அப்படி ஒரு மனிதனை நீங்கள் சந்தித்து இருக்க முடியாது… மிக மிக இனிமையான மனிதன்… ஆனால் அவர் இன்று இல்லை…
இரண்டு புதன் கிழமைக்கு முன்தான் அவரை நேரில் மனைவியோடு அவரை சந்தித்தேன்… அதுதான் அவரை கடைசியாக பார்த்தது…வீட்டுல வந்து பத்திரிக்கை வைக்க வேண்டியதானே.. சார் மிஸ் ஆயிடும் சார்… அதனால ஆன் தி வேல உங்களுக்கு வச்சிட்டு வீட்டுக்கு ரிலாக்சா வந்து கூப்பிடுறேன் என்று சொன்னேன்.. வீட்டுக்கு போய் அவர் குடும்பத்தோடு அழைக்க நேரம் ஒத்துழைக்கவில்லை… இன்று அவரும் இல்லை.
இதில் கொடுமை என்னவென்றால்… 15 வருடத்துக்கு முன் யார் எனக்கு அவரை அறிமுகப்படுத்தி வைத்தானோ… அவனே எனக்கு போன் செய்து அவர் இறந்து விட்டார் என்று கதறி அழுததையும் அந்த செய்தி கேட்டு நான் வெடித்ததையும் என்னவென்று சொல்வது.
என் மனைவி வெடித்து அழுதார்...