Mayakkam Enna-2011/உலகசினிமா/தமிழ்/மயக்கம் என்ன-திரைவிமர்சனம்



கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கு இல்லை என்பதை ஒத்துக்கொள் என்று ஒரு பழமொழி இருக்கின்றது.
.எதுவுமே தெரியாமல் இருப்பதை விட ஏதாவது ஒரு தொழிலை கற்றுக்கொள் என்பதே...காரணம் வாழ்க்கை நடத்த கைத்தொழில் முக்கியம்...

என் அப்பா ஜவுளிகடை குமாஸ்தா...ஜவுளிக்கடையில் குமாஸ்தா என்பது எல்லாம் கைத்தொழில் லிஸ்ட்டில் சேராது..அம்பானி அப்பாவுக்கு பிள்ளையாக பிறந்து இருந்தால் கைத்தொழில் பற்றி கவலைபட்டு இருக்க போவதில்லை..

ஆனால் என் அம்மாவுக்கு கைத்தொழில் மீது பெரிய காதலே இருந்தது.. காரணம் தான் செய்யும் தொழிலில் தன் அளப்பாறியாத உழைப்பை செலுத்தினால் நிச்சயம் ஒரு  நல்ல நிலைக்கு வரலாம் என்பது என் அம்மாவின் அசைக்க முடியாத நம்பிக்கை...

என் அம்மாவை பெற்ற தாத்தாவுக்கு எழுத படிக்க தெரியாது.. ஆனால் லேத் ஒர்க்ஷாப் வைத்துக்கொண்டு ராஜா போல வாழ்ந்தார்.. என் அப்பாவுக்கு எழுத படிக்க தெரியும்.. ஆனால் என் அப்பாவை பெற்ற தாத்தா, என் அப்பா யாருக்கும் கைத்தொழில் என்பதே இல்லை...

என் அப்பா 30 வருடம் ஜவுளிகடைகுமாஸ்தாவாக ஒரே கடையில் கால் டிரைவுசர் போட்ட காலத்தில் இருந்து குப்பை கொட்டியவர்.. அவர் உழைத்த உழைப்புக்கு அவர் ஒரு பிளம்பராகவோ ,எலக்கிட்ரிசீயனாகவோ,இருந்து இருந்தால் கடலூரில் பெயர் சொல்லிக்கொள்ளும்  இடத்துக்கு வந்து இருக்கலாம்..

கடலூர் லாரன்ஸ் ரோட்டில் செல்லமயர் ஜவுளிக்கடையில் என் அப்பா 30 வருடமாக குமாஸ்தாவாக இருந்தார்.. அந்த கடை ஒரு மழைநாளில் இழுத்து சாத்திய போது, அப்போ என்று என் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்தது..என் தங்கையோடு நான் உட்பட ஐவர் அம்மா அப்பாவை சேர்த்தால் எழு பேர் கொண்ட குடும்பம்...அப்பாவுக்கு வேலை இல்லாத காரணத்தால் குடும்பம் நிலைத்தடுமாறியது...

வேறு எந்த வேலையும் தெரியாத காரணத்தால் என் அப்பா சீட்டு விளையாடி ஜெயித்த, பணத்தை எடுத்து வந்து கொடுத்ததை வைத்து என் அம்மா குடும்பம் நடத்தினாள்.. எங்கள் குடும்பம் சிலகாலம் சீட்டில் ஜெயித்த காசில் வாழ்க்கை ஓடியது.. அதனால் என் அம்மா என்னிடம் கைத்தொழில் எதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை அடிக்கடி சொல்லுவார்...


அப்பா, மாமா, சித்தப்பா என்று யாராவது ஏதாவது ஒரு தொழிலை செய்வார்கள்.. அதில் சேர்ந்து  தொழில் கற்றுக்கொள்ளலாம் என்றால் அதுக்கு வாய்ப்பே இல்லை..என்ன வேலை செய்வது ??என்று தெரியாமலேயே 30க்குமேற்ப்பட்ட பல வேலைகள் செய்து இருக்கின்றேன்.

ஆனால்  சினிமாவின் மீதும் வீடியோவின் மீதும் காதல் ஏற்ப்பட்ட போது ஒரு வீடியோ கேமராமேனாக வரவேண்டும் என்று கடுமையாக உழைத்தேன்..வீடியோ கேமராமேனாக ஆனேன்...காரணம் சலனபடங்கள் மீது இருந்த காதல் என்னை வீடியோ கேமரா மேனாக மாற்றியது...

ஒரு திருமணத்துக்கு வீடியோ எடுப்பது என்றால் கூட மாட்டை மேய்த்தோம், கோலை போட்டோம் என்று இல்லாமல், ரசித்து திருமண வீடியோக்கள் எடுப்பேன்.. திரைப்படங்களில் வரும் காட்சிகள் போல நான் திருமண வைபவங்களில் ஷாட் வைப்பேன்..

ஒரே ஆங்கிளில் திருமணத்தை எடுக்காமல் கட் ஷாட் அதிகம் கொடுத்து பல கோணங்களில் அந்த நிகழ்ச்சியை பதிவு செய்வேன். யாராவது வீடியோ எடுத்துக்கொண்டு இருக்கும் போது குறுக்கில் போய் விட்டால் நான் பயங்கரமாக டென்ஷன் ஆவேன்...

நான் எடுப்பது சினிமா அல்ல திருமணம்..திருமண வீட்டாருக்கு ஆயிரம் வேலை இருக்கும் குறுக்கும் நெடுக்கமாக போவார்கள்.. அவர்களை ஒன்றும் சொல்ல முடியாது.. ஆனால் வேண்டும் என்றே முகம் காட்ட கடக்கும் பெண்களையும் ஆண்களையும்  பார்த்தால் அவ்வளவு கோபம் வரும்..காரணம் வீடியோ எடுப்பதை அப்படி ரசித்து எடுப்பேன்..

என் அம்மாவின் ஆசை கொஞ்சம் நிறைவேறியது எனலாம்..50ஆயிரத்துக்கு ஒரு கேமரா வாங்கி வைத்துக்கொண்டு எக்ஸ்போசிங்  ஆர்டர் மட்டும் எடுத்தாலே குடும்பத்தை காப்பாற்றலாம் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்...

அம்மாவுக்கும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது..ஆனால் எனக்கு வீடியோ கேமராமேனாக அந்த தொழிலில் தொடர எனக்கு விருப்பம் இல்லை...
காரணம் ரொம்ப சிம்பிள்.. 

நீங்கள் திருமண நிகழ்ச்சிகளில் இந்த காட்சியை பார்த்து இருக்கலாம்..மணமக்களோடு குருப்பாக நிற்கும் போது வீடியோ கேமராமேன் எல்லோரையும் எடுக்க மெதுவாக கேமராவை கொஞ்சம் குளோஸ் ரேஞ்சில் வடமிருந்து இடமாக திருப்பும் போது, பக்கத்தில் போட்டோகிராபர் ரெடி ஒன் டூ திரி என்று கிளிக்கியதும் அத்தனை கூட்டமும் கலைந்து போய் விடும்..

1000வாட்ஸ் விளக்கை போட்டுக்கொண்டு, வியர்வை வழிய ஒரு வேலையை ரசித்து செய்து கொண்டு இருக்கும் போது, அந்த வேலைக்கு குறைந்த பட்ச மரியாதைகூட இல்லை என்றால் அப்புறம் என்ன மயித்துக்கு அந்த வேலையை  செய்ய வேண்டும்? என்ற எண்ணம்தான் காரணம்...


 அனைவரையும் கவர் செய்து கொண்டு இருக்கும் போது ஒரு போட்டோகிராபர் கிளிக்கி பிளாஷ் வெளிச்சம் பாய்ச்சும் போது வீடியோ கேமராமேன் வீடியோ எடுத்துக்கொண்டு இருக்கின்றானே என்று மதிக்காமல் கலைந்து போனால் அப்புறம் நான் செய்யும் வேலைக்கு என்ன மரியாதை...?? 

வீடியோவை விட போட்டோவுக்கே அனைவரும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.. அதனால் திருமணத்துக்கு வீடியோ எடுக்கும் வேலையை இனி செய்வதில்லை என்று முடிவு செய்து டாக்குமென்ட்ரி பிலிம்,ஷாட்பிலிம்,நியூஸ்,விளம்பரங்கள் போன்றவற்றிக்கு மட்டும் கேமராமேனாக பணியாற்றினேன்.. அங்கீகாரம் இல்லாத வேலையை செய்வதை விட  சும்மா இருக்கலாம்..

அதன் பிறகு போட்டோகிரபராக தொழில் கற்றுக்கொண்டு சொந்தமாக நிக்கான் எப்எம்10 கேமரா வாங்கி புகைபடக்காரனாக மாறினேன்..

ஒளியை பதியவைத்து வித்தை செய்யும் சினிமா,வீடியா,புகைபடம் என மூன்றையும் நான் ரசிக்கின்றேன்..ரசித்து வேலை செய்கின்றேன். அப்படி தனது வேலையை ரசித்து செய்யும் ஒருபுகைபடக்காரனை  பற்றிய திரைப்படம்தான் மயக்கம் என்ன? திரைப்படம்.
==========
மயக்கம் என்ன திரைப்படத்தின் ஒன்லைன்..
வாழ்ந்து காட்டுதலை விட பழிதீர்த்தல் வேறு எதுவும் இல்லை என்பதுதான் மயக்கம் என்ன திரைப்படத்தின்  ஒன்லைன்.
=================
மயக்கம் என்ன திரைபடத்தின் கதை என்ன?

தனுஷ்(கார்த்திக்) ஒரு போட்டோகிராபர்...வைல்ட் லைப் போட்டோகிராபராக பெரிய ஆளாக வரவேண்டும் என்பதே அவனது லட்சியம்..அவனுக்கு நண்பர்கள்தான் உலகமே....

நண்பர்களில் சுந்தர் என்பவனின் காதலி ரிச்சா(யாமினி)..ரிச்சாவுக்கு தனுஷ்க்கும் பழக பழக காதல் பூத்து விடுகின்றது...இருவரும் திருமணம் செய்து கொள்கின்றார்கள்..

தொழில் முறையில் நடக்கும் ஒரு துரோகத்தால் வெறுத்து போய் குடியில் சீரழியும் தனுஷின் குடும்ப வாழ்க்கை எப்படி சிறப்பாக மாறியது என்பதை அறிய வெண்திரையில் பாருங்கள்...
==============
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..

அத்தி பூத்தது போல சில நல்ல சினிமாக்கள் தமிழ் சினிமாவில் வந்து கொண்டுதான் இருக்கின்றன..அந்த வகையில் இந்த படத்தையும்   சேர்க்கலாம்...


இயல்பாய் சொன்ன வெற்றிக்கதைகள் எல்லா நாட்டிலும் வெற்றிநடை போடும். உதாரணத்துக்கு பர்சூட் ஆப் ஹேப்பினஸ்சை உதாரணமாக சொல்லலாம்..ஆனால் தமிழ் சினிமா விதிவிலக்கு....இங்கு ஆரவாரமாகத்தான் வெற்றிக்கதைகளை சொல்லவேண்டி இருக்கின்றது..


வழக்கமான செல்வராகவன் படங்களில் இருந்து இந்த படம் வேறுபட்டு இருக்கின்றது..மெச்சூரிட்டியாகவும் இருக்கின்றது..வாழ்த்துகள் இயக்குனர் செல்வா....

தனுஷ் பல உயரங்களை கடந்துபோகப் போகின்றார் என்பது இப்போதே தெரிகின்றது..மனுஷன்பூந்து விளையாடுகின்றார்..மாமனார் சாதிக்காத விஷயத்தை அவர் வீட்டிலேயே ஒரு ஆண் வாரிசாக பிரயாசித்தமாக தனுஷ் செய்கின்றார் என்றே நினைக்கின்றேன்.. 

என்ன? தனுஷ் கமர்சியல் சூழலில் மாட்டிக்கொள்ளாமல் இரண்டு மூன்று கமர்சியல்  செய்தாலும் இது போல ஒரு படத்தை அவர் செய்யவேண்டும் என்பதே  என் வேண்டுகோள்..

என் போட்டோவை ஆய்  போட்டோன்னு சொல்லிட்டான் என்று சொல்லி அழுகையும், ஆற்றாமையுமாக கை விரலை கிளிக்  செய்வது போல செய்து காட்டி கதறும் இடம் தனுஷ் நடிப்பின் மெருகு....

செய்திதாளில் தன்  போட்டோ வேறு ஒருவர் பெயரில் வந்து இருப்பதை பார்த்து விட்டு முனுக்கென்று கண்ணில் நீர் கோர்த்துக்கொள்ளும் காட்சி கவிதை..

ரிச்சாவுக்கு முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நடிப்பில் மிளர்ந்து இருக்கின்றார்...உதாரணமாக இண்டர்வெல் பிளாக்கில் தனுஷ் மற்றும் ரிச்சா பேசும் அந்த பஸ் ஸ்டாப் மழைகாட்சி  ஒன்று போதும்...ஒளிப்பதிவாளர்ராம்ஜி,இயக்குனர் செல்வா,தனுஷ்,ரிச்சா சேர்ந்த கூட்டனியினரில் அவர் அவர் திறமை நிரூபிக்கும் காட்சி அது ...
போட்டோவோ அல்லது வீடியோவோ எடுக்கும் போது எதாவது ஒரு அல்லக்கை அதை எடுங்க.. இதை எடுங்க... என்று நச்சரித்துக்கொண்டே இருக்கும்.. அதுக்கு காரணம் அது மூஞ்சியை எடுத்துத்தொலைக்கனும் என்பதுதான். அது போல தனுஷ் கல்யாண வீட்டில் போட்டோ எடுக்கும் போது அதை எடுங்க இதை எடுங்க என்று நச்சரிக்கும் கேரக்டரை நுனுக்கமாய் சேர்த்தமைக்கு பாராட்டுகள்.

ராம்ஜியின் கேமரா கொஞ்சம் கூட மிகைபடுத்தல் இல்லாமல் சரியான அளவு ஒளியை  பதிவு செய்து இருக்கின்றது...

கட்டிலுக்கு கீழே ஒரு ஷாட் வச்சி இருக்கார்...மனைவி பக்கத்தில் படுத்து தூக்கத்தில் மனைவி மேல் கால் தூக்கி போடுவது போல ஒரு  சில்லவுட் ஷாட்.. கணவன் மனைவி  அன்னியோன்ய விஷயங்களில் கவனமான பார்வை அது...

காட்டில் பறைவையை போட்டோ எடுக்கும் போது, காலையில் மரக்கிளைகளின் இடைவெளியில்  பாயும் சூரிய வெளிச்சமும்..அதனை தொடர்ந்து ஜிவிபிரகாஷின் பின்னனி இசையும் மனதை மயக்குபவை...


ரிச்சா ரத்தத்தை சுத்தபடுத்தும் போது  சமாதானத்துக்கு தனுஷ் வரும் போது, நீயும் உன் சமாதானமும் என்று பார்வையில்  சொல்லி ,கத்தி கதறிவிட்டு, ஒரு வாத்தை கூட பேசக்கூடாது என்று சைகையில்  சொல்லி விட்டு, கடைசி காட்சியில் ஹலோ என்பதாக ரிச்சா சொல்வது போல முடித்து இருப்பது உலகதரம்...


ரிச்சாவின்  அழகான கண்கள் ஆயிரம் மொழி பேசுகின்றன.இப்படி ஒரு பாத்திர தேர்வுக்கு இயக்குனரின் புதுகாதல் மனைவியின் கண்களும் ஒரு காரணமாக இருக்கலாம்..ஆனால் ரிச்சாவின் உதடு வேவ்வேறு உணர்வை தருகின்றது...சில இடங்களில் வேண்டாம்...அடிக்கவருவீர்கள்..


தனுஷின் பிரண்ட், காரில் ரிச்சாவிடம் அனைத்த படி பேசும் அந்த காட்சி.. ஒரு அனுபவஸ்தனின் சைக்காலஜி.. அதே போல அதுக்கு ரிச்சா தரும் பதில் செம்ம மெச்சூரிட்டி...

என்புருசன் கிறுக்கன்தான் ஆனா அவன் நல்லவன்...என்பதாகட்டும்..உன் எதிர்க்க அழுது இருக்க கூடாது என்தப்புதான் என்று ரிச்சா பேசும் வசனங்கள் படுஷார்ப்....

எனக்கு தெரிஞ்சதே போட்டோ எடுக்கறதுதான்.. அதையும் ஆய்ன்னு சொன்னா நான் என்ன செய்வேன் என்று தனுஷ் பொலம்பும் இடம் ஒரு இயலாமையின்கவிதை...

தமிழ்சினிமாவுல் பெரிய புடுங்கி போல தன்னை பாவித்துக்கொள்ளும் சில இயக்குனர்கள் மற்றும் கேமராமேன்களின்   மொத்த உருவம்... தனுஷ் போட்டோவை தான் எடுத்ததாக காட்டும் மாதேஷ் கேரக்டர்..

நாய் போல வேலை செய்வேன் என்று ஒரு பேச்சுக்கு சொன்னதுக்கு நாய் போல லைட்டிங் செய்வது கட்டர் வைத்து லைட்டை கட் செய்வது, மீட்டர் பார்ப்பது தெர்மகோல் பவுன்ஸ் கொடுப்பது ,என்று தனுஷ் அசத்தி இருக்கின்றார்..

மாடியில் இருந்து தலைகுப்புற தனுஷ் கவிழும் போதே அட தேவுடா செவன் ஜி ரெயின்போ காலனி போலவா என்று நினைக்கும் போதே... யப்பா கதையை மாத்தினிங்களே.. அது போதும் என்று நினைக்க வைக்கின்றார்கள்..

கணவனும் மனைவியும் கட்டிலில் தூங்கும் போது தனுஷ் பரக் என்று சத்தத்துடன் குசு விடுவதும், அதற்கு பின் நடக்கும் ஊடல் சண்டையும்  தாம்பத்திய ஊடல் கவிதை...

ஏமாற்றிய புகைபடக்காரரை அடித்து இருக்கவேண்டும் என்பது படம் பார்க்கும் ரசிகனின் மனநிலை.. அதைதான் எல்லா படங்களிலும் செய்கின்றார்களே...உண்மை தெரிந்த மனைவி எப்படி வாழ்த்து பழி தீர்க்கின்றாள் என்பது போல கதை அமைத்து இருப்பது பாராட்டுக்குறியுது..

உதாரணத்துக்கு ஆடுகளம் படத்துல கிளைமாக்ஸ் என்ன..? கடவுளுக்கு நிகரா நினைச்சவனின் நம்பிக்கை துரோகம்.. தனுஷ் நினைச்சி இருந்தா அந்த ஜெயபாலன் கேரக்டரை சாவடிச்சி இருக்கலாம்.. ஆனா அப்பா போல நினைச்சனேயா என்று வெறுத்துபோய்..அப்படியே என்னை குத்தி போட்டுவிடு என்றுதான் சொல்லும்..அது போலத்தான் இந்த கேரக்டரை அடிக்காமல் மனது வெறுத்து போய்  விபத்தில் மனது கலங்கி உண்மை தெரிந்த மனைவியால் தனுஷ் மீட்கப்படுவது சரியானதே..

நிறைய நல்லவிஷயங்கள் இருக்கின்றன...அதே போல சின்ன சின்ன  லாஜிக் மிஸ்ட்டேக் இருக்கின்றன.ரிச்சா அனாதையா? என்று அவர் குடும்பத்தை பற்றி மூச்சு விடாமல் இருப்பது பெரிய மிஸ்டேக் என்பது அது பலரின் கேள்வியும் கூட....காரணம் நாம் தமிழ்சினிமா கூட்டுக்குடும்ப பாதிப்பில் இருந்து இன்னும் வெளியே வரவில்லை என்பதே...


================
படத்தின் டிரைலர்..


=================
படக்குழுவினர் விபரம்.
Directed by     Selvaraghavan
Story by     Selvaraghavan
Starring     Dhanush
Richa Gangopadhyay
Music by     G. V. Prakash Kumar
Cinematography     Ramji
Editing by     Kola Bhaskar
Studio     Aum Productions
Distributed by     Gemini Film Circuit
Release date(s)     25 November 2011
Country     India
Language     Tamil

=====================
 தியேட்டர் டிஸ்கி.

சைதைராஜ் தியேட்டரில் செகன்ட் ஷோவுக்கு போனேன். ஓரளவுக்கு கூட்டம்...பிலிம் பெஸஸ்ட்டிவலில் படம் பார்பபது போல அமைதியாக பார்த்தார்கள்...

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஜெமினி பிலிம்ஸ் லோகோவான பீப்பி ஊதும் ஜட்டி பொம்மைகளை பாத்தேன்..

படம் பார்த்து விட்டு வெளியே போகும் பல ஆண்கள் ரகசியமாக கண்களை துடைத்துவிட்டுக்கொண்டு சென்றார்கள்..
குறைந்த செலவில் ஏசி போட்டு, ஒளி ஒலியில் அசத்தும் சைதை ராஜ் தியேட்டருக்கு வாழ்வு கொடுங்கள்..

பால்கனி டிக்கெட் வாங்காதீர்கள்.. எதிரில் இருப்பவன் தலை மறைக்கும்.. 60ரூபாய்க்கு பஸ்ட் கிளாஸ் வாங்கி படத்தை பாருங்கள்..  கட்டை சேரை மட்டும் பொறுத்துக்கொண்டால் மவுண்ட் ரோடு அண்ணா தியேட்டரில் எதிரில் இருப்பவன் தலை மறைத்து வெறுத்து போய் சின்ன திரையில் சினிமா பார்ப்பதை விட, இந்த தியேட்டரில் பார்க்கலாம்.. அதனால் சைதை ராஜ் தியேட்டரில் படத்தை பாருங்கள்... நல்ல தியேட்டர்.... கூட்டம் வரலைன்னு மூடிட போறாங்க.. ஆதரவு கொடுங்கள்..

====================
பைனல் கிக்.
மயக்கம் என்ன பீல்குட் மூவி..நீங்க போட்டோகிராபர் அதனால் இந்த கதை புடிச்சி இருக்கும் என்று உங்களில் யாராவது நினைக்கலாம்.. பர்சூட் ஆப் ஹேப்பினஸ் எனக்கு பிடிச்ச மூவி நான்  வில்ஸ்மித் போல ஷேர் மார்கெட் ஜீனியஸ் இல்லையே..இந்த படம் பீல்குட் மூவி.. அதில் மாற்றுக்கருத்தே இல்லை..என் வாழ்க்கை பக்கங்களை இந்த படம் திரும்பி பார்க்க வைத்தது என்னவோ உண்மைதான்..அதனால்தான்இரவு காட்சி படம் பார்த்து விட்டு, வீட்டுக்கு வந்த உடன் என் சூடு சொற்களையும், என் கோபங்களையும்,என் சொதப்பல்களையும் பொறுத்துக்கொண்ட என் மனைவியை முத்தமிட்டேன். முன்பை விட இன்னும் காதலாக, மரியாதையாக என் மனைவியை நேசிக்க வைத்தது இந்த படம் என்றால் அது மிகையில்லை. இந்த படம் யாருக்கெல்லாம் பிடிக்கும்...?  

வலிமிகுந்த வாழ்க்கையை வாழ்ந்தவனுக்கும் வலிமிகுந்த வாழ்வை எதிர்கொண்டவளுக்கும் இந்த படம் நிச்சயம் பிடிக்கும்..கிளைமாக்ஸ் கண்ணில் இருந்து நீர் வரவைக்கும்..அவசியம் இந்த படம் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம்.. ஹேட்ஸ் ஆப் செல்வா...
--

========
Dharshan Srikanthakumar
Jackie I eagerly waiting 4 ur "Mayakkam enna" review as a photographer and I knew that you are loving ur wife more then anything.


நேற்று இரவு காட்சியாக இருந்தாலும் போய் பார்த்து விட்டு வரவேண்டும் என்று நினைக்க வைக்க முகநூலில் நண்பர் தர்ஷன் போட்ட ஒரு பின்னுட்டம்... போதுமா தர்ஷன்... அதே போல குறுக்கால போவான் என்ற நண்பர் வேறு பின்னுட்டத்தில் கொரிய படம் எல்லாம் எழுதறிங்க.. மயக்க என்ன ஏன் எழுதலை என்று கேள்வி கேட்டு இருந்தார்கள்.. போதுமா நண்பர்களே...

==========
பிரியங்களுடன்/

ஜாக்கிசேகர்


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

31 comments:

  1. ஜாக்கி சேகர் சார் உங்களின் விமர்சனங்களை பார்த்து தான் இப்பொழுது படங்களை தேர்வு செய்து பார்க்கிறேன். தமிழ் சினிமா அடுத்த பரிணமாத்திற்கு சென்று கொண்டு இருப்பதை அரோக்கியமாக வரவேற்கலாம் - விவேக் சரண்

    ReplyDelete
  2. romba nandri jackie oru thelivaana review karuthai
    sonnatharkku

    ReplyDelete
  3. sharp and nachunu irukku vimarsanam.

    paarthura vendiyathu than

    Kalil

    ReplyDelete
  4. அதாகப்பட்ட இலக்கியம், சினிமாத் தெரிந்தவங்கள்லாம் எழுதுன விமர்சனங்களெப் படிச்சிட்டு, படம் பார்க்கலாமா கூடாதான்னு தயக்கத்துல இருந்தேன். உங்களெ வாசிச்சப்புறம் பார்க்கணும்னு முடிவு பண்ணிட்டேன். நன்றி!

    விமர்சனங்களுக்கு நீங்க எழுதுற முன்னுரை ஒரு தனிக் கலையா இருக்கு. உங்க முத்திரையாவும்.

    ReplyDelete
  5. ரியலி பீல்குட் மூவி தான் ஜாக்கி.ஞாயிறு இரவு வடபழனி கமலாவில், மீண்டும் நேற்று செவ்வாய் இரவு கமலாவில், அந்தளவுக்கு எனக்கு படம் பாதித்தது..டிவிட்டரில் செல்வராகவனிடம் நிறைய பேர் என் மனைவி பெயர் யாமினி என புலம்புகிறார்கள்..

    நேர்த்தியான விமர்சனம்.. வாழ்த்துக்கள் ஜாக்கி

    ReplyDelete
  6. //வலிமிகுந்த வாழ்க்கையை வாழ்ந்தவனுக்கும் வலிமிகுந்த வாழ்வை எதிர்கொண்டவளுக்கும் இந்த படம் நிச்சயம் பிடிக்கும்..//Feelgood விமர்சனம்.. Very nice bro..Thank you..

    ReplyDelete
  7. போதும்! போதும்!
    ஜாக்கி! மிக்க நன்றி நல்ல விமர்சனம்.
    மயக்கம் என்ன சிறந்த படம் என்பது மறுக்க முடியாதது.
    ஆனால் The beauty mind என்ற திரைபடத்தின் நகல் என்று ஒரு தரப்பு கூச்சலிடுகிறதே?
    நிச்சயமாக அந்த திரைப்படத்தின் நகலாக இருக்காது என்ற நம்பிக்கை செல்வா மீதுள்ளது.
    ஆனால் ஏதோ ஒரு சிறு ஒத்ததன்மை இருக்ககூடும்.அத திரைப்படத்தின் நாயகனும் போடோக்ராபராக இருக்கலாம்.அல்லது அந்த திரைப்படத்தின் கதையிலும் நாயகனின் படைப்பு திருடப்படுவது போல் சித்தரிக்கபடிருக்கலாம். The beauty mind திரைபடத்தை தாங்கள் விமர்சிதிருக்கிறீர்களா? (விமர்சனம் எழுதியிருந்தால் link தரவும்) நகல் என்று கூறுவதற்க்கு என்ன காரணம்?
    தெரிந்தவர்கள் தெளிவுபடுத்துங்கள்.

    ReplyDelete
  8. காட்டில் பறைவையை போட்டோ எடுக்கும் போது, காலையில் மரக்கிளைகளின் இடைவெளியில் பாயும் சூரிய வெளிச்சமும்..அதனை தொடர்ந்து ஜிவிபிரகாஷின் பின்னனி இசையும் மனதை மயக்குபவை..இது அனிமேஷன். இதை செய்தவர் என் நண்பர் ராஜா.

    ReplyDelete
  9. உண்மைல சொல்லப்போனா அந்த கார்த்திக் மாதிரி ஒரு மொக்கை கேரக்டர் நான் பார்த்ததில்லை... எனக்கு தெரிஞ்சு போர்ட்போலியோ தயாரிக்கிற எந்த போடோக்ராபரும் தான் எடுத்த படத்தோட அசலை யாருக்கும் தர மாட்டார்கள்... திரும்ப வந்து ஏமாந்து திரும்புகிற கார்த்திக்கை பார்க்க வரும் காதலியானவள், அவனது நண்பர்களின் உதவியையும் நாட வில்லை என்பது எங்கோ இடிக்கிறது... நண்பர்களும் எங்கு வேலை செய்கிறார்கள் என்பதையும், நல்ல நிலையில் இருக்கும் நண்பர்கள் கார்த்திக்குக்கு ஏன் உதவவில்லை என்பதையும் இயக்குனர் சொல்லவே இல்லை...

    அத்தோடு, கார்த்திக் இருந்தால் பரவாயில்லை என்று சொல்லும் ஒரு பெண்ணை புரிந்து கொள்ளாத மொக்கையாகவா ஒரு ஆண் இந்தக்காலத்தில் இருப்பான்?

    நீங்க சொன்ன மாதிரி ஒரு விஷயம் மட்டும் நடந்தது... என் மனைவியை இந்த படம் பார்த்த பிறகு அதிகமாக நேசிக்கத் துவங்கி விட்டேன்...

    ReplyDelete
  10. விமர்சனத்தை மட்டும் ஐந்து வாட்டி படிச்சாச்சு
    அதுலயும் உங்க முன்னுரை சூப்பர் அண்ணா

    ReplyDelete
  11. உங்களின் வலைப்பூ நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள்.

    Tamil Girl baby

    ReplyDelete
  12. I can't digest that, you compared with " Pursuit of happyness "



    Oh my god.....this is a worst movie ever i seen from Selva's

    this movie was sucking .... especially in second half.

    Selva who doesn't know how to finish..

    but Thanush , richa, ramji did good job..

    ReplyDelete
  13. அண்ணா, விமர்சனம் என்றால் ஒரு நடுநிலை இருக்க வேண்டும். உங்களிடத்தில் அதை ரசிக்கிறேன். ஒரு திரைப்படம் எடுக்க ஒருவன் எவ்வளவு மெனக்கெடுகிறான் . (காப்பி பேஸ்ட் இல்லை) அதை நடுநிலையோடு விமர்சனம் செய்ய முடியாமல், நான் பணம் கொடுத்து பார்த்தேன் அதனால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என வாந்தியெடுக்கும் பலருக்கு நடுவில் உங்களின் விமர்சனம் வித்தியாசம். இன்னும் குண்டுசட்டி குதிரை படத்தையே விரும்பும் பலர் எழுதி கொல்கின்றனர். ஒரு கலைஞனின் பார்வையில் உங்கள் விமர்சனம் சூப்பர். என்றும் அன்போடு, சதீஷ் முருகன்

    ReplyDelete
  14. super anna.... big review....nice to read and i feel too....

    ReplyDelete
  15. //இரவு காட்சி படம் பார்த்து விட்டு, வீட்டுக்கு வந்த உடன் என் சூடு சொற்களையும், என் கோபங்களையும்,என் சொதப்பல்களையும் பொறுத்துக்கொண்ட என் மனைவியை முத்தமிட்டேன்//

    கிளாசிக் ஜாக்கியண்ணே...

    ReplyDelete
  16. நண்பர்கள் சிலர் படம் மொக்கை என்று சொல்ல, பார்க்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்திலிருந்தேன். ரைட்டு பார்த்துவிடவேண்டியதுதான்.

    ReplyDelete
  17. அப்பாடா..ஒருவழியா மயக்கம் தீர்ந்தது.இனி பார்க்கலாம் படத்தை...நன்றி ஜாக்கி.விமர்சனம் அருமை

    ReplyDelete
  18. இந்த படம் யாருக்கெல்லாம் பிடிக்கும்...?

    புறங்கணிப்புக்களை யார் அதிகம் அனுபவித்தவர்களோ
    அவர்களுக்கு பிடிக்கும்

    ReplyDelete
  19. Jackie,
    I usually watch one Tamil movie every year. Your review is enticing me to check this one out.
    Great review.

    ReplyDelete
  20. கொஞ்ச நேரம் முன்பு தான் படம் பார்த்தேன், திரையில் நாயகன் காமிரேமேன் என்றவுடன் தங்கள் ஞாபகம் தான் வந்தது ...

    படத்தை விட நிறைய வசனங்கள் ரொம்ப பிடிச்சிருக்கு, வாழ்வின் நிறைய எதார்த்தங்களை பதிவு செய்திருக்கார் செல்வா, குறிப்பா “உனக்கு முன்னாடி நான் அழுதிருக்கக்கூடாது” யாரையும் சறுக்க வைக்கும் இடம் அது, பல முறை சறுக்கியிருக்கேன் ...

    மற்றபடி உங்கள் பாணியில் நல்லா சொல்லியிருக்கீங்க ...

    ReplyDelete
  21. ரொம்ப ரொம்ப அருமையான விம்ரசனம். எனக்கும் படம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிச்சு இருந்துச்சு:)

    ReplyDelete
  22. Nice Review....

    BTW, please look into this. it may help for you...
    http://www.mysixer.com/?p=14596

    ReplyDelete
  23. //சுந்தர் என்பவனின் காதலி ரிச்சா(யாமினி)//

    NO. Dating is not love.(International std)

    ReplyDelete
  24. இப்ப தான் படன் பாத்துட்டு நேரா வந்து உங்க விமர்சனத்தை படிச்சேன் ண்ணா... சத்தியமா நான் எப்படி படத்தை உணர்ந்தேனோ அப்படியே எழுதிருக்கீங்க...ரொம்ப கண்ணீர் விட்டேன் படம் பாத்தபோது... அதே உணர்வு இதை படிக்கும்போதும். தோல்வியையும் வலியையும் கடந்து வந்தவங்களுக்குத்தான் வெற்றியோட அருமை புரியும்... உங்களுக்கு அது ரொம்ப நல்லாவே புரிஞ்சிருக்கு...!!! என் மனமார்ந்த வாழ்த்துகள் உங்களுக்கு... (posted this sterday nyt 1.30 am. But edho problem na.. So ippo repost panren)

    ReplyDelete
  25. அதாகப்பட்ட இலக்கியம், சினிமாத் தெரிந்தவங்கள்லாம் எழுதுன விமர்சனங்களெப் படிச்சிட்டு, படம் பார்க்கலாமா கூடாதான்னு தயக்கத்துல இருந்தேன். உங்களெ வாசிச்சப்புறம் பார்க்கணும்னு முடிவு பண்ணிட்டேன். நன்றி!

    விமர்சனங்களுக்கு நீங்க எழுதுற முன்னுரை ஒரு தனிக் கலையா இருக்கு. உங்க முத்திரையாவும். //

    நன்றி ராஜ சந்தர்ராஜன் சார்..


    The beauty mind திரைபடத்தை தாங்கள் விமர்சிதிருக்கிறீர்களா? (விமர்சனம் எழுதியிருந்தால் link தரவும்) நகல் என்று கூறுவதற்க்கு என்ன காரணம்?
    தெரிந்தவர்கள் தெளிவுபடுத்துங்கள். //

    குறுக்கால போவான் பொத்ததாம் பொதுவாக அப்படி சொல்லி விட முடியாது..அதுக்கு இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..


    =======
    Excellent and sincere review...Congrats நன்றி பிரியா தொடர் வாசிப்புக்கும் இன்டிபிளாக்கில் ஒட்டு போடுவதற்கும்.

    ========
    நன்றி காவேரி கணேஷ் நேரம கிடைத்தால் இந்த படத்தை மறு முறை பார்க்க முய்றசிக்கின்றேன்..

    ========
    நன்றி சதிஷ் முருகன்.., நன்றி ஜமால் என்ன இந்த பக்கம் வந்து பல நாள் ஆயிடுச்சி போல..

    ========
    இப்ப தான் படன் பாத்துட்டு நேரா வந்து உங்க விமர்சனத்தை படிச்சேன் ண்ணா... சத்தியமா நான் எப்படி படத்தை உணர்ந்தேனோ அப்படியே எழுதிருக்கீங்க...ரொம்ப கண்ணீர் விட்டேன் படம் பாத்தபோது... அதே உணர்வு இதை படிக்கும்போதும். தோல்வியையும் வலியையும் கடந்து வந்தவங்களுக்குத்தான் வெற்றியோட அருமை புரியும்... உங்களுக்கு அது ரொம்ப நல்லாவே புரிஞ்சிருக்கு...!!! என் மனமார்ந்த வாழ்த்துகள் உங்களுக்கு... //

    நன்றி சுதர்சன்.

    ReplyDelete
  26. உண்மைல சொல்லப்போனா அந்த கார்த்திக் மாதிரி ஒரு மொக்கை கேரக்டர் நான் பார்த்ததில்லை... எனக்கு தெரிஞ்சு போர்ட்போலியோ தயாரிக்கிற எந்த போடோக்ராபரும் தான் எடுத்த படத்தோட அசலை யாருக்கும் தர மாட்டார்கள்... திரும்ப வந்து ஏமாந்து திரும்புகிற கார்த்திக்கை பார்க்க வரும் காதலியானவள், அவனது நண்பர்களின் உதவியையும் நாட வில்லை என்பது எங்கோ இடிக்கிறது... நண்பர்களும் எங்கு வேலை செய்கிறார்கள் என்பதையும், நல்ல நிலையில் இருக்கும் நண்பர்கள் கார்த்திக்குக்கு ஏன் உதவவில்லை என்பதையும் இயக்குனர் சொல்லவே இல்லை...--///

    கடவுள் இது போல நிறைய கேள்விக்கு பதில் சொல்லி படம் எடுத்தா படம் எடுக்க முடியாது.. டெலிசீரியல்தான் எடுக்க முடியும்..உலகபடங்கள் பார்த்தீர்கள் என்றால் பெரியதாய் நீட்டி முழங்கவே மாட்டார்கள்..

    ReplyDelete
  27. superb Jackie... na ungala first time Indiblogger meet la meet pane. ungala pathi enku romba teriyathu.. ungal cinema vimarsanam blog romba nalla iruku....


    Life is beautiful, the way it is...

    Why This Kolaveri D | All in one Link - Song, Lyrics, Video & Stills

    ReplyDelete
  28. வலிமிகுந்த வாழ்க்கையை வாழ்ந்தவனுக்கும் வலிமிகுந்த வாழ்வை எதிர்கொண்டவளுக்கும் இந்த படம் நிச்சயம் பிடிக்கும்.

    யெஸ்ஸ்ஸ் அண்ணா எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு இந்தப்படம் ...

    சூப்பரான விமர்சனம் ::))

    ReplyDelete
  29. anna Naan Coimbatore My Name Murali Naanum Photo Grapher Thaan. Naalla Padam Ottathathu Varuntha Vendia Veseyam Thaan. Good Songs And Good Photography This Film. Dhanush Good Performance This Film

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner