லேட் சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(பதினெட்டுபிளஸ்)புதன்27/04/2011


ஆல்பம்....

இப்ப பெட்ரோல் விலை..61 ரூபாய்... அப்படியே ரவுண்டா 75ரூபாய்க்கு ஆக்கிட்டா எந்த பிரச்சனையும் இல்லை.. எத்தனை நாளைக்குதான்.. நஷ்டத்தில் பொதுமக்களுக்காக ஆயில் கம்பெனிகள் இயங்குவது...????போடாங்...
===========
கலைஞர், ஜெயலலிதா இருவருமே ஈழத்தமிழர் நலன்  பற்றி பேசுவது நகைப்பாக இருக்கின்றது... கடந்த 50 வருடமாக இப்படித்தான் பேசி வருகின்றோம்.. இதுவும் கடந்து போகும்...
=========
டைம் பத்திரிக்கையில் சக்தி வாய்ந்த மனிதராக 4 ஆம்இடத்தில் இருந்த பக்சே.. கள்ள ஓட்டு போட்டது அம்பலமாகிவிட்டது...தலைவரால் இப்ப வெளிய தலைகாட்ட முடியவில்லை..இப்பயாவது பாங்கி மூன் போர்க்குற்றம் பற்றி விரிவாய் வாய்திறந்து இருக்கார்.. பார்ப்போம்...
=============
கலைஞர் கட்டிய புதிய தலைமைசெயலகத்தில் நான் ஜெயித்து முதல்வராக ஆனாலும் கால் வைக்கமாட்டேன் என்று ஜெ சொன்னதாக ஒரு செய்தி உலா வருகின்றது... அப்படி  அது உண்மை என்றால்.. கலைஞர்  கட்டிய  பாலத்தில் எனது காரில் போகமாட்டேன்...அவர்  போட்ட ரோட்டில் போகமாட்டேன்..தீய சக்தி கருணாநிதி விடும் மூச்சு காற்று சென்னையில் கலந்து இருப்பதால் நான் தமிழகத்தை விட்டு வெளியேறுகின்றேன் என்று சொன்னாலும் சொல்லிவிடுவோரோ என்று பயமாக இருக்கின்றது... அவ்ர் கட்டிய பாலத்தில் போகமாட்டேன் என்று சொல்லி சென்னையில் ஹெலிகாப்டரில் ஜெ பயணித்தாலும் ஆச்சர்யம் இல்லை.. காரணம்.. அவர் முதல்வராக இருந்த போது திருவள்ளூருக்கே ஹெலிகாப்டரில் பயணித்து அரசு வழிவினை தொடங்கி வைத்தவர் ஜெ...  பார்போம்....வெயிடிங் மே....13ம்தேதி வரை...

 =============


மிக்சர்...

சில விமர்சனங்களின் நதிமூலம் ,ரிஷிமூலம் ஆராய்ந்து டிராவல் செய்தால் அவர்கள் பொங்கியகாரணத்தை கேட்டால் ரொம்ப கேவலமாக இருக்கின்றது....புறக்கணிப்பே நல்ல மருந்து என்பேன்..

ஏர்டெல்கார பயலுகளின் தொல்லை தாங்க முடியவில்லை....த்தா கல்புக்கு பேசனா நிமிடத்துக்கு பத்து பைசவாம் அதை ஒரு நாளைக்கு எத்தனை முறைதான் எஸ்எம் எஸ் அனுப்பிச்சி  சொல்லிதொலைவான்கன்னே தெரியலை... ‘இவனுங்களோடபெரிய  ரோதனையா போச்சு
========================== 

சென்னை பண்பலை பிக் எப் எம் ரேடியோவில் பாலாஜின்னு ஒரு ஆர்ஜே.. சும்மா பின்னி எடுக்கின்றார்... சின்ன பையன்தான் போல.... அயன் படத்துல அன்பே அன்பே நீ எங்கே பாட்டு போட்டு முடியும் போது.... தமன்னா அவுங்க  அண்ணன் செத்த உடனே பாடும் பாட்டு இது செம  சோக்கா இருந்திச்சா??? என்ற செம கலாய்.... கேட்டு பாருங்கள்..வாழ்த்துகள் பாலாஜி...



திரும்பவும் நின்ற லாரியின் பின் கார்மோதலினால் தொடரும் பலிகள் அதிகமாகிவிட்டன...ஆனால் ஒரு சில இடங்களில் வாகன ஓட்டிகள் பத்து மீட்டர் இடைவெளியில் செல்வதே இல்லை.. லாரியின் சூத்து கிட்ட போய் கட் அடித்து காரை திருப்புவதை ஒரு ஸ்டைலாக நினைத்து ஓட்டுகின்றார்கள்..  நேற்று கூட சக்கரம் கழட்டிக்கொண்டு ஓடிய லாரி டிரைவர் திடிர்பிரேக் அடிக்க பின்னால்  வந்த கார் மோதி மூன்று பேருக்கு மேல் பலி..
சில இடங்களில் இது  போல பல ஆம்னி பஸ் டிரைவர்கள் ஓட்டுகின்றார்கள்... என்ன செய்ய???
=========


மயிலாப்பூர்  தெப்பகுளம் எதிரில் கிழக்குபதிப்கம் கிளயரன்ஸ் சேலுக்கு போய், பாராவின் டாலர் தேசம் 100க்கு வாங்கி வந்தேன்.. முதல் நாளே போய் இருக்க வேண்டும்,... நிறைய நல்ல புத்தகங்களை நான் மிஸ்  செய்து விட்டேன்...

=========

ஒரு தேர்தல் ரிசல்ட்டுக்கு ஒரு மாதம் காத்து இருப்பதால் வாக்கு பெட்டி பாதுகாக்கபடும் இடங்கிள்ல நடக்கும் சின்ன நிகழ்வு கூட பெரிய செய்தியாக மாறிவிடுகின்றது..நேற்று  கூட ஒரு வாக்கு பெட்டிகள் பாதுக்காப்பாக வைத்து இருக்கும் அறையில் பாம்பு வந்தவிட்டதாம்..

============
 
வாழ்த்துகள்....
புதன்கிழமை 27/04/2011 அன்று வலைமனை சுகுமார் ஆண்குழந்தைக்கு தந்தை ஆகி இருக்கின்றார்.. தாயும் சேயும் நலம்... குட்டி பாப்பாவுக்கு எனது வாழ்த்துகள்.
=========
கேட்டதில் காமெடி....

வெஸ்ட் கேகே நகர்  டீக்கடையில் ஒருத்தர்  கொஞ்சம் சத்தமாக...

அதேதான் மச்சான்.. அதே நூறுரூபாய் நோட்டுதான்...

...................................//

அது இல்லை காந்தி படம் நல்ல தெரியும் அந்த பழைய நோட்டு....

.............................//

இப்பலாம் நெட்டுல அந்த நோட்டுக்கு செம டிமான்ட.. பாரின்காரன் அள்ளிக்கிறான்..
..........//

என்கிட்ட அந்த நோட்டு ரெண்டு இருக்கு...கரு நீலகலர் பழைய 100ரூபாய் நோட்டு..
..............//

 ஓத்தா ரெண்டு கோடி கொடுக்கறேன்.. அதை கொடுன்னு  சொல்லறான்.. நான் என்ன எமானான்டி ...ண்டையா??? ரேட் ஏறட்டும்னு நான் வெயிட் பண்ணறேன்...

என்று சொல்லியவன் பஞ்சத்தில் அடிப்பட்ட முகத்தோடு இருந்தான்...

கொஞ்ச நேரத்தில் பேப்ப்ர் கடை வாசலில் அவனுக்கு பக்கத்தில் உட்கார்ந்து டீ குடித்துக்கொண்டு இருந்தவர்... அவனிடம்  அவன் நம்பரை வாங்கி கொண்டு இருந்தார்...

என்ன உலகம்டா? இது...
=============

பிலாசபி பாண்டி...
அவசரமாக தவறு செய்வதை விட தாமதமாக சரியாக  செய்வதே மேல்..
=========
நான்வெஜ்18+

ஒருத்தன் ரொம்ப  சோர்வா செக்சாலிஜிஸ்ட் கிட்ட போனான்..

 டாக்டர்  எனக்கு ரொம்ப அசதியா இருக்கு.... எந்த வேலையும் செய்ய முடியலை...நான் ரொம்ப வீக்கா பீல் பண்ணறேன்..

ஒரு நாளைக்கு எத்தனை முறை செக்ஸ்  பண்ணறிங்க..??

ஒரு நாளைக்கு அஞ்சு அல்லது ஆறுவாட்டி டாக்டர்...

அசதிக்கும் வீக்னெசுக்கும் அதுதான் காரணம்....


ரொம்ப நன்றி டாக்டர்... நல்லவேளை கையடிக்கறதாலதான் அசதியும் வீக்னெசுன்னு பயந்துட்டேன்...


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..



(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...

 


=======================

4 comments:

  1. START DND-ன்னு ஒரு மெசேஜ் 1909-க்கு அனுப்புங்க... 45 நாள் பொருத்திருங்க... இப்படி இன்னொரு மெசேஜ் அனுப்பினால் http://164.100.9.238/ndncregistry/index.jsp இங்கே போய் ஒரு புகார் கொடுங்க...

    ReplyDelete
  2. ஈழப் பிரச்சனை தானே சகோ இருவருக்கும் நீண்ட கால பிரச்சார கருவியாக இருந்தது...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    பதிவுலகத்தில் இப்படியும் ஒரு பெண் பதிவரா சீ... தூ...

    ReplyDelete
  3. nice post!!!!
    as usual!!!!!!!!

    senthil, doha

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner