சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(30•04•2010)

ஆல்பம்...

1800கோடிக்கு இண்டியன் கரண்சி...ஒன்றரை டன் தங்கம்... நினைத்து பார்க்கவே பயமாக இருக்கின்றது... இவ்வளவு பணத்தை ஒரு தனிமனிதன் லஞ்சமாக வாங்கி குவித்து இருக்கின்றான் என்றால் நம் நாட்டில் எப்படி வளர்ச்சி பணிகள் ஒழுங்காக நடக்கும்.இவனிடம் இப்படி கோடிகளை அள்ளி கொடுத்து முறைகேடாக சீட் வாங்கிய கல்லூரிகள் மருத்துவக்லலூரியில் சேர வரும் மாணவனிடம் எத்தனை லட்சங்களை வாங்கி இருப்பார்கள்.. அப்படி என்றால் சாமானியன் மருத்துவ படிப்பே படிக்க முடியாதே... அப்படி சேரும் மாணவர்களின் பெற்றோர் இதே போல் ஏதாவது ஒரு இடத்தில் லஞ்சம் வாங்கினால் மட்டுமே இது போலான கல்லூரிகளில் சேர்க்க முடியும் அல்லவா? இந்த பிரச்சனையை எல்லாம் ஜனநாயக முறையில் கலைய முடியாது என்பது மட்டும் நன்றாக தெரிகின்றது.. ஊருக்கு ஒரு இந்தியன் தாத்தா வர வேண்டும் போல் இருக்கின்றது...

===============================

முதல்வரின் முன்னே ஒரு கலவரம் நடந்து இருக்கின்றது பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலிஸ் கைகட்டி வாய் பொத்தி நின்று இருகின்றது...அப்ப தனிமனிதனின் நிலையை யோசித்து பார்க்கவே பயமாக இருக்கின்றது...மீடியாக்களில் வேலை செய்யும் கேமராமேன்கள் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க கெட்டுக்கொள்ள படுகின்றார்கள்...

================================

70லட்சம் கோடிகள் இந்தியர்களின் கருப்பு பணம் சுவீஸ் வங்கியில் இருக்கின்றதாம் யார் அந்த பணத்தை போட்டு வைத்து இருக்கின்றார்கள்..என்ற லிஸ்ட்டை கேட்டால் அந்த லி்ஸ்ட்டை கொடுக்க அந்த நாடு மறுத்து வருகின்றது.. அதனால் சுவிஸ் நாட்டு பொருட்களை புறக்கனிக்க சொல்லி இரண்டு நாட்களுக்கு முன் தலைநகரில் போராட்டம் நடைபெற்றது....ங்கோத்தா எவன்டா சொன்னது இந்தியா எழை நாடுன்னு....
====================================
மிக்சர்.....

சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து பாரிஸ் கார்னர் போகும் சாலையில் 9 ஸ்பிட் பிரேக்குகள் மேல் போட்டு வைத்து இருக்கின்றார்கள்... அங்கு இருக்கும் ஒரு கடையில் கேட்ட போது... யாரோ ஒரு வக்கில் மீது பேருந்து மோதி அவர் இறந்து விட்டாராம் அதனால் இத்தனை ஸ்பீட் பிரேக் என்று சொன்னார்கள்... அது உண்மையா பொய்யா என்று தெரியாது... அதனை எடுக்க வேண்டும்...அவ்வளவுதான்... பொதுமக்கள் அதிகம் பேர் நடக்கும் இடம் என்று சொன்னால்... திநகரில் ரங்கநாதன் தெரு அருகில் ரோடு இருக்கவே கூடாது ஸ்பீட் பீரேக்கர் மட்டுமே இருக்க வேண்டும்....

====================================
என் வீட்டு அருகே கிரிக்கெட் விளையாடும் இரண்டு பொடிசுகள் பேசிக்கொண்டனர்
ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற முக்கியகாரணம் விளையாட்டுக்கு முன் ஏஆர் ரகுமான் ஜெய் ஹோ பாடியதால் வெற்றி கிடைத்தது என்று இரண்டு சிறுவர்கள் பேசிக்கொண்டு சென்றார்கள்...
============================
சென்னையில் கோடைமழை...

சிறுநீர் கழிக்கும் போது கடைசி பிளிச்சில் ஒரு வேகமும் தொய்வும் இருக்குமே அது போல்சடாலென ஆரம்பித்து பாடால்என முடிந்து போனது இன்று காலை என் வீட்டு அருகில் பெய்து வைத்த கோடை மழை... ரொம்ப நாட்களுக்கு பிறக மண் வாசனை நாசிகளின் ஊடே உள்ளே சந்தோஷத்தை ஏற்படுத்தியது...

===============================

ஹர்பஜன் சிங்... முகேஷ் அப்பானி மனைவியை மார்போடு அனைத்து உற்சாகத்தில் தூக்க அதை வைத்து பல காமெடியான மெயில்கள் வந்து என் மெயில்பாக்சை நிரப்புகின்றன...ஆனா அன்னைக்கு நைட் முகேஷ் ஒரு லார்ஜ் எக்ஸ்ட்ரா சாப்பிட்டாலும் சாப்பிட்டு இருக்கலாம்... இது நம்ம கெஸ்...
==========================
கல்பாக்கம் கிரேட்லேக் கல்லூரி பட்டமளிப்பு விழா சென்னை டிரேட் சென்டரில் நடந்தது.. உறவுக்கார பையன் பத்து லட்சம் செலவு செய்து ஒரு வருடத்தில் எம்பிஏ முடித்தான்... அந்த நிகழ்ச்சிக்கு போய் இருந்தேன்... எல்லோர் கண்களில் பிரிவின் வலி சிரிப்பின் பின்னே இருந்தது...பட்டமளித்து விட்டு குருப்போட்டோவுக்கு பிறகு தலை தோப்பியை எல்லோரும் ஒரு சேர தூக்கி மேல் நோக்கி எரிந்தார்கள்.. அது என் கண்ணுக்கு கட்டு கட்டாய் பணம் பறப்பது போல் இருந்தது......
========================
ஒரு காமெடி...

இப்போது எனது தேசிய கீதம் பையா படத்தின் அடடா மழைடா சாங்தான்...
தமன்னா துள்ளி குதித்து ஆடும் அழகு அற்புதம்... அந்த பாட்டை பார்த்தாலே எனக்கு உற்சாகம் வந்துடும்..



ஒரு இரண்டு நாட்களுக்கு முன் குளித்து உடைமாற்றி வெளியே கிளம்பும் போது.. மனைவி தூங்கி கொண்டு இருந்தாள்..சட்டென ஒரு உற்சாகம் வந்து சூழ்ந்து கொள்ள....அடடா மழைடா சாங்கில் தமன்னா குதித்து குதித்து ஆடியது போல் நாம் ஆடினால் எப்படி இருக்கும் என்று நினைத்து சட்டென அதற்க்கு செயல்வடிவம் கொடுத்து... 85கிலோவுடன் நான் குதித்து குதித்து ஆட, பூமி அதிர்வில் தூங்கியவள் எழுந்து கொண்டாள்...

சேகர்பா..உன்னை தயவு செய்து கெஞ்சிகேட்டுக்குறேன்...புது வீட்டு டைல்ச உடைச்சுடாதே என்றாள்...அவள் சொல்வதின் நியாயம் புரிந்து ஏதும் பேசாமல் வெளியே போய்விட்டேன்....
=================================
காணமல் போனவர் பற்றிய அறிவிப்பு...
ஹாலிவுட்பாலான்னு ஒரு பதிவர் சினிமா விமர்சனத்தை ஹாலிவுட்ல இருந்து எழுதுவார்...டீப் இன் துரோட்னு ஒரு துத்துவமான படத்தை பத்தி எழுதிட்டு காணாம போயிட்டார்... அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிச நிச்சயம் உண்டு...
=======================
நேற்று இரவே சுறா படத்தின் ரசிகர் காட்சி இலங்கையில் வெளியாக படத்தைபற்றி காலையிலேயே ஒரு இலங்கை பதிவர் படத்தின் ரிசல்ட் சரியில்லை என்று சொல்லிவிட... காசி தியேட்டரில் இன்று 3மணிகாட்சிக்கு (இன்னும் இரண்டுமணிநேரத்தில்) டிக்கெட் புக்செய்து இருக்கின்றோம்...டிக்கெட் ஏதும் இல்லாத காரணத்தால் திரை அருகில் உட்காரும் வாய்ப்புதான் உள்ளது.. இருந்தாலும் படம் பார்த்து விட்டு நைட் விமர்சனம் போஸ்ட் போடறேன்....

இந்த வார சலனபடம்....

பாட்டியின் சமயோஜித புத்தி...


====================================
பார்த்தது ரசித்தது....

கே கே நகரில் ஒரு பிரபல பள்ளி அருகே ஒரு நண்பரை சந்திக்க காத்து இருந்தேன்... இப்போதுதான் அந்த பெண் பருவ வயதில் காலடி எடுத்து வைப்பது முகத்தின் விஷயத்திலும், இன்ன பிற வளர்ச்சியிலும் காட்டிக்கொடுத்தது... தம்பியோடு வெளியே வந்து இருக்க வேண்டும்.. அந்த பையனுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து விட்டு யாருக்கோ செல்போனில் தகவல் சொல்ல அந்த பையன் வந்தான்.. கொஞ்ச நேரம் பேசினான்... திரும்பவும் தப்பிக்கு இன்னோரு ஐஸ்கிரிம் ஆர்டர் செய்தாள்...திரும்பவும் பேச்சு சுவராஸ்யமாக தொடர்ந்து... தம்பிபையன் கடையில் சப்புகொட்டியபடி நாக்கை சுழற்றி கொண்டு இருந்தான்...

இந்த வாரம் படித்ததில் பிடித்தது....
கவிதை...


பறையனுக்கு தனி சுடுகாடு
படையாட்சிக்கு தனி சுடுகாடு
தலைமுழுக ஒரே ஆறு....

கவிஞர் அறிவுமதி....

=======================

விஜயகாந்த் கேப்டன் டிவி தொடங்கி இருப்பதால் டிவி உலகில் ஏதாவது மாற்றம் வருமா?

இன்னும் சில மாதங்களில் விருத்தகிரி படத்துக்கு டாப்டென்னில் முதலிடம் கிடைக்கும்...
மு பழனி சென்னை...
நானெ கேள்வி நானே பதில் ஆனந்த விகடன்...
==============

நான்வெஜ்....18+

ஜோக் .1
சம்சாரம் அது மின்சாரம்.... அப்ப சின்ன வீடு... யோசிங்க... கரண்ட் போன புழுக்கத்தி்ல் கூட உங்களுக்கு மூளை வேலை செய்யலையா? சின்ன வீட்டை ஜெனரேட்டர்னு சொல்லலாம்....
==============================
ஜோக்..2

ஒருத்தன் கடவுளிடம் வேண்டினான் எனக்கு வேல்ட் பெஸ்ட் டிரின்க் மற்றும் பெண் வேண்டும் என்று சொல்ல.. கடவுள்.. ஒரு மினரல்வாட்டர் பாட்டிலையும் அன்னை தெரசா போட்டோவையும் கொடுத்தார்...
==============================
ஜோக்..3
ஒரு ஆங்கில பாடத்தின் கிராமர் டீச்சர் கோபத்தின் உச்சத்தில் சர்தார் மகனை ஓங்கி கன்னத்தில் ஒன்று வைத்தால்... காரகாட்டகார கவுண்டமணி போல் அதை எப்படிடா என்கிட்ட கேட்கலாம்? என்று திருப்பி ஒரு அறை... திரும்பவும் ஒரு அறை... இதை கவனித்த பக்கத்து கிளாஸ் டீச்சர் ஏன் இப்படி போட்டு அவனை அடிக்கிறிங்க? அப்படி என்ன சந்தேகம் உங்ககிட்ட கேட்டு தொலைச்சான் என்று கேட்க?
டீச்சர் இவன் என்ன டவுட் என்கிட்ட கேட்டான் தெரியுமா?

பிரான்னு சொல்லறாங்க... அது சிங்குளர்... அது ரெண்டுத்துக்கு யூஸ் ஆகுது...பேண்டிஸ் அது புலூரல் ஆனா அது ஒன்னுத்துக்கு மட்டும் யூஸ் ஆகுது... நீங்க தப்பா சொல்லிதர்றிங்க டீச்சர்னு சொல்லறான்...
இப்ப ஒரு அறைவிடும் சத்தம் கேட்டுது....

அடிச்சது பஞ்சாயத்து பண்ண வந்த டீச்சர்...

நன்றி.. தீபக்.. மும்பாய்...

அன்புடன்
ஜாக்கிசேகர்...

ஒரு நாளைக்கு சராசரியா என் தளத்தை 1500பேர் வாசிக்கிறிங்க... அதுல ஒரு 100 பேர் ஓட்டு போட நேரம் ஒதுக்கினா என்ன கொறைஞ்சா போயிடுவிங்க...

(KATALIN VARGA)18+ உலகசினிமா ரோமானியா.. கற்பழிப்பின் எதிர்வினை...

ஆணாக இருக்கட்டும் அல்லது பெண்ணாக இருக்கட்டும்.. உங்கள் உடலின் உங்கள் சம்மதம் இல்லாமல் தனியாகவோ அல்லது குழுவாகவோ அத்து மீறும் போது அதனை எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது...அது போல் ஒரு கொடுமையான நிகழ்வு நினைத்து கூட பார்க்க முடியாது...

உலகில் 73 சதவீதம் பேருக்கு பாதிக்கபட்ட கற்பிழந்த பெண்களுக்கு ... தான் யாரால் கற்பழிக்கபட்டோம் என்று நன்றாக தெரியும் என்று ஒரு ஆய்வு சொல்கின்றது ...பாதிக்கபட்ட பெண்களுக்கு எத்தனை வருடங்கள் ஆனாலும் அது மறப்பதில்லை... ஆனால் ஆண்களுக்கு அப்படி இல்லை சட்டென மறந்து விடுகின்றார்கள்..


ஒரு இரவு நேர விடுதியில்இருவர் சந்திக்கின்றார்கள்... அவர்கள் இருவரும் ஒரு ஒதுக்கு புறமான இடத்தில் உறவு கொள்கின்றார்கள்...உச்ச நிலையின் போது பக்கத்தில் இருக்கும் கல்லை எடுத்து மண்டையில் மடேர் என்று அடித்து அந்த பெண் அந்த ஆணை அடித்து கொலை செய்தால் எப்படி இருக்கும்?.... ஏன் கொலை செய்தால்????

KATALIN VARGA உலகசினிமா ரோமானியா.. நாட்டு படத்தின் கதை இதுதான்...
Katalin (Hilda Péter) ஒரு ஒன்பது வயது பையணின் தாய்...Orbán (Norbert Tankó) எப்போதும் தன் தாய் காட்டலிடன் தன் அப்பா யார் என்ற கேள்வியை தினமும் கேட்டு தொந்தரவு கொடுத்துக்கொண்டு இருப்பவன்...

அவள் தங்கி இருக்கும் வீட்டில் கூட அந்த ஹவுஸ் ஓனரால் அவளுக்கு பாலியல் தொல்லை ஏற்படுகின்றது... ஒரு இரவு விடுதியில் ஒருவனை சந்தித்து அவனோடு உறவு கொண்டு கல்லால் அவனை அடித்து கொலை செய்யும் போது அவளின் கதை மெல்ல விரிகின்றது... பத்து வருடங்களுக்கு முன்பு ரேப் செய்தவர்களில் அவனும் ஒருவன்... போலிஸ் அவளை துரத்த அவள் தனது மகனுடன் பயணபடுகின்றாள்... பக்கத்து ஊரின் ஒதுக்கு புற பண்ணை வீட்டில் அடைக்கலாம் கேட்க அந்த தம்பதி அவளுக்கு இடம் கொடுக்கின்றார்கள்...அந்த வீட்டில் காட்டலின் ஆர்பன் இருவரும் அந்த வீட்டில் தங்குகின்றார்கள்.. அந்த தம்பதிக்கு குழந்தை இல்லை...அர்பனை பார்த்ததும் அந்த பையனின் மேல் அந்த பண்ணை வீட்டு பெண்ணுக்கு பாசம் வருகின்றது...ஒரு சின்ன டுவிஸ்ட்... அந்த பண்ணை வீட்டு ஆணும் கட்டலினை கெடுத்தவனில் அவனும் ஒருவன்... அவன் பத்து வருடம் கழித்து இப்படி ஒரு நிலைவரும் என்று கனவிலும் அவன் நினைக்காத போது....அவனையும் கொல்ல அவள் வந்து இருப்பதை சொல்கின்றாள்... தன்மீது அளவுகடந்த காதல் கொண்ட கணவன்... கடந்த காலத்தில் ஒரு பெண்ணை கற்பழிப்பு செய்தவன் என்று தெரிந்து அந்த பண்ணைவீட்டு பெண் தூக்கில் தொங்க... காட்டலின் அவனை சொலை செய்தாளா? அதற்க்குள் போலிஸ் அவளை பிடித்து விட்டதா என்பதை வெண்திரையில் காணவும்...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

மிக ஸ்லோவான திரைக்கதை ஆனால் சில காட்சிகள் கவிதையாய் இருக்கும்...

இயக்குனர் Peter Strickland கிளைமாக்சில் இது வழக்கமான கற்பழிப்பு கதை போல் இல்லாமல் முடிவு சற்று வித்யாசமாய் வைத்து இருப்பார்...

இந்த படம் சென்னை ஏழாவது உலக படவிழாவில் நிறைவு படமாக சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் திரையிடபட்டது...

பல சர்வதேச பட விழாக்களில் இந்த படம் பல விருதுகளை பெற்று இருக்கின்றது..

படத்தின் ஒளிப்பதிவில் லேண்ட்ஸ் கேப் காட்சிகள் உண்மையில் நெஞ்சை தொடும்... மிக முக்கியமாக அந்த பண்ணை நிலத்தில் அந்த பெண் தூக்கு போட்டுக்கொள்ளும் அந்த காட்சியின் போது கேமரா டிராவல் ஆகும் அந்த இடங்கள் அற்புதம்..

இந்த படம் 2009 ஆம் ஆண்டு வெளியிடபட்டது....

நெஞ்சை தொடும் காட்சி....

(இன்றில் இருந்து எல்லா படவிமர்சனங்களில் நெஞ்சை தொடும் காட்சி என்று ஒரு பகுதியை சேர்த்து உள்ளேன்....)

பண்ணை வீட்டு பெண்ணோடு படகில் பயணிக்கும் போது... காட்டலின் தன் கடந்த கால வாழ்க்கையில் ஏற்பட்ட கற்பழிப்பு நிகழ்ச்சியை சற்று விவரித்து சொல்லும் போது... அவளின் வலிகளை கேட்டுக்கொண்டே வர...கடைசியில்.. அவள் புருஷனும் அவளை கற்பழித்தவர்களி்ல் ஒருவன் என்று அறியும் காட்சி...
படத்தின் டிரைலர்...



படக்குழுவினர் விபரம்..


இயக்குனர் Peter Strickland அவரின் பிளாக் முகவரி... இங்கே கிளிக்கவும்

இயக்குனர் அவர் மாமாவிடம் கெஞ்சி கூத்தாடி பணம் வாங்கி இந்த படத்தை எடுத்தார்...2007ல் 28000 ஆயிரம் பவுண்டில் இந்த படம் எடுத்துமுடிக்கபட்டு 2009ல் வெளிவந்தது...


அன்புடன்
ஜாக்கிசேகர்...

ஒரு நாளைக்கு சராசரியா என் தளத்தை 1500பேர் வாசிக்கிறிங்க... அதுல ஒரு 100 பேர் ஓட்டு போட நேரம் ஒதுக்கினா என்ன கொறைஞ்சா போயிடுவிங்க...

(போதுமா ரோமியோ...மற்றும் கும்கி)

கனவுகளை நசுக்கும் கனரக வாகன ஓட்டுனர்கள்...

தமிழகத்தில் நடக்கும் பெரும்பாலான வாகன விபத்துக்களுக்கு லாரி ஓட்டுனர்களும் ஒரு காரணம் என்று ஏற்கனவே சொல்லி இருந்தேன்... அதை பற்றி தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தேன்... அதனை நமது வாசக நண்பர் ராஜ்குமார்.. துணை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தளத்தில் அந்த கடிதத்தை இணைத்தார்....

நேற்று தமிழகத்தில் நடந்த பல்வேறு சாலைவிபத்துகளில் பலபேர் உயிரிழந்தார்கள்.. அதில் ஒரு முன்னாள் நாடுளுமன்ற உறுப்பினரும் ஒருவர்...சாலைவிபத்துகளில் உயிரிழப்பு என்பது தினமும் ஒரு செய்தியாக பத்திரிக்கையில் தொடரும் செய்தியாக உள்ளது...

இதில் லாரி ஓட்டுபவர்களை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது.. ஆனால் பெரும்பாலான விபத்துகளை பார்க்கும் போது அவர்கள் பெயர்தான் முன்னனியில் இருக்கின்றது... பெரும்பாலான விபத்துக்கள் பக்கவாட்டு ரோட்டில் இருந்து மெயின் ரோட்டுக்கு வரும் வாகனங்கள் சட்டென உள்ளே நுழைவதாலே பெரிய விபத்துக்கள் ஏற்படுகின்றன...

உதாரணத்துக்கு திருச்சி சாலையில் ஒரு வாரத்துக்கு முன் 100கீலோமீட்டர் வேகத்தில் வந்த ஒரு கார்... சட்டென கிளைச்சாலையில் இருந்து ஒரு லாரிஉள்ளே வர இதை சற்றும் எதிர்பார்க்காத வாகன ஓட்டி நிலைதடுமாறி பிரேக் அடிக்க வண்டி கவி்ழ்ந்து ஸ்தலத்துலேயே 4 பேர் மாண்டு போயினர்....

பெங்களுர் சாலையில் பயணபடும் போது கிருஷ்ணகிரி டூ ஓசூர் சாலையில் மலைகளை குடைந்து சாலைகள் அமைத்து இருப்பார்கள்... அதில் மலை மீது கனரகவாகனஙக்ள் முக்கி முனறி ஏறிக்கொண்டு இருக்கும்.. ஆங்கிலத்திலும் தமிழிலும் அறிவிப்பு செய்து இருப்பார்கள்... கனரக வாகனங்கள் இடதுபுறம் சாலையை ஒட்டி செல்லவும் என்று... ஆனால் நீங்கள் அந்த சாலையில் பயணத்தால் எந்த லாரியும் அதனை கேட்காது... எல்லா லாரியும் பயங்கர லோடுடன் வலது புறம் சென்று கொண்டு இருக்கும்...ஒரு லாரி இடது புறம் சென்று கொண்டு இருக்கும் பின்வரும் இலகுரக வாகனங்கள் வழி கிடைக்காது தினறிக்கொண்டு இருக்கும்....


சென்னை தனியார் சப்ட்வேர் கம்பெனி என்ஜினியர் மணிமேகலை (வயது 21) இவர் நெய்வேலியை சேர்ந்தவர்..அருண் (வயது 26)இவரும் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினியர்.. இவர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் இருவருக்கும் கடந்து இந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி ஞாயிறு திருச்செந்துரில் திருமணம் நடைபெற்றது... இவர்களது திருமணவரவேற்ப்பு வரும் 28ம் தேதி புதன்கிழமை சென்னையில் நடைபெற இருந்தது... இப்போது அருணும் மணிமேகலையும் இப்போது உயிரோடு இல்லை....

இருவரும் திருமணம் முடிந்த 3வது நாள்நெய்வேலி மாமனார் வீட்டில் விருந்து சாப்பிட்டு விட்டு மணமக்கள் இருவரும் கொடைகாணலில் தேனிலவு கொண்டாட காரில் செல்ல முடிவு எடுத்தனர்... தனது குடும்ப நண்பர் தம்பதிகள் இருவருடன் காரில் கொடைக்கானல் நோக்கி பயணபட்டனர்.. முன் சீட்டில் உட்கார்ந்த தன் இளம் மனைவியோடு காரில் சந்தோஷத்துடன் போக திட்டக்குடி அருகே முன்னே சென்ற லாரி டிரைவர் தண்ணீர் குடிக்க சட்டென எந்த எச்சரிக்கையும் இல்லாமல் நடு ரோட்டில் பிரேக் போட்டு லாரியை நிறுத்த இந்த திடிர் நிகழ்வில் ஏதும் செய்யமுடியாத கார் லாரியின் பின் மோத கனவுகளுடன் பயணபட்ட அந்த புது பெண் சடுதியில் துடிக்க இறந்து போக.. புது மாப்பிள்ளை அருண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்... பின் சிட்டில் உட்கார்ந்து இருந்த இருவர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் மருத்துமனையில் சேர்க்கபட்டதாக பத்திரிக்கை செய்தி சொல்கின்றது... ஆனால் கடந்த சனிக்கிழமை நான் உளுந்தூர் பேட்டை போய்வரும் போது பேருந்தில் வந்த டிரைவர் ஒருவர் திருச்சியில் சேர்த்த தம்பதிகளில் ஒருவர் உயிர் இழந்து விட்டதாக சொன்ன போது... ரொம்பவும் மனதுக்கு கஷ்டமாக இருந்தது.....

யோசித்து பாருங்கள்.. ஒரு டிரைவர் அலட்சியம்... ஒரு மணமக்களின் உயிரை அல்பாயுசுவில் போக வைத்துவிட்டது... ஒரு பெண்ணை வளர்த்து அந்த பெண்ணை நோய் நொடிகளில் இருந்து காத்து... அந்த பெண்ணை நல்ல பள்ளியில் சேர்க்கவைத்து,அவளது சிறு சிறு சந்தோஷங்களை நிவர்த்தி செய்து...அவளை கல்லூரியில் சேர்த்து... அவளுக்கு சென்னையில் வேலை கிடைத்த போதும் அந்த குடும்பம் எவ்வளவு மகிழ்ந்து போய் இருக்கும்....ஒரு முறைக்கு பல முறை மணமகன் குறித்து விசாரித்து...சம்பந்தி வீட்டார் மனம் கோனாமல் எல்லாவற்றையும் செய்து கொடுத்து.... ஒரு திருமணத்தை நடத்தி முடிப்பது என்பது சாதாரணவிஷயமா?


மணமக்களை விருந்துக்கு அழைத்து காலையில் புது மாப்பிள்ளைக்கு வாய்க்கு ருசியாய் சமைத்து போட்ட அந்த மணமகளின் பெற்றோரின் வேதனை சொல்லில் அடங்கா...... காலையில் டிபன் சாப்பிட்டு விட்டு போன மணமக்கள் 11,30 மணிக்கு விபத்தில் இறந்துவிட்டர்கள் என்றால் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்...

தோழிகள், உறவினர்கள் கேள்விக்கு வெட்கத்தால் பதில் சொன்ன அந்த மணிமேகலை என்ற 21வயது இளம்பெண் கட்டிய கணவனின் அருகாமை கிடைக்கும் முன்னே உடல்சிதைந்து இறந்து போனாள்....

புதுமனைவி அருகமை ,உலகம் , அரசியல்,பிடித்த நடிகர்,வேலை பளு எல்லாம் ஆழ்ந்து கேட்கும் முன்னே அருணின் உயிர் மருத்துவமனையில் பிரிந்து விட்டது...

புதுமணதம்பதிகளுக்கு பேச்சு துணைக்கா காரில் பின்புறம் உட்கார்ந்து சென்ற தம்பதிகளில் இரண்டு பேரில் ஒருவர் இறந்துவிட்டார்... அந்த தம்பதிகளுக்கு எத்தனை குழந்தைகளோ அவர்கள் என்னவானார்கள் .. எப்படி இந்த இடியை தாங்கி இருப்பார்கள்....

யோசித்து பாருங்கள் ஒரு லாரி டிரைவரின் கவனக்குறைவு பலரின் கனவுகள் கொடுரமாக நசுக்கபட்டுவிட்டன....
பொதுவாக லாரி டிரைவர் என்று சொல்வதை நான் மறுக்கின்றேன்... எல்லாவிபத்துக்களுக்கும் அவர்ககாரணம் என்று சொல்ல முடியாது.. ஆனால் அலட்சியம் அவர்களிடத்தில் அதிகம் என்று சொல்ல வருகின்றேன்...

ரோட்டில் போகும் போது கொஞ்சம் பெரிய வண்டி ஏதாவது எதிரில் வந்தால் மட்டுமே அவர்கள் பயபடுவார்கள்... சின்ன வண்டிகள் போனால் அதை கால் தூசிக்கு கூட மதிக்கமாட்டர்கள்....சைடில் ஒதுங்க இடம் இல்லை என்றாலும் நன்றாக ஏறி வருவார்கள்... எனக்கு அவ்வப்போது ஒரு ஆசைவரும்...டிரான்ஸ்பார்மர் படத்தில் வருவது போல் ஒரு சின்ன காரக போய்கொண்டு இருக்கும் போது... இது போல் அலட்சியமாக ஏறிவரும் கனரகவாகனங்கள் எதிரில் போனதும் அந்த வாகனத்தை விட டீராண்ஸ்பார்மர் படத்தில் மாறுவது போல் பாங் என்று மாறி சின்ன வண்டிதானே என்று ரொம்ப அலட்சியமாக வரும் டிரைவரின் வடியறு கலக்கி “பீ ” கைட்டிக்க வைக்க வேண்டும் என்பது என் ஆசை...

அதே போல் வாகன விபத்துகளில் முதலில் தகவல் சொல்லியும் உதவிக்கு வருவதம் லாரிகாரர்கள்தான் அதையும் மறுக்க முடியாது... தொடர்விபத்துகளில் ஈடுபடும் கனரக ஓட்டுனர்களின் லைசென்ஸ் கேன்சல் செய்ய வேண்டும்...சாலை ஓரத்தில் கனரக வாகனங்களை நிறுத்த வேண்டும் என்று அறிவிப்பு செய்து அரசுஆனை போட வேண்டும்.....

தினமும் பல்வேறு விபத்துகளை பார்த்தாலும்.. இந்த விபத்து ரொம்பவும் மனதை கஷ்டபடுத்தியது...ஒரு மணமக்களின் கனவுகளின் சிதைய ஒரு டிரைவரின் அலட்சியம் காரணம்...

அந்த லாரி டிரைவருக்கு அதிக படியாக பதினைந்துநாள் சிறை என்றும்.... அபராதம் என்றும் விதிப்பார்கள்...வெளியில் வந்து வழக்கமான டிரைவர் பணி செய்ய போய்விடுவார்... யாருக்கு தெரியும் இன்னு்ம் ஒருவாரத்தில் அவரே கூட வேறு ஒரு பெரிய விபத்துக்கு வழி வகுத்தாலும் வகுக்கலாம்...நமக்கு என்ன தெரிய போகின்றது.....

நாம் என்ன முதல்வன் படத்து அர்ஜுன் போல் ஒரு நாள் முதல்வரா? சட்டம் போட்டு உடனே அமுல்படுத்துவதற்க்கு...சரி இந்தனை விபத்துகள் நடந்து கொண்டே இருக்கின்றது...முதல்வரும் அரசு அதிகாரிகளும் என்ன செய்து கொண்டு இருக்கின்றார்கள்... நெடுஞ்சாலைதுறையும், போக்குவரத்துகாவல் துறை என்ன செய்து கொண்டு இருக்கின்றார்கள்...

முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்... தனியாக ஒரு கலெக்டரை இந்த தொடர் சாலை விபத்து விஷயத்தில் நியமித்து...விபத்து் ஏற்படும் பிரச்சனைளை அக்குவேறுஆணிவேறாக அலசி ஆராய்ந்து கடுமையான சட்டங்கள் போட்டு உங்கள் இடையறாது எழுத்து பணிக்கு நடுவே இந்த வேலையை செய்ய வேண்டுகின்றேன்...

அன்புடன்
ஜாக்கிசேகர்...

இந்த பதிவு பிடித்து இருந்தால் ஒட்டு போட்டு பெருவாரியான வாசகர்களிடம் இந்த செய்தி சென்று சேர உதவுங்கள்...

(DON'T LOOK DOWN) 18++ உலக சினிமா அர்ஜென்டினா... சொல்லிகொடுப்பதா காமம்???

எச்சரிக்கை ...

நீங்கள் அலுவலகத்தில் அல்லது பொது இடத்தில்இருந்தால் இந்த பதிவை படிக்கவேண்டாம்...தனியாக படிக்கவும்...

சென்னையில் அந்த கலாச்சாரம் இப்போது பிரபலம்.... அதாவது காதலர்கள் முடிந்தவரை இருவரும் ஒத்து வாழ்வது.. ஒத்துவரவில்லை என்றால் பிரிந்து விடுவது... இதில் ஆண் பெண் விதிவிலக்கு இல்லை... முன்பு எல்லாம் பல ஆண்கள் முழு நேர தொழிலாகவே இதை வைத்து இருந்தார்கள்... இப்போது இந்த லிஸ்ட்டில் பெண்களும் தன்னை இணைந்து கொண்டுவிட்டார்கள்.....
ஒருவன் தன்னை கெடுத்துவிட்டான் என்றால் உடனே தற்கொலை என்று காலம்காலமாக காட்டிய தமிழ்சினிமா கூட தன்னை மாற்றிக்கொண்டுவிட்டது என்பேன்...ஒரு டீக்காக டீக்கடையே எவனாவது வாங்குவான? போன்ற டயலாக்குகள் அதிகமாகிவிட்டன...
ஒரு பெண் செக்ஸ் பற்றி எதுவும் தெரியாத ஒன்னும் தெரியாத பையனுக்கு எல்லாத்தையும் கத்து கொடுத்துவிட்டு இதே போல நீ மத்த பொண்ணுங்ககிட்ட நீ நடந்துக்கனும்...ஒன்ஸ் உன்கிட்ட வந்த பொண்ணு வேறயார பத்தியும் அந்த பெண் கனவிலும் நினைக்க கூடாது என்று சொல்லி விட்டு டா டா பாய் பாய் காட்டினால் எப்படி இருக்கும்... அப்படி நொந்த ஒரு பையனை பற்றிய கதைதான் இது...

DON'T LOOK DOWN படத்தின் கதை இதுதான்...

Eloy (Leandro Stivelman) சர்கஸ்லலாம் கால் ஒரு பெரிய கழியை கட்டிகிட்டுரொம்ப உயரமான மனுசன் போல நடப்பாங்களே.. அது போல காலில் நீளமான கழியை கட்டிகிட்டு பேலன்சோடு நடப்பதில் வல்லவன்... அந்த டிரைனிங்கை கொடுத்தது அவனது இறந்து போன அப்பா.... அந்த உயர நடையை வச்சிகிட்டு சாண்ட்விச் ஆர்டர் பிட் நோட்டிஸ் கொடுக்கறதுன்னு பல வேலைகள் அவன் செய்யறான்...அவனுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருக்கின்றது... அவன் நோட்டு புத்தகத்தில் இரவில் ஒன்றும் இருக்காது ஆனால் விடியலில் எழுந்து பார்த்தால் அதில் ஒரு கவிதை எழுதி இருக்கும்... யார்னு பார்த்த நம்ம தலைவரே நைட்ல எழுந்து எழுதி வச்சிட்டு தூங்கிடுவார்... Elvira ( Antonella Costa). பர்சிலோனாவுல இருந்து வெக்கேஷேனுக்கு பாட்டி வீட்டுக்கு வந்து இருக்கா.. அவளோட பாட்டி ஒரு தெரபிஸ்ட்... இந்த பொண்ணு எப்பவும் கில்லி படத்துல விஜய் விட்ல ஒரு டாப்பு இருக்குமே அது போல அதை ஓப்பன் பண்ணி வச்சிக்கலாம்.. எல்விரா எப்பவுமே மாடி டாப்பை ஓப்பன் பண்ணி வச்சிகிட்டு நிலாவை பார்த்துசிட்டே தூங்கும்...நம்ம ஆளு எலாய்க்குதான் தூக்கத்துல நடக்கறவியாதி ஆச்சே,, அப்படியே வீட்டு மாடில தூக்கத்துல நடந்து அந்த எல்ரா வீட்டு டாப் ஓப்பன் வழியா பெட்ல விழுந்துடறான்...நம்ம ஊரா இருந்தா அவ்வளவுதான்... சங்கமாங்கி சாண்......வனே அப்படின்னு கண்டபடி திட்டி துடப்டிப கட்டை பிச்ஞ்சிகிட்டு இருக்கும்.. ஆனா அவ பாட்டி கொஞ்சமும் பதறமா... எத்தனை வருசமாத இந்த தூக்கத்துல நடக்கற வியாதி இருக்குன்னு அன்பா கேட்கறா???
இந்த சம்பவத்துக்கு அப்புறம் எலாய் எல்வீரா ரெண்டு பேரும் நண்பர்கள் ஆயிடறாங்க.... கால் குச்சியை கட்டிகிட்டு நடக்கற வித்தையை எல்வீராவுக்கு சொல்லிதரான்... ஒரு கட்டத்துல பேலன்ஸ் மிஸ்சாகி அவ விழ அவன்தாங்கி பிடிக்க அந்த நேரம் பார்த்து அவன் உதடு பக்கத்துல இருக்க... அவன் அவளை கிஸ் பண்ணறான்.. எல்விரா எச்சில்ல பல கெமிக்கல் இருப்பதாய் உணர்கின்றான்.. ஒரு நாள் எல்விரா அவன்கிட்ட என் பாட்டிவெளிய போறாங்க நீ என் வீட்டுக்கு வரியான்னு... கேட்குறா.... (அப்ப ஆரம்பிக்கற சீன் படம் முழுவதும் வந்துகிட்டே இருக்கும்...) அவனுக்கு செக்ஸ் தெரியாது.. வீட்டாவ்ல இங்கிலிஸ் கத்து கொடுப்பது போல் அவனுக்கு பலவிஷயங்கள் பல பொசிஷன்களில் செக்சை அவனுக்கு கத்து கொடுக்கறா...எவனுக்காவது உடலுறவின் போது நகரங்கள் ஞாபகத்துக்கு வருமா... இவனுக்கு வருது... ஸ்பெயின், கல்கட்டா, லண்டன் வந்துகிட்டு இருக்கு... இப்படி சொல்லிகிட்டே இருந்தா... வாயில ஜொள் ஒழுக படிச்சிகிட்டே இருப்பிங்க... போய் எங்காவது டவுன்லோட் பண்ணி பாருங்க அப்பு.....


படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

இந்த படத்தின் இயக்குனர் Eliseo Subiela அர்ஜென்டினாகாரர்... 1944ல் பிறந்தவர்...அவர்ர்டுக்கு படம் எடுப்பதே இவருடைய பொழப்புன்னு வச்சிக்குங்களேன்...

இந்த படம் நிறைய உலக படவிழாக்களில் அவார்டு வாங்கி குவித்து இருக்கின்றது....2009பிலிடெல்பியா உலகபடவிழாவில் கலந்து கொண்டு இருக்கின்றது...

காமத்தை மிக அழகாக சொல்லி கொடுத்த படம் சமீபத்தில் எனக்கு தெரிந்து இதுதான் என்பேன்....

திருமணத்துக்கு பிறகான பல குழப்பங்களுக்கு மிக முக்கிய காரணம் உடலுறவு குறித்தான தெளிவின்மையும் ஒரு காரணம் என்று சொல்லலாம்...

காமத்தை சொல்லி கொடுக்க இதுவரை ஆவணபடங்கள் போல் பல படங்கள் வந்து இருந்தாலும்.. இந்த படம் கதையின் ஊடே பயணிக்கின்றது..

திருமணம் செய்து கொள்ளும் ஆண் பெண் இருபாலரும் பார்க்க வேண்டிய படம் இது....

இருவரின் உறவுக்கு முன்... எலிரா சொல்லும் உரையாடல்கள் அற்புதம்....

இறந்த பிறகு கடவுளை பார்பதை விட இருக்கும் போது பார்பதுதான் எனக்கு பிடிக்கும்....

இரண்டுவிஷயம் நீ கத்துக்கனும்...

ஒன்னு உன்னோட கிளைமாக்ஸ் கண்ட்ரோல்
இரண்டு உன்னோட பார்டனரோட சாடிஸ்பாக்ஷன் இந்த ரெண்டு விஷயத்தையும் ஒழுங்கா கத்துகிட்டா... இந்த உலகத்துல பெஸ்ட் லவ்வரா நீ இருக்கலாம்....


என் உடம்புல இருக்குற சந்தோஷத்தை தர அந்த மூனு எடத்தை கண்டுபிடிக்கறதுதான் உன்வேலை...

இரண்டு பேரும் உறவு கொள்ளும் போது பயோ எலக்டிரிசிட்டியை உருவாக்குகின்றோம்... ஓ அப்ப நாம எலக்ட்ரிசிட்டி உருவாக்கதான் வந்து இருக்கோமான்னு

என்பது போன்ற வசனங்களும் படத்தின் பெரும் பலம்.... அதே போல் படத்தின் வசனங்களோடு காமெடியையும் இணைத்து இருப்பது இயக்குனரின் அனுபல சான்று....

இந்த படத்தின் அற்புதமான விஷயம்..Sol Lopatin ஒளிப்பதிவு.. எல்லா பிரேம்களையும் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம்...

அவுட்டோர் காட்சிகளை பொறுத்தவரை அவர்களுக்கு எப்போதுமே சாப்ட் லைட்டிங் கிடைக்கும்... அதனால் அது பெரிய விஷயம் இல்லை.. ஆனால் பிரேமிங்கில் ஜமாய்த்து இருக்கின்றார் ஒளிப்பதிவாளர்Sol Lopatin... இன்டோரில் அந்த உடலுறவு காட்சிகளின் போது ஜன்னல் சோர்ஸ் லைட் போல போட்டு அழகாக அக்குவேறு ஆணிவேறாக எல்லாத்தையும் காட்டி இருக்கின்றார்கள்...

படத்தில் 20 நிமிடங்களுக்கு மேல் பெரும்பாலான காட்சிகள் உடலுறவு காட்சிகள்தான்...


ஆனால் அந்த கிளைமாக்ஸ் காட்சியும் அந்த பெண்ணை பொம்மை உடை அணிந்து கொண்டு அவள் பெட்டியை தூக்கி கொண்டு டாக்சி ஸ்டேண்டுக்கு அழைத்து போவதும், அப்போது பின்புலத்தில் ஒளிக்கும் பாடலும எனக்கு அர்த்தம் புரியவில்லை என்றாலும் அது ரொம்ப கவிதையாக இருந்தது...

படத்தின் டிரைலர் கண்டிப்பாக 18வயதுக்கு மேல்.....



படத்தின் சென்சார்டு போட்டோஸ் இங்கே சொடுக்கவும்...1 18+

படத்தின் சென்சார்டு போட்டோஸ் இங்கே சொடுக்கவும்...2 18+

படத்தின் சென்சார்டு போட்டோஸ் இங்கே சொடுக்கவும்...3 18+

படத்தின் சென்சார்டு போட்டோஸ் இங்கே சொடுக்கவும்...4 18+

படக்குழுவினர் விபரம்...


Director: Eliseo Subiela
Cast: Hugo Arana, Antonella Costa, Mónica Galán, Leandro Stivelman
Screenwriter(s): Eliseo Subiela
Producer(s): Daniel Pensa
Cinematographer: Sol Lopatin
Editor(s): Marcela Sáenz

அன்புடன்
ஜாக்கிசேகர்

(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....

இமயமும் சிகரமும் ரெட்டச்சுழி (விமர்சனம்)

இமயமும் சிகரமும் இணைந்து நடிக்கும் படம்...தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பிரம்மாக்கள்...இரண்டு பேரையும் வைத்து வேலை வாங்குவதே பெரிய விஷயம்....

இரண்டுபேருமே சினிமாவையே கரைத்து குடித்தவர்கள்..இதில் இமயம் வெகு காலத்துக்கு பிறகு சமீபத்தில்தான் அரிதாரம் பூசியவர்.. சிகரம் ஏற்கனவே அரிதாரம் பூசி இருந்தாலும்... இப்போது திரும்பவும் பூசி இருப்பவர்...

எல்லா ஊரிலும் இப்படி இரண்டு கேரக்டர் இருக்கும்... ஏட்டிக்கு போட்டியாக செய்வது என்பதும்.. கடைசிவரை கவிழ்ந்து விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சப்பை கட்டு கட்டிவிட்டு திரும்பவும் கோதாவில் இறங்குவது இவர்களுக்கு கை வந்த கலை.... அப்படி இரண்டு தலைகட்டுகளின் குடும்ப பிரச்சனையை இந்த படத்தில் பசங்களை வைத்து சொல்லி இருக்கின்றார்...இயக்குனர் தாமிரா...


ரெட்டைசுழி படத்தின் கதை இதுதான்...

ராமசாமி (பாலசந்தர்) சிங்காரவேலன் (பாரதிராஜா) இருவரும் அந்த ஊரின் மிக்ப்பெரிய தலைகட்டு இருவரும் வீம்புக்கு சண்டை போட்டுக்கொள்பவர்கள்... இருவரிடத்திலும் ஒரு குழந்தைதனம் இருக்கும்...இருவருக்கும் பேரன் பேத்திகள்.. ஒரு டஜன்கணக்கில் இருக்க... தாத்தாக்கள் செய்த அதே சண்டை வேலையை பேர பிள்ளைகள் செய்கின்றார்கள்...சிங்காரவேலன் ஒரு காம்ரேட்...அவரது பேத்தி (அஞ்சலி) ஒரு டீச்சர் அந்த பெண்ணுக்கும், ராமசாமி அந்த பகுதி அரசியல்வாதி,அவர் வீட்டில் எடுத்து வளர்க்கும் அறிமுக நாயகனுக்கும் (ஹரி)... சிறுவயது முதலே காதல்... இந்த காதல் நிறைவேறியதா? பெரிசுகள் அடித்து்கொண்ட சண்டை முடிவு்க்கு வந்ததா? அல்லது இவர்கள் போல் அதிக அளவில் அடித்துக்கொண்டபேரபசங்களின் சண்டை முடிவுக்கு வந்ததா? என்பது தெரிய வெள்ளிதிரையில் பார்க்கவும்...

படத்தில் சுவாரஸ்யங்களில் சில....

படத்தின் எதிர்பார்ப்பே.. இமயமும் சிகரமும் எப்படி நடித்து இருக்கின்றார்கள்? என்பதுதான் படத்தின் முதல் ஈர்ப்புக்கு காரணம்... அந்த வேலையை இருவரும் சரியாகவே செய்து இருக்கின்றார்கள்..

மிக முக்கியமாக பாராதிராஜா வரும் காட்சிகள் ரொம்ப அற்புதம்... பாலச்ந்தர் வரும் காட்சிகள் சற்று குறைச்சல் தான் காரணம் அவர் வயது என்று நினைக்க தோன்றுகின்றது...

பாலசந்தர் வரும் பல காட்சிகளில் கைகளில் நடுக்கம் இருக்கின்றது... யாராவது இரண்டு பேரும் இப்போது நடிக்கவைக்க எடு்த்த முயற்ச்சியை பத்து ஆண்டுகளுக்கு முன்பே எடுத்து இருக்கலாம்....நல்ல நடிகர்களை வெகு லேட்டாக கண்டு கொண்டுள்ளது தமிழ்படஉலகம்...

தொலைகாட்சிகளில் நிகழ்ச்சிகளில் வெளுத்து வாங்கிய முளைத்து மூன்று
இலைவிடாத பசங்கள் இந்த படத்தின் பெரிய பலம் ஒரு சில இடங்களில் கொஞ்சம் அதிகபடியாக இருந்தாலும் படத்தின் பலம் இவர்கள்தான்...

பாராதிராஜவுடன் சரிக்கு சமமாக தோழர் என்று அழைத்து நடித்து பேசியபடி நடக்கும் அந்த சின்னபையனின் நடை காட்சி ஒரு சான்று....

எப்போதும் பாலச்சந்தர் ஒரு துப்பாக்கி வைத்துக்கொண்டு சுட்டுவிடுவேன் என்று சொல்லியபடி பாராதிராஜாவை மிரட்டும் இடங்கள் அழகு...
பாலசந்தரின் நடிப்பில் இறந்து போன நாகேஷ் மாடுலேஷனை பார்க்க முடிந்தது...

ஒருசில இடங்களில் பாராதிராஜா 16வயதினிலே காலத்து டயலாக் போல் இழுத்து பேசி அப்புறம் சரி செய்து கொண்டு விட்டார்...

பாரதிராஜா பட்டாபட்டி டிராயருடன் வேட்டியை மடித்து கட்டும் போது பக்கத்து ஊர் கிராமத்தான் கண் முன்...

கல்யாணத்துக்கு பட்டு வேட்டி சட்டை போட்டு கம்பீரமாக நடந்து வரும் கேபி... ஒரு கிழ சி்ங்கம் என்பதை நிருபித்து இருக்கின்றார்...

ஆஞ்சலி டீச்சர் வேடத்தில் நடித்து இருக்கின்றார்... நாங்க எல்லாம் படிக்கும் போது 45 வயசுலதான் டீச்சரா வந்து பாடம் நடத்தினாங்க...
இவ்வளவு இளமையான டீச்சரை இப்போதுதான் பார்க்கின்றேன்... அப்படியே இது போல வந்து பாடம் நடத்தி இருந்தா.. நான் சத்தியமா உருபட்டு இருக்கமாட்டேன்...

டீச்சர் மனசுலு என்ன இருக்கு என்று கேட்கும் போது விஜய் டிவி பொடியன் அவுங்க மனசுல லாங் லாங் எகோ தேர் வாஸ் எ கிங்தான் இருக்கும் என்று சொல்லும் போது தியேட்டர் கொல் என்று சிரிக்கின்றது...அந்த புதிதாய் நடித்து இருக்கும் அந்த அறிமுக நாயகன் ஓகே...

படத்தின் பெரிய பலம் ஒளிப்பதிவாளர் செழியன்தான்...சமீபத்தில் இப்படி ஒரு அழகான பச்சைபசேல் கிராமத்தையும், பிரேமிங்கையும் நான் பார்த்வரை எந்த படத்திலும் பார்க்கவில்லை.. முக்கியமாக அஞ்சலி அறிமுக மழை சாங் அருமை... செழியன் சார் யூ டன் ஏ குட் ஜாப்....

இத்தனை பசங்களை வைத்துக்கொண்டு வேலை வாங்குவது பெரிய விஷயம் என்றாலும்...நிறைய கேரக்டர் அறிமுக காட்சிகளில் குழப்பம் இருப்பதை ஒத்துக்கொள்ளவேண்டும்...எல்லா பிரேம்களிலும் பசங்கள் மீதான இம்பார்டன்ட் பலரை இல்லாமல் செய்து விடுகின்றது..

கருனாஸ் படத்தின் சில காட்சிகளில் கலகலப்பு ஏற்றுகின்றார்..


சில டயலாக்குகள் ரசிக்கும் படி உள்ளன...
உங்க தாத்தா கோவிலுக்கு போய் முருகனைஎப்படி கூப்பிடுவார்? காம்ரேட் முருகன்னா...

படத்தின் இரண்டாம் பாதியில் தியேட்டர் சிரிக்க வைத்தது போல் முதல் பாதியில் சிரிக்க வைத்து இருந்தால்... பார்க்கவேண்டயபடங்கள் லிஸ்ட்டில் சுழி வந்து இருக்கும்....

ரெட்டைசுழி டைம்பாசுக்காக, இமயத்துக்கும் சிகரத்துக்காக, நடித்த பசங்களுக்காக ஒருமுறை பார்க்கலாம்...

படத்தின் டிரைலர்


படக்குழுவினர் விபரம்...

Directed by Thamira
Produced by S. Shankar
Written by Thamira
Starring K. Balachander
Bharathiraja
Anjali
Music by Karthik Raja
Cinematography Chezhiyan
Studio S Pictures
Release date(s) 2010
Country India
Language Tamil


தியேட்டர் டிஸ்க்கி...

இந்த படத்தை சத்தியத்தில் சாந்தம் தியேட்டரில் பார்த்தேன்...எலைட்டில் ஜீடு ரோவில்உட்கார்ந்தேன்.. நல்லகுளு குளு ஏசி... ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை போட்டார்கள்...கதவுக்கு பக்கத்து சீட்டாக இருந்த காரணத்தால் படம் பார்க்கும் போது நடந்து நடந்து போய் திரையை மறைத்து டென்ஷன் ஏத்திக்கொண்டு இருந்தார்கள்...

விசில் சத்தம் ஏதும் இல்லாமல் பார்த்தேன்...

ஒரு பதுமை டிசர்ட்டில் ஸ்டுடியோ 5வுக்கு எப்படி போகனும் என்று என்னிடம் வழி கேட்டது..

பாலசந்தரின் நாடக சிஷ்யன் ஒருவர் குரு நடித்த படத்தை பார்க்கமுதல்நாள் முதல்காட்சி சத்தியத்தில் பார்க்க வந்து இருந்தார்...

எங்கள் தலைவர் உண்மைதமிழனை தேடினேன் அவரை காணவில்லை.. அவரும் பாலச்சந்தரின் சிஷ்யன்தான்...

அன்புடன்
ஜாக்கிசேகர்

(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....

சாண்ட்விச் அண்டு நான்வெஜ் 18+(22•04•2010)

ஆல்பம்...

பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பியது சரி என்று தன் திருவாய் மலர்ந்தவர் பதிவர் டோண்டு மட்டுமே. எல்லோரும் தன் கையாகலாகதா தனத்துக்கு நெளிந்து கொண்டு இருக்கும் வேலையில்... அப்படி செய்தது சரி என்று சொன்னது அவர் மட்டும்தான்...அழுவாச்சி பேட்டிகளை கொடுத்து, அவரை அப்புறபடுத்துவதே பெரும்பாடு ..... போன்ற தத்து பித்துகளை எழுதி வைக்க பதிவுலகம் மொத்தமும் போர் தொடுத்தது... அதில் சிலர் அவரை பர்சனலாக தாக்கியதில் எனக்கு உடன்பாடு இல்லை...அதே போல் அவர் செய்த தவறுக்கு ஒட்டு மொத்த பிராமணர்களை எதிர்பதும் எனக்கு உடண்பாடு இல்லை... இருப்பினும் பிராமண எதிர்ப்பு ஜோதியை டோண்டு அணையாமல் பாதுகாத்த பெருமைக்கு உரியவர்... மிஸ்டர் டோண்டு உங்களுக்கு வேண்டுமானால் அந்த வலி வேதனை தெரியாமல் இருக்கலாம்.. அது நீங்கள் வாழ்ந்த முறையாக கூட இருக்கலாம்... எங்கள் வேதனைகளில் வேல் பாய்ச்சவேண்டாம்.. சீக்கியர்கள்,கர்நாடத்தினர், மலையாளிகள் போல இங்கு ஒற்றுமை இல்லை.. அதனால் இங்கு யார் வேண்டுமானாலும் எதுவும் பேசலாம்...அதே போல் திரு. டோண்டு அப்படி பேச ,இன்னொரு காரணம் வட இந்திய மீடியாக்கள் தமிழகத்தின் ஒட்டு மொத்த குரலாக எப்போதும் சோவையும், சுப்ரமணிசவாமியை கருத்து கேட்பதால்... இவரும் சோ போல கருத்து சொல்லிவிட்டார்... அவ்வளவுதான்...
====================================
ஐபில் கோடிகளையும் அதன் உள்விளையாட்டுகளையும் நினைக்கும் போது...ஒன்று மட்டும் புரிந்தது... இந்திய ரசிகர்கள் கிரிக்கெட் மீதுள்ள அதீத வெறி இங்கே கோடிகளாக கொட்டபடுகின்றது...என் மனைவியின் உறவுக்கார பையன் பெங்களுருவில் இருக்கின்றான்... வீட்டில் கரெண்ட் போனதும் போன் செய்து ஸ்கோர் கேட்டுக்கொண்டே இருந்தானாம்...பெங்களுர் சின்னசாமி ஸ்டேடியத்தில் குண்டு வெடித்ததும் கூட்டம் கலைந்து வீட்டு்க்கு போய்விடுவார்கள் என்று பார்த்தால் அவர்கள் நகரவேயில்லை... போட்டியை பார்த்துவிட்டுதான் நகருவோம் என்று நின்ற போது இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த கிரிக்கெட்டை ஒன்னும் செய்ய முடியாது....
=====================================
மிக்சர்....

இந்த வருடத்தின் மிகப்பெரிய காமெடி..நமது முதல்வர்... எனக்கு பேப்பர் பார்த்துதான் பார்வதி அம்மாள் வந்தது தெரியும் என்று சொன்ன போது எனக்கு சிரிப்புதான் வந்தது...அதைவிட இப்போதும் கடிதம் எழுதுகின்றேன் என்று சொன்ன போது ஏம்பா... சண்முகநாத அந்த பேப்பரையும் போனவையும் எடுத்து கொஞ்ச நாளைக்கு ஒளிச்சி வச்சிடுப்பா... என்று சொல்ல தோன்றியது....

==============================
வெயிலின் தாக்கத்தால் பேருந்தின் முன்புற கண்ணாடிகள் பலதும் எதிர்பாராத நேரங்களில் வெடித்து விடுகின்றது... பல பயணிகள் காயம் அடைகின்றார்கள்.. கோடை காலத்தில் அன்பர்கள் பேருந்தின் முன் சீட்டில் பயணம் செய்வதை தவிர்த்தல் நலம்...
=============================
வாழ்த்துக்கள்...
எனது மாணவியும் பதிவர் தண்டோரா மகளுமான நிலாவின் அரட்டை இந்த வார குமுதத்தில் யூத்சர்வே பகுதியில் வந்து இருக்கின்றது....
=======================
எதிர்பார்ப்பு...
இராவன் படபாடல்கள்...விண்ணைதாண்டிவருவாயா கேட்டு சலித்து விட்டது.. சோ அடுத்தபடத்துக்கு வெயிட்டிங்....
=================

பார்த்தது கேட்டது.....

வேளச்சேரிவழியாக என் மனைவியை அவள் அலுவலகத்தில் இருந்து அழைத்துக்கொண்டு பைக்கில்வந்து கொண்டு இருந்தேன்...டிராபிக் காரணமாக வண்டிகள் ஆமை போல் ஊர்ந்து செல்ல எனது பக்கத்தில் வண்டியில் வந்த காதலர்கள்.. சம்பாஷனை கீழே....

பிளிஸ் சதிஷ் நான் வெளையாட்டுக்குதான் சொன்னேன்...

நீ இப்படி ஹர்ட் ஆவன்னு எனக்கு சத்தியமா தெரியாது...

அவன் எந்த ரியாக்சனும் காட்டாமல் இஞ்சி தின்ன குரங்கு போல் முகத்தை வைத்துக்கொண்டு வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தான்..

மதர் பிராமிசா எனக்கு தெரியாது நீ இப்படி கோச்சுக்கவன்னு... சொல்லறதை சொல்லிட்டேன் அப்புறம் உன் இஷ்டம்பா என்று சொல்லிவிட்டு நயகரா போல் அவள் கண்களில் கண்ணீர் எட்டி பார்த்து...

டிராபிக் கிளியர் ஆக அவன் சட்டென வேகம் எடுத்து போய்விட்டான்...
விரைவு பேருந்தில் போடும் படத்தில் கிளைமாஸ்க்கு முன்னதாக முடிவு தெரியாமல் நாம் இறங்க வேண்டிய ஸ்டாப்பில் இறங்கி விடுவோமே இது போல எனக்கு தலையே வெடித்து விடும் போல் இருந்தது...

அந்த பெண் அப்படி என்ன சொல்லி இருப்பாள்..
அவன் ஏன் எந்த வார்த்தையும் பேசவில்லை..
இந்த சண்டை எத்தனை மணி நேரம் நீடிக்கும் போன்ற வினாக்களோடு இரவில் உறக்கம் வராமல் தவித்தேன்...
குறி்ப்பு... அந்த பெண் அப்படி ஒரு அழகு....
========================================

சேனல் மாற்றிக்கொண்டு வரும் போது.. நேற்று இரவு வசந்த் டிவியில் அந்தரங்க கேள்வி நிகழ்ச்சியில்... ஒரு பெண்மணி நேரலையில் டாக்டர் காமராஜிடம் கேள்வி கேட்டார்கள் ...

டாக்டர் திருமணமாகி 20 வருஷம் ஆகுது டாக்டர்..

சொல்லுங்க..

உச்சகட்டத்துல என் ஹஸ்பண்ட் ........ வாயிலை வாங்க சொல்லறார்...

இது செக்சில் ஒரு பகுதிதான்... அதை முழுங்கிடாதிங்க.... பொதுவா இது போல விஷயத்துல பெரும்பாண்மையான ஆண்கள் கிளர்ச்சி அடையறாங்க.. அதனால இது தப்பு இல்லை... எடுத்துக்கறதும் கொடுக்கறதும் செக்சில் இயல்பும்மா...

எப்படி முழுங்காம இருக்கறது டாக்டர் ...

பக்கத்துல எதாவது கர்சிப் வச்சிகிட்டு அதுல அதை துப்பிடுங்கம்மா....

நான் கையால ஏதாவது செய்துக்க முடியுமா?

செய்யலாம் சிங்கபூர் போன்ற நாடுகளில் அதற்க்குபொருட்கள் கிடைக்கின்றது என்று சொல்லிக்கொண்டு போக...சின்ன தயக்கத்தோடு அந்த பெண்மணி கேள்விகள் கேட்தும் அதற்க்கு டாக்டர் எப்படி நேரலையில் பதில் சொல்வது என்று தெரியாது சற்று வழிந்தபடி பதில் சொன்னதும் பார்க்க நகைச்சுவையாக இருந்தது...

==============================

இந்தவார சலனபடம்.. 18+



=========================
படித்தது...

மன்னா நீங்கள் தேரை ஏற்றிக்கொன்ற ஆட்டுகுட்டியின் தாய் ஆராய்ச்சி மணி அடித்துக்கொண்டு இருக்கின்றது மன்னா...
பலே மட்டன் பிராயனிக்கு எற்பாடு செய்யுங்கள்....

குசி கோவிந்த ராஜன்.. இந்தவார குமுதம்...

=============================
குறுந்தகவல்...
அப்பா அம்மா பாத்துகிட்டா அதுக்கு பேரு ரெஸ்ட்ரக்ஷன்னு சொல்லுவாங்க... இதுவே லவ்வர், பாய் பிரண்டு பார்த்துகிட்டா அதுக்கு பேரு கேரிங் என்ன உலகம்டா இது...
===================
கவிதைக்கும் காதலுக்கும் உள்ள வித்யாசம் என்ன?
கவிதை என்பது வார்த்தைகளின் தொகுப்பு...
காதல் என்பது வயசு கொழுப்பு...

வாசகர் சில்க் சதிஷ்...
===========================

நான்வெஜ்...
தப்பா புரிஞ்சிக்கறதுன்னா என்ன?

நேற்று இரவு எங்கள் பசங்க நல்ல பர்பார்ம் கொடுத்தாங்க... நான் அவுங்களை மறக்கவே மாட்டேன்...நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்..

ஷில்பா ஷெட்டி ஒரு பேட்டியின் போது கூறியவை...

==========================
மனைவி கணவனிடம் கேட்டாள்....
ஒருவேளை நான் உன் நெருங்கிய பிரண்டு கூட உறவு வச்சிகிட்டா? உனக்கு மனசுல என்ன சட்டுன்னு தோனும்....
கணவன் சொன்னான்... நீ லெஸ்பியனான்னு எனக்கு தோனும்....
========================
போன நான்வெஜ் பகுதியில் ஜோக் புரியாமல் எல்லோரும் மண்டை குழம்பி கொள்ள...சரியான பதிலை சொன்ன இலங்கை பதிவர் மாயூரனுக்கு மேய்யாலுமே இந்த விஷயத்துல கற்பூர புத்திதான் ஒத்துக்குறேன்...
நெக்ஸ்ட் மீட் பண்ணறேன்..
=======================

அன்புடன்
ஜாக்கிசேகர்

(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....

வித்யாசமான ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்...


தமிழ் திரைப்படதுறை பல ஒளிப்பாதிவாளர்களை வழங்கி இருந்தாலும் விஜய் ஆம்ஸ்ட்ராங் சற்றே வித்தியாசமானவர் என்பேன்... தமிழ் பதிவுலகத்துக்கு அவரை இருகரம் கூப்பி வரவேற்க்கின்றேன்...

ஒருசில தமிழ்திரைப்பட கேமராமேன்கள் இருக்கின்றார்கள்.. அவர்களிடம் வாய்ப்பு கேட்டு சென்று நின்றீர்கள் என்றால் முதல் கேள்வி..


நீங்க டிஎப்டி யா?
இல்லைசார்...
ஆக்சுவலா நான் டிஎப்டி முடிச்சவங்கள மட்டும்தான் நான் எடுத்துக்கொள்வது... ஏனென்றால் அவர்களுக்கு பேசிக் தெரியும்....

பட் உங்களுக்கு இதெல்லாம் தெரியவே ஒரு படம் வேலை செய்யனும்.. என்று சொல்லுவார்கள்...அவர்களுக்கு வேலை சுளுவாக இருக்க வேண்டும் என்பதற்க்காக அவர்கள்... டிஎப்டி முடித்த ஆட்களை எடு்த்துக்கொள்வார்கள்... என்னை போல் டிஎப்டி முடிக்காதவர்கள்.. ஒளிப்பதிவின் மேல் காதல் உள்ளவர்கள்... திரும்பி வர வேண்டியதுதான்...

நண்பர் ஆம்ஸ்ட்ராங்....ஒளிபதிவுதுறையில் சேர்ந்து அசிஸ்டென்டாக வேலை செய்வதற்க்கு ஒன்றரை ஆண்டுகள் வாய்பு தேடி அலைந்தாராம்...ஆம்ஸ்ட்ராங் டிஎப்டி படிக்கவில்லை...ஒளிப்பதிவின் மீது உள்ள காதலால் ஒன்றரை வருட போராட்டம்...

பொதுவாய் தமிழ் திரைப்படதுறை ஒளிப்பதிவாளர்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல மரியாதை இருக்கின்றது....
இன்றும் வட இந்தியாவில் தமி்ழ்ஒளிப்பதிவாளர்களை யாராலும் அசைத்துக்கொள்ள முடியவில்லை... இப்போது தயாராகி கொண்டு இருக்கும் ஒரு பிரமாண்டமான படம் கூட ஒரு உச்ச வட இந்திய நட்சத்திரம் நடிப்பதாக இருந்து...நமது தமிழ் இயக்குனர் இயக்குவதாக இருந்தது... அந்த உச்ச நட்சத்திரம் ஒளிப்பதிவுக்கு நமதுதமிழ்நாட்டு ஒளிப்பதிவாளரை சிபாரிசு செய்ய,இதற்க்கு முன் அவரோடு வேலை செய்த இயக்குனர் சில கருத்து வேறுபாடுகளால் அவரோடு வேலை செய்ய முடியாது என்று சொல்ல அந்த படமே டிராப் ஆனது... என்பது காற்று வழி செய்தி...தென்னக ஒளிப்பதிவாளருக்கு பாலிவுட் தரும் மரியாதை இது...

சரி இதற்க்கு முன் தமிழ் திரையுலகம் பல ஒளிப்பதிவாளர்களை கடந்து வந்து இருக்கின்றது...நான் ஒளிப்பதிவாளர் டிஎஸ் வினாயகம் அவர்களிடம் வேலை செய்து இருக்கின்றேன்.. மனிதன்,உயர்ந்த உள்ளம் போன்ற பல வெற்றி படங்களின் கேமராமேன்... கமலையும் ரஜினியும் வைத்து பல படங்கள் இயக்கிய எஸ்பி முத்துராமனின் ஆஸ்தான கேமராமேன்...

நான் அவர் வாங்கி வைத்து இருந்த பீட்டா கேமராவில் கேமரா அசிஸ்டென்ட்டாக அவரிடம் இரண்டு வருடங்கள் வேலை செய்து இருக்கின்றேன்... அவராகட்டும் அல்லது கேமரா கவிஞர் என்று செல்லமாக அழைக்கும் பாலுமகேந்திரா போன்ற ஒளிபதிவாளர்களிடம் இருந்து ஒரு சிலரை தவிர யாரும் படம் பண்ணவில்லை...... அதே போல் தங்கள் அனுபவங்களை ஓரளவுக்கு மட்டுமே பகிர்ந்து இருக்கின்றார்கள்....ஆனால் பிசிஸ்ரீராம் வருகைக்கு பிறகு பல கேமராமேன்கள் அவரின் பள்ளியில் இருந்து வெளியே வந்தார்கள்... அது ஆலமரம் கிளை போல் இந்தியா எங்கும் வேர்விட்டு நிற்க்கின்றது....


ஒளிப்பதிவாளர் ஆம்ஸ்ட்ராங்... ஆட்டோகிராப்பில் இருந்து... வேலை செய்து பராதிராஜாவின் ஆஸ்தான கேமராமேன் கண்ணன் அவர்களிடம் தொழில் கற்றவர்.... இவர் டிஎப்டி படிக்கவில்லை... சமீபத்தில் வெளியான புகைபடம் மற்றும் மாத்தியோசி படங்களின் கேமராமேன் ஆவார்....

நேற்று எதெச்சையாக அவர் தளத்தை பார்வையிட்டேன்... அசந்து போய்விட்டேன்.. எளிய தமி்ழில் சினிமா ஒளிப்பதிவு தொழில்நுட்பத்தை பிட்டு பிட்டு வைத்து இருக்கின்றார்.... வாழை பழத்தை உறித்து வாயில் வைத்தும் விட்டார்.. நீங்கள் படித்து விழுங்க வேண்டியதுதான் பாக்கி...
ஒளிப்பதிவாளர் ஆம்ஸ்ட்ராங் எழுதிய
இதே விஷயத்தை நீங்கள் சினிமாவில் கற்றுக்கொள்ளஒரு ஆறுமாதமாவது பிடிக்கும்..... சில கேமராமேன்கள் சொல்லிதர மாட்டார்கள்... அவர்கள் வேலை பளு அது போல்... உங்களுக்கு கிளாஸ் எடுக்க அவர்கள் இண்ஸ்டியூட் வைத்து நடத்தவில்லை...நிமிடத்துக்கு பல லட்சங்கள் தண்ணிராக செலவு செய்யபடும் இடம் அது... சரி நீங்களே கற்றுக்கொள்ள வேண்டும் என்றாலும் நீங்கள் சற்று மந்தம் என்றால்...ங்கோத்தா கொம்மா என்று திட்டு வாங்காமல் அவர் எழுதிய விஷயங்களைகற்றுக்கொள்ளமுடியாது... அப்படி பட்ட சினிமா விஷயங்களை ரொம்ப அற்புதமாக அவரது தளமான விஜய் ஆம்ஸ்ட்ராங் சினிமோட்டோகிராபர் என்ற தளத்தில் தொடர்ந்து எழுதி வருகின்றார்....ரொம்ப எளிய தமி்ழில் சினிமாஒளிபதிவு வித்தையை அவரது தளத்தில் அழகாய் சொல்லி தருகின்றார்...

ஆம்ஸ்ட்ராங்... விகடன் மாணவ நிருபர் திட்டத்தில் சேர்ந்து சில காலம் நிருபராக பணியாற்றிவர்....
இப்போது நான் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் இரண்டாம் ஆண்டு எம்ஏ மாஸ் கம்யூனிகேஷன் அன்டு ஜேர்னலிசம் படித்து வருகின்றேன்...பிராக்டிக்கள் வகுப்புகளில் ஒரு வகுப்பில் எடிட்டர் லெனின் அவர்கள்... ஆம்ஸ்ட்ராங் ஒளிப்பதிவு செய்த புகைபடம் திரைபடத்தின் பாடல் காட்சியை போட்டுகாட்டி எங்களுக்கு பாடம் நடத்திக்கொண்டு இருந்தார்... அதற்க்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் எனது மூன்று குறும்படங்கள் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிட்டார்கள் அதற்க்கு தேர்வு குழு உறுப்பினாராக திரு லெனின் அவர்கள் கலந்து கொண்டு எனது படம் திரையிடலின் போது எனக்கு சால்வை போர்தி கௌரவபடுத்தனார்...
இரண்டு நாள் கழித்து எனக்கு வகுப்பு எடுக்கும் போது ரூபாய் 750 ல் படம் எடுத்த இயக்குனர் இதே கூட்டத்தில் இருக்கின்றார்.. என்று என்னை அறிமுகபடுத்த எல்லோருக்கும் ஒரே ஆச்சர்யம்... அப்போது எனக்கு பெரிய ஆச்சர்யம் புகைபடம் படத்தின் ஆவுட்டோர் காட்சிகள்... அப்படி என் மனதை கொள்ளை கொண்டது.....

நான் கூட எனது தளத்தில் இந்த தொழில் நுட்பத்தை எனக்கு தெரிந்தவரையில் சினிமாசுவரஸ்யங்கள் என்ற தலைப்பில் எழுதி வருகின்றேன்... அதற்க்கு நல்ல மூட் வேண்டும்.. அது 6 எப்பிசோடு அளவில் நிற்கின்றது... ஒளிப்திவாளர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் எழுத்துக்கள் என்னை மேலும் எழுத உற்சாகபடுத்துகின்றன....


ஒருசிலரால் மட்டுமே தான் கற்றுக்கொண்ட வித்தையை மற்றவர்களுக்கு சொல்லிதர எண்ணம் வரும்... அதுவும் எளிய தமிழில்.... நேற்றுதான் அவர் தளத்தை பார்த்துவிட்டு அவருக்கு கைபேசியில் பேசினேன்... அவரை இதுவரை நேரில் பார்த்ததுகூட இல்லை.... ஒரு நல்ல விஷயம் வளரும் பல கலைஞர்களுக்கு பயண்படும் என்பதால் இதனை அறிமுகபடுத்திகின்றேன்... உன்னை மாதிரி ஒரு மந்தமான அளவில் புரியும் சக்தி கொண்ட மனிதனுக்கும் புரியும் அளவில் அதை எழுதி இருப்பது ஆம்ஸ்ட்ராங் அவர்களின் நிருபர் அனுபவத்தின் வெற்றி என்பேன்...


ஆனால் அப்போது கூட அவரிடம் பேசுவேன் என்று நான் என் கனவிலும் நினைக்கவில்லை... இந்த பதிவுலகம் எனக்கு நிறைய நல்ல நண்பர்களை கொடுத்து இருக்கின்றது... அந்த எண்ணிக்கையில் மேலும் நான் நேசிக்கும் சினிமாட்டோகிராபி தொழில் தொடர்பு உடைய நண்பர் ஆம்ஸ்ட்ராங்கும்....

ஒளிப்திவு மற்றும் புகைபடகலைபயில விரும்புகின்றவர்கள் அவசியம் படித்து தெரிந்து கொள்ளவேண்டியதளம் அது.. விஜய் ஆம்ஸ்ட்ராங் சினிமோட்டோகிராபர் என்ற தயத்தில் படித்து உங்கள் கருத்துக்களை பின்னுட்டத்தின் மூலம் பதிவு செய்யுங்கள்...

அன்புடன்
ஜாக்கிசேகர்

(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....

( BIRTHDAY GIRL) 15+ மணப்பெண்ணின் அநியாயம்...

திருமணத்தை பற்றிய எதிர்பார்ப்புகள் எல்லோருக்கும் உண்டு...அதுவும் புது பெண் அவளை பார்த்து பிடித்து பெரியோர்களால் நிச்சயத்து...தினமும் போனில் பேசி... ஆறுமாதத்துக்கு பிறகு கல்யாணம் என்பது ஒரு திரில்தான்... இப்போதாவது செல்போன் இருக்கின்றது மணிக்கணக்காக பேசி தன்னை பற்றி புரியவைக்கலாம்... ஆனால் ஒரு 15 வருடங்களுக்கு முன் இருந்த கல்யாண மாப்பிள்ளைகளை நினைத்து பாருங்கள்...

சிலருக்கு காதல் என்பது வாய்க்காது .. அல்லது அவர்களுக்கு கொஞ்சம் தைரியம் குறைச்சலாக இருக்கலாம்... சிலருக்கு கூச்சசுபாவமாக கூட இ ருக்கலாம்.. அதனால் பெண் அருகாமை என்பது அவர்களுக்கு பெரிய விஷயம்தான்.... அப்படி பட்டவர்கள்... எந்த பெண் பேசினாலும் கிறக்கம் கொள்வர்....
எனது நண்பன் ஒருவன் இருக்கின்றான்... அவன் கிருஸ்த்துவ புரோகிராம்களுக்கு கேமரமேனாக பணியாற்றினான்.... ஊரில் உள்ள பெருமாள் கோவில் குடமுழுக்குக்கு 50 ஆயிரம் நன்கொடை கொடுத்தான்...தினமும் பிள்ளையார் கோவிலுக்கு போய் தோப்புக்கரணம் போடுவது தவறுவதுவில்லை... அப்படித்தான் இருந்தான்... எதோ ஒரு அவுட்டோர் ஷுட்டிங் அங்கு ஒரு நிகழ்ச்சிக்கு ஒரு கிருஸ்த்துவ பெண் வந்து அவனிடம் ரொம்ப எதெச்சையாக பேச அவ்வளவுதான்.... இதுவரை எந்த பெண்ணிடம் பேசாமல் இருந்தவனுக்கு அந்த பெண் பெசியது அவனுக்கு பிடித்து இருந்தது...இதுவரை அவனுக்கும் பெண் பார்த்து எந்த பெண்ணும் செட் ஆகவில்லை... நண்பர்கள் எல்லோருக்கும் திருமணம் நடந்து கொண்டு இருந்தது...

அந்த பெண்ணுக்கு ரொம்பவும் உண்மையாக இருக்க ஆசைப்பட்டான்... பிள்ளையார் கோவில் நிகழ்ச்சி ஒன்றுக்கு கேமராமேனாக போக அங்கு பால் தீர்த்தம் வழங்க பட்டது... இதுவரை அமுதுபோல் அதை குடித்த அவன்.... அதை வாங்கவேயில்லை... கர்தருக்கு விசுவாசமாக இருக்க உறுதி பூண்டான்... அந்த பெண்ணொடு நிறைய பேசினான், நிறைய சுற்றினான்.., தேவி தீயேட்டர் இருட்டில் முதன் முறையாக அவன் வாழ்க்கையில்அந்த பெண்ணின் மார்புதடவி முத்தமிட்டு இருக்கின்றான்....

அதுதான் அவன் 30 வருட வாழ்வில் முதல் பெண் ஸ்பரிசம்.... தியேட்டர் போய் விட்டு மறுநபள் அந்த பெண்ணிடம் எவனாவது வம்பு செய்து இருந்தால், அவர்கள் சங்கு அறுத்து பரலோகத்து பார்சல் பண்ணி இருப்பான்.. அந்த அளவுக்கு அந்த பெண் மீது காதலும் காமமும் கலந்த வெறி அது. ஒரு கட்டத்தில் இவன் காதலை சொல்ல.. உங்களோடு நான் நட்பாய்தான் இதுவரை பழகினேன் என்று அந்த பெண் குண்டை தூக்கி போட்டு விட்டாள்...

காதலுக்காக மதம் எல்லாம் மாறினான்... அந்த பெண் துரோகி என்பது தெரிந்தும் இன்னும் அந்த பெண்ணை நினைத்துக்கொண்டு இருக்கின்றான்... எது பற்றி பேசினாலும் தாங்கி கொள்வான்... ஆனால் அந்த பெண்ணை பற்றி ஒரு வார்த்தை பேசினாலும்.... அடித்த பீருக்கு நாம் தெண்டம் அழவேண்டி இருக்கும்.... இப்படி நிறைய பேர் இருக்கின்றார்கள்.... அப்படி ஒரு பயலின் கதைதான் பர்த்டே கேர்ள் படத்தின் கதை....



BIRTHDAY GIRL படத்தின் கதை இதுதான்...

John Buckingham (Ben Chaplin) பிரம்ச்சாரி வார்ழ்க்கை தனியாக வாழும் ஒரு பேங்க கிளார்க்.... ரொம்ப அமைதியாணவன்...திருமணத்துக்கு பெண் தேடிக்கொண்டு இருப்பவன்..நெட்டில் எல்லாம் அலசி ஆராய்ந்து, Nadia (Nicole Kidman)என்கிற பெண்ணை தேர்ந்து எடுத்தான் அதுவும் ரஷ்யாவில் இருந்து.... அவளை பிக்அப் செய்ய விமானநிலையம் செல்கின்றான்.... அவளை பிக்அப்பும் செய்கின்றான்... அவளுக்கு ஆங்கிலம் தெரியாது... இவனுக்கு ருஷ்ய மொழி தெரியாது... இருவரும்புரிந்து கொள்ளுதல் ரொம்பவும் குறைவாக இருக்கின்றது அதற்க்கு மொழி ரொம்ப பிரச்சனையாக இருக்கின்றது.... அந்த பெண் செப்பு சிலை போல் இருக்கின்றாள்.... ஓரே வீடு... அந்த பெண் செக்சில் ரொம்பவும் போல்டாக இருக்க,,, நேரம் காலம் பார்க்காமல் தூங்கி எழுந்ததும், குளித்து விட்டு வந்ததும், ஆபிசுக்கு போகும் முன் என நேரம் காலம் பார்க்காமல் உறவு கொள்கின்றாகள்...
(இதை படிச்சதும் உடனே வீடியோ லைப்ரேரிக்கு போய் பர்த்டே கேர்ள் டிவிடி கொடுங்க என்று கேட்காதீர்கள்... அப்படி ஒன்னும் சீன் இல்லை.. தமிழ் படம் போல் இலைமறை, .....மறையாக காட்டுகின்றார்கள்..) ஜானுக்கு எல்லாம் கனவு போல் இருக்கின்றது.. வாழ்க்கை ரக்கை கட்டி பறக்கின்றது.... அவள் ஒரு நாள் தனக்கு பர்த்டே என்கின்றாள்... அப்போது அவள் கசின் என்று இரண்டு பேர் வந்து வீட்டில் தங்குகின்றார்கள்..... ஒரு கட்டத்தில் நாடியாவை கத்தி முனையில் மிரட்டி இவள் உனக்கு உயிரோடு வேண்டும் என்றால் உன் பேங்கை கொள்ளை அடித்து பணத்தை என்னிடம் கொடுக்க வேண்டும் என்று சொல்ல அந்த மங்கினியிம் நாடியா மேல் உள்ள கதலால் பேங்கை கொள்ளை அடிக்க..........
அதுக்கப்புறம் இப்ப போய் டிவிடி கடையில சீன் எதிர்பார்ப்பு இல்லாமல் படத்தை வாங்கி பாருங்க...

படத்தில் சில சுவாரஸ்யங்கள்...

ஒரு கவிதையான சஸ்பெண்ஸ் திரில்லர் இந்த படம்...

இந்த பத்துல ரொம்பவும் இளமையான பொண்ணா நிக்கோலை பார்க்கலாம்....

இந்த படத்தோட பெரிய பிளஸ் சினிமோட்டடடோகிராபிதான்... கண்ணுல ஒத்திக்கலாம் பிரேம் பை பிரேம்Oliver Stapleton உழைப்பை பார்க்கலாம்....

அவன் செக்ஸ்புத்தகம் படிப்பதையும், செக்ஸ் வீடியோ பார்ப்தை எல்லாம் ஆராய்ந்து விட்டு அது போல அவனுடன் அவள் செக்சில் ஈடுபட... அவன் உலகை மறக்க ஒரு காரணமாகவும், அந்த பெண்ணுக்காக எதையும் செய்ய ஒரு சாட்சியாக அந்த சீனை வைத்து இருப்பார்கள்..

இந்த படம் டீரயில்டு படத்தை போல இருந்தாலும் இது வேறுதளம்...

இந்த படத்தை தூக்கி நிறுத்துவது பென்செப்லின் நடிப்பும்.. நிக்கோலின் கவர்ச்சியான உடம்பும்தான்...

எவ்வளவு தப்பு செய்தாலும் அந்த பெண்ணிடம் ஒரு சாப்ட் கார்னர் வரும் இடம் ஒரு அழகான கவிதை... திரும்ப காதல் பூக்கும் இடங்கள் அழகானவை...

என்னை பொறுத்தவரை இந்த படம் ரொம்ப நீட்டான பிலிம்.....



படத்தின் டிரைலர்...

படக்குழுவினர் விபரம்...
Directed by Jez Butterworth
Produced by Steve Butterworth
Diana Phillips
Written by Tom Butterworth
Jez Butterworth
Starring Nicole Kidman
Ben Chaplin
Music by Stephen Warbeck
Cinematography Oliver Stapleton
Distributed by Miramax Films (U.S.)
FilmFour (UK)
Release date(s) September 6, 2001 (Venice Film Festival)
February 1, 2002 (U.S.)
June 28, 2002 (UK)
Running time 93 min.
Country United States
United Kingdom
Language English

அன்புடன்
ஜாக்கிசேகர்

(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner