(AGNINATCHATRAM) அக்னி நட்சத்திரம் (மீள்பதிவு)




நான் சினிமா மீது காதலான கதையும், என்னை முதல் முதல் ஈர்த்த படமும்...


தொலை தொடர்பு அதிக வசதிகள் இல்லாத என் பால்ய பருவமான 1980களில் நான் விழுப்புரத்தில் வசித்த என் பாட்டி வீட்டிற்க்கு எல்லா லீவுகளுக்கும் சென்றுவிடுவேன்.
அப்போதெல்லாம் எப்படி நகர்வு படங்களின் மேல் காதலாக தமிழ் சமுகம் இருந்ததோ அதே போல்தான் எனக்கும், அந்த நகர்வு படங்களின் மேல் ஒரு அலாதி பிரியம்..

என் அம்மா அந்த காலத்து பியுசி. தன் மகன் ரொம்பவும் ஒழுக்கம் உள்ளவனாக வளரவேண்டும் என்று பேராசைப்பட்டாள்.
என் அப்பாவுக்கு கைத்தொழில் என்று ஏதும் இல்லை. பிற்காலத்தில் என்நிலை குறித்து அப்போதே என் அம்மா கவலை பட்டாள். நான் என்னவோ அப்போது ஐஏஎஸ் பரிச்சைக்கு படிப்பது போல் என்னை எந்த சினிமாவுக்கு அழைத்து போக மாட்டாள்.


எப்போதாவது ரிலி்ஸ் ஆகும் கந்தன் கருனை, பக்த பிரகலாதா,சரஸ்வதிசபதம்,திருவிலையாடல் போன்ற படங்களுக்கு அழைத்து போய் என்னை பக்தி பழமாக ஆக்கினாள். ஆனால் அவள் மட்டும் எல்லா படங்களையும் பார்த்து விடுவாள். படம் பார்த்து விட்டு அந்த படத்தின் கதையை அரிசி கலையும் போது மிக அற்புதமாக சொல்லுவாள்.

“அப்புறம் அவன் கதவை திறந்து பார்த்தா, அவ அந்த இடத்தில இருக்க மாட்டா, எங்க போயிருப்பா?”

அம்மா எங்கம்மா போயிருப்பா சொல்லும்மா? என்று கேள்வி கேட்டால் போய் அரை லிட்டர் கடலை எண்ணையும் கொஞ்சம் கொத்தமல்லிதழையும் வாங்கி வா அப்புறம் அம்மா கதை சொல்றேன் என்று சொல்லுவாள்....

சீக்கரம் ஓடிபோய் கடலை எண்ணெய், வாங்கிவாட செல்லம் என்று சொல்லி அந்த கதையில் சஸ்பென்ஸ் வைத்து வீட்டு வேலைகளை வாங்கி கொள்ளும் சாகசகாரி.

எனக்கு படம் பார்க்காமலே ரஜினியும், கமலும், அம்பிகாவும் மனத்திரையில் காட்சிகளாக உருவெடுத்தார்கள். அந்த அளவுக்கு எனக்கு சினிமா ஆசை ஊட்டியது என் அம்மா எனலாம். ஆனால் எனக்கு சினிமா மீது அதிகமான மோகத்துக்கு காரணம் என் பாட்டி சத்யா என்றால் அது மிகை இல்லை.

என் பாட்டியை பற்றி சொல்ல வேண்டும். அவள் ஒரு எம்ஜியார் படபைத்தியம். ஏன் அவள் எம்ஜியார் பைத்தியமானால் என்பதற்க்கு ஒரு சிறிய பிளாஷ் பேக்...

என் தாத்தா சொக்கலிங்கத்துக்கு முதல் மனைவி என் அம்மாவை பெற்ற பாட்டி சத்யா அவர்கள்.
அந்த காலத்திலேயே கடின உழைப்பாளி எங்காவது கட்டிட வேலை நடந்தால் சாரத்தில் ஏத்து சத்யாவதியை என்று சொல்லுவார்களாம். ஏன் என்றால், அந்த அளவுக்கு ஆண்பிள்ளை போல் எந்த பயமும் இல்லாமல் சாரத்தில் நின்று வேலை செய்யும் பெண்மணி.


என்தாத்தா என் பாட்டியின் தங்கையை ஒரு சுபயோக சுப தினத்தில் படுக்கையில் வீழ்த்த, என் பாட்டிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது... நான் உயிரோடு இருக்கறப்பவே உனக்கு என் சொந்த தங்கச்சி கேட்குதா? என்று கோபத்துடன்சேலை தலைப்பை உதறி தோளில் போட்டுக்கொண்டு அப்புறம் அதை இடுப்பிலும் செறுகிக் கொண்டு, தன் ஒரே மகளான என் அம்மாவை தர தர என இழுத்துக்கொண்டு பண்ருட்டியில் இருந்து விழுப்புரத்துக்கு அழைத்து வந்து விட்டாள்.

அப்புறம் என் பாட்டி தெருத் தெருவாக ஜாக்கெட் பிட் வித்து ஒற்றை ஆளாக என் அம்மாவை பத்தாவது வரை படிக்க வைத்து, எவனோடும் ஓடிப்போகாமல் கண்ணியமாக வளர்த்து என் அப்பாவுக்கு கட்டிக்கொடுததாள்.

அதன் பிறகு என் தாத்தாவை என் அம்மாவின் கல்யாணத்துக்கு பாத பூசை செய்வதற்க்காக, தாத்தாவோடு முகம் கொடுத்து என் பாட்டி பேசியதாக சொல்வார்கள். அது ஒரு உழைப்பின் கதை அதை அப்புறம் பார்க்கலாம்.

தான் இருக்கும் போதே தன் தங்கையை கட்டிலில் சாய்த்த என் தாத்தாவை நினைக்கும் போது என் பாட்டி எவ்வளவு மனதுக்குள் புழுங்கிபோயிருப்பாள்,அதே நேரத்தில் திரையில் பெண்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் வரிந்து கட்டி களம் இறங்கும் ஒரே தலைவர் அந்த காலத்தில் எம்ஜியார்தான். அதனாலே எம்ஜியார் என் பாட்டிக்கு ஆதர்ச புருசனாக திகழ்ந்தார்.


நான் காலண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வு முடிந்த லீவு நாட்களில், என் பாட்டி வீட்டுக்கு செல்வேன். என் பாட்டி வீடு விழுப்புரத்தில் மந்தக்கரையில் உள்ள அமைச்சார் கோவில் வளாகத்தில் ஒரு ஒன்டு குடுத்தனத்தில் இருந்தது...என் பாட்டியின் அண்ணன் தயவில் என் பாட்டி வாழ்ந்தார்.நாளெல்லாம் ஜாக்கெட் பிட் தெரு தெருவாக விற்று வந்த பெண்மணியின் சோர்வை போக்கியது எம்ஜியார் படங்கள்தான்.

அதனாலே அதிகமான எம்ஜியார் படங்களுக்கு நான் வலுக்கட்டாயமாக அழைத்து போக பட்டேன். அந்த படங்கள் அந்த காலத்தில் ரசிக்க தக்கவையாகவே இருந்தன.
கந்தன் கருணைக்கும் பக்த பிரகலாதாவுக்கும் இது எவ்வளவோ தேவலையாக இருந்ததது.
சிவாஜி நடிக்க தெரியதாவன்... எம்ஜியார்தான் நன்றாக நடிப்பார் என்ற வன்மத்தை எனக்கு ஊட்டியவள் எனது பாட்டிதான், எம்ஜியார் படத்தின் வசனங்கள் என் பாட்டிக்கு அத்துபடி.

எம்ஜியார் திரையில் தோன்றியதும் தேங்காய் உடைத்து விசில் அடித்த பெண்மணி தமிழகத்தில் என் பாட்டியாகத்தான் இருப்பாள் என்பதில் சிறிதளவும் எனக்கு அவமானம் இல்லை. கடந்த கால வாழ்க்கையின் வலிகளையும், ரன ,மன வேதனைகளையும் என் பாட்டிக்கு அந்த காலத்தில் மற்க்க வைத்தது எம்ஜியார் படங்கள்தான்.

பொதுவாக நீங்கள் பார்த்தீர்கள் என்றால் எம்ஜியார் ரசிகர்கள் எல்லாம் விளிம்பு நிலை மனிதர்களாகவே இருப்பார்கள் அதற்க்கு காரணம் கொடுங்கோலனான வீட்டு உரிமையாளர் நம்பியார் சின்னத்தப்புக்கே சாட்டையை உருவி வேலைக்காரர்களை போட்டு உதைப்பார். அவரையே எம்ஜியார் போட்டு புரட்டி புரட்டி எடுப்பார், அது எல்லா வேலைக்காரர்களும் தன் முதலாளியை புரட்டி எடுப்பது போல் மனதில் உருவகப்படுத்தி கொள்வார்கள் அதனால் அவர்கள் மத்தியில் எம்ஜியார் போற்றபட்டார்.


எம்ஜியார் எல்லா தவறுகளையும் தன் படங்களில் தட்டிக்கேட்டவர், அதனாலே அவர் எல்லோருக்கும் பிடித்து போனார். அதே போல் அவர் ஏற்ற பாத்திரங்கள் அனைத்தும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியல் பிரச்சனைகளை மையப்படுத்தியே இருக்கும். படகோட்டி ,ரிச்சாக்காரன் போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம்.

அப்புறம் தொலைக்காட்சி வருகை, நான் தொலைக்ககாட்சியில் முதல் முதலாக பார்த்த படம் கே ஆர் விஜயா, சிவாஜி நடித்த செல்வம் திரைப்படம்தான். அப்புறம் எம்ஜிஆருக்கு பிறகு ரஜினி என் ஆதர்ச நாயகனாக மாறினார்.அப்போது சிவாஜியை திட்டியது போல் இந்த முறை நான் கமலை திட்டினேன்.

நான் முதன் முதலாக தனியாக பார்த்த படம் ரஜினி நடித்த விடுதலை திரைப்படம் . அப்போது தங்கமணி ரங்கமணி வாமா நீ என்ற பாடல் என் தேசிய கீதம்.



அதன் பிறகு என்னை சலனப்படுத்திய படங்கள் நிறைய என்றாலும் என்னை நிமிர்ந்து உட்கார வைத்த தமிழ் சினிமா,

இன்றளவும் தமிழ் சினிமா மேல் காதலாக இருக்க வைத்த தமிழ் சினிமா,

இன்றளவும் சினிமா மீது பைத்தியமாக மாற வைத்த தமிழ் சினிமா,

தொடந்து 5 மாதங்கள் இரவு காட்சி பார்க்க வைத்த தமிழ் சினிமா,

சினிமாவில் ஏதாவது செய்ய வேண்டும என்ற உத்வேகத்தை ஏற்படுத்திய தமிழ் சினிமாக்களை பற்றி இப்போது பார்ப்போம்....

குறிப்பு / எனக்கு சினிமா மீது காதல் ஏற்படக்காரணமான என் பாட்டி சத்யாவதியும், என் அம்மா ஜெயா என்கிற ஜெயலட்சுமியும் தற்போது உயிரோடு இல்லை.
நான் இயக்கிய குறும்படம் மாநில அளவிலான போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற போது அந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள, என் அம்மாவை எலும்பு நொறுங்க அனைத்து மகிழ நினைத்தேன். ஆனால் என் அம்மா இப்போது உயிரோடு இல்லை.அவள் என்னை உச்சி முகர்ந்து நெற்றி முத்தம் கொடுத்த அந்த உதடுகள் இப்போது இல்லை.

என்ன செய்ய, காசநோய் முதலில் என் பாட்டிக்கு வந்து, அப்புறம் அது என் அம்மாவுக்கு தொற்றி இருவரும் இறந்து போனார்கள். கடைசி வரை சந்தோஷ காற்றை சுவாசிக்காமல் இருவரும்இறந்து போனார்கள்.சுதந்திர இந்தியாவில் காசநோயல் இருவர் மடிந்து போனார்கள் அப்போது அந்தளவுக்கு விழிப்புனர்வு இல்லை.

காச நோய் விளம்பரத்தில் சமுகப் பொறுப்புடன் கலந்து அந்த காச நோய் விளம்பர படங்களில் நடித்து, கிராமத்து மக்களிடம் காசநோய் பற்றி விழிப்புனர்வு இப்போதும் ஏற்படுத்தும் நடிக்ர் சூர்யா என்றென்றும் என் நன்றிக்கு உரியவர்.
சிவாஜிக்கு பிறகு என் அம்மாவுக்கு சாகும் வரையில் பிடித்த ஒரே நடிகர் கமலஹாசன்தான்

எனக்கு சினிமாவை முதன் முதலில் சுவை பட அறிமுகப்படுத்தி ,சொல்லிதந்த குரு
என் தாய்.....திருமதி ஜெயலட்சுமிவடமலை அவர்கள்.....


வாழ்வில் எவ்வளவோ படங்கள் பார்த்து இருக்கிறோம். ஆனால் எல்லா படங்களும் மனதில் நிற்பதில்லை. சின்ன வயதில் எனக்கு சிவாஜி படங்களை பிடிக்காது ஏனென்றால் அவர் எப்போதும் கண்ணீரும் கம்பலையுமாக இருப்பார், என் அம்மாவுக்கு சிவாஜி படங்கள்தான் பிடிக்கும். என் அம்மாவுக்கு சிவாஜி படம் பார்த்து புடவை தலைப்பில் மூக்கை சிந்த வில்லை என்றால் தூக்கம் வராது.

என் பாட்டிக்கு கை தட்டி விசில் அடித்து குஜாலாக ஒரு படத்தை பார்க்க வேண்டும்.
நம்பியார் நாலு அடி வாங்கினால்தான் அன்னைக்கி ராத்திரிக்கு எங்க பாட்டிக்கு தூக்கம் வரும்.
காரணம், என் பாட்டி நம்பியார் உதை வாங்கினால் என் தாத்தா உதை வாங்கியது போல் எண்ணி மகிழ்வாள்.
என் பாட்டிக்கு பரலோகத்தில் இடம் கிடைத்த உடன்,அதன் பிறகு படம் பார்க்க நானும் என் அம்மாவும் செல்லுவோம். ஒரு வகையில் நல்ல சினிமா பார்க்க கற்றுக்கொடுத்தது என் தாய் என்றால் அது மிகையில்லை.

முதல் மரியாதை படம் வந்த போது அந்த படத்தை என் அம்மாவும் என்சித்தியும் சிலாகித்து பேசி இருக்கிறார்கள்.அது எனக்கு வயிற்றெரிச்சலாக இருக்கும். அப்போது என் தானை தலைவன் நடிகர் ரஜினிதான். யாராவது ரஜினி பற்றி, அவர் படத்தை பற்றி, அவதூறாக பேசினால் அவ்வளவுதான் எதிராளி மூக்கு வெற்றிலை பாக்கு போட்டுக்கொள்ளும். அந்த அளவுக்கு ரஜினி வெறி.... முதலில் எம்ஜியார் வெறி அப்புறம் ரஜினி.


1987ல் நாயகன் படம் வந்தது அந்த படம் என்னுள் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த படம் கற்றது தமிழ் போல் ரொம்ப சோக மாக இருந்தது. அந்த வயதில் அந்த சோகத்தை தாங்கும் பக்குவம் என்னிடத்தில் இல்லை எனலாம்.
இன்று அந்த படத்தை கொண்டாடும் அளவுக்கு அந்த வயதில் அந்த படத்தை நான் கொண்டாட வில்லை. வாழ்க்கை அப்போது வறுமையை எனக்கு அறிமுகப்படுத்த வில்லை.

அடுத்த வருடம் அதாவது 1988ல் அந்த படம் ரிலிஸ் ஆகியது. அந்த படம் என்னை என்16ஆம் வயதில் வசீகரித்தது. அந்த படம் ஒருவெள்ளிக்கிழமை ரிலிஸ் ஆகியது . அந்த படம் கடலூரில் அப்போது ரமேஷ் இப்போது பாலாஜி என்றழைக்கபடும் தியேட்டரில் திரையிடப்பட்டது.

படத்தின் முதல் நாளே காலை காட்சியை என் அந்தை பையன் தாமோதரனும் சம்ட்டி என்பவரும் அந்த படத்தை பார்த்து விட்டு படம் ரொம்ப நல்ல இருக்கு...
அதுவும் சினிமா போட்டோகிராபி ரொம்ப நல்லா இருந்ததாக சொல்ல , கடலூர் கூத்தப்பாக்க கிராமத்தில் போட்டோகிராப்பி் நல்லா இருக்கு என்று முதல் டேக்னிக்கள் வார்த்தையை உபயோகப்படுத்தியது என் அத்தை மகன் தாமோதரன்தான் என்பேன்.

பொதுவான விஷயங்கள் அதிகம் கற்றுக்கொண்டது. என் அத்தைபையன் தாமோதரனிடம்தான். அவன் பார்த்து விட்டு போட்டோகிராப்பி படத்துல நல்லா இருக்கு என்று சொல்லிய பிறகு, நான் அந்த படத்தை பார்க்க வில்லை என்றால் என் பரம்பரைக்கே அவமானம் என்பதாலும், அந்த படத்தை நான் அடுத்த காட்சியான மதிய காட்சி பார்க்க தீர்மானித்தேன் . பையில் பரம்பைசா கிடையாது கடவுள் மனது வைக்க வேண்டும். கடவுள் மனது வைத்தார். கடவுள் என் அம்மா உருவில் என் பணத்தேவையை நிறைவேற்றினார்.

என் அம்மா அழைத்தார் அதுவும் எப்படி தனுசு ராஜா என்று ,

“போய் கருப்பன் கடையில பத்துக்கிலோ அரிசி வாங்கி வாப்பா.. ”

எங்கம்மாவுக்கு வேலை நடக்க வேண்டும் என்றால் ராஜா கூஜா என்றெல்லாம் என் பெயருடன் சேர்த்து என்னை வசியம் செய்வது உங்கள் எல்லோருக்கும் முன்பே தெரிந்து இருக்கும்.


ஒரு கிலோ அரிசி 5 ருபாய் பத்துக்கிலோ அரிசி 50 ரூபாய் அதற்க்கு மேல் என் அம்மாஒரு நையா பைசா கூட கொடுக்கமாட்டாள். பாவி மக 25 பைசா கொடுத்து தேன்மிட்டாய் வாங்கி சாப்பிட கூட கொடுக்கமாட்டாள். எனென்றால் ஒரே பையன் கெட்டுவிடுவேன் என்ற பயம்தான் காரணம்.

எனக்கு அப்போதுதான் சத்தியம் கம்ப்யூட்டர் ராஜூவை போல் என் மனம் வேலை செய்ய தொடங்கியது, நான் பத்துக்கிலோ அரிசிக்கு வாங்குவதற்க்கு பதில், 9 கிலோ அரிசி வாங்கினேன் எனக்கு 5 ருபாய் கிடைத்தது. உலகில் எந்த அம்மாவாவது வாங்கிய அரிசியை அளந்து பார்க்க முடியுமா? கிராமத்து அம்மாக்கள் அந்த அளவுக்கு டேலன்ட் இல்லை. அதை விட பிள்ளை மேல் அவ்வளவு நம்பிக்கை.

நான் பரபரப்புட்ன் வேர்த்து விறு விறுக்க சைக்கிளில் தியேட்டர் சென்றேன் 2,50 டிக்கெட்வாங்கினேன். தியேட்டரில் படம் போடாததால் விசில் பறந்தது. அது நல்ல வெயில்காலம் . படத்தை போட்டார்கள் ஒரு சன்ரைஸ் காட்சி அது....

மேகத்தில் மறைந்து இருக்கும் சூரியன் மெல்ல மெல்ல வெயியே வந்து சுட்டு எரிக்கும் சூரியனாக மாறும் காட்சி. அதில்தான் படத்தின் டைட்டில் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பெயர்கள் போடப்பட்டது.

சூரியன் மேகத்தில் மறைந்து இருக்கும் போது எந்த ஆடியோவும் இருக்காது.மெல்ல மெல்ல கதிர் பெரிதாக மாறும் போது நகரம் மெல்ல உறக்கம் கலைந்து எழுந்து பரபரப்பாக மாறுவதை மிக அற்புதமாக ஆடியோவில் வெயிப்படுததி இருப்பார்கள். முதலில் குருவி காக்கா போன்ற பறவைகள் சவுண்டும் பிறகு சைக்கிள் கார்ஹாரன் சவுண்டும், அதன் பிறகு டிராபிக்கில் ஏற்படும் வாகனத்தின் இரைச்சலும் அதன் பிறகு ரயில் விமானம் போன்ற சத்தங்கள் பெரிதாகும் பொது சூரியன் தன் உக்கிரத்தை நகர் முழுவதும் காட்டிக்கொண்டு இருப்பான்.


அந்த படம் ஆரம்பித்து 15 வது நிமிடத்தில் அந்த படடத்தின் வித்யாசத்தை நான் உள்வாங்க ஆரம்பத்தேன். அந்த படம் வழக்கமான படங்க்ளில் வரும் கேரக்டர் போல் பக்கம் பக்கமாக வசனம் பேசவில்லை. எல்லாம் இயல்பாக இருந்தது.

ஒரு அப்பா ,இன்டர் வீயுவில் தகராறு பண்ணிய மகனை அழைத்து ஆறுதல் சொல்கிறார் அடுத்த இன்டர்வியு நடக்கும் இடத்தை சொல்கிறார் அங்கு போய் ஒருவரை பார்க்க சொல்கிறார். அந்த இடத்தில்.

நேற்று கிருஷ்ணனை பார்த்தேன்,

“பிரேக்ஸ் இன்டியா பர்சனல் மேனஜர், அவங்க கம்பேனியில டிரெய்னிஸ் ரெக்ருமன்ட் எடுக்கறாங்களாம். உன்னை பத்தி அவுரு கிட்ட சொல்லி இருக்கேன். கம்பெனி பாடியில இருக்கு, உன்னை இன்னைக்கு 3 மணிக்கு அங்க வந்து பார்க்க சொன்னாரு, என்று சொல்ல ...

வரேன் என்று கிளம்பும் மகனை அசோக் என அழைத்து அங்க கிருஷ்ணன்கிட்ட

“நீ என் புள்ளன்னு சொல்லாத அவுரு சசீலா ரிலேஷனாம்.... அவுரு எங்கயாவது சொல்லி அது இங்க வந்து அன்னெசசரி காம்ளிகேஷன் பிராப்ளம் பாரு”

என்று ஒரு அப்பன் சொன்னால் எப்படி இருக்கும் பெத்த தகப்பன் என்னை அப்பா என்று அடுத்தவனிடம் சொல்லாதே என்று சொல்லும் போது ஒரு பையனுக்கு எப்படி இருக்கும்.

அதே போல் அப்பா சின்ன வீடு வைத்து இருப்பதால் தான் எல்லா இடத்திலும் தான் அவமானப்படுவதாக நினைத்து பொருமும் பெரிய சம்சாரத்தின் மகன்.

என்னை அப்பா என்று சொல்லாதே என்று அவமானப்படுததும் சின்ன சம்சாரத்தின் மகன் என்று இரு துருவங்களில் இருக்கும் வயதுக்கு வந்த மகன்களின் உணர்ச்சி போராட்டம்தான் அக்னி நட்சத்திரம் படத்தின் கதை.

ஒருவர் இரண்டு பொண்டாட்டி வைத்து இருப்பதால் ஏற்படும உறவு சிக்கல்களையும் உணர்ச்சி பிறவாகத்தையும் மிக அற்புதமாக அதன் அழகியல் மாறாமல் சொல்லி இருப்பார் இயக்குநர் மணி.

எழுத்தாளர் பாலகுமாரனை போல் இரண்டு மனைவிகளையும் ஒரே வீட்டில் வைத்துக் கொள்வது என்பது சாத்தியம் இல்லாத விஷயம். அது யாருக்காவது ஒருவருக்கும் கிடைக்கும் பாக்கியம். ரோட்டில் போகும் பெண்ணை பைக் ஓட்டும் போது திரும்பி பார்த்தாலே, போ அவ கூடவே போய் குடும்பம் நடத்து என்று என் மனைவி முகம் திருப்பிக்கொள்வாள்.

அக்னி நட்சத்திரம் படத்தின் கதை இதுதான்.

இரண்டு பெண்டாட்டி வைத்து இருக்கும் விஸ்வநாதனுக்கு மூன்று பிள்ளைகள் முதல் தாரத்து மனைவிக்கு ஒரு பையனும், இரண்டாம் தாரத்து மனைவிக்கு ஒரு பையனும் ஒரு பெண் குழந்தையும் இருக்க.....

இரண்டு மனைவிகளின் ஆண் பிள்ளைகளும் அடித்துக்கொண்டு மங்கம்மாய்வதும், இரண்டு பிள்ளைகளின் அப்பாவான ,விஸ்வநாதனுக்கு எதிரிகளால் ஆபத்து ஏற்படும் போது அந்த இரண்டு பிள்ளைகளின் நிலைப்பாடு என்ன, அவர்கள் இருவருக்கும் ஏற்படும் காதல் என்று, படத்தை படு சுவாரஸ்யமாக எடுத்து இருப்பார் இயக்குநர் மணிரத்னம். படத்தின் கேப்டன் மணி என்றாலும் அவரை தான்டி இரண்டு பேர் அப்போது கொண்டாட பட்டார்கள் அந்த இருவர் ஒன்று இசைஞானி இளையராஜா, மற்றவர் ஒளிப்பதிவாளர் பீசி ஸ்ரீராம்.

இந்த படம்தானா என்று கேட்கும் அத்தனை பதிவர்களுக்கும் ஒரு செய்தி. இந்த படம் வந்து 21 வருடங்கள் ஆகின்றன.அந்த படத்தை நீங்கள் ரசித்தவற்றிர்க்கும் நான் ரசித்த முறைக்கும் உள்ள வேறுபாடுங்கள், இந்த படம் அப்போது ஏற்படுத்திய தாக்கம் ரசனை போன்றவைகளை அலசுவதும், அதனால் ஈர்க்கப்பட்டு இந்த படத்தை பார்த்தவர்கள் அடுத்த முறை பார்க்க வைப்பதும் இதுவரை பார்க்காதவர்கள் இந்த படத்தை பார்க்க வைக்க வேண்டும் என்பதே என் நோக்கம்

படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....

நான் முதன் முதலாக அப்பா சரக்கு சாப்பிடும் போது பக்கத்தில் பெண் உட்காந்து கொண்டு அப்பா இதுதான் கடைசி ரவுண்டு என்றுசொல்லி அப்பாவை தடுக்கும் காட்சியை நான் மிகவும் ரசித்தேன்.

அதே போல் இருபது வருடங்களுக்கு முன்பு மேல்தட்டு வர்கத்தில் பெண்கள் சிகரெட் பிடிப்பதை காட்டி அக்கால கல்லூரி மாணவிகளின் குறும்புகளை காட்டி இருப்பார். ஆனால் இந்த காலத்துல பாத்தியன் சாலையில் நம்ம எதிரேயே ஜீன்ஸ் டி சர்ட் போட்ட பொண்ணு, நல்லா நிதானிச்சு தம்கட்டுது. அது கட்டுற கட்டுக்கு நமக்கு இருமல் வந்து தொலைக்குது.



அஞ்சலி என்ற பெயரை ஒரு எலி ரெண்டு எலி என்று சொல்லி அஞ்சலி என்று அழகாக சொல்லியது இந்த படத்தில்தான்.

பொதுவாக கேமராவுக்கு வெளிச்சம் வந்தால் அதனை கிளார் என்று சொல்லி அதனை பிளாக் கிளாத் அல்லது கட்டர் போட்டு கட் செய்து, காலம் காலமாக எடுத்தார்கள். அந்த கட்டுப்பாட்டை இந்த படத்தில் உடைத்து இருப்பார் பிசி.

இந்த படம் தமிழ் திரை உலகின் ஒளிப்பதிவில் பிரேக்த ரூல்ஸ் மூவி என்றால் அது நூத்துக்கு நூறு உண்மையே.

படத்துக்கு பெயர் அக்னி நட்சத்திரம் என்பதால் படம் முழுவதும் ஒரு அனல் வீசுவது போலவே காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். மிக முக்கியமாக கார்த்திக் முதல் அறிமுக காட்சி, கார்த்திக் மைதானத்தில் விளையாடும் போதுஅவர் தங்கை வந்து அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்பதை சொல்லும் காட்சிகளில் கானல் நீர் பறக்கும். அற்புதமான ஒளிபதிவு...

இந்த படத்தின்இளமை துள்ளல்தான் இந்த படத்தின் பெரும் வெற்றிக்கு அடிப்படை .


வசனங்களும் பக்கம் பக்கமாக இல்லாமல் ரத்தின சுருக்கமாக இருக்கும், உதாரனத்துக்கு உடம்பு சரியில்லாத கார்த்தி்கின் அம்மா ஜெயசுதா படுத்து இருக்க கணவர் விஜயகுமார் பணிவிடை செய்து கொண்டு இருப்பார் அப்போது வரும் கார்த்திக் விஜயகுமாரிடம் நன்றி சொல்லுவார்...

தேக்ஸ்

எதுக்கு?

அம்மாவை பார்த்துகிட்டதுக்கு...

உனக்கு அவ அம்மாவா இருக்கிறதுக்கு முன்னாடி அவ எனக்கு பொண்டாட்டி, நான் நல்ல அப்பாவா இல்லாம இருக்கலாம் ஆனா நல்ல புருசனா என்னால இருக்க முடியும் என்பார்.

மியுஸியம் எதிரே நண்பர்களோடு உட்கார்ந்து இருக்கும் கார்த்திக்கிடம் உதடு குவித்து நிரோஷா லவ்யு சொல்லி காரில் வேகம் எடுக்கும் போது கார்த்திக்கும் நண்பர்களும் பைக் எடுத்து பறக்கும் போது அந்த உணர்ச்சி நம்மையும் தொற்றிக்கொள்ளும். அதே போல் இன்றைய சென்னை மியூசியம் எதிரில் மேம்பாலங்கள இல்லாமல் அது எப்படி இருந்தது என்று பார்க்க இந்த படத்தை பார்க்கவும் நல்ல வரலாற்று பதிவும் கூட....

பிரபு உடற்பயிற்ச்சி செய்யும் போது உங்க அப்பாவுக்கு ரெண்டு பொண்டாட்டியாமே? என்று கேள்வி கேட்டு வாங்கிகட்டிக் கொள்ளும் அமலாவிடம் காதலை சொல்லி அதற்க்கு அமலாமுகத்தில் எல்லா இடத்திலும் கிஸ் கேட்கும் இடம் இளமை குறும்பு.


நிரோஷாவீட்டை கண்டுபிடித்து கார்த்திக் உள்ளே செல்ல பகவான் இளையராஜா பின்னனி இசையுடன் மஞ்சள் துணி போர்த்தியபடி நிரோஷா நடந்து வந்து, அந்த ஒப்புக்கு உடலை சுற்றிய மஞ்சள் துணியையும் எடுத்து தூர கடாசி விட்டு, பொலக் என்று தண்ணீரில் குதித்தபோது தளும்பியது தண்ணி மட்டும் இல்ல, அந்த காலத்து ஜாக்கியோட அந்த சின்ன , பச்ச மனசும்தான்.

பூங்காவனம் பாடலில் நிச்சல் குளத்தில் இருந்து வெயியே வந்து அந்த குளத்தை சுற்றி வந்து டைவிங்போர்டில் நின்று ரெண்டு குதி குதித்து பொலக் என்று தண்ணிரில் குதிக்கும் போது அப்போதும் இந்த ஜாக்கியோட மனசு அப்ப இருந்த நிரோஷா பொண்ணு மேல ரொம்ப பிலாயிடுச்சுபா....பைக்கில் வந்து ஹெல்மட் கழட்டி பத்து ரூபாய்க்குதான் இந்த அலட்டளா? என்று கேட்க, அந்த பணணத்தை விசிறி போல் விரிக்க அதன் பிறகு வரும் ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா பாடல் வரும் போது அப்போது தியேட்டரில் நடந்த கொண்டட்த்துக்கு அளவே இல்லை. தியேட்டரே சாமியாட்டம் போட்டது.

மைதானத்தில் கார்த்திக்வெயிலில் படுத்து இருக்கும் போது மூச்சு இரைக்க ஓடி வந்து புது ஏசி வந்து இருக்கிறார் பேரு கெளதம் விஸ்வநாத் என்ற சொல்ல, புது ஏசிக்கு விஷ் பண்ணிட்டு வரலாம் என்று கார்த்திக்கும் நண்பர்களும் ஓடும் போது ராஜா போட்ட பின்னனி இசை இன்னும் உற்சாக துள்ளல்தான்.

வாரன்ட் இல்லாமல் அரஸ்ட் பண்ண முடியாது என்று கார்த்திக் பேச பிரபு காக்கி சட்டையில் விறைப்புடன் நடந்து வந்து கார்த்திக்கை அரஸ்ட் செய்யும் காட்சியில் ராஜா ராஜாதான். அதன் பிறகு ஜீப்பில் கார்த்திக்போகும் போது பின்னால் ஸ்லோமோஷனில் ஓடிவரும் நண்பர்கள் காட்சி அழகான அழகு...கார்த்திக் பிரபு இருவரும் போட்டி போட்டு நடித்து இருப்பார்கள். பிரபு போலிஸ் விரைப்பை படம் முழுவதும் வெளிபடுத்தி இருப்பார்.

அதே போல் பிசி ராஜா ராஜாதி ராஜன் இந்த பாடலின் போது தண்டவாளத்தில் கார்த்திக் டான்ஸர் வரிசையாக நிற்க்க டாப் லைட் கொடுத்து ரிம் லைட் ஏபெக்ட் கொடுத்து இருப்பார். அதே போல் அந்த பாடலில் லோவ் ஆங்கிளில் ரயில் பெட்டியில் தாவும்காட்சியில் கடலூரில் விசிலி பறந்தது என்றால் யோசித்து பாருங்கள்...படம் முழுவதும் இரவில் வாகனங்கள் வரும் போகும் காட்சிகளை ஸ்டார் பில்லடர் போட்டு ஏடுத்து இருப்பார் பிசி ஸ்ரீராம். படத்தில் அந்த கிளைமாக்ஸ் ஆஸ்பிட்டல் கரண்ட் சார்ட் சர்க்கியுட் ஆன சீன் மாத்திரம் படத்தின் திருஷ்ட்டி எனலாம்.


படத்தின் நெகிழ வைத்த காட்சிகளாக, ஜெயசுதா ஸ்டேஷனில் ஜாமினில் கையெழுத்து போடும் இடம், ரயிலில் கார்த்திக் தங்கையை என் தங்கை என்று பிரபு சொல்வதும்,சிரியசாக இருக்கும் அப்பாவுக்கு பிரசாதம் எடுத்து ஓடி வரும் பெண்ணை தடுக்கும் போலிசை அவள் எங்க பொண்ணுதான் என்றும் சொல்லும் காட்சிகளில் என் கண்களில் நீர்த்திவலைகள்.

முதலும் கடைசியாக இந்த படத்தில் வில்லனாக நடித்த ஆனந் தியேட்டர் ஓனர் உமாபதி தோபார் ராஜா எற்றுஆரம்பித்து வசனம் பேசும் அழகே அழகு. விஜயகுமார் காப்பற்றுவிட்டார் என்று தெரிந்து ஏப்படிடா என்று கர்ஜனையாக உறுமுவதில் ஆகட்டும், தீக்குச்சி கிழித்து கிட்டே வரும் கார்த்திக்கை உப் பென்று ஊதி கை சுட்ற போவுது கண்ணா போய் உங்கப்பன காப்பாத்து என்ற காட்சிகளில் அவருக்கு அப்போது பறந்த விசில் இன்னும் என் செவிகளில்.

என்ன ஒரு சோகம் கால மாற்றத்தில் நடந்தது என்றால் அனந்தியேட்டரும் அதன் நிர்வாகிஉமாபதியும் மண்னோடு மண்ணாகி பொனார்கள் ஆனால் அவர்களின் நினைவுகள் என்றும் நம்மிடம்.

விகே ராமசாமியும் ஜனகராஜும் காமெடி பண்ணாலும் அது தனி டிராக் அதிலும் அந்த பி்எப் படம் பார்க்கும் போது ஏற்படும் குறிக்கீடுகள் காமெடி என்றாலும் அது எல்லோர் வாழ்விலும் கடந்து வந்த நிகழ்வுகள்தான்.

ரோஜா பூ வாடி வந்தது, நின்னுக்கோரி வரனும், ராஜாதி ராஜா போன்ற பாடல்கள் அந்த காலத்து பென்டசி வகை என்றாலும், வாவா அன்னே அன்பே, தூங்காத விழிகள் போன்ற பாடல்களுக்கு ரசிக கண்மணிகள் எல்லோரும் தியேட்டர் விட்டு வெளியே போய் ஒரு தம் போட்டு வந்து உட்கார்ந்தார்கள்..

இன்றைய பிரபுதேவா அன்று முதன் முதலாக பாடலில் தலைகாட்டியது இந்த படத்தில்தான்.

நான் சினிமாவை வெறித்தனமாக காதலிக்க ஆரம்பித்தது இந்த படத்தில் இருந்துதான்... அதே போல் படத்தை படமாக பார்க்காமல் டெக்னிக்கலாக படம் பார்க்க கற்று கொண்டதும் இந்த படத்தில்தான்.

ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்கியராஜ், போன்றவர்கள் தமிழ்சினிமாவை வேறுதளத்துக்க எடுத்து சென்றார்கள் என்றாலும் கதை சொல்லும் விதத்திலும் வசன உச்சரிப்பி்லும், தொழில் நுட்பத்திலும்
மணிரத்னம் தமிழ் சினிமாவை உலகலாவிய அளவுக்கு எடுத்து சென்றார் என்பதால் மணி எப்போதும் என் நன்றிக்கு உரியவர்.







இDirected by Mani Ratnam
Produced by G. Venkateswaran
Written by Mani Ratnam
Starring Karthik
Prabhu
Vijayakumar
Amala
Nirosha
Jayachitra
V. K. Ramaswamy
Janagaraj
Music by Ilaiyaraaja
Cinematography P. C. Sriram
Distributed by Sujatha Films
Pyramid Saimira
Release date(s) 1988
Running time 146 mins
Language Tamil


இந்த படம் தமிழக அரசின் சிறந்த படம் விருதை பெற்றது.

எனக்கு தெரிந்து நான் எழுதியதில் பெரிய பதிவும் இதுதான்.



அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

13 comments:

  1. இதுக்குதான்.... இதுக்குதான்
    எங்க "தல" உனா.தனா கிட்டே அதிக சகவாசம் வேண்டாம்னு சொல்றது...

    இது... ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பெருசா இருக்கு.

    இப்படிக்கு
    நையாண்டி நைனா
    பொருளாளர்
    அகில இந்திய உண்மைத்தமிழன் பதிவு படிப்போர் பேரவை.

    தலைவர்,
    அகில இந்திய உண்மைத்தமிழன் பதிவு படிப்போர் பேரவை - மும்பை கிளை.

    ReplyDelete
  2. ஸ்ஸ்ஸ்ஹ்ஹ்.... யெப்பா... படிச்சு முடிச்சிட்டேன்....

    ReplyDelete
  3. உண்மையிலேயே பெரிய்ய்ய்ய்ய்ய்ய பதிவுதானுங்கோவ்வ்வ்வ்வ். இருந்தாலும் படிச்சாச்சுங்க. அன்னைக்கு லான்ட்மார்க்குல பாத்துட்டு வேணாம்னு வந்த டிவிடிக்கு இப்ப ஃபீல் பண்ண வச்சுட்டீங்களே. அடுத்த தடவ மறக்காம வாங்னிடறேன்!!!!!!!!

    ReplyDelete
  4. அக்னி நட்ச்சத்திரம் - நன்கு இரசித்த படங்களில் இதுவும் ஒன்று.

    இது ‘உண்மை’யாகவே நீங்க எழுதிய பதிவா அல்லது “அவர்” அனுப்பிய குறுஞ்செய்தியா ...

    ReplyDelete
  5. படிச்சிட்டேணே .. படத்த டெக்னிக்கல தான் பார்ப்பீங்களா ? டெக்னிக்கல பாக்குறதுக்கு என்ன வித்தியாசம்னே..

    உண்மையில் உங்க பாட்டி,அம்மா பற்றிய வரிகள் நெஞ்சை தொட்டவைகள்..


    ஒவ்வொருவருக்கும் தன் குடும்பாத்தார்களின் அதுவும் தாத்தா பாட்டியுடம் உள்ள தொடர்பு நெஞ்சில் தென்றலாய் வருடுபவை.. ஆனா இது இனி வரும் காலங்களுக்கு இல்லை.

    ReplyDelete
  6. இதுக்குதான்.... இதுக்குதான்
    எங்க "தல" உனா.தனா கிட்டே அதிக சகவாசம் வேண்டாம்னு சொல்றது...

    இது... ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பெருசா இருக்கு.


    நான் என்ன பண்றது பழக்க தோஷம் அது மட்டம அல்ல இது ரெண்டு பதிவை சேர்த்து போட்டது அதான்...நன்றி நைனா...

    ReplyDelete
  7. ஸ்ஸ்ஸ்ஹ்ஹ்.... யெப்பா... படிச்சு முடிச்சிட்டேன்...//
    பெரு மூச்சுடுன் படித்து முடித்தற்க்கு நன்றி நைனா..

    ReplyDelete
  8. உண்மையிலேயே பெரிய்ய்ய்ய்ய்ய்ய பதிவுதானுங்கோவ்வ்வ்வ்வ். இருந்தாலும் படிச்சாச்சுங்க. அன்னைக்கு லான்ட்மார்க்குல பாத்துட்டு வேணாம்னு வந்த டிவிடிக்கு இப்ப ஃபீல் பண்ண வச்சுட்டீங்களே. அடுத்த தடவ மறக்காம வாங்னிடறேன்!!!!!!!!///

    நன்றி ராமலிங்கம் இந்த படத்தை பார்க்கும் போது நான் குறிப்பிட்ட விஷயங்கள் உங்களுக்கு நினைவு வந்து பீல் பண்ணி பாத்திங்கன்னா, எனக்கு அதுவே போதும்

    ReplyDelete
  9. கடலூர் கூத்தப்பாக்கத்தில் என்னுடன் தூய வளனார்(மஞ்சகுப்பம்) மேனிலைப்பள்ளியில் படித்த அருளானந்தம் வசித்து வந்தார்.கேள்விப்பட்டிருக்கிங்களா.?

    அன்புடன்
    அரவிந்தன்
    பெங்களூர்

    ReplyDelete
  10. அக்னி நட்ச்சத்திரம் - நன்கு இரசித்த படங்களில் இதுவும் ஒன்று.

    இது ‘உண்மை’யாகவே நீங்க எழுதிய பதிவா அல்லது “அவர்” அனுப்பிய குறுஞ்செய்தியா ...
    நன்றி ஜமால் அவர் அனுப்பிய குறுஞ்செய்திதான் இது....

    ReplyDelete
  11. கடலூர் கூத்தப்பாக்கத்தில் என்னுடன் தூய வளனார்(மஞ்சகுப்பம்) மேனிலைப்பள்ளியில் படித்த அருளானந்தம் வசித்து வந்தார்.கேள்விப்பட்டிருக்கிங்களா.?“


    இல்லை நண்பரே ,எனக்கு சிறு வயதாக இருந்த போது 40 வீடுகள் மட்டுமே கூத்தப்பாக்கம் இப்போது 5000 வீடுகள்... சந்தித்தது இல்லை நண்பா , கேள்வி பட்டதும் இல்லை... நன்றி அரவிந்த்

    ReplyDelete
  12. பதிவு கொஞ்சம் பெருசுதான் ஆனால் அதில் இருந்த விடயங்கள் அதை விட பெருசு

    ReplyDelete
  13. திறமை குன்றியவர்களை தூக்கி வைத்து பேசுபவர்கள் லிஸ்டில் நீங்களும் சேர்த்து விட்டிருக்கிறீர்கள். எந்த ஒரு படத்திலும் எந்த ஒரு விஷயத்தையும் தெளிந்த நீரோடை போல சொல்லாமல், வெறுமனே குட்டையை குழப்பி வேடிக்கை பார்ப்பதில் மணிரத்னம் தேர்தவர். அக்னி நட்சத்திரம் பார்த்து கண் கெட்டவர்கள் தான் அதிகம்.
    டெக்னாலஜி, போட்டோகிராபி, என்பதெல்லாம் கதைகளை மீறாமல் இருக்கவேண்டும். மணிரத்னம் படங்களில் ஒன்றில் கூட அந்த நியதி காப்பாற்றபட்டிருக்காது.

    அதெல்ல்லாம் இருக்கட்டும். இதெல்லாம் கருத்து வேறுபாடுகள்.

    உங்களுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது..

    நீங்கள் இந்த படத்தை பார்த்த அதே கடலூர் ரமேஷ் தியேட்டரில்தான் (தற்போது பாலாஜி ) நானும் இந்த படத்தை பார்த்தேன்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner