சாண்டவெஜ் அண்டு நான்வெஜ்(18+சனி/3•07•10)

ஆல்பம்...

கற்றதும் பெற்றதும் பதிவுக்கு நிறைய நெகிழிச்சியான கடிதங்கள் போன்கால்கள் என்று வந்தது மிக்க மகிழ்ச்சி...நான்கு கடிதங்களில் திட்டி வந்த கடிதத்துக்கும் ஆறுதலாய் பலர் பேசினார்கள்... நான் இதுபற்றியெங்லலாம் கவலைபட்டதில்லை...தலை என்ற நண்பர் என் பதிவுக்கு மைனஸ் ஓட்டு குத்துவதில் முனைப்பாக இருக்கின்றார்... எனக்காக நேரம் ஒதுக்கி மைனஸ் ஓட்டு குத்தும் அவரது இடைவிடாத இந்த பணி மிகவும் மெச்சதக்கது...இதில் பலர் ஆதரவாய் கைபேசியில் பேசினார்கள்... முக்கியமாக கார்த்தி(அறிவுதேடல்) மிக ஆதரவாய் பின்னுட்டம் எழுதினான்...

பதிவுலகில் பெற்றதும் நிறைவு பகுதியில் நான் எழுத மறந்த விஷயம் ஒன்று உண்டு...அதற்கு ஒரு நண்பர் வருத்தபட்டு இருந்தார்...கையில் நோட்பேட் வைத்துக்கொண்டு எழுதி டிக் அடிக்கும் ரகம் நான் அல்ல... மனதில் என்ன தோன்றுகின்றதோ அதை அப்படியே எழுதிவிடுவேன்....எழுத நினைத்து மறந்து போன விசயங்கள் அதிகம்... இதில் அந்த நண்பர் வருத்தபடும் வரை அது என் நினைவில் வரவில்லை...

பதிவுலகில் பெற்றதில் எழுதாமல் விடுபட்டது... பார்பான அடிவருடி பட்டம்... அந்த பட்டத்தை எனக்கு சிலர் கொடுத்து இருந்தார்கள்... அது பதிவுலகில் வந்து எனக்கு கிடைத்த பட்டம்....

நான் தீவிரமான பார்பபான எதிர்பாளன் என்று சொன்னால் யாரும் நம்ப போவதில்லை...ஆனால் எல்லாவிஷயத்துக்கும் அவர்களை எதிர்பதில்லை....பல விஷயங்களில் அவர்களை எதிர்த்து இருக்கின்றேன்......குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இன்றைய ஈழ பிரச்சனையும்.. தமிழ் உணர்வு குறைந்தமைக்கும் அவர்கள்தான் காரணம் என்பது என் வாதம்.....
============

தமிழ் செம்மொழி மாநாடு பற்றி முதலில் எனக்கு பெரிதாக எந்த ஈடுபாடும் இல்லை... அதில் நிறைய மைனஸ் இருந்தது....காரணம் முள்வேலி மனித மீறல் படுகொலைகள்..ஆனால் மாநாட்டில் தமிழ் பற்றிய புகழ் கலைஞர் பற்றிய புகச்சியை மீறி ஒளிக்கத்தான் செய்தது.. ஓகே பை பை என்று என் அக்கா வீட்டில் சொல்ல நீ என்ன இங்லிஷ்காரனா என்ற கேள்வி எழுப்பபட்டதில் எனக்கு மகிழ்ச்சியே...பல குடும்பங்கள் கூடுமானவரை தமிழில் பேச முயற்ச்சித்தன...அதற்கு எத்தனை கோடி வேண்டுமானாலும் கொட்டலாம்... திரைபடத்துக்கு தமிழில் பெயர்வைத்தால் விரிவிலக்கு என்று சொல்வதற்கு இது எவ்வளவோ பராவாயில்லை......ஆனாலும் ஈழத்து பிரச்சனையை சபையில் வழைப்ழத்தில் ஊசி சொருகுவது போல் பேசிய திருமாவளவனுக்கு நன்றிகள்...
==============

இரண்டு நாளில் சென்னையை சுற்றி உள்ளஇன்ஜினியரிங் கல்லூரியில் படித்த மாணவர்கள் 5 பேருக்கு மேல் பல்வேறு காரணங்களால் மர்மமாய் இறந்து போய் இருக்கின்றார்கள்...உண்மை கண்டிப்பாக வெளிவரவாய்ப்பு இல்லை பணம் எல்லாத்தையும் மறைத்து விடும்...
==============

மிக்சர்...

தமிழில் பெயர்பலகை வைக்க வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கபட்ட பின் ஏனோ வேண்டா வெறுப்பாக பெயர்பலகை மாற்றினார்கள்.. சிலர் சின்ன பிள்ளைகள் போல் டிஜிட்டலில் இன்ஸ்டன்ட் பெயரை அடித்து ஆங்கில போர்டுகளில் தமிழ் கடை பெயர்களை ஒட்டினார்கள்... சென்னையில் பல வருடங்களாக தமிழ் போர்டு பார்க்க முடியவில்லை... (சென்னை அண்ணாசாலை சாந்தி தியேட்டருக்கு அருகில் இருக்கும் சோனிமையம் தமிழ் எழுத்துக்களில்)

நான் ஆங்கிலத்துக்கு எதிரி அல்ல... ஆனால் தமிழ் உதாசினபடுத்துவதை எப்படி ஏற்றுக்கொள்வது...இதுவே கர்நாடகவாக இருந்தால் அப்படி நடக்க வாய்பில்லை...சென்னை அண்ணா அறிவாலயம் பக்கத்தில் டிஎம்எஸ் அலுவலகத்தின் எதிரில் உள்ள பெயர்மாற்றபட்ட ஓட்டலில் எந்த இடத்திலும் தமிழ் இல்லை.... சென்னை டிராபிக் போலிஸ் அறிவிப்புகள் எல்லா ஆங்கிலத்துக்குதான் முதலிட்ம்... முதலில் இதனை மாற்றுவோம்....அப்புறம் அடுத்தமாநாடு நடத்துவோம்.....
==============


ஒரு போஸ்டர் என்னை வியக்க வைத்தது...
படத்தை கிளிக்கி வாசித்தாள் நீங்களும் வியப்பீர்கள்... போர்டு இருக்கும் இடம் மனப்பாக்கம் போகும் வழியில்....
================

இந்தவார ஆனந்தவிகடனில் ஒரு கார்ட்டுன் வெளியாகி உள்ளது... என்னதான் இந்தியா என்றாலும்.... கூடங்குளமும் கல்பாக்கமும் இடம் மாறிதானே இருக்கின்றது...
================



இனிமேல் கலாநிதிமாறன்,கிளைவுட் நைன்,ரெட்ஜெயன்ட் போன்றவர்களிடம் விற்கும் படங்களுக்குதான் பெரிய வியம்பரம் கிடைக்கும் போல் தெரிகின்றது....இனி சின்ன பட்ஜெட்படங்களின் விளம்பரத்தை மக்களிடம் சேர்பதற்குள் முழி பிதுங்கிவிடும்...

=======
இந்த வார புகைபடம்...
எதை சீக்கரமா ஓப்பன் பண்ண போறாங்கன்னு தெரியலை...தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா...
================

இந்தவார சலனபடம்...

ராஜா,ரகுமான் எல்லாம் இனி யோசிக்கனும்.....அவசியம் பாருங்கள்... மொத்தம் 8 நிமிட வீடியோ...3வது நிமிஷத்தில் உங்கள் உதட்டில் புன்னகை வரவைக்கும்....5 வது நிமிடத்தில் உங்கள் புன்னகை சிரிப்பாக மாறும்... அப்படி சிரிக்கவில்லை என்றால் அவசியம் டாக்டரை பார்க்கவும்...வீடியோ முடிவில் எல்லோரும் இந்த வீடியோவை பார்க்க சொல்லி பரிந்துரை செய்வீர்கள்...


===================

படித்ததில் படித்தது...

நீதிபதி..
ஏன் உங்க கணவரை விஷம் வச்சி கொல்ல பார்த்திங்க...
மனைவி..
எனக்கு பயமா இருந்தது யுவர் ஆனர்....

க. கலைவாணன்
==============
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வக்கில்கள் சென்னை தமிழில் கூட வழக்காடலாம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்..

பாமக என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது...?
கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது...

சிக்ஸமுகம்.
இந்த வார ஆவியில்
============================

பிலாசிபிபாண்டி....

உலக்த்தோட பொதுவான விஷயம் என்ன தெரியுமா, ஒருத்தன் கார் கதவை பொண்டாட்டிக்கு திறந்து விட்ட... காரோ அல்லது பொண்டாட்டியோ புதுசுன்னு அர்த்தம்...
============

பெருமாள் செஞ்சா பெருமை
சிவன் செஞ்சா திருவிளையாடல்
கிருஷ்ணன் செஞ்சா லீலை...
அப்ப பசங்க செஞ்சா மட்டும் ஈவ் டீசிங்னு சொல்லறது எந்த விதத்துல நியாயம்..
==================
நான்வெஜ்...18+
ஜோக்..1

டாகடர் கிட்ட ஒருத்தன் போனான்... டாக்டர் நைட் ஆனா ஒரு குறிப்பிட்ட பாருக்கு போய் என் பொண்டாட்டி தண்ணி அடிச்சிட்டு பயங்கறமா அளப்பறை பன்னறா....அது மட்டும் இல்லை தண்ணி அடிச்சிட்ட யாருகிட்ட வேனா செக்ஸ் வச்சிக்கிறா.... உடனே டாக்டர் ரிலாக்ஸ்மேன்,டேக் வாட்டர், டேக் பிரித் , காம்டவுன், மனசை இறகுமாதிரி வச்சிக்கிங்க... இப்ப சொல்லுங்க உங்க மனைவி எந்த பாருக்கு போறாங்க....

=============

அந்த பெண் தன் காதலினிடம் தன் அப்பா வர லேட் அகும் உடனே வீட்டுக்கு வந்தால் உடனே உடலுறவு கொள்ளலாம் என்று சொல்ல.. வாயல் ஜொள்ளோடு காதலி வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பார்மசியில் நிரோத் வாங்கி அதை எப்படி யூஸ் செய்ய வேண்டும் என்று கடைகாரரிடம் கேட்டு விட்டு பக்கத்து பொட்டிக்கடையில் பதட்டத்தை தணிக்க ஒரு தம் போட்டு விட்டு அவள் வீட்டுக்கு போனால்... அவள் பெற்றோர் இருந்தனர்...அதிர்ச்சி.. காதலி உள்ளேவா இவ்வளவு கூச்சத்தை உன்கிட்ட நான் பார்த்து இல்லையே? என்று சொல்ல... உங்க அப்பாதான் பக்கத்து தெருவுல மருந்து கடை வச்சி இருக்காருன்னு எனக்கு தெரியாதே என்றான்..
=============
ஒருத்தன் ரெயிலில்அழும் 3 குந்தைகளை வச்சிகிட்டு தவிக்க.. பக்கத்துல இருந்த பொம்பளை கேட்டாலாம்.. இது உங்க குழந்தைங்களா? இல்லை நான் ஒரு காண்டம் சேல்ஸ்மேன்... இந்த குந்தைங்க கஸ்டமர் கம்ளெய்ன்ட்...
=====================
அன்புடன்
ஜாக்கிசேகர்

பிடித்து இருந்தால்ஓட்டுபோடுவது உங்கள் இஷ்டம்

18 comments:

  1. //எதை சீக்கரமா ஓப்பன் பண்ண போறாங்கன்னு தெரியலை...தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா...
    //

    நீங்க எதை ஓபன் பண்ணனும்னு எதிர்ப்பார்க்குரிங்க....??

    ReplyDelete
  2. அண்ணே... அந்த ரெட் பியுட்டி ஆக்டிவா இல்லை... ஸ்கூட்டி பெப்... ஹீஹீஹீ

    ReplyDelete
  3. \\\மொத்தம் 8 நிமிட வீடியோ...3வது நிமிஷத்தில் உங்கள் உதட்டில் புன்னகை வரவைக்கும்....5 வது நிமிடத்தில் உங்கள் புன்னகை சிரிப்பாக மாறும்... அப்படி சிரிக்கவில்லை என்றால் அவசியம் டாக்டரை பார்க்கவும்...வீடியோ முடிவில் எல்லோரும் இந்த வீடியோவை பார்க்க சொல்லி பரிந்துரை செய்வீர்கள்...///

    சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகப்போய்விட்டது போங்க. இருந்தாலும் இந்த மனுஷனுக்கு காமெடி பண்ணுறதுக்கு அளவே இல்லையா? தாங்கமுடியலையாட சாமியோவ்.

    மஹாராஜா

    ReplyDelete
  4. ரைட்டு
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  5. சிரிச்சு, சிரிச்சு கண்ணுல ஒரே தண்ணி!
    முதலில் இவரை ஆப்ரிக்காவுக்கு அனுப்புங்கப்பா...


    // வீடியோ முடிவில் எல்லோரும் இந்த வீடியோவை பார்க்க சொல்லி பரிந்துரை செய்வீர்கள்... //

    சொல்லாமலா

    ReplyDelete
  6. பெரிய திரைப்பட கம்பனிகள் இருப்பதால் தான் சிறிய பட்ஜெட் படங்கள் ஓடுவதில்லை என்பது பொய்யான காரணம்.

    ஒரு காலத்தில AVM, சத்யா மூவிஸ் இருக்கும் பொழுது தான் பாலச்சந்தரும், டி ராஜேந்தரும் BARATHIRAJAVUM , BALUMAHENDRAAVUM ஜெயித்து காமித்தார்கள்.

    இப்போதும் காதல், பருத்தி வீரன், சுப்ரமணிய புரம் போன்றவை ஜெயிக்கத் தான் செயிக்கின்றன.

    ReplyDelete
  7. என்ன அவசரம் ஜாக்..
    தவறுகள்..எழுத்தில்..
    சரியாய் புரியல..
    சரியாய் ஓபன் ஆகல..?
    ஆனாலும் நீங்க டாப் தான்..

    NTR

    ReplyDelete
  8. ஜாக்கி,
    அந்தப் பெண் பேசிக்கொண்டிருந்தது ஆபீஸ் கான்பரென்ஸ் காலாகவும் இருக்கலாம். குடும்ப விஷயமாகவும் இருக்கலாம். பொது இடங்களில் (பொது வாழ்வில்லில்லாத) பெண்களைத் தனிப்பட்ட முறையில் ஃபோட்டோ எடுத்து அவங்க அனுமதியில்லாமல் வெளியிடுவதைக் கொஞ்சம் தவிர்த்து விடுங்கள். முடிந்தால் அந்தப் படத்தையும் எடுத்து விடுங்கள்.

    உங்கள் நெடுநாள் வாசகன் என்ற முறையிலும், அக்கா, தங்கையருடனேப் பிறந்தவன், 3 பெண் குழந்தைகளுக்குத் தகப்பன் என்ற முறையிலும் என் விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

    ReplyDelete
  9. தங்கத் தமிழன் ராஜேந்தர் வாழ்க. அருமையான வீடியோவை அறிமுகப்படுத்தியதுக்கு நன்றி ஜாக்கி.

    ReplyDelete
  10. ஜாக்கி : T.R வீடியோ சூப்பர்... கீழே உள்ள linkம் இதே மாதிரி ஒரு பேட்டி தான்...

    http://www.youtube.com/watch?v=nSBPBEKGR5g

    ReplyDelete
  11. நன்றி ஜெட்லி நான் சொன்னது கடை திறப்பு விழா பற்றி..நீ எதை எதிர்பாபக்குற...

    அந்த ரெட் பியூட்டியா இல்லையான்னு எனக்கு தெரியாது... நான் முகத்தை வெள்ளை கப்சிப்பால் முடி இருந்துச்சி...மிக முக்கியமா என் பார்வையில் அந்த பின்புற பசுமையும் அந்த மெகம் தெரியாத பெண்ணும் அழகாக இருந்தார்கள்..அந்த இடத்தை ஒரு பீகார் பையன் கடந்து போனான் அதையும் சேர்த்து எடுக்கலாம் என்பது பிளான் அது மிஸ்சிங்.. தகவலுக்கு நன்றி..


    நன்றி எம்ராஜா...

    நன்றிஸ்ரீராம்

    நன்றி சரவனா

    நன்றி ராம்ஜி

    நன்றி என்டிஆர்...

    நன்றி சிம்பிள் மேன்

    நன்றி வழிபோக்கன்...

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. அன்பின் சிமாச்சு...

    நீங்கள் சொல்லும் எந்த கருத்திலும் எனக்குமாற்று கருத்து இல்லை..

    அதிக மழையின் போதும் குடைபிடித்துநடக்கும் பெண்களையும்.. 3பேர் வாகனத்தில் வைத்துக்கொண்டு வேகமாக போகும் பெண்ணின் புகைபடத்தை தினகரனும் தந்தியும் வெளியிட்டு இருக்கின்றார்கள்... அதுகூட அவர்கள் சம்மதம் இன்றிதான்....

    அதிக வெயிலின் போதும் துப்பட்டாவால் முகம் முடி நடக்கும் அல்லது குடை பிடித்து செல்லும் புகைபடங்கள் தந்தியில் தினகரனில் காணலாம்.. அதீத வெப்பம் என்பதை உணர்த்த கடற்கரையில் கல்லூரி பெண்கள் நனைந்த உடையுடன் பிரசுரித்த படங்கள் ஏராளம்....படம் எடுத்த எந்த போட்டோகிராபரும் அந்த பெண்களிடம் பர்மிஷன் வாங்கி இருப்பது 20 சதவீதம் மட்டுமே சாத்தியம்...

    ரெண்டவாது மிக முக்கியமா என் பார்வையில் அந்த பின்புற பசுமையும் அந்த முகம் தெரியாத பெண்ணும் அழகாக இருந்தார்கள்..அந்த இடத்தை ஒரு பீகார் பையன் கையில் மண் தள்ளும் சவுலோடு கடந்து போனான் அதையும் சேர்த்து எடுக்கலாம் என்பது பிளான் அது மிஸ்சிங்..

    ஒரு செய்தி சுவராஸ்யத்துக்காதான் அந்த போட்டோ.. அதில் அந்த பெண் கவர்ச்சியான உடையும் அல்லது முகம் தெரிவது போலோ எடுக்கவில்லை...

    ஒரு புகைபட படகலைஞனுக்கு ரொம்ப டீசன்டாக படம் எடுக்க முழு உரிமையும் உண்டு...

    இதையும் விவாதமாக ஏடுத்து போகலாம்...எனக்கு அதில் உடன்பாடு இல்லை....

    அதைவிட சீமாச்சு அவர்களே நீங்க சொன்ன அந்த தன்மையான எழுத்துக்காக அந்த படத்தை எடுத்து விடுகின்றேன்...

    அன்புடன்
    ஜாக்கி..

    ReplyDelete
  14. costemer complain...... it was nice......

    ReplyDelete
  15. சூப்பர் வீடியோ. இப்பவே face book ல போடுறேன். ஆமா அதத் தானே அவரும் சொல்றாரு??!!!...:)

    ReplyDelete
  16. // கூடங்குளமும் கல்பாக்கமும் இடம் மாறிதானே இருக்கின்றது... //
    அட.. ஆமா...

    // இதுவே கர்நாடகவாக இருந்தால் அப்படி நடக்க வாய்பில்லை... //
    ஆமாங்க... இங்க பஸ்ல கூட கன்னடத்துல மட்டும்தான் எழுதி இருக்கு... படிக்காதவங்க மாதிரி இந்த பஸ் போகுமான்னு கேட்டு கேட்டுதான் ஏறணும்.. :(

    ReplyDelete
  17. செம வீடியோ ஜாக்கி...ராஜேந்தரை விடுங்கள். கேள்வி கேட்ட ஆள் சீரியஸா கேட்டாரா இல்ல காமெடி கீமடி செஞ்சாரான்னு கண்டே பிடிக்க முடியல..அதுவும் "கண்ல தண்ணி வந்துருச்சுங்க ஐயா..யார் யாருக்கோ ஆஸ்கர் குடுக்கறாங்க. உங்கள்கு குடுக்கனும்யா"ன்னு சொல்லும்போது என்னால control பண்ணவே முடியல..3 நிமிடம் விடாமல் சிரித்தேன்..ரொம்ப நாள் கழித்து..தேங்க்ஸ் பாஸ்..

    ReplyDelete
  18. //ஆனாலும் ஈழத்து பிரச்சனையை சபையில் வழைப்ழத்தில் ஊசி சொருகுவது போல் பேசிய திருமாவளவனுக்கு நன்றிகள்...//
    என்னா தைரியம்? உண்மையிலேயே மாவீரன்தான் :-)

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner