தமிழகத்தில் கொலையாகும் அப்பாவி கணவன்,மனைவிகள்.


துள்ள துடிக்க ஒரு கொலை.........
  அந்தக்கொலையை என்னால் மறக்கவே முடியாது... அந்தக்கொலை பெங்களூருவில் நடந்தது... திருமணமான தன் புது மனைவியை இரும்புத்தடியால் அடித்து  கட்டிய கணவனே கொன்றான்... அந்த பெண் ஒரு அப்பாவி....

இந்த பொறம் போக்கு கல்யாணத்துக்கு முன்ன ஊர் மேஞ்சி இருக்கு... அதுல ஒரு  பொண்ணோட  பழக்கம்.... ஈருயிர் ஓர் உடலா இருந்து இருக்காங்க... வீட்டுல போய் இந்த எருமை சொல்லி இருக்கு... கட்டினா அந்த பெண்ணை எனக்கு கட்டி வைங்கன்னு... வீட்டுல ஒத்துக்லை... அழகான பெண்ணை பார்த்து  கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க...

தன் முன்னால் காதலியை பிரிய முடியாம தவிச்சான்.... ஆபிஸ்ல இருந்து  மதியம் வீட்டுக்கு போய்  தன்  அப்பாவி பொணடாட்டியை இரும்பு தடியலை  அடிச்சி அவளை கொலை பண்ணிட்டு   நகையை எடுத்துக்கிட்டு  கிளம்பிட்டான்... நகைக்காக என் பொண்டாட்டியை கொண்ணுட்டாங்கன்னு தரையில் விழுந்து பொரண்டு நாடகமாடினான்...

போலிஸ் முதல்ல மண்டையை போட்டு ஒழப்பிக்கிட்டு இருந்துச்சி... துப்பு கிடைக்காம திணறிக்கிட்டு இருந்திச்சி.... புருசனை  பார்த்ததா பாவமா வேற  இருக்கான்....... பொண்டாட்டி பேரை சொல்லி  மூக்கு சளியை சிந்திக்கிட்டு ஒரு வாரமா அழுது புலம்பிக்கிட்டே இருக்கான் என்ன செய்யறதுன்னு மண்டையை போட்டு கொழப்பிக்கிச்சி...

ஒரு கட்டத்துல கணவன் மேல் சந்தேக பார்வையை வீசிச்சி....கொஞ்சம் ஓவர் ஆக்டிங் போல இருக்கேன்னு கொலை நடந்த  அன்ணைக்கு எங்கடா இருந்தன்னு   கேட்டா ?ஆபிஸ்ல இருந்தேன்  சொன்னான். ஆபிஸ்ல போன் பண்ணி கேட்ட ஆமாம்  போலிஸ் அவன் ஆபிஸ்ல தான் இருந்தான்னு சொல்லறாங்க...

போலிசுக்கு ஒரே கன்பீசன்.


கொலையாவறதுக்கு முன்ன அந்த  பொண்ணு அவுங்க அம்மா கிட்ட பேசிக்கிட்டு இருந்து இருக்கு.... இரும்மா... யாரோ வீட்டுக்கதவை தட்டறாங்க அப்புறம் பேசலாம்ன்னு  சொல்லி கட் பண்ணி இருக்கு.... அதுதான் அந்த பெண்ணோட பெற்றோர் கேட்ட அந்த பெண்ணின் கடைசி குரல்....

கதவை திறந்த புருசன்... ஒரு வேளை வேலை செய்யும் போது மூட் அதிகமாகி மேட்டர்  பண்ண சீக்கிரம் வந்துட்டான் போல இருக்குன்னு.. சந்தோஷமா  சமையல் அறைக்கு போய் இருக்கு அந்த அப்பாவி  பொண்ணு...சமையல் அறையில் இருக்கற மொளகாய்  தூளை எடுத்து அந்த பெண் கண்ணுல   தூவி விட்டு விட்டு, அவ துடிச்சிக்கிட்டு இருக்கும் போதே அவ தலையில இருப்பு கம்யில அடிச்சி சாவடிக்கறான் அந்த பொறறம் போக்கு....  

அந்த பெண்ணோட நிலைமையில் நினைச்சி பாருங்க... அவ என்ன பாவம் செஞ்சா? இதுக்குதான் அந்த பெண்ணை அவ  பெற்றோர் சீராட்டி பாலுட்டி  வளர்த்தாங்களா?  கொடுமையான விஷயம் ஏன் சாகுறோம்ன்னு தெரியாம அந்த அப்பாவி பெண் உயிரை  விட்டா பாருங்க.. அது போல கொடுமை உலகத்துல இருக்கவே முடியாது... 


ஆசையான கணவள் இரும்பு ராடலை அடிக்கிறான் வெறிகொண்ட மட்டும்ன்னா... அவ சாகும் போது என்ன நினைச்சி இருப்பா...? அட ஒரு   கார் விபத்து நடக்குதுன்னா.. கார் மேல  லாரி மோதிடுச்சி அதனால சாகறோம்ன்னு  சாகும் போது காரணம் தெரியும்... ... அன்பான புருசன் இப்படி அடிப்பான்னு அவ  நினைச்சி பார்த்து இருப்பாளா?
கண்ணுல விழுந்த மிளகாய் தூளுக்கு துடிப்பதா? மண்டையில் வெறியோடு விழுந்த இருப்பு ராடு அடிக்கு துடிப்பதா...? அவள் இறந்து விட்டாள்..

ஒரு வார தாடியோடு புருசன் சுத்திக்கிட்டு இருந்தான்... எதுக்கும் ஆபிஸ்ல போய் இந்த எருமையை விசாரிப்போம்னு போய் விசாரிச்சா... கொலை நடந்த அன்னைக்கு வீடியோ புட்டேஜ்ஜை பார்த்தா  அந்த பொறம் போக்கு கொலை நடந்த ஒரு சில நிமிடத்துக்கு முன்ன காரில் ஆபிஸ்ல இருந்து  வெளியே போற காட்சியை பார்த்து இருக்காங்க.. அவன் வெளியே போய்ட்டு கொலை செஞ்சிட்டு திரும்ப  ஆபிஸ்சுக்கு வந்து இருக்கான் அந்த படுபாவி...... அப்பாவி வேஷம் போட்டு கதறி துடிச்சி அந்த நாய் மேல யாருக்கும் சந்தேகம் வரலை...

போலிஸ் இந்த காட்சியை பார்த்துட்டு  மென்னி மேல காலை  வச்சி அழுத்த.... உண்மையை எல்லாம் ஒத்துக்கிட்டான்... 

இந்த ஒரு வாரத்துல தன் மாப்பிளை  யோக்கியன் நினைச்சி அந்த  பொறம் போக்குக்கு ஆறுதல்  சொன்ன அந்த பெண்ணோட அப்பனை கொஞ்சம் நினைச்சி பாருங்க.. அந்த ஆளுக்கு எப்படி இருந்து இருக்கும்...???   இறந்து போன அந்த பொண்ணு சென்னையில வேளச்சேரின்னு நினைக்கிறேன்...அந்த கொலையை என்னால் மறக்கவே முடியவில்லை.. ஒரு பொறம் போக்கின் கூயநலத்துக்காக.... ஒரு அப்பாவி பெண் பலியானாள்..

ஓத்தா வீட்டுல உன் காதலுக்கு ஒத்துகலையை... அங்க போராடி இருக்கனும்... இல்லை கல்யாணம் செஞ்சிக்கிட்டு இருக்க கூடாது.. கல்யாணம் செஞ்சி ஒரு அப்பாவி பெண்ணை துள்ள துடிக்க கொண்ணு இருக்கானே... அவன் நல்லகதிக்கு போவானா-?  இத்தனைக்கு  அது படிச்ச பொறம் போக்கு....

 அடுத்து ஒரு கொலை மூனாருக்கு தேனிலவுக்கு சென்ற தன் கணவனை முன்னாள் ஆட்டோக்கார காதலனோடு   சேர்ந்து அப்பாவி கணவனை கொலை  செய்து நாடகமாடி கம்பி எண்ணிய பெண்ணை தமிழ் சமுகம் அவ்வளவு எளிதில் மறந்து இருக்காது என்று நம்புகின்றேன்.

வீட்டுல காதலிக்கறாங்க.... சாதி பிரச்சனையில் கல்யாணத்துக்கு ஒத்தக்க மறுக்கறாங்க... மீறி கல்யாணம் செஞ்சி  வச்சி பெற்றோர் தன்  பாரம் குறைந்த்தாக  கை  கழுவி விடும் நிலையில்...இரண்டு மூன்று  மாதங்கள் அல்லது ஒரு வருடத்தில் காதலனை மறக்க முடியாமல்  அவனோடு சேர்ந்து  கட்டிய கணவளை கொலை செய்யும் பெண்கள் தமிழகத்தில் ஏராளமாக சமீபகாலமாக பெருகி வருகின்றார்கள்...

இதில் கொடுமை.. இரண்டு மூன்று பிள்ளைகள் ஆனா பிறகும் தன் பழைய காதலை மறக்க முடியாமல் அவளோடு  தொடர்பு ஏற்ப்படுத்திக்கொண்டு அப்பாவி கணவன்களை அம்பி கல்லு போட்டோ  அல்லது பாலில் விஷம் கலந்தோ  அல்லது சரக்கு அடிக்க வைத்து மட்டையாக்கி, கொன்று விட்டு கம்பி  எண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள்...

காதலைனை கை   பிடிக்க முடியவில்லை என்றால் வாழவெட்டியாக இருங்கள்... திருமணம் செய்துக்கொள்ளமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்து அவனையே திருமணம் செய்து கொண்டு வாழுங்கள்... யார் வேண்டாம்ன்னு சொல்லறா?

காதலனோடு ஊர் சுற்றி அவனோடு படுத்து புணர்ந்து பிறகு  ஒன்னும் தெரியாத அப்பாவி  போல  பெற்றோர் தேர்ந்து எடுக்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்துக்கொண்டு கற்புநெறி தவறாது வாழ்ந்து கொண்டு இருக்கும் கற்புக்கரசிகளும் ,கற்புக்கரசன்களையும் நாம் அன்றாட வாழ்வில் நிறைய பேரை பார்த்து இருக்கின்றோம்... அட இது எவ்வளவோ பராவாயில்லை... 

கணவனின் உயிராவது மிஞ்சுகின்றது...ஆனால் நிறைய பேர் திரும்ப பழைய காதலனோடு தொடர்பு  கொண்டு உறவு வைத்துக்கொண்டு பிள்ளை குடும்பம் என்று ஆன பிறகு கட்டிய மனைவிகள் கொலை செய்யும் வைபவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு  வருகின்றன.

அட யாருக்குதான் காதல் அனுபவம் இல்லை.... எல்லோருக்கும் இருக்கின்றது.. நிறைவேற காதல்களோடு தனக்கு கிடைத்த வாழக்கையை தேர்ந்து எடுத்து  கடைசி வரை உண்மையாக வாழ்ந்து விட்டு செல்லுபவர்கள் எவ்வளவோ பேர் இருக்கின்றார்கள். காதலித்தவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் உலகில் திருமணமே நடக்காது...95 பர்சென்ட் விழுக்காடு தம்பதியினருக்கு முதல் காதல் அனுபவம்   நிச்சயம் இருக்கும்.... அது தவறே அல்ல... ஆனால் கொலை ரொம்பவே ஓவர்.

கூலிப்படையை வைத்து கொலைசெய்யும் சம்பவங்கள் இன்னும் அதிகம்.. ஒரு இன்ஸ்பெக்டர் நடு ரோட்டில் வெட்டப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார் அதுக்கு ஒரு அமைச்சர் கார் கொடுத்து உதவிசெய்யவில்லை என்று பரபரப்பான செய்தியை படித்து இருப்பீர்கள்...அதில் சுவாரஸ்யம் என்னவென்றால்  கொலை  செய்ய சொன்ன போலிஸ்காரர் போலவே இவர் இருந்த காரணத்தால் கூலிப்படையினர்  தவறுதலாக அவரை வெட்டி வீழ்த்தினார்கள். தன் புருசனை கொலை  செய்ய  கூலிப்படையை அமைத்தது.... தாலி கட்டிய மனைவிதான்.

கணவன் சரியில்லை அதனால் தனக்கு கள்ளகாதலன் வைத்துக்கொண்டேன்... அவன் உயிரோடு இருப்பதற்கு இறந்து போவதே மேல் என்று அவனை கொன்றேன்.. அவனோடு வாழ்வது  நகரம்..... அந்த  கொடுமையை பெண்ணாக பிறந்தவர்கள் அனுபவிக்கவே கூடாது......என்று சொல்லி சில கொலைகள் நடக்கின்றன..... அதை கூட ஏற்றுக்கொள்ளலாம்.. குடித்து விட்டு அடிப்பது, படுக்கையில் மனைவியை திருப்தி படுத்த முடியாத காரணங்கள் ...அதனால் ஒரு புதுக்காதல்  ,அதனால்  கொலை.... இதை ஏற்றுக்கொள்ளலாம் என்றால் ஆதரிப்பது என்று  அர்த்தம் இல்லை... அந்த கொலைக்கு ஒரு காரணம் இருக்கின்றது....

ஒரு காதல் அவனோடு அதிகம் சுற்றி உடலுறவு வரை போய் விடுகின்றது வீட்டில்   கைகாட்டிய மாப்பிள்ளையை கல்யாணம் செய்துக்கொள்ள சொல்லுகின்றார்கள்.. கல்யாணம் செய்து கொள்ளுகின்றார்கள்.. பிள்ளை எல்லாம் பிறக்கின்றது... இருந்தும் பழைய காதலனோடு தொடர்பில் இருக்கின்றார்கள்.... கொலையெல்லாம் செய்யவில்லை... இரண்டு வண்டியை ஓட்டிக்கொண்டு  செல்லுகின்றார்கள்.. அது அவர்கள் திறமை.... அதிலேயும் உயிர் போகவில்லை... அது போல மாட்டிக்கொள்ளாமல் செல்லும் காதல்கள் நிறைய....

 சமீபத்தில்  இணையத்தில் ஒரு செக்ஸ் ஆடியோவை கேட்க நேர்ந்தது.

திருமணம் ஆகி பிள்ளை பெற்ற  பெண்மணி ...  தன் முன்னாள் காதலனுக்கு போன் செய்கின்றார்.... அந்த முன்னாள் காதலன்  அந்த  பேச்சை ரெக்காட் செய்து இருக்கின்றான்.... அந்த  பேச்சு  இணையத்தில் லீக்காகி இருக்கின்றது..

அந்த முன்னாள்  காதலி... முதலில் அவள் ஷாப்பிங் போனதையும்....அன்று இரவு தன் கணவனோடு டாகி ஸ்டைலில்உடலுறவு கொண்டதை பகிர்ந்துகொள்கின்றார்... அப்படி செய்யும் போது உன்னைதான் நினைத்துக்கொண்டேன் என்று பீலிங் ஆகின்றார்.... காரணம் அவனோடு  டாகி ஸ்டைலை திறம்பட  செய்ய முடியவில்லை என்று பீலிங் ஆகின்றார்....இப்படியும் சில கதைகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன.

ஆண்கள் சந்தேகப்பட்டு பெண்களை கொலை செய்வதும் சமீபகாலமாக நடந்து வருகின்றது...   நிறைய  கொலைகளில் ஆண்கள்... தன் ஆண்மை மீது பங்கம் வந்து விடக்கூடாது என்று என்று எண்ணி காதும்  காதும் வைத்தது  போல கண்டிக்கின்றார்கள்.. ஆனால் எல்லை மீறி செல்லும் போது கொலை  செய்து தலையை எடுத்துக்கொண்டு போலிசில் சரண் அடைகின்றார்கள்.

இது போன்று இரண்டு பாலரிடமும் தவறு இருந்தாலும்  அப்பாவி கணவன்கள் கொலையாவது  அதிகரித்து வருகின்றது  என்பதை செய்திதாள்கள் நிரூபிக்கின்றன.

நல்ல  பெண்  என்று வீட்டில் திருமணம் செய்து வைக்கின்றார்கள்...  நிறைய கணவன்களும் எதிர்கால கணவுகளோடு  பெண்ணை கட்டிக்கொண்டு வருகின்றார்கள்... முன்னாள் காதலனோடு சேர்ந்து தீர்த்து கட்டுகின்றார்கள்.. அதே போல இந்த கொலைகள்  தனியாக நடப்பதில்லை.. திட்டம் போட்டு தீர்த்து கட்டுகின்றார்கள்...

சமீபத்தில் கடலூர் சென்ற போது ஒரு கொலை பற்றி பரபரப்பாய் ஊரில்  பேசிக்கொண்டார்கள்....   பண்ரூட்டி திருவதிகை அருகே இரு சக்கர வாகனத்தில் கணவனோட வந்த பெண்ணை  மிரட்டி கழுத்தில் இருந்த நகைகளை கொள்ளை அடித்து, கணவனை குத்திக்கொன்று விட்டு சென்று இருக்கின்றார்கள் என்பது பரபரப்பான செய்தியாக காதில் விழுந்தது...

கடலூரில் இருந்து இரண்டு வழிகளில்  பண்ரூட்டி செல்லலாம்...

முதல் வழி...திருவந்திபுரம் பாலூர் திருவதிகை பண்ரூட்டி... இந்த வழி இரவு  நேரத்தில் சற்று டேஞ்சாரான வழி... திருவந்திபுரத்தில் இருந்து வானமாதேவி வரை ரோட்டின் இருபுறமும் கரும்புகொள்ளியும், மல்லாட்டை  தோட்டமும்... ரோட்டின் இரண்டு புறமும், புளியமரங்கள் அடர்த்தியாக காணப்படும்...

இரண்டாம் வழி...  நெல்லிக்குப்பம்,  பட்டாம்பாக்கம்  பண்ரூட்டி  இந்த  வழியில்  போக்குவரத்து அதிகம் இருக்கும்.... பயம் அதிகம் இருக்காது...

நான் சொன்ன  முதல் வழியில் முன்பு வேண்டும் என்றால் அதாவது இருபது வருடத்துக்கு முன்  பயம் இருந்தது...  திருவந்திபுரத்தில் இருந்து திருமாணிக்குழி செல்லும் வழியில் ஒரு பெரிய கட்டை பறந்து வந்து வாகனத்தில்   செல்பவரை தாக்கி, பணம் நகையை திருடர்கள் பிடிங்கி செல்வார்கள்.. 

ஆனால் இப்போது எல்லாம் எல்லா  சாலைகளிலுமே ஆள் நடமாட்டம் அதிகரித்து விட்டது....   போலிஸ் வாகனத்தில் ரவுண்டு அடிக்கின்றார்கள்... ஆனாலும் நகைக்காக கொலையா? என்று அந்த செய்தியை கேட்டதும் யோசனை..?


ஆனால் இன்று தந்தி பேப்பரை பார்த்ததுமே   அதிர்ச்சி எல்லாம் அடையவில்லை...காரணம் எற்க்கனவே  யூகித்ததுதான்...

கள்ளகாதலனை ஏவி கணவரை கொன்ற மனைவி கைது.... என்று11 ஆம் பக்கத்தில் புல் டிடெய்லாக சொல்லி இருக்கின்றார்கள்.
=======


 நன்றி தந்தி
=============

கல்பனா என்ற பெண்ணுக்கு  வித்யா என்ற தோழி மூலம் நட்பாகின்றார் தினேஷ்... இரண்டு பேருக்கும் காதல் அரும்புகின்றது... வீட்டில் வேவ்வேறு சாதி என்பதால் ஒத்துக்கொள்ளவில்லை... ஆனால் தினேஷ் வித்யாவை திருமணம் செய்து கொள்கின்றார்... இருந்தாலும் கல்பனாவால் தினேஷையும், தினேஷூக்கு கல்பனாவையை மறக்க முடியவில்லை.... தினேஷ் தன் தோழியை  திருமணம் செய்த பிறகும் காதலனை மறக்க முடியவில்லை.... வீட்டுக்கு விஷயம் தெரிந்து

சென்னையை சேர்ந்த சீனுவாசன் என்ற மருந்து விற்ப்பனை பிரதிநிதியை கல்பனாவுக்கு திருமணம் செய்து வைக்கின்றார்கள்... இரண்டு பேரும் ஒரு வருடம் வாழ்ந்தாலும் உடலுறவுக்கு கணவன் சீனுவாசனை அனுமதிக்கவில்லை...ஆனால் செல்போனில் தினேஷ்வுடன்  தொடர்பு  கொண்டு தன் காதலை வளர்கின்றார்.. கணவன்  இந்த காதலை கண்டு பிடித்து கண்டிக்கின்றான்... அதனால் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டுகின்றார்கள்.. ஒரு வருஷம் முடிந்த திருமணநாளை கொண்டாட  பண்ரூட்டி  வருகின்றார்கள்.... கடலூர்  சில்வர் பீச்சிக்கு போய் விட்டு வரும் வழியில் பண்ரூட்டிக்கு  நான் சொன்ன முதல் வழியில் செல்கின்றார்கள்.. பின்தொடாந்து தன் மனைவியின் பழைய காதலன் வருவதை தெரிந்துகொண்டு வண்டியை நிறுத்து  மனைவியிடம் கேட்டு இருக்கின்றார்...தினேஷ் தன் நண்பர் முரளியோடு சேர்ந்து கத்தியால் குத்தி அப்பாவி சீனுவாசனை கொன்று விடுகின்றார்கள்... இதுதான் பத்திரிக்கை செய்தி.

கல்பனா நகைக்காக கொலை நடந்தது போல நாடகம் அடி மயக்கம் அடித்து விழுந்தது போல நடிக்கின்றார்....  போலிஸ் மருத்துவமனையில்  கல்பனாவை சேர்ந்து விசாரிக்கின்றது...ஆனால் கொலையான சீனுவாசன் கழுத்தில் இருந்த மைனர் செயின் அப்படியே இருக்கின்றது  பொரி தட்டி ரெண்டு போடு போட்டு விசாரிக்கையில் உண்மையை சொல்லி விடுகின்றார்கள்.. ஆம் என் பழைய காதலன் தினேஷ் மூலம் என்கணவரை கொண்றேன் என்று....

சாதி என்ற விஷயத்தை முன்னிலை படுத்தி ஒரு காதலை பெற்றோர் முறித்தார்கள்... அது கள்ளக்காதலாக மாறி இன்று கொலை வரை  சென்று விட்டது....

காதலை  முறியடித்தால் அது ஒரு  நாள்  கள்ளக்காதலாக உருமாறும் என்பதற்கு கடந்த ஒன்றாம் தேதி நடந்த கொலை ஒரு உதாரணம்.  இப்போது கல்பானாவின் பெற்றோரை  நினைத்து பாருங்கள்... கல்பனா தோழி வித்யாவின் வாழ்க்கை.. ??பொத்தி பொத்தி வளர்த்த சீனுவாசனின் பெற்றோர் நிலை பெருங்கொடுமை அல்லவா? சீனுவாசன் செய்த தவறுதான் என்ன?
=======

கல்பானா காதலை இழந்தார்....

 கணவனையும் கொன்றார்...

தன் காதலன் தன் தோழி வித்யாவை திருமணம் செய்துக்கொண்ட பிறகும் கணவருக்கு தெரியாமல் தினேஷ்பாபுவையும் தொடர்பில் வைத்து இருந்து இருக்கின்றார்..

தோழி  வித்யாவின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விட்டது..

கல்பனாவும் கம்பி என்ன   வேண்டும்..

காதலன் தினேஷ்பாபு கம்பி எண்ண வேண்டும்....

 அவருக்கு உதவி செய்த அவரின் நணபர் முரளியும் கம்பி என்னவேண்டும்...இதில் எல்லா வற்றிலும் மிகப்பெரிய கொடுமை... அப்பாவி சீனுவாசன்தான்... எந்த தவறும் செய்யாமலேயே , சந்தோஷத்தை அனுபவிக்காமலே கொலையாகி போய் இருக்கின்றார்...

இதில் கொடுமை நண்பனுக்கா கடன் கொடுக்கலாம் கொலை  செய்ய எல்லாம் எப்படி உதவி புரிகின்றார்கள் என்று எனக்கு விளங்க வில்லை.... அவர்கள் வாழ்க்கை என்னவாகும் அவர்களுடைய குடும்பம் என்னவாகும்..???

  சாதிப்பிரச்சனையா  காதல் கல்யாணத்தில் முடியவில்லையா? ஒத்துக்கொள்ளாதீர்கள்... அல்லது முடியவில்லை என்றால் ஊரை விட்டு ஓடிப்போங்கள்...? அல்லது  வீட்டில் உங்களை ஒத்துக்கொள்ளாமல் திருமணம் செய்து வைத்து  விட்டார்களா? உங்களால் எதிர்க்க முடியவில்லையா?- கமுக்கமாக புது வாழ்க்கையை ஆரம்பியுங்கள்..
அப்பயும் உங்களால்  பழைய காதலை மறக்க முடியவில்லையா? கட்டிய கணவனிடம்  பிரச்சனையை எடுத்து கூறி டைவேர்ஸ் செய்யுங்கள்... கொலைக்கு டைவர்ஸ் பெரிய விஷயமில்லை... அல்லது அதுவும் அசிங்கமா சொல்லவே பயப்படுகின்றாறீர்களா-?  காதலனை அழைத்துக்கொண்டு ஓடி பீகார் பக்கம் ரோட்டில் பானி பூரி  கடை வைத்து பிழைத்துக்கொள்ளுங்கள்... எவன் வேண்டாம்ன்னு சொல்லறது..????

முதலில் கல்யாணம் செய்துக்கொள்ளவே ஒத்துக்கொள்ளக்கூடாது... அங்கேயே உங்கள் எதிர்ப்பை பதிவு  செய்ய வேண்டும் பிரச்சனையே இல்லை... கல்யாணம் செய்து கொண்டால் அவனோடு வாழ வேண்டும்..  அப்படி இல்லை என்றால் கல்யாணத்துக்கே ஒத்துக்கொள்ள கூடாது.... கல்யாணத்தை ஒத்துக்கொண்டு கொலை வரை தைரியமாக முன்னேறி செல்லும் மூதேவிகள்... கல்யாணமே வேண்டாம் என்று தடுத்தால் என்ன?

வாழறவனும் சரி.... வாழப்போறவனும் சரி... பொம்பளைங்க கிட்ட... ஏம்மா காதல் ஏதாவது இருந்தா முன்னாடியே சொல்லிடுங்க ....டைவேர்ஸ் கொடுத்துடறேன்.. அதை விட்டு விட்டு விஷம் ,அம்மிகல்லுக்கு எல்லாம் வேலை வைக்காதிங்க என்று டீசன்டாக சொல்லி விடுவது நல்லது என்றே மனதுக்கு படுகின்றது....

கூடவே இருந்து வாழ்ந்து சுப்ரமணியபுரம் கஞ்சா  கருப்பு போல கத்தியை எடுத்து சொருகுவதற்கு டைவேர்ஸ் எவ்வளவோ பெட்டர்.

ஆனோ,  பெண்ணே திருமணத்துக்கு பிறகு  லவ் அபயர் ஏற்ப்படுவது சகஜம்.. அதை மறுக்கவே முடியாது... பிடிக்கவில்லை என்றால் டைவேர்ஸ் செய்து விட்டு ,பிடித்த இணையோடு வாழுங்கள்... கொலை  செய்வது எல்லாம் ஓவர்...

கொலை  செய்து  தப்பிக்கலாம் என்று நினைக்காதீர்கள்... நீங்கள் புரோபஷனல் கில்லர் கிடையாது... எமோஷ்ஷனல் கில்லர்.. உங்கள் போனை வாங்கி பத்து நாள் இன்கமிங் அவுட் கோயிங் கால்களை செக் செய்தால் கொலை செய்தவர்களை ஈசியா கோழி அமுக்குவது போல  அமுக்கி விடலாம்... என்பதை மட்டும் மறவாதீர்கள்... நாங்கள் பெரிய புடுங்கிகள்.. எங்களை எல்லாம் எதுவும் செய்ய முடியாது என்று நீங்கள் நினைப்பீர்கள் என்றால் உங்கள் எண்ணத்தில் இடி விழ....

ஒரு அப்பாவி  ஆணையோ   அல்லது அப்பாவி பெண்ணோயோ கொலை செய்துதான் காமத்தை அடைய வேண்டும் என்று  நினைத்தாலோ அல்லது அந்த காமத்தை கட்டுப்படுத்த  துப்பில்லை என்றால்... விட்டத்தை பார்த்து கைமுட்டி அடித்து கைலியில் துடைத்து விட்டு சென்று விடுங்கள்….யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை…

உங்கள் சுயநலத்துக்கு கொலை  செய்ய… பெண்ணையோ ,பிள்ளையோ, பெற்று  சீராட்டி பாரட்டி  பெற்றோர் வளர்க்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்….



பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

26 comments:

  1. super.... marriage pannikavea bayama eruku... entha puttula entha pambu erukoo

    ReplyDelete
  2. //உங்கள் போனை வாங்கி பத்து நாள் இன்கமிங் அவுட் கோயிங் கால்களை செக் செய்தால் கொலை செய்தவர்களை ஈசியா கோழி அமுக்குவது போல அமுக்கி விடலாம்//this trick was well portraited in the film "not a love story"

    ReplyDelete
  3. miga அருமை...ஜாக்கி

    ReplyDelete
  4. Sema nethiyadi....அந்த காமத்தை கட்டுப்படுத்த துப்பில்லை என்றால் விட்டத்தை பார்த்து கைமுட்டி அடித்து கைலியில் துடைத்து விட்டு சென்று விடுங்கள்….யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை… super line

    ReplyDelete
  5. Super anna... If they courage enough to kill their so called better half , why dont they courage to refuse the marriage... ivaluga,ivanuga ellathayum **** idathula sudanum..

    ReplyDelete
  6. சாவு பயத்த காட்டிட்டாங்கடா பரமா...

    ReplyDelete
    Replies
    1. எழுதினது என்னவோ நாலெழுத்து அதில் நாலாயிரம் அர்த்தங்கள் :-)

      Delete
  7. ///////////வாழறவனும் சரி.... வாப்போறவனும் சரி... பொம்பளைங்க கிட்ட... ஏம்மா ஏதாவது காதல் ஏதாவது இருந்தா முன்னாடியே சொல்லிடுங்க டைவேர்ஸ் கொடுத்துடறேன்.. அதை விட்டு விட்டு விஷம் ,அம்மிகல்லுக்கு எல்லாம் வேலை வைக்காதிங்க என்று டீசன்டாக சொல்லி விடுவது நல்லது என்றே படுகின்றது..../////////////

    என்னைய சந்தேகப்பட்டு அந்த வார்த்தைய எப்படி சொல்லப்போச்சு....இப்பவே டைவர்ஸ் என்று வில்லங்கம் ஆவதற்கும் வாய்ப்பு அதிகம்.

    ReplyDelete
  8. காலையில் படித்தேன் ,விமர்சனம் அருமை சேகர்

    ReplyDelete
  9. ஜாக்கி...நீங்க சொன்ன பெங்களூர் கொலையில்.. அந்த ஆள் மதியம் சாப்பிட போனவன் மணைவியை கொன்றுள்ளான்...Office CCTV Footage ல் வெளியே போகும்போது இரு சட்டையும் திரும்பி வரும் போது வேறு சட்டை அணிந்திருந்ததால் மாட்டி கொண்டான்... கடலூர் சம்பவம் போலவே சில வருடங்களுக்கு முன்னால் மூனாறில் சென்னையை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாக ஞாபகம்...

    ReplyDelete
  10. காலையில் படித்தேன் விமர்சனம் அருமை சேகர்

    ReplyDelete
  11. வாழறவனும் சரி.... வாழப்போறவனும் சரி... பொம்பளைங்க கிட்ட... ஏம்மா காதல் ஏதாவது இருந்தா முன்னாடியே சொல்லிடுங்க ....டைவேர்ஸ் கொடுத்துடறேன்.. அதை விட்டு விட்டு விஷம் ,அம்மிகல்லுக்கு எல்லாம் வேலை வைக்காதிங்க என்று டீசன்டாக சொல்லி விடுவது நல்லது என்றே மனதுக்கு படுகின்றது....

    ReplyDelete
  12. வாழறவனும் சரி.... வாழப்போறவனும் சரி... பொம்பளைங்க கிட்ட... ஏம்மா காதல் ஏதாவது இருந்தா முன்னாடியே சொல்லிடுங்க ....டைவேர்ஸ் கொடுத்துடறேன்.. அதை விட்டு விட்டு விஷம் ,அம்மிகல்லுக்கு எல்லாம் வேலை வைக்காதிங்க என்று டீசன்டாக சொல்லி விடுவது நல்லது என்றே மனதுக்கு படுகின்றது....

    ReplyDelete
  13. இது கள்ளக்காதல் கருமாந்திரம் செய்யும் ஒருசிலருக்காவது உறைக்கும். இந்த செய்தியை பத்திரிகையில் படித்த போது என் மனதில் ஏற்பட்ட அதே உணர்வுகளை பிரதிபலித்து எழுதியுள்ளீர்கள், அனேகருக்கும் இதே எண்ணம் தான் உருவாகியிருக்கும்.

    ReplyDelete
  14. கரெக்டா சொன்னிங்க ஜாக்கி .இனிமேலாவது இந்த வீணா போன ஜென்மங்க திருந்தட்டும்.

    ReplyDelete
  15. Romaba correcta solli irukkireenganna...

    athum ippothaya vazhakkaikku romaba sariya solli irukkirenga..

    ReplyDelete
  16. correct a sonnenga boss excellent article

    ReplyDelete
  17. அருமையான கட்டுரை.... உங்க கோவம், ஆதங்கம் புரிகிறது... நீங்க சொல்வது உண்மையும் கூட... முடியலையா, ஒதுங்கி போவது சாலச்சிறந்தது.,...

    ReplyDelete
  18. nanum munnadiye guess pannan.athu saruyayiduchu..innaikku paperla padichan..maattikkolvom enru therinthum seipavargalai ennavenru solvathu..unmaiyana kathal ullavargal ippadi seyymaattargal..avargal manathil konjamavathu anbu irukkum..udal sugathukku alaiyum orusila naaygalthan ippadi seiginrana..

    ReplyDelete
  19. தாங்கள் சொல்வது சரிதான் , பிடிக்கவில்லை என்றால் கல்யாணத்திற்கு முன்னாலயே நிறுத்திவிடுங்கள் கல்யாணத்தை , ஓடிவிடுங்கள் தாங்களுக்கு பிடித்தவர்களுடன் .

    ReplyDelete

  20. சரியான அறிவுரை

    ReplyDelete
  21. Very nice and needed for this time.

    Bye
    Lakshmi Narayanan Ayyasamy
    9600055973

    ReplyDelete
  22. Very Nice and needed for this time.

    Bye
    Lakshmi Narayanan Ayyasamy
    9600055973

    ReplyDelete
  23. \\அவன் நல்லகதிக்கு போவானா-? இத்தனைக்கு அது படிச்ச பொறம் போக்கு....//

    \\ஒரு அப்பாவி ஆணையோ அல்லது அப்பாவி பெண்ணோயோ கொலை செய்துதான் காமத்தை அடைய வேண்டும் என்று நினைத்தாலோ அல்லது அந்த காமத்தை கட்டுப்படுத்த துப்பில்லை என்றால்... விட்டத்தை பார்த்து கைமுட்டி அடித்து கைலியில் துடைத்து விட்டு சென்று விடுங்கள்….யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை…//

    solla theriyavillai jaki sir "kalikaalam"

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner