சஞ்சய் காந்தி திருமணம்...பதிவுலக நண்பர்களோடு சந்திப்பு..



சஞ்சய்காந்தி யார்-?எனக்கு தெரிந்து தமிழ் பிளாக்கர் போரம் ஆரம்பித்த போது அதில் வந்து கும்மி அடிக்கும் போது அந்த பெயரை நான் கவனித்து இருக்கின்றேன்.

அதன்பிறகு  சஞ்சய் திருமண இன்விடேஷன் வந்த போது வாழ்த்து சொன்னேன்...கேபிள் பஸ்சில் நான்  பேசும் போது,அண்ணே அவசியம் வந்துடுங்க என்று சஞ்சய்   அழைத்த போது திருமணத்துக்கு போக வேண்டும் என்று முடிவு செய்தேன்...


பட்டர்பிளை சூர்யா  ஞாயிறு காலை ரயிலில் மொரப்பூரில் நடக்கும் சஞ்சய் கல்யாணத்துக்கு போக டிக்கெட் புக் செய்கின்றேன் என்று சொன்ன போது அண்ணன் உதா ஜகா வாங்கினார்..

வெள்ளிக்கிழமை காலையில் மணிஜி.. ஜாக்கி கார்ல இடம் இருக்கு வரியா? என்று கேட்க.. நான் அன்று நண்பர் ஒருவருக்கு சில போட்டோக்கள் எடுத்து தரேன் என்று வாக்கு கொடுத்து இருந்தேன் அதனால் என்னால் வர இயலவில்லை என்று சொன்னேன்.


சனிக்கிழமை மதியம் பேருந்தில் போகலாம் என்று முடிவு செய்தோம்  நான் உதா, எறும்புராஜகோபால்,குட்டி தினேஷ் என  கிளம்ப முடிவு செய்தோம்...சூர்யா அவர்களின் உறவுக்கு உடல்நிலை சரியல்லாத காரணத்தால் அவரால் வரஇயலவில்லை

மதியம்2மணிக்குமேல் சென்னை  கோயம்பேட்டில் அசம்பல் ஆனோம்...ஒரு ஓசூர் பேருந்து எங்களை கடக்கையில் அதனை ஓடிப்பிடித்து நிறுத்தினோம்.. மூன்று பேருக்கு மட்டும் இடம் இருக்கின்றது.. ஆம்பூர் போனதும் இரண்டு சீட் காலியாகும் என்று சொன்னார்கள்... அதனால் எறிக்கொண்டோம் நிறைய பேசினோம்....

இந்த இரண்டு வருட காலத்தில் பதிவுல நண்பர் ஒருவருக்கு வெளியூரில் நடக்கும் திருமணத்துக்கு நான் செல்வது இதுவே முதல் முறை..சஞ்சய் எனக்கு பெரிய பழக்கம் எல்லாம் இல்லை... என்னவோ போக வேண்டும் என்று தோன்றியது...

கிருஷ்ணகிரி பைபாசில் பேருந்து நின்றது.. இங்கே தருமபுரிக்கு பேருந்து கிடைக்கும் என்று சொன்னதை நம்பி இறங்கிவிட்டோம் மறுநாள் முகூர்த்தநாள் என்ற காரணத்தால் கூட்டம்  பல ஊர் பேருந்துக்கு பைபாசில் தவம் கிடந்தார்கள்.

அதனால் திரும்ப  ஷேர் ஆட்டோ பிடித்து கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் போய் அங்கே இருந்து ஒரு அரசு பேருந்து பிடித்து நால்வரும்   ஒன்றாக உட்கார்ந்து கொண்டு பயணித்தோம்.

வழியில் மயிலுக்கு போன் செய்ய அனைவரும் மண்டபத்தில் மாப்பிள்ளை அழைப்பில் பிசியாக இருந்தனர்.. தம்பி பரிசல் நான் வருவதை போன் செய்து உறுதி செய்து கொண்டார்...

தருமபுரியில் போய்  இரவு 9 மணிக்கு இறங்கினோம்... அதியமான் அரண்மணை என்ற வித்யாசமான நியான் போர்டு என் கண்ணில் பட்டது... அது லாட்ஜ்.. அதுக்கு பக்கத்தில் இருக்கும் சரவணா இன்னில் ரூம் போட்டு இருப்பதாக தம்பி சஞ்சய் சொல்ல அங்கு சென்றோம்...

பசி அதிகம் எடுத்த காரணத்தால் எல்லோரும் சாப்பிட முடிவு எடுத்தோம்... பட் என்னை தவிர  எல்லோரும்  சைவ பிராணிகளாக இருந்தார்கள்.. எனக்கு  வந்த களைப்புக்கு ஒரு குவாட்டர் விட்டால் நன்றாக இருக்கும் என்பதால் ஒரு மேன்ஷன் அவுஸ் வாங்கினேன்.. இரண்டு கட்டிங் போய் மூன்றாவது கட்டிங் தீர்த்வாரி நடக்கும் போது மணஜி போன் செய்து ஜாக்கி ஒரு மூனு குவாட்டர் வாங்கி வச்சிடு என்று அன்பு கட்டளை போட.. நான்   மூன்று வாங்கி திரும்புகையில் அதிக போதையில் ஒரு அண்ணன் என்மேல் மோதவர சட்டென எதிர்பார்க்காமல் நான் நகர  மூன்றில் ஒரு குவாட்டர் பிடி நழுவி பூமியில் ஈரம் ஆனது... தலையெழுத்தை நினைத்துக்கொண்டு.. அடுத்த   ஒன்றை வாங்கி மூனறாக சேர்ப்பித்தேன்.
(புதுகாதலியுடன் பப்ளிக்கா அதன்  மேல் சாய்ந்து கொண்டு  வெட்கம் இல்லாமல்...)

ரூமுக்கு திரும்ப போனேன்... மணிஜி ரூமில் அனைவரும் ஒன்று கூடினோம்.. நான்,மணிஜி,அகநாழிகை வாசு,மயில்ராவணன்,எறும்பு.குட்டிதினேஷ், உண்மைதமிழன் என்று எல்லோரும் ஒன்று கூட சோமபானம் சுராபானம் ஆறாக ஓடத்துவங்க...வடகரைவேலன் அண்ணாச்சி தரிசனம் கொடுத்தார்..

.இதில் ஒப்புக்கு சப்பானியாக அண்ணன் உதா,குட்டிதினேஷ்.எறும்பு போன்றவர்கள் பாவையாளர் மாடத்துக்கு சென்று விட  நண்பர் நந்து வந்து நாலு ஆப் பாட்டில்களை டெலிவரி செய்ய, இன்னும் உற்சாகமாக அந்த அறைகளைகட்டியது..

நான் முதன் முறையாக வடகரைவேலன் அவர்களை சந்தித்தேன்.. தெளிவாக தீர்க்கமாக பேசுகின்றார்..அவர் பேச்சினை நான் ரசித்தேன்..

பத்தரை மணிக்கு ஆரம்பித்தது நான் படுக்கையில் லைட்டாக சாய நண்பர் வாசு தனது கேமரா மூலம் படம்பிடிக்க ஆரம்பித்தார்...முதலில் மயில் தனது தோகையை லைட்டாக விரித்தது  ஜெமோ சிறந்த எழுத்தாளர் என்று ஆரம்பிக்க மணி,வடகரை,வாசு போன்றவர்கள்  திரவ டம்ளர்களுடன் இலக்கியம் வளர்க்க,படிச்சாலும் படிக்காவிட்டாலும் ஓத்தா நாமளும் போய் ஜோதியில ஐக்கியம் ஆகலைன்னா நம்மளை யாரும் இலக்கியவாதி கூட்டத்துல ஒத்துக்கமாட்டாங்க  என்ற காரணத்தால் நானும் ஜோதியில் கலந்தேன்..

அடுத்து உதாவும் பொறுக்கமுடியாமல் வெறும் கையுடன் ஜோதியில் கலக்க, குட்டி தினேஷ், எறும்பு ரெண்டு பெரும் பார்வையாளர் மாடத்தை விட்டு இறங்கவேயில்லை.

முதலில் மயில் லைட்டாக தொகை விரித்து, தண்டோரா லைட்டாக முதலில் தமுக்கு அடித்தது,பிறகு வேகமாக முரசு அறிவித்தது..மயில் தொகைவிரித்து காட்டேரியாக ஆடத்துவங்க வேலன் அண்ணாச்சி ஈக்குவலைசர் போல ஏற்ற இறக்கத்தோடு பேசினார்... இலக்கியம் கண்விழித்தது,3 மணிவரை போராடி சோர்ந்து போனது...

காலையில் ஆறு மணிக்கு எல்லாம் எழுந்து எல்லோரும் ரெடியானார்கள்.. உதா, அண்ணாச்சி,எறும்பு.தினேஷ் எல்லோரும் முன்னே செல்ல, நான்,மயில்தண்டோரா வாசு நால்வரும் மணிஜி காரில் பயணத்தோம் சும்மா சொல்லக்கூடாது.. புது கார் நன்றாகவே இருந்தது..

மொரப்பூருக்கு  காரில்  பயணித்தோம்.. சும்மா சொல்லக்கூடாது ஒரு ஸ்பீட் பிரேக்கர் இல்லை..மண்டபத்துக்கு போய் இறங்கினோம்...ராம்ராஜ் வேட்டி சட்டைகள் மொத்தமாக குத்துகைக்கு எடுத்து வந்தது போல எல்லோரும் வெள்ளைவேட்டி வெள்ளைசட்டையுமாக தோளில் கம்பல்சரி  துண்டோடு இருந்தார்கள்..

எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஒரு சொம்பும் புளியமரமும் இருந்தால் எவரை வேண்டுமானலும் தமிழ்சினிமா பஞ்சாயத்து தலைவராக நடிக்க வைத்து இருக்கும்... அத்தனை பேரும் மீசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இருந்தார்கள்.

எனக்கும் வேட்டி சட்டையில் இருக்க ஆசைதான்... எந்த நேரத்தில் நான் போட்டு இருக்கும்  ஜட்டியின் பிராண்டை நானே விளம்பரபடுத்திவிடும் அபாயம் இருப்பதாலும் ரம்பாவுக்கு பிறகு அதிகமாக தொடை காட்டியவன் என்ற பெருமைக்கு  சொந்தக்காரனாக மாறிவிடுவேன் என்பதால் அந்த எண்ணத்தை தவிர்த்தேன்.

ஆனால் பரிசல் வேட்டி சட்டையில் வந்து இறங்கினார்..என்னை பார்த்தும் வாஞ்சையோடு வந்தது கைகுலுக்கி கொண்டார்..தனது மனைவி மற்றும் பிள்ளைகள் இரண்டையும் அறிமுகபடுத்தினார்....சின்னவளிடம் எத்தனாவது படிக்கின்றாய் ? என்று கேட்டேன்.5ஆம் வகுப்பு என்றாள்.. எனக்கு மயக்கமே வந்தது... எதுவுமே தெரியாமல் அப்பாவியாய் ஒரு முகத்தை வைத்துக்கொண்டு  பரிசல்  இருக்கின்றார்....பெரிய பெண்ணிடம் எத்தனையாவது படிக்கின்றாய் என்று கேட்டால் எனக்கு பொறாமை அதிகமாகிவிடும் என்பதால் கேட்கவில்லை..

தமிழ்திரைஉலகில் சிவக்குமாரை மார்கன்டேயன் என்று சொல்வது போல பதிவுலகின் மார்கண்டேயன்  என்று பரிசலை சொல்லலாம்... மண்டபத்தின்  உள்ளே போனேன்...தம்பி அப்துல்லாவை பார்த்தேன்.. மல்லுவேட்டி மைனர் பார்டூ எடுத்தால் சத்யராஜ் கேரக்டருக்கு பொருந்துவது போல ரொம்ப நீட்டாக  வேட்டி சட்டை அணிந்திருந்தார்...கையில் மல்லிகைப்பூ  சுற்றி வருது வருது இளம்காற்று பாட்டு பாடி மல்லிகை பூ முகர்ந்தால் செமையாக இருக்கும்...தனது மனைவி பிள்ளையை அறிமுகபடுத்தினார்...

பதிவுலகில் முதல் முறையாக ஒரு திருமணத்துக்கு போனது மங்களுர் சிவா திருமணத்துக்குதான்..நான்தான் அவர்கள் இருவரையும் போட்டோ எடுத்தேன்.. ரொம்ப சந்தோஷமாக இருந்தது.. சிவா தம்பதிகளை சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.


.மேடைக்கு போனோம். சஞசய் தனது மனைவியிடம் என்னை அறிமுகபடுத்தினார்.. பதிவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டேன்.ஜீவ்சை இப்போதுதான் நான் நேரில் சந்திக்கின்றேன் என்று நினைக்கின்றேன். அடுத்ததாக வலையுலகின் எனத முதல் பாலோயர் வெண்பூ அவர் பங்குக்கு என்னை கொஞ்சம் கும்மி அடித்தார்.

நிறைய நண்பர்கள் என்னோடு புகைபடம் எடுத்துக்கொண்டார்கள். அந்த புகைபடங்களை தேடிக்கொண்டு இருக்கின்றேன்.. ஒரு பய போடலை..


அதன் பிறகு சாப்பிட போனோம்.. கேபிள், கார்க்கி, சந்தோஷ்,ஜோசப்,என அங்கு ஒரு பெரிய பதிவர் பட்டாளம் சாப்பிட்டுக்கொண்டு இருந்தது..

எனக்கு தெரிந்து நிறையபதிவர்கள் கலந்துகொண்ட திருமணவிழா இதுவாகத்தான் இருக்கும்..

பெண்களில் பதிவர்களில் தோழி ரம்யா, சக்தி, விஜி,பிரியா போன்றவர்களை சந்தித்தேன்... இன்மும் பிரியாவுக்கும்,விஜி என்பவரையும் போட்டுக்குழப்பிக்கொள்கின்றேன்.முதன் முறையாக பெண் பதிவர்களிடம் பேசினேன்.

திரும்பவும் நான், மணிஜி, வாசு போன்றவர்கள் மதுரை வீரன் எங்கசாமி துணையை நாடினோம்.. வெளியே காரில் பயணிக்க லக்கி ,அதிஷா, புருனோ, வானம்பாடிகள், போன்றவர்கள் திருமணத்துக்கு வந்தனர்.
வெளியே வெயிலான், கதிர்,நிகழ்காலத்தில் சிவா, கேபிள்.புருனோ, லக்கி, அப்துல்லா, ஆருரன்,ஜாபர் ,ஆதி.நந்து,பரிசல்,சுவாமி. மயில்,உதா,எறும்பு,குட்டிதினேஷ், வாசு,மணிஜி, போன்றவர்களோடு அரட்டை கச்சேரி நடந்தது...

நந்துவும் நானும் ஒரே கேரக்ட்ர் என்பது சிலபலவிஷயங்களில் தெரிந்துக்கொண்டேன்..பேசிக்கொண்டு இருக்கும் போதே தம்பி குசும்பன் லைனில் வர எல்லோருடனும் பேசிக்கொண்டு இருந்தார்

நான் இந்த முறை புகைபடங்கள் நிறைய எடுக்கவில்லை.. எப்பபார்த்தாலும் போட்டோ எனக்கே கொஞ்சம் போர்தான்..அதனால் இந்த முறை கேமராவை தூர வைத்தேன்.. பரிசல் மற்றும் அப்துல்லா பசங்களை போட்டோ எடுக்கலாம் என்று நினைத்தேன்.. அது மிஸ் ஆகிவிட்டது வருத்தம்தான்.

தமிழ்மணம் காசி அவர்களை  சந்தித்தேன்.. எனது பதிவுகள் நேரில் பேசுவது போல இருப்பதாக சொன்னார்... அவருக்கு எனது நன்றிகள்.

மணிஜி,நான், வாசு, மயிலோடு காரில் புறப்பட்டு திரும்பவும் லாட்ஜிக்கு வந்தோம்.. லாட்ஜில்திருமணத்துக்கு வந்த பெண்மணி அங்கே ரிசப்ஷனில் நின்றுக்கொண்டு இருந்தார்..சஞ்சய் உறவினர் என்று நினைத்தேன்.. அவரும் ஒரு பதிவராம் அரபு தேசத்தில் பல் டாக்டரம்மாவாக இருக்கின்றாராம்... இவர் ஜாக்கி எனக்கு நல்லா தெரியும்.. நீங்க என்ற போது மணிஜி, வாசு , மயில் போன்றவர்கள் அறிமுகபடுத்திக்கொண்டார்கள்..நைட் கண்முழிச்சி டைப் அடிக்கறது வேஸ்ட் இல்லை.. ஒருத்தவங்க அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு  நான் இருப்பதே போதும்..

திரும்பவும் அதே அறை சிகரேட், பிராந்தி,புகைகளுக்கிடையே
கதிர்,குமுக்கி,ஆருரன்,வானம்பாடிகள்,,ஜாபரோடு,திரும்பவும் அரட்டை களை கட்டியது..
மீன்கொழம்பு அற்புதம் நானும் மணிஜியும் ஒரே இலையில் சாப்பிட்டோம்.. இந்த வரியை அந்தாளு தப்பு தப்பா அடிச்சார், ஈரோடு கோஷ்ட்டி விடைபெற்றது.. பிறகு சின்ன கொரட்டை... மாலை ஆறுமணிக்கு எழுந்தேன்.

மயிலின் நண்பர் ஒருவர் இருந்தார் பெயர் கார்த்தி...தருமபுரியில் நெட் சென்டர் வைத்து இருக்கின்றார். தனது. நெட் சென்டருக்கு வர வேண்டும் என்றார்..நெட் சென்டரில் என்னை வைத்து போட்டோஎடுத்துக்கொண்டார்.நண்பர்களுக்கு அறிமுகபடுத்திவைத்தார்...திரும்பவும் தருமபுரி பேருந்து நிலையம் வந்து ஓசூர் பஸ் பிடித்து இரவு பத்து மணிக்கு  ஓசூரில் பெங்களுர் பேருந்துக்கு மாறி பெண்களுர் குளிரில் கலந்து வீடு போய் சேர்ந்தேன்..

ஒருத்தன் கல்யாணத்துக்கு இத்தனை பேர் வரமுடியமா? அதுவும் பதிவர்கள். நிறைய பேர் குடுமபத்துடன் வந்து இருந்தார்கள்.. சென்னையில் பிரபலமான இடத்தில் கல்யாணம் நடக்கவில்லை, தருமபுரி பக்கத்தில் மொரப்பூர், ஊரின் ஒதுக்குபுறமாய் ஒரு மண்டபத்தில் திருமணம்... ஞாயிறு விடுமுறையை யாரும்அ விட்டுக்கொடுக்கமாட்டார்கள் அப்படி  இருந்தும் நிறைய பேர் வந்து இருக்கின்றார்கள் என்றால் அது சஞ்சய்க்காகத்தான்...அந்தஅளவுக்கு நண்பர்களிடத்தில் அன்பை சம்பாதித்து இருந்ததால் யாருக்குமே தூரம் ஒரு பொருட்டாக இல்லை...


மணமக்களுக்கு..


பரஸ்பரம் அன்பு புரிந்து விட்டுக்கொடுத்து,குறைவான ஊடல்களுடன், நிறைவான மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துக்கின்றேன்..இரவு படுக்கைக்கு முன் எந்தவிஷயமாக இருந்தாலும் மனம் விட்டு பேசுங்கள்...அது ஸ்பெக்டரம் விஷயமோ,அல்லது சிம்பு திரிஷா கெமிஸ்ட்ரியோ எதுவாகிலும் மனம் விட்டு பேசுங்கள்.ரசித்த எதையும் இருவரும் தடையின்றி பகிர்ந்துகொள்ளுங்கள் மகிழ்வுடன் வாழ்வாங்குவாழுங்கள்...

நிறைய நண்பர்களை பெற்று அதை சாதித்து காட்டிய சஞ்சய் யூ ஆர் கிரேட் ...சஞ்சய் மற்றும் இந்துமதி நீடூடி வாழ எல்லாம் வல்லபரம் பொருளை வேண்டிக்கொள்கின்றேன்



பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..


புகைபடங்கள்....  நான் மற்றும் நண்பர்கள் எடுத்தவை
பெயர் விடுபட்டவர்கள் மன்னிக்கவும்..


குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

14 comments:

  1. நல்ல பகிர்வு ஜாக்கி.. உங்களை சந்திக்க முடியாமல் போனது நிறைய வருத்தம் அளிக்கிறது எனக்கு ...

    ReplyDelete
  2. எங்கள் ஊருக்கு வந்து இருக்கீங்க , ஆனால் வரவேற்கவோ , பார்க்கவோ முடியல.கடுமையான வேலை காரணமாக என்னால் இந்த வாரம் தர்மபுரி போகமுடியல, இருந்தால் எல்லோரையும் சந்தித்து இருக்கலாம்

    ReplyDelete
  3. பலரை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள் நன்றி...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    தமிழுக்காக ஒரு தழிழனால் முடிந்தது (இலகு தட்டச்சு உதவி)

    ReplyDelete
  4. பதிவர்கள் சார்பாக சென்று வாழ்த்தியதாகக் கொள்கிரோறோம். பதிவுக்கும் படங்களுக்கும் நன்றி!
    உண்மை, சஞ்சய் நட்பைப் பேணுபவர்.

    ReplyDelete
  5. அண்ணே நாமளும் மீட் பண்ணோம் ... என் பேர உங்க பதிவுல போட்டிருபிங்கன்னு ரொம்ப ஆசையா வந்தேன் இப்புடி பண்ணிடிங்கலே ... சரி பெங்களுர்ல வந்து உங்களை சந்திகறேன் ...

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு. பலரை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.

    ReplyDelete
  7. உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி ஜாக்கி:))

    ReplyDelete
  8. சரியான கவரேஜ்! நல்லவொரு சந்தர்ப்பத்தை மிஸ் செய்த உணர்வு.

    ReplyDelete
  9. நன்றி ஜாக்கி! சஞ்சய் பற்றிய உங்கள் வரிகள் உண்மை. அத்தனை நண்பர்களைப் பெற்றிருக்கிறார்...

    ReplyDelete
  10. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்..

    பரிசல், சிவா உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..

    ReplyDelete
  11. சஞ்சய்க்கு மீண்டும் பின்னூட்ட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. Hi Jackie,

    I am from Dharmapuri and currently in US. Had I been there, I would have met you and showed you places around, at least Hogenaikal (did you all go there?).

    Saravana Bavan is my friend's hotel as well, would have given a special treatment(nallatha thaan :)) had we known.

    Apologies for Englipish..

    Rgds
    Oviyan

    ReplyDelete
  13. இராமசாமி நானும் உங்களை சந்திக்க ஆவலாக இருந்தேன்.

    ReplyDelete
  14. அண்ணே அருமையான பதிவு. என் போட்டோ இன்னும் ரெண்டு நல்லதா எடுத்து போட்டிருக்கலாம்.உங்களோடு வனாந்திரத்தில் சுற்றியது என் பாக்கியம்.தன்யனானேன்.
    கோடி நன்றிகள்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner