1000 post -ஆயிரமாவது பதிவு...நன்றிகள்..



2008 மார்ச் மாதம் வரை பதிவுலகத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..ஆனால் கேள்விப்பட்டு இருக்கின்றேன்...
அப்போது எல்லாம் என்னிடம் கம்யூட்டர் இல்லை...கம்யூட்டர் அடிப்படை என்னவென்று மட்டும் தெரிந்து இருந்த காலம் அது...

என் அத்தை மகன் முகுந்தன்  எண்ணத்துப்பூச்சி என்ற பெயரில் 2006ல் வலைதளம் ஆரம்பித்து நேரம் கிடைக்கும் போது தொடர்ந்து எழுதி வந்தான்.. அவரது தளத்தை வாசிக்க இங்கே கிளிக்கவும்...

அப்போது அவன் துபாயில் ஒரு எண்ணெய் ரிபைனரி கம்பெனியில்  வேலை செய்து வந்தான்.. கடலூருக்கு வரும் போது அவனிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது, எண்ணத்து பூச்சி என்ற பெயரில் வலையில் எழுதி வருவதாக சொன்னான்..அப்படி என்றால் என்ன என்று கேட்டேன்?? எனக்குன்னு ஒரு பக்கம் அதுல தமிழ்ல எழுதிகிட்டு வரேன் என்றான்.. அதனால்  நிறைய நண்பர்கள்.. அது ஒரு தனி உலகம்..தொடர்ந்து எனது போஸ்ட் படிச்சிட்டு ஒரு டாக்டர் போன் செய்வார் என்று சொன்னான்..

பத்திரிக்கையில் எழுதுவதை விட கம்யூட்டரில் ஒரு பக்கத்தில் எழுதினால் அது எப்படி பலர் படிப்பார்கள்? என்ற கேள்வி என் மனதில் ஓடியது..அப்படியே படிச்சாலும் போன் எல்லாம் செஞ்சு பேசுவாங்களா? என்ன? வேற வேலை வெட்டி  அவுங்களுக்கு இருக்காதா??? அவ்வளவு நல்லா எழுதறவனா இருந்தா பத்திரிக்கையிலேயே எழுததலாமே என்பதாக என் கேள்விகள் அவனை  சுற்றி வட்டமிட்டன.. ஏன் முகுந்தா? நான் கூட ஒரு பக்கம் அரம்பிக்கலாமா? யாருவேனா ஆரம்பிக்கலாம்.. என்ன தொடர்ந்து எழுதனும் என்று சொன்னான்..

2006ல் எனக்கும் என் அத்ததை பையன் முகுந்தனுகும் நடந்த அந்த உரையாடல் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளவே இல்லை அப்படியே மறந்தும் போய் விட்டேன்..2008ல் நண்பர் நித்யாவின் அறிமுகத்தால் அவரது தமிழ் வலைபக்கத்தை எனது கம்யூட்டரில் நேரில் பார்க்கையில் நானும் பிளாக் ஆரம்பித்து எழுதவேண்டும் என்று ஆசை கொண்டேன்..அந்த ஆசை இப்போது வரை தொடர்ந்து கொண்டு இருக்கின்றது..

கம்யூட்டர் அடிப்படை எனக்கு கொஞ்சமாக தெரியும்...தமிழ் டைப்பிங் தெரியாது .. நண்பர் நித்யாவுக்கு தெரிந்தது தமிழ் ஓல்டு டைப்ரேட்டர் பாண்ட்.. அதைதான் எனக்கு பழக்கி விட்டார்..நான் தந்தி பேப்பரில் வந்த பெரிய பாண்ட் எழுத்துக்களை வெட்டி கம்யூட்டர் கீ போட்டில்  ஒட்டி தடவி தடவி டைப் அடித்து இன்று சற்று  வேகமாக அடிக்கின்றேன்.

ஆனால் ஆரம்பகாலங்களில் கம்யூட்டரில் தமிழ் படிக்க வேண்டும் என்றால் வெப்துனியா டாட்காம் மட்டுமே எனக்கு தெரியும் அதில்தான் போய் படிப்பேன்.....ஆனால் இன்று எனது தளம் அலெக்சாவில் ஒரு லட்சத்துக்குள் இருக்கின்றது.. அதுக்கு காரணம் எழுத வேண்டும் என்ற வெறிதான் காரணம்...

2008 ஆகஸ்ட்டு மாதங்களில் ஒரு பதிவை போட்டு முடிப்பதற்குள் பெண்டு கழன்டி விடும்..ஓத்தா எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதனும் என்று நான் நினைத்தது உண்டு..பேசாம தூக்கி போட்டு விட்டு போய் விடலாமா? என்று கூட தோன்றியது உண்டு..ஆனால் தொடர்ந்து என்னை கவனிக்கின்றார்கள் என்று எனக்கு தெரியவந்த காரணத்தால் நான் தொடர்ந்து பிழைகளுடன் அது பற்றிய விமர்சனங்களை எல்லாம் புறம்தள்ளிவிட்டு எழுதினேன்...

பொதுவாக சட்டென யாருடனும் விவாதத்துக்கு போக மாட்டேன் இணைய விவாதங்கள் ஒரு போதும் தீர்வை நோக்கி போகாது என்பதும், நேர விரயம் என்பதும் எனது கருத்து... ஆனால் நேரம் இருப்பின் தெரிந்த நண்பர்களிடம் அதிகம் விவாதித்து இருக்கின்றேன்.. ஆனால் தன்னை வெளிப்படித்துக்கொள்ளாதவர்களை நான்  ஒரு போதும் மதிப்பதில்லை..

ஆனால் இப்படியாக எழுதிக்கொண்டு இருக்கும் போது ஒரு குழுவாக பழைய பதிவர்கள் என்னை கார்னர் செய்தார்கள்..இணையத்தில் நாம் உண்டு நம் வேலை  உண்டு  என்று இருக்க விடமாட்டர்கள்  என்பது பிறகுதான் புரிந்து கொண்டேன்.. முதலில் அவர்களை பற்றி புரியாமல் கோபம் கொண்டேன்..அதன் பிறகு புறக்கணிக்க கற்றுக்கொண்டேன்..

பின்னுட்டம்  அதிகம் போட்டதில்லை.. தொடர்ந்து யார் பதிவையும் நான் வாசித்தது இல்லை.. நேரம் கிடைக்கும் போது வாசிக்கும் பதிவில் நன்றாக இருந்தால் பின்னுட்டம் போட்டு இருக்கின்றேன்.. அதிலும் ஒரு அனானி நுழைய அப்படி பின்னுட்டம் போடுவதையும் இப்போது தவிர்ந்து விட்டேன்..

ஆனால் இந்த மூன்று வருடங்களில் 1000ம் பதிவுகள்.. என்னை பொறுத்தவரை பெரிய சாதனைதான்..ஒரு கருமாந்திரமும் தெரியாமல் தீவிர இலக்கிய கரைச்சிகுடிப்புகள் இல்லாமல், தமிழ் டைப்பிங் தெரியாமல் எழுத வந்து ஆயிரம் பதிவுகள் எழுதுவது  பெரிய விஷயம்..

சோம்பி எழுதாமல் உட்காரும் வேலைகளில் எல்லாம் எனக்கு வரும் கடிதங்கள், எனக்கு வரும்  பின்னுட்டங்கள், எனக்கு வரும் போன் கால்கள் என்னை மேலும் இயங்கிகொண்டு இருக்க வைக்கின்றன...

என் மீதான விமர்சனங்களுக்கு நான் ஒரு போதும் செவி சாய்ப்பதில்லை..நாலாயிரம் பேர் படிக்கறாங்கன்னு ஒரு பேச்சுக்கு வச்சிக்குவோம்..ஆதுல 200 பேருக்கு என்னை பிடிக்கலைன்னு வச்சிக்குவோம்.... மூவாயிரத்து800 பேருக்கு நான் தொடர்ந்து எழுதறேன்... என்னை பற்றி நான்  அறிய எனக்கு வரும் உணர்பூர்வமான கடிதங்கள் எனக்கு போதுமானது...

சினிமா விமர்சனத்துக்கு ஏன் எதிர்மறையான விமர்சனங்கள் எழுதுவதில்லை என்று ஒரு நண்பர் கேட்டு இருந்தார்... ஒரு விமர்சனம் எழுத இரண்டு மணி நேம் எனக்கு ஆகின்றது..அதில் மனதுக்கு பிடித்த படங்களை மட்டுமே நான் எழுதுகின்றேன்..நான் எழுதும் படங்களை மூன்று கேட்டகிரியில் பிரித்து வைத்து எழுதுகின்றேன்.. அவ்வளவுதான்.. என்  விமர்சனத்தை படித்து விட்டு படம் பார்த்தால் அந்த படம் ஏதாவது ஒரு வகையில் ஒர்த்தாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.. எதிர் விமர்சனங்கள்தான் நிறைய பேர் எழுதுகின்றார்களே?? நான் என் மனதுக்கு நெருக்கமான படங்களை எழுதுகின்றேன்.


நண்பர்களை உலகம் முழுவதும் பெற்றுக்கொடுத்தது இந்த வலை உலகம்தான்.. முதன் முதலில் எனது திருமணத்தை நண்பர் அதிஷா அவர் வலை வாயிலாக பதிவுலகில் இருக்கும் நண்பர்களுக்கு அறிவித்த போது, வெளிநாடுகளில் இருந்து எல்லாம் எனக்கு திருமண வாழ்த்துக்களை அனேகநண்பர்கள் தெரிவித்தார்கள்...அப்போதுதான் நான் இந்த வலையின்  சக்தியை உணர்ந்தேன்..வீட்டு கிரகபிரவேசத்தின் போதும், மகள் பிறந்த போதும் வந்த  பின்னுட்டங்களை படித்த போதுதான் எனது பலம் எனக்கு புரிந்தது..


என் வலை மூலம் நிறைய பேருக்கு உதவிகள் செய்து இருக்கின்றேன்...வேலை வாய்ப்பு  செய்திகளினால்20க்கு மேற்ப்ட்டவர்களுக்கு புதிய வேலை கிடைத்தும் மாறுதல் வேலை கிடைத்தும் எனக்கு வாழ்த்திய உள்ளங்கள் நிறைய....

அயர்லாந்தில் எனது மனைவிக்கு வாசக நண்பர் மேஷக் மூலம் அந்நாட்டில் என் மனைவி மற்றும் அவரது நண்பர்களுக்கும் உதவிகள் கிடைத்தும் இதே  பதிவுலகத்தால்தான்..இப்போது எனது மனைவிக்கு கிடைத்த வேலைகூட எனது பதிவை படிக்கும் வாசக நண்பர் பழனிவேல் அவர்களின் மகளுக்கு கிடைக்க வேண்டிய வேலை அவர் போகமுடியாதகாரணத்தால் என் மனைவிக்கு அந்த வேலை கிடைத்தது..



இன்று சென்னையில் வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டில் நான் இருக்க பொருளாதார உதவிகள் செய்ததும் இதே பதிவுலகம்தான். எந்த சொந்தக்காரனும் எனக்கு நிக்கலை...நின்னது இங்க கிடைச்ச நண்பர்கள்தான்..

வீடு வாங்க பணமுடையில் இருந்த போது, ஏங்க எனக்கு கடன் வாங்கியே பழக்கம் இல்லைங்க என்று சொன்ன போது ,.. நீ எனக்கு திரும்பியே தரவேண்டாம் என்று, எவன் ஒரு லட்சரூபாயை தூக்கி கையில கொடுப்பான்..அந்த சிங்கை நண்பரை நினைக்காத நாள் இல்லை..

என் என்கிட்ட கேட்டா என்ன  கொறஞ்சா போயிடுவா, பணத்தை கொடுக்கும் போது திரும்பி கொடு என்று மூன்று லட்சம் எடுத்து கொடுத்த நண்பன் ஸ்ரீராமை கொடுத்து இதே பதிவுலகம்தான்..


வீடு வாங்க சான்பிரண்சிஸ்கோவில் இருந்து ஹரிராஜகோபாலன் 50,000 பணம் கொடுத்து இருந்தார்..குழந்தை பிறந்த காரணத்தால் அந்த பணத்தை யாழினிக்கு வச்சிங்கோங்க என்று சொன்ன அந்த மனசு யாருக்கு வரும்...???.யாருங்க 50,000 அப்படி தூக்கி கொடுக்க முடியம்?--? அவரை நினைக்காத நாள் இல்லை..

சில பிரச்சனை காரணமாக தொடர்ந்து பதிவு எழுத முடியாத நிலை..கொஞ்சம் பொருளாதார பிரச்சனைகள் அதனால் எழுத முடியவில்லை.. என் நிலை அறிந்து வாஷங்டன் டிசியில் இருந்து வெங்கட் என்ற வாசக நண்பர்...ஜாக்கி உங்க தளத்துல விளம்பரம் போட்டதா நினைச்சிக்கோங்க..600 டாலர் இப்போதைக்கு வச்சிக்கோங்க.. உங்க கடைசி தங்கை திருமணம் வரும் போது சொல்லுங்க இன்னும் என்னால முடிஞ்ச உதவிகளை செய்யறேன்..எனக்கு ஒரு விஷயம் மட்டும் நீங்க தொடர்ந்து செய்யனும்...வாரத்துக்கு மூன்று போஸ்ட்டாவது எழுதனும் எனக்கு அது போதும் என்றார்.....

நாலு நாளைக்கு எனக்கு தூக்கம் போச்சி.. நினைச்சி நினைச்சி பார்க்கறேன்..நெகிழ்ந்து நெகிழ்ந்து போகின்றேன்..ஆனாஇப்படி வெளிப்படையாக எழுதியது  பலருக்கு பொறாமை ஏற்பட செய்தது..என்னை பார்த்து மனம்புழுங்கி எனக்கா நேரம் செலவிட்டு, மன உளைச்சல்களை   போக்கிகொள்ளும் அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றிகள்.. இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றேன் நண்பர்களே...



விஜய் டிவி நீயா நானவில் இருந்து மக்கள் தொலைகாட்சியில் எனது பேட்டி ஒளிபரப்பானது வரை எனது பதிவை வாசிக்கும் ஊடக நண்பர்களால்தான் அது சாத்தியமாயிற்று...



இன்னும்  நிறைய எழுதுவேன்...அண்ணாச்சி வடகரைவேலன் போன்ற மெத்த இலக்கியம் படித்தவர்கள் என்னை இன்னும் அடுத்த தளத்துக்கு போகச்சொல்லி உற்சாகப்படுத்துகின்றார்கள்..

ஜாக்கி கொஞ்சம் முயற்சி செய்து சீர் செய்தால் நல்ல எழுத்தாளராக மிளிரலாம்.

நல்ல நேரேட்டிவ் ஸ்டைல் அவருக்கு.


//சைதை ராஜ் தியேட்டரில் படம் முடித்து இரண்டு நாளைக்கு முன் நைட்டு ஒரு மணிக்கு சைதாபேட்டை பாலத்தை கிராஸ் செய்து, ராஜ்பவன் வழியாக அந்த கார் அடையாற்றை நோக்கி பயணித்து கொண்டு இருக்கும் போது ஊய் என்று பெருந்த சத்தம் கேட்டது...நான் திரும்பி பார்த்தேன்.. அந்த கார் வெளிநாட்டில் பிறந்து இறக்குமதி செய்த கார் என்று மட்டும் பார்த்த உடன் தெரிந்து போனது...காரில் மேல் பக்க டாப் திறந்து அதன் வழியாக வெள்ளை பனியனை மட்டும் போட்டுக்கொண்டு தனது கவர்ச்சி பிரதேசங்களை வேகமான குளிர்காற்று தொட்டுக்கொள்ள அனுமதித்து இருந்தாள் அந்த இளம் பெண்..... பெரிய ஓவர்கோட்டை தலைக்கு மேல் சுற்றிக்கொண்டு இருந்தாள்...அனேகமாக அந்த உற்சாகத்துக்கு சில மணிநேரத்துக்கு முன் ஜின் அல்லது பவுடர் உபயோகபடுத்தி இருக்க அனேக வாய்ப்புக்ள் இருக்கின்றன... கார் போன வேகத்துக்கு கவர்னர் பில்டிங் உள்ளே உடைத்துக்கொண்டு தமிழக கவர்னரின் தூக்கத்தை கெடுத்து விடுமோ? என்று எனக்கு பயமாக இருந்தது..//


நன்றி வேலன் அண்ணாச்சி...

நிறைய நக்கல் விட்டாலும் சில நல்ல பதிவுகளை லக்கி,மணிஜி,பாஸ்டன்ஸ்ரீராம்,கார்திக்நாகராஜன், போன்ற நண்பர்கள் பாராட்ட தயங்கியது இல்லை அவர்களுக்கு எனது நன்றிகள்..

ஒருநாள் பலாபட்டறை சங்கர் போன் செய்தார்... என்ன சங்கர் என்றேன்.. எங்க மாமா பேசனுமாம் என்றார்..சார் வணக்கம் உங்கள் பதிவுகைளை  வாசித்தேன்.. அற்புதமா இருந்துச்சி... எனக்கு 60 வயசு என்னவோ நான்  எழுதியது போல இருந்திச்சி.. நீங்க நல்லா இருக்கனும் என்றார்... அதுதான் எனக்கு கிடைத்த வெற்றி அது போதும்..


எழுத்தாளர் சுபா(பாலா) சார் மகளுக்கு மதுரையில் திருமணம்.. என்னை அழைத்து இருந்தார்.. என்னால் மதுரைக்கு எல்லாம் இப்போது வரமுடியாத சூழல் அதனால் நான் சென்னையில் ரிசப்ஷனுக்கு கண்டிப்பாக வருகின்றேன் என்று சொன்னேன்..  திநகரில் நடந்த ரிசப்ஷனுக்கு நான் குடும்பத்துடன் சென்று இருந்தேன்.தனது மாப்பிள்ளையிடம் இவர் தனுஷ் எனது இனிய நண்பர் என்று அறிமுபடுத்தினார்.. சுரேஷ் சாரையும் பார்த்து விட்டு நலம் விசாரித்து விட்டு, பட்டுக்கோட்டை பிரபாகர்சாரை பார்த்தேன்.. மண்டபத்தில் உள்ளே நுழையும் போதே  அவரை பார்த்து இருந்தாளும் ஒரு கூச்சம் காரணமாக எடுத்த உடன் இயல்பாய் என்னால் பேசமுடியவில்லை...அவர் மேடை ஏறும் போது நான் குடும்பத்துடன் மணமக்களை வாழ்த்தி விட்டு கிழே இறங்கும் போது பிகேபியை பார்த்து சார் என்றேன்..ஜாக்கிசேகர்தானே நீங்க.. தொடர்ந்து படிக்கின்றேன்... நல்லா எழுதறிங்க வாழ்த்துகள் என்று என்னை வாழ்த்தினார்.. அது போதும் எனக்கு....அன்றைக்கு நான் அடைந்த சதோஷம் அளவிடமுடியாதது.....பிகேபிக்கு இந்த நேரத்தில் அவருடைய  நாவலின் தலைப்பை எடுத்து  எனது தளத்தின் பெயராக வைத்து இருந்தேன்.. தளத்துக்கு என்ன பெயர் வைப்பது என்று யோசித்த போது பிருந்தாவனமும் நெர்ந்தகுமாரனும் என்ற தலைப்புதான் எனக்கு  நினைவுக்கு வந்தது.. பிகேபிக்கு எனது நன்றிகள்..

பதிவை எழுதிய உடன் இப்போதெல்லாம் ஒருமுறை  படித்து பார்த்து விட்டுதான் போஸ்ட் போடுகின்றேன்...அதனால் எழுத்து பிழைகள் முன்னை விட குறைவாக இருக்கின்றன என்பது எனக்கே  தெரிகின்றது..

அப்துல்லா அடிக்கடி சொல்லுவாப்பல...மெத்த படித்தவர்கள் கோலாச்சிய இந்த பதிவுலகில் அதிகம் படிக்காமல் தமிழ் டைப்பிங் தெரியாம, பதிவுலகில் நுழைந்து பல பேருக்கு அறிமுகமானிங்க பாருங்க.. அதுக்கு எனது பரிசுன்னு  போன புத்தக காண்காட்சியில் புத்தகங்கள் பரிசளித்த தம்பி அப்துல்லாவுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைபட்டு இருக்கேன்...

ஒரு புத்தகம் கூட வெளியிடாத எனக்கு,இன்றுவரை பின்னுட்டங்களிலும்,கடிதங்களிலும் என்னை உற்சாகபடுத்தும் நண்பர்களுக்கும், தொடர்ந்து இந்த தளத்தை வாசிப்பவர்களுக்கும் என்னை புறக்கணித்தவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

எனது தளத்தை மற்றவர்களிடம் கொண்டு சேர்க்கும் அனைத்து திரட்டிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..


உங்கள் வாழ்த்து மற்றும் ஆசிர்வாதங்களுடன்..

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

140 comments:

  1. வாழ்த்துகள் ஜாக்கி அண்ணா ::))

    ReplyDelete
  2. கலக்கிட்டிங்க boss

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் ஜாக்கி.....

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் ஜாக்கி.....

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் ஜாக்கி !!!

    ReplyDelete
  6. வாத்துகள் ஜாக்கியண்ணே!!!!!

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் ஜாக்கி, படைப்புலகிலும் பதிவுலகிலும் நீங்க மேலும் பல உச்ச்ங்களைத்தொட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. வாழ்த்துகள் ஜாக்கி !!!

    ReplyDelete
  9. 1000 பதிவுகள் 1300 followers !
    வாழ்த்துக்கள் ஜாக்கி..

    ReplyDelete
  10. வாழ்த்துகள் பங்காளி....

    ReplyDelete
  11. Congrats Jackie......Wish you to reach Billion in numbers!

    ReplyDelete
  12. தல கோவிச்சிக்க கூடாது தொடர்ந்து பல வேலைகள் மற்றும் குழந்தை ஸ்வேதாக்கு டெங்கு காய்ச்சல் போன்ற நெருக்கடிகளால் உங்கள் கணினியை வந்து பார்க்க இயலவில்லை விரைவில் வருகிறேன். அத்துடன் இந்த ஆயிரமாவது பதிவிற்கு என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள் இன்னும் பல பதிவுகள் எழுது 100000 பதிவுகள் கடக்க இறைவனைவ் வேண்டுகிறேன்.

    ReplyDelete
  13. தவுசண்ட் என்று சொல்லிப் பாருங்கள், வியப்பிருக்காது. ஆயிரம் என்று சொல்லிப் பாருங்கள், பிரம்மாண்டம் உங்கள் மனத்திரையில் விரியும். தமிழ் வலைப்பதிவில் ஆயிரம் பதிவுகள் எழுதுவது என்பது அசகாய சோதனை. அந்த ஆயிரம் பதிவுகளுமே அர்த்தம் பொதிந்தவை என்பதுதான் ஜாக்கியின் சாதனை.

    999 பதிவுகளை ஜாக்கி எழுதி முடித்தபோது, அவரது ஆயிரமாவது பதிவு எதைப்பற்றியதாக இருக்கும் என்ற மர்மத்தில் தூக்கம் இழந்தவர்கள் ஆயிரமாயிரம் பேர்.

    ஜாக்கியின் ஆயிரமாவது பதிவு எதைப் பற்றியது?

    அவருடைய ஆயிரமாவது பதிவைப் பற்றியதுதான்!

    - இந்த கேள்விக்குள்ளும், அந்த பதிலுக்குள்ளும் ஒரு அழகான ஜென் கதை அல்லது ஹைக்கூவின் தன்மையை நீங்கள் உணர்ந்திருக்கலாம். அதுதான் ஜாக்கி. அவரை ஜெய் ஜாக்கி என்று கோஷமிட்டு உற்சாகப்படுத்துவதை விட ’ஜென் ஜாக்கி’ என்று அழைப்பதே சாலப்பொருத்தம்.

    வாழ்த்துகள் ஜாக்கி!

    ReplyDelete
  14. வாழ்த்துகள் ஜாக்கி. மென்மேலும் வளர, எழுத, எண்ணங்கள் நிறைவடைய வாழ்த்துகள்.

    தொடருங்கள்!!

    ReplyDelete
  15. மேன் மேலும் பெருகிட எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள :)

    ReplyDelete
  16. அண்ணே... பல தடைகளுக்கு இடையே, விடாமல் எழுதும் நேர உழைப்பிற்கு வாழ்த்துகள் பல கோடி...

    ReplyDelete
  17. வாழ்த்துகள் ஜாக்கி அண்ணா

    ReplyDelete
  18. வாழ்த்துகள் ஜாக்கி.

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் ஜாக்கி.....

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் ஜாக்கி அண்ணா,நான் உங்கள் பதிவுகள் தீவிர ரசிகன் , மற்றும் இன்னும் நிறைய உலகபடங்களின் விமர்சனங்களை உங்கள் எழுதுகளின் மூலம் உணர காத்து இருக்கின்றேன் ....

    ReplyDelete
  21. jackie anna unga pathivugal unmayana nigalvugalai en kan mun niruthugindrana thodarnthu eluthungal

    all the best for crossing 1000 posts

    www.astrologicalscience.blogspot.com

    ReplyDelete
  22. ஜென் ஜாக்கிக்கு பாராட்டுகள்

    மேலும் ஆயிரமாயிரம் பதிவுகள் எழுதி சாதனைகள் ஏற்படுத்த வாழ்த்துகள்

    ReplyDelete
  23. ஜாக்கி உங்களுடைய ஆயிரமாவது பதிவு... ... மனதில் பட்டதை தெளிவாகச் சொன்னது எதார்த்தமானதே! தொடருங்கள் வெற்றிகளை...

    வாழ்த்துக்கள்!

    சாய்ராம்கோபால்
    பாண்டிசேரியிலிருந்து

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள் ஜாக்கி.... :-)

    ReplyDelete
  25. வாழ்த்துக்கள் ஜாக்கி...

    ReplyDelete
  26. ஆயிறம் பதிவிட்ட அபூர்வ பதிவருக்கு வாழ்த்துக்கள்...இன்னும் கலக்குங்க ஜாக்கி...

    ReplyDelete
  27. ஆயிரமாவது பதிவிலும் என் பின்னூட்டம் :)

    ReplyDelete
  28. உண்மையிலேயே என்னோட அங்கிள் அன்றைக்கு மிகவும் சந்தோஷப்பட்டார் ஜாக்கி. ஒரு நாள் வீட்டுக்கு அழைச்சிட்டு வர்றேன்.

    ஆயிரம் வாழ்த்துகள். :)))

    ReplyDelete
  29. யம்மாடி.....ஆயிரமா...? வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  30. வாழ்த்துக்கள் ஜாக்கி!! விரைவில் 2000 தொட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  31. வாழ்த்துக்கள் ஜாக்கி. லட்சம், கோடின்னு அப்படியே அடிச்சு ஆடுங்க...

    ReplyDelete
  32. என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் சேகர்! வலையுலகின் சக்தி என்ன என்பது நான் எழுதத் தொடங்கியபின்தான் புரிந்தது. எத்தனை நண்பர்களைப் பெற்றேன் என்பதையும் எண்ணி வியக்கிறேன். நீங்கள் நெகிழ்வதில் அர்த்தம் உண்டு. ஆயிரத்து முன்னூறுக்கும் மேற்பட்ட ஃபாலோயர்களைப் பெற்று ஆயிரம் பதிவுகளை வெளியிட்ட நீங்கள் இன்னும் பல வெற்றிகளைக் குவிக்க இதயம் கனிந்து வாழ்த்துகிறேன் நண்பா!

    ReplyDelete
  33. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  34. ஜாக்கி அண்ணே உள்ளதை உள்ள படி ஒரு சிறிய துரும்பை கூட உள்ளத்தில் மறைத்து வைக்காமல் எங்களுக்கு பரிமாறுகிரீர்களே உங்க பிளஸ் பாய்ன்ட் இது தான்.

    ஆயிரம் என்ன ஆயிரம் எண்ணிக்கையில் என்ன இருக்கு. யார் வேண்டுமானாலும் தொட்டுவிடலாம் இந்த எண்ணிக்கையை ஆனால் படிப்பவர்களை கட்டிபோடும் அந்த திறமையை உங்களுக்கே உரித்தானது. ஆயிரம் விமர்சனம் உங்கள் பாதையில் எதிரே வந்தாலும் எக்ஸ்பிரஸ் போல அடிச்சு தூக்கிட்டு போய்கிட்டே இருக்கும் உங்க மன தைரியம் எங்க.

    நாங்க நானுறு பதிவு எழுதினாலும் நாங்க நாங்க தான். நீங்க நான்கு பதிவு எழுதினாலும் நீங்க நீங்க தான். நான் பதிவுலகில் பார்த்து பொறாமை பட்ட ஒரே பதிவர் நீங்க ஒருவர் மட்டும் தான் அண்ணா.

    அண்ணன் வடகரை வேலன் சொல்வது போல உங்களோட எழுத்துக்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துங்கள்.

    இன்னும் வேற என்ன சொல்றதுன்னு தெரியல அண்ணா வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  35. More than congrats i want to say only one thing which is you avoid negative things about others which s great and even if some wrong comments comes you reply in a soft manner and you never get angry like other bloggers and moreover "common man" aa irukkeengaa....Athukku periyaaaa hats off............

    ReplyDelete
  36. வாழ்த்துகள் ஜாக்கி. சாதா ஆளானா நீங்கள் சாதனையாளர் ஆகிவிட்டீர்கள். :)

    ஆயிரம், பத்தாயிரம் என பல்கி பெருகட்டும்.

    ReplyDelete
  37. ஆயிரம் வணக்கங்கள்...

    ReplyDelete
  38. ஆயிரம் பதிவுகள் என்பது சாதாரண விஷயம் அல்ல...

    பார்த்து பார்த்து ரசித்து தன்னுடைய அனுபவங்களை வரிசைப்படுத்தி, நட்பு பாராட்டி, சினிமாவோடு சிலாய்த்து, பயணக்கட்டுரைகள் என பரவசப்பட்டு தெரிந்ததை சொல்லி, அறிந்ததை அர்த்தமுடன் எடுத்துச்சொல்லி..


    அப்பப்பா...

    எதைச்சொல்ல...

    தங்களிக் இச்சாதனையை பார்த்துக்கொண்டே பயணப்படுகிறோம் நாங்களும்...

    தொடர்ந்து தங்களின் பாணியில் பயணிக்க என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  39. வாழ்த்துக்கள்...!
    வாழ்த்துக்கள்.......!
    வாழ்த்துக்கள்...........!
    1000ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்....!
    சரக்கில்லன்னா...! குறுகிய காலத்தில் 1000 பதிவை எட்டமுடியுமா...!
    இவ்வளவு பெரிய நட்பு வட்டாரத்தை பெறமுடியுமா...!

    நண்பரே...!
    ஒன்றரை வருடத்தில்
    பதிவுலகில்
    பதிவேதுமிடாமலேயே....!
    பின்னூட்டமிட்டே
    ஓரிரு நண்பர்களை...!
    குறிப்பாய்...!
    குடும்ப நண்பராய் பெற்றுள்ள நான்...!
    உம்மைவிட பெரியாளுதான்...!

    ஹி...! ஹி...! ஹி...! சும்மா...!

    ReplyDelete
  40. வாழ்த்துகள்.

    பல்லாயிரமாக வளரட்டும்.

    ReplyDelete
  41. dear jockey
    CONGRATS
    innum kalakkungal

    balu vellore

    ReplyDelete
  42. இன்னும் பல ஆயிரம் எட்ட வாழ்த்துக்கள் அண்ணா :)

    ReplyDelete
  43. மேலும் வெளுத்துக்கட்ட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  44. இதுவரை நான் உங்கள் தளத்தில் கமெண்ட் போட்டதில்லை... ஆனால் தொடர்ந்து படிக்கிறேன்.. புறம் பேசுபவர்களை கவலைப்படாமல் புறந்தள்ளுவது உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பேன்.. எல்லோராலும் அப்பிடி இருக்கமுடிவதில்லை... கீப் ராக்கிங் அண்ணே :-)

    ReplyDelete
  45. Congrats Jackie Sir..!!!

    Keep Going... and Keep Rocking..!!

    ReplyDelete
  46. பதிவுகள்
    1000 thanks..10000 wishes..100000congratzzz

    ReplyDelete
  47. வாழ்த்துக்கள் மச்சி, நீ வாழ்வில் மென்மேலும் எல்லா வளங்களும் பெற ஆண்டவன் துணையிருக்கட்டும்

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  48. பதிவாளர் ஜாக்கிக்கு எனது வாழ்த்துக்கள்.காப்பி பேஸ்ட் பதிவு போடாமல் மனதில் தோன்றுவதை எழுதுவதால்தான் உங்களால் இந்த வெற்றியை அடையமுடிந்தது. எழுத எழுததான் எழுத்தின் திறமை வெளிப்படும் சிந்தனையும் விரிவடையும். வாசகர்களும் விரிவடைவார்கள். உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  49. வாழ்த்துக்கள் அண்ணாச்சி விரைவில் பத்தாயிரம் ஆகட்டும்...

    ReplyDelete
  50. நிறைய சொல்லலாம் ஜாக்கி. ஆனா அது முகஸ்துதியாப் போயிரும். அதனால வாழ்த்துகள் மட்டும் இப்போதைக்கு

    ReplyDelete
  51. You can select 50/100 best posts from 1000 and publish them as a book. You can rewrite/edit them according to standard book format. I am sure people will like it.

    ReplyDelete
  52. வணக்கம் அண்ணா,
    நலமா?
    பதிவுலகில் நீண்ட நெரும் பயணத்தை தாண்டிப் பயணிக்கிறீங்க!
    தொடர்ந்தும் எழுதுங்கள்!
    உங்கள் எழுத்துப் பணி வடகரை வேலன் சார் சொல்லியது போன்று அடுத்த கட்டத்தை நோக்கி நகரட்டும்!
    என் உளமார்ந்த வாழ்த்துக்களை இந் நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  53. Dear Jackie,

    I m regular reader of your blog. While surfing i found this one can you please publish in your blog to know about Mullai Periyar Dam full details which was created by Tamilnadu Senior construction sangam people, please view this full video it was developed veru well to understand all people. The link is http://www.gouthaminfotech.com/2011/11/mullai-periyar-dam-dam-999.html

    Regards
    Sivaprakasam G

    ReplyDelete
  54. வாழ்த்துகள் ஜாக்கி அண்ணா.

    ReplyDelete
  55. சகசிரம்(ஆயிரம்) அடித்து ஆடும் ஜாக்கிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    ஆயுதம்(பதினாயிரம்) எனத் தொடர்ந்து மகாகும்பம்(நூறுகோடி) நிகர்வம் மகாகும்பம்(பத்து நூறாயிரம் கோடி)என விரிவடைய வேண்டுகிறேன்.

    ReplyDelete
  56. ஆயிரம் பதிவுகள்...........நெசமா மலைப்பா இருக்கு.......வாழ்த்துக்கள்...........

    ReplyDelete
  57. அன்பின் ஜாக்கி

    குறைந்த காலத்தில் 1000 த்தினை எட்டிய தங்களின் திறமை பாராட்டுக்குரியது. நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
  58. வாழ்த்துகள் ஜாக்கி!!!

    ReplyDelete
  59. வாழ்த்துகள் அண்ணே.

    ReplyDelete
  60. Way to go Jackie. keep it going. Congratulations

    Bala
    Bangalore

    ReplyDelete
  61. வாழ்த்துக்கள் ஜாக்கி! 5000 பதிவிற்காக காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  62. வாழ்த்துகள் ஜாக்கி அண்ணா

    ReplyDelete
  63. வாழ்த்துகள். மேலும் பல புதிய உயரங்களை அடையுங்கள்.

    ReplyDelete
  64. வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  65. வாழ்த்துகள் ஜாக்கி

    ReplyDelete
  66. வாழ்த்துக்கள் சேகர் அண்ணா இன்னும் பல பதிவுகள் கான வேண்டும் நீங்கள் தொடர்கின்றேன்.

    ReplyDelete
  67. Congratulations Mr. Jackie Sekar.

    I started reading your movie blog about a year ago and since then started following your blog and now following you on twitter too for updates.

    Congratulations on your 1000th post.You are amazing! Keep going. All the best.

    ReplyDelete
  68. WOW... 1000...!!! Congrats'na n wishes for the forthcoming posts.

    ReplyDelete
  69. 18+ மேட்டர்களை மட்டும் கம்மி பண்ணினால் உங்கள் பதிவுகள் மேலும் பலரை சென்றடையும். ஆயிரம் அடித்ததற்கு வாழ்த்துகள். அடுத்த ஆண்டில் மேலும் பல நல்ல பதிவுகளை இட்டு கலக்கவும்!!

    ReplyDelete
  70. //உங்களோட எழுத்துக்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துங்கள். //

    நானும் வழிமொழிகிறேன். முயற்சி செய்து பாருங்கள். இது காலத்தின் கட்டாயம்.

    ReplyDelete
  71. வாழ்த்துகள் ஜாக்கி அண்ணா ::))

    ReplyDelete
  72. மனப்பூர்வ வாழ்த்துகள்.

    ReplyDelete
  73. நிஜங்களின் நிழலை.....அழகாக நினவு படுத்தி.....1000 -வது பதிவிட்டு உள்ளீர்கள்....வாழ்த்துகள்...ஜாக்கி

    ReplyDelete
  74. வாழ்த்துகள் ஜாக்கி!! மென்மேலும் வளர, எழுத, எண்ணங்கள் நிறைவடைய வாழ்த்துகள்.

    ReplyDelete
  75. Well done. Congrats on this feat! Almost every working day, I read your blog. Your writing style ("Write as you speak") is one of your success factors, though, in my opinion, you could avoid some 'words'. Any way, great going and keep writing! Wish you success in many more endeavors in your life.

    ReplyDelete
  76. வாழ்த்துகள்! ! ! ஆயிரம் பத்தாயிரம் ஆகட்டும் ! ! !

    மென்மேலும் உயர வாழ்த்துகள் ! !

    ReplyDelete
  77. ஜாக்கி அவர்களுக்கு வாழ்த்துகள்....
    ஒரு அனானியினால் நீங்கள் பின்னூட்டமிடுவதில்லை
    என்பது வேதனையான விசயம்...புதியவர்களுக்காக நீங்கள் பின்னூட்டம் இடலாம் தவறு ஏதுமில்லை அது எங்களுக்கு உற்சாகம் அளிக்கும் என்பது என் தாழ்மையான கருத்து

    ReplyDelete
  78. மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா..

    ReplyDelete
  79. நல் வாழ்த்துக்கள் ஜாக்கி

    ReplyDelete
  80. வாழ்த்துக்கள் ஜாக்கி. மேலும் பல சாதனைகள் புரிய பிரார்த்தனைகளும், வாழ்த்துக்களும்..

    ReplyDelete
  81. வாழ்த்துக்கள் நண்பா.......

    ReplyDelete
  82. வாழ்த்துக்கள் அண்ணா..

    உண்மைய சொல்ல போனா.. உங்க பதிவுகளை நான் தொடர்ந்தெல்லாம் படிச்சது இல்லை.. தலைப்பு பார்த்து எது என்னை அப்போதைய மனநிலையில் அட்ராக்ட் செய்யுதோ அந்த பதிவு மட்டுமே படிப்பேன்..

    நேரிலும் இரு (அ) மூன்று முறை மட்டுமே சந்தித்திருப்போம்.. அதுவும் கும்பலா.. அப்பவும் ரொம்பல்லாம் பேசிகிட்டதுயில்லை..

    ஆனா..
    எப்போதுமே உங்க ஆட்டிட்டியூட் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. என் மனசுக்கு இப்படி தான் படுது.. அதை தான் சொல்லறேன்னு நீங்க எழுதறதும்.. பேசறதும்.. சூப்பர்..

    எனக்கு தெரிந்தவரை நீங்க தான் அதிகமா கிண்டலடிக்கப்பட்ட தமிழ் பதிவர்ன்னு நினைக்கிறேன்.. ஆனா.. அதெல்லாம் வெறும் தூசுன்னு தட்டிவிட்டுட்டு போய்ட்டே இருக்கீங்க பாருங்க.. அதான்.. அதான் உங்களுக்கு இத்தனை இத்தனை நண்பர்கள்..

    ஒரு முறை ஒரு நண்பர் திருமணத்தில் சந்தித்தோம்.. அது தான் முதல்முறை கூட.. அப்போ எல்லாரும் கும்பலா பேசிட்டு இருக்கும் போது, மற்றொரு நண்பர் உங்களை வம்பிளுத்தாரு.. “யோவ் பொதுவா எல்லாருக்கும் எழுதும் போது தான் ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரும்.. உனக்கு மட்டும் தான் பேசும் போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரும்” ந்னு சொன்னார்... நான் உட்பட எல்லாரும் சிரிச்சோம்.. உங்களை கிண்டல் செய்தோம்.. ஆனா நீங்க ஒரு லுக் விட்டு நமட்டு சிரிப்பு சிரிச்சீங்க பாருங்க.. அதான்ணா..

    நானெல்லாம் பதிவு எழுத ஆரம்பிச்சி இந்த மாதம் 5 வருஷம் ஆகுது... இன்னும் 97வது பதிவே எழுதலை... யாரு நம்மை படிக்கிறா அப்படின்னு ஒரு ஆற்றாமை.. என்னத்தை எழுதி என்னத்த செய்யபோறோம் அப்படின்னு ஒரு சலிப்பு.. ஆனா.. இப்ப உங்க 1000வது பதிவை படிச்சதும் நானும் மீண்டும் எழுதனும்.. யார் படிச்சா என்ன.. படிக்காட்டி என்ன?? எழுதுவோம்.. நல்லா எழுதுவோம்.. தன்னால மக்கள் படிப்பாங்கன்னு ஒரு மோடிவேஷன் குடுத்துருக்கீங்க... நன்றிண்ணா..

    மீண்டும் வாழ்த்துக்கள் அண்ணா..

    ReplyDelete
  83. மென்மேலும் வளர ...நல்வாழ்த்துகள்... ஜாக்கி!!!!!!!!

    ReplyDelete
  84. Dear Jackie,
    Job well done..congrats...Kudos simply Fantastic...am Dr.Alex, Professor From Coimbatore...Jackie Neenga Rmba Nalaiku Nala irkanm..inum Neriya eludhanum...

    ReplyDelete
  85. Dear Jackie,
    Job well done..congrats...Kudos simply Fantastic...am Dr.Alex, Professor From Coimbatore...Jackie Neenga Rmba Nalaiku Nala irkanm..inum Neriya eludhanum...

    ReplyDelete
  86. அன்பு அண்ணா,
    ஆயிரத்திற்கு முதலில் வாழ்த்துக்கள். பின்நவீனத்துவும் முன் நவீனத்துவம் என்று எதுவும் இல்லாமல், இலக்கியங்களை துணைக்கு அழைக்காமல், வரலாற்றை வம்பு செய்யாமல், தனக்கென ஒரு பாணியில், தன்னை சுற்றி ஒரு வாசக வட்டத்தை வைத்திருக்கும் அன்பு அண்ணனுக்கு, விரைவில் பல ஆயிரங்களை தொட வாழ்த்துக்கள்.
    சதீஷ் முருகன்

    ReplyDelete
  87. அண்ணா, நீங்கள் தொடர்ந்து எழுத ஊக்கம் தருவது பின்னூட்டங்கள் என்று சொல்கிறீர்கள். சரி தானே, அது போல் உங்களின் பின்னூட்டங்கள் பலரை எழுத வைக்குமே. எதோ பெயரில்லா விருந்தாளிகளுக்காக உங்களின் ஆதரவை எதிர்பார்ப்பவரையும் சேர்த்து புறந்தள்ளுவது சற்று முரணாக உள்ளது அண்ணா. சற்றே யோசியுங்கள், உங்களால் ஒருவர் வெளிக்கொணரப்பட்டால் அது அவருக்கு எத்தகைய ஊக்கமாக இருக்கும்? தவறு இருப்பின் மன்னிக்கவும். என்றும் அன்புடன் - சதீஷ் முருகன்

    ReplyDelete
  88. இணையதளத்தின் ரஜினிகாந்த் நீங்கள்தான்... வாழ்த்துக்கள் ஜாக்கி...

    ReplyDelete
  89. பலகோடி நூறாய்ரம் போஸ்ட் வர வாழ்த்துகள்

    ReplyDelete
  90. மனமார்ந்த வாழ்த்துக்கள் .மென்மேலும் நிறைய எழுதுங்கள் .

    ReplyDelete
  91. Hi jakie,

    The video link was not working .
    Please check the below
    Who Am I - Jackiesekar

    ReplyDelete
  92. அண்ணே ஆயிரம் பத்தாயிரமாக வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  93. வணக்கம் அண்ணே....
    நான் பதிவுலகம் வரும் முன் உங்கள் தளம் தான் என் கணினி வரலாற்றில் அதிகம் நிரம்பியிருக்கும். ஏனெனில் ஒரு இடுகையை படிச்சா, அடுத்த இடுகையையும் படிக்க தோன்றும். அவ்ளோ சிம்ப்ளி சூப்பர்ப்...

    உள்ளதை கள்ளம கபடமில்லாமல் அப்படியே எழுதும் கலையை உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்.

    ஆயிரமாவது இடுகைக்கு சிறப்பு வாழ்த்துக்கள்....
    இன்னும் பதிவுலக முன்னணியில் நீங்கள் சிறக்க வாழ்த்துகிறேன்....

    ReplyDelete
  94. வாழ்த்துகள் ஜாக்கி

    ReplyDelete
  95. ஆயிரம் எல்லாம் பெரிசா இந்த ஜாக்கிக்கு.. தொடர்ந்து எழுதுங்க ஜாக்கி...!! இருந்தாலும் ஆயிரம் போஸ்ட்னு போட்டுட்டீங்க.. அதுக்காக உங்களை வாழ்த்திடறேன். வாழ்த்துகள் நண்பா..!

    ஹா..ஹா...!!! இப்போதான் முத போஸ்ட் போடறேன்னு நெனைச்சுக்க... இன்னும் நிறைய போஸ்ட் எழுதலாம்...!!!

    ReplyDelete
  96. CONGRANTS JACKIE SEKAR SIR......... FROM R.V.PRABHU MADIPAKKAM

    ReplyDelete
  97. CONGRANTS JACKIE SEKAR SIR......... FROM R.V.PRABHU MADIPAKKAM

    ReplyDelete
  98. (பதிவுகளின்) எண்ணிக்கை எண்ணிலடங்காமல் போக என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    அவசியமற்றதை புறக்கணிக்கும் நீங்கள் அவசியமானதை கருத்தில் கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்!

    ReplyDelete
  99. வாழ்த்துக்கள் ஜாக்கி சேகர் :-) மேலும் பல பதிவுகளை எழுத என் அன்பான வாழ்த்துகள் அப்படியே கொஞ்சம் BAD Words குறைத்து எழுதினால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  100. 2010 இல் பதிவுலகில் நுழைந்த நான் கடந்த மூன்று மாதங்களாகத்தான் தொடர்ந்து பதிவிடுகிறேன். பார்வையாளர்கள் அதிகரித்தாலும் தமிழ் மணம் தர வரிசையில் பின்னே செல்வது எனக்கு சோர்வை ஏற்படுத்தி இருந்தது.உங்கள் கட்டுரையை ஒரு டானிக்காய் நினைக்கிறேன்.

    ReplyDelete
  101. வணக்கம் பாஸ்
    உங்கள் ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் மேலும் பல்லாயிரம் பதிவுகளை நீங்கள் எழுதி பதிவுலகில் மென்மேலும் ஜொளிக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  102. வாழ்த்துக்கள்.,

    ஆயிரம் பதிவுகள் மட்டும் உங்கள் சாதனை அல்ல.

    என் போன்ற பல பலருக்கு முன்மாதிரியாக இருப்பதும் தான்.

    ReplyDelete
  103. 133 கமென்டுகளில் உங்கள் அன்பை வெளிபடுத்திய அனைத்து நண்பர்களக்கும் என் நன்றிகள்..தம்பி சசிக்குமார் நீ எழுதிய பின்னுட்டம் மனிதில் இருந்து எழுதியதை போல படிக்கும் போது உண்ர்ந்தேன்.. அதே போல சென் உன்னுடையதையும் அப்படியே உணர்கின்றேன்.. மற்றவர்களுக்கும் அப்படித்தான் உணர்ந்து எழுதி இருக்கின்றார்கள்.. இருப்பினும் உங்கள் விரிவான பின்னுட்டம் என்னை அப்படி எழுத வைத்தது என்பேன்..


    மற்றதளத்தில் எனது பின்னுட்டம் போடுவவது பிரச்சனை இல்லை. அனானிகள் எனது பெயைரை பயண்படுத்தி புதியவர்களை திட்டினார்கள் என்று வைத்துக்கொள்ளுவோம் அவர்களுக்கு நான் திட்டியதாகவே நினைத்துக்கொள்ளுவார்கள்.. எல்லா இடத்திலும் என்னால் விளக்கிக்கொண்டு இருக்க முடியாது..அதுக்கு ஒரு போஸ்ட் எழுதி விடலாம் என்பதுதான் காரணம்..

    நண்பர்களோடு நான் எப்படி பேசிகின்றேனோ... அப்படித்தான் உங்களோடும் நான் பேசியபடி எழுதுகின்றேன்..

    பிரியங்களுடன்
    ஜாக்கிசேகர்.

    ReplyDelete
  104. ஆயிரம் பதிவுகள் என்பது சாதாரண விஷயம் அல்ல...

    AAnal Ungalukku idhu சாதாரணம்.

    மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  105. அடப்பாவி, என்னை மறந்திட்டியா..?

    வாழ்த்துகள்..

    ReplyDelete
  106. வாழ்த்துக்கள் அண்ணாச்சி (லேட்டானமைக்கு மன்னிக்கவும்)

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner