Engeyum Eppodhum/2011/உலகசினிமா/தமிழ்/எங்கேயும் எப்போதும்.. கவிதையாக ஒரு தமிழ்படம்.





பல வருடங்களுக்கு முன் ஒரு சாலை விபத்து, என் மனதை ரொம்பவே கஷ்டபடுத்தியது..
பல வருடங்களுக்கு முன் ஜுனியர் விகடனில் அந்த செய்தி வந்த போது இரண்டு  நாட்களுக்கு அதபற்றிய சிந்தனையாகவே இருந்தது...

அந்த முகம் தெரியாத அப்பாவி பெண்ணுக்காக நான்  பிரார்த்தித்தேன்..



அந்த விபத்து கேரளாவில் நடந்தது.. ஏதோ இண்டர்வியூவுக்கு ஒரு 20 வயதுப்பெண் ஆட்டோவில் பயணிக்கும் போது ஒரு பெரிய கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து அந்த ஆட்டோ மீது விழுந்து விட, இடுப்புக்கு கீழே முழுதாக அந்த பெண்ணுக்கு உடல் உறுப்புகள் சிதைந்து விட்டது..ஆனாலும் மீட்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் போது, தனக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்ப்பட ,சுற்றிலும் ஆண்கள் இருக்கும் போது எப்படி போவது? என்று அவள் துடித்ததும் இடுப்புக்கு கிழே சிதைந்து போன உடலோடு அந்த பெண்ணின் கதறல் எழுத்தில் எழுதி இருந்த போது எனக்கு அழுகையே வந்துவிட்டது...அந்த விபத்து  நேரில் பார்க்கா விட்டாலும் அந்த செய்தியை படித்த போது மனது கணத்தது..



விழுப்புரம் பண்ருட்டி சாலையில் முதல்நாள் திருமணம் முடிந்த புதுமணத்தம்பதிகள் ஹனிமூனுக்கு மிகுந்த சந்தோஷத்துடன் காரில போய்கொண்டு இருக்க முன்னால் சென்ற லாரி  சடன் பிரேக் அடிக்க புதுமணத்தம்பதிகள் இருவரும் ஸ்தலத்திலேயே

இறந்து போனார்கள்..

கனவுகள் நொடியில் நொறுங்கி போனது...காரணம் முன்னால் சென்ற லாரியின் டிரைவர் சாலை ஓரத்தில் குடிதண்ணீர் இருப்பதை பார்த்து விட்டு தண்ணி பிடிக்க எந்த அறிவிப்பும் இல்லாமல்  சடன்பிரேக் அடிக்க எல்லாம் முடிந்து போனது.,..



நானே பல கட்டுரைகள் எனது தளத்தில் எழுதி இருக்கின்றேன்.. கடந்த வருடத்தில் ஒரு சாலை விபத்து லிஸ்ட் எடுத்தீர்கள் என்றால் நின்ற லாரியின் மீது வாகனங்கள் மோதி ஏற்ப்பட்ட விபத்துகள் அதிகம் என்ற ஒரு அறிக்கை கிடைக்கும்..



இரண்டு வாரத்துக்கு முன்பு திருச்சி அருகே அரசு பேருந்தில் 20 வருட அனுபவம் உள்ள டிரைவர் டிசல் சிக்கனத்துக்கு ஒன்வேயில் செல்ல, தனியார்  பேருந்து அசுர வேகத்தில் மோத 14 பேருக்கு மேல் ஒரு நொடியில் இறந்து போனார்கள்..இறந்து போவதை காட்டிலும் உடல் உறுப்புகள் இழந்து போய், நடைபினமாய் இருப்பவர் பற்றிய கதைகள் ஏராளமாய் தமிழகத்தில் சுற்றிக்கிடக்கின்றன..



வேலூர் அருகே லாரியை முந்தி  செல்ல முயன்ற கேபிஎன் தனியார் பேருந்து தன் கட்டு பாட்டை இழந்த காரணத்தால் கவிழ்ந்து தீப்பிடித்து 23 பேருக்கு மேல் கரிக்கட்டையாகி போனார்கள்..

எத்தனையோ பேரின் கனவுகள், எதிர்பார்ப்புகள் எல்லாம் தனிமனித தவறுகளால் ஒரு நொடியில் கலககலத்து போய் விடுகின்றன.. அப்படி கலகலத்து போவதை நெத்தியடியாகவும் கவிதையாகவும் எங்கேயும் எப்போதும் படத்தில் இயக்குனர் சரவணன் சொல்லி இருக்கின்றார்..ஹேட்ஸ் ஆப் சரவணன்.

================

எங்கேயும் எப்போதும் படத்தின் கதை என்ன?,



முதல் காட்சியிலேயே ஒரு தனியார் பேருந்து  மற்றும் அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி  விபத்துக்கு உள்ளாகின்றது.. பலர் இரத்தசகதியாய்,உடல் உறுப்புகள் துண்டிக்க  பட்டு கிடக்கின்றார்கள். பிளாஷ்  பேக்  விரிகின்றது.. திருச்சியில் இருந்து அரசு பேருந்து சென்னையை நோக்கியும்,சென்னையில் இருந்து தனியார் பேருந்து திருச்சி நோக்கியும் செல்ல அதில் பயணிக்கும் கதைமாந்தர்களோடு கதை விரிகின்றது...ஜெய், அஞ்சலி,சரவ் திருச்சி இருந்து புறப்படும் அரசு பேருந்திலும் அனன்யா சென்னையில் இருந்து கிளம்பும் தனியார் பேருந்திலும் கிளம்புகின்றார்கள்.. அவர்கள் விபத்து எனும்புள்ளியில் சந்திக்கும் முன் அவர்கள் நால்வரின் பிளாஷ் பேக்தான் படத்தின் சுவாரஸ்யம் ... அது என்ன என்பதை திரையில் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்..

============

படத்தின் சுவாரஸ்யங்களில் சில..



ஹாலிவுட் பட நிறுவனமான பாக்ஸ் நிறுவனம் தமிழ் தயாரிப்பளர் இயக்குனர் முருகதாசோடு இணைந்து தயாரிக்கும் முதல் படமே பட்டையை கிளம்பி இருக்கின்றது..

யார்யா இந்த ஆளு பார்க்க தம்மாத்தோன்டு இருந்துக்குனு பட்டையை கிளம்பி இருக்கின்றாரே என்று ஆச்சர்யபடுத்தி இருக்கின்றார்..இயக்குனர் சரவணன்..

விமல் நடிக்க இருந்த படம்...இயக்குனருக்கும் விமலுக்க கருத்து வேறுபாடு காரணமாக ஒரு நல்ல படத்தை விமல் தவற விட்டுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்....

முதலில் இந்த படத்தை பார்க்கவேண்டும் என்று ஆர்வத்தை ஏற்படுத்தியது கோவிந்தா பாடல்தான்.. அந்த பாடலில் இருந்த சென்னையின் லைவ்லிநஸ் மற்றும் ஒரு தென்மாவட்டத்து பெண்ணின் பார்வையில் சென்னையின் எதார்த்தங்களை ரொம்ப கியூட்டாக விவரித்த விதம்... நான் ரொம்பவும் ரசிக்க காரணம்..அந்த முதல் பதிவைவாசிக்க இங்கே கிளிக்கவும்.



இந்த படத்தின் டாப் மோஸ்ட் ஹீரோ கேமராமேன் வேல்ராஜ்தான் என்றால் அது மிகை இல்லை என்று சொல்லலாம்.. சென்னை மற்றும் திருச்சியின் லைவ்லிநஸ் திரையில் அப்படியே கொண்டு வந்து  இருக்கின்றார்கள்..சின்ன சின்ன கியூட் ஷாட்டுகள் படத்தில் அதிகம்...
மிக முக்கியமாக பேருந்துகள் கிளம்பும் முன் அவைகள் எவ்விதமாக ஒரு நீண்ட நெடிய பயணத்துக்கு தயராகின்றன என்று சின்ன சின்ன ஷாட்டுகளில்  விளக்கும் காட்சிகள் கவிதை..அதே போல ஒரு விபத்து  ஏற்ப்பட்டதும், அது யார் யாருக்கு பதட்டத்தை ஏற்படுத்தும் யார் யார் அதை ரொம்ப சர்வசாதாரணமாக அனுகுவார்கள் என்று  காட்சிபடுத்திய இடங்கள் அருமை.

சரவ் மற்றும் அனன்யா ஜோடியை நடிப்பாய் நான் பார்க்கவேயில்லை.. அவர்கள் நம்மோடு ஷேர் ஆட்டோ மற்றும் 37ஜியில் பயணிக்கும் சகபயணியாகவே மாறி இருக்கின்றார்கள். படத்தில் பெரும்பாலும் இரண்டு பேருக்கும் ஒரே காஸ்ட்யூம்தான்...அனன்யா கேரளா  வரவு என்பது சில செழுமைகள் மூலம் எளிதில் உறுதிபடுத்திக்கொள்ள முடிகின்றது..எனக்கு அவரின் இரண்டு கண்கள்  பிடித்து இருக்கின்றது..

முக்கியமாக பேருந்தில் பயணிக்கும் போது சரவ்வின் அப்பா கல்யாணத்துக்கு வற்புறுத்த இன்னும் மனதுக்கு பிடித்த பெண் தனக்கு கிடைக்கவில்லை என்று சொல்லும் போது அனன்யா கொடுக்கும் எக்ஸ்பிரஷன் கவிதை ரகம். சரவ்வின் மேன்லிநஸ் பெண்களை கிரங்க வைக்கும்.

படத்தில் எனக்கு தெரிந்து இன்னும் சிரப்பாக நடித்து இருப்பவர்கள்...ஜெய்,அஞ்சலி ஜோடிதான்.

ஜெய் தனக்கு கொடுத்த பாத்திரத்தை மிக கச்சிதமாக செய்து இருக்கின்றார்.. அந்த இன்னோசென்ட் அவருக்கு நன்றாகவே வருகின்றது.. வெல்டன் ஜெய் சான்சே இல்லை..


அஞ்சலிக்கு இந்த படம் ஒரு மைல் கல் கற்றது தமிழுக்கு பிறகு அங்காடி தெரு, இப்போது எங்கேயும் எப்போதும் என்று காலரை ச்சே சாரி.. ஜீன்சை இழுத்து விட்டு சொல்லிக்கொள்ளலாம். யப்பா என்ன நடிப்பு? என்ன நடிப்பு?? கடைசிவரை என்னோடு குப்பை கொட்டுவாயா? என்று கேட்டு விட்டு அப்படின்னா ஐ லவ்யூ என்று அலட்சியமாக சொல்லும் இடத்தில் அஞ்சலி  சான்சே இல்லை.. அதே போல ஜெய்யை தானே கட்டிபிடிக்கும் இடத்தில் ஒரு  சின்ன கியூட்நெஸ் அதில் இருப்பதை மறுக்க முடியாது.

ஆண் அடங்கி பெண் பொங்கும் கேரக்டர்.. ஜெய் அஞ்சலி ஜோடிக்கு நன்றாகவே  ஒர்க்அவுட் ஆகின்றது... ஜெய் வீட்டில் அஞ்சலி தன் பிரண்ட்ஸ்சோடு சீட்டு ஆடும் போது,அஞ்சலி ஜெய் கையை எடுத்து தனது தோள் மேல் போட்டுக்கொள்ள, விளையாட்டின் போது அஞ்சலி முன் பின்னாக சாய்ந்து இயல்பாக ஆட, ஜெய்யின் கை ஆஞ்சலியின் மார்பகங்களில் படுவதையும், அதனால் ஜெய் கூச்சத்தில் தவிப்பதையும் விஷுவலாக காட்டாமல் ஜெய்யின் முக ரியாக்ஷனில் காட்டி இருப்பது செமை கியூட்..

படத்தின் டயலாக்குகள் அற்புதம் முக்கியமாக அனன்யா தன் அக்காவிடம் ஒரு நிமிடம் பெண் பார்க்க வந்து காபி கொடுத்து விட்டு பிடித்து இருக்கின்றது என்று சொல்லி திருமணம் செய்து கொண்டு இருக்கின்றாய்..ஆனால் நான் ஒரு நாள் அவனோடு பயணித்து இருக்கின்றேன் என்று சொல்வதும்... அஞ்சலி  கோபம் வந்தால் உடனே  கோபப்பட்டு விடு அதை விட்டு விட்டு ஏதாவது ஒரு நாளில் உனக்கா நான் எவ்வளவு விட்டு கொடுத்து இருக்கின்றேன் என்று சொல்லாதே என்று சொல்லும் உரையாடல்கள் வாழ்வியல் நிதர்சனங்கள்.

படம் முழுக்க சிரிக்க வைத்தவர்கள்.. அந்த ஆக்சிடென்ட் பார்ட்டை  பிரித்து மேய்ந்து இருக்கின்றார்கள்..அப்படி காட்டும் போதும் அந்த காட்சிகளை பார்க்கும் தனிமனிதன் இன்னும் கவனமாக வாகனம் ஓட்ட அந்த டிடெய்லான விபத்து காட்சிகள் உதவும்...


அதே போல பேருந்தில் நமக்கு அறிமுகபடுத்தப்படும் சின்ன சின்ன கேரக்டர்கள் மனதில் நிற்கின்றார்கள்...

மிகை இல்லாத எதார்த்தை தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையோடு ரொம்ப நெருக்கமாக பதிவு செய்யப்படும் இது போலான படங்கள் வெற்றி பெறவைப்பது நமது கடமை..

படத்தில் இருக்கும் பெரிய லாஜிக் மிஸ்சிங் சென்னைக்கு நேர்முகதேர்வுக்கு வரும் அனன்யாவிடம் ஏன் செல்போன் இல்லை..???

மற்றபடி தமிழ்சினிமாவில் தனக்கு என்று தனி முத்திரை பதித்து இருக்கின்றார் இயக்குனர் சரவணன் வெல்டன்.

கேமராமேன் வேல்ராஜ் வெல்டன் மற்றும் ஆல்தபெஸ்ட்.

இசை... சத்யா.. வெல்டன்


எடிட்டிங்.. ஆன்டனி..வெல்டன் முக்கியமாக கோவிந்தா சாங் கட்டிங் மற்றும் சாலைகாட்சிகள் மற்றும் விபத்து காட்சிகயில் தனது கத்திரியால் ஷார்ப் பண்ணி இருக்கின்றார்.
படத்தின் என்ட் டைட்டிலை பார்த்தாலே இயக்குனரின் நோக்கம் புரிந்து இருக்கும்..

==========

படக்குழுவினர் விபரம்.

Directed by     M. Saravanan

Produced by    A. R. Murugadoss

Written by       M. Saravanan

Screenplay by M. Saravanan

Starring           Jai

Anjali

Ananya

Sharvanand

Music by         Sathya

Cinematography          Velraj

Editing by       Anthony

Studio             Murugadoss Productions

Fox Studios

Release date(s)            16 September 2011

Country           India

Language        Tamil
============

படத்தின் டிரைலர்...

இயக்குனர் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்கள்..
=============== 
பைனல்கிக்.

 ஒரு படத்தில் சொல்லும் சமுக பிரச்சனைகளை துருத்திக்கொண்டு தெரிவது போல இல்லாமல் ,கதையின் ஊடே தமிழகத்தின் மிக முக்கிய பிரச்சனையை இயக்குனர் இந்த படத்தில் தேன் தடவி சொல்லி இருக்கின்றார்... 

இந்த படம் பார்த்தே தீர வேண்டியபடம்..
படம் முடியும் போது ..
அப்பா பயமா இருக்கும் வேகமா ஓட்டாதிங்கப்பா என்று வாய்ஸ் ஓவரில் குழந்தை  சொல்லும் இடத்தில், இயக்குனர் பேர் போடும் போது நான் முதலில் கைதட்ட ,ஒட்டு மொத்த தியேட்டரே கைதட்டியதுதான் இந்த படத்தின் வெற்றியே...

===========

சத்தியம் தியேட்டர் டிஸ்கி..

நானும்  நண்பர் நித்யாவும் தியேட்டரின் உள்ளே நுழைந்த போது நடிகர் ஜெய்யை சுற்றி ஒரு சின்ன கூட்டம் இருந்தது...
எனக்கு பக்கத்தில் நான்கு பெண்கள் உட்கார்ந்து அரட்டை அடித்த படி ஜாலியாக படம் பார்த்தார்கள்..நன்றாக சிரித்தவர்கள்.. கிளைமாக்சில் கர்சிப் வைத்து கண்களை துடைத்த படி மூக்கை உறிஞ்சி தள்ளினர்...
நாங்கள் உட்கார்ந்த ஐரோவிலேயே தமிழ் பதிவுலக பிரபலம் கேபிள் உட்காந்து படம் பார்த்து இருக்கின்றார்.. இடைவேளையில்தான் சந்தித்தோம்.....
படம் முடிந்து வெளியே வந்தால் அஞ்சலி , முருகதாஸ், சரவ், சிவகார்த்திகேயன்,ஏர்டெல் சூப்பர் சிங்கர் காம்பயரர் பேர் நினைவில்லை... பேர் எனக்கு நினைவு இருந்தது.. பட் தூது வருமா பாட்டுக்கு ஒரு நிகழ்ச்சியில் ஆடினார் அந்த பெண்.. அன்றில் இருந்து எனக்கு அவர் பெயர் மறந்து போனது..
நண்பர் நித்யா..  அஞ்சலி என்னங்க நேரில் பார்க்கும் போது இவ்வளவு மெலிசா இருக்காங்க என்று கேட்க..நீங்க நேரில் பார்ப்பதை விட திரையில் பெரிய பெரிய உருவமாக பார்த்து விட்டு அவர்கள் இயல்பான உருவத்தை நேரில் பார்க்கும் போது இந்த வியப்பு எல்லோருக்கும் ஏற்படும் என்று சொன்னேன்..
=========
ஹலோ ஜாக்கி
சொல்லுங்க
நான் கோயமுத்தூர்ல இருந்து சதிஷ் பேசறேன்.
 சொல்லுங்க நண்பரே...


நீ சொல்லறது பக்கா லாஜிக்தான்..ஆனா திரையில் பார்க்கறது போலத்தான் ஷகிலா நேர்லயும் இருக்கறாங்க இது எப்படி? 
ஹலோ.. ஹலோ.. சிக்னல் வீக் நண்பரே. நான் அப்பறம் கால் பண்ணறேன்..
================

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

24 comments:

  1. Now you are on powerplay.you are hitting boundaries and sixers everyday with your writing. Thanks for sharing your experience Now you are on powerplay.you are hitting boundaries and sixers everyday with your writing. Thanks for sharing your experience

    ReplyDelete
  2. Now you are on powerplay.you are hitting boundaries and sixers everyday with your writing. Thanks for sharing your experience and sixers everyday with your writing. Thanks for sharing your experience

    ReplyDelete
  3. மிக அருமையான நடையில் ஒரு அழகான விமர்சனம்...உங்களின் மக்கள் தொலைக்காட்சி பேட்டி பார்த்தேன்..வாழ்த்துக்க்கள்...

    ReplyDelete
  4. படம் பார்க்கத் தூண்டும் விமர்சனம்.

    ReplyDelete
  5. படம் தென்காசியில் ஓடுகிறது.... பார்த்துட வேண்டியதுதான்....

    ReplyDelete
  6. ஜாக்கி தியேட்டரில் அமுதாவவிட அவங்க அக்கா சூப்பரா இருக்கா ன்னு அடிச்ச கமெண்ட பத்தி எழுதவே இல்ல ...
    தியேட்டர்ல எல்லோரும் சிரிச்சாங்க.... Good timing comment in theater...
    உங்க பின் சீட்ல தான் நான் உட்கார்ந்திருந்தேன்..

    ReplyDelete
  7. எப்போதும் கதையின் போக்கில் உங்கள் விமர்சனம் படத்தை பார்க்க தூண்டும் இப்போதும் அப்படியே உடனே பார்த்துடுவோம்...

    ReplyDelete
  8. தெளிவான அழகான விமர்சனம். இந்த வருட(மு)ம் தமிழில் சிறந்த நடிகை அஞ்சலி தான் என தெரிகிறது

    நீங்களும் கேபிளும் ஒரே காட்சி தான் படம் பார்த்தீர்கள் . அவர் எவ்ளோ சுறுசுறுப்பா பதிவு போட்டுட்டார் நீங்க கொஞ்சம் லேட்.

    மக்கள் தொலை காட்சி பேட்டி இன்று பார்த்தேன். நன்றாக இருந்தது. கேள்வி கேட்டவர் நல்ல கேள்விகளாக கேட்டார். நீங்களும் நன்கு பதில் சொன்னீர்கள். சீக்கிரமே முடிந்த மாதிரி, பேசியவை பாதியில் நின்ற மாதிரி இருந்தது (உங்கள் குறும் படங்கள் சில இன்று தான் அந்த நிகழ்ச்சி மூலம் பார்க்க முடிந்தது)

    ReplyDelete
  9. அருமையான விமர்சனம்!
    மக்கள் டிவியில் தங்கள் பேட்டியை பார்த்தேன். நீங்கள் சொன்னது போல, சொதப்பவில்லை. நன்றாகவே இருந்தது.

    ReplyDelete
  10. எனக்குத் தெரிந்து நீங்கள் இந்த படத்தை போல எந்த படத்தையும் எதிர்பார்த்ததில்லை. ஆனால் நீங்கள் எதிர்பார்த்த படம், பார்த்தே தீரவேண்டிய படம் என்று பாராட்டியிருக்கிறீகள். உங்கள் எதிர்பார்ப்பு வீண்போக வில்லை. விமர்சனம் மிகவும் அருமை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  11. \\அனன்யா கேரளா வரவு என்பது சில செழுமைகள் மூலம் எளிதில் உறுதிபடுத்திக்கொள்ள முடிகின்றது.\\
    இந்த லொல்லு தானே வேனாங்கரது.....

    ReplyDelete
  12. அருமையான நச்சென்ற விமர்சனம் .படத்தை பார்க்க தூண்டுகிறது

    ReplyDelete
  13. hi jackie anna,

    very nice re-view....

    if you can... visit my review for this film at

    http://feelthesmile.blogspot.com/2011/09/blog-post_17.html

    ReplyDelete
  14. நான் ஆனந்தவிகடன் விமர்சனத்தை தான் ரொம்பவும் ரசிப்பேன் .....இப்போது உங்கள் மற்றும் கேபிள் சங்கர் விமர்சனங்களையும் ரசிக்கின்றேன் ....

    ReplyDelete
  15. விமரிசனம் படிச்சு பார்த்தா, படம் பாக்கலாம் போல இருக்கே.

    ReplyDelete
  16. அசத்தலான விமர்சனம்

    இன்று என்னுடைய பதிவு

    கூகுளின் அதிரடி சாதனை

    ReplyDelete
  17. Jackie, Interesting movie review. Thanks.
    I will add this to the list of movies that I want to watch.

    ReplyDelete
  18. படத்தின் பைனல் கிக்கை விட இந்த விமர்சனத்தின் பைனல் கிக் சூப்பர் ஜாக்கி!

    ReplyDelete
  19. எங்கேயும் எப்போதும் ....
    Hollywood "Fox Start Studios" தயாரிப்பில் ஒரு நல்ல தமிழ் படம் ..

    இதில் வரும் கதாபாதிரங்கள் மற்றும் வசனம் ரசிக்கும்படியாக உள்ளது.
    Most of the characters are characterized as positive manner.

    சமீபத்தில் வந்த தமிழ் படங்களில் negative characters மிக அதிகம்
    ஏன் "மங்காத" வில் .. "தல" முதல் "வால்" வரை கெட்டவர்கள் ... :( :(

    ReplyDelete
  20. தினமும் பத்திரிகைகளின் மூலமாகவோ.. தொலைக்காட்சிகளின் மூலமாகவோ..
    தெரிய வரும் பஸ் விபத்துகளை பற்றி ஒரு நிமிடமோ.. ஒரு சில நிமிடங்களோ.. அனுதாபப்பட்டு விட்டு விடுகிறோம்..
    இந்த படத்தில் எப்படி பஸ் விபத்து ஏற்படுகிறது என்பதை தெரியப்படுத்துவதோடு.. விபத்துக்கு பின்னால் எத்தனை மனிதர்களின் வாழ்க்கையும் பாதிக்கபடுகிறது என்பதையும் உணர்த்தியுள்ள விதம் அது போல பாதிக்கப் பட்டவர்களுக்கு மட்டும்தான்
    புரியும்.. உணரமுடியும்..
    ஒரு பஸ் டிரைவரின் அலட்சியத்தால் எத்தனை பயணிகள் பாதிக்கப்படுகிறார்கள்?
    இதை அந்த பஸ் டிரைவர்களால் புரிந்துக் கொள்ள முடியுமா?
    ஆறு வருடங்களுக்கு முன் இது போன்ற ஒரு டிரைவரின் அலட்சியத்தில் ஏற்பட்ட விபத்தில் நானும் என் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டு, அந்த விபத்தில் என்னுடைய அம்மா கால் உடைந்து போய், பல லட்சங்களை செலவழித்தும், எதுவும் பயனின்றி..
    இன்று வரை நிற்ககூட முடியாமல் அவஸ்தை பட்டு கொண்டிருக்கும் வேதனை, மரணத்தை விட கொடுமையானது.
    இந்த படத்தை மற்றவர்கள் பார்ப்பதை விட..
    ஒவ்வொரு பஸ் மற்றும் கார் டிரைவர்கள் தான் பார்க்க வேண்டும்.

    மரணத்தை விட கொடுமையானது.
    இந்த படத்தை மற்றவர்கள் பார்ப்பதை விட..
    ஒவ்வொரு பஸ் மற்றும் கார் டிரைவர்கள் தான் பார்க்க வேண்டும்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner