நான் அப்துல்கலாமுக்கு எழுதிய கடிதமும் அதற்க்கு அவர் எழுதிய பதிலும்....


ஒரு ஜனாதிபதி அதுவும் நம் தாய் மொழி நன்கு தெரிந்த நபர்.... இனிவரும் காலம் இளைஞர் காலம் என்பதை கண்டு ,தனக்கு பிள்ளை இல்லாவிட்டாலும் இந்த தேசத்தில் உள்ள எல்லா பிள்ளைகளையும் தன் பிள்ளையாக நினைக்கும் அந்த பெரியவர். அப்படி எளிமையாக நம் இந்தியநாட்டின் ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாமுக்கு, அவர் ராஷ்ட்ரபதி பவனில் வாசம் செய்த போது அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.... என்னவென்றால் அவர் சென்னை வந்த போது அவர் பாதுக்காப்பு எல்லை தாண்டி துரு துரு என்று வெளியே வந்து விடுகின்றார் என்ற செய்தி பத்திரிக்கைகளில் படித்த போது அவருக்கு ஒரு கடிதம் எழுத தோன்றியது.... அது உங்கள் பார்வைக்கு.....

20/12/2002
வெள்ளிக்கிழமை
காலை 10.30
சென்னை 87

“பாதுகாப்பு வளையங்களை மீறி பொதுமக்களை ஜனாதிபதி சந்தித்தார்” என்று நாளேடுகளில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன...
ஐயா , நீங்கள் எளிமையானவர்தான்... இந்தியாவை தவிர வேறு எது குறித்தும் கவலை கொள்ளாதவர் நீங்கள்... ஆனால், எதிர்கால இந்தியா உங்களை போன்ற ஒரு சிலரை மிகுந்த நம்பிக்கையோடும், மிகுந்த எதிர்பார்ப்புகளோடும் கவனித்து கொண்டு இருக்கின்றது....

கவர்னர் மாளிகை காட்டுக்குள் 2 மணிநேரம் நடைபயணம்...
“அதுவும் பாதுகாப்பு வளையத்தை தாண்டி” இதே இடத்தில் தமிழர் வெங்கட்ராமன் ஜனாதிபதியாக இருந்த போது இது போல் கவலை கொண்டதில்லை...

நாட்டின் எதிர்காலம் இளைஞர் கையில் என்பது பலரின் எண்ணம்... சாரி அது பலரின் தவறான கணிப்பு... ஆம் உங்கள் எண்ணப்படி பள்ளிக்குழந்தைகள் கையில்தான், இந்தியாவின் எதிர்காலம் உள்ளது...அவர்கள் மனதில் இந்திய முன்னேற்ற விதை ஊன்றினால் அது பசு மரத்தானிபோல் பதிந்து விடும்... என்பதை புரிந்தவர் நீங்கள் ... அந்த வகையில் நான் உங்களுக்கு நன்றி சொல்கின்றேன்....

எந்த ஒரு தீவிரவாத குழுவும் தமிழகத்தை சிறந்த இடமாக தேர்வு செய்து கொள்கின்றன... இங்குள்ள மக்கள் வெகுளிகள்... வெளுத்தது எல்லாம் பால் என்று நம்புபவர்கள்...ஸ்ரீ பெரும்பத்தூர் சோககறை இன்னும் மறையவில்லை, மறக்கடிக்கபடவில்லை... சோ தயவு செய்து பாதுகாப்பு வளையத்தை மீறாதீர்கள்...
எல்லா தீவிரவாத அமைப்புகளும் உலகத்தின் கவனம் தங்கள் மீது திரும்ப எதுவும் செய்ய தயாராகிவிட்டன என்பதை நாம் கவனித்து கொண்டுதான் இருக்கின்றோம்...

வார்வில் எவ்வளவோ பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம் இந்த விஷயங்கள் கவலை அளிப்பதால் இந்த கடிதம் உங்களுக்கு எழுத தோன்றியது... அதுவும் தாய் மொழியில் நான் எழுதிய விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவிரும்பினேன் நீங்கள் தமிழர் என்பதால்.....

ஆடம்பரம் இல்லாத ஜனாதிபதிக்கு இந்த மடல் பிடிக்கும் என்று நம்புகின்றேன்...நிகழ்ச்சி நிரல் படி நடக்கும் விழாக்களை யே புறக்கனிக்கும் இந்த காலத்தில்....உங்கள் நிகழ்ச்சி நிரலில் இல்லாம ஆலந்தூர் மகளீர் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி...
இந்த கடிதத்தை நீங்கள் எந்தளவுக்கு மதிப்பீர்கள் அல்லது புரிந்து கொள்வீர்கள் என்று தெரியவில்லை எதிர்காலத்தில் நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமான உடம்புடன் நீர் நலமுடன் இன்னும் பபல அரிய சேவைகள் செய்ய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்.....

அன்புடன்...
தனசேகரன்(ஜாக்கிசேகர்)

ஒரு மூன்றுமாதம் கழித்து அவர் அனுப்பிய பதில் கீழே....

ஆ.பெ.ஜெ. அப்துல் கலாம்
ராஷ்ட்ரபதி பவன்
நியூடெல்லி. 1100004


திரு தனசேகரன் அவர்களுக்கு,
வணக்கம்
தங்கள் அன்பான கடிதம் கிடைத்தது
என் வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஆ.பெ.ஜெ. அப்துல் கலாம்....

கடிதம் என்கைகளில் தவழ்ந்த அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை....

அவரை ஜனாதிபதியாக சென்னை சிவானந்த குருகுலத்துக்கு வந்த போது பத்தடி தூரத்தில் கேமரா அசிஸ்டென்டாக அந்த நிகழ்ச்சிக்கு போன போது பார்த்தது....
மிகவும் எளிமையான மனிதர் கலாம்...

அந்த நிகழ்ச்சியில் பல பிள்ளைகளின் கேள்விக்கு பதில் அளித்ததும் ரொம்ப பொறுமை காத்ததும் எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை தந்தன....இப்படியும் ஒரு மனிதர் சுயநலமில்லாமல்.....நம்மோடு வாழ்கின்றார் அதுவே பெரிய விஷயமில்லையா???,

அன்புடன்
ஜாக்கிசேகர்

5 comments:

  1. இங்குள்ள மக்கள் வெகுளிகள்... வெளுத்தது எல்லாம் பால் என்று நம்புபவர்கள்.]]

    உண்மை தான்.


    -----------------

    வாழ்த்துகள் தங்களுக்கு, இப்படி ஒரு முயற்சி எடுத்தற்கும் அது அங்கீகரிக்கப்பட்டதற்கும்.

    ReplyDelete
  2. எவ்வளவு நல்ல விடயங்கள் உங்களிடம் உள்ளது.

    சில விடயங்களை நானும் பின்பற்ற முடிவு செய்துள்ளேன்.

    நன்றி

    ReplyDelete
  3. பிஸ்கோத்துபயலை வழி மொழிகிறேன்.

    ReplyDelete
  4. பிஸ்கோத்துபயலை வழி மொழிகிறேன்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner