சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(24•11•2010)

ஆல்பம்..
ஆரம்பிச்சிட்டானுங்கப்பா அடுத்தது அடிச்சிக்குனு சாவறதுக்கு..தென்கொரியாமீது வடகொரியா ராக்கெட் உட்டு சண்டையை வம்புக்கு இழுத்து விட்டு இருக்குது.. இனி ஆங்கில செய்தி சேனல்களில் இரவு நேரத்தில் பறக்கு ஏவுகனைகளை விடாமல் காட்டிக்கொண்டு இருப்பார்கள்.
====================


பதிவர் சந்திப்பு போன்ற  மந்திரபுன்னகை படத்தின் திரையிடல் மிகுந்த மகிழ்வை கொடுத்தது..வெகு நாட்களுக்கு பிறகு பதிவர்கள் பலரை நேரில் சந்தித்தது. மகிழ்வை கொடுத்தது. பதிவு போட்டதில் இருந்து எல்லோருக்கும் போன் செய்து படத்துக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துக்கொண்டு இருந்த அண்ணன் உண்மைதமிழன் அவர்களின் பணி மெச்சதக்கது. அந்த படத்தின் விமர்சனம் நாளை எழுதுகின்றேன்.
===================
வெளிவந்த டேப்களில் பதவிக்கு எப்படி பங்கு போட்டார்கள் என்றும்குடும்பத்தினருக்கு உள்ளேயே  எவ்வளவு உள்குத்து இருக்கின்றது என்பதும் வெட்டவெளிச்சமாகி இருக்கின்றது..ஆனால் ஒன்று யார் பேச்சும் ரகசியம் என்று இனி எங்கேயும் மார்தட்டி சொல்ல முடியாது.
=============
வைகை ஆற்றில் செம வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது..என் பெரியப்பாகண் ஆபரேஷனுக்காக அரவிந் கண் மருத்துவமனைக்கு வந்த போது வற்றிய ஆற்றை மட்டும் பார்த்தேன்...தென் மாவட்டங்களில் நல்ல மழை என்று செய்திகள் தெரிவிக்கின்றன..இப்போதும் ஒரு காற்றழத்த தாழ்வு நிலை இலங்கை அருகே இருப்பதாக வானிலை அறிக்கை சொல்கின்றது..  அதனால் இன்னும் தமிழகத்தில் மழை நீடிக்கும்.
======================



மிக்சர்..
சாலைமேம்பாடு என்பது இதுவரை தமிழ் நாட்டில் ஆண்ட யாருக்கும் பெரியதாக தெரியவில்லை... ஒரு மழைக்கு கூட தாங்காத சாலைகள்தான் இன்னமும் தமிழ்நாட்டில் அலங்கரிக்கின்றன. வெளிநாட்டில் வேலைபார்ப்பவர்கள், மற்றும் மேற்படிப்புக்கு வெளிநாடு செல்பவர்கள் திரும்ப நமது  நாட்டுக்கு வராத காரணங்களில் மிக முக்கியகாரணமாக குறிப்பிடுவது கேவலமான சாலைகளுக்கு பயந்துதான்.
===================
நெடுநாளைக்கு பிறகு பாலகுமாரன் பேட்டியை விஜய்டிவி காப்பிவித் அனுவில் பார்த்தேன்... முன்பு போல் கொண்டாடாவிட்டாலும், ஒரு காலத்தில் கொண்டாடிய மனிதரின் பேச்சை அந்த இடத்தைவிட்டு நகராமல், சேனல் மாற்றாமல் அந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டு இருந்தேன். என் மனைவி அந்த பேட்டி கொஞ்சம் அலட்டலாய் இருப்பதாக சொன்னார். எனக்கும் அப்படித்தான் தெரிந்தது.. ஆனால் பாலகுமாரன் அப்போதும் இப்போதும் அப்படியேதான் இருக்கின்றார்.
=====================
கொஞ்சம் டேலன்ட்டாக உங்கள் பிள்ளை இருந்து அவர்கள் மற்றும் அவர்கள் நண்பர்கள் காணமல் போனால் கவலை கொள்ளாதீர்கள்.  இப்போது பிள்ளைகள் கடத்தல் நாடகத்தை அரங்கேற்ற தொடங்கிவிட்டார்கள்....பெற்றோரை மிரட்ட கடத்தல் நாடகம் சென்னை மற்றும் தமிழகத்தின் பிறபகுதிகளில் நடக்க ஆரம்பித்து விட்டது.. அதுக்காக கவலைபட வேண்டாம் என்றால் இப்படியும் இருக்கலாம் என்று மனதின் ஒரு ஓரத்தில் நம்பிக்கை வைத்துக்கொள்ளுங்கள்.
=========================
இந்தவார சலனபடம்...

 என்னதான் பேட்டரி விளம்பரமாக இருந்தாலும் இது டூமச்....


===================
படித்ததில் கவனம் ஈர்த்தது...

ஆஸ்திரேலியாவில் பதினேழு வயது பள்ளி மாணவனை பத்து பெண்கள் சமையல் கத்தியை காட்டி வலுகட்டாயமாக கற்பழித்து இருக்கின்றார்கள்..பையன் இப்ப ஆஸ்பத்திரியில் என்ன நிலமையில இருக்ககானோ??? மடக்குன்னு கிளை முறிஞ்சா மாதிரி சத்தம் கேட்டு இருக்குமோ??? 
 =================

இந்தவார கடிதம்..

வணக்கம் அண்ணா,
நான் உங்கள் நெடுநாள் ரசிகன். உங்கள் எழுத்துக்களை இடைவிடாமல் படித்து வருபவன். எந்த சிதறலும் இல்லாமல் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் எழுத்துக்கள், எளிமையான வார்த்தைகள் உங்களுடையது. நான் அதிகமாக comments போட்டதுயில்லை, ஆனான் உங்கள் இடுகைகளை தவறாமல் படித்து வருகிறேன்.

எழுத்து என்பது என் சிறுவயது கனவு. இருத்தலும் எழுதியதை பிரசுரம் செய்ய தயக்கம். என் நண்பர்களின் நம்பிக்கையின் காரணமாக எழுத ஆரம்பித்துவிட்டேன் (http://yogatheblogger.blogspot.com/). என் பதிவுகளை படித்துவிட்டு உங்கள் ஆலோசனைகளை கூறினால் மகிழ்ச்சி அடைவேன்.

நன்றி,
யோகநாத்
==========================
மிக்க நன்றி யோகநாத் நேரம் இருக்கும் போது  எங்கள் பதிவுகளை படிக்கின்றேன்.
============
அன்பிற்கினிய தனுசு,
வணக்கம்.
தமிழைப் பற்றி தமிழனுக்கு கூறத் தேவையில்லை.
ஆகவே தமிழைக் காக்கவும்,அடுத்த தலைமுறையினர்
நல்ல தமிழில் பேசவும் இன்று களப்பணி செய்ய வேண்டிய‌
ஒரு நிலையில் உள்ளோம்.
இந்த தமிழ்ப்பணியில் உங்களையும் இணைத்துக்கொள்ள‌
விரும்புகிறோம்.
தமிழ்பேசு இயக்கத்தின் பணி:
1.தமிழ் மொழியின் வரலாற்றை அடித்தட்டு மக்களிடம் கொண்டுசெல்வது.
2.தமிழிலேயே பேச ஊக்குவிப்பது.
3.பள்ளி மாணவர்களுக்கு தமிழ் போட்டி வைத்து பாராட்டுவது.
4.வணிக நிறுவன‌ங்கள், சிறு வியாபாரிகளின் பெயர்பலகை தமிழிலும்
வைக்க பாடுபடுவது.
5.ஊர்தி மூலம் துண்டு பிரசுரம், பரப்புரை செய்வது.
6.நல்ல தமிழ்நூல்களை அறிமுகப்படுத்துவது.
7.தமிழ் ஆராய்ச்சியாளர்களை மரியாதை செய்வது.
8.குழந்தைகள் அப்பா,அம்மா எனச் சொல்ல வேண்டுவது.
9.வீதிப் பெயர்கள், பலகைகள் தமிழிலும் இருக்க நடவடிக்கை எடுத்தல்.
10.தமிழ் ஆர்வலர்களை ஒன்றினைப்பது,ஊக்கப்படுத்துவது.
1.முதல் பணி:
தமிழினக் குழந்தைகளுக்கு வைக்க வேண்டிய தமிழ்ப் பெயர்கள் என்ற‌
சிறு நூலை வெளியிட்டு அதை அனைத்து அரசு மகப்பேறு  மற்றும்
தனியார் மருத்துவமனைகளுக்கு இலவசமாக‌ அளிப்பது.
  
 தமிழுடன்,
-------------------------------------------------------------------------------------------------------------------------------
"தமிழ் நமக்கு மொழி மட்டும் அல்ல - மூச்சு".
முகுந்தன்.தே
தமிழ்பேசு இயக்கம்
ஒருங்கினைப்பாளர்
மின் அஞ்சல்: anjal@tamilpesu.com
வலை: http://www.tamilpesu.com  
 =================
இது எனக்கு நண்பர் அனுப்பிய மெயில் இது உங்களுக்கும் உபயோகமாய் இருக்கும் என்று நம்புகின்றேன்.நம் மொழிக்கு சேவை செய்பவர்கள் இந்த இயக்கத்தில் இணைந்திட வேண்டுகின்றேன்...
=========================
பிலாசபி பாண்டி
பசங்க எல்லாம் எப்படியும் நம்ம பிரண்ட்ஸ் காதலுக்கு ஹெல்ப் செய்வாங்கன்னு காதலிக்கின்றார்கள். ஆனால் பெண்கள் எப்படியும் தன் அப்பா அம்மா பிரித்து விடுவார்கள் என்று காதலிக்கின்றார்கள்.
===================
இந்தவார நிழற்படம்..


இதுவும் நம்ம கேமரா கைங்கர்யம்தான்...கடலூர் கெடிலம் ரியில்வே பிரிட்ஜ்
=================================
நான்வெஜ் 18+
அந்த மெக்சிக்கோ ராணிக்கு உலகில் உள்ள பரவசத்தை அனுபவிக்க ஆசைப்பட்டாள், கட்டுமஸ்தான் 50 ஆண்களுக்கு புலிகளுடன் சண்டை வைத்து அதில் ஜெயிப்பவர்களை செலக்ட் செய்தாள்....அவர்களுக்கு நோய் நொடி இருக்கின்றதா ? என்று அரச வைத்தியனை வைத்து ஆராய்ந்த போது இரண்டு பேருக்கு பால்வினை நோய் இருக்க...அவர்கள் வாழ தகுதி இல்லாதவர்கள் என்ற சிரச்சேதம் செய்ய ஆர்டர் போட்டாள். மீதி 48 பயபுள்ளைக்கும் அல்லு இல்லை.. இதுக்கே இப்படின்னா சரியா படுக்கையில வேலை செய்யலன்னா என்ன செய்வா? என்று பயந்து கொண்டு இருந்தார்கள்... எல்லோரது உடையும் கலைய சொல்லி  அனைவர் லுல்லுவையும் பார்வையிட்டால் எல்லோரும் உயிர்பயத்தில் இருந்த காரணத்தால், புவிஈர்ப்பு திசைக்கு எதிர்திசையில் எல்லாம் நின்றபடி இருந்தன..வரிசையில் முப்பதாவது இடத்தில் நிற்பவனும் முப்பத்தி ஐந்தாம் இடத்தில் நிற்பவனுடையதும் புவிஈர்ப்பு திசையிலேயே இருக்க... ராணி ஒரு பெரிய வாளை எடுத்தால், இருவரும் இந்த உலகில் வாழ தகுதி இல்லாதவர்கள் என்று முதலில் வரிசையில் 35 இடத்தில் நிற்பவனது லுல்லுவை வெட்ட போக ராணி செலக்ட் செய்ததுதான் பிரச்சனை.. ராணி துரிதமாக நடந்து  30வது இடத்தில் நிற்பவனை கடந்த போது ராணி மல்லாக்க வழுக்கி விழுந்தாள்.


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

12 comments:

  1. வழக்கம் போல அருமை

    ReplyDelete
  2. மேற்படிப்புக்கு வெளிநாடு செல்பவர்கள் திரும்ப நமது நாட்டுக்கு வராத காரணங்களில் மிக முக்கியகாரணமாக குறிப்பிடுவது கேவலமான சாலைகளுக்கு பயந்துதான்..

    உண்மை..

    நீங்களும் இந்த ரோட்டை பத்தி உரக்க சொல்லியாச்சு.. எவனும் சரி பண்ண வரவில்லை.. இதுவரை.. ரோடு போடுவார் முன்னே, தேர்தல் வரும் பின்னே...

    ReplyDelete
  3. muppathy aynthavathu.....
    ippadi ellam eluthi than aaga venduma?
    etkanave nanraga eluthukinreergal. piragu en...?
    anpudan
    fernando

    ReplyDelete
  4. ஒரு நாட்டின் கட்டமைப்புக்கு நல்ல சாலைகள் முக்கியம்.சாலை பராமரிப்பெல்லாம் ஊழல்களின் போய் உட்கார்ந்து கொள்வது மிக சவாலான பிரச்சினை.எந்த துறை என்று இல்லாமல் ஊழல் சாதாரணமாகிப்போய் விட்டது.ஊழலுக்கு அதிர்ச்சி மருத்துவம் ஏதாவது ஒரு வகையில் தருவதற்கு உச்ச நேரமிது.

    ReplyDelete
  5. வழக்கம் போல அருமை அண்ணே,

    ReplyDelete
  6. அன்பிற்கினிய தனுசு,//

    anna ennaiya? nandri ippothe inainthu vidugirom

    //சாலைமேம்பாடு என்பது இதுவரை தமிழ் நாட்டில் ஆண்ட யாருக்கும் பெரியதாக தெரியவில்லை..//
    ada ponga neenga vera jarkhand poitu vanthen atha parthapuram Tamilnadu elllam evvalalo paravalla

    70 km poga 4 manineram aguthu anga

    ReplyDelete
  7. வழக்கம் போல சூப்பர் தல!
    நீங்க எடுத்த புகைப்படம் அருமை! :))

    ReplyDelete
  8. ராணி துரிதமாக நடந்து 30வது இடத்தில் நிற்பவனை கடந்த போது ராணி மல்லாக்க வழுக்கி விழுந்தாள்.

    Why?

    ReplyDelete
  9. அது தான் வழுக்கி மல்லாக்க விழுந்தாளென்று எழுதியிருக்கில்ல?????

    ReplyDelete
  10. ///மடக்குன்னு கிளை முறிஞ்சா மாதிரி சத்தம்?????///இருக்காது!!!!!

    ReplyDelete
  11. வழக்கம் போல அருமை..ராணி பாவம்!!!

    ReplyDelete
  12. பசங்க எல்லாம் எப்படியும் நம்ம பிரண்ட்ஸ் காதலுக்கு ஹெல்ப் செய்வாங்கன்னு காதலிக்கின்றார்கள். ஆனால் பெண்கள் எப்படியும் தன் அப்பா அம்மா பிரித்து விடுவார்கள் என்று காதலிக்கின்றார்கள்.///intha vara arattai arangathula oru ponnu ithathan pesuchu

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner