பழக்கமே இல்லை என்று வாதிட்டாலும் அடாப்சி ரிப்போர்ட் அதைதான் சொல்கிறது என்று டாக்டர் வாதிடாமல் அடுத்த வேலை பார்க்க போகின்றார்…
நீல்ஸ் நிச்சயமாக  தன் மகன் போதை மருந்து எடுக்கும் பழக்கம் இல்லாதவன் என்பதில் திடமா நம்பினாலும், ஒருவேளை எடுத்து இருந்தால் என்ற எதிர்கேள்வி கேட்கும் போது நிச்சயம் நீல்ஸ் மனம் அலைபாய்ந்துகொண்டு இருந்தது..
சரி இனிமே வாழ்ந்து என்ன மயிர புடுங்க போறோம் என்ற தற்கொலை செய்துக்கொள்ள முயற்சிக்கும் போது  ஒரு டுவிஸ்ட்… மகன் இறப்பு கொலை… என்ற செய்தி கிடைக்கின்றது…
சாவபோனவனுக்கு இந்த செய்தி வந்தால்  என்ன செய்வான்.. வந்தால் மலை போனா மயிறு என்று களத்தில் இறங்கமாட்டோம்.. எஸ் நீல்ஸ் எப்படி வயதானாலும் தன் மகனை கொலை செய்தவர்களை பழி வாங்குகின்றார் என்பதை சாப்டர்  சாப்டராக  அற்புதமான  கிரைம் திரில்லராக இந்த திரைப்படம் நம்  கண் முன் விரிகின்றது.
 பட்த்தின் சுவாரஸ்யங்கள்..
ஸ்லோவாக இருந்தாலும் இன்ரஸ்டிங்கான திரைக்கதை… இத்தனைக்கும் எத்தனையோ பழி வாங்கும் படங்களை நாம் பார்த்து இருகின்றோம்.. ஆனாலும்  பழிவாங்குவது அதுவும் தனி ஒருவனாக   போதை பொருள் கும்பலை எதிர்ப்பது என்பது சாதாரண விஷயம் இல்ல..
 நன்றாக இருக்கின்றது…..
டிஸ் அப்பியரன்ஸ் ஆகும் பெயர்கள் மற்றும் செப்டர் குளோஸ் செய்யும் இடங்கள்  அருமை.

சினிமாட்டோகிராபி சான்சே இல்லை… படத்தின் பெரிய பலம்…
========
படத்தின் டிரைலர்.


======
படக்குழுவினர் விபரம்.

Directed by                           Hans Petter Moland
Produced by                          Stein B. Kvae
Written by                             Kim Fupz Aakeson
Starring                                 Stellan Skarsgård
Music by                                Brian Batz
Kaspar Kaae
Kåre Vestrheim
Cinematography                   Philip Øgaard
Edited by                               Jens Christian Fodstad
Release dates
10 February 2014 (Berlin)
21 February 2014 (Norway)
Running time
115 minutes
Country                                 Norway
Sweden
Denmark
Language                               Norwegian, Swedish, English, Serbian, Germa
=======
பைனல் கிக்..
நார்வேயின் பனி அழகை கண்டு களிக்கவும்.. ஒரு சுவாரஸ்ய  திரில்லருக்காகவும்
 கண்டிப்பாக இந்த படத்தை பார்க்கலாம்... காரணம்  பிரசன்ட்  செய்த விதம்.
====


வீடியோ விமர்சனம்..




ஜாக்கிசேகர்.
24/12/2015
follows on


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

சகாயம் முதல்வரா?



ஊர்ல ஒரு பழ மொழி சொல்லுவாங்க... தேரை இழுத்து தெருவுல உட்ட கதையான்னு பேச்சு வழக்குல சொல்லுவாங்க... அது போலத்தான் சகாயம் கதையும்...
ஒரே ஒரு விஷயம்தான்... சகாயம் யாரு.. என்னன்னு தெரியாம... ஊடகங்கள் எழுதுவதை வைத்து ஒரு கோஷ்ட்டி ஒரு நாள் முதல்வர் ரேஞ்சிக்கு புகழ்பாடுது..
சகாயத்தை விட மிக நேர்மையான அரசு ஊழியர்கள் இருக்கின்றார்கள்.... அவர்களின் பணி தெரிவதில்லை...
சகாயத்தோடு டிராவல் ஆன ஊழியர்களை கேட்டுப்பாருங்க...அப்ப தெரியும்...
அதை விட..
இந்த ஊடகங்கள் இருக்கே.. ஊடகங்கள் தங்கள் சுயநலத்தின் பொருட்டு ஒருவனை கடவுளாக கட்டமைக்கின்றன... நேரம் வரும் போது அதே சுயநலத்தின் பொருட்டு கடவுளாக போற்றப்பட்டவன் களமாடபடுகின்றான்.
டிராபிக் ராமசாமியாகட்டும் அல்லது தமிழக அம் ஆத்மியா இருக்கட்டும்...
ஒருவேளை சகாயம் வேட்பாளராக நின்றால்... பத்தாயிரம் ஓட்டுகள் பெறலாம்...
தமிழ் நாட்டை பொருத்தவரை ரெண்டே கட்சிதான்.. ஒன்னு திமுக மற்றது அதிமுக...
இரண்டு கொள்ளியில நல்ல கொள்ளியை தேர்ந்தெடுக்கும் பாக்கியம்தான் நமக்குன்டு என்பதை மறவாதீர்கள்..
ஜாக்கிசேகர்
21/12/2015




நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

Thanga magan ( 2015 ) movie review | தங்க மகன் திரைவிமர்சனம்




வேலையில்லா பட்டதாரி திரைப்படம் கொடுத்த வெற்றி தெம்பில்…  தனுஷ் தனது ஒன்டர்பார் நிறுவனத்தின் மூலமும்.. அவரது ஆஸ்தான ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான வேல்ராஜூடன் களம்இறங்கி இருக்கும் படம்தான் தங்கமகன்.இந்த திரைப்படத்துக்கு வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகம் என்று நூல் விட்டாலும்… அப்படி எல்லாம் இல்லை இந்த படம்  விஐபி போல இருக்காது ஆனால் இது வேறு ஒரு அனுபவத்தை கொடுக்கும்   என்று படம் வெளிவரும் முன்னே சொல்லி விட்டார்கள்…

கடந்த ஆறு நாட்களில் மழை பாதித்த நனைந்து போன முகநூல் பதிவுகள்.. #‎chennai‬ ‪#‎chennairains‬ ‪#‎chennaiflood‬ ‪#‎chennaifloodhelp‬




நகரின் மத்தியில் இருக்கும் சைதாபேட்டை பாலமே வெள்ளத்தில் மூழ்கி உள்ளது... ஆற்றங்கரையோரம் இருக்கும் மக்களின் நிலைமையை புரிந்துகொள்ளுங்கள்....
எல்லோரும் மொட்டை மாடியில் தவம் கிடக்கின்றனர்.... மின்சாரம் இல்லாத காரணத்தால் தகவல் தெரிவிக்க முடியாமல் விழி பிதுங்கி உள்ளனர்..

வெள்ளக்காடானது சென்னை...




எட்டுமணிக்கே வீட்டுக்கு வந்து விட்டேன்.... ஆனாலும் விலைஉயர்ந்த கார்  மூழ்கும் ஆபாயத்தில் இருப்பதாகவும்... கணவர்  ஓஎம்ஆர் ரோட்டில் சிக்கிக்கொண்டு இருப்பதாக தோழி உதவிக்கு அழைக்க...

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner