மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங்கிய சாப்ட்வேர் இளைஞனின் சோக கதை (பாகம்4)

(இது கொஞ்சம் கற்பனையும் நிறைய உண்மைகளும் கொண்ட கதை)

மன்மோகன் சிங் எப்படி அமெரிக்க அனுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற துடிக்கிறாறோ, அதே போல் கமல் நிருவை காதலித்த நாட்களில் துடித்து போனான்.


உலகத்தில் எல்லோரும் அழாகாக தெரிந்தார்கள் எல்லோரையும் நேசிக்க தொடங்கினான். உலகத்தில் எவறும் தவறு செய்யாதது போல் உணர்ந்தான். மொத்ததில் பருத்திவீரன் கார்த்தி போல் மாறி போய் இருந்தான்.

கடந்த மூன்று மாதகாலமாக தமிழக எதிர்கட்சி தலைவர் கோடநாட்டில் ஓய்வு எடுத்து ஜாலியாக இருப்பதுபோல் எதுபற்றியும் கவலை கொள்ளாது ரொம் ப ஜாலியான வாழ்க்கை வாழ்ந்தால் நிருபமா...எனெனில் கமல்தான் தினமும் செல்போனில் அவள் அழகை புகழ்கிறானே.

நடிகர் சத்யராஜ் மேல் புவனகிரியில் வசிக்கும் ஒருவன், இந்திய இறையான்மைக்கு வேட்டு வைத்தார் என்று பொதுநல வழக்கு போட்டு தமிழனுக்கு தமிழனே எதிரி என்று எப்படி மீண்டும் நிருபித்தானோ, அதே போல் கமலின் நண்பன் ஒருவன் கமல் பைனல் இயர் படிக்கும் போது நிருபமா அப்பாவிடம் போட்டு கொடுத்தான்.

உண்மை தமிழர்கள் எப்படி சுப்ரமணிய சுவாமியை பார்பார்களோ அதே போல் நிருவை அவள் வீட்டில் வெறுப்பாக பார்த்தார்கள் கமலின் தராதரம் தகுதி போன்றவை குறித்து கேள்வி எழுப்பபட்டது. எதிர்பார்த்த தகுதி இல்லாத காரணத்தில் நிரு பெற்றோர் கம்லை புறக்கனிக்க சொன்னார்கள். நிரு காதலித்தாலும் தொடர்ந்து பிரைன் வாஷ் செய்ததால் அவள் குழப்பிபோனாள் எனென்றால் நிருபமா பணக்கார பெண் என்று வாசகர்கள் எற்கனவே அறிந்ததுதான்

கமல் வீட்டில் அவன் காதல் தெரிந்த போது முதலில் தயங்னகினாலும் பின் தன் மகன் ஆசைக்கு குறுக்கே நிற்க்கவில்லை, ஒரே கேள்விதான் கேட்டார்கள்
“ ஏன்டா இந்த பொண்னு உனக்கு சரியா வருவாளா?” அது சொத்துள்ள பெண் என்பதற்க்கான கேள்வி அல்ல. அவள் உடை உடுத்தி கொண்ட விதம் கமல் பெற்றோரிடம் கேள்வியாக வந்தது.

கமல் எப்படியாவது அவளை கரம் பிடிக்க, நிறைய சம்பாதித்து அவள் எப்படி பிறந்த வீட்டில் இருந்தாலோ அதை விட இன்னும் சிறப்பாக அவளை வாழ
வைக்க உறுதி எடுத்தான் அவன் நேரம் அப்போதுதான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியா பக்கம் பார்வையை திருப்பிய நேரம் அது...


அப்போது அம்மா ஆட்சி தொழில் தொடங்க வந்த பன்னாட்டு நிறுவனங்களிடம்
100சி என்றால் பத்து சி எனக்கு என்று கணக்கு போட, எல்லோரும் பிடரியில் கால் பட துண்டை காணோம் துணியை காணோம் என பென்ஷனர் பாரடைஸ் பெங்களுர் ஓடினார்கள் அதனால் பெங்களுருக்கு கமலும் ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஐமேக்ஸ் தியேட்டர் எப்படி ஐதராபாத்துக்கு ஓடியதோ அதே போல் கமலின் நண்பர்கள் சிலர் ஐதராபாத்துக்கு ஓடினார்கள்.

கமல் நிரு உதட்டில் ஊர்வலம் நடத்தி இருந்தாலும் கல்லூரியில் முதல் மதிப்பெண் எடுத்ததால் பெங்களுருவில் அவனுக்கு மாதம்15000 சம்பளத்தில் வேலை கிடைத்தது கமல் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பாண்டிச்சேரி மகளிர் கல்லூரியில் நிரு கம்யுட்டர் சயின்ஸ் முடித்தால்.

பெங்களுரில் வேலை கிடைத்ததை போன் மூலம் விஷயத்தை சொன்னான் ஏனெனில் நேரில் சென்றால் தன் மனது அவளை பார்த்ததும் மாறி விட கூடாது என்பதற்க்காக. கமல் பெற்றோரிடம் ஆசி பெற்ற பெங்களுர் வந்து வேலையில் சேர்ந்த முதல்நாள் கமல் யோசித்தான்

தான் அவசரப்பட்டுவிட்டோமோ? நிருதான் பேரழகி என்று நம்பி இருந்தான், அவன் வேலை செய்த பன்னாட்டு நிறுவனத்தில் நிறைய நிருபமாக்கள் இருந்தார்கள்

காரணமே இல்லாமல் கொஞச்ம் வெயிட் பண்ணி இருந்தால் நல்ல செல்போன் வாங்கி இருக்கலாம் .... என்ற ஜோக் ஞாபகத்துக்கு வந்தது ..உங்களுக்கு தெரியுமா? அந்த ஜோக்???

(தொடரும்)


அன்புடன் /ஜாக்கிசேகர்

ஒரு விபத்து நேரில் பார்த்தேன் ஆனால் ஏதும் செய்யமுடியவில்லை நீங்களாக இருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்??


நேற்று இரவு மிகச்ரியாக 10,15 க்கு பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் வழியாக நான் கிண்டி வரவேண்டும். லேசாக மழை தூரிக்கொண்டு இருந்தது. நானும் எனது நண்பியும் எனது இரண்டு சக்கர வாகனத்தில் பயணப்பட்டோம். தாம்பரம் மேம்பாலம் ஏறும் போது சரியாக சொல்வதென்றால் பழைய அனுராக தியேட்டர் எதிரில் பலவாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.

நான் வாகனங்கள் உள்ளே பயணித்து சில வாகனங்களை கடந்த போதுதான், அது மிகப்பெரிய விபத்து என்பது புரிந்தது. ஒரு பெரிய சரக்கு லாரி ரோடு ஓர மீடியனில் மோதி கவிழ்ந்து இருந்தது. லாரிக்கு கீழே 45 வயது மதிக்கதக்க ஒருவர் தலை முழுவதும் ரத்தத்துடன், கால் கை கொஞச்ம் வெட்டி வெட்டி சுய நினைவு இல்லாமல் இழுத்துக்கொண்டு இருந்தார்,இன்ஸ்பெக்டர் விறைப்பான உடுப்புடன் மேலதிகாரிகளுக்கும் , தகவல் சொல்லி கொண்டு இருந்தார் . லாரியின் டிரைவரும் கிளினரும் அதற்க்குள் புற முதுகிட்டு ஓடி இருந்தார்கள்.


யாரோ ஒரு புண்ணியவான் ரத்தத்துடன் துடித்து கொண்டுஇருந்தவருக்கு தவித்த வாய்க்கு தண்ணி ஊற்றினார் முன்று அடி தூரத்தில் டீவிஎஸ் 50தன் உருவத்தை இழுந்து அலங்கோலமாகி இருந்தது. விபத்தை பார்த்ததும் என் நண்பி என் தோள் பட்டைபிடித்து கடவுளே என்று முனகினாள் கொஞ்சம் தூரத்தில் சரவணஸ்டோர்
கட்டை பை அந்த உயிருக்கு போராடும் மனிதர் போல் அனாதையாக கிடந்தது.


எல்லா வாகனங்களும் வழிகிடைத்தால் ஓடி விடும் மனநிலையில் இருந்தன...
எனக்கு போக வழி இருந்தும் எனக்கு போக மனம் இல்லை. என்வாகனத்தையும் நண்பியையும் அங்கே நிறுத்திவிட்டு நான் விபத்து நடந்த இடம் நோக்கி நடந்தேன் அதற்க்குள் பின்னால் இருக்கும் வாகனங்கள் விழி ஏற்படுத்தி ஒரு பெரிய பேருந்து செல்ல அதன்பிறகு வந்தத ஒரு பிரஸ் வண்டி அந்த வண்டி எங்கிருந்து வநத்து என்று தெரியவில்லை...

நான்கு பேர் சின்ன டிஜிட்டல் கேமரா உடன் துடித்து கொண்டு இருப்பவரை சேர்த்து படம் எடுத்து கொண்டு இருந்தனர் . தூரத்தில்ஒரு ஏட்டு ஐயா வாக்கிடாக்கியுடன் இன்ஸ்பெக்ட்ருக்கு மிக பவ்யமாக சலாம் போட்டார். இன்னும் அந்த ஒருவர் துடித் கொண்டு இருந்தார். யாரோ ஒருவர் மிக அருகில் பார்த்து விட்டு காது வழியாக ரத்தம் வந்து விட்டது அதனால் பிழைப்பது கடினம் என்றார்.

நான் எதாவது உதவலாம் என்று சென்றேன் இன்ஸ்பெக்டர் இருந்ததால் கூடும் கூட்டம் நேற்று இல்லை, இன்ஸ்பெக்டர் அது ஒரு கடுமையான வேலை பளு என்பதால் அவர் கடுகடுப்புடன். இருந்தார்



தூரத்தில் எங்காவது சைரன் சத்தம் கேட்கிறதா? என்று பார்த்தேன் அதற்க்கான எந்த சாத்திய கூறும் இல்லை. ஒரு வேளை ரத்த சேதம் அதிகம் என்பதால் அம்புலன்ஸ் இன்னும் வர வில்லையோ? இன்ஸ்பெக்டர் இப்போது பேசினார்

செல்போனில் இன்ஸ் பேசியது தெளிவாக கேட்டது “ சார் இப்பதான் பத்து நிமிஷத்துக்கு முன்னாடிதான் நடந்தது ஆம்புலண்ஸ்க்கு சொல்லிட்டேன்..
ஆனால் அந்த இன்ஸ்பெக்டர் நினைத்து இருந்தால் எதாவது மீன்பாடி வண்டி பிடித்து அந்த ஒருவரை அனுப்பி இருக்கலாம். இன்னும் அந்த ஒருவர் ரத்த சகதியில் துடித்து கொண்டு இருந்தார்.

தூரத்தில் என் நண்பி நிற்க்கும் இடம் நோக்கி நான் பார்த்த போது அவள் லேசாக தள்ளாடுவது தெரிந்தது. அருகில் செல்லவும் அவள் என்மீது சரியவும் சரியாக இருந்தது. மயக்கம் வந்தது ஒரு பெண் என்பதால் திடிர் என்று நாலு பேர் வந்தார்கள் . ஒருவர் தண்ணீர் பாட்டிலுடன் ஓடி வந்தார்

வந்த நாலு பேரில் ஒருவர் என்னை ரொம்ப உரிமையுடன் திட்டினார்.
“ என்சார் இந்த மாதிரி இடத்துல லேடிஸ் சோட நிக்கறீங்க” முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை மயக்கம் தெளிவித்து வண்டியில் உடக்ர்ந்து மெதுவாக வண்டி
கிளப்பினேன். அவள் என்னை முதகு பின்னே அனைத்து கொண்டாள். அவள் கைகளில் நடுக்கத்தை உணரமுடிந்தது. யாரோ ஒருவர் திட்டியது ஞாபகம் வந்தது. அந்த விபத்தில் சிக்கிய ஒருவருக்கு சீக்கிரம் முதலுதவி கிடைத்து உயிர் பிழைக்க வேண்டினோம்

எப்போதும் வேகம் எடுக்கும் வண்டி நேற்று நாற்பதுக்கு மேல் தாண்டவில்லை, வீடு திரும்பும் வரை நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. வரும் வழி முழுவதும் வேகமாக அம்புலன்ஸ் ஏதாவது வருகிறதா என ஆர்வத்துடன் பார்த்தேன் மிஞ்சியது ஏமாற்றமே...


இதுவே கிரமமாக இருந்தால் அந்த ஒருவர் அம்புலன்ஸ் வரும் வரை துடித்து கொண்டு இருக்கமாட்டார், இந்நேரம் ஒரு டிராக்டர் அல்லது எவருடைய தோள்களே அம்புலன்ஸ் ஆகியிருக்கும் ..

வீடு வந்து வெகு நேரம் நான்துங்கவில்லை. அலங்கோலமான டீவிஎஸ் 50யும் ,சரவணாஸ்டோர் கட்டை பை யும் நினைவில் வந்து போயின....

ஜாக்கெட் போடாமல் ஆடிய நயன்தாரா... திருந்துமா ? தினத்தந்தி....


தினத்தந்தி ரொம்ப நாளைக்கு பிறகு நேற்றுதான் ஷேர் ஆட்டோக்களால் ஏற்படும விபத்து குறித்து ரொம்ப விளாவரியாக எழுதியது. அதற்க்கு நல்ல ரெஸ்பான்ஸ். நேற்று பஸ் நிறுத்தங்களில், போலிஸ் ஷேர் அட்டோக்களை கண்கானித்தது. அதனால் சென்னை போக்குவரத்து நெரிசல் ரொம்பவும் குறைவாக இருந்தது.


இதுபோன்ற செய்திகள் தொடர்ந்து , வெகு ஜன மக்களால் பெரிதும் விரும்பி வாசிக்கபடும் பத்திரிக்கைகளில் வந்தால் அரசு அதிகாரிகளுக்கும் ஒருபயம் வரும். ஆனால் தினத்தந்தி எந்த கட்சி ஆளுங்கட்சியாக வந்தாலும் அதற்கு ஜால்ரா போட்டு, எழுதுவதையே வடிக்கையாக கொண்டுள்ளது. ஏனெனில் அரசு விளம்பர வருவாய் போய் விடும் என்ற பயம் காரணம். சரி நேற்று வெளியிட்ட செய்திக்கு இன்றைக்கு நகரில் என்ன நிலமை அதற்க்கு அதிகாரிகள் என்ன மாதிரி நடவடிக்கை எடுத்தார்கள் என்பது பற்றி ஒரு பாலோ அப் கொடுத்தால் என்ன குடி மூழ்கியா போய்விடும்???


நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை பாராட்டினால் இன்னும் மேலும் நல்லது நடக்கும்அதை செய்யாமல் நயன்தாரா சத்யம் படத்துக்காக, ஜாக்கட் அணியாமல் துணிச்சலாக ஆடினார் என்பதை கட்டம் கட்டி போட்டு இருக்கிறார்கள். நயன்தாரா காசு கொடுத்தால் அவுத்து போட்டுகூட ஆடுவார். அதுவும் ஜாக்கட் இல்லாமல் துணிச்சலாக ஆடினாராம். அவர் என்ன துணிச்சலாக விபத்தில் கவிழப்போகும் ரயிலை நிறுத்தினாரா? அல்லது துணிச்சலாக வேறு ஏதாவத செய்தாரா? முதல்மரியாதையில் நடிகை ராதா ஜாக்கெட் போடாமல் நடித்தார்,அது வேறு காலகட்டம் இப்போது பல கதாநாயகிகள் பிரா உடன் ஆடுகிறார்கள். அது இன்னும் அந்த செய்தி சேகரித்த நிருபருக்கு தெரியவில்லை போலும்,

நயன்தாரா, ஜாக்கட் ,துணிச்சல் போன்றவை விடுத்து இன்னும் மக்களுக்கு பயன் தரும் பல விஷயங்களை தந்தியிடம் எதிர்பார்க்கிறோம். எனென்றால் எத்தனை பத்திரிக்கை வந்தாலும் தந்திக்கு தமிழ் மக்களுக்குமான உறவு ரத்த சம்மந்தமான உறவு, அதை புரிந்து மக்கள் பிரச்சனைகள் அதிகம் முன்வைக்கபட வேண்டும் என்பதே எனது விருப்பம்

அன்புடன்/ ஜாக்கிசேகர்...

மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங்கிய சாப்ட்வேர் இளைஞனின் சோக கதை (பாகம் 3)

(இது கொஞ்சம் கற்பனையும் நிறைய உண்மைகளும் கொண்ட கதை)


நிரு என்கிற நிருபமா பிறப்பிலேயே பணக்காரி, எல்லாவற்றையும் பணத்தால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டவள். அதற்க்காக தமிழ் சினிமாவில் ஹிரோயின் காரை விட்டு இறங்கியதும், வயது வித்யாசம் பார்க்காமல் பளார் என்று வேலைக்காரர்களை அறையும் ரகம் அல்ல,


புதுச்சேரியில் கமல் படிக்கும் போது வாரம் இரண்டு விஷயங்களை தவறாது செய்வான் , ஒன்று வெள்ளி தோறும் அரவிந்தர் ஆசிரமம் செல்வான். சனி ஞாயிறு இரண் டு நாட்களும் கடற்கரை சென்று பாறைகள் மீது காலார நடந்து வருவான்

புதுச்சேரியில் ரத்னா தியேட்டர் என்ற திரை அரங்கம் இருக்கிறது . இப்போது இருக்கும் டிடீஸ் டால்பி சவுண்ட் எல்லாம் அந்த திரை அரங்க ஒலியுடன்
தாயம் வாங்க வேண்டி இருக்கும். அந்த அளவுக்கு மிக அற்புதமாக சவுண்ட் சிஸ்ட்ம் அமைத்து இருந்தார்கள். வாரம் ஒரு முறை ஆங்கிலப்படம் அந்த தியேட்டரில் கமல் பார்ப்பான். எல்லா படித்த பணக்கார பெண்களும் , ஆண்களும்அந்த தியேட்டருக்கு வருவார்கள். சில நேரங்களில் வெளிநாட்டினரும் இருப்பார்கள்.

கமல் ஹாரிசன் ஃபோர்டு நடித்த புது ஆங்கில படத்தை தன் நண்பர்களோடு பார்க்க போனான். இடைவேளையில் அவன் நண்பர்கள் எல்லோரும் நுரையிரலில் நிக்கோடின் நிரப்பிக்கொள்ள, இவன்மட்டும் கேண்டினில் விற்க்கும் 50 பைசா சம்மோசா வாங்க கூட்டத்தோடு கலந்தான் ( அந்த தியேட்டடிரில் 50 பைசா சமோசா ரொம்ப சுவையானது) அப்போதுதான் ஜீன்ஸ் டீ ஷர்ட்டில் அந்த அழகு பதுமையை பார்த்தான். அதான் கஷ்டப்பட்டு பெயர் வைத்தாகி விட்டதே, நம்ம நிருவை பார்த்தான்.

அப்போதுதான் கமலிடம் அச்சில் ஏற்ற முடியாத வாக்கியம் மனதில் ஓடியது....
அந்த வாக்கியம் இதுதான் , போட்டா இந்த மாதிரி பொண்ணை போ....... எழுதற எனக்கே இப்படின்னா, நேரில் பார்த்த கமலுக்கு எப்படி இருந்து இருக்கும் என்பதை உணர்த்தவே அந்த வாக்கிய பிரயோகம்

நிருபமா அப்போதுதான் ஜஸ்கிரீம் வாங்கி திரும்பவும், ஒரு மட சாம்பிராணி டீ வாங்கி திரும்பவும் கயாஸ் தியிரிப்படி இருவரும் இடித்துக்கொள்ள சூடான டீ அவள் மீது கொட்டியது. பார்த்த எல்லோரும் பதற, சூடான டீ மட்டும் ஒரு குஜாலான உற்சாகத்தோடு அவள் கை மீது பரவியது

நிரு பழக்க தோஷத்தில் வீட்டு ஞாபகத்தில் அவனை முட்டாள் என்று திட்ட அவளை நோக்கி ஒரு கும்பல் அவேசமாய் வந்து “ தே நீயும் தெரியமா இடிச்ச ,அந்த ஆளும்தெரியாம இடிச்சான்” அவனை முட்டாள்னு திட்ற, அப்ப நீஅறிவாளியா? என்று கேள்வி எழுப்ப, கமலும் அவன் நண்பர்களும் அவளை காப்பாற்ற, நிருவும் அவள் நண்பர்களும் கமலுக்கும் அவள் நண்பர்களுக்கும் நன்றி கூறினர். செல்போன் எண்கள் மாற்றிக்கொண்டார்கள். இடைவேளைக்கு பிறகு அவன் படம் பார்த்து கொண்டு இருக்கும் போதே அவன் செல்லுக்கு எஸ் எம் எஸ் வந்தது “ ரொம்ப நன்றி இந்த உதவியை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன் ” குறுந்தகவல் வந்தவுடன் கமலுக்கு படத்தின் மீது கவனம் இல்லாமல் இருந்தான்.


ஹாரிசன் போர்டு கதாநாயகி உதட்டில் ஒத்தடம் கொடுக்க, தேவையில்லாமல் கமலுக்கு நிருவின் பள பள உதடு ஞாபகத்துக்கு வர, படம் எப்போது முடியும் அவளை எப்போது பார்போம் என்று இருந்தது. அதற்க்குள் நான்கு குறுந்தகவல் கைபேசி மூலம் பறிமாறிக்கொண்டார்கள், அந்த குறுந்தகவல்களில் எந்த சவாரஸ்யமும் இல்லாததால் நான் அதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை.


படம் முடிந்து திரும்ப ஏதாவது பிரச்சனை வந்தால் சமாளிக்க கமல் கொஞ்சம் அலர்ட்டாகவே இருந்தான். நல்ல வேளை பிரச்சனை ஏதும் வரவில்லை. அவள் நேராக வந்து அவன் கரம் பற்றினால் ரொம்ப நன்றி என்றால். அப்போதுதான் அவன் அவள் கையை கவனித்தான், அது கொஞ்சம் கன்னி போய் இருந்தது.. அவள் அவனிடம் கார் ஓட்ட தெரியுமா? என்றால் அவன் தெரியும் என்றான், அவனை கார் ஓட்ட சொன்னாள். கமல் தனது பைக்கை நண்பர்களிடம் கொடுத்து அவள் காரில் உட்கார்ந்தான், கார் தியேட்ரில் இருந்து குபேர் பஜார் வழியாக, சின்னகடை தாண்டி கடற்கரை ரோட்டில் வேகம் எடுக்க அதற்க்குள் பிறப்பு வளர்ப்பு பிடித்தது பிடிக்காதது எல்லாம் பேசி முடித்து இருந்தார்கள்

கமலை நிருவுக்கு பிடித்து போனது அவன் கண்ணியமாக பேசியதும் காப்பாற்றியதும் அவள், அவனை உயர்ந்த ஸ்தானத்தில் வைத்தால்.
கமலுக்கு இன்னும் தான் காண்பது கனவா நனவாஎன்று கிள்ளி பார்த்து கொண்டான். கார் மெல்ல பாரதி பார்க் ஓரம் நிற்க, ரோட்டு ஓர கடையில் சூடான வேற்கடலை வாங்கி கொரித்த படியே வெட்டி கதை பேசியபடி அந்த கார் அங்கிருந்து நகர்ந்தது.

தியேட்டர் சம்பவம் நடந்த மூன்றாம் நாள் கமலின் கல்லூரி வாசலில் நீள நிற சுடிதாரில் நிருபமா நின்றாள். கமல் தன்னை நினைத்து ,தன் அதிஷ்டத்தை நினைத்து பெருமை பட்டான்.

அன்றிலிருந்து சரியாக நான்கே முக்கா நாளில் அதே ரத்னா தியேட்டர் இருட்டில் நிருபமா உதட்டில் கமலின் நாக்கு பேரணி நடத்தியது.... (தொடரும்)


அன்புடன்/ ஜாக்கிசேகர்

இரண்டு சாப்ட்வேர் இளைஞர்களின் புலம்பல்


இரண்டு சாப்ட்வேர் இளைஞர்
பேசிக்கொள்கிறார்கள்.....










ஒருவன்/ மச்சி என் டீம்ல அட்டு பிகர் ஒன்னு வந்துஇருக்கு..



மற்றவன்/ டேய் அப்படி சொல்ல கூடாதுடா ,அவளும் ஒரு பெண்ஒதானே?



ஒருவன்/ இல்ல மச்சி அவ முகமும் கலரும் தூன்னு தப்பனும்

போல இருக்கு..

மற்றவன்/ சரி மச்சி ஒருவாரம் கழிச்சி இந்த விஷயம் பத்தி பேசலாம் மாமா,



(ஒரு வாரம் கழித்து )



ஒருவன்/ மச்சி அது அட்டு பிகர்தான் பட் அவளுக்கு நல்ல குணம் டா மச்சி..

மற்றவன்/ எனக்கு இது தெரியும் மச்சி


( மூன்று வாரங்களுக்கு பிறகு)


ஒருவன்/ மச்சான் அவசெம சூப்பரா இருக்கடா


மற்றவன்/ இன்ன மச்சான் அது அட்டு பிகர் அது இதுன்னு சொன்ன...?



ஒருவன்/ மச்சான் அவளை அப்படி சொல்லாதடா , ஏன்ன அவளும்
பெண்தானேடா...



மற்றவன்/ இது எனக்கு முன்னாலேயே இது போல் நடக்கும் தெரியும் மச்சி
இன்னும் இரண்டு மாசம் கழிச்சி அவதான் உலக அழகின்ன
சொல்லுவ பாரு..


ஒருவன்/ எப்படி ம்ச்சி இப்படி போட்டு தாக்கற





மற்றவன்/ இங்க மட்டும் இல்லை உலகத்துல எல்லா இடத்துலயும் சாப்ட்வோ
இஞ்சினியர்கள் பெரிய கனவோடதான் எந்த கம்பெனிக்கும்
போறான், பட் அங்க போனதும் அந்த கம்பேனி சுட்டுசுவேஷனுக்கு
ஏத்தா போல நாம மாறி செக்கு மாட்டு வாழ்கை வாழறது
இல்லையா, அதுபோலதான் இதுவும் ஏன்னா நாம சாப்ட்வேர்
இன்சினியர்ஸ். விரும்பறது கிடைக்கலன்னா, கிடைக்கறத
விரும்புவோம்

ஒருவன்/ ????????????????.................



அன்புடன் /ஜாக்கிசேகர்

மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங்கிய சாப்ட்வேர் இளைஞனின் சோக கதை (பாகம் 2)



(இது கொஞ்சம் கற்பனையும் நிறைய உண்மைகளும் கொண்ட கதை)



கமல் தன் இளவயதில் எந்த விஷயத்தை ஒருமுறைக்கு இரு முறை யோசித்து பார்த்து முடிவு எடுக்க கூடியவன். கிரிகெட்டா? படிப்பா? என்ற கேள்வி எழுந்த போது, படிப்பு மட்டுமே என்று விளையாட்டுக்கு டாட்டா சொன்னவன்.

பண்ணிரெண்டாம் வகுப்பு வரை கேந்திரிய வித்யாலயாவில் படித்தவன்.நல்ல மதிப்பெண் பெற்று , அலுவலக சகாக்கள் மத்தியில் தன் அப்பாவை, தலைநிமர வைத்தவன். வளர்ந்த பையனிடம் அம்மா உச்சி முகர்ந்த போது ரொம்பவே வெட்கப்பட்டவன். தன் தங்கையின் நண்பிகள் கை குலுக்க முன் வந்த போது ,கை கூப்பி வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டவன்.

அவன் வயது ஒத்த நண்பர்கள் எல்லோரும்,கிண்டி ஜோதி தியேட்டருக்கும்,இல்லையென்றால் சரோஜா தேவியும் படித்த போது அதை விடுத்து என்டரண்ஸ் எக்ஸாமுக்கு படித்தவன், உழைப்பின் பலனாக பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பொறியியல் கல்லுரரியில் சீட் கிடைத்தது நன்கு படித்தான் . கமல் எந்த ஆசிரியரையும் பட்ட பெயர் வைத்து அழைத்துது இல்லை.

கமலுக்கு நிறைய பெண் நண்பிகள் வட்டம், எனென்றால் சின்ன மார்போ, பெரிய மார்போ, எந்த பெண்ணாக இருந்தாலும் கண் பார்த்து பேசுபவன். ஒரு முறை அவன் தங்கை அவனை மிகவும் பாராட்டினால் காரணம் , அவள் நண்பிகள்
“ ஹேமா அண்ணன் போல் பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பார்த்தாபோல பார்க்காம ” இவ அண்ணன் ரொம்ப ஜென்டிலா இயல்பா நட்ந்துக்கிட்டான்டிஎன்று சான்றிதழ் கொடுத்தற்க்காக...

கமலுக்கு ஒரே அசைதான் தான் நன்கு படித்து நல்ல நிலையில் இருக்க வேண்டும் அம்மா , அப்பா பார்த்த மணப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும். தான் எப்படி கற்புள்ள பெண்ணை எதிர்பார்க்கிறோமோ, அதே போல் தானும் ஊர் மேயவே கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டவன்.

பொறியியல் நான்கு ஆண்டு முடிந்து மேற்படிப்புக்கு அவன் தேர்வு செய்த கல்லுரரி, பீர் முப்பதுரூபாய்க்கு கொடுத்து விட்டு சைட்டிஷ் அறுபது என கொள்ளை அடிக்கும் பாண்டிச்சேரி அருகே உள்ள கல்லுரரி. எம்பிஎ நன்றாக படித்தான்.

நிறைய விஷயங்களில் கமல் நல்ல பையனாக இருந்தாலும், அவன் பீர் குடிப்பான் அதுவும் வாரத்தி்ற்க்கு ஒருமுறை. எனென்றால் அப்போதுதான் பீர் கூல்டிரிங்ஸ் லி்ஸ்டில் சேர்க்கப்ட்டது( நீங்கள் முந்திரி கொட்டை போல் அவன் குடிகாரனாகி இருப்பானோ? என்று யோசிக்க கூடாது)அப்போது கல்லுரரியில் அறிமுகமானவள் தான் நம்ம ஹிரோயின் லட்சுமி. மன்னிக்கவும் நாம என்ன ஜெயகாந்தன் காலத்துலயா இருக்கறோம்? அவ பேரு மார்டனா நிருபமானு பேர் வைக்கலாம் செல்லமா நிரு... நிருவை பார்த்த உடனே கமல் திருதிருன்னு முழிச்சான்.


சொர்னமால்யாவை பார்த்ததும் பிரகாஷராஜிக்கு எப்படி லைட் எறிஞ்சு மணி அடிச்சதோ? அதே போல இரண்டு பேருக்குமே இங்க மணி அடிச்சு லைட் எறுஞ்சுதுதான் ஆச்சர்யம்.

இப்போது நிருவை பற்றி சொல்வது என் கடமையாகிறது. கமல்ஒரு பெண்ணின் கண் தவிர்த்து பிற இடங்களை, அவன் கவனிக்கிறான் என்றால் அவளின் அழகை நீங்கள் கற்பனை செய்து பார்க்க வேண்டும்.

ஒருவரியில் சொல்வதென்றால் அந்த பெண்ணுக்கு எல்லாமே எடுப்பாக இருந்ததால் கமல் மனது எகிடுதகிடாக தடுமாற ஆரம்பித்தது. லோக்கல் பாஷையில் சொல்வதென்றால் அவள் குமால்டிக்கான அழகாக இருந்தாள்.

அந்த நொடியில் இருந்து சனியனை அவன் பனியனுக்குள் பிடித்து போட்டான், கமல் எனும் நல்லவன்....
( தொடரும்)


அன்புடன்/ ஜாக்கிசேகர்

நடிகர் விஜய் பற்றி வந்த இரண்டு குறுந்தகவல் என்னை சிரிப்பில் ஆழ்த்தியது


நடிகர் விஜய் பற்றி வந்த குறுஞ்செய்தி என்னை சிரிப்பில் ஆழ்த்தியது, உங்களுக்கு சிரிப்பு வந்தால் எனக்கு தெரிவியுங்கள்....

முதல் ஜோக்...

1. ஆசிரியர்/ உலகின் மிகச்சிரிய ஜோக் சொல்லு?
மாணவன்/ டாக்டர் விஜய்


2.டாக்டர்/ இவருக்கு எப்படி இவவளவு அடி பட்டிச்சு??

பஸ்டிரைவர்/ பஸ்லருந்து விழுந்துட்டார்

டாக்டர்/ பஸ் படிகட்டுல பயணம் செய்தாரா?

பஸ் டிரைவர்/ பஸ்ல விஜய் படம் போட்டேன். பழக்க தோஷத்துல,தியேட்டர்

விட்டு வெளியே போறா மாதிரி ஓடற பஸ்லருந்து வெளியே போயிட்டாரு.....


அன்புடன்/ ஜாக்கிசேகர்

மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங்கிய சாப்ட்வேர் இளைஞனின் சோக கதை பாகம் 1


(இது கொஞ்சம் கற்பனையும் நிறைய உண்மைகளும் கொண்ட கதை)

அவன் இனியவன், எல்லோரிடமும் அன்பு பாராட்டுபவன், அவன் சோகமாக இருந்த எவரும் பார்த்ததுஇல்லை பிறந்த உடன் அழுது ஆர்பாட்டம் பண்ணாத குழந்தைகளில் இவனும் ஒருவன்.




மக்கள் திலகம் எம்ஜியாருக்கு பிறகு தாய் குலத்தையும், அன்னையை மதிப்பவன். தந்தை பேச்சுக்கு கட்டுபட்டு நடப்பவன்.

எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும், எவரும் பசியோடு இருக்க கூடாது என்று நினைப்பவன் மொத்தத்தில் அவன் iso9001பிள்ளை . 24 கேரட் கோல்ட்.

அவன் பணிவை பார்த்த பலரும் இது போல் ஒரு பிள்ளை நமக்கு பிறக்க வில்லையே என ஏக்கம் கொள்வர்.பொதுவாக அவன் பக்கத்தவிட்டு பெற்றோர் தன் குழந்தைகளை திட்டும் போது,

“ என்டா? அவன் மூத்திரத்தை வாங்கி மூனு நாளைக்க குடி அப்பவாவது புத்தி வருதா பார்ப்போம் ? ”



என்று திட்டுவார்கள்.

அவன் பிறந்தது வேறு ஊர் என்றாலும் அவன் வளர்ந்தது படித்தது எல்லாம் கல்பாக்கம்தான் அவனின் பெற்றோர் கல்பாக்கத்தில் டவுன் ஷிப்பில் வசித்து வந்தனர் .

அனுசக்தி துறையில் அவனின் அப்பாவுக்கு வேலை. அவனுக்கு ஒருதம்பி ,ஒருதங்கை. டவுன்ஷிப் வாழ்க்கையில் எல்லோர் பெற்றோருக்கும் ஒரு கெட்ட பழக்கம் உண்டு, தன் வீட்டில் ,கார் ,டீவி இருப்பது பெருமை போல் தன் பிள்ளை நன்றாக படிப்பதும்கூட ஒரு பெருமையாக கருதினர். அந்த பெருமைக்கு பங்கம் வராமல் அவன் படித்தான்.

அவன் வீட்டில் எல்லோருமே படித்தவர்கள் என்பதால் அவர்கள் வீட்டில் வாங்கும் ஹின்டு பேப்பர் முழு பயன் அளித்தது.ஏழு மணிக்கு வரும் ஹிந்து பேப்பர் காலை பத்து மணிக்கெல்லாம் தன் முழு கற்பையும் இழந்து விடும்.


அவனை அவன் என்று மரியாதை இல்லாமல் அழைக்கிறோம் அவனுக்க ஒரு பெயர் வைக்கலாமே? எளிதில் வாயில் நுழையும் பெயராக, கமல் என்று வைப்போம்.

(தொடரும்)

அன்புடன் /ஜாக்கிசேகர்

கலைஞர் எடுத்த சரியான முடிவு... (பா.ம.க விலக்கல்)



கூட்டனி ஆட்சி என்பதால் அதிக முறை அனைத்து கட்சி கூட்டம் கூட்டியது முதல்வர் கலைஞர் அவர்கள்தான். போன ஆட்சியில் எப்படி ஆட்சி நட்ந்தது ,எப்படி எல்லாம் கூட்டனி தலைவர்கள் நடத்தப்பட்டார்கள் என்பதை நாடும் அறியும் ,தைலாபுரத்துகாரரும் அறிவார். எந்த செயல் செய்தாலும் மக்கள் தொலைகாட்சியை, லாபத்துக்காக நடத்தாமல் தமிழை வளர்க்க நடத்தப்படுவது பாராட்டுக்குறியதே... ஆனால் நீண்ட கால திட்டங்களான விமான நிலைய விரிவாக்கம், புதிய நகரம் போன்றவற்றை எதிர்த்ததை, யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. அதற்க்குகாரணம் தன் ஜாதி மக்கள் குடியிருப்புகளை கலைத்தால் தன் சாதி ஓட்டுக்கள் கலைந்து விடும் என்பதே... இதனால் வளரும் சென்னைக்கு ஏற்ற விமானநிலையத்தை இன்னமும் விரிவாக்க முடியாமல் அரசு இருக்கிறது. போன ஆட்சியில் எவராலும் எந்த கருத்தையும் அம்மாவிடம் துணிந்து சொல்ல முடியாது.மரியாதை கிடையாது. கூட்டனி கட்சி தலைவர்கள் கிள்ளுகிரையாகவே நடத்தப்பட்னர். அம்மா தரிசனத்துக்காக தைலாபுரத்துக்காரர் காத்து இருந்ததை போயஸ் தோட்டத்து பல்லி,பறவைகள் போன்றவைகள் பார்த்து எள்ளி நகையாட, எங்களுக்கு உரியமரியாதை இல்லை என்று வெளியே வந்ததை நாடு அறியும் . ராமதாஸ் மேல் ஒரே ஒரு விஷயத்தில் அவர்மேல் என்க்கு மரியாதை உண்டு ,அது கல்வி கட்டண உயர்வுக்கு குரல் கொடுத்தால் போன கல்வியாண்டில் நிறைய நண்கொடை வசூலிக்கப்பட்ட கல்வி நிறுவணங்கள் கண்காணிக்கப்பட்டதால், பெற்றோர் சுமை ஓரளவுக்கு குறைக்கப்பட்டது. தன் கலைஞர் ஆட்சியில் எல்லாவற்றிர்க்கும் ஒருநொட்ட சொல் ஒரு நொள சொல் சொன்னால் எவரால் ஏற்றுக்கொள்ள முடியும். பொதுவாக டென்டர்கள் கூட்டனி கட்சி அலோசனை படியே பிரித்து ஆர்டர் கொடுக்கப்படுகின்றது உம் கலர் டிவி, மணல் டெண்டர் போன்றவை.. பா ம க வுக்கு என்று ஓட்டு வங்கி தென்னாற்காடு மாவட்டத்தை தவிர்த்து எங்கும் இல்லை, அதே போல் போன தேர்தலில தென்னாற்காடு மாவட்டம் விருதாசலத்தில், தே,மு,தி,க விடம் தோற்றதே அதற்க்கு ஒப்பற்ற சாட்சி. அதே போல் 2011 ல் நல்லாட்சி பா.ம.க அமைக்க நல்வாழ்த்துக்கள், நமக்கு ராமன் ஆண்டாலும் ஒன்றுதான் ராவணன் ஆண்டாலும் ஒன்றுதான். எம்மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்.

(குறிப்பு /கட்ந்த சில பதிவுகளின் பின்னுட்டத்தில் நான் கலைஞர் விட்டு பக்கத்து விட்டுகாரன் போல் சிலர் எழுதினார்கள். நான் ராதகிருஷ்ணன் ரோட்டில் கடற்கரை செல்லும் வேளையில்,சட்டென மனசு மாறி சினிமா பார்க்கும் ஆசையில் கோபாலபுரம் வழியாக சத்தியம் தியேட்டர் செல்வேன். அவ்வளவே கலைஞருக்கும் எனக்குமான சம்பந்தம்...)
“ எத்தனை நாளைக்கு மேயற மாட்டை, நக்கற மாடு உதைப்பதை பொறுத்துக்கொள்ளும்.” கலைஞர் எடுத்த முடிவு சரியே....

அன்புடன் / ஜாக்கிசேகர்

தசவதாரம் எனது பார்வையில்.....


ஒருவழியாக பதிவுகளில் அளாளுக்கு உசுப்பு ஏற்றி 150ரூபாய் கொடுத்து பிளாக்கில் டிக்கட் வாங்கி சென்னை உட்ல்ண்ட்ஸ் தியேட்டரில் படம் நேற்று பார்த்தேன், சென்னையில் ஒருநாளைக்கு 137 காட்சிகள் திரையிடப்பட்டதால் ,கற்புரம் பால் அபிஷேகம் ,பீர் அபிஷேகம் போன்றவைகள் காண கிடைக்கவில்லை, ரிலீ்ஸ்இரண்டாம் நாள் என்பதால் மயிலாப்பூர் மாமிகள் படையெடுத்து இருந்தார்கள்.படத்தின் முதல் பத்து நிமிடங்கள் நம்மைபிரமிக்க வைக்கிறார்கள்.நிறைய வேடங்கள் பேசுவது புரியவில்லை , அது தியெட்டரின் குறைபாடாக கூட இருக்கலாம், பிறகு ஒருநாளில் பொறுமையாய் படம் பார்க்க வேண்ணணணணடும். அசின் வரும் காட்சிகள் எல்லா வசனங்களும் கத்தலாய் பேசிஇருக்கிறார் .மற்றபடி படம் கமலின் உழைப்புக்காக இந்த படத்தை எல்லோரும் ஒருமுறை பார்க்க வேண்டும். ஏனெனில் கோடம்பாக்கம் ஏரியா ஓத்துக்கிட்டுவாரியா என்ற பாடலுக்காக அட்டு படங்களை எல்லாம் ஓடவைத்தவர்கள் நாம்.. படம் முடி்ந்த போது எல்லோரும் எழுந்து நின்று கைதடடினார்கள் ,அதுதான் கமல் என்ற கலைஞனுக்கு கிடைத்த வெகுமதி படத்தின் எதோ ஒரு ஒட்டாத தன்மை இசை மட்டுமே, இருப்பினும் படம் பற்றிய இடுக்கை மற்றும் பதிவுகளில இயக்குநர் ரவிக்குமார் படத்திற்க்கு படம் கோட்டு போட்டூ ஆடுவதையெல்லாம் விமர்சிப்பது கொஞச்ம்.......


அன்புடன் / ஜாக்கிசேகர்

நடிகர் கமல் தவறு செய்து விட்டார்?



வரும் 13 ம் தேதி ரீலிஸ் தேதி தசவதாரம் படத்திற்க்கு வைத்திருக்கும் நிலையில், திரும்பவும் தசவதார படத்தை தடை செய்ய சப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்திருக்கிறது ஒரு டுபாக்கர் குழு. சரி இது மாதிரியான எதிர்ப்புகள் ஏன் மற்ற நடிகர்கள் படத்திற்க்கு எழுவதில்லை. யோசித்து பார்த்தால் இதற்க்கு அப்பட்டமான பயம் ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது, எப்படி? ரொம்ப சிம்பிள், அவர்கள் அனைவரும் ரசிகர்மன்றம் வைத்து இருக்கிறார்கள், ஆனால் கமல் எப்போதே ரசிகர் மன்றங்களை கலைத்து நற்பணி மன்றங்களாக்கிய பெருமை தமிழ் நடிகர்களில் கமல் மட்டுமே. எனெனில் ரசிகர் மன்ற போர்வையில் ஒரு ரசிகன் வாழ்கை வீணாக கூடாது என்ற நல்ல எண்ணம் தான். ரசிகர் மன்ற போதையை கமல் ஊட்டியிருந்தால் யார் வழக்கு போட்டாலும் அங்கே குரல் கொடுக்க ஒரு கூட்டம் இருக்கும் அது கல் வீசும் அல்லது எதிராளியின் அம்மாவை சந்தேகிக்கும் , அதானல் வழக்கு போடும் மடைசாம்பிராணிகளுக்கு ஒரு பயம் இருக்கும். ஒருபடம் வந்து எதிர்ப்பு தெரிவித்தால் பரவாயில்லை, அதே போல் சென்சார் போர்ட் இல்லாத நாட்டில் படம் எடுத்தால் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தால் பரவாயில்லை, சென்சார் போர்ட் படததிற்க்கு் U சான்று அளித்துள்ளது. இங்கே இந்தியாவில் கொஞ்சம் நல்லவனாக இருப்பது என்பதே தகுதி இழப்புதான்.... நீங்கள் என்ன சொல்கிறீர்கள்???

அன்புடன் /ஜாக்கி சேகர்

கற்றது தமிழ் ராமின் அடுத்த பதிவு


கடந்து போனவைகள் தொடரும

என்ற தலைப்பில் தான் பால்யகால நினைவுகளை நம் பதிவர்களுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.. பதிவை படித்து விட்டு அவருக்கு பின்னுட்டம் இடுங்கள் . அவர் நிறைய எழுத வேண்டும் என்று அன்பு கட்டளையிடுங்கள்


அன்புடன்/ ஜாக்கிசேகர்

கலைஞர் அழகிரி பேச்சை கேட்டு சன் டீவியுடன் மோதக்கூடாது...



கலைஞர் குடும்பத்தில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் தனது மகன் அழகிரி பேச்சை கேட்டு சன்டீவியை பகைத்து கொள்ள கூடாது. ஏனெனில் அழகிரியின் ஆளுமை என்பது மதுரை நகர் மட்டுமே ஆனால் சன் டீவியின் ஆளுமை என்பதுஉலகளாவிய ஆளுமை.. அதனை கலைஞர் புரிந்து கொள்ள வேண்டும். பாசம் கண்ணை மறைக்க கூடாது.ஏனெனில் இப்போதே அவர்கள் வாரம் இரண்டு சரத்குமார் படம் ,இரண்டு விஜயகாந் படம் போடுகிறார்கள் .அதே போல் விலைவாசி உயர்வை பாரபட்சம் இல்லாமல் காட்டுகிறார்கள் இவைகளை வர வேற்க்க வேண்டும்தான்.ஒரு நல்ல மீடியா எப்படி இருக்க வேண்டுமோ, அதுபோல் இப்போது பாரபட்சம் இல்லாமல் சன்டீவி நடந்துகொண்டு இருக்கிறது. (உம்) வைகோ நடந்துவருவதை மட்டும் காண்பிக்காமல் அவர் பேசுவதை காட்டி அவர் பிறவி பயன் அடைய காரணமாக இருக்கிறார்கள், அதே போல் சிலை போல் இருக்கும் ஜெயலலிதா போட்டோவை காட்டி செய்திகள் போடும் அவர்கள் இப்போதெல்லாம் அன்னை மலர்ந்த முகத்துடன் பத்திரிக்கையாளர்களுடன் உரையாடும் காட்சிகளை காட்டுகிறார்கள்.நல்ல விஷயம்தான் இப்போதாவது அவர்களுக்கு புத்தி வந்ததே என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டும். அதே போல் ஜெயாடீவி சரியாக நான்கு வருடங்கள் சின்ன எதிர்ப்புகள் தெரிவித்துவிட்டு தேர்தலின் போது சாக்கடையோரம் வாழும் மக்களை படம் எடுத்து போட்டு விட்டு தமிழ்நாடே அதுபோல் இருப்பதாக தொடர்ந்து தேர்தல் வரை அவதூறு பரப்புவார்கள். இதுதான் கடந்தகாலங்களில் நடந்தது. அதேபோல் தேர்தல் நேரத்தில் சன்டீவியும் சாக்கடைப்க்கம் போய் படம் எடுக்க விட கூடாது. என்னதான் மாய்ந்து மாய்ந்து செய்தாலூம் தேர்தலின் போது சாக்கடை காட்டி நம் தமிழ்நாடு இப்படிதான் இருக்கிறது என்றால்அதை கண்ணை முடி எற்றுக்கொள்வார்கள். எனெனில் காமராஜரை தோற்கடித்து ,அரிதாரம் பூசியவர்களை 5 தடவை முதல்வராகஆக்கியவர்கள் நாம்.. கலைஞர் உள்ளாட்சி தேர்தல் வைத்து எல்லா கிராமங்களிளும் வளர்ச்சி பணிகளை நான் கண்கூடாக பார்த்து இருக்கிறேன். ஆத்திரத்தில் தற்கொலை செய்து கொண்ட என்கிராமத்து பக்கத்துவீட்டுகாரர் மனைவி (சித்ரா) நான்கு பெண்களுடன் தேங்காய் நாரில் கயிறு திரித்து காலம் தள்ளி கொண்டு இருந்தார் கெரசின் வாங்க நாய் போல் அலைவார் ,டீவி பார்க்க அந்த பிள்ளைகள் என் விட்டுக்குவருவார்கள்,அரிசி வாங்க ரெஷனுக்கு அலைவார், என் அம்மா எங்களை சின்ன வயதில் வளர்க்க கஷ்ட்டப்ட்டதுபோல் அவரும் கஷ்டப்பட்டு கொன்டுஇருந்தார். கலைஞர் அரியனை ஏறினார், அந்த குடும்பம் 3 வேளை வயிறார இரண்டு ருபாய் அரிசியில் சாப்பிட்டார்கள். இலவச டீவி கொடுத்தார்கள் கொஞ்சம் குடும்பம் கலகலப்பானது. கேஸ் அடுப்பு கொடுத்தார்கள் நாயாய் கெரசினுக்கு அலைவது நிறுத்தப்பட்து , கிராமங்களுக்கு சிமெண்ட் ரோடு போடபட்டது. விஷம் போல் ஏறும் இந்த பெட்ரோல் விலை உயர்வு அதனால் ஏற்படும் விலைவாசி உயர்வினால் கலைஞர் அடுத்த முறை வருவது சந்தேகமே இருப்பினும் அப்படி வந்தால் இன்னும் பல சித்ரா , மல்லிகா, செல்லயி போன்ற பெண்கள் வாழ்வில் மலர்ச்சி ஏற்படும். அதற்க்க கலைஞர் சன்டீவியை பகைத்து கொள்ள கூடாது அதே போல் சன்டீவி நடுநிலமையோடு, இப்போது போல் எப்போதும் இருக்க வேண்டுகிறேன்.

அன்புடன் /ஜாக்கிசேகர்

ஜூன் மாத pit புகைபட போட்டிக்கான படங்கள்














இந்த புகைபடம் கடலூர் சில்வர் பீ்ச்கோடை விழாவில் எடுத்தது, ரோந்து சென்ற தொப்பையில்லாத இளம் காவலர்கள் கட்டுமரத்தில் உட்கார்ந்து கடலை சாப்பிட்டுக் கொண்டே, கடலை போட்டுக்கொண்டு இருந்த போது எடுத்தது. தூரத்தில் இளம் பெண்கள் இங்கே தொப்பையில்லா இளம் காவலர்கள் (good combination) போட்டிக்கான படம் இதுவே....















இந்த படம் அதே விழாவில் எடுத்ததுதான். வீட்டில் ஓய்வில் இருக்கும் வயதில், அந்த ஜோசிய ரோபோ பொம்மையை மாலை3.30 மணிக்கெல்லாம் சுடும் வெயிலில் வியற்வையுடன் உதவிக்கு யாரும் இல்லாமல் அந்த ரோபோ பொம்மையை ரெடி செய்து கொண்டு இருந்தது மனதை கணக்க செய்தது.அவர் வீட்டில் அன்று இரவு உலை கொதிக்க வேண்டு்ம் அல்லவா? பிட் போட்டியில் நான் கலந்து கொள்வது இதுவே முதல் தடவை
படத்தை பாருங்க கருத்தை தெரிவியுங்க....








இவள் பணக்கார குழந்தைகளுக்கு விளையாட்டு பொம்மை விற்றால்தான் இவள் குழந்தை ஒரு வேளை கஞ்சி குடிக்க முடியும்

அன்புடன் / ஜாக்கிசேகர்


இந்த கோடையில் நான் இயக்கிய குறும்படம் பற்றி.....

நான் 3 கதைகளோடு குறும்படம் எடுக்க என் சொந்த ஊர் கடலூர் சென்றேன் , நான் தேர்தெடுத்த நபர் மிகுந்த வேளை பளு இருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை . அப்புறம் கதையை மாற்றி வேறு ஒரு படம் எடுத்து விட்டு வந்தேன். கதை இது தான்.திடிர் விலையேற்றம், பணவீக்கம்,ஐடி நிறுவனங்களால் ஏற்பட்ட வாடைகையேற்றம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்க பட்ட 55 வயது பெரியவரின் கதை இது. படத்தின் பெயர் பரசுராம் வயது55 நிறைய டைட்டில்கள் தேடினேன் யோசித்தேன் இந்த தலைப்பு நன்றாக இருந்ததால் வைத்து விட்டேன். பொருளாதார சுமை காரணமாக நிறைய செலவுகள் குறைத்து விட்டேன் , நானும் அந்த பெரியவர் மட்டுமே பல பகுதிகளுக்கு சென்று எடுத்தோம். என்ன, ஒன்னரை பக்க டயலாக் பேச அதுவும் ஒவ்வோறு வரியாகபேச அவர் எடுத்து கொண்ட நேரம் 3 மணி நேரங்கள் அவரை திட்ட கூட முடியவில்லை. ஆனால் இந்த கத்தரி வெயிலில் அவரை நிறைய இடங்களில் நடக்க விட்டு எடுத்தேன், இருப்பினும் என்னை பொருத்தவரை படம் ரொம்பவும் திருப்தியாகவந்து உள்ளது . எனெனில் இதற்கு முன்பு நாடக அனுபவம் சினிமா அனுபவம் ஏதும் இல்லாதவர்கள்
இருப்பினும் நல்ல செலவு செய்து எடுத்து இருந்தால் இன்னும் நிறைய குறைகளை தவிர்த்து இருக்கலாம்

அன்புடன் /ஜாக்கிசேகர்

சன் நியுஸில் பேட்டி கொடுக்கும் தமிழர்கள் பேச்சை கேட்டுஇருக்கிறீர்களா?


சன்நியுஸ் சேனல் அரை மணிக்கு ஒருமுறை செய்திகள் தருவதால் ஏதாவது செய்திகள் உடனுக்கு உடன்தந்தே ஆக வேண்டும்.சில செய்திகள் மிக சிறப்பாக இருக்கும், சிலது அட்டு கேசாக இருக்கும். நாம் செய்தி தரத்தை பற்றி பேச வர வில்லை. செய்திகளில் தலைகாட்டும் தமிழர்கள் மனைவியர் பற்றி பேச இருக்கிறோம். உ/ம் ஊட்டியில் மலர் கண்காட்சி என்று வைத்துக்கொள்வோம். அதை சன்நியுஸ் பேட்டியாளர், ஒரு இடை சிறுத்த இளம்பெண், இடுப்பு சுற்றளவு பெரிதாக கொண்ட நடுத்தர வயது பெண்மணி, ஒரே ஒரு ஆண் அதுவும் கடமைக்காக. பேட்டி எடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் இப்படித்தான் பேசுவார்கள், ரொம்ப என்ஜாய்புல்ல இருக்கு, இந்த கிளைமேட் ரொம்பவும் சூப்பர், பிளவர்ஸ்லாம் ரொம்ப பியுட்டிபுல்ல இருக்கு, எங்கப்புல்ஸ் நிறைய பேர் வராங்க பட், ரொம்ப கிரவுடு அதிகம். பொதுவாக இப்போதெல்லாம் ஆங்கிலகளப்பில்லாமல் தமிழ் பேச முடியாது. அப்படி பேசினாலும் இயக்குனர் சீமானை நக்கலாக பார்பதுபோல் பார்க்கும் நம் சமுகம், பொதுவாக நடுத்தர வயது குடும்ப பெண்கள் பேட்டி கொடுக்கும் போது, கஷ்டப்பட்டு ஆங்கில வார்த்தைகள் யோசித்து இணைத்துபேசுவதுதான் ரொம்ப வருத்தமாக இருக்கிறது. இயக்குனர் சீமான் மிக அழகாக சொல்வார், வெள்ளகாரன்கிட்ட வணக்கம் சொல்லாதிங்க, பெத்த அம்மாகிட்ட குட்மார்னிங் சொல்லாதிங்க. எவ்வளவு சத்தியமான வார்த்தை இது. ஆகவே தமிழர்களே ஒரு வாக்கியத்ததை ஒன்று முழுதாக ஆங்கிலத்தில் பேசுங்கள், அல்லது தமிழில் பேசுங்கள நடுநடுவே ஆங்கிலவார்த்தைகள் யோசித்து பேச வேண்டாம் என்கிறேன் செய்வீர்களா?
முக்கியமாக சீரியல் பார்த்து ரொம்பவே கெட்டுபோயிருக்கும் நடுத்தர குடும்ப தமிழ் பெண்மணிகள்...


அன்புடன் /ஜாக்கிசேகர்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner