கீ செயின்(சிறுகதை+ பதினெட்டு பிளஸ் கதை)

 


தமிழ்நாட்டில் அதிகம் புழங்கும் சுரேஷ் என்ற பெயர் உடைய அவனை நீங்கள் நேரில்  பார்த்தீர்கள் என்றால் அவனுக்கு 18வயது ஆகின்றது  என்று சொன்னால் நீங்கள்  சத்தியமாக நம்பவாய்ப்பு இல்லை.. ஆனால் அவனுக்கு ஹார்மோன்கள் ஏட்டிக்கு போட்டி செய்ய  ஆரம்பித்து வெகுநாட்கள் ஆகின்றது...

பதினோராம் வகுப்பு படிக்கும் சுரேஷ்ன் அப்பா இறந்து போய் 5வருடங்களுக்கு மேல் ஆகின்றது... அவனுக்கு எல்லாமே அவன் அம்மாதான்... சுரேஷ்இன் அம்மா விழுப்புரத்துக்கு அருகே இருக்கும் ஆனத்தூர் கிராமத்தில்  தொடக்க பள்ளியில் ஆசிரியர்...  அலைச்சலை தவிர்க்கும் பொருட்டு, தங்கள் சொந்த ஊரான சிதம்பரத்தில் இருந்து விழுப்புரத்துக்கு பக்கத்தில் இருக்கும் ஆனத்தூருக்கு குடிபெயர்ந்து வந்து விட்டார்கள்.



சுரேஷ்இன் அம்மா  விழுப்புரத்தில் இருக்கும் ஒரு உயர்நிலைபள்ளியில் அவனை  சேர்த்து விட்டார்கள்..தினமும்  ஆனத்தூரில் இருந்து  விழுப்புரத்துக்கு பேருந்தில்தான் செல்வான். தினமும் சைக்கிளில் பள்ளி செல்ல சுரேஷ்க்கு அதிக ஆசை என்றாலும் ஒரே பிள்ளை விபத்தில் சிக்கிவிடக்கூடாது என்பதால்  அவனுடைய அம்மா அவனுக்கு சைக்கிள் வாங்கிதரவில்லை.

அவனுக்கு சைக்கிள் ஆசையை தீர்ப்பவர் எதிர்வீட்டு ஏழுமலை... விழுப்புரம் துணிக்கடையில் குமாஸ்தவாக பணிபுரியும் ஏழுமலை மதியம்  சாப்பாட்டுக்கு ஒருமணி நேரம் அவர் வீட்டுக்கு வந்துவிட்டு போவார்...ஏழுமலையிடம் மாமா மாமா  என்று கெஞ்சி  அவருடைய சைக்கிள் வாங்கி ஒரு அரைமணி நேரம் ரவுண்ட் அடிப்பது சுரேஷ்க்கு பிடித்த விஷயம்...இப்படி வயதுக்கு வந்த பையன் சைக்கிளின் மீது காதலாக இருப்பது ஏழுமலையை பொறுத்தவரை ஆச்சர்யம்...ஏழுமலையும் அப்பா இல்லாத பையன் என்பதாலும் டீச்சர் மகன் என்பதாலும் சைக்கிளை நம்பி சுரேஷிடம் கொடுப்பார்... சப்போஸ் சைக்கிள் விபத்தில் சிக்கினாலும்  பள்ளியில் நேர்மையை போதிக்கும் டீச்சர் எப்படியும் சைக்கிளை  சரிபடுத்தி கொடுத்து விடுவார் என்ற சேப்டிசைடு  எண்ணமும் அதற்கு ஒரு காரணம்.

முதலில் சுரேஷுக்கு  சின்னவயதில் இருந்து வளர்ந்த தனது  சொந்த ஊரான சிதம்பரத்தில் இருந்து ஆனத்தூர் கிராமத்துக்கு வர அவனுக்கு இஷ்டமே இல்லை.. ஆனால் அம்மா தினமும்  விழுப்புரத்துக்கும் சிதம்பரத்துக்கும் பேசஞ்சர் ரயிலில் அலைய வேண்டும் என்பதால் அம்மாவுக்காக இந்த இடம்மாறுதலுக்கு சம்மதித்தான்..
சிதம்பரத்தில் இருந்து ஆனத்தூருக்கு வந்த காரணத்தால் நிறைய கிராமத்து  நண்பர்கள் கிடைத்தார்கள். சிதம்பரத்தில் வாடகை வீட்டில் இந்தியன் கக்கூஸ்ல் காலைக்கடன் முடித்தவனுக்கு.. பள்ளி முடிந்து மாலையில் ஒரு குருப்பாக  பசங்கள் எல்லாம் சேர்ந்து பேசி சிரித்தபடி வயக்காடு பக்கம் போவது அவனுக்கு வியப்பாக இருந்தது...இப்படி கும்பலாக பேசிச்கொண்டு விளையாட போகலாம் ,சினிமாவுக்கு போகலாம்.. இப்படி ஆய் போக கும்பலாக  எப்படி போவார்கள் என்று யோசித்துக்கொண்டு இருப்பான்...

ஒரு கட்டத்தில் நண்பர்கள் வற்புறுத்தல்  காரணமாக காலைக்கடனில் இருந்து சுரேஷ் மாலைக்கடனுக்கு மாறினான்....வாய்க்கால் ஓரத்தில் வளர்ந்து இருக்கும் பூண்டு செடிக்கு எதிரில்  உட்கார்ந்து கொண்டு பூண்டு செடி இலைகளை உருவியபடியும், எதிரில் இருக்கும் சிறு கல்லை எடுத்து வேறு ஒரு கல்லை குறி பார்த்து அடித்துக்கொண்டு பள்ளிக்கதை பேசிக்கொண்டு, ஆய் போவதில் இருக்கும் சுகத்துக்கு சுரேஷ் பழகிவிட்டான்..முதன் முதலாக பீ உறிட்டிக்கொண்டு போகும் வண்டுகளை பார்த்தான்.அவைகளின் விடாமுயற்ச்சி அவனுக்கு சிரிப்பை தந்தன.

அன்று சனிக்கிழமை பள்ளி விட்டு மதியம் ஒரு மணிக்கு வீட்டுக்கு வரும் போதே ஏழுமலையின் சைக்கிளை பார்த்து விட்ட்டான்... சுரேஷ் ஓடி சாவி எடுக்க போக.... டேய் இன்னைக்கு வேணாம்.. முதலாளி சீக்கரம் வர சொன்னார்...பார்சலில் லோட் வருது அதை  கவுண்ட் பண்ணனும் என்று சொல்ல... மாமா பத்து நிமிஷத்துல ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு வந்துடுறேன் என்று சைக்கிளை எடுத்துக்கொண்டு சுரேஷ் சிட்டாக பறந்தான்...

200 மீட்டர் தூரம் சைக்கிளில் வேகமாக கடந்த சுரேஷ்க்கு, நேற்று இரவு முருகா தியேட்டா எதிரில் பின்விளைவை பற்றி யோசிக்காமல் அம்மாவிடம் அடம் பிடித்து, மூன்று டம்பளர் கரும்பு ஜுஸ் வாங்கி குடித்தது,  வேலை செய்ய ஆரம்பித்தது..வயிறு  சரியில்லை என்பதால் சைக்கிளை வாய்க்காலுக்கு விரட்டினான்...

அவசரத்துக்கு ஒரு பூண்டு செடிப்பக்கம் ஒதுங்க அங்கு இரண்டு நாளைக்கு முன் யாரோ ஒதுங்கி இருந்தது.. கலரை பார்த்ததும் தெரிந்து போனது...பூண்டு செடிக்கு பதில் , வாய்க்கால் பள்ளத்தின் மறைவில் சுரேஷ் அவசரத்துக்கு  உட்கார்ந்து கொண்டான்...தினமும் எதையாவது நோண்டிக்கொண்டு இருந்தவனுக்கு பூண்டு செடியும் இல்லை, சின்ன கற்களும் அங்கு இல்லை....

கையில்  சைக்கிள் கீ செயின் மட்டும் இருந்தது, லோடுவரும் சீக்கிரம் போகனும் என்று சொன்ன எழுமலை மாமாவின் குரலை மறந்து போனான்..விளையாட யோசித்து போது, மின்னலாய் அந்த ஐடியா வந்தது.. கீ செயின் வளையத்தை தன் சுரத்தையில்லாத ஆணுறுப்பில் உள்ளே விட்டு வெளியே இழுத்தான்... அந்த விளையாட்டு இனம் புரியாத உற்சாகத்தை சுரேஷ்க்கு கொடுக்க.. முன்னே பின்னே, முன்னே பின்னே என்று கீ செயின் வளையத்தை ஒரு ஐந்து முறை செய்து இருப்பான்... சட்டென அவனது ஆணுறுப்பு இயல்புதன்மையில் இருந்து பெரிதாக மாற, உள்ளே போன  சைக்கிள் கீச் செயின் ஒரு கட்டத்தில் வெளியே வர சண்டித்தனம் செய்ய ஆரம்பித்தது.. 


சுரேஷ் எவ்வளவோ முயற்சித்து பார்த்து விட்டான்.. அவன் அணுறுப்பின் கடைசியில் இருந்து கொண்டு கீ செயின் வரமாட்டேன் என்று அடம்பிடித்து..எழுமலை மாமா சீக்கிரம் வரவேண்டும் என்று எச்சரிக்கை ஞாபகத்துக்கு வர, அடுத்த முறை  சைக்கிள் கிடைக்காதே என்ற பயத்தில் சரேஷ் சாவி வளையத்தை  இன்னும் போர்சாக இழுத்தான்  ...

ம்ம்ஹும் வரவேயில்லை..இதுக்குமேல்  கீ செயினை இழுத்தால் அது சதையை பிய்த்துக்கொண்டு வரும் அபாயம் இருந்த காரணத்தால் அவன் முயற்சியை கைவிட்டான்... எழுமலையின் சைக்கிள் கீ  செயின் காலையில் எந்த நாதாரி முகத்தில் முழித்தோம் என்று யோசித்தபடி சுரேஷ்இன் முக்கிய இடத்தில் மணிகளுக்கு பக்கத்தில்  தூக்கில் தன் விதியை நினைத்து இருபது நிமிடத்துக்கு மேலாக தொங்கிகொண்டு இருந்தது.....

எழுமலை வேட்டி சட்டை போட்டு செருப்பு அணிந்து கடைக்கு போக ரெடியாக வீட்டு வாசலுக்கு வந்து 40 நிமிஷத்துக்கு மேல ஆவுது சைக்கிள் எடுத்து போன டீச்சர் பையனை இன்னும் கானோம் என்று விசனப்பட ஆரம்பித்து விட்டார்...

இருபது நிமிடத்துக்கு பிறகு சைக்கிள் கீ செயின் இரண்டு மில்லி மீட்டர் கீழ் நோக்கி நகர்ந்தது..
==

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..
குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....






(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT SOME PERSON YOU ARE THE WORLD)
EVER YOURS...


 






=======

15 comments:

  1. ஸ்ஸஸஸஸப்ப்ப்ப்பா முடியல ஜாக்கி ...

    ReplyDelete
  2. கதை ஸ்டார்ட்டிங் நல்லா இருக்கு. பினிஷிங் :(

    ReplyDelete
  3. ஜாக்கி,எப்படியெல்லாம் சிந்திக்கிறீங்க

    ReplyDelete
  4. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்..

    ReplyDelete
  5. கொலைக்கதை எழுதும் போது வராத கேள்வி, சம்பவங்களை வைத்து எழுதும் போது இது போலான கேள்விகள் வருவது இயற்கை செந்தில்...

    ReplyDelete
  6. வித்யாசமாகவே யோசிக்கிறீங்க ஜாக்கி ! !

    அடுத்தாப்புல வீக்கத்துக்கு ஐயோடஸ் தடவுன கதையை எழுதவும்

    ReplyDelete
  7. அட!!! ஆனத்தூரு நம்ம ஊராச்சே!!!

    ReplyDelete
  8. காமடியான கதை, கடைசியில் தான் பாவம் ஏழுமலை

    ReplyDelete
  9. ஒரே வரியில சொல்லுறதானா - சொந்த செலவுல சூனியம்...

    ReplyDelete
  10. எனக்கு புடிக்கல ஜாக்கி. நத்திங் ஸ்பெசல்.

    ReplyDelete
  11. இருபது நிமிஷமா? பையன் லேகியம் தின்ன மேட்டர கதைல கோட்ட விட்டுட்டீங்களா?

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner