ஒரு மணிநேரம் தாமதமாக மினி சாண்ட்வெஜ்அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) ஞாயிறு /08/05/2011

ஆல்பம்
 ===========
அன்னையர் அத்தனை பேருக்கும் எனது அன்னையர் தின நல்வாழ்த்துகள்..
===========
உங்களுக்கே தெரியாமல் உங்கள் வீட்டுக்கு பின்பக்கம் வந்து உங்கள் முகத்தில் பொளுக்கென்று குத்தினால் உங்களுக்கு எப்படி இருக்கும்?சர்வ நாடியும் அலன்டு போய் அல்லவா கிடக்கும்.. அது போலதான்  இப்போது பாகிஸ்தான் நிலையும்.. அடி வாங்கிய வலிக்கு இன்னும் சோத்து ஒத்தடம் கூட கொடுத்து முடிக்காத நிலையில் திரும்பவும்  அமெரிக்கா  நேற்று வந்து உதைத்து விட்டு போய் இருக்கின்றது...இதில்  கொடுமை என்னவென்றால் எங்கள் நாட்டு இறையான்மைக்கு அமெரிக்கா குந்தகம்  விளைவித்து இருக்கின்றது என்று சொல்லி முடிக்கும் முன் கும்மாங்குத்து விழுந்து இருப்பதை என்னவென்று சொல்ல???
 ===============================

உலகத்தில் அதிக சாலை விபத்துகள் நடைபெறுவதில் முதலிடம் இந்தியாதானாம்....உபரி தகவலாக...  நின்ற வாகனத்தின்  மீது வாகனம் மோதி இறப்பவர் எண்ணிக்கை இந்தியாவில் உள்ள தமிழக மாநிலத்தில் அதிகம் என்பதையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.....பாருங்கள் எத்தனை விபத்து நடந்தாலும் நம் ஆட்சியாளர்கள் மட்டும் விழித்துக்கொள்ளவே மாட்டர்கள்....இனி ஹெலிகாப்டர் விபத்து நடக்காமல் தடுப்பது எப்படி? என்று வேண்டுமானால் ஆலோசனை செய்ய வாய்ப்பு இருக்கின்றது....

 ==================================

மிக்சர்...
மூன்று கொலை செய்த கொலைகாரனை இங்கே பெங்களூர் போலிசார் கைது செய்து இருக்கின்றார்கள்... தனியாக வருபவர்களிடம் வழிப்பறி செய்து  கொலை  செய்து இருக்கின்றான்... இதில் கொடுமையான விஷயம் என்னவெனில்
ஒருவனை கொலை செய்து விட்டு அவன் பாகெட்டை துழாவினால் ஒரு செல்போனும் ஐந்து ரூபாய் பணம் மட்டுமே, இருந்து இருக்கின்றது... அதே போல் செல்போன்களை வெறும்
200ரூபாய்க்கு விற்று இருக்கின்றான்... அனேகமாக போதைக்கும் பெண்ணுக்கும் செலவழிக்க இந்த கொலையை செய்து இருக்கலாம்.. நல்லவேளை அவன் வானம் படம் பார்க்கவில்லை போலும்...


===================

பின்லேடனை அமெரிக்கா தாக்குதல் நடத்தியது போலவே, நமது ராணுவமும் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக நமது  நாட்டு கேப்டன் திருவாய் மலர்ந்து இருக்கின்றார்... அவருக்கு ஒரு விஷயம் தெரியவில்லை... நமது தளவாடங்கள் குடியரசுதினத்தின் போதுதான் வெளியே வரும் என்று.....



 நாளை திங்கள் கிழமையில் இருந்து நான்  சென்னை வாசம்...பேஸ்புக்கில் எனது போட்டோகிராபர்  நண்பர் முருகதாஸ் சென்னையை பாய்லரில் எடுத்து வைத்து இருப்பது போல இருக்கு... என்று சொல்லி வயிற்றை கலக்க வைத்து இருக்கின்றார்.... பார்ப்போம்...

============================================
அதிரடி நடவடிக்கை என்ற  பெயரில் தேர்தல் ஆணையம் பண்ணும் அலும்புக்கு அளவே இல்லை...100 மீட்டருக்கு அப்பால்தான் வெற்றியை கொண்டாட வேண்டுமாம்...ரொம்ப ஓவர்தான்யா...

=============================================
 பிலாசபி பாண்டி...


டேலன்டுக்கும் இன்டிஜென்சுக்கும் உள்ள வித்யாசம் என்ன??,

டைட்டா கயிறு கட்டி நயகரா மேல கயுத்துல நடக்கறது டேலன்ட்..அதை பத்தி யோசிக்காமவும் டிரைபண்ணாமலும் இருப்பதுதான் இண்ட்டிலிஜென்ஸ்
===================================================
நான்வெஜ்..18+
=
2050ஆம் ஆண்டில் இன்டிபன்டன்ஸ் டே படத்துல வருவது போல ஒரு பெரிய  ஸ்பேஸ் ஷீப் சென்னை மெரினாவில் தரையிரங்கியது... இந்தியன்  ஆர்மி அவர்களை சுற்றி வளைத்தது...காரணம் விசாரித்தால் ஸ்பெஸ் ஷிப்பில் மைல்ட் மெக்கானிக்கல் பிராப்ளம் என்றும்,அவர்களால்  நமக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்..அப்புறம் அவர்கள் வாழ்க்கை முறை, எந்தக்கோளில் இருந்து வருகின்றார்கள்.. என்ற விபரங்கள் சேகரித்தார்கள்... வந்த ஏலியன்கள் வெகு எளிதாக சென்னை பாஷை கற்றுக்கொண்டர்கள்..சரி எப்படி சந்ததியை உருவாக்குவீர்கள் என்று நம்மவர்கள் எலியன்களிடம்  கேட்க....?

ஆண் ஏலியன் மற்றும்  பெண் ஏலியன் இரண்டும் மேடையில் வந்து நின்றன..அவர்கள் தலையில் இருந்த இரண்டு ராடார்கள் உரசின... பெண் ஏலியன் வயிற்று பகுதியில் இருந்து ஒரு கதவு திறக்க ஒரு ஏலியன் குழந்தை வந்தது.....

சரி நீங்கள் எப்படி சந்ததி உருவாக்கம் என்று அவர்கள் கேட்டார்கள்..? நம்ம ஆட்கள் அணும் பெண்ணும் அவர்கள் எதிரில் உறவில் ஈடுபட்டனர் இல்லாத சவுண்டு எல்லாத்தையும் கொடுத்தார்கள்.. உச்சகட்டத்தில் பெண் கத்தி ஏலியன்களை அலறவைத்தாள்...உறவு  முடிந்து ஆண் பெண் இருவரும் எழுந்து நின்றனர்...

ஏலியன்கள்  கோராசாக கேட்டார்கள்??

எங்க நைனா குழந்தை.....??

நம்மவர்கள் சொன்னார்கள்...ஒரு பத்துமாதம் பொறுக்க வேண்டும் என்று...


 என்னாது பத்து மாசாமா???
ஓத்த அப்புறம் என்ன மயிறுக்கு ஓத்து முடிக்கும் போது அவ்வளவு அவசரம்????
 ===========


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...




=========

5 comments:

  1. //மயிறுக்கு ஓத்து//
    :) சாரு வழியில் அண்ணான் ஜாக்கி. நடத்துங்க அண்ணாச்சி.

    ReplyDelete
  2. நாலு பியரை உள்ளே தள்ளி ஆளாளுக்கு ஏ ஜோக் சொல்லும்போது சொல்வதற்கு ஏற்ற ஜோக். வெடிச்சிரிப்பு நிச்சயம் (உங்கள் சொற்களை அப்படியே பிரயோகித்தால் இன்னும் சூப்பர்). ஆனா, கருமம் ஞாபகம் இருந்து தொலையாது...

    ReplyDelete
  3. பின்னூட்டங்கள் குறைந்து விட்டனவே..... கவனியுங்கள் ஜாக்கி ! !

    "நமது தளவாடங்கள் குடியரசுதினத்தின் போதுதான் வெளியே வரும் என்று..." ---- கண்டிக்கிறேன். முப்படை வீரர்களின் வாழ்க்கை முறை தெரியாமல் கூறுகிறீர்கள் ! ! எப்போதும் நமது படைகள் தயார்தான் போருக்கு

    ReplyDelete
  4. நன்றி இளா,சாரு என்னை விட அதிகமா எழுதுவார்ன்னு நினைக்கின்றேன்..

    நன்றி பிடி செந்தில் குமார்...


    நன்றி நடராஜ் அது போலான ஜோக்தான் இது... நண்பர்களுக்குள் சொல்லி சொல்லி சிரிக்கலாம்....


    நன்றி பொன்சந்தர்...

    நம் ராணுவத்தினர் திறமையானவர்கள்தான் ஆனால் ஆட்சியாளர்கள் வேண்டாம் அது இன்னும் பெரிதாக போகும்....


    பின்னுட்டத்துக்கு நான் எழுதுவதில்லை பொன்சந்தர்... என்னை சந்தித்தி பேசும் நிறைய நண்பர்கள் பின்னுட்டம் இடுவதில்லை...

    பின்னுட்டம் குறைய இன்னும் ஒரு காரணம் நான் சரியாக பதில் அளிக்கவில்லை என்ற வருத்தமும் காரணமாக இருக்கலாம்....

    வெறும் நன்றி நன்றி என்று சொல்லவதை விட பதில் எழுத நேரம் இருந்தால் பதில் செல்வதையே விரும்புகின்றேன்....


    அதே போல என் மீதான அக்கரைக்கு என் நன்றிகள்..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner