(ஏஆர் ரகுமான்) சென்னை வடபழனி சுப்புராய நகரும் கோல்டன் குளோப் விருதும்....





வடபழனியில் உள்ள சப்பராய நகரில் உள்ள ரகுமான் வீட்டில் வட இநதிய டைரக்டர்கள் தமிழகத்தில் வந்து தவம் கிடந்த நிலை மாறி வெகு சீக்கரத்தில் ஹாலிவுட் டைரக்டர்கள் படையெடுத்து ரகுமான் வீட்டை முற்றுக்கையிடும் வாய்ப்பு வெகு சீக்கிரத்தில் நடக்க இருக்கிறது.

இந்தி பாடல்களை கேட்டு பகுத் அச்சா சொல்லிய தமிழர்களையும் டிசம்பரில் ஒரு சாரர் மட்டும் இசை ஆலாபனையில் முழ்கி கிடந்த போது தமிழ் பாடல்கள் பக்கம் கவனத்தை கவர்ந்தவர் கவர வைத்தவர் இளையராஜா.

அதே போல் வட இந்தியர்கனை தன் இசை புலமையால் தன் வசப்டுத்தியவர் ஏஆர் ரகுமான் அது மட்டும் இல்லாமல் இந்திய அளவில் எண்ணற்ற தேசிய விருதுகள் மற்றும் பிலிம் பேர் விருதுகள் பெற்றலும் கடல் கடந்து கொடுக்கப்படும் கோல்டன் குளோப் பெற்ற முதல் இந்தியர்,முதல் தமிழர் ஏஆர் ரகுமான்தான்.


கடந்த 29/12/2008 (ஒரு வாரத்துக்கு முன்பு) பதிவில் ஏஆர் ரகுமானுக்கு உலக அளவில் புகழ் கிடைக்க போகிறது என்று பிளாக்கில் எழுதி இருந்தேன் அது இவ்வளவு சீக்கரம் நடக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. இறைவனுக்கு நன்றி.


ஏஆர் ரகுமான் தலைகனம் இல்லாமல் கடுமையாக உழைத்தால் பலன்கள் பக்கத்தில் வந்து சேரும் என்பதற்க்கு ஏஆர் ரகுமான் வாழும் உதாரணம். படத்தின் கதை மற்றும் சிறப்பு அம்சங்கள் தெரிய கீழே படித்து பார்க்கவும்

பாய் வாழ்த்துக்கள்


அந்த பதிவை கிழே கொடுத்து இருக்கிறேன் படித்து பார்க்கவும்

...................................................................................................................................................................................

(slum dog millionaire)மீண்டும உலக அளவில் இசைபுயல் ஏ.ஆர் ரகுமானுக்கு புகழ் சேரப்போகறது..(பாகம் /12.)





விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வின் சுக துக்கங்களை என் அளவுக்கு யாருக்கும் தெரியவாய்பில்லை. எனென்றில் அந்த வாழ்க்கை முறை எனக்கு அத்துப்படி.

மெரினா பீச்சில் காந்தி சிலை பின்புறத்தில் உள்ள ஹோட்டலில் நான் வேலை செய்யும் போது எனக்கு வார சம்பளம் பதினைந்து ரூபாய் அந்த சம்பளம் 1994 ஆண்டுகளில் தகிடித்தத்தம் போட்டுக்கொண்டு இப்போதைய கலைஞர் ஆட்சி போல் இழுபறி வாழ்க்கை வாழ்ந்த கால கட்டம் அது...

நல்ல சாப்பாடு சாப்பிட காசு இருக்காது, திருடவும் பொய் சொல்லவும் என் அம்மா எனக்கு கத்து தரவில்லை,

சின்ன வயதிலேயே நல்லொழுக்க புத்தகங்கள் என் பள்ளி அருகில் இருந்த லைப்ரரியில் படித்ததால் எனக்கு பொய் சொல்லவும், திருடவும் எனக்கு கை வரவில்லை என்பதே நிதர்சன உண்மையும் கூட....


முதன் முதலில் ஆம்னி வேனில் வந்த குடிகார இளைஞர்களுக்கு கோக் பாட்டில் ஓப்பன் பண்ணி கொடுத்த போது எனக்கு டிப்சாக 50 பைசா கிடைத்தது. இப்போது கூட 50 பைசா நாணயம் பார்க்கும் போது அந்த இளைஞர்களின் முகம் இன்றும் என்நினைவு அடுக்குகளில்...

மெரினா பீச்சில் காந்தி சிலை அருகே மூன்று மாதங்கள் பாராசக்தி சிவாஜி போல் எம்டி பாக்கெட்டில் சுற்றி இருக்கிறேன். மெரினா பீச்சின் கட்டண கழிவரையும் அவசரத்துக்கு அண்ணா சமாதி பின்புறமாக எத்தனையோ பொழுதுகள் என் காலை கடன்களை கழித்து இருக்கிறேன்.

மெரினாவில் விடியற்காலையில், நேற்று செத்து போன அப்பா, அம்மா,பிள்ளை, தகப்பன், தாத்தா என்று பலதரப்பட்ட வயதினரின் சாம்பல் அஸ்த்தியாக ஒரு சிறு பானையில் துணி மூடியபடி இருக்கும்..

இறுதியாத்திரையாக அந்த சாம்பல் நடுக்கடலில் கலக்க வேண்டும். நொச்சிக்குப்ப சிறுவர்கள் அந்த சாம்பலை கடலில் கரைத்து விட்டு ரூபாய் 100ம்50ம் துக்கப்பட்டு கண்ணீர் விட்டு கதறும் உறவுகளிடம் வாங்கி கொண்டு ஓடுவார்கள்.

என்னால் அப்படி வாங்க இயலாமல் இலவசமாக கரைத்து இருக்கிறேன் வற்புறித்தி கொடுத்த பணத்தை வாங்க மறுத்த போது என்னை வித்யாசமாக பார்த்து சென்றவர்கள் ஏராளம்.

அதே போல் காலையில் ஒரு சாக்கு எடுத்து கிளம்பினால்,
லஞ்சம் வாங்கியும்,பிறரை ஏமாற்றியும் சொத்து சேர்த்த பணம் எல்லாம் அவர்கள் பிள்ளைகள் மூலமாக கடற்கரை பூங்கா புதர்களில் பீர் பாட்டில்களாக கிடக்கும்.

எப்படியும் காலை ஏழுமணிக்குள் 30 பீர் பாட்டில்களை அந்த மூன்று கிலோ மீட்டர் கடற்க்கரையில் எடுத்து விடலாம். ஒரு பீர் பாட்டில் விலை 1.50 பைசா 30 பீர்பாட்டில் விலை 45ரூபாய்.
மதியத்துக்கு நல்ல லெக் பீஸ் பிரியானி 20 ரூபாய்க்கும் 10 ரூபாய்க்கு குஸ்க்காவும் சாப்பிட்டு ஒரு ஏப்பம் அடிவயத்ததுல இருந்து வரும் போது ஒரு நிறைவு இருக்கும் பாருங்க அது மிகப்பெரிய சொகம்.


அப்பன்காசுல சாப்பிட்டு பீர் குடிக்கறவனால இதை உணர முடியாது... அடுத்த வேலை சோத்துக்க என்ன வழி , அடுத்த வேளைக்கு ஒரு கவளம் சோறு எங்க கிடைக்கும்னு புத்தி நாயாய் அலைஞ்சு அந்த சோத்துக்கு வழி கிடைக்கறப்ப நான் சொன்ன அந்த சொகம் உங்களுக்கு புரியும்.

எனக்கு இந்த சம்பவங்கள் எல்லாம் என் இருபதாம் வயதில் நடந்த நிகழ்வுகள் எனக்கு சற்றே யோசிக்கும் பக்குவம் இருந்தது அதனால் அயோத்திக்குப்ப தாதாக்ள் என்னை கஞ்சா விற்க்க என் வறுமையை அடகு கேட்ட போது நான் மறுத்து விட்டேன் .

அதனால் இப்போது உங்கள் முன் பிளாக் எழுதிக்கொண்டு இருக்கிறேன் , அந்த சுய புத்தி மட்டும் அப்போது இல்லை என்றால் இந்தநேரம் ஏதாவது என்கவுன்டரிலேயோ அல்லது பாளையங்கோட்டை சிறையில் பாம்பு பல்லிகளுக்கு நடுவில் சொந்தங்களை மனு போட்டு பார்த்ததக்கொண்டு இருப்பேன்.


ஆனால் அப்பா அம்மா இல்லாத அனாதை சிறுவர்களின் நிலையை சற்றே யோசித்து பாருங்கள். கையில் குழந்தையுடன் சிக்னல் அருகே கையேந்தி இருக்கும் அந்த சிறுமியின் பின்புலம் என்ன?

அவள் எங்கு துங்குவாள் என்ன சாப்பிடுவாள்? போன்ற வற்றை பற்றி நாம் என்றாவது நினைத்து பார்த்து இருக்கிறோமா?

சிக்னலில் பைக்கில் நிற்க்கும் போது“ திருப்பதி மலை வாழும் வெங்கடேசா” என்று கட்டை குரலில் பாடல் பாடி இரண்டு கண்ணும் இல்லாத பிச்சை எடுக்கும் பையனின் கண் இழந்த கதை உங்களில் யாருக்காவது தெரியுமா?


அப்படி அந்த விளிம்பு நிலை சிறுவர்களின் வாழ்க்கை பற்றி அறிய கீழே நான் சொல்ல போகும் படத்தினை பாருங்கள். மும்பையின் இருட்டு பக்கத்தை செருப்பால் அடித்து சொல்லி இருக்கிறார்கள்.

நாம் சந்திரனுக்கு விண்வெளி அனுப்பவதால் மட்டுமே நம் இந்தியா வளரவில்லை , அதே போல் இந்திய ஜனாதிபதியாக ஒரு பெண் இருப்பதால் மட்டுமே நம் நாட்டில் பெண்கள் பாதுகாப்பான வாழ்வை வாழ்கிறார்கள் என்பதில் அர்த்தம் இல்லை என்பதை மிக அற்புதமாக எந்த வித காம்பரமைசும் பண்ணாமல் படம் எடுத்து இருக்கிறார்கள்.




அண்ணண் தம்பி இருவர், கல்விஅறிவு இல்லாதஅவர்களை எப்படி மும்பை நிழல் உலகமும் சேரி வாழ்க்கையும் அவர்கள் இருவருக்கும் என்ன கொடுக்கிறது.

அவர்கள் இருவரும் வளர்ந்த பிறகு இந்த நாகரீக சமுக சூழலில் அவர்களாக எந்த வழியை தேர்ந்து எடுத்தார்கள் என்பதே(slumdog millionaire) படத்தின் கதை.

இன்னும் இந்தியாவில் வெளிவராத இந்த படம் உலகம் எங்கும் வெற்றிநடை போட்டுக்கொண்டு இருக்கிறது , இந்த படத்துக்கு இசை ஏஆர் ரகுமான். இந்த படம் சர்வதேச அளவில் பல அவார்டுகளை அள்ளி குவித்து வருகிறது.



slum dog millionaire படத்தின் கதை இதுதான்.....

சலீம் ஜமால் இருவரும் மும்பை குடிசை பகுதியில் வசித்து வரும் சிறுவர்கள் அப்பா இல்லாத இவர்களை அம்மா வளர்த்து வருகிறாள் இந்துகளுக்கும் முஸ்லீம்களுக்கும் நடந்த கலவரத்தில் இந்துக்களால் அவள் அம்மா அநியாயமாக சாகடிக்கப்படுகிறாள். இருசிறுவர்களும் அனாதை ஆக்கப்டுகிறார்கள்.


அவர்களுக்க லத்திகா என்ற சிறுமியின் நட்பு கிடைக்கிறது. மூவரும் தன் பருவ வயதுவரை அவர்கள் எப்படி அலைகழிக்க படுகிறார்கள். அவர்கள் பருவயதை கடந்ததும் அவர்கள் என்ன ஆகிறார்கள்.

ஜாமல் லத்திகாவை காதலிக்கிறான் அந்த காதல் நிறைவேறுகிறதா?ஜமால் இரண்டு கோடிக்கு அதிபதி ஆக போட்டி போடுகிறான் , அது எப்படி நிகழ்கிறது அவன் அந்த போட்டியில் எப்படி கலந்து கொள்கிறான். அவன் அந்த போட்டியில் கலந்து ஜெயிக்கிறானா? என்பதை வலியுடனும் வேதனையுடனும் சொல்லி இருக்கிறார்கள்...


படத்தி்னை அறிமுகப்டுத்தவது மட்டுமே எனது நோக்கம். விம்ர்சனம் என்ற போர்வையில் முழு படத்தின் கதையையும் ஆகா ஓகோ என்று புகழ நான் கேனை இல்லை...


ஐஸ்வர்யா ராய் அழகு என்றால் நான் என்னதான் அந்த பெண் ஆகா ஓஹோ அழகு என்றாலும் உங்களுக்கு புரிய வாய்ப்பு இல்லை. அந்த பெண்ணுடன் படுத்து எழுந்தால் ஒழிய அந்த அழகை எவ்வளவு விளக்கினாலும் புரிய போவதில்லை...
அதனால் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்


படத்தை பற்றிய சுவாரஸ்சிய தகவல்கள்....

சலாம் பாம்பே படத்துக்க பிறகு இந்த படம் விளிம்பு நிலை சிறுவர்களின் வாழ்வியல் சிக்கல்களையும் அவர்கள் இருண்ட பக்கங்களையும் இந்த படம் மிக அழகாக பதிவு செய்கிறது.


இதன் இயக்குநர் டென்னி பாயில் டைட்டானிக் ஹீரோ நடித்த த பீச் படத்தை எடுத்தவர் சமீபத்தில் இவர் எடுத்த படம் “28 வீகஸ் லேட்டர்”


இந்த படம் இந்திய எழுத்தாளரின் கதையை மையப்படுத்தி எடுத்து இருக்கிறார்கள். கேள்வி பதில் என்ற புத்தகத்தின் திரை வடிவம்தான் இந்த படம்

அமிதாப்பச்சன் வருகிறார் என்றதும் மாலிக் மலக்குழிக்குள் விழுந்து அமிதாப்பச்சனை பார்க்க ஒடுவதும், அவர் ஆட்டோகிராப் போட்ட படத்தை அவன் அண்ணன் சலீம் வேறு ஒருவனுக்கு விற்று காசு பார்பதிலேயே அந்த கேரக்டர் பற்றி தெள்ள தெளிவாக இயக்குநர் விளக்கி இருப்பது சுகம்.

இந்த படத்துக்கு அரசு விதிவிலக்கு அளித்தால் நலம்.



இந்த இயக்குநரின் இந்திய தேடல் ஒவ்வோரு காட்சியிலும் காண முடிகிறது

தமிழ்நாட்டில் இந்த படத்துக்கு வரி விலக்கு கிடைக்காது. ஏனெனில் இந்த படத்திற்க்கு தமிழில் பெயர் வைக்க வில்லை.
இந்த படத்தில் கவுரவ தோற்றத்தில் அனில்கப்பூர் நடித்து இருக்கிறார்



இந்த படம் ஒரு அற்புதமான காதல் கதை வரையரையிலும் இடம் பெறும்

படத்தின் பலம் ஒளி மற்றும் ஒலி பதிவுகள்தான்
மிரட்டி இருக்கிறார்கள் அதிலும் நம்ம பாய் ஏ ஆர் ரகுமான் பின்னனி இசையில் மிரட்டி எடுத்து இருக்கிறார்.

அதிலும் அந்த சிறுவர்களை அறிமுகப்படுத்தும் காட்சியில் அவர்கள் ஓடும் போது பின் புலத்தில் ரகுமான் குரல் வரும் இடத்தில் ஓ போடவைக்கும் இடம்

படத்தின் முடிவில்தான் படத்தின் பங்கேற்றவர் விவரம் உங்களுக்கு தெரிய வரும் அதுவரை படத்தின் பெயர் கூட உங்களுக்கு தெரியாது.


படத்தின் முடிவில் எழுத்து போடும போது மட்டும ஒரு பாடலை இனைத்து இருக்கிறார்கள்..


மும்பை சிறுவர்களின் இருண்ட பக்கங்களை எந்த செட்டும் இல்லாது அதன் நேர்பகுதிகளில் படபிடிப்பை எடுத்து இருப்பது.படத்துக்கு பெரிய பலம்.

படத்தை சாலாம் பாம்பே போல் எடுத்து இருந்து இருந்தால், இந்த படத்திற்க்கு வர்த்தக அளவில் இத்தனை பெரிய வெற்றி கிடைத்து இருக்காது.


எல்லா இந்தியர்களும் அதுவும் மேட்டுக்குடி இந்தியர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம். அடுத்த முறை சிக்னலில் பிச்சை எடுக்கும் பிள்ளைகளை எளனமாக பார்க்காமல் இருக்க இந்த படம் வழி வகுக்கும் என்பேன்...


ரகுமான் பாய்க்கு இந்த படம் மேலும் ஒரு மணிமகுடம். இந்த படம் அவரிடம் இருக்கும் எண்ணற்ற மயில் இறகுகளில் ஒரு அற்புதமான சிறகு கிரீடம் ஆகும்

ஓளிப்பதிவாளர், ரகுமான் பாய், இயக்குநர்,மற்றும் அந்த படத்தில் நடித்த சிறுவர்களுக்கு எனது ராயல் சல்யுட்...

இந்திய இயக்குநர்களிடமும் இந்த மாதிரி படங்களை எதிர்பார்க்கிறேன்



14 வருடங்களுக்கு பிறகு இன்று என் கடந்த காலமெரினா பீச்சின் நினைவுகளை அசை போட வைத்தது இந்த படம்
Genres: Art/Foreign, Comedy, Drama, Adaptation and Teen
Running Time: 2 hrs.
Release Date: November 12th, 2008 (limited)
MPAA Rating: R for some violence, disturbing images and language.
Distributors:
Fox Searchlight Pictures
U.S. Box Office: $12,037,510



அன்புடன்/ஜாக்கிசேகர்

14 comments:

  1. நானும் வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  2. ஜாக்கி : மிக அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள். உங்களுடைய பழைய பதிவை மிஸ் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன். அதை மறுபடி இங்கே கொடுத்ததற்கு நன்றி...

    ReplyDelete
  3. விதிவிலக்கு = வரிவிலக்கு

    ReplyDelete
  4. பதிவு நன்றாகத்தான் இருக்கு. ஆனால் ஐஸ்வர்யா ராய் என்ற திருமணமான பெண்ணை போகிற போக்கில் அசிங்கபடுத்தியதேனோ? நடிகை என்பதாலா?

    ReplyDelete
  5. நன்றி குடுகுடுப்பை நம் வாழ்த்து அந்த தலைகணம் இல்லா தமிழனுக்கு நிச்சயம் செல்லும்

    ReplyDelete
  6. சின்ன பையன், நன்றி அந்த பதிவில்தான் நான் அவருக்கு உலகப்புகழ் கிடைக்கும் என்று எழுதி இருந்தேன்

    ReplyDelete
  7. நடிகை என்பதும் ஒரு உவமைக்கான சொல் அவ்வளவே

    ReplyDelete
  8. நன்றி அக்னி பார்வை

    ReplyDelete
  9. //ரகுமான் பாய்க்கு இந்த படம் மேலும் ஒரு மணிமகுடம்.//

    இசையமைப்பாளர் ரகுமான்னு சொன்னா அவரு கோவிச்சுகுவாரா?

    நான் சாதி,மத அடையாளங்கள் வேணாம்னு கழுதையா கத்திகிட்டு இருக்கேன், நீங்க ரகுமான் பாய்ன்னு சொல்றிங்க!

    ReplyDelete
  10. அருமை!

    உங்க மெரீனா வாழ்க்கை, அதை கடந்து நீங்க உயர்ந்திருக்கும் திறமை, அபாரம். ஹாட்ஸ் ஆஃப்!

    //அதிலும் அந்த சிறுவர்களை அறிமுகப்படுத்தும் காட்சியில் அவர்கள் ஓடும் போது பின் புலத்தில் ரகுமான் குரல் வரும் இடத்தில் ஓ போடவைக்கும் இடம்///

    எனக்கு பிடிக்காதது உங்களுக்குப் பிடிச்சிருக்கு. tastes differ ;)

    ReplyDelete
  11. ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்.உழைப்பிற்கு கிடைத்த வெற்றி.

    படத்தை பார்க்காததினால்
    விரிவான விமர்சனம் செய்ய இயலவில்லை.

    உங்களின் பதிவினால் நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது.

    ReplyDelete
  12. அவர் சொன்னமாதிரி அவரே எதிர்பார்க்காத விருது.. இன்னிக்கு காலையில பேட்டியில கூட தலைக்கனம் இல்லாம பேசுனதுதான் அவரை இந்த உயரத்துக்கு கொண்டு போயிருக்குன்னு நெனக்கிறேன்...

    ***

    உங்க மெரினா வாழ்க்கை அதிர்ச்சியா இருக்கு.. ஆனா அதிலிருந்து மீண்டு பாஸிட்டிவ் மனிதனா நீங்க மேல வந்திருக்குறது சந்தோஷமா இருக்கு ஜாக்கி..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  13. சாமி..

    நான் இன்னும் படம் பார்க்கலை.. அதுனால என்ன..? ரஹ்மான் திறமைசாலி.. காலத்திற்கேற்றாற்போல் இசையை வெளிப்படுத்தும் விற்பன்னர்..

    அவருக்கு கிடைக்க வேண்டியதுதான் கிடைத்திருக்கிறது..

    பிறகு உங்களது மெரினா வாழ்க்கை..?

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்ற கவியரசரின் வார்த்தைகளை எனக்கு ஞாபகப்படுத்துகிறது..

    என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்..

    நல்ல நண்பர் கிடைத்திருப்பதில் பெருமையடைகிறேன்.

    உங்களுடைய இந்த வளர்ச்சி நிச்சயம் பலருக்கும் ஒரு உதாரணம்தான்..

    வாழ்க வளமுடன்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner