(ANBESIVAM) அன்பேசிவம்.. பார்த்தே தீர வேண்டிய படம்...




சென்னை ஏஅர்எஸ் கார்டனில் நான் பந்தம் சீரியலுக்காக செகன்ட் யூனிட் கேமராமேனாக, பைட்சீன் எடுக்குக்கொண்டு இருந்தேன் அந்த சீரியல் அப்போது ராஜ் டிவியில் ஒளிபரப்பாகிகொண்டு இருந்தது...அதன் முதல்யூனிட் கேமராமேன் பாலமுரளி,இப்போது சன்டிவியில் ஒளிபரப்பாகும் கண்மனி சீரியல் பண்ணுகின்றார்..அவருக்கு அப்போது நான் அசிஸ்டென்ட் என்னை செகன்ட்யூனிட் செய்ய சொன்னார்....

நான் கிரேனில் பைட் சீன் எடுத்துக்கொண்டு இருக்கும் போதே 4 தண்ணீர் லாரிகள் வந்து நின்றன,அங்கு பள்ளிகூட செட் ஒன்று இருக்கும். கொஞ்சம் நேரத்தில் அங்கு சினிமா சூட்டிங் நடப்பதற்க்கான ஆயுத்தபணிகள் நடக்க ஆரம்பித்தன...சில மணி நேரங்ககளில் நடிகர் மாதவன் வந்ததார்...அதன் பிறகு சுந்தர்சீ வர அதன் பிறகு கமல். நான் கமலை அப்போதுதான் மிக மிக நெருக்கத்தில் பார்க்கின்றேன்... சந்தர் சீ டயலாக் பேப்பரை கொடுத்து விட்டு கை கட்டிக்கொண்டு நிற்க்க கமல் அதை பார்வையிட்டார்...
அதன் பிறகு எனக்கு அவலை இருந்தகாரணத்தால்நான் அந்த இடத்தை விட்டு அகன்றேன் அன்பே சிவம் படம் வந்த பிறகு அது எந்தத காட்சி என்று பார்த்த போது.. கையில் பணம் இல்லாமல் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு கமல் மாதவன் ஷுவை விற்று விட்ட வருவாரே அந்த ஹோட்டல் சீன் அதுதான் அன்று படமாக்கப்பட்டது....

40 கோடி கொடுத்து வைர கீரிடம் சாமிக்கு கொடுப்பது கடவுளை கானும் வழியல்ல..மதத்தின் பெயரால் பாம் வைப்பதும்,மசூதி இடிப்பதும் கடவுள் கானும் செயல் அல்ல.. சகமனிதனின் துன்பத்தில் பங்கு கொள்வதே கடவுளை கானும் வழி.. என்பதை செவிட்டில் அறை விட்டு இந்த படத்தில் சொல்லி இருப்பார்கள்...
எல்லோரிடமும் கடவுள் இருக்கின்றார், எங்கும் இருக்கின்றார், எந்த இடத்திலும் இருக்கின்றார்...எல்லோரும் எல்லோருக்கும் நல்லதே செய்யும் போது... எல்லோருமே கடவுளாக மாறிவிட்டால், அப்புறம் எதற்க்கு கோவில் குளம்,பூஜைபுனஸ்காரம் எல்லாம்???

சக மனிதன் துன்புறுவதை பார்த்தால் நீ மனிதனே அல்ல...என்று சொன்ன படம் நாம் ஒரு வகையில் மிருகம்தான்..சகமனிதர்கள் அல்லல் படுவதை ஒரு போதும் நாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை...

அன்பேசிவம் படத்தின் கதை இதுதான்....

ஒரிசாவில் அனை கட்டும் போது விபத்தில் இறந்த 100 தமிழர்களுக்கு ஊனமுற்ற காமரேட் நல்லசிவம் (கமல்) 32 லட்சம் நிவாரண தொகை செக்கோடு,ஒரிசா புவனேஸ்வரில் இருந்து கிளம்ப, வேறு வேலை விஷயமாக புவனேஷ்வர் வந்த விளம்பர பட இயக்குனர் அன்பரசுவும் (மாதவன்), நல்லசிவமும் எதிர்பாராமல் தவறான புரிதலோடு சந்திக்க... எதையுமே பணத்தால் சாதிக்கலாம் என்ற அன்புவுக்கு எதையும் பாசத்தின் மூலம் சாதிக்கலாம் என்ற நல்லலசிவமும் எதிர் எதிர் துருவங்கள்... அவர்கள் அவர்களுடைய சித்தாந்தங்கள், தர்க நியாங்களை இருவரும் வெளிபடுத்திக்கொள்கின்றார்கள்...

இருவரும் சென்னைக்கு வர வேண்டும். ஒரிசாவில் மழை வெள்ளம்... பிளைட் ,ரயில் எல்லாம் கேன்சலாக, அவர்கள் எந்த எந்த மார்கமாக சென்னை வந்தார்கள்? இதில் அன்பரசுவுக்கு சென்னையில் திருமணம் வேறு நடக்க இருக்கின்றது... அவன் திருமணத்துக்கு சரியான நேரத்துக்கு போய் சேர வேண்டும்...ஒரிசாவில் இருந்து சென்னை வருவதற்க்குள் அவர்கள் இருவரும் தங்களை எப்படி வெளிபடுத்திக்கொண்டார்கள், கடைசியில் அவர்கள் இருவரும் எப்படி புரிந்து கொண்டார்கள் என்பதையும் ,ஊனமுற்ற அன்பரசுவின் காதல் பிளாஷ் பேக்கையும், அவர்கள் சந்திக்கும் மனிதர்கள் , பிரச்சனைகளை மிக மிக அழகாக செல்லுலாய்டில் வடித்து இருக்கின்றார்கள்... மீதியை வெண்திரையில் காண்க.....

பார்த்த படம் தானே முழு கதையும் சொன்ன என்ன? என்று உங்கள் கோபத்தில் நியாயம் இருக்கின்றது...விமர்சனத்தில் அதாவது அது உலகம் சுற்றும் வாலிபன் படமாக இருந்ததாலும் முழுக்கதையையும் சொல்லக்கூடாது... அதுதான் விமர்சன தர்மம்...

அக்னி நட்சத்திரம் பார்த்த படம்தான் ஆனால் நேற்றைய பின்னுட்டத்தில் இராமலிங்கம் என்பவர் இன்னும் அந்த படத்தை பார்க்கவில்லை.... அது போல் இன்னும் ஏராளம் பேர் இருக்கின்றார்கள்... இன்னும் ஒரு சினிமா கூட பார்க்காத பலர் இருக்கின்றார்கள்... எப்போதாவது அவர்களுக்கு படம் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தால் அவர்களுக்கு இந்த தளம் உதவும்....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

இந்த படம்"Planes,Trains and Automobil” என்ற ஆங்கில படத்தின் ஆதார தழுவல்தான் இந்த படம்தான் என்றாலும் ஈயடிச்சான் காப்பியாக இந்த படம் காப்பி அடிக்கபடவில்லை....

கம்யுனிசம் என்பவர்கள் தெருவில் உண்டிகுலுக்குவோர் என்று முன்னாள் முதல்வர் சட்டமன்றத்தில் நக்கலடித்தவர்...அவர்கள் அப்படி அல்ல, இன்றளவும் விளிம்புநிலை மனிதர்களுக்காக தன் சுக துக்கங்களை இழந்து போராடும் சகாக்கள் நிறைய என்பதை மிக அற்புதமாக சொல்லி இருக்கின்றார்கள்...

கம்யுனிசம் என்பது என்ன,எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும் என்பது, எல்லோரும் பல்லக்கில் ஏறிவிட்டால் பல்லக்கை யார் தூக்குவது, அதற்க்காக முதாலாளி வர்க கூட்டம் சக மனிதனை மேலே வராமல் தடுக்க, அதனை எதிர்த்து குரல் கொடுப்பது கம்யுனிசம்...

கம்யுனிசம் என்பது சக மனிதன்பால் அன்பு செலுத்துவது என்பதை அழகாக புரியவைத்து இரக்கின்றார்கள்... அனால் இன்று அவர்கள் சித்தாந்தங்கள் காலத்தின் கட்டாயத்தால் சற்றே நீர்த்து போய் இருக்கலாம்...அவர்கள் சரியான புரிதல் இல்லாமல் சரிவை சந்தித்து விட்டார்கள்.... அவர்கள் மட்டும் இல்லை என்றால் முதலாளி வர்கம் நம்மை முழுதாய் முழுங்கிவிடும்.... அதை இவ்வளவு அழகாக சொல்ல முயற்சித்து இருக்கின்றார்கள்...

எம் என்சி இந்த படம் சகட்ட மேனிக்கு சாடுகின்றது ஆனால் எம்என்சி மட்டும் வரவில்லை என்றால் இத்தகைய வளர்ச்சியோ, வேலைவாய்ப்போ இருந்து இருக்காது....என்பது மறுக்க முடியாத உண்மை....

கமல் காமரேட்டாக வாழ்ந்து இருக்கின்றார்...ஒரு கம்யுனிச ஆபிஸ் எப்படி இருக்கும், அதில் தோழர்கள் எப்படி பேசுவார்கள் என்பதை,எங்கள் ஊரில் ஓலக்கொட்டாய் கட்சி ஆபிசை திரையில் பார்த்த மகிழ்ச்சி எனக்கு...

படத்தின் பலம் கமலின் திரைக்கதையும் மதனின் வசனங்க்ளும்தான்....
ஒரு தீவிரவாதி என்னை போல அசிங்கமா இருக்கவேண்டாம், உங்களை போல் அழகா இருப்பான்..என்று கமல் ஏர்போர்ட்டில் மாதவனிடம் பேசுவதாகட்டும்...

தாஜ்மகால் இடிந்துடுச்சின்னா காதல் செத்துடுமா? அது போல சோவியத் ரஷ்யா சிதறிடிச்சின்னா கம்யுனிசம் சிதறிடுமா?கம்யுனிசம் என்பது ஒரு உணர்வு என்று, ரயில்வே ஸ்டேஷனில் சொல்வதாகட்டும்...

கடைசியில் கமல் நடந்து போகையி்ல் கமல் எழுதிய கடிதத்தில் வரும் வசனங்கள் என் நெஞ்சை கொள்ளை கொள்ள செய்தவை...“பறவைகளுக்கும் துறவிகளுக்கு நிரந்தரமான சரனாலயம் இருப்பதில்லை நானும் ஒரு பறவைதான் நிரந்தரம் என்பதையே அசைளகர்யமாக கருதும் பறவைநான்.... அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் இந்த உலகில் ஏராளம்.... உங்களை சந்தித்து கூட அப்படி பட்ட ஒரு ஆச்சர்யம்தான்... ச்சே என்ன வரிகள்... அதனால்தான் இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது...

தன் தொப்பை,தொப்புள், மார்பு என்று அழகாக பல படங்களில் வெளிபடுத்திய கிரன் இந்த படத்தில் நன்றாக நடிக்கவும் செய்து இருப்பார் அதற்க்கு உதாரணம் கமலோடு தீயேட்டர் கேபினில் அவர் அழுது பேசும் வசனம் மிகவும் அற்புதம்...அதற்க்கு பக்க பலமாக கிரனுக்கு பாடகி அனுராதா ஸ்ரீராம் பின்னனி குரல் கொடுத்து இருப்பார்...

அதே போல் உமா ரியாஸ்கான், கமல் மேல் அவர் வைத்து இருக்கும் காதலை அவர் வெளிபடுத்தும் இடம் ரொம்ப அழகு.. எவ்வளவு திறமையான நடிகை...எவ்வளவு எக்ஸ்பிரஷன்ஸ்...உமாரியாஸ்கான் போன பின்பு பவுன் என்ற அந்த இளைஞர் உமாவை நினைத்து ஒருதலை காதலாக அழுவதும், அவளை நினைச்சு இங்க அழுவறதுக்கு உன்னோட கேராளா வந்து உன் கல்லயானத்துலயாவத கலந்துக்கி்றேன் என்று சொல்லி, டிரஸ் எடுத்து வைக்கட்ட வேனாமா என்று உரிமையோடு கேட்கும் அந்த சீன் ரொம்ப அருமை...
தியேட்டர்ஆப்பரேட்டர் எடிட்டர் பாடுபாவிங்க அந்த சீனை படத்துல இருந்து தூக்கிட்டாங்க... அப்புறம் நான் அதை டிவிடியிலதான் பார்த்தேன்..,


வித்யாசாகரின் இசையில் என் ஆல்டைம் பேவரிட்கமல் குரலில் யார் , யார் சிவம் அன்பே சிவம் என்ற பாடல்...

பிரபாகரின் கலை மிக அற்புதம் ரயில் விபத்து செட்,புவனேஷ்வர் ரயில் ஸ்டேஷன், போன்றவைகள் எல்லாம் செட் போட்டு எடுத்து இருப்பார்கள்....

இரு காட்சியில் வந்தாலும் யுகி சேது அற்புதமாக செய்து இருப்பார்....அதே போல் கார்டுனிஸ்ட் மதன் ஒரு சீனில் தலைகாட்டி இருப்பார்...

தன் பிளாஷ் பேக் காட்சி சொல்ல ரயி்ல் ஸ்டேஷன் பெஞ்சில் உட்கார்ந்து சொல்லுட் காட்சியில் ஆலம் விழுதுகளில் மழை நீர் சொட்டிக்கொண்டு இருக்க கமல் கதை சொல்ல அந்த இடமும் கமலும் மாதவனும் ஆம்புலன்சில் அந்த பையன் உயிருக்கு போராடும் போது ரோட்டில் ஓரத்தில் உட்கார்ந்து பேசம் காட்சிகளில் ஆர்தர்வில்சன் ஒளிப்பதிவு அருமை... அதே போல் அந்த இரு காட்சிகளின் போது பேசப்படும் வசனம்.... சூப்பர்....

ஒரு நாயால் பள்ளதாக்கில் தலைகுப்புற கவிழும் பஸ், அதில் கமலும் ஒரு பெண் பிள்ளையும் தப்பிக்கின்றார்கள்... அவருடன் வந்த பவுன் ஈடுபாடுகளில் சிக்கி இருக்க, பவுனை காப்பாற்ற போய்தான் கம்லுக்கு இந்த கோரம் ஏற்படுகின்றது... அதன் முதல் காட்சியில் பஸ்சில் வரும் போது அந்த பவுன் கேரக்டர் கமல் மேல் சாய்ந்து தூங்குவார் அப்போது, பவுன் மேல் வெயில் படும் அதனை தடுப்பார்...

கமல் அந்த பவுன் என்ற சகா மேல் எந்தளவுக்கு அன்பு வைத்து இருந்தார் என்பதை விளக்க, அந்த ஒரு காட்சி போதுமானது... (அதுதான் சினிமா மொழி,நுனுக்கம்) அப்படி பட்டவன் ஈடுபாடுகளில் சிக்கி இருந்ததால் எப்படி விட்டு விட்டு போக முடியும்..?? அந்த நேரத்திலும் கமல் வீசிய தூணி கைக்கு எட்டாதபோது நான் என்ன 5,3தானே மெகரை விட குள்ளம்தானே என்று பேசும் காட்சி அருமை... அதுதான் கேரக்டரை மோல்ட் செய்தல்... சின்ன பாத்திரமாக இருந்தாலும் அந்த கேரக்டரின் பாடி லாஙவேஜ் புரிய படவேண்டும்...

ஆயிரம் சொன்னாலும் அந்த சிஸ்டர் வென்னாசா கேரக்டர் படத்தின் மகுடம் எனலாம்.. நான் நிறைய சிஸ்டர்களை நான் பார்த்து இருக்கின்றேன் நல்ல குணத்துடனும், பேய் குணத்துடனும் பார்த்து இருக்கின்றேன்....

கமல் அடிபட்டு ஆஸ்பத்திரியில் பார்த்துக்கொள்ளும் பாங்கு என்ன? அதே போல் எல்லாம் சரியாக சர்ச் வாசலில் கமல் நொண்டி நடக்கையில் மாத்திரை மருந்தை தவறாமல் எடுத்துக்கொள்ளவும் என்று சொல்லி “ i forgot something” என்ற சொல்லி விட்டு கமல் அருகில் வந்து மெலிதாய் அனைத்து உச்சிமுகர்வது கண்களில் நீர் வரவைக்கும் காட்சிகள்... இந்த சீன் பார்க்கறப்பலாம், எனக்கு என் அம்மா ஞாபகம் வந்து தொலைக்குது....

அதே போல் ரயில் விபத்தின் போது அதே சிஸ்டரை பார்த்ததும் “நல்லா
வாட் எ சர்ப்ரைஸ் என்று கூப்பிட அந்த நொண்டி காலோடு ஓடி அந்த சிஸ்டரை கட்டிக்கொள்வது அழுகு....


விபத்தில் ரத்தம் முகத்தில் இருந்த வழிய அப்போது ஒரு பிட்ஸ் முகத்தில் வர அதில் இருந்த அதனை படம் முழுவதும் கொண்டு வந்தது கமல் எனும் பிறவிக்கலைஞனால் மட்டுமே நடிக்க முடியும்...

வேட்டைநாய் என்று சொல்லும் சந்தானபாரதி அதே போல் அந்த பாத்திரத்துக்கு ஏற்ப வாழ்ந்து இருப்பார்... அதே போல் நாசர் தென்னாட்டுடைய சிவனே பேச்சு படம் பார்த்து முடிந்தாலும் நம் நினைவில் நிற்க்கும்....

சுந்தர் சீ கேரியரில் காலரை தூக்கிவிட்டுக்கொள்ளகூடிய படம் இது...

இந்த படத்தை பற்றி இன்னும் எழுதலாம்...படத்தில் நிறைய குற இருந்தாலும்... நிறைய நல்லதையும் சமுதாய விழிப்புனர்வை ஏற்படுத்தியதற்க்காக அதனை மன்னிக்லாம்...

கமல் உங்களிடம் ஒரே கேள்வி? நல்லது செய்வதும், நல்லது நினைப்பதும் இந்த உலகில் தகுதி இழப்பா? கமல், நல்ல சிவம் படம் முழுவதும் நல்லதுதானே செய்தார்,அவர் நல்லது செய்ததால் அவருக்கு காதல் கை கூட வில்லை, விபத்தில் சிக்கி கோரமாகிறார், மொத்த்தில் அவருக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை...பஸ்சில் இறக்காமல் உயிர் பிழைக்கின்றார் அவ்வளவே... அதே போல் நல்லது செய்ய வேண்டும் என்ற உறுதியின்பால் கடைசிவரை எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அரிச்சந்திரன் போல் நல்லது செய்வதை கட்டிகாக்கின்றார்... அவ்வளவே.

ஒரு சாமனியன் பார்வையில் இந்த படம் நல்லது செய்தால் துன்பம் அனுபவிக்க வேண்டி வருமோ என்ற தவறான எண்ணம் கொள்ளவும் வாய்பு இருக்கின்றது... என்னதான் இந்தபடம் இயல்பை அப்பட்டமாக சொன்னாலும் நம் ரசிகர்கள் அந்த இயல்பை ஒத்துக்கொள்ளவில்லை......

Directed by Sundar C
Produced by K. Muralitharan
V. Swaminathan
G. Venugopal
Written by Kamal Haasan
Madhan
Starring Kamal Haasan
R. Madhavan
Kiran Rathod
Nasser
Santhana Bharathi
Music by Vidyasagar
Cinematography Arthur Wilson
Editing by Suresh Pai
Distributed by Lakshmi Movie Makers
Release date(s) Flag of India January 14, 2003
Running time 160 mins
Country India
Language Tamil
Budget $2 million
Gross revenue $3 million


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

72 comments:

  1. எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படம். சுந்தர்.சி யா இயக்கினார் என்ற ஆச்சரியத்தை பல இடங்களில் கொடுத்தபடம். கமல், மாதவன் சம்பாசணைக் காட்சிகளில் மெல்லிய நகைச்சுவையோடு பல காத்திரமான கருத்துகளை கொடுத்த மதன்.

    ஏனோ தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. சிலவேளை நாலு பைட்டு ஐந்து குத்துப்பாட்டு இல்லாத காரணமோ தெரியாது.

    ReplyDelete
  2. "நாத்திகம் பேசும் நண்பர்கெல்லாம் அன்பே சிவமாகும்..." பாட்டு நான் மிக ரசித்த பாடல்.

    ReplyDelete
  3. விக்ரமின் பிதாமகனோடு “தேசிய விருது”க்காக போட்டியிட்ட படம். ஆனால் விக்ரமிற்கு அடித்தது லாட்டரி

    ReplyDelete
  4. படத்தை போலவே விமர்சனமும் superb. இது போன்ற படம்களில் குறைகள் அதிகமாய் சுடிகடமல் இருப்பதும் சிறப்பா உள்ளது. உங்கள் விமர்சனம் வாசிப்பில் இருந்து இந்த படத்தை திருபயும் பார்க்க வேண்டும்

    ReplyDelete
  5. Dear Sir,

    You missed few important points in Anbe Sivam..

    In Orissa hotel, Madhavan will be sleeping in bed. Kamal will lie down in floor. If you notice that scene carefully, Kamal's 1 leg will be lengthy than the other.. If my memory goes right, left leg will be lengthier than the right leg.

    This particular scene wud have been shot in top angle, so that this leg-length difference is shown carefully and clearly.

    Classic scene.

    Also, the scenes were Kamal will be with the Nun, it's something which I cant forget.. Nalla, whenever that Nun calls Kamal, I will remember my mother immediately.

    Sadly, Anbe Sivam did not run properly, even though it had superb story and day-to-day problems brought to limelight.

    Kamal is really a class of his own, he needs no inputs.. Just the scene, he will do it with superb perfection..

    Suddi.

    ReplyDelete
  6. பிரியதர்சன் தான் இந்த படத்தை முதலில் இயக்குவதாக இருந்தது என கேள்வி. சில இடங்களில் கமலையே தூக்கி சாப்பிட்டிருக்கும் மாதவனை பற்றி கூறாமல் விட்டு விட்டீர்களே

    ReplyDelete
  7. தமிழ் சினிமாவில் tsunami பற்றி பேசிய முதல் படம். இந்த படத்தில் வசனத்தில் வந்த கட்சிகளை நான் எனது வாழ்வில் 2004 dec 26 நேரில் பாத்தேன்.

    ReplyDelete
  8. நடிப்பரசனுக்கு சொல்லியா கொடுக்கனும்.

    செம கிளப்பள்ஸ் படம்

    மேடியும் செம ரேஸ்


    [["Planes,Trains and Automobil” என்ற ஆங்கில படத்தின் ஆதார தழுவல்தான்]]

    இது புது தகவல் (எனக்கு)

    ReplyDelete
  9. அருமை ஜாக்கி.

    நன்றியும் கூட.

    ReplyDelete
  10. Palamurai paarthu rasicha padam..Madhavan pathiyum solli irukalame..Krish

    ReplyDelete
  11. //(ANBESIVAM) அன்பேசிவம்.. பார்த்தே தீர வேண்டிய படம்.//

    எப்போ? தியேட்டரில் போய் பார்த்து ஆதரிக்காமல் ,பின்னர் ஓசியில் டிவியில் போடும் போதா?

    எனக்கு தெரிந்து இந்த படத்தை சிலாகிக்காதவர் மிகக்குறைவு ..பின்னர் எப்படி இந்த படம் ஓடவில்லை என்று பார்த்தால் "சே! இந்த படம் ஓடவில்லையா?" என அங்கலாய்பவரில் முக்காவாசி பேர் இந்த படத்தை ஓசியில் டிவியிலோ அல்லது DVD-யிலோ பார்த்தவர்கள் . அப்புறம் எப்படி ஓடும்?

    ReplyDelete
  12. நல்ல அலசல்.

    நான் இதுவரை மூனு நாலு முறை பார்த்திருப்பேன்.

    தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  13. Great Movie ..

    as you said, you can read, watch this movie any number of time..It is kamal's mater piece

    thanks for review..

    VS Balajee

    ReplyDelete
  14. கலக்கல்...

    சுவாரஸ்ய வலைப்பதிவர் விருது வாங்கியமைக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  15. அருமை அருமை

    எத்தனை முறை பார்த்தாலும் இறுதி காட்சியில் நம் மனம் கணத்து போய் விடும்.

    அந்த நாள் முழுவதும் அந்த கமல்தான் நெஞ்சினில் இருப்பார்.

    அருமையா விமர்சனம் பண்ணியிருக்கீங்க.

    ReplyDelete
  16. Its a classic film, You should give creit to Pralayan the street play artist of Kerala. I guess he only has written the dialogues and screenplay with Kamal.

    Salangai oli, moondraam pirai, 16 vayadhinile, mahaanadhi, unnal mudiyum tambi, virumnaadi (chandiyar) , Dasaavatharam are gr8 movies.

    ReplyDelete
  17. நல்ல விமர்சனம்

    ReplyDelete
  18. அருமையான திரைப்படத்தை ரொம்ப அருமையா விமர்சனம் பண்ணி இருக்கிங்க. அன்பேசிவம் என்னுடைய ஆல்டைம் ஃபேவரிட்டில் ஒன்று

    ReplyDelete
  19. கமலும் மாதவனும் பேசிக்கொள்ளும் அல்லது ஆர்ஃயூமெண்ட்டில் கமலுக்கு வசதியாக/புத்திசலித்தனமாக பதில் அளிக்க மாதவன் கேள்வி கேட்பது
    மாதிரி வசனங்கள் எழுதிக்கொள்வது
    எப்படி யதார்த்தம்?

    செயற்கைத்தனம் தெரிகிற்தே?

    ReplyDelete
  20. //எல்லாம் சரியாக சர்ச் வாசலில் கமல் நொண்டி நடக்கையில் மாத்திரை மருந்தை தவறாமல் எடுத்துக்கொள்ளவும் என்று சொல்லி “ i forgot something” என்ற சொல்லி விட்டு கமல் அருகில் வந்து மெலிதாய் அனைத்து உச்சிமுகர்வது கண்களில் நீர் வரவைக்கும் காட்சிகள்...//

    நானும் மிக நெகிழ்ந்து போன காட்சி இது. அந்த செவிலித்தாய் தனது நீண்ட சிலுவை மாலை தொங்க கமலுக்கு சிகிச்சையளிக்கும்போது பின்னணியில் ஒலிக்கும் அன்பே சிவம் பாடல் அந்தக் காட்சிக்குத் தரும் அர்த்தங்களே அலாதியானவை

    சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் ஜாக்கி நீங்கள் சுவாரஸ்யமான பதிவரேதான்

    ReplyDelete
  21. இது ஒரு அருமையான படம் ஜாக்கி. பல முறை பார்த்த பின்னும் இந்த முறை இந்தியா வந்த பொது ஒரு CD வாங்கி வந்தேன்.
    எனக்கு தெரிந்து தமிழில் வந்த ஒரே Dialogue movie இதுதான்.
    நாய்க்கு பந்து வாங்கி வருவது, last word freek scene, மூக்கில் குத்துவது, மாதவன் ரத்தத்தை கண்டு பயந்து பின்னர் ரத்த தானம் செய்வது, யூகி சேது திருடனாக வரும் சீன், அன்பே சிவம் பாட்டு, கமல் விபத்து நடந்த இடத்திற்கு திரும்ப போவது, கமல் நிஜமாகவே கால் ஊனமானவராக நடப்பது இன்னும் எத்தனையோ சிறப்பான சீன்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
    படத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் இப்படம் ஒரு மைல்கல்.
    என்றும் அன்புடன்
    ஸ்ரீராம் Boston USA

    ReplyDelete
  22. ஜோ/Joe said...
    //(ANBESIVAM) அன்பேசிவம்.. பார்த்தே தீர வேண்டிய படம்.//

    எப்போ? தியேட்டரில் போய் பார்த்து ஆதரிக்காமல் ,பின்னர் ஓசியில் டிவியில் போடும் போதா?

    எனக்கு தெரிந்து இந்த படத்தை சிலாகிக்காதவர் மிகக்குறைவு ..பின்னர் எப்படி இந்த படம் ஓடவில்லை என்று பார்த்தால் "சே! இந்த படம் ஓடவில்லையா?" என அங்கலாய்பவரில் முக்காவாசி பேர் இந்த படத்தை ஓசியில் டிவியிலோ அல்லது DVD-யிலோ பார்த்தவர்கள் . அப்புறம் எப்படி ஓடும்?

    Unmaidhan..Andha "mukkalvasi" la naanum oru vaasi..

    ReplyDelete
  23. ஜாக்கி அண்ணா... என்னதான் சொன்னாலும் Planes Trains Automobiles படத்தின் அப்பட்டமான தழுவல் என்பதுபோல் இப்படத்தின் தரத்தை சாடுபவர்கள் பலர். கமல் கதை சொல்லும் முறையை மட்டும் அந்தப்படத்திலிருந்து எடுத்தார்.. சொன்ன கதை வேறு...அதை யாருமே புரிந்துகொள்வதில்லை........ அன்பே சிவம் Planes Trains Automobiles படத்தின் அப்பட்டமான காப்பி இல்லை என்று அடித்துச் சொன்ன முதல் பதிவர் எனக்குத் தெரிந்து நீங்கள்தான்... இலங்கையில் இந்தப் படம் தியேட்டர்களில் காட்டப்பட்டதாக ஞாபகம் இல்லை எனக்கு

    ReplyDelete
  24. நல்ல படத்திற்கு நல்ல விமர்சனம் ஜாக்கி..
    மீண்டும் அன்பே சிவத்தை கண் முன்னாடி நிறுத்திட்டீங்க பாஸ்..

    ReplyDelete
  25. ஸ்கூல்ல பசங்க படம் ரொம்ப அருவடான்னு சொன்னதால பாக்காம விட்டு பின்னாடி டிவிடில பாத்தப்ப தியேட்டர்ல பாக்காததுக்கு ரொம்ப வருந்தினேன் (அன்பே சிவம் பாட்டுக்காகவாவது பாத்திருக்கனும்). வீட்டுல நான் மட்டும் தனியா உட்காந்து பாத்த அனுபவம் என்னால மறக்கவே முடியாதது. முதல் தடவை பார்த்தப்ப படம் முடிச்சு ஸ்ரோலிங் டைட்டில்சும் முடியரவரை நான் எழவேயில்ல. அப்புறமா எழுந்து போயி மறுபடியும் அன்பே சிவத்தயே போட்டு விட்டுட்டு வந்தேன்.
    இதுல கமல் மட்டுமில்லாம எல்லாருமே நல்லா பண்ணியிருப்பாங்க.

    //விபத்தில் ரத்தம் முகத்தில் இருந்த வழிய அப்போது ஒரு பிட்ஸ் முகத்தில் வர அதில் இருந்த அதனை படம் முழுவதும் கொண்டு வந்தது கமல் எனும் பிறவிக்கலைஞனால் மட்டுமே நடிக்க முடியும்...//

    கமல் அந்த ஹோட்டல் சீன்ல கூட ஒரு கால் குட்டையாயிருக்கிர மாதிரிதான் படுத்திருப்பார்.

    //கடைசியில் கமல் நடந்து போகையி்ல் கமல் எழுதிய கடிதத்தில் வரும் வசனங்கள் என் நெஞ்சை கொள்ளை கொள்ள செய்தவை...//
    எனக்குந்தான். எனக்குந்தான்.

    //பிரபாகரின் கலை மிக அற்புதம் ரயில் விபத்து செட்,புவனேஷ்வர் ரயில் ஸ்டேஷன், போன்றவைகள் எல்லாம் செட் போட்டு எடுத்து இருப்பார்கள்....//
    அந்த ரயில் ஆக்சிடென்டு சீன பொள்ளாச்சில எடுக்கும்போது அந்த வழியா வர ரயில் டிரைவருங்கள்ளாம் ஏதோ உண்மையான ஆக்சிடென்டுன்னு நினச்சு போயி பக்கத்து ஸ்டேசனுல கம்ளைன்டு பண்ணிக்கிட்டேயிருந்தாங்கலாம்.

    ஆஆ.. சொல்ல மறந்துட்டேனெ நல்லா ரசிச்சு எழுதியிருக்கிரீங்க. அருமை...

    அப்புறம் என் பேரு ரமேஷ் தான். எங்கப்பா பேருதான் ராமலிங்கம். அவரு அக்னி நட்சத்திரம் பாத்துட்டாரான்னு தெரியல. இருந்தாலும் டிவிடி வாங்கி போயி கொடுத்துடுரேன். :))

    ReplyDelete
  26. அருமையாக உள்ளது உங்கள் விமர்சனம்

    படம் பாத்த மாதிரி ஒரு உணர்வு

    ReplyDelete
  27. @கே.ரவிஷங்கர்

    very true.The whole film taken to show kamal's intellectual dimension.

    He has copied(decenta inspiration) many movies from hollywood,but he never revealed that and telling us that he is the one who is trying to elevate tamil cinema in world map..all bullshit.

    Sorry kamal fans..kamal films are nowhere near realism.All those are mediocre.

    ReplyDelete
  28. நல்லா இரசிச்சு எழுதியிருக்கிறீர்கள்.மீண்டும் படம் பாத்த மாதிரி ஒரு உணர்வு. நன்றி

    ReplyDelete
  29. நல்லா இரசிச்சு எழுதியிருக்கிறீர்கள்.மீண்டும் படம் பாத்த மாதிரி ஒரு உணர்வு. நன்றி

    ReplyDelete
  30. அருமையான விமர்சனம் ஜாக்கி
    ஒரு புகைபட துறை சார்ந்த உங்கள் புது வித பரிமான காட்சி விளக்கங்கள் சூப்பர்.

    ReplyDelete
  31. என்னைப் பாதித்த படங்களில் ஒன்று. நல்ல நினைவுகளில் பயணிக்கச் செய்ததற்கு நன்றி.

    ஸ்ரீ....

    ReplyDelete
  32. ஏனோ தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. சிலவேளை நாலு பைட்டு ஐந்து குத்துப்பாட்டு இல்லாத காரணமோ தெரியாது.--//

    வந்தியதேவன் நம்மவர்களுக்கு நல்ல சினிமா பார்பது எப்படி என்ற புரிதல் இல்லாததே இதற்க்கு காரணம்...

    ReplyDelete
  33. சமீபத்தில்தான் இந்த படத்தை பார்த்தேன்.....கமல், மாதவன் combination காட்சிகள் சில இடங்கள்ல எரிச்சல் வர்ற மாதிரி இருக்கு....அதோட ரெண்டு பேரும் சும்மா பேசி பேசியே "அன்பே சிவம்" ன்றதை நமக்கு புரிய வைக்க முயற்சி செய்யற மாதிரி இருக்கு

    ReplyDelete
  34. "நாத்திகம் பேசும் நண்பர்கெல்லாம் அன்பே சிவமாகும்..." பாட்டு நான் மிக ரசித்த பாடல்//
    அதிலும் கமலின் ஹைபிட்ச் வாய்ஸ் சான்சே இல்லை..

    ReplyDelete
  35. விக்ரமின் பிதாமகனோடு “தேசிய விருது”க்காக போட்டியிட்ட படம். ஆனால் விக்ரமிற்கு அடித்தது லாட்டரி//

    உண்மைதான் ஆதவன்

    ReplyDelete
  36. படத்தை போலவே விமர்சனமும் superb. இது போன்ற படம்களில் குறைகள் அதிகமாய் சுடிகடமல் இருப்பதும் சிறப்பா உள்ளது. உங்கள் விமர்சனம் வாசிப்பில் இருந்து இந்த படத்தை திருபயும் பார்க்க வேண்டும்//

    நன்றி பாலா தங்கள் பாராட்டுக்கு, நிங்கள் திரும்ப இந்த படம் பார்த்தால் அது என் எழுத்துக்கு கிடைத்த வெற்றி..

    ReplyDelete
  37. In Orissa hotel, Madhavan will be sleeping in bed. Kamal will lie down in floor. If you notice that scene carefully, Kamal's 1 leg will be lengthy than the other.. If my memory goes right, left leg will be lengthier than the right leg.

    This particular scene wud have been shot in top angle, so that this leg-length difference is shown carefully and clearly.//

    உண்மை சுட்டி எழுத மறந்து விட்டேன் நினைத்தேன் ஆனால் மறந்து விட்டேன்...

    ReplyDelete
  38. Also, the scenes were Kamal will be with the Nun, it's something which I cant forget.. Nalla, whenever that Nun calls Kamal, I will remember my mother immediately.///

    சுட்டி ஆனால் இந்த சீனை ரசித்து எழுதியது மட்டும் அல்ல... இதற்க்காக தனி போட்டோ வேறு போட்டு இருக்கின்றேன் பார்க்கவும்...

    ReplyDelete
  39. பிரியதர்சன் தான் இந்த படத்தை முதலில் இயக்குவதாக இருந்தது என கேள்வி. சில இடங்களில் கமலையே தூக்கி சாப்பிட்டிருக்கும் மாதவனை பற்றி கூறாமல் விட்டு விட்டீர்களே//

    தகவலுக்கு நன்றி பிளிச்சிங்...மாதவனை பற்றி குறிப்பிட்டு இருந்தாலும் தனிபட்ட முறையில் சிலாகிக்க வில்லை...

    நன்றி சுட்டிகாட்டியமைக்கு...

    ReplyDelete
  40. தமிழ் சினிமாவில் tsunami பற்றி பேசிய முதல் படம். இந்த படத்தில் வசனத்தில் வந்த கட்சிகளை நான் எனது வாழ்வில் 2004 dec 26 நேரில் பாத்தேன்.//

    ஆம் உண்மைதான்... அனால் பாலா இது எத்தனை பேருக்கு தெரிய போகின்றது..அதே போல் தனுஷகோடி கடல்கோளையும் சொல்லி இருப்பார்...

    ReplyDelete
  41. நடிப்பரசனுக்கு சொல்லியா கொடுக்கனும்.

    செம கிளப்பள்ஸ் படம்

    மேடியும் செம ரேஸ்


    [["Planes,Trains and Automobil” என்ற ஆங்கில படத்தின் ஆதார தழுவல்தான்]]

    இது புது தகவல் (எனக்கு)//

    நன்றி ஜமால் எனக்கும் தான்....

    ReplyDelete
  42. அருமை ஜாக்கி.

    நன்றியும் கூட.//

    நன்றி முரளி கண்ணன்

    ReplyDelete
  43. Palamurai paarthu rasicha padam..Madhavan pathiyum solli irukalame..Krish//

    மன்னிக்கவும் தனிப்பட்ட முறையில் சிலாகிக்கவில்லையே தவிர அவர் நல்ல நடிகர்... முக்கியமாக கமலோடு பேசும் அந்த கடைசிகாட்சி காரில் ஏறச்சொல்லி சொல்லும் காட்சி..

    ReplyDelete
  44. இவ்வளவு பேர் நல்லாருக்குன்னுசொன்ன படம் பெரிய பெயிலியர்.. என்ன கொடுமை ஜாக்கி ..?

    ReplyDelete
  45. எனக்கு தெரிந்து இந்த படத்தை சிலாகிக்காதவர் மிகக்குறைவு ..பின்னர் எப்படி இந்த படம் ஓடவில்லை என்று பார்த்தால் "சே! இந்த படம் ஓடவில்லையா?" என அங்கலாய்பவரில் முக்காவாசி பேர் இந்த படத்தை ஓசியில் டிவியிலோ அல்லது DVD-யிலோ பார்த்தவர்கள் . அப்புறம் எப்படி ஓடும்?//

    இந்த படத்தை நான் காசி தியேட்டரில் என் நான்கு தங்கைகளுடன் போய் பார்த்தேன் அ வேறு விஷயம்...

    படம் திருட்டு விசிடியில் பார்த்தாலும் அது ஓட வேண்டும் ... அந்த நேரத்தில் இயற்க்கையும் சதி செய்தது என்று நினைக்கின்றேன்,..

    ReplyDelete
  46. நல்ல அலசல்.

    நான் இதுவரை மூனு நாலு முறை பார்த்திருப்பேன்.

    தகவலுக்கு நன்றி.//

    நன்றி அக்பர்..

    ReplyDelete
  47. Great Movie ..

    as you said, you can read, watch this movie any number of time..It is kamal's mater piece

    thanks for review..

    VS Balajee//

    நன்றி பாலாஜி....தங்கள் கருத்துக்கும்

    ReplyDelete
  48. கலக்கல்...

    சுவாரஸ்ய வலைப்பதிவர் விருது வாங்கியமைக்கும் வாழ்த்துக்கள்...

    நன்றி செந்தழல் ரவி மிக்க நன்றி

    ReplyDelete
  49. அருமை அருமை

    எத்தனை முறை பார்த்தாலும் இறுதி காட்சியில் நம் மனம் கணத்து போய் விடும்.

    அந்த நாள் முழுவதும் அந்த கமல்தான் நெஞ்சினில் இருப்பார்.

    அருமையா விமர்சனம் பண்ணியிருக்கீங்க.//

    நன்றி இனியவன் தங்கள் முதல் வருகைக்கு... கருத்துக்கும்

    ReplyDelete
  50. Its a classic film, You should give creit to Pralayan the street play artist of Kerala. I guess he only has written the dialogues and screenplay with Kamal.

    Salangai oli, moondraam pirai, 16 vayadhinile, mahaanadhi, unnal mudiyum tambi, virumnaadi (chandiyar) , Dasaavatharam are gr8 movies.//

    நன்றி குப்பன் யாஹு தங்கள் தகவலுக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  51. நல்ல விமர்சனம்//

    நன்றி பிளாக் பாண்டி...

    ReplyDelete
  52. அருமையான திரைப்படத்தை ரொம்ப அருமையா விமர்சனம் பண்ணி இருக்கிங்க. அன்பேசிவம் என்னுடைய ஆல்டைம் ஃபேவரிட்டில் ஒன்று//

    நன்றி ராஜா தங்கள் தொடர் வாசிப்புக்கு... மிக்க நன்றி

    ReplyDelete
  53. கமலும் மாதவனும் பேசிக்கொள்ளும் அல்லது ஆர்ஃயூமெண்ட்டில் கமலுக்கு வசதியாக/புத்திசலித்தனமாக பதில் அளிக்க மாதவன் கேள்வி கேட்பது
    மாதிரி வசனங்கள் எழுதிக்கொள்வது
    எப்படி யதார்த்தம்?

    செயற்கைத்தனம் தெரிகிற்தே?//

    அப்படியா ரவிஷங்கர்???? உங்களுக்கு இத போல் தோன்றி இரக்கலாம் எனக்கு இல்லை தலைவா..

    ReplyDelete
  54. All time favorite film//
    நன்றி கோபி

    ReplyDelete
  55. நானும் மிக நெகிழ்ந்து போன காட்சி இது. அந்த செவிலித்தாய் தனது நீண்ட சிலுவை மாலை தொங்க கமலுக்கு சிகிச்சையளிக்கும்போது பின்னணியில் ஒலிக்கும் அன்பே சிவம் பாடல் அந்தக் காட்சிக்குத் தரும் அர்த்தங்களே அலாதியானவை

    சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் ஜாக்கி நீங்கள் சுவாரஸ்யமான பதிவரேதான்//

    நன்றி ஆசிப் அண்ணாச்சி உங்களை போன்றவர்களின் பாராட்டகள்தான் எனக்கு ஆக்சிஜன்... நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...

    ReplyDelete
  56. இது ஒரு அருமையான படம் ஜாக்கி. பல முறை பார்த்த பின்னும் இந்த முறை இந்தியா வந்த பொது ஒரு CD வாங்கி வந்தேன்.
    எனக்கு தெரிந்து தமிழில் வந்த ஒரே Dialogue movie இதுதான்.
    நாய்க்கு பந்து வாங்கி வருவது, last word freek scene, மூக்கில் குத்துவது, மாதவன் ரத்தத்தை கண்டு பயந்து பின்னர் ரத்த தானம் செய்வது, யூகி சேது திருடனாக வரும் சீன், அன்பே சிவம் பாட்டு, கமல் விபத்து நடந்த இடத்திற்கு திரும்ப போவது, கமல் நிஜமாகவே கால் ஊனமானவராக நடப்பது இன்னும் எத்தனையோ சிறப்பான சீன்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
    படத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் இப்படம் ஒரு மைல்கல்.
    என்றும் அன்புடன்
    ஸ்ரீராம் Boston USA//

    நன்றி ஸ்ரீராம் அப்படி இல்லை நிறைய படம் இருக்கின்றது.. அது பற்றி எழுதுகின்றேன்...மற்றபடி நீங்கள் சொல்லும் எல்லா கருத்தும் உண்மைதான்...

    ReplyDelete
  57. ஜோ/Joe said...
    //(ANBESIVAM) அன்பேசிவம்.. பார்த்தே தீர வேண்டிய படம்.//

    எப்போ? தியேட்டரில் போய் பார்த்து ஆதரிக்காமல் ,பின்னர் ஓசியில் டிவியில் போடும் போதா?

    எனக்கு தெரிந்து இந்த படத்தை சிலாகிக்காதவர் மிகக்குறைவு ..பின்னர் எப்படி இந்த படம் ஓடவில்லை என்று பார்த்தால் "சே! இந்த படம் ஓடவில்லையா?" என அங்கலாய்பவரில் முக்காவாசி பேர் இந்த படத்தை ஓசியில் டிவியிலோ அல்லது DVD-யிலோ பார்த்தவர்கள் . அப்புறம் எப்படி ஓடும்?

    Unmaidhan..Andha "mukkalvasi" la naanum oru vaasi..//

    உங்கள் நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு....

    ReplyDelete
  58. ஜாக்கி அண்ணா... என்னதான் சொன்னாலும் Planes Trains Automobiles படத்தின் அப்பட்டமான தழுவல் என்பதுபோல் இப்படத்தின் தரத்தை சாடுபவர்கள் பலர். கமல் கதை சொல்லும் முறையை மட்டும் அந்தப்படத்திலிருந்து எடுத்தார்.. சொன்ன கதை வேறு...அதை யாருமே புரிந்துகொள்வதில்லை........ அன்பே சிவம் Planes Trains Automobiles படத்தின் அப்பட்டமான காப்பி இல்லை என்று அடித்துச் சொன்ன முதல் பதிவர் எனக்குத் தெரிந்து நீங்கள்தான்... இலங்கையில் இந்தப் படம் தியேட்டர்களில் காட்டப்பட்டதாக ஞாபகம் இல்லை எனக்கு//

    அப்படி சொன்னால் சொல்லிவிட்ட போகட்டும்.. நமக்கு உண்மைதெரியும் அல்லவா....அதே போல் காய்ந்த மரம்தான் கல்லாடி படும்...நன்றி கீத் குமாரசுவாமி..

    ReplyDelete
  59. நல்ல படத்திற்கு நல்ல விமர்சனம் ஜாக்கி..
    மீண்டும் அன்பே சிவத்தை கண் முன்னாடி நிறுத்திட்டீங்க பாஸ்..//

    நன்றி தீப்பெட்டி தங்கள் பாராட்டுக்கு

    ReplyDelete
  60. /பிரபாகரின் கலை மிக அற்புதம் ரயில் விபத்து செட்,புவனேஷ்வர் ரயில் ஸ்டேஷன், போன்றவைகள் எல்லாம் செட் போட்டு எடுத்து இருப்பார்கள்....//
    அந்த ரயில் ஆக்சிடென்டு சீன பொள்ளாச்சில எடுக்கும்போது அந்த வழியா வர ரயில் டிரைவருங்கள்ளாம் ஏதோ உண்மையான ஆக்சிடென்டுன்னு நினச்சு போயி பக்கத்து ஸ்டேசனுல கம்ளைன்டு பண்ணிக்கிட்டேயிருந்தாங்கலாம்.//

    நன்றி ரமேஷ்.. பெயர் மாற்றத்திற்க்கு...மன்னிக்கவும் பொள்ளாச்சியில் செட் போட்டார்களா? தகவலுக்கும் விரிவான பி்ன்னுட்டுத்துக்கும் நன்றிகள் பல...

    ReplyDelete
  61. அருமையாக உள்ளது உங்கள் விமர்சனம்

    படம் பாத்த மாதிரி ஒரு உணர்வு--//

    நன்றி ஸ்டார்ஜன்

    ReplyDelete
  62. @கே.ரவிஷங்கர்

    very true.The whole film taken to show kamal's intellectual dimension.

    He has copied(decenta inspiration) many movies from hollywood,but he never revealed that and telling us that he is the one who is trying to elevate tamil cinema in world map..all bullshit.

    Sorry kamal fans..kamal films are nowhere near realism.All those are mediocre.//


    நான் உங்களுக்கு சொல்வது என்ன வென்றால் இந்த உலகில் நீங்கள் சுயம்பு என்று சொல்ல முடியுமா? பல் விலக்குவதில் இருந்தது குளிப்பதில் இருந்து யாரோ எவரோ எங்ககோ பார்த்த கேட்ட விஷயத்தை தானே செயல்படுத்துகின்றிர்கள்... அது போல்தான் இதுவும் நண்பர்களே...

    ReplyDelete
  63. நல்லா இரசிச்சு எழுதியிருக்கிறீர்கள்.மீண்டும் படம் பாத்த மாதிரி ஒரு உணர்வு. நன்றி//
    நன்றி பிரதீபன் மிக்க நன்றி

    ReplyDelete
  64. சமீபத்தில்தான் இந்த படத்தை பார்த்தேன்.....கமல், மாதவன் combination காட்சிகள் சில இடங்கள்ல எரிச்சல் வர்ற மாதிரி இருக்கு....அதோட ரெண்டு பேரும் சும்மா பேசி பேசியே "அன்பே சிவம்" ன்றதை நமக்கு புரிய வைக்க முயற்சி செய்யற மாதிரி இருக்கு//

    ராஜ் உங்கள் பார்வை அவ்விதம் 32 பேரில் 30 பேர் ரசித்து சிலாகித்துள்ளனர்...
    நன்றி ராஜ்

    ReplyDelete
  65. இவ்வளவு பேர் நல்லாருக்குன்னுசொன்ன படம் பெரிய பெயிலியர்.. என்ன கொடுமை ஜாக்கி ..?//

    இவர்கள் எல்லாம் ஹை கிளாஸ் கேபிள்...கைலி கட்டி காஜா பீடி வளிப்பவனுக்கு அந்த படம் பிடிக்கவில்லை...

    ReplyDelete
  66. //கம்யுனிசம் என்பவர்கள் தெருவில் உண்டிகுலுக்குவோர் என்று முன்னாள் முதல்வர் சட்டமன்றத்தில் நக்கலடித்தவர்...அவர்கள் அப்படி அல்ல, இன்றளவும் விளிம்புநிலை மனிதர்களுக்காக தன் சுக துக்கங்களை இழந்து போராடும் சகாக்கள் நிறைய என்பதை மிக அற்புதமாக சொல்லி இருக்கின்றார்கள்...//

    சாதாரண வார்டு கவுன்சிலர்கள் அடிக்கிற கொல்லைகள் தொல்லைகளும் நாட்டில் தாங்க முடியாத பொழுது, இன்னமும் எளிமையான துய்மையான வாழ்கை வாழும் ஐயா நல்லக்கன்னு, மதுரையில் உள்ள எம்.எல்.ஏ தோழர் நன்மாறான் மற்றும் தற்பொழுது திருநெல்வெலி பகுதியல் தேர்ந்தேடுக்கப்பட்ட நாடாழுமன்ற உறுப்பினர் இது போல் இன்னும் பல்ஆயிரக்கணக்கான தோழர்கள் வாழ்கையை வாழந்து கொண்டிருக்கின்றனர்..

    மக்களிடம் சுரண்டி திங்கு அட்டைப்பூச்சிகளுக்கு மத்தியல் (இதுபோல் கூட்டம் நோய்வந்தோ அல்லது உடன்இருப்பன் உயிர் கூடித்தொ செத்தொழியும்) இதுபோல் மாணிக்கங்களும் வாழந்து கொண்டிருக்கின்றனர்...

    மற்றும் "அன்பெ சிவம்" மிக அருமையான படம்..
    இப்படத்தின் மையக்கருத்து "வேசத்தில் ஏமாறதே தோழ"

    ReplyDelete
  67. அருமையான விமர்சனம் ஜாக்கி
    ஒரு புகைபட துறை சார்ந்த உங்கள் புது வித பரிமான காட்சி விளக்கங்கள் சூப்பர்.//
    நன்றி புதுவை சிவா...

    ReplyDelete
  68. என்னைப் பாதித்த படங்களில் ஒன்று. நல்ல நினைவுகளில் பயணிக்கச் செய்ததற்கு நன்றி.

    ஸ்ரீ....//

    நன்றி ஸ்ரீ தொடர் வாசிப்புக்கு

    ReplyDelete
  69. மக்களிடம் சுரண்டி திங்கு அட்டைப்பூச்சிகளுக்கு மத்தியல் (இதுபோல் கூட்டம் நோய்வந்தோ அல்லது உடன்இருப்பன் உயிர் கூடித்தொ செத்தொழியும்) இதுபோல் மாணிக்கங்களும் வாழந்து கொண்டிருக்கின்றனர்...

    மற்றும் "அன்பெ சிவம்" மிக அருமையான படம்..
    இப்படத்தின் மையக்கருத்து "வேசத்தில் ஏமாறதே தோழ"//

    நன்றி சகா தங்கள் விரிவான பின்னுட்டத்துக்கும் பகிர்தலுக்கும்

    ReplyDelete
  70. மனது சோர்வடையும் போதெல்லாம் நான் கண்டு கழிக்கும் படம் இந்த அன்பே சிவம். வெற்றி பெற்ற படங்களெல்லாம் சிறந்த படங்கள் அல்ல சிறந்த எல்லா படங்களும் வெற்றி பெறுவதும் இல்லை.

    ReplyDelete
  71. என்னால், முடிச்ச வரை உங்க கேள்விக்கு பதில் சொல்ல முடியும், சைக்கலாஜிக்கலா பார்த்தா, நாம மனசுக்குள்ள நாம எப்படியோ? அது போலதான்... நாம வெளியிலயும்... எண்ணம் போல் வாழ்வுனு அப்பயே சொல்லி இருக்காங்க....
    அதனால, நல்லது செய்தாம் எதுவுமே, கிடைக்காதுனு... நினைக்கலாம். ஆனா எப்பயுமே நல்லது செய்றவங்க... தியாகம் பண்ணரவங்களுக்கெல்லாம், அவங்க செய்யற செயலே, மனதிருப்திய தந்துடுது. மத்த விஷயங்கலெல்லாம் அவங்க மனநிலைக்கு பெருசா தெரியாது. இது என்னோட கருத்துதான். இது எவ்வளவு உண்மைனு எனக்கே தெரியாது.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner