சென்னை சாலைகளில் வீரம் காட்டும் புயல்வேக அஜீத்கள்...சென்னையில் வாழ பழக..(பாகம்/4)

நேற்று இரவு விஜய்டிவியில் கதையல்ல நிஜம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டு இருந்தது... முன்பு ஒளிபரப்பியபோது அதன் ஒருசில பகுதிகள்தான் பார்த்து இருக்கின்றேன்... சில எப்பிசோட்கள் நெகிழ்ச்சியாகவும் இருந்தது...

இப்போது எல்லாம் அப்படி பார்பதில்லை...வந்திருக்கும் விருந்தினரிடம் இப்போதே மன்னிப்பு கேளுங்க... இங்கேயே சேர்ந்து வாழ்வோம் என என் முன்னாடி சத்தியம் பண்ணுங்க..... என்பது போலான டிஆர்பி டார்ச்சரின் காரணமாக அந்த நிகழ்ச்சி வந்தால் நான் அடுதத சேனலுக்கு கடந்து போய் விடுவேன்...

ஆனால் நேற்று அந்த நிகழ்ச்சியை கடக்கும் போது ஒரு வார்த்தை காதில் விழ சட்டென ஆர்வம் ஆனேன்..இப்படி சென்னை ரோட்ல,டிராபிக்ல வேகமா போறிங்களே? அதையே ஏன் ரேஸ் டிராக்ல போய் உங்க திறமையை காட்ட கூடாது? என்று நடிகை லட்சுமி கேட்க..


அதில் என்ன திரில் இருக்கு? என்று கேட்டுவிட்டு டிராபிக்ல ரேஸ் ஓட்டுவதுதான் தங்களுக்கு பிடித்த விசயம் என்று சந்தோஷமாக சொன்னது.... ஒரு 25 பேர் கொண்ட இந்தியாவின் வருகால தூண்கள் ....

எப்படியும் ஒரு 25 பேருக்கு மேல் இருந்தார்கள்... எல்லோரும் சென்னை சாலைகளில் 150 கிலோமீட்டர் வேகத்தில் பறப்பவர்கள்...எல்லோரும் மீசை இப்போதுதான் எட்டிபார்த்த குட்டி பசங்கள்...

அதில்தான் கிக்காம்..இதில் வண்டியை வேகமாக போகவும் அல்டேஷன் செய்து கொடுக்கும் மெக்கானிக் வந்தார்... எல்லோரும் அவருக்கு உற்சாக வரவேற்ப்பு கொடுத்தார்கள்...



பைக்குகளை ஆல்டேஷன் செய்யும் மெக்கானிக்கிடம்.... நடிகை லட்சுமி.. இது தப்பில்லையா? உன்று கேட்க... நாங்க ரேசுக்குதான் வண்டியை தயார் பண்ணறோம்....இது போலான வண்டியை ரேஸ்டிராக்லதான் ஓட்டனும்... ரேஸ்டிராக்ல ஹெல்மட் எல்லாம் போட்டு ஒரு 200மைல் வேகத்தில் போய் கீழே விழுந்தாலும் ஒரு சின்ன சிராய்ப்பு கூட ஓட்னவருக்கு இருக்காது....

ஆனா சென்னையில் பிசியான டிராபிக்ல 150கிமீ வேகத்தில் போய் ஆக்சிடென்ட் ஆனா எதுவும் தேராது நடைபினம்தான் என்று சொன்ன போது நடிகை லட்சமி இடைமறித்து... நீங்கஅவங்களுக்கு,அட்வைஸ் பண்ணா என்ன -? என்று கேட்ட போது...

எங்க காலத்துல பெரியவங்க சொன்ன இந்த காதுல வாங்கி அந்த காதுலயாவது விடுவோம்... இப்ப இருக்கற பசங்க காதுல வாங்க கூட பிரிய படுறதில்லை என்பதாக அந்த பேட்டி போய் கொண்டு இருந்தது...


சென்னையில் டூவீலர் ஓட்டும் அத்தனை பேருக்கும் இவர்கள் பரிட்சயம் ஆகி இருப்பார்கள்...மிக முக்கியமாக அடையாறு பகுதிகளில்தான் அதிகம்.. முக்கியமாக பெசன்ட் நகர் பீச்மற்றும் மெரினா பீச்களில் இவர்கள் ஆதிக்கம்தான்....

ஒரு கம்பெனி 250 சீசீ வேகமுள்ள பைக்கை மார்க்கெட்டில் அறிமுகபடுத்திய அரைமணி நேரத்தில் அந்த பைக்கை வாங்கி தன் கேள் பிரண்டை அதில் உட்கார வைத்து உருமி உருமி அங்கு கடற்கரையில் இருக்கு பணக்கார பசங்களுக்கு கீர் ஏற்றுவது தினமும் நடக்கும் விசயம்தான்.....


நீங்கள் சிவனே என்று போய் கொண்டு இருப்பீர்கள்... உங்கள் பக்கத்தில் வந்து ஹாரன் அடிப்பார்கள்...ஒரு கணம் தடுமாறி விடுவீர்கள்... அதே போல் உங்கள் வாகனத்தை உரசுவது போல் மின்னல் வேகத்தில் போய் உங்களை கலவவரபடுத்துவார்கள்.. அவர்கள் வேகத்துக்கு உங்களை டச் பண்ணாலே ஸ்டெயிட்டாக மோட்சத்துக்கு டிக்கெட் வாங்க வேண்டியதுதான்....

இதில் எனக்கு கலவரம் ஏற்படுத்தும் விஷயம் என்னவென்றால் பின் சீட்டில் எதாவது ஒரு பெண் உட்கார வைத்து இருந்தால் அந்த வண்டி இன்னும் பல கட்டுகள் அடித்தபடி புயல் வேகத்தில் போய் கொண்டு இருக்கும்...

கல்லூரியில் வேலை செய்த போது காதில் விழுந்த செய்தி என்வென்றால்.. இரண்டு பேர் ஒரு பெண்ணை ஒருதலையாய் காதலிக்கின்றார்கள்... ஆனால் அந்த பெண்க்கு இவர்களை சுத்தமாக தெரியாது...இரண்டு பேருமே அந்த பெண்ணை காதலிக்கபோட்டி போடுகின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம்... இருவருக்கும் இசிஆரில் பைக் ரேசை நண்பர்கள் நடத்துவார்கள்....


மாயாஜாலில் இருந்து கிண்டிக்கு வந்து திரும்பவும் யார் முதலில் மாயாஜால்வருகின்றார்களோ.. அவர்கள் அந்த பெண்ணை லவ் பண்ணலாம்... யாரும் அவர் வழியில் குறுக்கிடமாட்டார்கள்.... பாருங்க எப்படி எல்லாம் போட்டின்னு... இன்னும் இதுபற்றி நிறை எழுதலாம்...


அதே போல பெட் மேச் வைத்து தண்ணி அடிக்கற விஷயத்தை ஏற்கனவே சென்னை28 படத்துல பார்த்தோம்... இங்கயும் காசு இல்லைன்னா.. ரேஸ்வைத்து பணம் பார்ப்பார்கள்.. பாதிக்கபடுவது பொது மக்கள்தான்... இது போலான விபத்துகளில் பாதிக்கபட்டு பல அப்பாவி பொதுமக்கள் நடைபினமாக இருக்கின்றார்கள்...

போலிஸ் இசிஆரில் எப்போதாவது செக் செய்வார்கள் அப்படிய செக் செய்தாலும் அந்த பசங்களுக்கு பண பலமும் அரசியல் பலமும் இருப்பதால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது....

இரு சக்கர வாகனத்தை ஓட்டுவது பெண்கள் என்று தெரிந்து விட்டால் அவர்கள் அருகில் போய் கட் அடித்து அந்த பெண்களை மிரள வைப்பது டிராபிக்கில் ரேஸ் ஓட்டும் அஜித்களுக்கு அது சிம்ம சொப்பனம்...

உங்கள் திறமையை உங்கள் திரில்லை ரேஸ் டிராக்கில் நிரூபிக்க வேண்டியதுதானே எதற்கு அப்பாவி பொதுமக்களின் வாழ்க்கையோடு விளையாடனும் .. அதே போல் இந்த புயல் வேகம் போக தைரியத்துக்கு சரக்கும் அடித்து விட்டும் வாகனம் ஓட்டுகின்றர்கள் என்று கேள்விபட்டேன்.....

ஆனால் இப்படி போய் வேளச்சேரியல் விழுந்த பையனை தூக்காமல் பொதுமக்கள் அவனை புரட்டி எடுத்தார்கள்... முகத்தில் விழுந்த குத்துகளுக்கு அவன் நிச்சயம் இனி பைக் ஸ்டார்ட் செய்ய சில நாட்கள் ஆகலாம்...

இதுகூட பராவாயில்லை... மெரினாவில் சர்விஸ்லேனில் வீலிங் ரேசிங் எல்லாம் செய்வார்கள்...குழந்தைகள் பலர் விளையாடும் இடம்.. அவர்கள் போகும் வேகத்துக்கு பக்கத்தில் யாராவது குறுக்கே வந்தால் அவ்வளவுதான்...
சமீபத்தில் 20க்கு மேற்பட்ட வீலிங் செய்த பைக்குகளை மெரினாவில் போக்குவரத்து காவல்துறை ஜப்தி செய்தார்கள்...

பொதுவாக இது போல் பிரச்சனையின் முக்கியகாரணம் அப்பா அம்மா கொடுக்கும் செல்லம்தான்... தன் மகன் இது போலான பைக் ஆல்டேஷன் மற்றும் அதிகமான சீசீ உள்ள பைக் வாங்கும் போது ஏன்? எதற்கு? என்ற கேள்வி கேட்பதேஇல்லை....

முக்கியமான இன்னொரு காரணம் டிராபிக்கில் ரேஸ் ஓட்டும் எந்த நாதரியும் பெரிய சில்லரை வாங்கவில்லை.. வாங்கிவிட்டால்...? அந்த பயம் வந்து விட்டால்...? அதன் பிறகு டிராபிக்கில் ரேஸ் போகமாட்டார்கள்... எங்களுக்கு டைமிங் இருக்கு என்று சொன்னால் என் பதில்....சென்னை தெருவில் எல்லா இடத்திலும் சாலைகளில் பள்ளம் உண்டு...அந்த இடத்தில் ஒருவர் பிரேக் அடித்தாலும்.... டைமிங் மாறிவிட்டால்... வேளச்சேரியில் சில்லரை வாங்கி கொண்டு வலியில் துடித்த போதும் உதை கொடுத்த பொதுமக்கள் உங்கள் மேலும் கைவக்க வருவார்கள்...


சென்னையில் அதிகபட்சம் நீங்கள் 60 கீலோமீட்டர் வேகம் போவதுதான் ஓகே...நானும் வேகமாக போவேன் தேவைபட்டால் மட்டும் போவேன்... கிட்ட போய் ஆரன் அடிப்பது.. கிட்ட போய் அடுத்த வாகன ஓட்டி அலரும் வகையில் கட் அடிப்பது என எந்த வேலையும் நான் செய்ய மாட்டேன்...

இது போல தமிழ்நாட்டின் பிற மாவட்ட தலைநகரங்களிலும் இது போல் நடக்கலாம்...உங்கள் மீது தப்பே இருக்காது நீங்கள் சாதுவான மீதமான வேகத்தில்தான் உங்கள் மனைவி, மகள், அல்லது மகனோடு, போய் கொண்டு இருப்பீர்கள்....

சட்டென் கட்டு பாடு இல்லாத வேகத்தில் உங்கள் மீது ஒரு வாகனம் மோதி கீழே விழ தமிழகத்தில் அதுவும் சென்னையில் ஏராளமாய் நிறைய வாய்ப்பு இருக்கின்றது.. அதனால் சென்னையில், தமிழகத்தில் வாழ இது போலான விஷயங்களில் பழக வேண்டும்...



அப்ப போக்குவரத்து காவல்துறை எதாவது செய்யுமா?
செய்யுமே... அவர்களை பொறுத்தவரை ஹெல்மெட் போடாதது மட்டுமே டிராபிக் விதி மீறல்...எதாவது செய்வாங்களா?

போங்க தம்பி....................

அன்புடன்
ஜாக்கிசேகர்

பிடித்து இருந்தால் ஓட்டுபோடுவது உங்கள் இஷ்டம்

21 comments:

  1. title and content are super..... keep writing up...

    ReplyDelete
  2. நீங்க சொல்றது அவ்வளவும் உண்மை ஜாக்கி...! ஒரு தடவை சில்லறை வாங்கினால் அடுத்த முறை டைமிங் கிடைச்சாலும் நிதானம் இருக்கும் உள்ளுக்குள்ள...! இதே போல ஹைதராபாத் சாலைகளில் சீறியவர்கள்தாம் நானும் என் நண்பர்களும்...இத்தனைக்கும் அங்குள்ள சாலைகள் மிகவும் விஸ்தாரமாக இருக்கும்...
    ஆனாலும் அந்த கால்குலேசன் மிஸ் ஆகிவிட இரண்டு நண்பர்களுக்கு கை மற்றும் கால்களில் இரும்பு பட்டை பொறுத்த பட்டிருக்கிறது...! சென்னையில் அதிகாலை போக்குவரத்து நெரிசலற்ற சாலையாக இருப்பின் எனது வேகம் 90 ...மற்ற படி சராசரியாக அறுபதிற்க்கு மேல் செல்வதில்லை....மேலும் இப்போதெல்லாம் ரியர் வியு கண்ணாடி இரண்டு பக்கமும் மாட்டி வண்டி ஒட்டுகிறேன்(முன்பெல்லாம் அதற்க்கு அவசியம் இல்லை என்றே நினைப்பதுண்டு)
    இதில் எனது பயமெல்லாம்...பின்னாடி பெண்களை வைத்துக் கொண்டு ஒரு பாதுகாப்பு கவசம் கூட அன்றி எப்படி இவர்களால் இப்படி பறக்க முடிகிறதென்பதுதான்...! நான் ஹைதராபாத்தில் இருந்து கிளம்பும் அன்றைக்கு ஐ.டி துறையை சேர்ந்த ஒரு ஜோடி இரநூறு சிசி பைக்கில் பறந்து போய் ஒரு டிராக்டருடன் மோத...பையன் அதே இடத்தில் காலி. அந்த பெண்ணிற்கு இரண்டு கால்களும் எடுத்து விட்டார்கள்..!

    ReplyDelete
  3. நூறு சதவீதம் உண்மைதான் ... இதனால் பொதுமக்களுக்குத்தான் இடைஞ்சல்

    ReplyDelete
  4. நூறு சதவீதம் உண்மைதான் ... இதனால் பொதுமக்களுக்குத்தான் இடைஞ்சல்

    vote given...

    ReplyDelete
  5. good one.. At least people should visit GH or any hospital where the accident victims are kept for treatment..before trying this kind of adventure. Even 60 km is too speed for the road condition in Chennai.

    ReplyDelete
  6. ! நான் ஹைதராபாத்தில் இருந்து கிளம்பும் அன்றைக்கு ஐ.டி துறையை சேர்ந்த ஒரு ஜோடி இரநூறு சிசி பைக்கில் பறந்து போய் ஒரு டிராக்டருடன் மோத...பையன் அதே இடத்தில் காலி. அந்த பெண்ணிற்கு இரண்டு கால்களும் எடுத்து விட்டார்கள்..!//

    இப்ப மேட்ரோ ரியில் பாலம் வேலை நடக்குது லெமூரியன் இந்த நேரத்துலு ரோடு எல்லாம் சின்னதாகிட்டது... இப்ப கூட ரேஸ் போறானுங்க...
    பொறம் போக்கு பசங்க....

    நன்றி லெமூ விரிவாய் பகிர்ந்தமைக்கு..

    ReplyDelete
  7. நன்றி ராம்...

    நன்றி சௌரி.. நீங்கள் சொல்வது போல் ஒரு ஆக்சிடன்ட் கேஸ் பாத்த இவ்வளவு வேகம் வராது..

    ReplyDelete
  8. அவ்வளவும் உண்மை ! :(

    ReplyDelete
  9. நீயா நானா ல‌ கொஞ்ச‌ நாள் முன்னாடி இதே விவாத‌மா ந‌ட‌ந்த‌து. மொக்க‌யா முடிஞ்ச‌து.
    என்ன‌ பொருத்த‌ வ‌ர‌, ஆல்ட்ரேச‌ன‌ ந‌ம்ம‌ ஊர்ல‌ ஸ்ட்ரிக்டா ப‌ண்ண‌னும். ஒவ‌ர் ஸ்பிடிங்க‌ க‌டுமையாக்க‌னும். இங்க‌ல்லாம் () 30 க்கு 31 ல‌ போன‌துக்கு 60 ப‌வுண்டு க‌ட்றோம். அது மாதிரி ந‌ம்ம‌ ஊர்ல‌யும் க‌டுமையா மாத்த‌னும்.

    ReplyDelete
  10. நண்பர்திருவின் பின்னுட்டம் மெயிலில் வந்தது.. இப்போது இங்கே..


    அன்புள்ள ஜாக்கி,

    சென்னை சாலைகளில் வீரம் காட்டும் புயல்வேக அஜீத்கள்...சென்னையில் வாழ பழக..(பாகம்/4)
    பதிவு மிகவும் அருமை. பின்னூட்டம் இடுகையில், "Blogger" பிரச்சனை செய்து விட்டது. அதனால் பின்னூட்டம், மின்னஞ்சல் மூலம் அனுப்புகிறேன்.

    ==========================================================================================

    சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து, பீச் ரோடு வழியா ஒரு ஞாயிற்றுக் கிழமை நைட் 9 மணிக்கு என் மனைவியோடு மயிலாப்பூர் வந்துகிட்டு இருந்தேன்.அப்போ இது மாதிரி பொறம்போக்கு / நாதாரி .. (இன்னும் என்ன அசிங்கமா கெட்டவார்த்தை வேணுமோ அதெல்லாம் போட்டுக்குங்க) நாய்ங்ககண்ணா பின்னானு வந்துக்கிட்டும் போய்க்கிட்டும் இருந்தானுங்க. பீச்ல நல்ல கூட்டம், குடும்பம் குடும்பமா வீட்டுக்கு திரும்ப பஸ் ஸ்டாப்ல ஜனங்க காத்துக்கிட்டு இருந்தாங்க. நான் 40 Km ஸ்பீட்ல தான் போனேன் ( அது போதும் ). திடீர்னு, எனக்கு முன்னால போன MTC பஸ் பிரேக் போட்டு நின்னது.நான் லெப்ட்ல கொஞ்சம் முன்னால போய் பாத்தேன். பஸ்க்கு முன்னால ஒரு மாருதி swift கார். அதோட டிரைவர் கொஞ்சம் பயந்த மாதிரி வெளியில வந்து நின்னுகிட்டு இருந்தாரு. காரோட முன் பக்கம் நல்லா "V" ஷேப்புல ஒரு bump. ஒரு pulsar 180 CC பைக் தாறுமாறா கிடந்துச்சு. காருக்கும்,பைக்குக்கும் நடுவுல ஒருத்தன் செத்துக் கிடந்தான்.
    கடவுளே ! அந்த ஒரு நொடி, நான் என் மனைவிகிட்ட சொன்ன ஒரே விஷயம் "பீச் பக்கம் பாரு, ரோட்டுப் பக்கம் பாக்காத".
    ஏன்னா ,அவன் தலைல எந்த பாகம் எங்க இருக்குன்னே தெரியல.
    கார் ஒட்டுனவர் மேல எந்த தப்பும் இல்ல. எல்லோ லைனுக்குள்ள கரெக்ட் ஸ்பீட்ல அவர் வந்தாரு. எதிர்ல வந்தவன் (செத்த நாய்) ராங் சைட்ல வந்து இடிச்சிட்டான். சுத்தி இருந்த யாருக்கும் செத்தவன் மேல துளி கூட பரிதாபமே வரல. அவனவன் திட்டிக்கிட்டு இருந்தான்.

    இந்த மாதிரி சாகதானா இப்படி எல்லாம் போறானுங்க ? சாகறுதுன்னு முடிவு பண்ணிட்டா , நேரா ரயில் தண்டவாளத்துல போய் தலையக் குடுக்க வேண்டியது தானே இந்த தருதலைங்க .. ரோட்டுல சும்மா போறவன் உயிரை வாங்குறானுங்க ..

    ஜாக்கி, ஊருக்கு ரொம்ப வேண்டிய பதிவு. நன்றி. !!
    ==============================================================================================================

    நன்றி !

    -திரு.

    ReplyDelete
  11. நண்பர்திருவின் பின்னுட்டம்

    அன்புள்ள ஜாக்கி,

    பதிவு மிகவும் அருமை. பின்னூட்டம் இடுகையில், "Blogger" பிரச்சனை செய்து விட்டது. அதனால் பின்னூட்டம், மின்னஞ்சல் மூலம் அனுப்புகிறேன்.
    சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து, பீச் ரோடு வழியா ஒரு ஞாயிற்றுக் கிழமை நைட் 9 மணிக்கு என் மனைவியோடு மயிலாப்பூர் வந்துகிட்டு இருந்தேன்.அப்போ இது மாதிரி பொறம்போக்கு / நாதாரி .. (இன்னும் என்ன அசிங்கமா கெட்டவார்த்தை வேணுமோ அதெல்லாம் போட்டுக்குங்க) நாய்ங்ககண்ணா பின்னானு வந்துக்கிட்டும் போய்க்கிட்டும் இருந்தானுங்க. பீச்ல நல்ல கூட்டம், குடும்பம் குடும்பமா வீட்டுக்கு திரும்ப பஸ் ஸ்டாப்ல ஜனங்க காத்துக்கிட்டு இருந்தாங்க. நான் 40 Km ஸ்பீட்ல தான் போனேன் ( அது போதும் ). திடீர்னு, எனக்கு முன்னால போன MTC பஸ் பிரேக் போட்டு நின்னது.நான் லெப்ட்ல கொஞ்சம் முன்னால போய் பாத்தேன். பஸ்க்கு முன்னால ஒரு மாருதி swift கார். அதோட டிரைவர் கொஞ்சம் பயந்த மாதிரி வெளியில வந்து நின்னுகிட்டு இருந்தாரு. காரோட முன் பக்கம் நல்லா "V" ஷேப்புல ஒரு bump. ஒரு pulsar 180 CC பைக் தாறுமாறா கிடந்துச்சு. காருக்கும்,பைக்குக்கும் நடுவுல ஒருத்தன் செத்துக் கிடந்தான்.
    கடவுளே ! அந்த ஒரு நொடி, நான் என் மனைவிகிட்ட சொன்ன ஒரே விஷயம் "பீச் பக்கம் பாரு, ரோட்டுப் பக்கம் பாக்காத".
    ஏன்னா ,அவன் தலைல எந்த பாகம் எங்க இருக்குன்னே தெரியல.
    கார் ஒட்டுனவர் மேல எந்த தப்பும் இல்ல. எல்லோ லைனுக்குள்ள கரெக்ட் ஸ்பீட்ல அவர் வந்தாரு. எதிர்ல வந்தவன் (செத்த நாய்) ராங் சைட்ல வந்து இடிச்சிட்டான். சுத்தி இருந்த யாருக்கும் செத்தவன் மேல துளி கூட பரிதாபமே வரல. அவனவன் திட்டிக்கிட்டு இருந்தான்.

    இந்த மாதிரி சாகதானா இப்படி எல்லாம் போறானுங்க ? சாகறுதுன்னு முடிவு பண்ணிட்டா , நேரா ரயில் தண்டவாளத்துல போய் தலையக் குடுக்க வேண்டியது தானே இந்த தருதலைங்க .. ரோட்டுல சும்மா போறவன் உயிரை வாங்குறானுங்க ..

    ஜாக்கி, ஊருக்கு ரொம்ப வேண்டிய பதிவு. நன்றி. !!


    நன்றி !

    -திரு.

    ReplyDelete
  12. நூறு சதவீதம் சரிதாங்க இத படிச்சி ஒரு இரண்டு பேர் திருந்தின சரி தான் ,நீங்களும் வேகத்தை குறைத்துகொள்ளுங்கள் ,எனது ஓர்குட் நண்பர் ஒருவர் சொன்னதை இங்கே சொல்கிறேன் உங்கள் ஆண்மையை பைக் ,கார் இன்னது வேக முள்ளில் காட்டாதீர்கள் முடிந்தால் ஒரு 25 km/h வேகத்தில் ஓடுங்கள் இல்லை 35 km/h வேகத்தில் மிதிவண்டி ஒட்டி காடுங்கள் .

    ReplyDelete
  13. நான் சுமார் ௬ ஆண்டு முன்பு வள்ளுவர் கோட்டம் அருகில் திரு Rsundarajan , டைரக்டர் அவர்களின் மகன் PTC பஸ்சில் அடிப்பட்டு உயிருக்கு போராடி இறந்ததை கண்ணால் பார்த்ததை இன்னும் மறக்கமுடியவில்லை. ஏதோ டான்ஸ் கிளாஸ் போய்விட்டு வரும்போது accident ஆனதாக மறுநாள் பேப்பரில் பார்த்தேன். பெற்றோர்கள் கனவு, இழப்பை நினைத்து பார்த்தல் இதுபோன்ற துர்மரணம் தவிர்க்கப்படலாம்

    ReplyDelete
  14. இந்தியா முழுதும் இப்படித்தான் என நினைக்கிறேன். மங்களூரிலும் இப்படித்தான், சென்னை ரொம்ப மோசம்போல இருக்கிறது :(

    நான்கூட 100 சிசியிலிருந்து 150 சிசிக்கு மாறியிருக்கிறேன் ரேஸ் போக அல்ல என் பழைய வண்டி டபுள்ஸ் 40 - 50 போகவே உதறியதால்.

    +1

    ReplyDelete
  15. டைட்டில் பயங்கரம் தலைவா!

    ReplyDelete
  16. //நான் சுமார் ௬ ஆண்டு முன்பு //

    யக்கா! என்ன சொல்றீங்க?

    ReplyDelete
  17. Blogger ராஜன் said...

    //நான் சுமார் ௬ ஆண்டு முன்பு //

    யக்கா! என்ன சொல்றீங்க?
    அக்க இல்ல அண்ணா .. சௌரிராஜன் ...6 years.. அப்படி மாறிடிச்சி

    ReplyDelete
  18. போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்சிபஎபா இந்த இடுகைய சேர்த்திருக்கேன்.நன்றி!

    ReplyDelete
  19. very true i am also got accident by Pizza guys

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner