தமிழகத்தில் நடக்கும் பெரும்பாலான வாகன விபத்துக்களுக்கு லாரி ஓட்டுனர்களும் ஒரு காரணம் என்று ஏற்கனவே சொல்லி இருந்தேன்... அதை பற்றி தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தேன்... அதனை நமது வாசக நண்பர் ராஜ்குமார்.. துணை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தளத்தில் அந்த கடிதத்தை இணைத்தார்....
நேற்று தமிழகத்தில் நடந்த பல்வேறு சாலைவிபத்துகளில் பலபேர் உயிரிழந்தார்கள்.. அதில் ஒரு முன்னாள் நாடுளுமன்ற உறுப்பினரும் ஒருவர்...சாலைவிபத்துகளில் உயிரிழப்பு என்பது தினமும் ஒரு செய்தியாக பத்திரிக்கையில் தொடரும் செய்தியாக உள்ளது...
இதில் லாரி ஓட்டுபவர்களை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது.. ஆனால் பெரும்பாலான விபத்துகளை பார்க்கும் போது அவர்கள் பெயர்தான் முன்னனியில் இருக்கின்றது... பெரும்பாலான விபத்துக்கள் பக்கவாட்டு ரோட்டில் இருந்து மெயின் ரோட்டுக்கு வரும் வாகனங்கள் சட்டென உள்ளே நுழைவதாலே பெரிய விபத்துக்கள் ஏற்படுகின்றன...
உதாரணத்துக்கு திருச்சி சாலையில் ஒரு வாரத்துக்கு முன் 100கீலோமீட்டர் வேகத்தில் வந்த ஒரு கார்... சட்டென கிளைச்சாலையில் இருந்து ஒரு லாரிஉள்ளே வர இதை சற்றும் எதிர்பார்க்காத வாகன ஓட்டி நிலைதடுமாறி பிரேக் அடிக்க வண்டி கவி்ழ்ந்து ஸ்தலத்துலேயே 4 பேர் மாண்டு போயினர்....
பெங்களுர் சாலையில் பயணபடும் போது கிருஷ்ணகிரி டூ ஓசூர் சாலையில் மலைகளை குடைந்து சாலைகள் அமைத்து இருப்பார்கள்... அதில் மலை மீது கனரகவாகனஙக்ள் முக்கி முனறி ஏறிக்கொண்டு இருக்கும்.. ஆங்கிலத்திலும் தமிழிலும் அறிவிப்பு செய்து இருப்பார்கள்... கனரக வாகனங்கள் இடதுபுறம் சாலையை ஒட்டி செல்லவும் என்று... ஆனால் நீங்கள் அந்த சாலையில் பயணத்தால் எந்த லாரியும் அதனை கேட்காது... எல்லா லாரியும் பயங்கர லோடுடன் வலது புறம் சென்று கொண்டு இருக்கும்...ஒரு லாரி இடது புறம் சென்று கொண்டு இருக்கும் பின்வரும் இலகுரக வாகனங்கள் வழி கிடைக்காது தினறிக்கொண்டு இருக்கும்....
சென்னை தனியார் சப்ட்வேர் கம்பெனி என்ஜினியர் மணிமேகலை (வயது 21) இவர் நெய்வேலியை சேர்ந்தவர்..அருண் (வயது 26)இவரும் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினியர்.. இவர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் இருவருக்கும் கடந்து இந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி ஞாயிறு திருச்செந்துரில் திருமணம் நடைபெற்றது... இவர்களது திருமணவரவேற்ப்பு வரும் 28ம் தேதி புதன்கிழமை சென்னையில் நடைபெற இருந்தது... இப்போது அருணும் மணிமேகலையும் இப்போது உயிரோடு இல்லை....
இருவரும் திருமணம் முடிந்த 3வது நாள்நெய்வேலி மாமனார் வீட்டில் விருந்து சாப்பிட்டு விட்டு மணமக்கள் இருவரும் கொடைகாணலில் தேனிலவு கொண்டாட காரில் செல்ல முடிவு எடுத்தனர்... தனது குடும்ப நண்பர் தம்பதிகள் இருவருடன் காரில் கொடைக்கானல் நோக்கி பயணபட்டனர்.. முன் சீட்டில் உட்கார்ந்த தன் இளம் மனைவியோடு காரில் சந்தோஷத்துடன் போக திட்டக்குடி அருகே முன்னே சென்ற லாரி டிரைவர் தண்ணீர் குடிக்க சட்டென எந்த எச்சரிக்கையும் இல்லாமல் நடு ரோட்டில் பிரேக் போட்டு லாரியை நிறுத்த இந்த திடிர் நிகழ்வில் ஏதும் செய்யமுடியாத கார் லாரியின் பின் மோத கனவுகளுடன் பயணபட்ட அந்த புது பெண் சடுதியில் துடிக்க இறந்து போக.. புது மாப்பிள்ளை அருண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்... பின் சிட்டில் உட்கார்ந்து இருந்த இருவர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் மருத்துமனையில் சேர்க்கபட்டதாக பத்திரிக்கை செய்தி சொல்கின்றது... ஆனால் கடந்த சனிக்கிழமை நான் உளுந்தூர் பேட்டை போய்வரும் போது பேருந்தில் வந்த டிரைவர் ஒருவர் திருச்சியில் சேர்த்த தம்பதிகளில் ஒருவர் உயிர் இழந்து விட்டதாக சொன்ன போது... ரொம்பவும் மனதுக்கு கஷ்டமாக இருந்தது.....
யோசித்து பாருங்கள்.. ஒரு டிரைவர் அலட்சியம்... ஒரு மணமக்களின் உயிரை அல்பாயுசுவில் போக வைத்துவிட்டது... ஒரு பெண்ணை வளர்த்து அந்த பெண்ணை நோய் நொடிகளில் இருந்து காத்து... அந்த பெண்ணை நல்ல பள்ளியில் சேர்க்கவைத்து,அவளது சிறு சிறு சந்தோஷங்களை நிவர்த்தி செய்து...அவளை கல்லூரியில் சேர்த்து... அவளுக்கு சென்னையில் வேலை கிடைத்த போதும் அந்த குடும்பம் எவ்வளவு மகிழ்ந்து போய் இருக்கும்....ஒரு முறைக்கு பல முறை மணமகன் குறித்து விசாரித்து...சம்பந்தி வீட்டார் மனம் கோனாமல் எல்லாவற்றையும் செய்து கொடுத்து.... ஒரு திருமணத்தை நடத்தி முடிப்பது என்பது சாதாரணவிஷயமா?
மணமக்களை விருந்துக்கு அழைத்து காலையில் புது மாப்பிள்ளைக்கு வாய்க்கு ருசியாய் சமைத்து போட்ட அந்த மணமகளின் பெற்றோரின் வேதனை சொல்லில் அடங்கா...... காலையில் டிபன் சாப்பிட்டு விட்டு போன மணமக்கள் 11,30 மணிக்கு விபத்தில் இறந்துவிட்டர்கள் என்றால் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்...
தோழிகள், உறவினர்கள் கேள்விக்கு வெட்கத்தால் பதில் சொன்ன அந்த மணிமேகலை என்ற 21வயது இளம்பெண் கட்டிய கணவனின் அருகாமை கிடைக்கும் முன்னே உடல்சிதைந்து இறந்து போனாள்....
புதுமனைவி அருகமை ,உலகம் , அரசியல்,பிடித்த நடிகர்,வேலை பளு எல்லாம் ஆழ்ந்து கேட்கும் முன்னே அருணின் உயிர் மருத்துவமனையில் பிரிந்து விட்டது...
புதுமணதம்பதிகளுக்கு பேச்சு துணைக்கா காரில் பின்புறம் உட்கார்ந்து சென்ற தம்பதிகளில் இரண்டு பேரில் ஒருவர் இறந்துவிட்டார்... அந்த தம்பதிகளுக்கு எத்தனை குழந்தைகளோ அவர்கள் என்னவானார்கள் .. எப்படி இந்த இடியை தாங்கி இருப்பார்கள்....
யோசித்து பாருங்கள் ஒரு லாரி டிரைவரின் கவனக்குறைவு பலரின் கனவுகள் கொடுரமாக நசுக்கபட்டுவிட்டன....
பொதுவாக லாரி டிரைவர் என்று சொல்வதை நான் மறுக்கின்றேன்... எல்லாவிபத்துக்களுக்கும் அவர்ககாரணம் என்று சொல்ல முடியாது.. ஆனால் அலட்சியம் அவர்களிடத்தில் அதிகம் என்று சொல்ல வருகின்றேன்...
ரோட்டில் போகும் போது கொஞ்சம் பெரிய வண்டி ஏதாவது எதிரில் வந்தால் மட்டுமே அவர்கள் பயபடுவார்கள்... சின்ன வண்டிகள் போனால் அதை கால் தூசிக்கு கூட மதிக்கமாட்டர்கள்....சைடில் ஒதுங்க இடம் இல்லை என்றாலும் நன்றாக ஏறி வருவார்கள்... எனக்கு அவ்வப்போது ஒரு ஆசைவரும்...டிரான்ஸ்பார்மர் படத்தில் வருவது போல் ஒரு சின்ன காரக போய்கொண்டு இருக்கும் போது... இது போல் அலட்சியமாக ஏறிவரும் கனரகவாகனங்கள் எதிரில் போனதும் அந்த வாகனத்தை விட டீராண்ஸ்பார்மர் படத்தில் மாறுவது போல் பாங் என்று மாறி சின்ன வண்டிதானே என்று ரொம்ப அலட்சியமாக வரும் டிரைவரின் வடியறு கலக்கி “பீ ” கைட்டிக்க வைக்க வேண்டும் என்பது என் ஆசை...
அதே போல் வாகன விபத்துகளில் முதலில் தகவல் சொல்லியும் உதவிக்கு வருவதம் லாரிகாரர்கள்தான் அதையும் மறுக்க முடியாது... தொடர்விபத்துகளில் ஈடுபடும் கனரக ஓட்டுனர்களின் லைசென்ஸ் கேன்சல் செய்ய வேண்டும்...சாலை ஓரத்தில் கனரக வாகனங்களை நிறுத்த வேண்டும் என்று அறிவிப்பு செய்து அரசுஆனை போட வேண்டும்.....
தினமும் பல்வேறு விபத்துகளை பார்த்தாலும்.. இந்த விபத்து ரொம்பவும் மனதை கஷ்டபடுத்தியது...ஒரு மணமக்களின் கனவுகளின் சிதைய ஒரு டிரைவரின் அலட்சியம் காரணம்...
அந்த லாரி டிரைவருக்கு அதிக படியாக பதினைந்துநாள் சிறை என்றும்.... அபராதம் என்றும் விதிப்பார்கள்...வெளியில் வந்து வழக்கமான டிரைவர் பணி செய்ய போய்விடுவார்... யாருக்கு தெரியும் இன்னு்ம் ஒருவாரத்தில் அவரே கூட வேறு ஒரு பெரிய விபத்துக்கு வழி வகுத்தாலும் வகுக்கலாம்...நமக்கு என்ன தெரிய போகின்றது.....
நாம் என்ன முதல்வன் படத்து அர்ஜுன் போல் ஒரு நாள் முதல்வரா? சட்டம் போட்டு உடனே அமுல்படுத்துவதற்க்கு...சரி இந்தனை விபத்துகள் நடந்து கொண்டே இருக்கின்றது...முதல்வரும் அரசு அதிகாரிகளும் என்ன செய்து கொண்டு இருக்கின்றார்கள்... நெடுஞ்சாலைதுறையும், போக்குவரத்துகாவல் துறை என்ன செய்து கொண்டு இருக்கின்றார்கள்...
முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்... தனியாக ஒரு கலெக்டரை இந்த தொடர் சாலை விபத்து விஷயத்தில் நியமித்து...விபத்து் ஏற்படும் பிரச்சனைளை அக்குவேறுஆணிவேறாக அலசி ஆராய்ந்து கடுமையான சட்டங்கள் போட்டு உங்கள் இடையறாது எழுத்து பணிக்கு நடுவே இந்த வேலையை செய்ய வேண்டுகின்றேன்...
அன்புடன்
ஜாக்கிசேகர்...
இந்த பதிவு பிடித்து இருந்தால் ஒட்டு போட்டு பெருவாரியான வாசகர்களிடம் இந்த செய்தி சென்று சேர உதவுங்கள்...
திருடனா பார்த்து -திருந்த விட்டால் -திருட்டை ஒழிக்க முடியாது
ReplyDelete-tsekar
வேதனையான விசயம், இது
ReplyDeleteதொடரக்கூடாது.
some ideas to be worked out. Like separate lane for cars and scooters and separate way for lorries or heavy vehicles like that. Otherwise it will be dangerous and nightmare for two wheelers and car owners
ReplyDeleteKanthasamy R
மிக அருமையான பகிர்வு ஜாக்கி அண்ணா. அந்த புதுமணத் தம்பதிகளின் நிலை மிகுந்த வேதனை தருவதாக உள்ளது. அலட்சியம் என்ற ஒற்றைச்சொல்லே இத்தனை அவலங்களுக்கும் காரணம்.
ReplyDeleteமுன்பு ஜெயலலிதா ஆட்சியில் என்று நினைக்கின்றேன். வாகன விபத்து நடந்தால், முதல் தடவை அபராதம்ம் சிறைதண்டனை, இரண்டாவது தடவை நடந்தால் அதிகமான சிறைதண்டனை மற்றும் லைசன்ஸ் ரத்து என்று சட்டம் கொண்டுவந்தார்கள். ஆனால், எல்லா டிரைவர்களும் (கார், பஸ், லாரி, மினி லாரி, ஆட்டோ) என்று எல்லா டிரைவர்களும் ஸ்டிரைக் செய்து அதனை திரும்ப பெறச் செய்து விட்டார்கள். அரசு கடுமையான நடந்து கொண்டால்தான் இதனை தடுக்க முடியும்.
ReplyDeleteஅறிவுடைநம்பி.
ஜாக்கி,
ReplyDeleteஎன்ன ஒற்றுமை? நானும் விபத்தைப் பற்றிய இடுகை இன்று எழுதியிருக்கிறேன். உங்களுடையதைப் போல் விரிவாக எழுதாவிட்டாலும் பொதுவான கருத்துக்களை முன்வைத்திருக்கிறேன். பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். வழக்கம் போல மற்றொரு சமூக அக்கறை மிகுந்த இடுகை.
ஸ்ரீ....
பாவம்........ மனசு கலங்கித்தான் போச்சு தினசரியில் பார்த்ததும்:(
ReplyDeleteதண்டனை அதிகபட்சமா இருக்கணும். யார் என்னன்னு பார்த்து ஆளுக்கொரு நீதின்னு இருக்கக்கூடாது.
சட்டம் ஒழுங்கு சரி இல்லாத நாட்டுலே மனுச உயிர்களுக்கு மதிப்பு ஏது?
அருமை அருமை அருமை ஜாக்கி.
ReplyDeleteநல்ல இடுகை. படித்ததும் மனம் பாரமானது. வேதனையாக உள்ளது.
ஆனால், நாமும் மிகுந்த ஜாக்கிரதையாக ஓட்ட வேண்டும். எங்களுக்கு டிரைவிங் லைசன்ஸ் வாங்கும் போது சொல்லிக்கொடுத்த முதல் விதி:
நாம் ஓட்டும்போது எப்போதும் முன்னே செல்லும் வண்டியின் பின் டயர் தெரிந்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி தெரியவில்லை என்றால் நாம் மிக நெருங்கி செல்கிறோம் என்று அர்த்தம். அவ்வாறு சென்றால் அவசரத்துக்கு காரை நிறுத்த முடியாது. அந்த விபத்தை பொருத்தவரை லாரி டிரைவர் மேல் முழு தப்பு கிடையாது.
கார் ஓட்டுபவர் சரியாக கவனித்து ஓட்டவில்லை. இங்கே பின்னே வருபவர் முன்னால் செல்லும் காரை இடித்தால், விசாரணையே கிடையாது. முழு பொறுப்பும் பின்னால் காரை ஓட்டுபவர் மேல்தான்.
திண்டிவனம் அருகே விபத்து என்று நேற்று படித்திருப்பீர்களே... அதில் பலியானவரில் ஒருவர் என் அலுவலக தோழரின் தந்தை. இத்தனைக்கும் அவர் பேருந்தில் இருந்து இறங்கி இருபது அடி தள்ளி சாலையில் இருந்து இறங்கி நின்று கொண்டிருந்தவர். இங்கு தவறு கனரக வாகனத்தை ஓட்டி வந்தவர் மீதல்ல. இருபதாயிரம் ரூபாய் டயர் சேதாரம் ஆகி விடக்கூடாதென்று சாலை மீது வண்டியை நிறுத்தி விட்டு தன் உயிரையும் விட்டு, மேலும் நான்கு உயிரையும் பறித்த பேருந்து ஓட்டுனர் மீது தான்.
ReplyDeleteஅந்த பேருந்தில் ஒளி பிரதிபலிப்பான் (reflector) ஒட்டி இருக்கப்படவில்லை. அத்துடன் அந்த பேருந்து ஓட்டுனர் எல்லா விளக்கையும் அனைத்து விட்டு சாலை மீதே (சாலையில் இருந்து கீழ் இறக்கி நிறுத்தி இருந்ததாக செய்தித்தாள்களில் வந்தது உண்மை இல்லை) நிறுத்தி இருக்கிறார். இதில் யார் மீது தப்பு சொல்லுவீர்கள். பேருந்து ஓட்டுனர் மீதா? உண்மைக்கு புறம்பாக எழுதிய பத்திரிக்கை மீதா? கால் உடைந்து சுய நினைவின்றி இருந்த கனரக ஓட்டுனர் தான் தகவல் தந்து அடிபட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்ததாக எங்களிடம் பொய் சொல்லிய காவல்துறையினர் மீதா?
திருடனா பார்த்து -திருந்த விட்டால் -திருட்டை ஒழிக்க முடியாது
ReplyDelete-tsekar//
நன்றி ரோவூஸ் ஆட்சியாளர்களின் கட்டுப்பாடு ரொம்பவும் அவசியமானது...
வேதனையான விசயம், இது
ReplyDeleteதொடரக்கூடாது.//
விபத்துகள் என்பது ரொம்பவும் குறைவாக நடக்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்...
some ideas to be worked out. Like separate lane for cars and scooters and separate way for lorries or heavy vehicles like that. Otherwise it will be dangerous and nightmare for two wheelers and car owners
ReplyDeleteKanthasamy R//
நன்றி கந்தசாமி...
எந்த வாகனமும்
லேன்விட்டு மாறி ஓட்டக்கூடாது என்று சொல்லி கண்காணிப்பு கேமரா வைத்து கண்காணித்தால் ஒரளவு விபத்துகள் குறையும்...
மிக அருமையான பகிர்வு ஜாக்கி அண்ணா. அந்த புதுமணத் தம்பதிகளின் நிலை மிகுந்த வேதனை தருவதாக உள்ளது. அலட்சியம் என்ற ஒற்றைச்சொல்லே இத்தனை அவலங்களுக்கும் காரணம்.//
ReplyDeleteஎல்லோருடைய அலட்சியமுமே இதற்க்கு காரணம்...நன்றி சரவணகுமார்...பா.ரா பற்றி கொஞ்சம் பேச வேண்டும்.. அவரை சாட்டுக்கு அவசிம் வர சொல்லவும்..
முன்பு ஜெயலலிதா ஆட்சியில் என்று நினைக்கின்றேன். வாகன விபத்து நடந்தால், முதல் தடவை அபராதம்ம் சிறைதண்டனை, இரண்டாவது தடவை நடந்தால் அதிகமான சிறைதண்டனை மற்றும் லைசன்ஸ் ரத்து என்று சட்டம் கொண்டுவந்தார்கள். ஆனால், எல்லா டிரைவர்களும் (கார், பஸ், லாரி, மினி லாரி, ஆட்டோ) என்று எல்லா டிரைவர்களும் ஸ்டிரைக் செய்து அதனை திரும்ப பெறச் செய்து விட்டார்கள். அரசு கடுமையான நடந்து கொண்டால்தான் இதனை தடுக்க முடியும்.
ReplyDeleteஅறிவுடைநம்பி.//
நன்றி அறிவுடை நம்பி...
அந்த சட்டத்தை திரும்ப அமல் படுத்தினால் நிச்சயம் விபத்துகள் குறையும்...
ஜாக்கி,
ReplyDeleteஎன்ன ஒற்றுமை? நானும் விபத்தைப் பற்றிய இடுகை இன்று எழுதியிருக்கிறேன். உங்களுடையதைப் போல் விரிவாக எழுதாவிட்டாலும் பொதுவான கருத்துக்களை முன்வைத்திருக்கிறேன். பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். வழக்கம் போல மற்றொரு சமூக அக்கறை மிகுந்த இடுகை.
ஸ்ரீ....//
படித்தேன் ஸ்ரீ...நன்றாக எழதி இருந்தீர்கள்... லோக்கல் வாகன ஓட்டிகளை பற்றி..
பாவம்........ மனசு கலங்கித்தான் போச்சு தினசரியில் பார்த்ததும்:(
ReplyDeleteதண்டனை அதிகபட்சமா இருக்கணும். யார் என்னன்னு பார்த்து ஆளுக்கொரு நீதின்னு இருக்கக்கூடாது.
சட்டம் ஒழுங்கு சரி இல்லாத நாட்டுலே மனுச உயிர்களுக்கு மதிப்பு ஏது?//
டீச்சர் அது ஒரு 4 நாள என்னை ரொம்பவும் உறுத்துன விஷயம் அது
அந்த விபத்தை பொருத்தவரை லாரி டிரைவர் மேல் முழு தப்பு கிடையாது.//
ReplyDeleteஇருக்கலாம் சடன் பிரேக் போட்டு வண்டியை ஒரம் கட்டியதே விபத்துக்கு காரணமாக பத்திரிக்கை செய்தி சொல்கின்றது... அந்த போட்டோவை கிளிக்கி பெரிதாக படிக்கவும்
நன்றி உலகநாதன்..
அந்த பேருந்தில் ஒளி பிரதிபலிப்பான் (reflector) ஒட்டி இருக்கப்படவில்லை. அத்துடன் அந்த பேருந்து ஓட்டுனர் எல்லா விளக்கையும் அனைத்து விட்டு சாலை மீதே (சாலையில் இருந்து கீழ் இறக்கி நிறுத்தி இருந்ததாக செய்தித்தாள்களில் வந்தது உண்மை இல்லை) நிறுத்தி இருக்கிறார். இதில் யார் மீது தப்பு சொல்லுவீர்கள். பேருந்து ஓட்டுனர் மீதா? உண்மைக்கு புறம்பாக எழுதிய பத்திரிக்கை மீதா? கால் உடைந்து சுய நினைவின்றி இருந்த கனரக ஓட்டுனர் தான் தகவல் தந்து அடிபட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்ததாக எங்களிடம் பொய் சொல்லிய காவல்துறையினர் மீதா?//
ReplyDeleteகடவுள் நானும் அந்த பேருந்தை பார்த்தேன்...
அதனால்தான் ஒட்டு மொத்த லாரி ஒட்டிகளையும் நான் கூத்தம் சொல்லவில்லை.. போனபதிவில் கூட நான் ரிப்ளெக்டர் ஸ்டிக்கர் அவசியம் ஒட்ட வேண்டும் என்று கட்டாய சட்டம் போடவேண்டும் என்று சொல்லி இருந்தேன்...
நல்ல அலசலான இடுகை... கனரக வாகன ஓட்டிகள் மட்டும் கனவுகளை நசுக்குவதில்லை என்பது என் கருத்து....
ReplyDeleteநல்ல இடுகை.
ReplyDeleteநல்ல பகிர்வு...
ReplyDeleteஉரிய நிர்வாகம் இதை படித்து நீங்கள் கூறியபடி நடவடிக்கை எடுக்க வேண்டும...
ReplyDeleteJayamohan has not done anything for the Tirupathur constituency. Murpakal cheyyin pirpakal vilaiyum.
ReplyDeleteநல்ல இடுகை நண்பரே. நாம் வாகன ஓட்டுனர் உரிமம் கொடுக்கும் முறையும், சாலை விதிகளும் மாறும் வரை இது ஓயாது.
ReplyDeleteஇத்தம்பதி இறந்ததற்கு யார் காரணம்?
நம் ஓட்டுனர் உரிமம் வழங்கும் அமைப்புகளே காரணம்.
National Highwayல வண்டி ஓட்டறதுக்கு ஒரு திறமை வேண்டும்... அது எனக்கு உண்டு... எப்போ போனலும் டூவீலர்தான். லாரிகள் எல்லாம் மதிக்கமாட்டாங்கதான்... ஆன அவங்களையும் தண்ணி காட்ற திறமை நம்க்கு உண்டு.
ReplyDeleteசிட்டியில கேனத்தனமா ஓட்றவந்தான் ஹைவேஸ்ல கஷ்டப்பட்டுவான்... ஜாக்கி
Always we should careful while on Highways.... roaring with gears
இது கொஞ்சம் சிக்கலான விஷயம். சரியாக, முறையாக பயிற்சி பெறாமல், தவறான வழியில் ஓட்டுனர் உரிமம் வாங்கப் படுவது தடுக்கப் படாவிட்டால் இந்த நிலை தொடரத்தான் செய்யும். லஞ்சப் பேயை ஒழித்தால் மட்டுமே நாம் நாட்டிலுள்ள பல தவறுகள் திருத்தப் படும்..... ஆனால், லஞ்சம் கொடுப்பதும்,பெறுவதும் இயல்பான செய்கையாக மாறிவிட்ட நம் திருநாட்டில் இதற்கெல்லாம் விடிவே கிடையாது.
ReplyDeleteநல்ல பதிவு ஜாக்கி சேகர்.
ReplyDeleteடிரைவரா பார்த்து திருந்தாவிட்டால் வாகன விபத்துகள் குறைய வழியில்லை.
yeah... even my inlaws met an accident.Thankfully they are saved with minor injuries.But my mother-in-law had operation on leg and c didnt walk even after 6 months.They are seated in the back seat. But the drived was died in spot.
ReplyDeleteyeah... even my inlaws met an accident.Thankfully they are saved with minor injuries.But my mother-in-law had operation on leg and c didnt walk even after 6 months.They are seated in the back seat. But the drived was died in spot.
ReplyDeleteIts very useful one..
ReplyDeletewritten with care too..
rules n punishments should be severe then only these kind of problems will be solved.
//
இடையறாது எழுத்து பணிக்கு நடுவே இந்த வேலையை செய்ய வேண்டுகின்றேன்...//
super punch.. :)
சம்பந்தப்பட்டவர்கள் ஆவண செய்ய வேண்டும்.
ReplyDeleteநல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் இடுகை சார்.
உதாரணத்துக்கு திருச்சி சாலையில் ஒரு வாரத்துக்கு முன் 100கீலோமீட்டர் வேகத்தில் வந்த ஒரு கார்... சட்டென கிளைச்சாலையில் இருந்து ஒரு லாரிஉள்ளே வர இதை சற்றும் எதிர்பார்க்காத வாகன ஓட்டி நிலைதடுமாறி பிரேக் அடிக்க வண்டி கவி்ழ்ந்து ஸ்தலத்துலேயே 4 பேர் மாண்டு போயினர்..//
ReplyDeleteஇந்த விபத்து நடந்த போது நான் அந்த யாதில் தான் இருந்தேன், லாரி ஓட்டுனர் மீதுதான் தவறு, லாரி சாலையை கடக்கும்போது கொஞ்சம் பார்த்து வந்து இருக்கலாம், அதுபோல கார் ஓட்டுனரும் சாய் சந்திப்பில் கொஞ்சம் கவனித்து செல்ல வேண்டும் ஆனால் பலர் அவ்வாறு செய்வது இல்லை.
நீங்க சொல்வது உண்மை, நெடுஞ்சாலையில் இதுவரை 35000 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளேன் எனது காரில் பெரும்பாலும் நெடுந்தூரம் செல்லும் லாரி ஓட்டுனர்கள் சாலை விதிகளை மிகவும் மதித்து செல்வார்கள் ஒரு சிலர் தவிர ஆனால் குறைந்த தூரம் செல்லும் ஓட்டுனர்கள் பெரும்பாலும் அலட்சியத்துடனே மேலும் சாலை விதிகளை மதிப்பதும் இல்லை.
சில சமயம் எனக்கு அவர்களை பிடித்து செவுத்துல நாலு அப்பு ஆப்பனும் என்று தோணும் ஆனா அவங்க கூட சண்டை போடும் நேரத்துல நாம வீடு போய் சேர்ந்துடலாம் என்று நினைத்து கிளம்பிவிடுவது உண்டு .
சென்னையில் கல்லூரி பேருந்துகளும், அலுவலக பேருந்துகளும் எப்படி ஓடுகின்றனர், எனது அலுவலக பேருந்துகளே மோசமாக ஓட்டப்படுகின்றன அதற்க்கு நான் புகர் தெரிவித்தால் என்னிடமே நக்கல் செய்கிறார்கள்.
வாயில அசிங்க அசிங்கம வருது, இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் எந்த .............................யும் திருத்த முடியாது
ஜாக்கி சேகர்,
ReplyDeleteகனவுகளை நசுக்கும் கனரக ஓட்டுநர்கள் என்ற தலைப்பே எரிச்சலூட்டுகிறது. ஏதோ லாரி ஓட்டுநர்களெல்லாம் வாழத் தகுதியற்ற காட்டுமிராண்டிகள் போலவும் கார்களில் போகும் கனவான்கள் மட்டும் இந்த நாட்டிற்கு தேவைப்படும் மேன்மக்கள் என்ற தொனி.
நீங்கள் தொகுத்திருக்கும் விபத்துக்களின் காரணங்கள் செய்தித்தாட்களில் வந்தவைதான். அவற்றை வைத்து லாரி ஓட்டுநர்களை பொதுமைப்படுத்தும் போக்கு மிகவும் தவறானது.
லாரி ஓட்டுநர்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் கொஞ்சம் கவுரவம் பார்க்காமல் அவர்களிடம் பேசிப்பார்த்தால் உண்மையைப் புரிந்து கொள்வீர்கள்.
லாரி ஓட்டுநர்களால் ஏற்படும் விபத்துக்களுக்குப்பின்னர் அவர்களை கசக்கிப் பிழியும் கடுமையான வேலை நிலைமை உள்ளது.
செங்கல், மணல், ஜல்லி, போன்ற லாரி ஓட்டுநர்களுக்கு ஒரு டிரிப்புக்கு இத்தனை ரூபாய் என்று உள்ளதால் அவர்கள் அதற்காகவே அரக்கப் பரக்க செல்லும் துயரம்.
காங்கிரீட் கலவையை குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு சேர்க்காவிட்டால் கலவை கெட்டுப்போகும் என்பதால் அதிவேகத்தில் போகவேண்டிய நிர்ப்பந்தத்தில் காங்கீரீட் லாரிகள்.
நெடுந்தூரம் செல்லும் ட்ரக் ஓட்டுநர்கள் பகல் நேரத்தில் நகரங்களுக்குள் செல்ல தடை இருப்பதால் இரவில் மட்டும்வேகமாக ஓட்டவேண்டிய நிர்ப்பந்தம்.குறிப்பிட்ட நாட்களுக்குள் டெலிவரி செய்தாகவேண்டிய நிர்ப்பந்தம்.
இதனாலேயே அதிகாலை விபத்துக்களில் தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் லாரி ஓட்டுநர்கள் சிக்கிக்கொள்கிறார்கள். இன்னும் லாரி ஓட்டுநர்களைப் பற்றி எழுத நிறைய இருக்கிறது.
அதே சமயம் இரு சக்கர வாகனத்திலிருந்து காருக்கு மாறும் நடுத்தரவர்க்கம் பைக்கைப் போலவே காரை கன்னாபின்னாவென்று ஓட்டும் பலரை பார்க்கலாம். பொதுவில் நெடுஞ்சாலைப் போக்குவரத்தின் ஒழுங்கைக்கற்றுக் கொள்ளாமலேயே பிரச்சினைகளை ஏற்படுத்துவது இவர்கள்தான். மாறாக வாடகைக்கார்களில் பணி புரியும் ஓட்டுநர்களும் நிம்மதியான வேலைபாணியில் இல்லை.
குறைந்த சம்பளம், அதிக வேலைப்பளு, லாரியிலேயே கழியும் வாழ்க்கை என்று கொத்தடிமைகளாக வாழும் அந்த தொழிலாளிகளை கசக்கிப் பிழிந்தால்தான் இந்தியா முழுவதும் பொருட்களை ஓரளவுக்கு கட்டுப்படியாகும் கட்டணத்திற்கு கொண்டு சேர்க்க முடியும். அடிக்கடி டீசல் விலை ஏறுவதால் லாரி முதலாளிகள் ஓட்டுநர்களுக்கு சம்பளத்தை உயர்த்துவதில்லை.
எனவே ஜாக்கிசேகர் மற்றும் இந்த இடுகையின் நீதியை ஏற்கும் நண்பர்கள் எல்லாரும் விமானத்தின் மூலம் வரும்பொருட்களை மட்டும் பயன்படுத்தலாம் என்று முடிவு செய்தால் இந்த விபத்துக்களை குறைக்கலாமே.
நன்றி
rompa nalla vishayamayyaa.
ReplyDeletesari, athaavathu kerala arasu velai illaama gulf'il irunthu thirumpum malayaalikalukku eeziyaaka loan kodutthu uthavukirathaam. passport copy mattum kodutthaal pothumaam.
tholil seyyavo, viyaabaaramo panni kollalaam.
ithai pola tamilaka arasum uthavi seyya vendum entru thunai mudalvar M K STALIN avarkal cellukku seythi anuppungayyaa....
enakku avar addras theriyaathu.
sariyaa makkaa.
anpudan,
MANASEY'
BAHRAIN.
நன்றி க.பாலாசி..
ReplyDeleteநன்றி செந்தழல் ரவி...
நன்றி நித்யானந்தம்..
நன்றி சுகுமார் சுவாமி நாதன்..
நன்றி ராம்ஜீ யாஹு
நன்றி செந்தில் வேலன்
நன்றி அசோக்...
நன்றி அழகன்
நன்றி கல்கர் சிவா
நன்றி சஞ்சனா
நன்றி கோமி
நன்றி தன்ஸ் ரொம்ப அற்புதமா விரிவாய் எதார்த்தத்தை சொல்லி இருக்கிங்க
நன்றி அக்பர்
அன்புள்ள வினவுக்கு...
ReplyDeleteவணக்கம்... உங்கள் முதல் பின்னுட்டம் என் தளத்தில்..
உங்கள் மீது எப்போதும் ஒரு மதிப்பு எனக்கு இருக்கின்றது...விளிம்பு நிலை மனிதருக்கான முதல் குரல் உங்களுடையது.. என்பது ஆனால் உங்கள் பல கருத்துக்கள் எனக்கு ஏற்புடையது அல்ல.. அது உங்கள் கருத்து...
சரி விஷயத்துக்கு வருகின்றேன்..
நான் ஒரு இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்து இருக்கின்றேன்... இந்தியா முழுவதும் இலகுரகவாகனம் ஓட்ட முடியம்...
இதில் கவுரவம் பார்க்காமல் என்ன பேச்சு என் வீட்டில் என் பெரியப்பா ஒரு டிரைவர்... என் சொந்தங்களில் பலர் டிரைவர்கள்தான்....
விபத்துக்கு பெரிய காரணம் லாரிகள் என்பதை மறுப்பதற்க்கு இல்லை ஆனால் அவர்களை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது என்று நான் எழுதி இருக்கின்றேன்...
அநேக விபத்துகளில் மனிதாபிமான உதவி வருவது லாரி டிரைவர்களிடம் இருந்துதான்... என்று சொல்லி இருக்கின்றேன்...
காரில் போகும் கணவான்களை எப்பவும் தூக்கி கொண்டாடும் ஆள் நான் இல்லை... அவர்கள் காரணம் என்றால் அதையும் சுட்டிக்கொ்டுவேன்..
அதற்க்கு வாசகர் தன்ஸ அளித்து இருக்கும் பதில் இங்கே பொறுந்தும் என்று நினைக்கின்றேன்.,..
//இந்த விபத்து நடந்த போது நான் அந்த யாதில் தான் இருந்தேன், லாரி ஓட்டுனர் மீதுதான் தவறு, லாரி சாலையை கடக்கும்போது கொஞ்சம் பார்த்து வந்து இருக்கலாம், அதுபோல கார் ஓட்டுனரும் சாய் சந்திப்பில் கொஞ்சம் கவனித்து செல்ல வேண்டும் ஆனால் பலர் அவ்வாறு செய்வது இல்லை.//
//
நீங்க சொல்வது உண்மை, நெடுஞ்சாலையில் இதுவரை 35000 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளேன் எனது காரில் பெரும்பாலும் நெடுந்தூரம் செல்லும் லாரி ஓட்டுனர்கள் சாலை விதிகளை மிகவும் மதித்து செல்வார்கள் ஒரு சிலர் தவிர ஆனால் குறைந்த தூரம் செல்லும் ஓட்டுனர்கள் பெரும்பாலும் அலட்சியத்துடனே மேலும் சாலை விதிகளை மதிப்பதும் இல்லை.//
இப்படி இருக்கையில் அவர்கள் கசக்கி பிழிய படுகின்றார்கள்.. அவர்கள் அந்த பிரச்சனை இந்த பிரச்சனையை சந்திக்கின்றார்கள்... என்று நீங்கள் சொல்வது ஏன்... அப்படி சந்தி்த்தால் எவ்வளவு விபத்து வேண்டுமானலும் செய்யலாமா?//
//எனவே ஜாக்கிசேகர் மற்றும் இந்த இடுகையின் நீதியை ஏற்கும் நண்பர்கள் எல்லாரும் விமானத்தின் மூலம் வரும்பொருட்களை மட்டும் பயன்படுத்தலாம் என்று முடிவு செய்தால் இந்த விபத்துக்களை குறைக்கலாமே.//
இந்த வரிகளை படிக்கும் போது செம காமெடியாக இருக்கின்றது...இந்த வரிகளுக்குஉங்களுக்கு என்னால் பதில் அளிக்க முடியாது...
மறைமலை நகரில் இருந்து சென்னை நோக்கி வரும் மணல் லாரி காட்டுத்தனமான வேகத்தில் இரண்டு சக்ர வாகன ஓட்டியை விட கட் செய்து பீதியை கிளப்பும் லாரி ஓட்டுனர்கள்களின் வாழ்வின் பின்புலத்தை பேசுபவர்கள் அல்லவா.. நீங்கள்...
காரில் செல்லும் கணவான் கள் இந்த செயலில் ஈடுபட்டாலும்... இப்பத்தான் எழுதி இருப்பேன்..
அவர்கள் எவ்வளவு விபத்து வேண்டுமானாலும் ஏற்படுத்தட்டும்...அவர்கள்தான் முதாளித்துவ வர்கத்தால் கசக்கி பிழிய படுகின்றார்களே...
நீங்கள் டூவிலரில் போகும் போது எந்த லாரியும் நீங்கள் சிறுவாகனத்தில் வருகின்றீர்கள் என ரோட்டில் பாதி துரம் ஏறி வந்து உங்களை விபத்து எற்படுத்தி இருந்தால் இப்படி பேசமாட்டீர்கள்...
இது போலான பல விபத்துகளில் என் மாணவ செல்வங்களை இழந்து இருக்கின்றேன்...
எல்லாவற்றையும் முதளாளிதத்துவ்ததோடு ஒப்பிட்டு பார்பதால்தான் இப்படி ஒரு கேள்வியும் கடைசிவரியை நக்கலுமாக எழுதி இருக்கின்றீர்கள்..
விபத்தை பற்றி சொன்னால் அதற்கான காரணம் பற்றி எழுதி விபத்து ஏற்படுத்துவது நியாயம் என்பது போல் சொல்லி இருக்கின்றிர்கள்..
நன்றி...
இதற்க்கு மேல் நான் எந்த பதிலும் சொல்ல போவதில்லை...
நீங்கள் உங்ககள் கருத்தை நீங்கள் மாற்க்கொள்ள போவது இல்லை என்று எனக்கு தெரியும்... அது போலதான் நானும்
நன்றி தோழர்களே...
அன்புடன்
ஜாக்கிசேகர்..
நண்பரே,
ReplyDeleteநீங்கள் ஒரு பொதுவிசயத்தைப் பற்றி விமரிசனம் செய்கிறீர்கள். அது தவறு என்று எங்கள் கருத்தைச் சொல்வதே தண்டனைக்குரிய குற்றமா? அதில் சரி, தவறு என்று விவாதிப்பதற்குப் பதில் உங்கள் கருத்து உங்களுக்கு, எனது கருத்து எனக்கு, எதுவும் மாறாது என்றெல்லாம் நிபந்தனை விதிப்பது ஏனோ? எங்களுக்கு அந்த கண்டிஷன் அப்ளை எல்லாம் இல்லை. எங்கள் கருத்து தவறு என்று நிரூபித்தால் கண்டிப்பாக மாற்றிக் கொள்வோம்.
உங்கள் விருப்பப்படியே நான் இருசக்கர வாகனம் ஓட்டும் போது ஒரு லாரியால் மோதிக் கொல்லப்படுகிறேன் என்று வைத்துக் கொள்வோம். அப்போதும் அதை ஒரு தனி டிரைவரின் தவறாக மட்டும் எங்கள் தோழர்கள் பார்க்கமாட்டார்கள்.
நான் சொல்ல வந்த விசயம் இந்தியாவில் வேலை செய்யும் லாரி டிரைவர்கள் இணையத்தில் ஹாயாக பொழுதுபோக்கும் அறிவாளிகளைப் போல அளவான பாதுகாப்பான வேலைநேரம், ஜாலியான பொழுதுபோக்கு என்று குஷாலாக வாழும் நிலையில் இல்லை. அவர்களை எந்திரம் போல சுரண்டும் இந்த சமூக அமைப்பே அவர்களது சமநிலையைக் குலைத்து விபத்து ஏற்பதுத்துவதற்கு அடிப்படைக்காரணம். பதிவர்களைப் போல எட்டுமணிநேரம் வேலை, ஐந்து அல்லது ஆறு இலக்க சம்பளம், குடும்பத்துடன் செலவழிக்க போதுமான நேரம், ஊதியம் என்று ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தால் லாரி டிரைவர்களின் விபத்துவிகிதம் கண்டிப்பாக குறையும். ஆனால் அது முடியாது, அவர்களை அப்படித்தான் அடித்து வேலை வாங்குவோம், விபத்து மட்டும் நேரக்கூடாது என்று விரும்பினால் அப்புறம் ஒன்றும் சொல்வதிற்கில்லை.
சமூகப்பிரச்சினைகளை நமது சொந்த விருப்பு வெறுப்பை வைத்து அணுகுவதை விட யதார்த்தம் என்னவாக இருக்கிறது என்று புரிவதற்கு முயற்சி செய்தால் அது அது மட்டுமே தீர்வைக் கண்டுபிடிப்பதற்கு உதவும் என்பது எங்களது பணிவான கருத்து. நன்றி
அய்யா வினவு அவர்களே... நான் எனது நண்பரின் தகப்பனார் இறந்து (இதே பதிவில் ஒரு பின்னூட்டத்தில் இதை குறிப்பிட்டிருக்கிறேன்) அவருக்கு காரியம் பண்ணி விட்டு வரும் போது ஸ்ரீபெரும்புதூர் அருகில் ஒரு வோல்க்ஸ் வேகன் ஜெட்டா (இந்த காரின் விலை 12 லட்சத்தில் தான் ஆரம்பிக்கிறது; ஆகையால் இந்த காரினை இருசக்கர வாகனம் ஓட்டியவர் திடுமென வாங்கி ஓட்ட முடியாது.) ஒட்டி வந்த ஒருவர் வளைந்து நெளிந்து ஒட்டி வந்தார்... ஒரு நூறு மீட்டர் கூட சென்றிருக்க மாட்டோம். அவரது காரினை ஒரு பேருந்திற்கு முன்னாள் வளைத்து அதற்கு முன்னாள் போக முடியாத படிக்கு நெருக்கடி இருக்க அந்த இடத்திலேயே பிரேக் அடித்து நிறுத்த பின்னால் இருந்த பேருந்து ஓட்டுனரால் அந்த வேகத்தில் வண்டியை நிறுத்த முடியாமல் போக, ஜெட்டாவின் பின்புறம் காலி... இரண்டு லட்சமாவது செலவாகும்... இங்கு யாரை குறை சொல்லுவீர்கள்... ஜெட்டாவின் பிரேக் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கலாம்; ஆனால் பின்னால் வந்து கொண்டிருக்கும் பேருந்திற்கும் இதை எப்படி பொருத்தி பார்க்க முடியும். நல்ல வேளை காரின் உள்ளே பின் புறத்தில் யாரும் அமர்ந்திருக்க வில்லை. அமர்ந்திருந்தால், அதற்கு பின்னால் அவர் ஒரு நடைப்பிணமாக தான் தன் வாழ்க்கையை அதற்கு பின்னால் கழித்திருக்க வேண்டும்...
ReplyDeleteஅப்புறம் விமானத்தில் வரும் பொருட்களை மட்டுமே வாங்கும் சக்தி இன்று இந்தியாவில் வெறும் 20-25% மக்களிடம் தான் இருக்கிறது... இது போக மீதி ஜனம் வாங்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் தான் வாங்கிக்கொடுக்க வேண்டும்.
நன்றி ஜாக்கி அவர்களே ... சமுக அக்கறையுள்ள ஒரு இடுகை.. வாழ்த்துக்கள்
ReplyDeleteநீங்கள் சொல்வது உண்மை தான் கனரக வாகன ஓட்டிகள் ஒரு காரணம் விபத்துகளுக்கு ....ஆனால் தலைப்பு..?பொதுவாக கனரக வாகனங்களினால் ஏற்படும் விபத்துகளில் உயிரிழப்பு அதிகமாக இருக்கும். ஆனால் சிறு வாகனங்களில் ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்புகள் குறைவாக இருப்பதால் பெரும்பாலும் கவனிக்கபடுவதில்லையே தவிர கனவை நசுக்குபவர்கள் கனரக வாகன ஓட்டிகள் என்று சொல்வது ஏற்றுகொள்ளமுடியாது...அதி விரைவில் செல்லும் பல பேருந்துகளில் எப்போதும் கூட்டம் அதிகமா ஏன் இருக்கிறது பால்,பேப்பர்,காய்கறி. காலையில் லேட்டா வந்தால் எவ்ளோ பேரை அர்சிக்கிறோம்..எல்லாவற்றையும் கொஞ்சம் யோசியுங்கள்..கனரக வாகனத்தின் முன் கட் அடித்து பதற வைக்காத இரு சக்கர ஓட்டிகள் எத்தனை பேர் நாம் ..அவ்வளவு பாரத்தை இழுத்து வரும் வாகனத்திற்கு வழி தராமல் ரோட்டை விட்டு இறங்கினால் கௌரவ கொறச்சல் என்று நினைக்கும் நாம் லாரிகாரனை தான் திட்டமுடியும் விழுவதற்கு முன் எல்லாம் அவர்கள் இடத்தில சரிதான்..... விழுந்து மாண்டால் உயிரோடு இருப்பவன் குற்றவாளி ....... ...பெரிய வாகனமாய் இருப்பதால் அவன் சாவது குறைவு எனவே லாரிகாரன் பெரியகுற்றவாளி...சரிதானே ..!
விழிப்புணர்வு, சாலை பராமரிப்பு..கடும் சட்டங்கள் தவிர வேறு எதுவும் இதற்க்கு உதவாது ... வாகனம் ஓட்டும்போது கனவு காண்பதை விடுப்போம்... பழிப்பதை விடுவோம் ..
மிக அவசியமான பதிவு. மனசு வலிக்கிறது
ReplyDelete