100%நான் லோக்கல்தான்.... அதுல யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்....

ஆரம்பத்தில் இருந்தே நான் சில விஷயங்களை வெளிப்படையாகவே எழுதி வந்து இருக்கின்றேன். எனக்கு அப்படித்தான் எழுத வரும். அதே போல் என்னை அவமானபடுத்தலாம் என்று கங்கனம் கட்டிக்கொண்டு  அலைய ஒரு கூட்டமே இருக்கு....



அது ஒரு காலும் நடக்காது..... எனக்கு அவமானங்கள் புதுசு அல்ல...சிறுவயதில் ஏதோ நான் கேட்டுவிட்டேன் என்று என் அப்பா வேப்பம் குச்சியில்  பல் துலக்கி கொண்டு இருக்கும் போது, அப்படியே அந்த ஏச்சிலை கீழே துப்பாமல் என் முகத்தின் மேல் துப்பிவிட்டார்....அந்த வயதில் எனக்கு இதை விட பெரிய ஆவமானம் ஏதும் இருப்பதாய் தெரியவில்லை...

அடுத்த வேலை  சோற்றுக்கு நான் சென்னையில் கஷ்டபடும் போது இதை விட அவமானங்களை நான் சந்தித்து விட்டேன்....நான் வேலை செய்த பீச் ஓட்டலின் வாசலிலேயே காற்றுக்காக படுத்து இருந்த போது, என்னை எழுப்பி ஒரு போலிஸ்காரன் கேள்வி கேட்டான்... தூக்ககலக்கத்தில் வாய்பிழன்று பதில் சொன்னகாரணத்துக்காக ஓங்கி என் கண்ணத்தில் அந்த பண்ணாடை போலிஸ்காரன் அறை கொடுத்த போது, கண்ணில் நீர்வர அவமானத்தை தாங்கி இருக்கின்றேன். மறுநாள் அதே போலிஸ்காரன் ஓசி டீக்கு என்னிடம் வந்து வழிந்து நின்றது வேறுகதை....

நான் அப்படித்தான் என்னா? இந்த ஒருஜான் வயத்து பசிக்காக, அடுத்தவேலை சொத்துக்கு நடு ரோட்டுல நிக்கும் போது, இந்த கவுரவம்,இலக்கியம்,ஆணாதிக்கம், பிச்சை , எச்சை,மயிறு மட்டை  என்று எதுவும் கண்ணுக்கு தெரியாது...

உன்னைமாதிரி ஆளுக்குதான் எல்லாம்... எங்களுக்கு எல்லாம் மேல ஆகாயம், கீழ  பூமி என்று மகாநதி படத்தில் ஒரு டயலாக் வரும் அது போலதான் நான்லாம்....

இப்பதான்  நம்மளை பத்தி நம்ம தளத்துல சைடுல ரொம்பவே வெளிப்படையா எழுதினேன்...

பத்தாம் வகுப்பில் 277/500 எடுத்த ஒரு மக்குமாணவனின் வலைப்பூவை படித்துக்கொண்டு இருக்கின்றீர்கள்.இலக்கியமாய் எழுதவராது.இப்போதும் இலக்கியம் எனக்கு கிலோ என்னவிலை ரகம்தான்???. எந்த இலக்கியத்தையும் நான் வாசிக்கவில்லை.ஒரளவுக்காவது நேர்மையாக வாழ முயற்சிசெய்பவன்.. தமிழில் எழுதுவது இப்போதும் தத்துக்குத்தல்தான்... இப்போதுதான் பிழைகளோடு எழுத பழகிவருகின்றேன். அதனால் தமிழ் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்...பிழைகள் திருத்தி எழுத முயற்சிக்கின்றேன். நான்பெசன்ட்நகர்வாசியோ அல்லது அண்ணாநகர் வாசியோ கிடையாது அதனால் என் வலைபூவில் படு லோக்கலாய் கொஞ்சம் கப்பு இருக்கத்தான் செய்யும்... இதையெல்லாம் பொறுத்துக்கொள்பவர்கள் தினமும் இந்த தளத்தில் தொடரவும்... பிரியங்களுடன் ஜாக்கிசேகர்...

மேலே உள்ள வரிகளை இப்பதான் எழுதி ஒரு நாலு நாள் இருக்கும்... நேற்று தம்பி இருப்புத்திரை அரவிந்  ஒரு பதிவு போட்டு இருந்தார்.. அதில் என் பேர் எல்லாம் இழுபட்டு இருந்தது.... அப்புறம் போய் பார்த்தால் அதுக்கு முன்னாடி பதிவுலயும் நம்மளை அதே பெண்மணி காய்சி எடுத்து இருக்காங்க....

தம்பி அரவிந் மேட்டுக்குடி பெண்மணியோடு சாட்டில் பேசிய போது அந்த பெண்மணி என்னை பக்கா லோக்கல் என்று சொல்லி இருக்கின்றார்... அதைதான் நானே சொல்லி இருக்கின்றேனே....

அதை விட பள்ளி படிப்பை முடிக்காதவன் என்று எள்ளி நகையாடி இருக்கின்றார்... அதனால் நான் லோக்கலாம்... காமராஜர் அப்ப படு லோக்கல் என்று  சொல்லி இருந்தாலும் சொல்லி இருப்பார் போல...

நான் லோக்கல் என்பதை வேறுயாரும் சொல்லவேண்டாம் அது எனக்கே நன்றாக தெரியும்...




இரண்டு பேர்  பண்ணிய சாட்டில் அந்த பெண்மணி என்னை மட்டும் அல்லாது சகட்டுமேனிக்கு ஆம்பளை, பொம்பளை வித்யாசம் இல்லாமல் போட்டு தாக்கி இருக்காங்க...உடன் பழகிய,படித்த பெண்களும் இதில் விதிவிலக்கல்ல...  ஏன் இப்படி என்று தெரியவில்லை.. யாராவது ஒருவர் பிடிக்காமல் போகலாம் ஆனால் எல்லோருமேவா???

என்னிடமும் சினிமாகாரர்களிடமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமாம்...

என்மேல ஒரு 20 ரேப் கேஸ் இருக்குது...
இரண்டு வழிப்பறி,
4டிரெயின் ராப்பரி,
12பி பஸ்ல எட்டு பிக்பாக்கெட் கேஸ் இருக்கு அதனால ஜாக்கிரதையாதான் இருக்கனும்..


( aduthu jockey sekar veetla ulla kaduthasi amma eluthinathu
personal vishayam ellathayum pottu
  oottu ketpaar

அடுத்து ஜாக்கி சேகர் பத்தி அதே பதிவுல பேசுறாங்க.அவர் அம்மா எழுதிய கடிதத்தை போடுறாராம். எவனோ எழுதிய கடிதத்தைப் போடுறாராம். அவருக்கு கடிதம் வருது அவர் வெளியிடுறார். ஓட்டுக் கேக்குறது அவர் இஷ்டம்.அவர் பதிவுக்கு போகாம இருக்க வேண்டியது தானே.
  

  aprom evano eluthina letter vechu athayum prabala paduthuvaar
  athey
  than
  nattula nadakka vendiya visayam embutto irukku)

இது தம்பி அரவிந் தளத்தில் என்னை பற்றி வந்த சாட்....
நன்றி அரவிந் தம்பி...


அப்புறம் எங்க அம்மா எனக்கு எழுதின கடிதாசி,  என் நண்பர்கள் எனக்கு எழுதிய கடிதாசிகள் எல்லாத்தையும் என் தளத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருவேன்... அது  என் இஷ்டம்...இன்னும் நிறைய கடிதாசிகள் இருக்கின்றது... தொடர்ந்து வெளியிடுவேன்...அது லட்டர் போட்ட  நண்பனுக்கும் எனக்குமான விஷயம் அது... லட்டர் போட்டவனே கேட்கலை ஒனக்கு என்ன பிரச்சனைம்மா????

நல்லவேளை அந்தம்மாவோடு பேராமில் ஒரு சில கும்மிகளில் மட்டும் வந்து இருப்பேன்... நல்லவேளை  உங்ககிட்ட எல்லாம் நான் நல்லபழகலை... சந்தோஷம்....

உங்கபேரை சொல்லகூட எனக்கு இஷ்டம் இல்லை....

ஒரு பதிவில் சமையல் கட்டுரை எழுதினால் நாட்டுலநடக்க எவ்வளவோ இருக்கு இதெல்லாம் போய் சொல்லிகிட்டுன்னு சொல்வாங்க போல இருக்கு.....???

எழுதி எல்லாத்தையும் திருத்த போறேன்னு நான் சொல்லலை... அது என்னால முடியாத காரியம்...எனக்கு என்ன தோணுதோ அதை அப்படியே எழுதுவேன்... இதை எழுது அதை எழுதுன்னு சொல்லறவங்க நீங்க செய்யுங்க....




அதே போல பதிவுலகில் என்னிடம்  பொங்கி தீர்க்கும் பல பேர் முகத்தை காட்டவே மாட்டேன் என்கின்றார்கள்..திருட்டு ஜடியில் வருகின்றார்கள்.. ஏன் இந்த பயம்..

நானாவது எனது போட்டோ போட்டு இருக்கேன்..  எனக்கு பின்னுட்டத்தில் கேள்விகேட்கும் பல பருப்புகள் தன்னை வெளிபடுத்திக்காம வந்து கேள்வி மட்டும் வக்கனையா கேட்டுகிட்டு இருக்குதுங்க... அதுக்கு ஒரே பதில் மார்க்குடு ஆஸ் ஸ்பேர்ம்....

பொதுவா இந்த இணையம் நேரவிழுங்கி என்பது தெரிந்து போனதால் நான் பதிவை போட்டு விட்டு அப் சிஸ்டத்தை ஆப் செய்து விட்டு அடுத்த வேலை பார்க்க போய்விடும் ரகம்...  நேரம் இருந்தால் ஒரு சிலதை வாசிப்பேன். நான் யாரோடும் அதிகம் சண்டை போட்டதில்லை....ஒரு சில விவாதங்களுக்கு பதில் சொல்லிவிட்டு நானே இதுக்குமேல இந்த விவாதம் தொடர முடியாது...விவாதம் பண்ணியது வரை போதும்னு நகர்ந்துடுவேன்... காரணம்... அடுத்தவேளை பூவா ரொம்ப முக்கியம்  அல்லவா???

அந்த பிரச்சனைக்கு ஏன் பதில் சொல்லலை?? இந்த பிரச்சனைக்கு ஏன் பதில்சொல்லலைன்னு  வக்கனையாக கேள்வி கேட்கும் ஒரு சில நண்பர்களுக்கு.....நான் என்ன பத்திரிக்கையா நடத்திக்கினு இருக்கேன்.. எல்லாத்துக்கு கருத்து சொல்ல...எனக்கு எது தோணுதோ அதை எழுதுவேன்.

நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருந்தாகூட நம்மளை விட்டு வைக்க மாட்டேன்றாங்க...விலகி போனாலும் நம்மை சீண்டி பார்க்கறதே பொழப்பா இருக்கு...??

எனக்கு பொழப்பை பார்க்கனும்...  இது கூட நம்ம பேரை தேவையில்லாமல் இழுத்தமைக்காக... இந்த பதில்....

யோக்கியன் என்று சொல்லிவிட்டு முதுகில் குத்துவதைவிட என்னை ஐயோக்கியன் என்று சொல்லி நெஞ்சில் குத்துவது எனக்கு பிடித்தமானது..


என்னை பற்றி எழுதியதை பார்த்து விட்டு என்னால் சிரித்து விட்டு போக முடியாது..

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

114 comments:

  1. //
    பத்தாம் வகுப்பில் 277/500 எடுத்த ஒரு மக்குமாணவனின் வலைப்பூவை படித்துக்கொண்டு இருக்கின்றீர்கள்.//

    தல நீங்க என்ன விட அதிக மார்க்....

    ReplyDelete
  2. கடுப்புல இருந்தேன்.துண்டு போட்டு உட்கார்ந்துக்குறேன்.

    ReplyDelete
  3. //நான் லோக்கலாம்...//

    உங்கள பேசி அவுங்க லோக்கல் ஆகிட்டாங்க...

    ReplyDelete
  4. //யோக்கியன் என்று சொல்லிவிட்டு முதுகில் குத்துவதைவிட என்னை ஐயோக்கியன் என்று சொல்லி நெஞ்சில் குத்துவது எனக்கு பிடித்தமானது.. //

    இந்த கருத்து எனக்கு பிடிச்சிருக்கு...

    ReplyDelete
  5. எழுதின ஜந்து 100 % ஃபாரினாம்....ஆமாம் ..உனக்கு கேமராவை பத்தி நிறைய தெரியுமில்ல?

    ReplyDelete
  6. பகிர்ந்து கொள்ளவே வலைப் பதிவுகள் அண்ணா.
    உங்களுக்குத் தெரிந்த நடையில் நீங்கள் எழுதறீங்க. பிடிச்சவங்க படிக்கிறாங்க, இதுல எங்க இருந்து வந்தது தூய தமிழ்.

    //லோக்கலாய் கொஞ்சம் கப்பு இருக்கத்தான் செய்யும்...//
    பிடிக்காதவங்களுக்கு நல்ல வாசம் கூட கப்பு அடிக்கத்தான் செய்யும். :)

    ReplyDelete
  7. பக்கா லோக்கலான ஆளாக இருப்பதுதான் இயற்கை .. மேதாவித்தனம் என்பது நடிப்பு ..
    நடிப்பது எல்லோருக்கும் தெரியும் என்பது மற்றவர்களை விடவும் எளிதாக அறிவான் சினிமாக்காரன்..
    இதுக்கெலாம் ஒரு பதிவு போட்டு ஏன்னே,, wasting our time ...

    ReplyDelete
  8. //
    பத்தாம் வகுப்பில் 277/500 எடுத்த ஒரு மக்குமாணவனின் வலைப்பூவை படித்துக்கொண்டு இருக்கின்றீர்கள்.//

    248/500 இது என் மார்க்கு...!
    நீங்க லோக்கலா..? அப்போ நாங்கல்லாம் யாரு..?;)

    ReplyDelete
  9. ///நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருந்தாகூட நம்மளை விட்டு வைக்க மாட்டேன்றாங்க...விலகி போனாலும் நம்மை சீண்டி பார்க்கறதே பொழப்பா இருக்கு...??///இப்படி சீன்றதுக்குன்னே ஒரு கும்பல் திரியுது,இவங்கள எண்ணத்துல வச்சி அடிக்கிறது?? மேட்டுகுடியாவது மண்ணாவது.நாம நாமலாவே இருப்போம் நண்பரே

    ReplyDelete
  10. என்ன வெவ'காரம்'னு வெளங்கல. இருக்கட்டும்

    //பத்தாம் வகுப்பில் 277/500 எடுத்த ஒரு மக்குமாணவனின்//

    ஹிஹி நான் 299/500
    22 மதிப்பெண் அதிகம், என்னைவிட தரமாகவே எழுதுகிறீர்கள் என்று நினைக்கிறேன். :)

    ReplyDelete
  11. ஆச்சரியம்.

    ஜாக்கி உன் உழைப்பு என்னில் ஆச்சரியத்தையும், மரியாதையையும் ஏற்படுத்தி இருக்கிறது. மென்மேலும் உயர இந்த சகோதரனின் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. //என்மேல ஒரு 20 ரேப் கேஸ் இருக்குது...//

    அவ்ளோ வொர்த் இல்லைன்னு சொன்னாங்களே தல!

    பயபுள்ள பொய் சொல்லிருச்சு போல!

    ReplyDelete
  13. நானெல்லாம் பத்தாங்கிளாஸே படிக்கல!

    நான் லோயர் லோகிளாசா!?

    அங்கே கொசு கடிக்குமா, கடிக்காதா!?

    ReplyDelete
  14. //100%நான் லோக்கல்தான்.... அதுல யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்//

    ஆமாங்க பக்கா லோக்கல் தான்!, தெரியாம யாரும் முன்னாடி ஜீரோ போட்டு கூப்பிடாதிங்க, அப்புறம் எஸ்.டி.டி சார்ஜ் ஆகிரும்!

    ReplyDelete
  15. 428/500 மார்க் எடுத்துட்டா பெரிய --------?

    விடுங்க ஜாக்கி

    ReplyDelete
  16. இயல்பான ஆதங்கம். தெரிவித்த விதம் நன்று.

    ReplyDelete
  17. இது போன்ற விசயங்கள், அவதூறுகளுக்கு உங்களின் பொன்னான நேரத்தை வீண் அடிக்காதீர்கள்.

    உங்கள் மனதிற்கு தெரியும் நீங்கள் எந்த வர்க்கம், எந்த வகை மனிதர் என்று. உங்கள் மன மகிழ்ச்சி, மன நிறைவே பெரிதானது.

    ReplyDelete
  18. உங்க அம்மா உங்களுக்கு எழுதின கடிதத்தை உங்க ப்ளாக்ல போடுறத்துக்கு யார் அனுமதி கேட்கணும் ?. உங்க ப்ளாக் நீங்க எதுவேண்டுமானாலும் எழுதுங்க படிக்கிறவங்க படிப்போம். இதுல எதுக்கு கிண்டல்னு தெரியலை. விடுங்க ஜாக்கி.

    ReplyDelete
  19. அட விடுங்க பாஸு பிரபலமானவங்களை பத்தி பேசியே பிரபலமாவது ஒரு சாராரின் வழக்கம். அப்படித்தான் அவங்க உங்களைபத்தி பேசி பிரபலமடைய முயற்சி செஞ்சிருக்காங்க.

    ReplyDelete
  20. Dear Mr. Jackie,

    Your Writing rockzzzz..... All are jealous on u... Neenga avangala vida nalla eluthriunga nu oru poramai....
    Vidunga Jackie ithellam namba serious aha eduthuka kudathu.....

    Take Care,
    Vijay,
    Muscat.

    ReplyDelete
  21. நான் பத்தாவதுல 439/500. ஆனா என் பதிவை எத்தனை பேர் படிக்கிறா ? உங்களுடையத எத்தனை பேர் படிக்கிறாங்க பாருங்க..

    ReplyDelete
  22. Cool Jackie. Don't bother about others.. You continue your writings in blog we are here to read and support you.. :-)

    ReplyDelete
  23. நான் வெறும் வாசகன் மட்டும் தான். 2 அல்லது 3 பின்னுடகளுக்கு எனக்கு பதில் அளித்து இர்ருகிரீர்கள் என்று நினைக்கிறன்.
    எனக்கு தெரிந்தது TAMILISH.COM மட்டும் தான் இதன் மூலமாகத்தான் உங்கள் வலைபூ எனக்கு அறிமுகமானது. கடந்த 1 வருடமாக உங்கள் பதிவுகளை வாசித்து வருகிறேன். உங்கள் வலை பூ என்னை கவர்ந்த அளவுக்கு வேரே எந்த வலை பூவும் என்னை கவர வில்லை(ஒரு சிலவற்றை தவிர்த்து). இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் நீங்கள் எதை எழுதினாலும் அது ரசிக்கும் படியாக இருக்கிறது படித்து ரசிக்க ஒரு கூட்டம் வாசகர்களாக இருக்கிறார்கள். இதற்கெல்லாம் பதிவு தேவையா?
    இந்த பதிவில் இருந்து ஒன்னு மட்டும் நன்றாக தெரியுது உங்கள் புகழ் மேலும் வளர்கிறுது என்று! வாழ்த்துகள்!

    ReplyDelete
  24. உங்க கிட்டே பிடிச்சதே அந்த வெளிப்படையான எழுத்து தான் ஜாக்கி. யார் என்ன சொன்னா என்ன, லூஸ்ல விட்டு நீங்க பாட்டுக்கு எழுதுங்க

    ReplyDelete
  25. கூல் தம்பி கூல்..! இதையெல்லாம் பொருட்படுத்தாமல் செல்வதுதான் சிறந்த வழி..!

    ReplyDelete
  26. காச்சமரத்துக்குக் கல்லடி என எடுத்துக்கொள்ளவும். உங்கள் எழுத்துச் சுவாரசியமானது.
    உங்கள் திறந்த எழுத்துச் சாயல் எனக்கு இரு ஈழத்து எழுத்தாளர்களை நினைவூட்டும்...டொமினிக் ஜீவா- மல்லிகை எனும் சஞ்சிகை இலங்கையில் நடத்துபவர், எஸ்.பொ- இப்போது சென்னையில் உள்ளார்.
    சுயஎள்ளல்; சமூகத்தில் நடப்பதை கவனிப்பது; அதை சுவையாக எழுதுவது ,உங்கள் பாணி அலாதியானது. தொடரவும்.முடிந்தால் டொமினிக் ஜீவாவின் - எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்; எஸ். பொ வின் - நனவிடை தோய்தல் ; படித்துப் பாருங்கள்.
    இவர்கள் பக்கா லோக்கல் எழுத்துக்கும் சொந்தக்காரர்கள்.

    ReplyDelete
  27. அண்ணா...
    நம் மனதில் உள்ளதை பகிரவே வலைப்பூ... இதில் மற்றவர்களுக்க எழுத வேண்டும் என்பதோ, இப்படித்தான் எழுத வேண்டும் என்பதோ அடுத்தவர்கள் நம்மிடம் திணிக்க வேண்டிய விசயமில்லை.
    உங்களை லோக்கல் என்ற அந்த அம்மணி அமெரிக்காவிலா பிறந்து வந்தார். அவரும் நாம் பிறந்த தமிழகத்தில்தானே பிறந்திருப்பார்.
    உங்களைப் போல் சென்னையில் வேலைக்கு வந்த புதிதில் நானும் என் நண்பர்களும் கையேந்தி பவனில் ஒரு வேளை சாப்பாட்டை சாப்பிட்டு தி.நகரில் காலத்தை ஓட்டியிருக்கிறோம்.
    அடுத்தவர் என்ன பேசினாலும் கண்டு கொள்ளாதீர்கள். பழசை மறந்து திரியும் அவர்கள் பேசினால் நமக்கென்ன...
    கோபம் குறையட்டும் அண்ணா.

    ReplyDelete
  28. தல..

    எடுக்கு இப்ப இவ்ளோ டென்ஷன்? நம் கடன் எழுதுவதேன்னு எழுதிட்டே இருங்க... இதைப் பத்தியெல்லாம் கவலைப்பட்டு உங்க நிம்மதியைக் கெடுத்துக்காதீங்க..

    உங்க எழுத்தைப் படிக்க நாங்க இத்தனை பேர் இருக்கறப்ப இதுபத்தியெல்லாம் நீங்க விசனப்படறது உங்க எழுத்தைத்தான் பாதிக்கும்..

    ப்ளீஸ்.. பி கூல்..

    ReplyDelete
  29. Dear Jakki

    This is a price you have to pay, when you make people jealous. Just ignore them, that is the best punishment you can give them. Keep your good work. Your writing is from your heart, without lies.

    Hates off to you, brother.

    Anbudan
    Samy

    ReplyDelete
  30. இதுக்கெல்லாம் பதிவு போடுவீங்களா தல, அப்படி என்றால் நாமெல்லாம் ஒரு புத்தகமே போடலாம் ;)

    ReplyDelete
  31. சொல்ல மறந்த இன்னொன்று..

    கீழே விழுந்த 500 ரூபாயைக் குனிந்து எடுக்கும் நேரத்தில் 1000 ரூபாய் சம்பாதிக்க முடிகிறவர் என்று பெரும்பணக்காரர்களைக் குறித்துச் சொல்லப்படுவதுண்டு.

    நீங்கள் எழுத்தில் அப்படியொரு பணக்காரர் போல..

    நீங்கள் எழுதியதைப் படிக்கவே உங்களுக்கு நேரமிருக்காத பட்சத்தில் இவற்றைப் படித்து உங்கள் மனநிலையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

    ப்ளீஸ்..

    தவறாக எடுத்துக் கொள்ளமாட்டீர்கள் என்பதால் சொல்கிறேன்..

    நன்றி..

    ReplyDelete
  32. லோக்கல் ஜாக்கி வாழ்க !

    ReplyDelete
  33. நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருந்தாகூட நம்மளை விட்டு வைக்க மாட்டேன்றாங்க...விலகி போனாலும் நம்மை சீண்டி பார்க்கறதே பொழப்பா இருக்கு...??////

    சரியா சொன்னிங்க தலே....

    ReplyDelete
  34. "போற்றுவோர் போற்றட்டும்
    தூற்றுவோர் தூற்றட்டும்"
    உங்கள் பணி மென்மேலும் வெற்றிபெர வழ்த்துக்கள்!!!

    ஒரு குட்டிக் கதை!!
    ஒரு நாட்டின் பட்டத்து யானை கோவில் குளத்தில் குளித்துவிட்டு
    பல விலை மதிக்கமுடியாத அணிகலன்களை அணிந்துகொண்டு
    தெருவில் வர
    ஒரு டிச்சுப்பன்னி சேதுல முங்கிட்டு அதே தெருவுல வந்துச்சு
    அத பார்த்த பட்டத்து யானை ஒதிங்கி நின்னுது
    அத பார்த்த டிச்சுப்பன்னி தன்னொட வால சுத்திக்கிட்டே சொல்லுச்சாம்
    பார்த்தியா என்னப் பார்த்து பட்டத்துயானையே ஒதிங்கி நிக்குதுனு!

    அந்த பட்டத்து யானை ஒதிங்கி நின்ன காரணம்!!
    நாம இப்பத்தான் குளித்து வர்ரோம்
    இந்த டிச்சு பன்னி நம்ம மேல பட்டா மருபடியும் குளிக்கனுமேன்னு யொசிச்சது!!

    எந்த டிச்சுபன்னி எப்படிப் போன என்ன
    நாம நம்ம வேலைய பார்ப்போம் ஜாக்கி அண்ணா!!

    ReplyDelete
  35. //.இலக்கியமாய் எழுதவராது.இப்போதும் இலக்கியம் எனக்கு கிலோ என்னவிலை ரகம்தான்???. எந்த இலக்கியத்தையும் நான் வாசிக்கவில்லை.//

    இலக்கியவியாதி... சாரி இலக்கியவாதின்னு சொல்லிக்கிறவங்களும் இப்படிதான் இருக்காங்க. விடுங்க, இன்னிலேர்ந்து நீங்களும் இலக்கியவாதி.

    ReplyDelete
  36. விடுங்க பிரதர்.... வேற வேலை நிறைய இருக்கு நம்மளுக்கு அதை பார்ப்போம்.

    ReplyDelete
  37. பத்தாம் வகுப்பில் 277/500 எடுத்த ஒரு மக்குமாணவனின் வலைப்பூவை படிக்க, பத்தாவது பரீட்சை எழுதினால் பெயிலாகி விடுவேனோ என்று பயந்து பரீட்சை எழுதாத (அய்யய்யோ...என் உண்மையான படிப்பை சொல்லிட்டேனே...) என்னை போன்ற எவ்வளவோ பேர் இருக்கோம்.கவலைய விடுங்க பாஸு

    ReplyDelete
  38. அண்ணே அரவிந் பதிவை படித்த பிறகுதான் உங்கள் கோவம் புரிந்தது. அறச்சீற்றம் என்பது இதுதான். கோவத்திலும் நீங்கள் வார்த்தையில் காட்டும் கண்ணியம்...அண்ணே நீங்கள் லோக்கல் இல்லை ஹைகிளாஸ் என்று நிரூபித்து விட்டீர்கள்.

    அண்ணே ஹைகிளாஸ் லோக்கிளாஸ் என்பது பண வசதியை பொருத்து இல்லை. மனசு பழகும் தன்மை ஆகியவற்றை பொருத்தது...அந்த வகையில் ஹைகிளாஸ்தான். டோண்ட் ஒர்ரி!

    ReplyDelete
  39. என்மேல ஒரு 20 ரேப் கேஸ் இருக்குது...
    இரண்டு வழிப்பறி,
    4டிரெயின் ராப்பரி,
    12பி பஸ்ல எட்டு பிக்பாக்கெட் கேஸ் இருக்கு அதனால ஜாக்கிரதையாதான் இருக்கனும்..//

    ஹஹா உண்மை தான் பாஸ்!!

    ReplyDelete
  40. நல்லப் பதிவு..தெளிவான விளக்கம்..சமந்தப்பட்டவர்களுக்கு நெத்தியடி..

    ReplyDelete
  41. :) தன்னிலை விளக்கம் நன்றாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
  42. /
    தமிழ் உதயன் said...

    விடுங்க பிரதர்.... வேற வேலை நிறைய இருக்கு நம்மளுக்கு அதை பார்ப்போம்.

    /

    repeattu

    ReplyDelete
  43. தல இதெல்லாம் கண்டுகாதீங்க !

    ReplyDelete
  44. மச்சி நானெல்லாம் தர டிக்கெட் ரேஞ்சு. இப்போ ரொம்ப அடக்கி வாசிச்சிட்டு இருக்கேன். நான் லோக்கல்ன்னு சொல்லிக்க என்னைக்கும் கவல பட்டது கிடையாது. பாரின் ஜந்துக்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விளைகிறேன். நாங்க பிளாக் லேபிலே அடிச்சாலும் தொட்டுக்க ஊறுகாய் தாண்.

    அப்புறம் உண்மை தமிழன் அய்யா சொன்ன மாதிரி இந்த பிசிறு பிஸ்கோத்த எல்லாம் கணக்குல எடுக்காம நகர்ந்து போறது தான் ஆரோக்கியமும் புத்திசாலித்தனமும்.

    ஒரு குறிப்பு நான் மாநகராட்சி பள்ளியில் ஏழம் வகுப்பு பெயில் ஆன மக்கு பையன் என்பதை பதிவுலகிற்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  45. ஜாக்கி அண்ணே.
    அந்த பெண்மணிக்கு இழுக்கு வரக்கூடாதுன்னு பெயரைகூட சொல்லாத உங்க பாங்கு ஒன்றே போதும் நீங்க எவ்வளவு உயர்ந்தவர்னு எல்லோரும் புரிந்துகொள்ள,தவிர நான் உங்களை நேரிலேயே என் வீட்டில் சந்தித்திருக்கிறேன். தவிர 10ஆவதில் என் மார்க் 276 தான் அண்ணே,நீங்க சொன்ன பிறகு தான் என்னால் இதை வெளிய சொல்ல முடியுது.அறிவும் பண்பும் ஏட்டுப்படிப்பில் இல்லை,பட்டறிவில் தான் இருக்கிறது.நல்ல இடுகை

    ReplyDelete
  46. ஏம்ண்ணே இதுக்கெல்லாம் ஒரு பதிவ போட்டுகிட்டு. சீ சீன்னு போய்ட்டே இருப்பியா.

    ReplyDelete
  47. :((

    எனது கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.

    ReplyDelete
  48. வால் பையன் "ஆமாங்க பக்கா லோக்கல் தான்!, தெரியாம யாரும் முன்னாடி ஜீரோ போட்டு கூப்பிடாதிங்க, அப்புறம் எஸ்.டி.டி சார்ஜ் ஆகிரும்"!
    எப்பிடிண்ணே இந்த நேரத்திலேயும்.

    ReplyDelete
    Replies
    1. அதுவா வருது, என் வாலோட நீளம் அப்படி, என்ன செய்ய பாஸ் :)

      Delete
  49. தல...
    டென்சன் ஆவாதீங்க.... All izz well சொல்லுங்க.

    ReplyDelete
  50. ஜாக்கி,

    உங்களின் வெளிப்படையான, எதார்த்தமான எழுத்துக்களுக்கு நான் உட்பட இன்னும் ஏராளமான நண்பர்கள் இருக்கும்போது இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்ல வேண்டுமா என்று தோன்றுகிறது. கவலையை விடுங்கள்.

    ஸ்ரீ....

    ReplyDelete
  51. Hi Nanbare,
    Dont pay attention to these distractions. Walk in your own way in your own style.

    ReplyDelete
  52. தல ஜாக்கி சார்,

    கூல்.
    இவிங்க எப்பவுமே இப்படித்தான்.

    "அதை விட பள்ளி படிப்பை முடிக்காதவன் என்று எள்ளி நகையாடி இருக்கின்றார்... அதனால் நான் லோக்கலாம்... "

    அடுத்தவர்களின் படிப்பை பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்பவர்கள்,
    கண்ணிருந்தும் குருடர்கள். படித்திருந்தாலும் மூடர்கள்.


    நீங்கள் உங்கள் எழுத்தை எப்பொழுதும் போல் தொடருங்கள். எங்களுக்கு உங்கள் எழுத்து பிடித்திருக்கிறது .

    நன்றி


    அன்புடன்

    ஆனந்த்
    பமாகோ,மாலி

    ReplyDelete
  53. இதற்கெல்லாம் அசர கூடாது .என்னோட பதிவில் என் தமிழை வந்து பாருங்க நானே காரி துப்பிருவேன் அந்த அளவு இருக்கும்.ஆனால் நல்ல நண்பர்கள் இருக்கும் போது ஒருத்தருக்காக நாம் ஏன் வருத்தப்படவேண்டும் .
    நான் புதிய பதிவர் தான் ஆனால் உங்கள் பதிவை நண்பர் சௌந்தர் மூலம் படிப்பேன் .நன்றாக இருக்கிறது .தொடர்ந்து எழுதுங்கள் .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  54. அவுஙக்ளுக்குத்தான் வேற வேலை இல்லே, அடுத்தவன் என்ன பண்றான்னு மூக்கை அடுத்த வீட்ல விடுறாங்கன்னா, நீங்க வேற. அவுங்களுக்கு அதான் வேலையே பாஸ், உங்களுக்குமா? ‘அவரவர் இடத்துல இருந்துகொண்டால் எல்லாம் சவுக்கியமே. கருடன் சொன்னது, அதில் அர்த்தம் உள்ளது’

    ReplyDelete
  55. வணக்கம்!

    நான் அடிக்கடி உங்கள் பதிவுகளை வாசிப்பதுண்டு அதிலும் குறிப்பாக பல திரைப்படங்களுக்கு நீங்கள் எழுதிய விமர்சனம் அருமை! அருமையான ரசிகனால்தான் அப்படி உணர்வுபூர்வமான விமர்சனத்தை எழுத முடியும். உங்களுக்குள் இருக்கும் எழுத்தாளனுக்கு இன்னும் தலைக்கனம் வரவில்லை, வந்திருந்தால் நீங்களும் இலக்கியவாதி என்று அடையாளப்படுத்திக் கொண்டிருப்பீர்கள்.

    ஆனால் இப்படி நீங்கள் எழுதும் பதிலடிப் பதிவுகளைப் படிக்கும் போதெல்லாம், இந்த வேலையற்ற வீணர்களோடு நீங்கள் முட்டி மோதிக்கொள்ளும் போதெல்லாம் எனக்கு கவலைதான் வருகிறது. ஒரு அருமையான ஆக்கபூர்வமான பதிவுக்கு நீங்கள் செலவழிக்க வேண்டிய நேரத்தை, சும்மா அர்த்தமற்ற வாதங்களுக்குச் செலவழிக்கிறீர்களே? நீங்கள் சொல்வதால் அவர்கள் திருந்தப்போகிறார்களா? இல்லை நீங்கள் சொல்லாமல்விட்டால் தான் உங்களுக்கு வாசகர்கள் குறையப் போகிறார்களா? வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளுக்காக இப்படி நேரத்தை வீணடிக்கலாமா?

    ஒருத்தன் நல்லவனா இருக்கிறது தான் முக்கியம்... நல்லவன் லோக்கலா இருந்தாலும் சரி, இன்டர்நாஷனலா இருந்தாலும் சரி! சங்கு சுட்டாலும் வெண்மை தரும்! இவர்களுக்கெல்லாம் விளக்கம் நீங்கள் சொல்லத்தேவையில்லை!

    நேரம் பொன்னானது - வீணாக்காதீர்கள்!

    அன்புடன்,
    என்.கே.அஷோக்பரன்

    பி.கு. அடல்ட் ஜோக் நீங்கள் போட்டது சரியா பிழையா என்பதை உங்கள் வலைப்பதிவின் விளக்க அட்டையே கூறிவிடுகிறது “(18+ வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும்,வாழ்க்கை பற்றிய புரிதல் உள்ளவர்களுக்கான இடம் இது)” - இதற்கு மேல் விளக்க என்ன இருக்கிறது, ஆனாலும் இப்போது பல சிறுவர்களும் உங்கள் தளத்தை வாசிக்கிறார்கள், அவர்களுக்காக..... - அது உங்கள் முடிவு!

    ReplyDelete
  56. காய்ச்ச மரம் தான் கல்லடி படும் அண்ணா! -
    Be cool

    ReplyDelete
  57. பத்தாம் வகுப்பில் 441/500 எடுத்த நானே பக்கா லோக்கல்.பின்ன இவ்வளவு குறைவாக மார்க் எடுத்ததினால் என் ஆசிரியர்கள் என்னிடம் அதன்பின்னர் பேசவில்லை.(பள்ளித்தேர்வுகளில் 470/500 க்குக் குறைவாக வாங்கியது இல்லை,
    அரசுப்பள்ளி...பக்கா village... அதெல்லாம் பெரிய கதை.நீங்கள் சினிமாவாக எடுக்கலாம்).
    லோக்கல் என்பது மனிதாபிமானம் உள்ளவர்கள்.
    சில குத்துவிளக்குகள் சொல்வதைக் குத்திக்கிழிக்கவேண்டாம்.Then our மனிதாபிமானம் என்னவாகும்.(மனதில் பட்டதை எழுதுவதே என் விருப்பம்)

    ReplyDelete
  58. //வால் பையன் "ஆமாங்க பக்கா லோக்கல் தான்!, தெரியாம யாரும் முன்னாடி ஜீரோ போட்டு கூப்பிடாதிங்க, அப்புறம் எஸ்.டி.டி சார்ஜ் ஆகிரும்"!
    எப்பிடிண்ணே இந்த நேரத்திலேயும். //


    நண்பேண்டான்னு சொல்ல தொண்டை வரைக்கும் வருது, வயது கருதி அடக்கி வாசிக்கீறேன், நண்பன் துன்பத்தில் இருக்கும் போது குஜால் பண்ணனும் இப்படி தான்!

    ReplyDelete
  59. ஜாக்கி அண்ணே,

    உங்களைப் போன்று வெளிப்படையாக எழுத அனைவராலும் முடியாது. அது தான் உங்கள் ப்ளஸ் பாயிண்ட்.

    தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  60. We are with you Jakie Anna..
    இந்த களேபரத்துல நாளைக்கு வர வேண்டிய சான்ட்விச் ச மறந்துடாதீங்க...

    ReplyDelete
  61. ஐயோ ஜாக்கி, இது ரொம்ப "சப்ப " மேட்டரு. இதுக்காக டென்சன் ஆவானேன்.
    .இதுக்கெல்லாம் காரணம் உனக்கு வரும் வாசக கூட்டம், ஒட்டு . அவ்வளவுதான்.
    தனக்கு இல்லாத குறைய வேறு எப்படி காட்டிகிறதாம்.
    சில ஜென்மங்களுக்கு அரிச்கிகிட்டே இருக்கும்.
    இங்கு எல்லாமே லோக்கல் தான். அதான் ஒனக்கும் தெரியுமே,விடுப்பா

    ReplyDelete
  62. கூல்ல்.... ஜாக்கி கூல்...

    ReplyDelete
  63. இதற்கெல்லாம் கவலைப்படாதீர்கள்.

    ReplyDelete
  64. உங்கள் பதிவுகளுக்கு நான் ரசிகன். உங்கள் சினிமா விமர்சனங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். எழுத்துப் பிழைகள் போகப் போக சரியாகிவிடும், அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. நீங்கள் இவர்களைப் போன்றவர்களை கண்டுகொள்ளாமல் உங்கள் பணிகளைத் தொடருங்கள். உங்கள் பக்கத்தில் நாங்கள் எத்தனை பேர் இருக்கிறோம் என்று பாருங்கள்!. (நான் ஒரு அண்ணா நகர் வாசி என்பது எந்த விதத்திலும் உங்கள் எழுத்துக்களை ரசிக்க தடையாக இல்லை, இதுவரை. இருக்கப் போவதுமில்லை, என்றும்.வசிக்கும் இடம் ஒரு அடயாளத்துக்குத்தானே?)

    ReplyDelete
  65. HI Jackie,

    Ennai pondru ethanaio mukam theriyatha nanbargal ungal valiboovin vasakarkal...Sandaikal vendam.. unkal eluthai mattum thodarungal.. unkal vimarsan paarthu partha nalla padankal niraiya.. unkalidam athai mattumey ethir parkindrom....Valipoo matumey ulagam illai nanbarey...

    Arul
    Karur...

    ReplyDelete
  66. dear jockey

    let the **** bark

    a lot of people know about your character

    keep writing boss cool

    balu vellore

    ReplyDelete
  67. என்மேல ஒரு 20 ரேப் கேஸ் இருக்குது...
    இரண்டு வழிப்பறி,
    4டிரெயின் ராப்பரி,
    12பி பஸ்ல எட்டு பிக்பாக்கெட் கேஸ் இருக்கு அதனால ஜாக்கிரதையாதான் இருக்கனும்.//

    unmaiyaa sir??

    unmaiya eluthina sila per ipadithaan solvaanga kandukaatheenga....

    pootruvor potratum thootruvor thootratum ... naama namma velaiya parppom..

    ReplyDelete
  68. விட்றா..விட்றா.. சூணா.. பாணா.. சினிமாககரங்க லிஸ்டுல எனனையுதான் சேர்த்துருக்காங்க.. இதுக்கெல்லாம் கவலை பட்டுட்டு.. ஒரு பதிவு.. நமக்கெல்லாம் வேலையிருக்கு ஜாக்கி..:)

    ReplyDelete
  69. உங்களோட எல்லாப் பதிவையும் படிக்குறவன். நீங்க உங்களோட எதிர்ப்ப பதிவு செய்தது சரியான ஒன்றுதான். ஆனா இந்த மாதிரி ஆளுங்க திருந்தாத ஜன்மங்கள். அதனால அத இனிமே கண்டுகாம விட்டுடுங்க.

    ReplyDelete
  70. ஒரு ஊரில் மூன்று பூனைகள் இருந்ததாம். ஒன்று ராஜா வீட்டில் வளர்ந்தது. ஒன்று அமைச்சர் வீட்டில் வளர்ந்தது. ஒன்று விவசாயி வீட்டில் வளர்ந்தது. பக்கத்துநாட்டு அரசன் தொடுத்த போரில் இந்த பூனைகளை ஊரிலேயே விட்டுவிட்டு ஊர்க்காரர்கள் அனைவரும் ஊரை காலி செய்துவிட்டு மறைந்துவிட்டனர். இந்த மூன்று பூனைகளும் சந்தித்து, காட்டை கடந்து பக்கத்து ஊருக்கு செல்லலாம் என்று முடிவெடுத்தன.

    ராஜா வீட்டு பூனையும் அமைச்சர் வீட்டு பூனையும் தங்களை அவர்கள் எப்படி பார்த்துக்கொண்டார்கள் என பெருமை பேசியே விவசாயி வீட்டு பூனை வளர்ந்த விதத்தை கேலி செய்தன.

    ஆனால் காட்டுக்கு கிளம்பிய சிறிது நேரத்திலேயே, தங்கத்தட்டில் சாப்பிட்டு பழகிய, ராஜா வீட்டு பூனை தன்னால் இதற்கு மேல் நடக்க முடியாது என்று மயங்கி விழுந்தது. காட்டில் நடந்த பாதி தூரத்தில், வெள்ளித்தட்டில் சாப்பிட்டு பழகிய, அமைச்சர் வீட்டு பூனை தன்னாலும் இதற்கு மேல் நடக்க முடியாது என்று மயங்கி விழுந்தது.

    நிலத்தில் கிடைத்ததை சாப்பிட்டு பழகிய விவசாயி வீட்டு பூனை மட்டுமே முழு காட்டையும் கடந்து பக்கத்து ஊரில் மற்றொரு விவசாயியிடம் சென்று அடைந்ததாம்.

    எங்கே வளர்ந்தோம் என்பது முக்கியமில்லை. என்ன கற்றுக் கொண்டோம் என்பதே முக்கியம்.

    உங்கள் எழுத்து உங்கள் சிந்தனைகளை பிரதிபலிக்கிறது. உங்கள் சிந்தனை உங்கள் அனுபவங்களை பிரதிபலிக்கிறது. உங்களை ரசிப்பவர்கள் (நான் உட்பட) உங்கள் அனுபவங்களை ரசிப்பவர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

    நன்றி,
    கதிர்கா
    (http://kathirka.blogspot.com)

    ReplyDelete
  71. வணக்கம் நண்பா
    இதற்கு எல்லாம் பதிவு தேவையில்லைத் தான் ஆனாலும் சிலருக்கும் உங்களுடைய அறச்சீற்றத்தை வெளிக்காட்ட இந்தப் பதிவு அவசியம்.
    கானா சொன்னது சரி தான் நாம் எல்லாம் பதிவே போடலாம் ஒரு சிலருக்கு மற்றவனை தூற்றியே பழகிவிட்டது இதெல்லாம் தமிழனின் குணங்கள் என நினைத்த்துவிட்டுப்போய்விட வேண்டியதுதான்.

    உங்கள் எழுத்து பலரைக் கவருகின்ரது சந்தோஷப்படுங்கள்.

    ReplyDelete
  72. அண்ணே இவங்களுக்கு பதில் சொல்லி உங்க டைம் வேஸ்ட் பண்ணாதிங்க..

    ReplyDelete
  73. யோ ஜாக்கி... வர வர வயசான கலைஞர் மாதிரி புலம்ப ஆரம்பிச்சிட்டீரா? அவரே ஆரம்ப காலத்தில் எல்லாம் பட்டவர் தான்... நம்ம சட்டைல கறை பட்டுட்டா அதை துவைச்சு போட்டுக்கணும்... அதை விட்டுட்டு ஐயோ சட்டையை அழுக்காக்கிட்டானேன்னு ஒரு பதிவு போட்டா நம்மளை நாமே அசிங்கப்படுத்திக்கிறது மாதிரி... இந்த மாதிரி மொக்க பசங்களுக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்குறதுக்கு வேற எதையாவது யோசிச்சு ஒரு நல்ல பதிவு போடுறதை விட்டுட்டு உக்காந்து இப்படி ஒரு பதிவு போட்டு நேரத்தை வீண் ஆக்கிட்டீங்களேப்பு...

    ReplyDelete
  74. என்னா தலைவா டென்ஷன் ஆயிட்டு " வெட்டிபயலுக வீணா போனவங்க பத்தி பதிவு போட்டுகிட்டு , நம்மகுல்லாம் ஆயிரம் சோலி கிடக்கு , அத பாக்குறத விட்டுபுட்டு , இத போய் விடுங்க தலிவா " கூல் தலைவா

    --

    ReplyDelete
  75. படிக்கிற பாரட்டுகிர இத்தனை நண்பர்களைப் பாருங்கள்.

    உங்கள் கோபம் குறைந்துவிடும்.

    வாழ்த்துகள் ஜாக்கி..

    ReplyDelete
  76. பள்ளியறிவைவிட பட்டறிவு மிக உயர்ந்தது.. அது ஒருவனுக்கு வாழக் கற்றுக் கொடுக்கிறது..தன்னை மேம்படுத்தும் வாய்ப்புகளை காணும் அறிவைக் கொடுக்கிறது..

    மெய் சிலிர்த்தேன்..

    ReplyDelete
  77. விடுங்க, விடுங்க ஜாக்கி,
    இதுக்கு மேலயும் யாராவது இப்புடி பேசினா, பின் லேடனுக்கு போனை போட்ருவோம், டென்ஷனை விடுங்க......

    ReplyDelete
  78. ஜாக்கி,

    சில வருடங்களுக்கு முன் தமிழ் வலைப்பதிவு
    பற்றி பேசும்போது,இது ஒரு மோசமான உலகம்
    என நான் கூறியது உங்களுக்கு மற‌ந்திருக்கலாம்.

    நிறைய பதிவர்களுக்கு "பின்னூட்ட வியாதி" தான்
    பரவியுள்ளது.பதிவு மூலம் 'தொலைபேசியால்"
    அரட்டை ஆரம்பிக்கும் போதுதான் பிரச்சினை
    ஆரம்பமாகிறது.

    ஆதலால் தைரியமாக உங்கள் பணியை
    செய்யவும்.

    ReplyDelete
  79. நான் 204 / 500 ஆன ஆல் பாஸ்..
    எப்புடி.......

    ReplyDelete
  80. இதெல்லாம் ஒரு மேட்டரா-ன்னு நினைக்கச்சே.... இதுவும் மேட்டர்தான் - ன்னு நிருபித்துவிட்டீர்கள் ! ! உங்களுக்கு வந்த பின்னோட்டமே பறைசாற்றுகிறது.. வாழ்த்துகள் ! ! ஜாக்கி ! ! ! :)

    ReplyDelete
  81. Be Cool Jakee... No need to provide this much explanation...

    ReplyDelete
  82. ஜாக்கி அண்ணா,
    முதுகுக்குப் பின்னால் பேசுபவன் முட்டாள்களின் பிரதிநிதி; அதைக் காது கொடுத்துக் கேட்பவன் கோமாளி; அதற்குப் பதில் சொல்லி நிற்பவன் பைத்தியம்!!! உங்கள மாரி ஆளுங்க இந்த மாரி லூசுங்களுக்கு பதில் சொல்லனும்னு அவசியமே இல்ல..

    ReplyDelete
  83. விடுங்கா..
    நான் லோக்கல‌ திட்டுரேன் *.*~!#$#^^&^&**!%%&*.*...
    இது அவர்களுக்கு புரியும்...

    ReplyDelete
  84. விடுங்க சார், ரஜினி மாதிரி இவங்களை எல்லாம் ஒரு பொருட்டாவே மதிக்காதீங்க,எல்லாம் வயித்தெரிச்சல்தான்.வேற என்ன?

    ReplyDelete
  85. விடுங்கண்ணே.! இதுக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு.!! உங்க எழுத்தைப் புடிச்ச,புரிஞ்ச எங்களுக்கு தெரியாதா.?


    /**யோக்கியன் என்று சொல்லிவிட்டு முதுகில் குத்துவதைவிட என்னை ஐயோக்கியன் என்று சொல்லி நெஞ்சில் குத்துவது எனக்கு பிடித்தமானது..**/
    /**என்மேல ஒரு 20 ரேப் கேஸ் இருக்குது...
    இரண்டு வழிப்பறி,
    4டிரெயின் ராப்பரி,
    12பி பஸ்ல எட்டு பிக்பாக்கெட் கேஸ் இருக்கு அதனால ஜாக்கிரதையாதான் இருக்கனும்**/

    இது அல்டிமேட்டு.!


    என்றும் அன்புடன்,
    பிரகாஷ் சேதுராமன்

    ReplyDelete
  86. காலம் நாளை மாறலாம்
    காயமெல்லாம் ஆறலாம்
    சோகம் என்ன தோழனே!
    சூழ்ச்சி வெல்வாய் வீரனே!

    ReplyDelete
  87. //முதுகுக்குப் பின்னால் பேசுபவன் முட்டாள்களின் பிரதிநிதி; அதைக் காது கொடுத்துக் கேட்பவன் கோமாளி; அதற்குப் பதில் சொல்லி நிற்பவன் பைத்தியம்!!! உங்கள மாரி ஆளுங்க இந்த மாரி லூசுங்களுக்கு பதில் சொல்லனும்னு அவசியமே இல்ல..//

    கோமாளி, லூசு, பைத்தியம் மூணும் வேற வேறயா தலைவா!
    இந்த மரமண்டைக்கு ஒன்னுமே புரிய மாட்டிங்குது!

    ReplyDelete
  88. உங்கள் எழுத்து உங்கள் சிந்தனைகளை பிரதிபலிக்கிறது. உங்கள் சிந்தனை உங்கள் அனுபவங்களை பிரதிபலிக்கிறது. உங்களை ரசிப்பவர்கள் (நான் உட்பட) உங்கள் அனுபவங்களை ரசிப்பவர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.( copyright from kathirka)
    i totaly agree with this wards.
    cotinute to write your own way.
    Lingam.
    stil i dont know write in tamil.

    ReplyDelete
  89. அவங்களுக்கு
    உங்கமேல
    எவ்ளோ பொறாமை இருக்குனு
    அளவு காட்டறாங்க

    நாம ஜாக்கி மாதிரி
    பிரபலம் ஆகமுடியலேன்னு
    வைத்தெரிச்சல்
    அவ்ளோதான்

    நீங்க இன்னும் அவங்க பொறாமை படும் படி மேலும் வளருங்கள்
    சினிமா கிசு கிசு போல்
    பதிவு கிசு கிசு படிச்சு ரசிங்க
    மனம் பதறாதீங்க
    வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  90. அவங்களுக்கு
    உங்கமேல
    எவ்ளோ பொறாமை இருக்குனு
    அளவு காட்டறாங்க

    நாம ஜாக்கி மாதிரி
    பிரபலம் ஆகமுடியலேன்னு
    வைத்தெரிச்சல்
    அவ்ளோதான்

    நீங்க இன்னும் அவங்க பொறாமை படும் படி மேலும் வளருங்கள்
    சினிமா கிசு கிசு போல்
    பதிவு கிசு கிசு படிச்சு ரசிங்க
    மனம் பதறாதீங்க
    வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  91. ச்சே இத்தன லோக்கலா நீங்க? தெரிஞ்சிருந்தா பின்னூட்டம் போட்டிருக்கவே மாட்டேன்.ஓட்டும் போட்டு இருக்க மாட்டேன். நான் இது வரை போட்ட 187 ஓட்டையும் என் பதிவுக்கு வந்து திருப்பி போட்டுடுங்க. இல்லாட்டி ஆள் வச்சு அடிப்பேன். ஆமா சொல்லிட்டேன்.

    (யோவ் பதிலுக்கு நீ கைலிய மடிச்சு கட்டிகிட்டு நெஞ்சுல உதைப்பேன்னு தெரியும்... அக்ரிமெண்ட் நெஞ்சுல மட்டும் தான் மிதிக்கனும் ஆமா)

    ReplyDelete
  92. Paaka local sekar ....,
    jackieseakar writing la killer ma....,

    Veedu thala antha poonu "call center"
    work pannalam so, COOL.

    ReplyDelete
  93. விடுங்கண்ணே இதுக்கெல்லாம் போய் டென்ஷன் ஆகிட்டு? நீங்க உங்க பாட்டுக்கு எழுதிட்டிருங்க, நாங்க பாட்டுக்கு படிச்சிட்டிருக்கோம் :)

    ReplyDelete
  94. 1. சங்கவி
    2. மணிஜீ......
    3. இளங்கோ
    4. கே.ஆர்.பி.செந்தில்
    5. தமிழ் அமுதன்
    6. நந்தா ஆண்டாள்மகன்
    7. கோவி.கண்ணன்
    8. VJR
    9. வால்பையன்
    10. அது சரி(18185106603874041862)
    11. நட்புடன் ஜமால்
    12. ஜோதிஜி
    13. ராம்ஜி_யாஹூ
    14. பின்னோக்கி
    15. ரஹீம் கஸாலி
    16. Vijay
    17. Carthickeyan
    18. SENTHIL
    19. Dearbalaji
    20. KVR
    21. உண்மைத் தமிழன்(15270788164745573644)
    22. யோகன் பாரிஸ்(Johan-Paris)
    23. சே.குமார்
    24. பரிசல்காரன்
    25. Samy
    26. கானா பிரபா
    27. இளைய கவி
    28. சௌந்தர்
    29. BADRINATH
    30. வயாமா
    31. கும்மி
    32. தமிழ் உதயன்
    33. ரஹீம் கஸாலி
    34. குசும்பன்
    35. மைந்தன் சிவா
    36. Padaipali
    37. V.Radhakrishnan
    38. மங்களூர் சிவா
    39. குத்தாலத்தான்
    40. VISA
    41. |கீதப்ப்ரியன்|Geethappriyan|
    42. Siva
    43. சென்ஷி
    44. aru(su)vai-raj
    45. ஸ்ரீ....
    46. Dr. சாரதி
    47. என்.கே.அஷோக்பரன்
    48. ஆண்மை குறையேல்
    49. .... செந்தில்
    50. ராவணன்
    51. ச.செந்தில்வேலன் / S.Senthilvelan
    52. கிருஷ்குமார்
    53. கக்கு – மாணிக்கம்
    54. Starjan ( ஸ்டார்ஜன் )
    55. suthanthira-ilavasa-menporul.com
    56. azhagan
    57. Karur King
    58. Vivek Baktha
    59. baba
    60. இம்சைஅரசன்
    61. பாபு..
    62. ILA(@)இளா
    63. DHANS
    64. Cable Sankar
    65. ஜீவன்பென்னி
    66. வந்தியத்தேவன்
    67. லதாமகன்
    68. முரளிகுமார் பத்மநாபன்
    69. ஜீ...
    70. ♥ RomeO
    71. ♥ வித்தியாசமான கடவுள்
    72. bala bharathi
    73. நிகழ்காலத்தில்...
    74. வெட்டிப்பேச்சு
    75. நாஞ்சில் மனோ
    76. எண்ணத்துப்பூச்சி
    77. Mullai Shares
    78. Ponchandar
    79. வழிப்போக்கன் - யோகேஷ்
    80. Thiruppathi
    81. Samuthra
    82. க.மு.சுரேஷ்
    83. இரவு வானம்
    84. பிரகாஷ் சேதுராமன்
    85. S Maharajan
    86. Sa
    87. KATHIR = RAY
    88. அபி அப்பா
    89. சிவகுமார்
    90. Subankan
    உங்கள் அத்தனை பேரின் அன்புக்கும் நான் தலைவணங்குகின்றேன்...
    போனில் கால் செய்தும் எஸ் எம் எஸ் அனுப்பியும் பேசிய சிங்கபூரில் இருக்கும் திருச்சி நண்பர் ராஜா,ரிஷி,தமிழ்செல்வன்,மாம்பலத்தில் இருக்கு 65 வயது நண்பர்,யூஎஸ் அமரபாரதி, அமிரகத்தில் இருந்து பேசிய நண்பர்கள்.. , இரண்டு பேர் பெயர் மறந்து விட்டது மன்னிக்க.. தமிழ்நாட்டு நண்பர்கள்,பேஸ்புக் நண்பர்கள்,டுவிட்டரில் முக்கியத்துவம் கொடுத்த லக்கி என அத்தனை பேருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்....

    இதே சென்னைக்கு வந்த போது எனக்கு யாரும் தெரியாது... ஆனால் இப்போது உலகம் முழுக்க நண்பர்கள் இருக்கின்றார்கள்.. அதற்கு வாய்ப்பு கொடுத்த பிளாக்கருக்கும் திரட்டிகளுக்கும் என் நன்றிகள்...இந்த நேரத்தில் என் அம்மாவுக்கு அன்பு முத்தங்கள்,..

    பின்னுட்டத்தில் என்னையும், என் மனைவியையும் சிரிக்க வைத்த வாலுக்கு என் நன்றிகள்.... மிக்க நன்றி நண்பர்களே...

    ReplyDelete
  95. ரொம்ப வருத்தமா இருக்குங்க.. உங்க வலி புரிகிறது.. பேசிய வார்த்தைக்கு அவங்க ராஜா.. பேசாத வார்த்தைக்கு நாம ராஜா ன்னு போங்க.. எத்தனையோ வாழ்க்கையில் கஷ்டம் அனுபவச்சி இருக்கீங்க.. எல்லாமே உங்களுக்கு நல்ல அனுபவத்தை மட்டுமே தந்திருக்கும்.. அதை போன்று இதுவும் உங்களுக்கு நல்லவிதமான அனுபவத்தையே தரும். வாழ்க வளமுடன் !!

    ReplyDelete
  96. உங்கள் பதிவில் உள்ள ஆதங்கம் புரிகிறது நண்பரே ..அனுபவ அறிவுக்கு முன் எந்த பல்கலைக்கழகமும் தரும் பட்டம் பெரிதல்ல..உங்கள் பதிவுகள் எழுத்துலகில் மேலும் நல்ல மாற்றம் கொண்டு வர உதவும் என நம்புகிறேன்

    ReplyDelete
  97. Wow... Jackie.. see how many of us supporting you...

    I should appreciate வால் பையன் for his comments..

    Please consider என்.கே.அஷோக்பரன் request.

    ReplyDelete
  98. அண்ணே பொதுவா உங்கப் பதிவுகளைப் படிப்பதில்லை. [நான் சின்னப்பையன்] ஆனால் இந்தப் பதிவின் தலைப்பு என்னை உள் இழுத்து எனக்குள் ஒரு மாறுபட்ட கோணத்தில் ஒரு அபிமானத்தை தருகிறது. நல்லதும் கேட்டதும் பார்க்கிறவன் கண்ணப் பொறுத்துதான் என்பது எவ்வளவு உண்மை. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  99. Jackie, you are a GEM in Tamil blog world.
    இந்த பதிவை படித்ததும் எங்க வாத்தியார் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது.
    திட்ட திட்ட திண்டுக்கல்லு
    வைய்ய வைய்ய வைரக்கல்லு

    ReplyDelete
  100. காய்த்த மரமே கல்லடி படும்,பொறாமைக்காரர்களின் எதிர்ப்பை மீறி நீங்கள் மேலும் மேலும் புகழ் பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  101. Jackie, Guru padathula oru dialague varum. "Eppo unna pathu pollappu pesaraangalo, appovey neenga nallathu panna aarambichtinga nu artham". So neenga nalla panna naalu peru poramai paduvaanga. Avangaloda iyalamai ya namba apdiyeh free ya vitranum...

    You are like a mentor to me. I'm a sincere fan of you. I follow your blog. Ungaloda assertiveness enaku romba pidikum. Sabai naagarigama epdi solrathu nu theriala. But yaarayum hurt panna ma pesrathu is your strength.

    So please keep going...

    ReplyDelete
  102. "நான் ஓர் எழுத்தாளன் இல்லை.
    எழுத்தாளன் அல்லாதவர்கள் எழுத கூடாது என்பதும், எழுத்தாளன் மட்டுமே எழுதவேண்டும் என்பதும் இல்லை."

    எழுத எனக்கு விருப்பமில்லை.!
    ஒவ்வொரு நிகழ்வுகளிலும், எனக்குள் எழுந்த உணர்வுகளை வெளிப்படுத்திஇருப்பதை படிக்கும் நீங்கள்,
    ...அதிலிருந்து நான் அவ்வளவு விலகி இருந்திருக்கிறேன். அல்லது, ஒன்றி இருந்திருக்கிறேன் என்பதை உணர வேண்டும்.

    மேலே இருப்பவை நான் எழுதியது இல்லை.!

    "இளையராஜா" என்கிற வயோதிகன், அவனது புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிட்டவை.

    sorry for the Late. Move Forward..வாழ்த்துக்கள்.
    -சிவப்ரியன்-

    ReplyDelete
  103. ஜாக்கி, சில நாட்களாக ஊரில் இல்லை. பின்பு உடல் நிலை சரியில்லை. இன்றைக்கு தான் இந்த பதிவையே பார்க்கிறேன்.

    இந்த பதிவுக்கு 48 ஒட்டு 112 கமெண்டா... அடப்பாவி.. கொடுத்து வச்சவன் நீ...

    லூஸ்ல விடு.. வேலைய பாரு..

    ReplyDelete
  104. பட்ட மரத்து மேல யாரும் கல்லடிக்க மாட்டாங்க......
    நீங்க பழம் குடுக்குற மரம்....அதனாலதான் உங்கமேல கல்லெறிஞ்சி...
    ஏதாவது ஆதாயம் கிடைக்குமான்னு பாக்குறாங்க....
    விடுங்க....ரெண்டு சுட்ட பழத்தை எடுத்துக்கிட்டு போகட்டும்....
    நாங்க எப்பவும்போல சுடாத பழத்தையே சாப்புடுறோம்....

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner