( MAHANADHI) மகாநதி திரைப்படம் கமலின் மாஸ்டர் பீஸ்...


நம்ம சொர்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி...
நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி... கவிஞர் வாலி எழுதி மகாநதியில் இடம் பெற்ற... பொங்கலோ பொங்கல் பாடலில் வரும் லைன் அது..அதை என் டைரியி்ல் அந்த வரிகளை எழுதி வைத்து இருந்தேன்....

எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும்.... நல்ல உடை உடுத்த வேண்டும் என்ற கனவு உண்டு...ஒரளவுக்கு வசதியாக வாழ்ந்தவன் இன்னும் நன்றாக வசதியாக வாழ நினைத்து வழுக்கி விழுந்த கதை இது....


ஒருநாள் காலை என் அம்மா என்னையும், என் நான்கு தங்கைகளையும் அழைத்தாள்... அப்பாவுக்கு வேலை போய் விட்டது... இனி நாளை காலையில் இருந்து யாரும் அம்மாவை காப்பி கேட்டு நச்சரிக்க கூடாது... அம்மா உங்களுக்கு கேழ்வரகு மாவை தண்ணிரில் போட்டு அலசி, வரும் வெண்மையான நீரை நன்றாக காய்ச்சி சக்கரை போட்டு உங்களுக்கு தருகின்றேன்... பால் வாங்க காசு இல்லை என்றாள்... எங்களுக்கு கேஷ்வரகு கஞ்சி சக்கரை போட்டு அன்றிலிருந்து கொடுக்க ஆரம்பித்தாள்...

அரிசி வாங்காத ரேஷன் கார்டுகளை நண்பிகளிடத்தில் வாங்கி, ரேஷன் அரிசி வாங்கி அதனை கொஞசம் நல்ல அரிசியுடன் சரிபாதியாக கலந்து அதனை இட்லிக்கு போட்டு எங்கள் பசியாற்றியவள்....

எல்லோருடைய வீட்டு இட்லியும் மல்லிகை பூவாக காட்சி அளிக்க எங்கள் வீட்டு இட்லி மட்டும் ரேஷனில் போட்ட சிவப்பு அரிசி மி்க்ஸ் செய்ததால்... சிவப்பு கலரில் இருக்கும்.... படிக்கும் போது காமராஜர் போட்ட மதிய உணவுதான் எங்கள் படிப்பை தடையில்லாமல் தொடர செய்தது...

அப்போது அப்பா வாங்கும் ஒரே பத்திரிக்கை குமுதம்தான் ....வறுமை வீட்டில் தொடர்ந்ததால் அப்போது 1ரூபாய்10 பைசாவுக்கு விற்ற குமுதம் என் வீட்டுக்கு வர யோசித்தது... என் அம்மா ஒரு போது அடுத்தவர் வீட்டில் தலை சொரிந்து நின்று அரை டம்பளர் காபி பொடி கொடுங்கள் ...என்று ஒரு போதும் இரவல் கேட்டதில்லை... இருப்பதை வைத்து மானத்துடன் வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற கொள்கை கொண்டவள் என் அம்மா...அத்தனை வறுமையிலும் எங்கள் வீட்டு கவுரவகொடியை கிழே இறக்க வண்ணம் தாங்கி பிடித்தவள் அவள்தான்.....போதும் என்ற மனம் போதும். ரசம்சாதமாக இருந்தாலும் பழைய சோறாக இருந்ததாலும் மானத்தோடு உண்டு வளர்ந்தோம்... அடுத்தவன் வாழ்வை பார்த்து எங்கள் அம்மா ஒரு போதும் சூடு போட்டுக்கொண்டதில்லை.... பந்தாவுக்காக இருப்பதை விட்டு விட்டு பறப்பதை ஒரு போதும் பிடிக்க எங்களுக்கு என் அம்மா கற்றுக்கொடுத்தது இல்லை....

தானும் தன் குடும்பமும் சபிட்சமாக வாழும் பொருட்டு... ஒரு தனிமனிதன் எடுத்த சில தவறான முடிவுகள் எங்கனம் அவனையும் அவன் குடும்பத்தையும் அலை கழிக்கின்றன என்பதே மகாநதி படத்தின் கதை....

மகாநதி படத்தின் கதை இதுதான்....


கிருஷ்ணசாமி (கமல்) மனைவியை வாரி கொடுத்துவிட்டு தனது இரண்டு குழந்தைகளுடனும் (ஆண் ஒன்று, பெண் ஒன்று) தனது மாமியாருடனும் (வரலட்சுமி) திருநாகேஷ்வரத்தில் சிவல் பேக்டரி நடத்தி வருபவன்... ஊரில் கையெடுத்து கும்பிட வைக்கும் குடும்பம் அவனுடையது...

வெளிநாட்டில் இருந்தது பொங்கல் பண்டிகைக்கு குடும்பத்தோடு கொண்டாட ஊருக்கு வரும் நண்பனின் வசதியான வாழ்க்கையும், அவன் பிள்ளைகள் பேசும் ஆங்கிலமும் அவன் மனதை கெடுக்கின்றன...ஒரு விபத்தில் எதெச்சையாக சந்திக்கும் பிராடு தனுஷ் கிருஷ்ணசாமியின் மனதை மாற்றி சென்னை வாழ்க்கையை ஆசைகாட்டி கிருஷ்ணசாமிக்கு அனுபவம் இல்லாத சிட் பண்ட் கம்பெனி ஆரம்பிக்க வைத்து,அந்த கம்பெனி பணத்தை மோசடி செய்து தனுஷ் தலைமறவாக, மக்கள் பணத்தை ஏமாற்றி குற்றத்திற்க்காக 4 வருட சிறை தண்டனையுடன் ஜெயிலுக்கு வருகின்றான்கிருஷ்ணசாமி..., அங்கே அவனுக்கு பாஞசாபி கேசன் (பூர்ணம் விஸ்வநாதன்) என்ற பெரியவர் நட்பாகின்றார்...ஒரு கட்டத்தில் அவர் பெண்ணை (சுகன்யா) கிருஷ்னசாமிக்கு திருமணம் செய்து கொடுக்க சம்மதிக்கின்றார்..அவன் ஜெயிலில் இருக்கும் போது அவன் குழந்தைகள், மாமியார் என்னவாயினர்? அவன் ஜெயிலில் சந்திக்கும் பிரச்சனைகள்... பிராடு தனுஷ் மாட்டினனா? கிருஷ்ணசாமி... பஞசாபி கேசன் பெண்ணை திருமணம் செய்தானா? போன்ற கேள்விகளுக்கு வெண்திரையில் பார்த்து மகிழுங்கள்....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....

இந்த படம் சென்னை ஆனந் தியேட்டரில் பார்த்தேன்....கிருஷ்ணசாமி போல நான் சென்னைக்கு செக்யூரிட்டி வேலைக்கு வந்து எங்களை ஏமாற்றி, எல் ஐ சி எதிரில்... அப்போது இருந்த சென்டிகோ ஸ்கூட்டர்சில் நான் செக்யூரிட்டி வேலை பார்த்து , எதிரில் இருந்த அலங்கார் தியேட்டரில் பிளாக்கில் டிக்கெட் விற்று வயிற்றை கழுவி, மெரினா பீச்சில் சில மாதங்கள் பிளாட்பாரத்தில் படுத்து தூங்கிய போது பார்த்த படம் இது...

இன்று சென்னையில் என் பைக் போகாத சந்து பொந்துகளே இல்லை எனலாம்... ஆனால் இந்த படம் பார்த்து விட்டு கணத்த இதயத்தோடு விழிகளில் நீருடன். என் நிலை நினைத்தும், கமல் நிலை நினைத்தும், ஆனந்தியேட்டரில் நடுநிநசி காட்சி பார்த்து விட்டு அழுதுக்கொண்டே, ராதகிருஷ்ணன் தெருவில் நடந்தே காந்தி சிலை வந்து மேரி பிஸ்கட் அட்டையை பாய் போல் விரித்து மெரினா பிளாட்பாரத்தில் படுத்து, கனத்த இதய்த்தோடு வெகுநேரம் உறக்கம் வராமல்5,10 மலேசியா ஏர்லைன்சை பிளைட்டை பார்த்து மணி 5,10 என்று மன்துக்குள் சொல்லி ஒரு மணிநேரம்தூங்கி எழுந்தேன்.... அப்போது என் கைகளில் வாட்சு கூட கிடையாது பறக்கும் விமானங்கள்தான் எனக்கு கை கடிகாரம்..... அதன் பிறகு ஒரு வாரத்துக்கு மகாநதி படத்தை பற்றிய நினைவாக இருந்தது என்பது குறிப்பிட வேண்டிய செய்தி...

சென்னை ஆனந் தியேட்டர் ஆண் பெண் வித்யாசம் இல்லாமல் கண்ணீர் சிந்தி தியேட்டரை நச நசப்பாக்கினர்... படம் பார்த்து கொண்டே நாம்தான் அழுவுகின்றோமா? அல்லது வேறு யாராவது அழுகின்றார்களா? என்று பார்த்தால் எல்லா ஆண்களும் அழுதது வியப்பு...

சிறை வாழ்க்கை மனிதனை திருத்துவதற்க்கு பதில் சில விஷமிகள் மற்றும் சுய நலக்காரர்களால் சிறைகைதிகள் எவ்வாறு துன்பப் படுகின்றார்கள் என்பதை அற்புதமாக சொல்லி இருப்பார்கள்.....

இது காப்பி அடித்த படமா? அல்லது காப்பி அடிக்காத படமா? என்பது எனக்கு தெரியவில்லை ஏனென்னறால் இதே போன்ற கதை அமைப்பிள் பல படங்கள் வந்து உள்ளன...

சிறையில் கமலும் பூர்ணம் விஸ்வநாதனும் சந்தித்து அறிமுகம் ஆகும் காட்சியும் அதன் லைட்டிங்கும் அருமை...உப்புமாவை துலுக்கானத்துக்கு சுவைக்க கொடுத்து அவன் சூட்டில் துடிக்க அதுவரை சோகமாக முகத்தை வைத்து இருந்து விட்டு அவன் போனதும், அவனுக்கு நன்றாக வேண்டும் என்று சிரிக்கும் அந்த சிரிப்பு சுவையான ஒன்று....

சென்னை மத்திய சிறை கைதிகளின் நித்திரையேடு விளையாடும் ரயில் போக்குவரத்தை சொல்லி இருக்கும் காட்சி அழகு... அதே போல் கமல் படுத்து கண் சிமி்டிய படி தன் கடந்த காலத்தை நினைத்து பார்க்க கேமரா டாப் ஆங்கிளில் இருந்தது மெல்ல கமல் முகம் நோக்கி ஜும் இன் ஆக, கண் சிமிட்டவும் அதே ரயில் சவுண்டில் தடக் தடக் ஒளியோடு அவன் சொந்த ஊரில், ஒவ்வோறு கதவாக திறக்க, அவன் ஊரில் வீட்டு பக்கத்திலும் ரயில் டீராக் இருக்க, அதில் ரயில் வருவது போன்று விரியும் பிளாஷ் பேக் காட்சி அருமை... தீ லாஸ்ட் எம்பரர் படத்தில் கேம்பிள் இருக்கும் ராஜா பாத் ரூமில் கையை வெட்டிக்கொள்ள ஒரு சீப்பாய் ஓப்பன் த டோர் என்று சொல்லியபடி இருக்க, அவன் ராஜ காலத்தில் சிறுவயதாக இருக்கும் போது நடந்த நிகழ்வுகளை நினைத்து பார்க்கும் காட்சிக்கு சமம்..அந்த கமல் நினைத்து பார்க்கும் இந்த காட்சி... அதே போல் ரயில் தடக் தடக் ஒலியோடுஇளையராஜாவின் இசையும் சேர்ந்து கொள்ள, பொங்கலோ பொங்கல் என்று தொடங்கும் பாடல் உற்சாக ரகம்...

பூர்ணம் விஸ்வநாதன் தன் நிலை நினைத்து மந்திரத்தின் ஊடே கடவுளிடம் புலம்புவதும், கனகதார ஸ்தோத்திரம் சொன்னால் பணம் கூறையை பிச்சிகிட்டு கொட்டும் என்பதை சொல்ல... கமல் உனக்கு கொட்டி இருக்கின்றதா என்று எதிர் கேள்வி கேட்பதும்... நீ நாத்திகமா என கமலை பார்த்து கேள்வி கேட்டு பதில் சொல்லாமல் இருக்க... உண்டு இல்லை என்று எதாவது சொல் என்று சொல்ல உண்டு இல்லை என்று சொல்லி கமல் நக்கல் விடுவது அழகு...

சிறையில் மனு போட்டுபார்க்கும் குழந்தைகளிடம் கமல் கத்தி பேசி அட்வைஸ் செய்வது ஒரு சிறையின் பார்வையாளர் அறையின் இரைச்சலை ஒலி வடிவில் பார்வையாளனுக்கு புரியவைப்பது சினிமா மொழி....

கமலை பார்த்துவிட்டு சுகன்யா நடக்க ராஜா ஒரு ரோமான்ஸ் மீயுசிக் போட்டு இருப்பார் பாருங்கள்... கவிதையான நெகிழ்வான காட்சி அது..

காவேரி எங்கே ?என்று மாமியாரை கேட்க அவள் பாட்டி பின்புறத்தில் இருந்து தலை நீட்டி பாவாடை தாவானியோடு வந்து சட்டேன கிழே விழுந்து கும்பிடும் பெண்ணை, கம்பிக்கு உள் இருந்து ஆசிர்வாதம் செய்யமுடியாமல் தவிப்பது கண்ணில் நீர் வரவைக்கும் காட்சி...
நான் போர்த் ரேங் அப்பா... என்ற சொல்லும் மகனை ஏன்? என்று கேட்க என்னை விட கெட்டிக்கார பையன்கள் 3 பேரு இருக்காங்க, அவுங்களை துரத்திட்டா நான்தான் பஸ்ட் என்று சொல்லும் காட்சி கவிதை. வீட்டை வாடகை விட்டது தெரிய தன் இயலாமை நினைத்து கட்டை விரலை வாயில் நுழைத்து கமல் கண் கலங்குவது உணர்வு பூர்வமான காட்சி...


கமலை பார்த்து பேசம் சுகன்யாவை ஜெயிலர் ராஜேஷ் கண்டித்து ...காதலிகின்றோம், கட்டிக்க போறோம் என்று மனு எழுதி கொடும்மா... என்று சகன்யாவிடம் சொல்ல,அதற்க்கு எங்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லும் காட்சியில் அவர்கள் காதலை ரொம்ப டிசன்டாக வெளிபடுத்தி இருப்பது அருமை..

அதே போல் நர்ஸ் உடையில் தனியாக மனு போட்ட பார்க்க வரும் போது இருவரும் பேசாமல் ராஜாவின் வயலினும், பியனோவும் பேசுவது கவிதை.. இந்த காட்சியில் எல்லோரும் ஸ்டாப் பிளாக்கில் காணமல் போக கமலும் சுகன்யா இருவர் தலைக்கு பின்னும் ஸ்பாட் லைட் அடித்து அப்படியே அவுட்டோர் போய் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரும் வெளியே போக கமல் மட்டும் கம்பிக்குள் சிறைபட்டு பாவமாக நிற்பது சோகமான காட்சி....


“‘வழுக்கி விழுதுட்டேன்”, “என்ன ஐயரு மூத்திர வாசனை அடிக்குது” போன்ற டயலாக்குகளும் அதற்க்கு லீட் காட்சிகளும் கொடுரத்தின் உச்சம்...

எல்லாம் பகவான் பாத்துக்குவான் என்று பூர்னம் சொல்லும் போது... சும்மா இருங்க ஐயரே, நி்ன்னு கொல்லும் தெய்வமும் சும்மா இருக்கு... அன்றே கொல்லர சட்டமும் சும்மா இருக்கு.... ஆனா எனக்குமட்டும் தண்டனை.... என்ற டயலாக் மூலம் வாழ்வின் நிதர்சனத்தை புரியவைத்து இருப்பார்கள்.. நேர்மையாக இங்கு யாரும் இல்லை என்று ராஜேஷ் விளக்கம் கொடுக்கும் காட்சியும் அந்த டயலாக் வீரியமும் சுரீர் ரகம்...

ஒரு காட்சியில் வந்தாலும் தலைவாசல் விஜய் நடிப்பில் பின்னி எடுப்பார்...
பிள்ளையை விட்டில் படுக்கவைத்து விட்டு சுகன்யாவுக்கும் கமலுக்குமான அந்த மெல்லிய காமம் கலந்த காதலும் அதற்க்கான புளு லைட்டும்,காலையில் காபியை சுகன்யா கமலுக்கு கொடுக்கும் போது அந்த மெல்லிய சன்லைட் காட்சி அருமை....
அதில் பின்னனியில் ராஜாவின் பியானோ அருமையிலும் அருமை....
சோனாகாட்சி காட்சிகள் மனதை வலிக்க வைக்கும் ரகம் அதில் ஒரு விலைமாதர் தன் பெண்ணை ஜலஜா என்று அழைத்து இது காவேரி அப்பாடி என்று அறிமுக படுத்த அந்த பெண் அப்பா என்று கமலை கட்டி கன்னத்தில் முத்தமிட இரண்டு கைகளையும் கும்பிட்ட படி கண்ணீர் விடும் காட்சியில் கமல் உலகநாயகன்தான்...

தன் மகள் இரவில் பினாற்றுவதை பார்த்து, அதை நினைத்து கலங்கும் காட்சியில் அழுது மூக்கை சிந்தும் போது கமல் கமல்தான்....
ஒரு நல்லவனுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை எல்லாம் ஒரு கெட்டவனுக்கு கிடைச்சிடுதே அது ஏன் என்ற டயலாக்கும், தனுஷ் புரோக்கர், ஆனா நீ புள்ள கறி கேக்கறவன் என்று மோகன் நடராஜை பின்னும் காட்சிகளில் கமல் ஆக்டிங்கில் பின்னி இருப்பார்....

இந்த படத்தில் கமல் பல பாடல்கள் பாடினாலும் கல்கத்தா படகில் தன்மானம் உள்ள நெஞ்சம் என்ற பாடல் சூப்பர்.. காவேரி தாய் மடியில் வாழ்ந்த பிள்ளையடி கான சோகம் எல்லாம் கால்கள் கண்டதடி... போன்ற வாலியின் வரிகள் கண்களில் நீர் வர வழிப்பவை....

அயன் படத்தின் கேமராமேன் எம் எஸ் பிரபுதான் இந்த மகாநதி படத்துக்கும் ஒளி ஓவியம்.... இந்த படம்தான் இவருக்கு தமிழ் திரையுலகில் அறிமுகத்தை கொடுத்த படம்.... இவர் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் உதவியாளர்...


இந்த படத்தில்தான் முதன் முதலாக ஆவிட் என்கிற எடிட்டிங் சாப்ட்வேர் பயன் படுத்தபட்டது....

இன்றைய பக்தி பாடல்கள் அதிகம் பாடும் பாடகி ஷோபனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானது இந்த படத்தில்தான்....

படத்தின் குறைகள்...

மாமியார் சாவுக்கு பிள்ளைகள் இருவரும் எங்கே என்று கமல் கேட்காதது ஏன்?

கூத்தாடியிடம் தன் பிள்ளையை பார்த்ததும் அடுத்த கேள்வி அக்கா எங்கே? என்று தன் பிள்ளையிடம் கேட்காமல் மறுநாள் காலை காபி சாப்பிடும் போது சாவகாசமாக கேட்பது ஏன்??
கல்கத்தாவில் இருந்து அழைத்து வந்த பெண்ணையே இரவில் பினாற்றுவது போல் எடுக்காமல் அந்த காட்சிக்கு மட்டும் நடிகை சங்கிதாவை பயன்படுத்தியது ஏன்?

படத்தின் இயக்குனர் சந்தானபாராதி கமலை வைத்து இதே போல் இயல்பாய் குணா என்ற படத்தை கொடுத்தவர்..இவர் கமலின் பால்யகால தோழனும் ஆவார்

மொத்தத்தில் இந்த படம் சமுகத்தில் நல்லவனாக இருப்பது என்பது தகுதி இழப்பு என்று சொல்ல வந்த படம்....

இயக்கம்.. சந்தானபாராதி

கதை, திரைக்கதை... கமலஹாசன்

வசனம்...கமல்ஹாசன் ...ராகி ரங்கராஜன்

ஒளிப்பதிவு... எம் எஸ் பிரபு (அறிமுகம்)
இசை ...இளையராஜா....
தயாரிப்பு... ராஜ்கன்னு


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

39 comments:

  1. ந்ல்ல விமர்சனம். நானும் பார்த்த நாட்களில் என்னையும் பாதித்த படம்.
    ஆனா படத்தில் பல ??? விகளை கேட்டிருக்கீங்க..படிச்சிக்கிட்டு வரும் போதே "சும்மா ஜாலிக்காக" என்ற படம் கண்ணில் படும் போது இதுவரை எழுதியவை எல்லாம் மறைந்து போவது எதனாலே???
    எழுதியதை மறக்க சிலவற்றை திறக்க வேண்டும் போல இருக்கு.

    ReplyDelete
  2. TAKEN படம் பார்த்த போதும்

    அந்த படத்தை பற்றி யோசித்த/பேசிய போதும்

    இது தான் ஞாபகம் வந்தது.

    உண்மை தான் இது ஒரு மாஸ்டர் பீஸ்

    ReplyDelete
  3. வணக்கம் அண்ணா! உங்கள் பதிவை ரொம்ப நாளாக வாசித்து வருகிறேன் . நல்ல படம் ! நல்ல பதிவு!
    "ஒரு நல்லவனுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை எல்லாம் ஒரு கெட்டவனுக்கு கிடைச்சிடுதே... கெட்டவனுக்கு மரியாதைய தட்டுல வச்சு குடுக்குதே இந்த ஊரு...இந்த உலகம் " -நு கமல் சொல்லும் போது வரும் பேக்குரவுண்டு மியுசிக்... அப்பப்பா மனச விட்டு அகலாத காட்சி !

    ReplyDelete
  4. மகாந‌தி படம் ஒரு உணர்வுப்பூர்வமான படம்

    கமல் படங்களில் மிக அற்புதமான படம்

    ReplyDelete
  5. மகாநதி...
    இது மிக அருமையாக எடுக்கப்பட்ட கதை. இதில் இயக்குனர் மிக அருமையாக சிந்தித்து ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் உருவாக்கி இருப்பார்.
    இதில் உள்ளா அணைத்து முக்கிய பாத்திரத்திற்கும் இந்தியாவில் ஓடும் நதிகளின் பெயரே கொடுத்திருப்பார்.
    கமல் = கிருஷ்ணா
    சுகன்யா = யமுனா
    மகள் = காவேரி
    மகன் = பரணி.

    வாழ்கை என்பது நதி போன்றது, அதுவும் மகாநதி ( இதுவும் இந்தியாவில் ஓடும் ஒரு நதியின் பெயர்.) அது மிக இயல்பாக ஓடும்போது யாதொரு குறையும் இல்லை, அது சிறிது தடம் மாறும்போது...? பல இன்னல்கள். நாம் வணங்கும், நாம் நம் பாவங்களை கழுவும் நதி, பிரவாகம் எடுத்து வந்தால்...??? எந்த அணையும் தடுக்க முடியாது... அதுவே இறுதிகட்டம். இந்த படத்திலும்.

    ReplyDelete
    Replies
    1. Poornam Vishwanathan = Panjabakesan(Punjab=five rivers)
      Kamals first wife = ganga

      Delete
    2. Poornam Vishwanthan = Panjabakesan (Punjab=five rivers)
      Kamals first wife = ganga

      Delete
  6. மிக அருமையான படம்..மிக அருமையான விமர்சனம்..

    ReplyDelete
  7. விமர்சனம் நன்றாக உள்ளது. தயவு செய்து எழுத்து பிழைகளை தவிர்க்கவும்.

    ReplyDelete
  8. ந்ல்ல விமர்சனம். நானும் பார்த்த நாட்களில் என்னையும் பாதித்த படம்.
    ஆனா படத்தில் பல ??? விகளை கேட்டிருக்கீங்க..படிச்சிக்கிட்டு வரும் போதே "சும்மா ஜாலிக்காக" என்ற படம் கண்ணில் படும் போது இதுவரை எழுதியவை எல்லாம் மறைந்து போவது எதனாலே???
    எழுதியதை மறக்க சிலவற்றை திறக்க வேண்டும் போல --//

    உண்மைதானே குமார் அப்பதானே இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேப்பிங்க... அதனாலதான்

    ReplyDelete
  9. TAKEN படம் பார்த்த போதும்

    அந்த படத்தை பற்றி யோசித்த/பேசிய போதும்

    இது தான் ஞாபகம் வந்தது.

    உண்மை தான் இது ஒரு மாஸ்டர் பீஸ்

    நீங்கள் சொல்வது உண்மை ஜமால்

    ReplyDelete
  10. வணக்கம் அண்ணா! உங்கள் பதிவை ரொம்ப நாளாக வாசித்து வருகிறேன் . நல்ல படம் ! நல்ல பதிவு!
    "ஒரு நல்லவனுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை எல்லாம் ஒரு கெட்டவனுக்கு கிடைச்சிடுதே... கெட்டவனுக்கு மரியாதைய தட்டுல வச்சு குடுக்குதே இந்த ஊரு...இந்த உலகம் " -நு கமல் சொல்லும் போது வரும் பேக்குரவுண்டு மியுசிக்... அப்பப்பா மனச விட்டு அகலாத காட்சி //
    நான் ரசித்த அதே காட்சிகளை நீயும் ரசித்ததில் பெருமை கொள்கிறேன் பிரபு

    ReplyDelete
  11. நான் மிக ரசித்த படம்.//

    நன்றி நைனா

    ReplyDelete
  12. மகாந‌தி படம் ஒரு உணர்வுப்பூர்வமான படம்

    கமல் படங்களில் மிக அற்புதமான படம்

    ஸ்டார்ஜன் மிக்க நன்றி

    ReplyDelete
  13. வாழ்கை என்பது நதி போன்றது, அதுவும் மகாநதி ( இதுவும் இந்தியாவில் ஓடும் ஒரு நதியின் பெயர்.) அது மிக இயல்பாக ஓடும்போது யாதொரு குறையும் இல்லை, அது சிறிது தடம் மாறும்போது...? பல இன்னல்கள். நாம் வணங்கும், நாம் நம் பாவங்களை கழுவும் நதி, பிரவாகம் எடுத்து வந்தால்...??? எந்த அணையும் தடுக்க முடியாது... அதுவே இறுதிகட்டம். இந்த படத்திலும்.//
    நன்றி நைனா பல நல்ல செய்திகளை பகிர்ந்து கொள்வதற்க்கு மிக்க நன்றி

    ReplyDelete
  14. மிக அருமையான படம்..மிக அருமையான விமர்சனம்.//
    நன்றி அமுதா தங்கள் வருகைக்கு

    ReplyDelete
  15. விமர்சனம் நன்றாக உள்ளது. தயவு செய்து எழுத்து பிழைகளை தவிர்க்கவும்//

    நன்றி பிளாக் பாண்டி மிக்க நன்றி சுட்டி காட்டியமைக்கு

    ReplyDelete
  16. என் வாழ்வில் நான் இதுவரை பார்த்த படத்திலே மறக்க முடியாத படமாக மகாநதி அமைந்து விட்டது.

    மொத்த படமும் கமலின் நடிப்பு..நடிப்பு மட்டுமே..

    திரைக்கதை இவ்வளவு அழுத்தமாக அமைக்க முடியுமா என்பதற்கு மகாநதி ஒரு சான்று.

    குறிப்பாக சில காட்சிகள்.

    சிறை கம்பிகளுக்கு பின் கண் கலங்க தன் பிள்ளைகளுக்கு அறிவுரை வழங்கும் காட்சியில்..

    சோனா கட்சியில் மடியில் தன் மகளுடன்...

    ஹூப்ளி நதிக்கரையில் படகில் நீங்கள் சொன்ன வரிகள் பின்னணி:

    "காவேரி தாய் மடியில் வாழ்ந்த பிள்ளையடி கான சோகம் எல்லாம் கால்கள் கண்டதடி..."

    ReplyDelete
  17. என் வாழ்வில் நான் இதுவரை பார்த்த படத்திலே மறக்க முடியாத படமாக மகாநதி அமைந்து விட்டது.

    மொத்த படமும் கமலின் நடிப்பு..நடிப்பு மட்டுமே..

    திரைக்கதை இவ்வளவு அழுத்தமாக அமைக்க முடியுமா என்பதற்கு மகாநதி ஒரு சான்று.

    குறிப்பாக சில காட்சிகள்.

    சிறை கம்பிகளுக்கு பின் கண் கலங்க தன் பிள்ளைகளுக்கு அறிவுரை வழங்கும் காட்சியில்..

    சோனா கட்சியில் மடியில் தன் மகளுடன்...

    ஹூப்ளி நதிக்கரையில் படகில் நீங்கள் சொன்ன வரிகள் பின்னணி:

    "காவேரி தாய் மடியில் வாழ்ந்த பிள்ளையடி கான சோகம் எல்லாம் கால்கள் கண்டதடி..."

    ReplyDelete
  18. நன்றாக ரசித்து, அலசி, விரிவாக , அழகாக, அருமையாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    1993ம் ஆண்டின் சிறந்த தமிழ்ப்படமாக இந்திய அரசால் தேர்வு செய்யப்பட்ட படம்.

    ReplyDelete
  19. நன்றாக ரசித்து, அலசி, விரிவாக , அழகாக, அருமையாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    1993ம் ஆண்டின் சிறந்த தமிழ்ப்படமாக இந்திய அரசால் தேர்வு செய்யப்பட்ட படம்.

    ReplyDelete
  20. Even at the age of 20 this movie made me cry like a baby. Particularly the scene where his daughter get the blessing for attaining her age. even now also if i watch tears will roll down. This is only movie i would have seen more than 10 times. The entire review done by you was great and as i expected.

    ReplyDelete
  21. வணக்கம் ஜாக்கி

    சிறையில் கமலுடன் துலுகானம் மோதும் சண்டை காட்சி மிக அறுமையான காட்சி அமைப்பு.

    ReplyDelete
  22. தலைவரே...

    நேத்து ஒரு தபா படம் பாத்து... நாலு எடத்துல அழுதாச்சு...

    நல்ல படம்.

    அன்பு நித்யன்

    ReplyDelete
  23. ஒருமுறை பார்த்த பின் மறுபடியும் இப்படத்தைப் பார்க்க வீட்டில் ரங்கமணியும், குழந்தைகளும் அனுமதி தர மறுத்து விட்டார்கள்.

    ReplyDelete
  24. Pooranam viswanathanum nanraga nadithiruppar..."Deiva bakthi irundhirndha ingha vandhu irukka mattennu sollitu thadimari apparam "chi poda" n bare..Andha scene romba pidikkum... Apparam Indha padathula sangeetha va vachu tamil nadu shots yellam eduthapparam,calcutta scene kaga "andha dress" poda mattenu sollavum vera oru artist vachu yeduthada kelvi patten....UM.Krish

    ReplyDelete
  25. படத்தை காட்சிவாரியாக விவரித்து கண்முன் கொண்டுவந்துவிட்டீர்கள்.

    கேமரா,பாடல்கள்,இசை,வசனம் என எல்லாவற்றையும் கவனித்து எழுதியிருப்பதில் சினிமா மேல் தங்களுக்கு உள்ள தணியாத ஆர்வம் தெளிவாக தெரிகிறது.

    என்னையும் மிகவும் பாதித்த படம்.

    ReplyDelete
  26. //ஒரு விலைமாதர் தன் பெண்ணை ஜலஜா என்று அழைத்து இது காவேரி அப்பாடி என்று அறிமுக படுத்த அந்த பெண் அப்பா என்று கமலை கட்டி கன்னத்தில் முத்தமிட இரண்டு கைகளையும் கும்பிட்ட படி கண்ணீர் விடும் காட்சியில் கமல் உலகநாயகன்தான்...//

    இது வரை சீராக படித்து கொண்டிருந்தேன் - இந்த வரிகளை படித்தவுடன் , அந்த காட்சி கண் முன்னே வந்து ...குபுக்கென்று ஒரு கண்ணீர் ... நல்ல படம்.

    அதே மாதிரி காஞ்சிபுரம் பார்த்துடீங்களா

    ReplyDelete
  27. என்னுடைய 40வது வயதில் எனக்குதெரிந்தே, இது சினிமா என்று புரிந்தே, என் மனைவியுடன் படம் பார்க்கும்போது அழுதுக்கொண்டே பார்த்தப்படம். இப்போதும் இந்தப்படம் டிவியில் காட்டும்போது நான் இந்தப்படத்தை பார்ப்பதை தவிர்த்துவிடுவேன். அழுதுவிடுவேனோ என்ற பயம் தான். இவ்வளவு ஏன், உங்களுடைய விமரிசனத்தைக்கூட நான் மேலோட்டமாகத்தான் படித்தேன். இப்போது இந்த பின்னூட்டத்தைக்கூட கனத்த மனதுடன் தான் எழுதுகிறேன். (உண்மையில் எல்லோரும் சொல்வது போல “பாசமலர்“ சினிமா கூட ஒரு சொட்டு கண்ணீர் இல்லாமல் பார்த்தவன் நான்.) நீங்கள் இந்த படத்தை பற்றி எழுதியது ஒரு நெருங்கிய நண்பன் தன்னுடைய உணர்வுகளை பகிர்ந்துந்கொள்ளவது போல இருந்தது.

    ReplyDelete
  28. கமல் என்னும் மகா கலைஞன் கலையில் மகாநதியாக பெருக்கெடுத்த படம்.

    ReplyDelete
  29. நன்றாக ரசித்து எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். கமல் உலகநாயகன் தான். சந்தேகமில்லை.

    ReplyDelete
  30. மகாநதி - படத்துக்கு பொருத்தமான பெயர். அந்த படத்தில் வரும் பாத்திரங்களுக்கும் காவேரி, பரணி நதிகளின் பெயரையே வைத்து இருப்பார் தலைவர்

    ReplyDelete
  31. அது ஒரு கனாக் காலம் said...
    //ஒரு விலைமாதர் தன் பெண்ணை ஜலஜா என்று அழைத்து இது காவேரி அப்பாடி என்று அறிமுக படுத்த அந்த பெண் அப்பா என்று கமலை கட்டி கன்னத்தில் முத்தமிட இரண்டு கைகளையும் கும்பிட்ட படி கண்ணீர் விடும் காட்சியில் கமல் உலகநாயகன்தான்...

    இது வரை சீராக படித்து கொண்டிருந்தேன் - இந்த வரிகளை படித்தவுடன் , அந்த காட்சி கண் முன்னே வந்து ...குபுக்கென்று ஒரு கண்ணீர் ... நல்ல படம்.//

    எனக்கும் அதுவே . . .

    கமல் படங்களில் இரண்டாவது முறை பார்க்க எனக்குத் துணிவில்லாத படம் இது.

    ஒவ்வொருவரையும் ஒரு கதாபாத்திரத்தின் இடத்தில் தன்னை நிறுத்திப் பார்க்க வைப்பதுதான் இப்படத்தின் வெற்றி.

    ReplyDelete
  32. நானும் உங்களுடன் ஒத்துப்போகிறேன். மகாநதி கண்டிப்பாக கமல் படங்களிலில் முதலிடம் பெறும். மூன்று முறை திரையரங்கு சென்று நான் பார்த்த ஒரே படம் இது மட்டும்தான்.

    ReplyDelete
  33. தமிழ்மண வெற்றிக்கு வாழ்த்துக்கள்..

    :)

    தோழன்
    பாலா

    ReplyDelete
  34. வெற்றிக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  35. தமிழ்மண விருதுக்கு வாழ்த்துகள் ஜாக்கி..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner