நாடாடா இது --??




மாரத்தான்ல இரண்டு கிலோ  மீட்டருக்-கு   ஒருக்கா  தண்ணி  கொடுக்காம  சாகடிச்சி இருப்பானுங்க…
இப்ப செத்தது போன உடலுக்கு ஆம்புலன்ஸ் வண்டி கொடுக்காம சாகடிச்சி இருக்கானுங்க…

 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு  பொண்டாட்டி உடலை தூக்கி கிட்டு நடந்து  இருக்கான்  ஒடிசாவை  சேர்ந்த  புருசன்காரன்..
பொணம் கனம் என்னன்னு தூக்கி பார்த்தவனுங்களுக்கு தெரியும்…  உடலை  குளிப்பாட்டி  நாரு பேர் சேர்ந்து பாடைக்கு எடுத்துக்கிட்டு வந்து வைக்கறதுக்குள்ள  தாவு தீர்ந்துடும்..
காசு இருந்தாதான் இந்தியாவுல  எல்லாம்… நடக்கும்…


ஆண்டிப்பட்டி கணவாய் காத்து


இப்போது என் ரிப்பிட் மோடில் தினமும் நான் கேட்டுக்கொண்டு இருக்கும் பாடல்
தர்மதுரை படத்தில் வரும் ஆண்டிப்பட்டி கணவா காத்து பாட்டுதான் என்ன அற்புதமான வரிகள்….

வைரமுத்து யுவன் கூட்டனியில் அசத்தலோ அசத்தல் பாடல்இது.
பாடலில் வரிகள் மனதுக்கு இணக்கமாய் இருக்கின்றன…
மாமன் விஜய் சேதுபதி டாக்டராகி விட்டான்… அத்தை பெண் ஐஸ்வர்யா கிராமத்தில் விவசாய வேலைகளை பார்த்துக்கொண்டு கிளை நுலகத்தில் புத்தகங்கள் படித்த படி ராணி வாரஇதழுக்கு கடிதம் எழுதிக்கொண்டு இருக்கின்றாள்…

மாமன் டாக்டராகி வந்து விட்டான்… ஆனால் அவன் உயரத்துக்கு அதாவது படிப்பு மற்றும் வேலையில் இல்லை என்பதால் கொஞ்சம் சிறிய தாழ்வு மனப்பான்மை.
அதில் ஒரு வரி வரும்..

இந்த பாட்டுல 3:54 இல் இருந்து பாருங்க…
உன் பவுஷுக்கும் உன் பதவிக்கும் வெள்ளக்காரி புடிப்ப..
இந்த கிரிக்கியை ஏழை சிறுக்கியை எதுக்காக பிடிச்ச.?
ஒரு வெள்ளக்காரி காசு தீர்ந்தா வெளுத்து ஓடிப்போவா?
இவ வெள்ளரிக்கா வித்து கூட வீடு காத்து வாழ்வா…
இரண்டு பேரின் மன உணர்வுகளும் வார்த்தைகளாய்…
ஐஸ்வர்யாவின் கண்ணும்… படித்த மாமன் அதுவும் டாக்டர் மாமன் தன்னை கட்டிக்கொள்வானா என்ற ஏக்கம் இருக்கும் பாருங்க…

ஐ லவ்யூ ஐஸ்
சான்சே இல்லை…
பாடல் காட்சியை படமாக்கிய விதமும் அருமை.

ரொம்ப நாள் கழிச்சி உள்ளுக்குள்ள இருந்த கிராமத்தானை தட்டி எழுப்பிய திரைப்பட பாடல் இது…..

ஜாக்கிசேகர்
18/08/2016



#dharmadurai #vijaysethupathi #ishwarya #தர்மதுரை #வைரமுத்து #யுவன் #சினுராமசாமி #yuvan #jackiecinemas




நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

கவிஞர் முத்துகுமாருக்கு அஞ்சலிகள்.




வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்து ஆடுதே,
தூறல் தந்த வாசம் இங்கு வீசுதிங்கே,
வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே,
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே,
பூக்கள் பூக்கும் முன்னமே, வாசம் வந்தது எப்படி,
காதல் ஆனா உள்ளம் ரெண்டும் உயிரிலே இணையும்
தருணம் தருணம்..!
என்ன வரிகள்... -?? ஆனால் இந்த வரிகள் எழுதிய கைகள் ஓய்வு பெற்றன...
நாமுத்துக்குமார்.
கவிஞர் 41 வயதில் காலாமானார்.
இதய அஞ்சலிகள்

கண்ணாடி




காலையில் எழரை மணி வரைக்கும் தூக்கம்… அம்மா தண்ணி முஞ்சில ஊத்திதான் எழுப்புவா… அந்த அளவுக்கு தூக்கி தொலைப்பேன்.


எழுந்து வெப்பங்குச்சி உடைச்சி வாயில முனையை மைய வச்சி பிரஷ் போல ஆக்கி…. பச்சக் பச்சக்ன்னு எச்சி துப்பிக்கினே கொள்ளிக்கு போய் காலைக்கடன் முடிந்து, வீட்டுக்கு வந்து குளித்து, முதுகில் உள்ள தண்ணீரை துடைக்காமல் சட்டை டவுசர் போட்டு, ஏன் முதுகு தண்ணியை துடைக்காம சட்டை போட்ட என்று திட்டி அம்மாவிடம் சவுக்கு மெளாறால் அடிவாங்கி தலையில் எண்ணெய் வைத்து படிய சீவி முன் பக்கம் கொஞ்சம் மோது வைத்து கண்ணாடி முன் சிங்கார் சாந்து பொட்டு எடுத்து நெற்றிக்கு நடுவில் சின்னதாய் ஒரு டாட் வைத்து அதற்கு மேல விபூதி சின்ன கீற்றாக பூசி ….



அசத்தல் தெலுங்கு சினிமா.





ஹீரோயிச  சண்டைகள், முக்கியமாக  நாயகனின் என்ட்ரி சீன் உக்கிர வசனங்கள்.. ஐட்டம் சாங்கில் காமிரா கோணங்கள்  நடன மூவ் மென்டுகள்…. ரிச் கேர்ள்ஸ் ரிச் பாய்ஸ் பசங்கள் பத்து ரூபாய்க்கு ஆட சொன்னால் ஆயிரம் ரூபாய்க்கு ஆடும் ஆட்டங்கள்…, நாயகிகளின் செக்சி உடைகள்,  இடுப்பு வளைவுகள்,  பாடல் காட்சிகளில்  அதீத தொப்புள் தரிசனங்கள், தமிழில் இழுத்து போர்த்து நடித்த நடிகையா என்று மிரண்டு  வியர்க்க வைக்கும் கவர்ச்சி காட்சிகளில் அசால்ட்டாக நடிக்கும் நடிகைகள்…. தன்னை கடவுளாக பாவித்து காட்சிகளை வைத்துக்கொள்ளும் நாயகன்… வெளிநாட்டு காட்சிகள், மேக்கிங் ஸ்டைல்,  பேமிலி சென்டிமென்ட்,  அற்புதமான பாடல்கள்   என்று நான் தெலுங்கு  சினிமாவை ரசிக்க, கொண்டாட  அனேக காரணங்கள்  இருக்கின்றன….


காலில் கவனம்.




ஏதோ லிகமன்ட் இஞ்சுரியாம்...தம்பி பாலா சொன்னான்..

காலில் முட்டியில் செம வலி.....
ஜவ்வு கிழிச்சிடுச்சாம்...


ஒரு வாராம திடிர் திடிர்ன்னு வலிக்கும் காலை ஊனி வச்சி நடக்க முடியாது...

ஒரு ஆறு வாரத்துக்கு போட்டுக்குன நடன்னு சொல்றான்...

வாழ்க்கையில இப்படி ஒரு சமாச்சாரத்தோட இதுதான் பர்ஸ்ட் டைம்..

இது மேல பேன்ட்டை போட்டுக்கிட்டு போனா.... வேற மாதிரி இருக்கு...

தேசிய கீதமும் மைக் செட் பையனும்...





யாழினி பள்ளியில் சுந்திர விழா நிகழ்ச்சிக்கான ஒத்திகை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்தது…
நாம் நாடுகளில் குப்பை குளங்களை டுவிஸ்டர் ஆக்கி சில நேரங்களில் காற்று விளையாடும்…..

பல்பு என்பது யாதெனில்.?



நேற்று யூடியூபில் ஒரு மீட்டிங்….

முதல் முறையாக சென்னையில் நடைபெற்றது.
நான்கு நாட்கள் பெங்களூரில் இருந்து வந்த காரணத்தால் சட்டென சென்னை இயல்பு வாழ்க்கையில் ஒட்ட முடியவில்லை..

செம மொக்கை வாங்கினேன் என்று கூட பாலிஷாக சொல்லிக்கலாம்…

மதியம் இரண்டரைக்கு யாழினியை பள்ளியில் இருந்து நான்தான் அழைத்து சென்று டே கேரில் விட வேண்டும்..
ஓட்டலில் இரண்டரை மணிக்கு ரிஜிஸ்ட்ரேஷன் ஆரம்பம் என்பதாலும் காலையில் இறுமுகன் ஆடியோ லான்ச் போய் விட்டு நிற்க நேரம் இல்லாமல் எடிட் செய்து வலையேற்றி உடை மாற்றி மீட்டிங் நடந்த ஓட்டலுக்கு கிளம்பி விட்டேன்….

கபாலி படம் பார்க்க போன கதை.




எப்படியான படமாக இருந்தாலும் தியேட்டரில் போய் பார்த்து விடுவது வழக்கம்….

டிக்கெட் பஞ்சாயத்து பெரிய விஷயமாக  போய் விட்டது..
நண்பர் ரபிக்கிடம் டிக்கெட் சொல்லிட்டேன்..… ஆனா  தூக்கம் வரலை தூங்காம கண் முழுச்சி   இருக்க காரணம் நாலுமணிக்கு  ரோகிணி தியேட்டர்ல ஷோ….. ஒரு சினிமா ரசிகனா  அந்த படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு… ஒரு மாசத்துக்கு மேல நடக்கும் கபாலி   படத்துக்கான  புரமோஷன்.,. அதனால்  தூக்கம் வரலை… ஒரு மணிக்கு தூக்கம் கண்ணை சொழட்டுச்சி…


kabali movie review - கபாலி திரை விமர்சனம்





விமானம்  வரை விளம்பரம் செய்தார்கள்....

மூன்று நாட்களுக்கு டிக்கெட் இல்லை என்று சொன்னார்கள்.. ஆனால் படம்  ஆரம்பித்த போது  ஒரு அரை மணிநேரத்துக்கு  எழுந்து எழுந்து கைதட்டி  ரசித்த ரஜினி ரசிகர்கள்..

இணையதள முடக்கம் சாத்தியமா?


173 இணைய தளங்களை முடக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்  தானு  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததோடு  அவற்றை முடக்க அனுமதியும் பெற்று விட்டார்..

இத்தனை நாட்களாக எத்தனையோ சிறு முதலீட்டு படங்கள் வெளிவந்த போது அவைகள்  இணையத்தில் வெளியாகி பெரும் இழப்பை சந்தித்த போது எல்லாம் அமைதியாக  இருந்த  தானு தற்போது  அவர் படத்துக்கு மட்டும் உயர் நீதி மன்ற படி ஏறி இருப்பது எந்த விதத்தில் நியாம் என்று சக தயாரிப்பாளர்கள் பொருமி வருவது ஒரு பக்கம் இருக்கட்டும்..
அவர்கள் சொன்னது போல இணையத்தை முடக்க முடியுமா? அது சாத்தியமா? என்பது பற்றி  சற்று விரிவாய்  அலசி இருக்கின்றேன்.. வாசித்து விட்டு உங்கள்  கருத்துகளை பகிருங்கள்..
வீடியோ பிடித்து இருந்தால் ஷேர் செய்யுங்கள்.

#kabali #thanu #கபாலி #தானு #ரஜினி #ரஜினிகாந்த் #ரஞ்சித் #ஆன்லைன் #உயர்நீதிமன்றம் #சாத்தியமா



நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

கவிரிமான் பிரதமர் டேவிட் கேமரோன்.





ஐரோப்பிய யூனியனில் தொடரலாம் என்பது   பிரதமரின் கருத்து… ஆனால் கூடாது என்று ஒரு கூச்சல்… சரி மக்களிடம் வாக்கெடுப்பை  எடுத்து அதன் படி நடக்கலாம் என்கின்றார்கள்…

வாக்கெடுப்பு நடக்கின்றது…

52 சதவிகதிம் பேர் ஐரோப்பிய யூனியனில் தொடரவேண்டாம் என்கின்றார்கள்.

48 சதவிகதம் பேர்  தொடரலாம் என்கின்றார்கள்…


பாகுபலிக்காக திருப்பதி பயணம் சில நினைவுகள்.




இன்றுதான் பாகுபலி ரிலிஸ் ஆன நாள்…  நான் கடலுர்காரன்.. எட்டாம் வகுப்பு  படிக்கும் வரை வீட்டை  விட்டு வெளியே சென்றதே இல்லை.அவ்வளவு ஏன் கடலூர் பழைய நகரத்துக்கு கூட சென்றது இல்லை..


சினிமா ரசிகனை தரம் பிரிப்பது முறையா?




சினிமா ரசிகனை தரம் பிரிப்பது முறையா?

ஒரு சினிமாவை பார்க்கிறோம்… நல்லா இருக்கு இல்லைன்னு சொல்ல போறோம்… இது எதுக்கு ஏ சென்டர் பீ சென்டர் சி சென்டர்ன்னு பிரிக்கறிங்க.. அது  தப்பு இல்லையா? அப்படி பிரிக்க நீங்க யாருன்னு என்னுடைய யூடியூப் சேனல் பின்னுட்டத்தில்  நிறைய பேர் கேட்டாங்க..

அப்படி  பிரிக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது…


Director Samuthirakani Why an conservative scene in the Movie Appa | இயக்குனர் சமுத்திரகனிக்கு ஒரு கேள்வி…

இயக்குனர் சமுத்துரகனி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த அப்பா திரைப்படம் நல்ல கருத்துள்ள திரைப்படம்.. மக்களுக்கு நல் போதனைகளை போதிக்கும் திரைப்படம் என்று பரவலான பேச்சு ரசிகர்களிடத்தில் இருந்து வருகின்றது…
மகிழ்ச்சி..
உண்மையில் நிறைய பிரச்சனைகளை மிக அழகாக வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் வேளையில் ….
அப்பா படத்தில் ஒரு காட்சி எல்லாவற்றிர்க்கும் திருஷ்ட்டி போல அமைந்து விட்டது… அந்த காட்சி என்னவென்றால்..

பேஸ்புக் வரமா சாபமா? வினுப்பிரியா மரணம் எழுப்பும் கேள்வி -?




சேலம்வினுப்பிரியாவுக்கு அன்றைய தேவை ஆதரவான வார்த்தைகளே ... பெற்றவர்களே நம்பவில்லை என்பதுதான் அந்த பெண்ணின் தற்கொலைக்கு முக்கியமான காரணம்.. பேஸ்புக்கிற்கு போகாமல் படங்களை பதியாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று அடக்கம் ஒடுக்கமாக அந்த பெண் இருந்து இருந்தால் அந்த பெண் இறந்து போய் இருக்காது என்று பதறுபவர்களை பார்த்தால் மிரட்சியாக இருக்கின்றது..

APPA ( 2016 ) tamil movie review | சமுத்திரகனியின் அப்பா திரைவிமர்சனம்




அப்பா திரை விமர்சனம்…
==============
உங்கள் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள் அல்ல…
உங்கள் பிள்ளைககள் உங்கள் பிள்ளைகள் அல்ல…
அவர்கள் அவர்களுடைய  வாழ்க்கையை வாழ வந்தவர்கள்.
உங்கள் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள்  அல்ல

                          கலீல் ஜிப்ரான்.
எழுதிய இந்த வரியை முன் வைத்துதான்  அப்பா  திரைப்படத்தை சமுத்திரகனி  எடுத்து இருக்கின்றார்

Request Road Travelers | வாகன ஓட்டிகள் அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்.







நான் உத்தமனில்லை.. அப்படியான பிம்பம் என் மீது விழுவதை நான் ஒரு போதும் விரும்பியதில்லை..காரணம் குறை நிறைகளோடு மட்டுமே ஒரு மனிதன் வாழ முடியும்..
100 சதவிகித நேர்மையும் ஒழுக்கமும் வாய்ப்பே இல்லாத விஷயம். அனால் குறைந்த பட்ச நேர்மை என்னிடத்தில் உண்டு …


சுவாதி கொலை சொல்லும் சேதி.




எனக்கு நேராது எனக்கு நிகழாது எங்களுக்கு நடக்காது என்று இந்த பூமியில் எந்த உத்ரவாதமும் இல்லை...


சுவாதி கொலை சொல்லும் சேதி.




எனக்கு நேராது எனக்கு நிகழாது எங்களுக்கு நடக்காது என்று இந்த பூமியில் எந்த உத்ரவாதமும் இல்லை...


Metro -2016 tamil movie review | மெட்ரோ திரைவிமர்சனம்




வேளச்சேரியில் புழுதிவாக்கம் செல்லும் சாலையில் இரண்டு பெண்கள் வாங்கிங் போய்க்கொண்டு இருந்தார்கள்…  என் கண் எதிரில்  அப்போசிட்டில் வந்த பையன் ஒரு பெண்மணியின்  கழுத்தில் இருந்து அசால்டாக செயினை அறுத்துக்கொண்டு  பறந்தான்.. மனைவி குழந்தையோடு இருந்த காரணத்தால் அவனை வேகமாக விரட்ட முடியவில்லை.ஆறு பவுன் செயின் நொடிப்பொழுதில்லை அவன் கையில் கழுத்தில் காயத்தோடு அந்த பெண்மணி பறிதவித்து போய் இருந்தார்.… போலிசில் கம்ளெயின்ட் கொடுக்க சொன்னேன்.. இல்லைங்க வீட்டுக்கு போலிஸ் வருவதை எங்க வீட்டுக்காருக்கு பிடிக்காது… அதனால் கம்ளெயின்ட் கொடுக்கலை.. எல்லாம் என் தலையெழுத்து வாயை கட்டி வயித்தை கட்டி  சேர்த்து வச்சது என்று அழுது புரண்டார்..

amma kanakku -2016 movie review | அம்மா கணக்கு திரைவிமர்சனம்



திருமணத்துக்கு பிறகு அமலாபால் ஆக்ஷன் கட் இரைச்சலில் இருந்து விலகி இருப்பார் என்று பார்த்தால்…முன்னிலும் அதிக வேகத்துடன் களம் இறங்கி இருக்கின்றார்… சிறப்பான பாத்திரங்களை ஏற்று  செய்வதோடு தன் தனித்தன்மையையும் நிருபிக்கி போராடுகின்றார்… அதற்காகாவே அவருக்கு ஜாக்கி சினிமாஸ் வாழ்த்துகளை தெரிவிக்கின்றது.

ஒரு நாள் கூத்து கதை மாந்தர்கள் ஒரு பார்வை.




சில திரைப்படங்கள்  தமிழ் சினிமாவில் வெளியாகி கவனம் பெறாமலே போய் விடுவதுண்டு…  அப்படியான சமீபத்திய திரைப்படம் ஒரு நாள் கூத்து… இறைவி அளவுக்கு கொண்டாடப்பட்டு இருக்க வேண்டிய திரைப்படம்.. ஆனாலும் இந்த திரைப்படம் பெருபாண்மையான மக்களின் கவனம் பெறாமலே போய் விட்டது…


Now You See Me: The Second Act ( 2016 ) movie review




நவ் யூ சி மி 2


இப்ப  நீ என்னை பாரு என்பதுதான் தமிழாக்கம்…அதை ஒரு மேஜிக்காரன் சொன்னா எப்படி இருக்கும்ன்னு யோசிச்சி பாருங்க….
இந்த படத்தின் முதல் பாகம்..2013 ஆம் ஆண்டு வெளியா‘கி  பட்டையை கிளப்பியது… நான்கு மேஜிக் நிபுனர்கள் ஒன்று சேர்ந்து  பெரிய பண  பொக்கிஷத்தை எல்லோர் கண்களிலும் மெஜிக் செய்து அபிட் விடுகின்றார்கள் என்பதுதான் கதை.

Iraivi Tamil movie Female character detailed analysis by jackiesekar | இறைவி திரைப்பட பெண் கதாபாத்திரங்கள் ஒரு பார்வை.




இறைவி திரைப்படம் பேசியது ஆணியமா? பெண்ணியமா? என்று தெரியாது..?  ஆனால்  அந்த திரைப்படத்தின் காதாபாத்திரங்கள் முக்கியமாக பெண் காதாபாத்திரங்கள் என் மனதை கவர்ந்தன என்பேன்.


நண்பர் சுபாஷும் அசோக்கும்..



சில நண்பர்களை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது… அவர்களோடு வாழ்ந்த பால்ய காலங்கள் என்றைக்கு நினைவு படுத்தினாலும் சந்தோஷத்தை கொடுக்க கூடியது…


Central Intelligence 2016 movie review



பாஸ்ட் பியூரியஸ் படத்தில் கலக்கிய ராக் என்கின்ற Dwayne Johnson    நடிப்பில் இந்த வாரம் வெளியான திரைப்படம்  சென்ட்ரல் இன்டிலஜென்ஸ்.. ஆக்ஷன்  காமெடி ஜானரில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம் உலக அளவில் ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி வருகின்றது.. அதற்கு காரணம் படம் நெடுக இழையோடும் நகைச்சுவைதான்.
===

நேற்று இரவு ஒரு விபத்து.. அது தொடர்பான பாடங்களும்.


நேற்று இரவு பெங்களுருவில் இருந்து நான், மனைவி, யாழினி ஆல்ட்டோ காரில் வந்துக்கொண்டு இருந்தோம் யாழினி பின்னால் தூங்கி கொண்டு இருந்தாள்.. கார் முழுவதும் பொருட்கள்… கேமரா, லைட், லேப்டாப் என்று சகலமும் இருந்தன சுருங்க சொன்னால் புல்லி லோடேட்.


The Conjuring 2 - 2016 - தி கான்ஜுரிங் 2 திரை விமர்சனம்.





கான்ஜுரிங் திரை விமர்சனம்.


2013 ஆம்  ஆண்டு வெளியான கான்ஜூரிங் ஹாரர்  திரைப்படம் கொடுத்த அதிர்வை உலக சினிமா ரசிகர்கள் அறிவார்கள்… தற்போது  அதன் இரண்டாம் பாகம் வெளியாகி மக்களை டரியல் ஆக்கி இருப்பதோடு அட்சரசுத்தமாய்  தமிழ் பேபேசுவது ,இன்னும் கூடுதல் சிறப்பு. காரணம் இந்த திரைப்படம் ண் உண்மை சம்பவங்களை மையப்படுத்தி வெளி வந்துள்ளது…


Idhu Namma Aalu movie review \ இது நம்ம ஆளு திரை விமர்சனம்.





இது நம்ம ஆளு படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு  மிக முக்கியமான காரணம் லவ் பிரேக் அப் ஆன ரெண்டு பேர் மீண்டும்  சேர்ந்து  நடிக்கின்றார்கள்  என்பதே…அப்படி நடிப்பதும் சேர்வதும் இங்கே புதுமையான விஷயம்…


பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்.






1990 களில் 425 இல் இருந்து... 450 மாக்க எடுத்த பையனை பார்க்கறது என்பது கடவுளை பார்ப்பது போல...
இப்ப என்னடான்னா... 499 மார்க்கை ரெண்டு பேர் எடுக்கறாங்க...


நேஷனல் ஜியாகிராபி






1986களில்தான் எனக்கு முதன் முதலாக தொலைக்காட்சி அறிமுகம்... கடலூர் கூத்தப்பாக்கத்தில் காசுக்கடைக்காரர் வீட்டில் இருந்து பிளாக் அண்டு ஒயிட் டிவிதான் நான் பார்த்த முதல் டிவி...

சிவாஜி கேஆர் விஜயா நடித்த செல்வம் திரைப்படம்தான் நான் தொலைகாட்சியில் பார்த்த முதல் திரைப்படம்.. ஆனால் அந்த டிவியை 30 அடி தொலைவில்தான் பார்த்து ரசித்து இருக்கிறேன்...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வாத்தியார் சுஜாதா



வாத்தியார் சுஜாதாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

கிராமத்தில் பிறந்த எனக்கு உலகம் என்றால் என்ன என்று நிறைய படித்து அதனை எழுத்தில் வடித்து கற்றுக்கொடுத்தவன்.

அவன் எழுத்தைவாசிக்க வில்லை என்றால் நிறைய ரசனைகளை ரசிக்க தெரியாமல் தந்தி போல கடந்து போய் இருப்பேன்...

நேஷனல் ஜியாகிராபி பேட்டி


2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி....சென்னை பெருவெள்ளம் அப்படியான வெள்ளத்தை என் 22 வருட சென்னை வாழ்க்கையில் நான் இதுவரை கண்டதில்லை...

காலை எட்டு மணிக்கு டிவியில் சைதாப்பேட்டை பாலத்தில் அலை அடித்துக்கொண்டு இருக்கின்றது...

கணமும் தாமதியாமல் வீடியோ கேமரா எடுத்துக்கொண்டு செல்கிறேன்.. மக்கள் அகதிகளாக திரிகின்றார்கள்.. சிக்னல் வேலை செய்யவில்லை..

ரைட் செடு ராங் சைடு என்று எதும் இல்லை... மின்சாரம் இல்லை... கருனையுள்ளவர்கள் சாப்பாடு போடும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம்..

சாலையெங்கும் நீர்.....

நாகேஷ்வரராவ் பார்க் வெள்ளத்தில் மிதக்கின்றது.. அண்ணாசாலையில் வெள்ளத்தில் மக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு கயிறு கட்டி நடக்கின்றார்கள்...

எனது பைக்கில் உயிரை பணயம் வைத்து சைதாப்பேட்டை சென்று விட்டேன்...

சைதாப்பேட்டை பாலத்தில் கடல் அலை போல ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் அடித்துக்கொண்டு இருந்தது...

ஒன்பது மணியில் இருந்து இரண்டு மணி வரை அங்கே இருந்தேன்.. சைதை மறைமலை அடிகள் பாலம் மெல்ல மெல்ல மூழ்கும் காட்சியை படம் பிடித்தேன்.

ஜாக்கி சினிமாசின் சொத்து இதுதான்..


சினிமா ஈர்ப்புதான்.. ஆனால் இது போன்ற பதிவுகள்தான் எனக்கு பிடிக்கும்...

மெட்ரோ ரயில் பாலத்தின் மேல் ஏறி மழைக்கு நடுவே நின்று எடுத்ததும் பாலத்தை சுற்றி ஓடும் அசுர வெள்ளத்தின் ஊடே இடுப்பளவு நீரில் இறங்கி பயத்தோடு பனகல் மாளிகையை அடைந்ததும் வாழ்கையில் மறக்க முடியாதது...


சைதை பாலம் மூழ்கும் காட்சியை நான்கு மணி நேரம் காத்திருந்து பதிவு செய்தேன்..

அந்த வீடியோவை பார்த்து விட்டு நேஷனல் ஜியாகிரபி சேனலில் இருந்து அழைத்தார்கள்.. சில வீடியோ கிளிப்பிங்குளை கொடுத்தேன்...

எனது இண்டர்வியூவை எடுத்தார்கள்... தமிதுல் பேசுகின்றேன் என்று சொன்னேன்... ஆனால் ஆங்கிலத்தில் பேசினால் நலம் என்றார்கள்.

கொஞ்சம் வேர்த்து போய் தான் பேசினேன்...

வரும் வியாழன் இரவு மே ஐந்தாம் தேதி ஒன்பது மணிக்கு சென்னை வெள்ளம் பற்றிய ஆவணப்படம் ஒளிபரப்பாக இருக்கின்றது..

அதில் எனது பேட்டி இடம் பெறுகின்றது.. நண்பர்கள் பார்த்து விட்டு கருத்து கூறவும்.



இந்த வீடியோவை எடுத்த காரணத்தால்தான் நேஷனல் ஜியாகிரபி சேனலில் பேட்டி எடுத்தார்கள்.....


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
03/05/2015








நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner