அனானிகளுக்கு இறுதி எச்சரிக்கை...




இரண்டு நாட்களாக  பதிவு எழுதவில்லை...வக்கில் ஆலோசனை, சைபர்கிரைம், போன்ற இடங்களுக்கு அலைந்த காரணத்தால் பதிவுகள் எழுத நேரம் கிடைக்கவில்லை...




ஆனால் இப்படி ஒரு விஷயத்துக்கு பயணப்பட்ட போது பல அனுபவங்கள் பெற்று இருக்கின்றேன்..அந்த அனுபவங்கள் போதுமானது...



நானாக வலிய போய் எவரையும் சீண்டியதில்லை....ஆனால் சீண்டியவர்கள் எவரையும் மன்னிக்கும் பரமபிதா அல்ல நான்...



எனக்கு நான்கு பொறம்போக்குகளை தெரியும்.. அவர்கள் ஐபி அட்ரஸ் என்வசம்..அதில் ஒன்று லண்டன்....மூன்று எங்கு என்பதும்? யாரை சொல்லுகின்றேன் என்பது இதை படிக்கும் அந்த பண்ணாடைகளுக்கே தெரியும்...



ஏதோ ஜாக்கியை திட்டி விட்டோம்.. ஜாக்கி சைடில் இருந்து எதிர்ப்பே வரவில்லை... அதனால் இன்னும் நாம் ஆடுவோம் என்று பலர் ஆடிக்கொண்டு இருக்கின்றார்கள்...அந்த சந்தோஷம் ரொம்ப முக்கியம் அப்படியே இருங்கள்....ஆனால் விருந்தாளிக்கு பொறந்தவன் போல தலையில் முக்காடு போட்டுகிட்டு வந்து உங்கள் வீரத்தை காட்ட வேண்டாம்....அட்லிஸ்ட் போன்  நம்பராவது கொடுத்து விட்டு பொங்குங்கள்.. மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கின்றேன்...






நான் சாதாரண மனிதன்.. இது மட்டுமே எனக்கு வேலை இல்லை.. அதனால் உடனடி தீர்வு எல்லாம் உடனே கொடுக்க முடியாது....ஆனால் வெயிட் செய்து என் எதிரி கண்ணில் விரல் விட்டு ஆட்ட முடியும்...அதுக்காக  நிறைய மெனக்கெடுவேன்... அதுக்காக காலம் கனியும் வரை காத்து இருப்பேன்...





எச்சரிக்கை கொடுப்பது என்பது திருந்த... நான் ரொம்ப டேலன்ட் என்று நிரூபிக்க முஷ்ட்டி உயர்த்தினால் நான் அமைதியான முறையில் காய் நகர்த்துவேன்... அதன்பிறகு கடைசிவரை போய் பார்த்து விடுவேன்...நோ காம்பரமைஸ்...





என்ன செய்தாலும் என்னிடத்தில் ஆதாரங்கள் இருக்கின்றன...எல்லாம் ஸ்கிரின் ஷாட் மற்றும் பிரண்ட் அவுட் எடுத்து வைத்து இருக்கின்றேன்...இன்னும் சாப்ட்வேர் நண்பர்களிடம் பேசும் போது... நேஸ்காம்...நேஸ்கேம் டேட்டா பேஸ், எச்ஆர்,புகார்கடிதம், ஐபி அட்ரஸ், கருப்பு புள்ளி, என்று பலது சொன்னார்கள்..



நான் என்ன  செய்ய வேண்டும் என்று எதிரிகளே தீர்மானிக்கின்றர்கள்...





நாம் ஒரு இக்கட்டில் இருக்கும் போதுதான் நாம் மீது எத்தனை பேர் நேசம் வைத்து இருக்கின்றார்கள் என்று தெரிகின்றது....



மணிஜி,சஞ்சய்,லக்கி., மயில்ராவணன்,பெங்களுர் சங்கர், ஜீவ்ஸ், சந்தோஷ், அபிஅப்பா, அகநாழிகை வாசு,பூர்னிமா,மாயா,புருனோ,மணிகண்டன், ராஜபிரியன்,கடலூர்ராஜ்,ரோகினி  போன்றவர்களுக்கு என் நன்றிகள்...



மிக முக்கியமாக பல மட்டங்களில் ஆள் இருப்பதை பார்க்கும் போது ரொம்ப  சந்தோஷமாக இருக்கின்றது...





அனானிகள் பற்றி பதிவு போட்டதும் நலம் விசாரித்த நண்பர்கள் மற்றும் பதிவுலக நண்பர்களுக்கு மீண்டும் என் நன்றிகள்..



பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.








நண்பர்களின் விசாரிப்பு கடிதங்கள்...





அனேகமாக இது உங்களது 998-வது பதிவு என்று நினைக்கிறேன்!!!உங்களிடமிருந்து ஆயிரமாவது பதிவை எதிர்நோக்கும் வேளையில் இப்படியொரு(அனானிகள்) பதிவு....விடுங்க தல...என்னை போல பலரும் பணி நேரத்தில் ரிலாக்ஸ் ஆவது உங்கள் காக்டெயில் பதிவு மூலமாகதான்.....அந்த மாதிரி சொம்புகளுக்காக நீங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை... ...தொடர்ந்து எழுதவும் !!!!! அப்புறம் ஆயிரமாவது பதிவிற்கு ADV வாழ்த்துக்கள்!!!பதிவுலகிலும், கலைப்பணியிலும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்....

இப்படிக்கு

ஆர்எஸ்எம்





அன்புள்ள ஜாக்கி சேகர் அவர்களுக்கு,



கடந்த சில நாட்களாக உங்கள் ப்ளாக்-ஐ படித்து வருகிறேன். எளிமையான நடையில் மிகவும் சுவாரசியமாக எழுதுகிறீர்கள். 



அனானிகளை ஒரு பொருட்டாக மதிக்காமல் தொடர்ந்து எழுதவும். 

உங்களுடைய அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.



சங்கர்

கோவை 

================

அன்பின் ஜாக்...கி..

அனானிகள் என்பவர்கள் முகமூடி மனிதர்கள்..
அவர்களை பற்றி நீங்கள் பேசி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம்.. இது என்னை போன்ற உங்கள் நலம் நாடும் உள்ளங்கள் கருத்து.

சிகப்பு
கம்பள வரவேற்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது.. அதனால் இந்த கறுப்பு ஆடுகள்..கவலைபடுகிறது.. வளர்ச்சி என்பது ஒன்றில் இருந்து நூறுக்கு செல்வது.. நீங்கள் ஏற்கனவே நூற்றுக்கு மேல்... அப்புறம் ஏன்..?
I think you have already reached the success..so don't think about them.. and please do think about us .. and keep do writing....

வேலை பளுவிலும்
, கவலையிலும் உங்கள் எழுத்தை வாசிக்க நேரம் கிடைக்காதா என்று ஏங்கும் உள்ளங்கள் அதிகம்.. (அடியேனும் ஒருவன்.)

ஒரு முறை உம் வலை பக்கம் வந்து வாசித்து
, பழைய பதிவுகளையும் வாசித்து தான் வெளியே செல்லும் எத்தனையோ உள்ளங்கள் அதிகம்..

புதிய பதிவு எப்போ எப்போ என்று ரெப்ரெஷ் செய்யும் உள்ளங்கள் இருக்கும் போது.. என் இந்த அனானிகள் பற்றிய கவலை..
?
<-----------------------------
-->
"ஆனாலும் எனக்காக மெனக்கெடறபாரு அந்த அளவுக்கு என் மேல வெறித்தனமான ரசிகரா நீ இருப்பது எனக்கு பெருமையே......."
- உண்மை மன்னியுங்கள் அவர்களை..
<-----------------------------
-->
"குறிப்பு: அச்சு தொழிலில் இருந்து கொண்டு இவளவு தப்பாய் டைப் செய்கிறானே !

என நினைகிறீர்கள ...ச்..ச். சும்மா....உங்கள் ஸ்டைலில் எழதி பார்தேன்..."


-
செம நச்...
<-----------------------------
--->
அப்புறம் அந்த போட்டோ...


"
அப்பிஜி அதில் நான் எங்க இருக்கேன்னு கண்டுபிடிக்க எனக்கே நேரம் தேவைப்பட்டது..."


உங்களுக்கே அதிகம் நேரம் என்றால் எங்களுக்கு..


சரி.. அந்த போடோக்கு கீழே இருக்கும் அந்த பெயர் லிஸ்ட் எங்கே.. இப்படி எல்லாம் எங்கள சுத்தல்ல விட கூடாது..


But i guess you are at third Row..second from Right... (Am i right..)


Ok..lot of wishes..

bye
NTR.

மச்சி,
அனானி மேட்டர் : மத்தவங்க மாதிரி லூஸ்ல விடுன்னு சொல்ல மாட்டேன்
, அப்பப்ப செவுட்டுல அறையறா மாதிரி செஞ்சிக்கிட்டேதான் இருக்கணும் இவனுங்களுக்கு, தொடரவும். இவை உன்னை பாதிக்காதுன்னு தெரியும்.

போட்டோவில் நீ : நடு வரிசை (கீழிருந்தும் மேலிருந்தும் மூன்றாவது) வலது பக்கத்திலிருந்து ரெண்டாவதா நிக்கற குடாக்குதானே நீ
?

என்றும் அன்புடன்

பாஸ்டன் ஸ்ரீராம்



=====================

மேவி

பிரீயா விடுண்ணே....


உங்களுக்கு அனானி மெயில் பண்ணியவர் / கமெண்ட்
போட்டவர் அமெரிக்காவில் இருக்கிறாராம். அதற்காக தான் ஹில்லாரி கிளிண்டன் தமிழகம் வந்து ஒபாமா சார்ப்பில் அம்மாகிடா மன்னிப்பு கேட்டுகிட்டாங்களாம் ..

தொடர்ந்து எழுதுங்க ...வாழ்த்துக்கள் .
keep smiling enjoy living



=============

நன்றி நண்பர்களே....







பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.







======================





(FOR THE WORLD YOU MIGHT BE JUST A PERSON, BUT FOR SOME PERSON YOU ARE THE WORLD)

EVER YOURS...

23 comments:

  1. அண்ணாச்சி பாஸ்டன் ஸ்ரீராம் சொன்னதுதான் சரியான வழி இடைக்கிடை அனானிகளுக்கு ஆப்படிக்கவேண்டும். இவர்களுக்கு பயந்து எழுதுவதை நிறுத்தவேண்டாம்.

    ReplyDelete
  2. ஜாக்கி!எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டிருப்பதாக தெரிகின்றது. சீக்கிரம் நல்லது நடக்கும்.... குட் லக்!

    ReplyDelete
  3. பூச்சாண்டி வேலைகள் காட்டுபவர்களை கண்டு சிந்திக்காமல்
    தொடர்ந்து உங்கள் ஆயிரமாவது பதிவை வெளியிட எங்களுக்கு வேலை
    செயுங்கள் . என்றும் அன்புடன்


    அ.ஆரிப் -திருச்சி .

    ReplyDelete
  4. பூச்சாண்டி வேலைகள் காட்டுபவர்களை கண்டு சிந்திக்காமல்
    தொடர்ந்து உங்கள் ஆயிரமாவது பதிவை வெளியிட எங்களுக்கு வேலை
    செயுங்கள் . என்றும் அன்புடன்


    அ.ஆரிப் -திருச்சி .

    ReplyDelete
  5. நன்றி வந்தியதேவன்... நன்றி...அதனால்தான் ஸ்ரீ பின்னுட்டத்தை போட்டேன்..

    அருன் ராமசாமி ஒரு நாள் தெளிவா பேசலாம்...

    நன்றி மழைத்தூறல்.. ஆயிரமாவது போஸ்ட் இப்ப வராது.. காரணம்..நிறைய டிராப்ட்டோடு அது இருப்பதால் உண்மையான கவுண்ட் இப்போதைக்கு ஆயிரத்துக்கு கம்பிதான் என்று நினைக்கின்றேன்.

    ReplyDelete
  6. அன்பிற்குரிய சகோதரம்,
    பதிவினைப் படித்தேன், ஒரு சிறிய விண்னப்பம், அனானிகள் கமெண்ட் ஆப்சனை நீக்கி வெறுமனே, Open Id AND Google Account ஆப்சனைக் கொடுத்துப் பாருங்களேன். அனானிகள் ஓய்ந்திடுவார்கள்.
    என் வலைக்கும் அரசியல் விவாதப் பதிவுகள் எழுதும் போது, இப்படித் தில்லு முல்லுப் பார்ட்டிகள் வந்தார்கள். பின்னர் அந்த ஆப்சனை நீக்கி விட்டேன். இப்போது அனானிகள் யாரும் வருவதில்லை.
    என் கருத்தில் தவறிருந்தால் மன்னிக்கவும் சகோ.

    ReplyDelete
  7. அண்ணாச்சி இதெல்லாம் கணக்கில எடுத்தால் முன்னேறேலாது.. உங்க வழியை தொடருங்கள்... உங்க மனச்சாட்சிப்படி செயற்படுங்கள்..


    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    சாருவின் ஆபாச அரட்டை உண்மையா? பொய்யா? ஆதார பதிவு

    ReplyDelete
  8. //நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிரிகளே தீர்மானிக்கின்றர்கள்...//
    உண்மை தான் ஜாக்கி , "நீ எந்த யுத்தத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை உன் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்" - somebody told

    ReplyDelete
  9. சிறந்த பதிவு... சகோதரர் நிரூபன் சொல்வதும் சரியே.

    ReplyDelete
  10. ஏம்பா அனானிஸ்! ஒருத்தர் இவ்வளோ கஷ்டப்பட்டு ப்ளாக் எழுதிராறு சும்மா வந்தமா! படிச்சமா! போயிட்டே இருக்க வேண்டியது தானே!..
    காலைல காபி குடிகிறமோ இல்லியோ ஜாக்கி அண்ணன் போஸ்ட் படிச்சாதான் மெட்ராஸ் அண்ட் உலக சினிமா ஒரு ரவுண்டு வந்த மாதிரி இருக்கும்.
    இப்போ பார்த்த அண்ணன் டெய்லி உங்கள பத்தியே ப்ளாக் போடுறாரு.. Silent Subscriber நானே கடுப்பாகி கமெண்ட் போட்றேன்னா ஜாக்கி எவ்ளோ கடுப்பாகி இருப்பாரு!! .. அவர நார்மலா எழுத விடுங்கப்பா..!!

    ReplyDelete
  11. அனானி ஆப்ஷனை எடுத்துட்டாலே பாதி டென்ஷன் இருக்காதே...!! :-)

    ReplyDelete
  12. அட...போங்க பாஸ் ...இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகிட்டு...காய்த்த மரம் தானே கல்லடி படும்...இதெல்லாம் உங்க வளர்ச்சி பிடிக்காதவங்க பண்ற வேலை ...சும்மா தூள் கிளப்பி போய்ட்டே இருக்கணும் ....

    ReplyDelete
  13. நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிரிகளே தீர்மானிக்கின்றர்கள்...

    100% சரி :-)

    ReplyDelete
  14. அண்ணே நீ தனி ஆளு இல்ல தோப்பு.. உன் பின்னாடி பல பேர் இருக்கோம் டோண்ட் ஒர்ரி!

    ReplyDelete
  15. Dear Jacki anna...

    ADV wishes for your 1000 post...leave it this annoyness..Because there are already face less peoples...

    ReplyDelete
  16. ஜாக்கி அண்ணே இதற்க்கு முந்தைய பதிவையும் இப்பொழுது தான் பார்த்தேன். எனக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் முதல் ஆளாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறுவீர்கள். இப்பொழுது உங்களுக்கு இந்த பிரச்சினை நீங்கள் எனக்கு சொன்ன அதையே தான் நானும் உங்களுக்கு சொல்ல போகிறேன் நீங்கள் இவர்களை பற்றி கவலை படவேண்டாம் அண்ணே. நாம இவனுங்கள பத்தி பேச பேச தான் இவனுங்க போன்ற ஆளுங்களுக்கு ஊக்குவித்தல் போன்று ஆகிவிடும். கண்டுக்காம விட்டுட்டா இருந்த இடம் தெரியாம போயிடுவானுங்க. அண்ணே கீழே உள்ள லிங்க்ல ஒரு மென்பொருள் இருக்குன்னே அத வச்சி ட்ரை பண்ணுங்க அவனுங்க முகவரியை கண்டுபிடிக்க முடியுதான்னு வேற ஏதாவது உதவி என்றாலும் சொல்லுங்கண்ணே என்னால் முடிந்தவரை ட்ரை பண்றேன்
    http://www.vandhemadharam.com/2011/01/ip.html

    ReplyDelete
  17. அண்ணா நீங்கள் வளர்ந்து கொண்டே வருகிறீர்கள் , மேலும் இவர்களை போல உள்ள நபர்களை எல்லாம் ஓரம் தள்ளி விட்டு டாப் கியர் போட்டு நீங்கள் பாட்டுக்கு போய்கிட்டே இருங்க ,

    வாழ்க வளமுடன் .

    ReplyDelete
  18. நீங்க திட்டுற திட்டுக்கு நல்லவனா இருந்தா இந்த பக்கமே வரமாட்டான். கெட்ட வார்த்தையில திட்டினாலும் பயபுள்ளைங்களுக்கு ரோஷமே வரமாட்டேங்குதே...

    ReplyDelete
  19. Dear Jackie Sekar,
    i am gopu from salem my id "gopu.gold@gmail.com". i read your blogs many time. i really appreciate you for your blogs. I am not anonymous mail person. Don't think about those peoples, they are envy on your writings, don't waste your time on spending on that things..... have best wishes good luck...
    gopu

    ReplyDelete
  20. அய்யோ அய்யோ,
    உங்களுக்கு எழுதறது சந்தோசம். உங்களோட எழுத்தை படிக்கிறது எங்களுக்கு சந்தோசம். இடையில யாருங்க இந்த அனானியெல்லாம். இதெயெல்லாம் பார்த்தா முடியுமா. எழுதுங்க பாஸ். தொடர்ந்து எழுத வாழ்த்துகள். நன்றியுடன்- கார்த்திக்

    ReplyDelete
  21. நாம் என்ன ஆயுதத்தை எடுக்கவேண்டுமென்று நம் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள் - தோழர் செகுவேரா

    குசும்பன் சொன்னதுபோல்

    அண்ணே நீ தனிமரம் இல்ல தோப்பு..
    அனானிகளுக்கு வெக்கபோறோம் ஆப்பு..

    ReplyDelete
  22. தொடர்ந்து உங்கள் பதிவை எழுதுங்கள்.
    Thanks,
    Priya
    http://www.ezdrivingtest.com

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner