சிங்கை நண்பர்களின் தானே புயல் நிவாரண உதவிகள்.





 தானே புயல் அடித்து  இருபது நாள் ஆகிவிட்ட நிலையில் சிங்கையில் இருந்து தம்பி ரோஸ்விக் போன் செய்தார்....
அண்ணே  எங்க அலுவலகத்தில் இருந்து நான் மற்றும் நண்பர் செந்தில் குமார் ரெண்டு பேரும் சேர்ந்து எங்களால் முடிந்த அளவுக்கு பணம் கலெக்ட் பண்ணி கொடுக்கறோம் அதை உரியவங்ககிட்ட சேர்க்கறது  உங்க பொறுப்பு என்று சொன்னார்... என்னால் உடல் உழைப்பை கொடுக்க நான் ரெடி என்றேன்..

நான் தனியாக இந்த பணத்தை வைத்துக்கொண்டு  பொருட்களை வாங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு  கொண்டு போய் கொடுத்தால், ஜாக்கி ஒருத்தனே ஓத்து சாட்டுபுட்டு மண்ணை வாரி விட்டுபுட்டான்னு  ஏதாவது ஒரு நாதாரி பேசும்....அதனால்  சென்னை பதிவர்களில்  கடலூர் வந்து உதவி செய்ய யாராவது ரெண்டு பேரை நீயே சொல்லு என்றேன்..

உங்களுக்கு தெரியாத ஆளா? சென்னையில்.. நீங்க கூப்பிட்ட யாராவது வரமாட்டோம்னு சொல்ல போறாங்களா என்ன? என்று கேட்க.. இல்லை ரோஸ்விக் நீயே ஆட்களையும்  சொல்லிவிடு என்று சொல்ல..  அப்துல்லா அண்ணனை அழைச்சிக்கோங்க... வேற யாராவது ரெண்டு பேரு அழைச்சிக்கோங்க என்று சொல்ல... ரோஸ்விக் இடம் சொன்னேன். சரியான ஆளை தேர்வு செய்து இருக்கின்றாய் என்றேன்..

இன்னும் ரெண்டு நாளில்  எவ்வளவு முடியுமோ அவ்வளவு தேத்தி அனுப்பிச்சிடுறோம் அண்ணே என்றான்.
இருபது நாட்களுக்கு மேல் புயல் அடித்து வீட்டை நான் பார்க்க போகமுடியவில்லை.. தங்கைக்கு இரண்டாவது பெண்குழந்தை பிறந்தது அதுக்கும் போக முடியவில்லை.. வீடு வாங்கி கிரகபிரவேசம் செய்து இருந்தாள்.. எதுக்குமே என்னால் போக முடியவில்லை..

மனைவி வேலைக்கு போய்விட்டாள். குழந்தையை நான் பார்த்துக்கொள்வதால் வீட்டை விட்டு நகர முடியிவில்லை.. அதே போல காலையில் போரூர் போய் மனைவியை விட்டு விட்டு திரும்ப போரூர் போய் அழைத்து வர வேண்டும்.. அப்படி நான் போகவில்லை என்றால் ஒரு நாளைக்கு 200ரூபாய் ஆட்டோவுக்கு மொய் எழுத வேண்டும்..  நான் கடலூருக்கு அப்பாவையும் குழந்தை பெற்ற தங்கையையும் பார்க்க போய் ஆக வேண்டிய கட்டாயம்..
காரில் கடலூர் போனேன்.. எங்க அப்பாவுக்கு பெராளிஸ் அட்டாக் என்பதால் நாளும் கிழமை அன்றுதான் அவரால் வெளி உலகம் பார்க்க முடியும்..  எட்டு வருடம்  ஒரு அறையில் இருக்கின்றார்... அப்பாவை காரில் ஏற்றிக்கொண்டு தானேபுயல் பாதித்த பகுதிகளை பார்த்தேன்.. அப்படியே அவருக்கு சுற்றிக்காட்டினேன்..

அப்பாவுக்கு பெரிய சதோஷம்.. ஆனால் தான்  சின்ன வயதில் ஒடி ஆடிய இடங்கள் எல்லாம் சின்ன பின்னமாக மாறிக்கிடப்பதை பார்த்து மனம் வெதும்பினார்.. அப்போதுதான் அந்த மலைகிராமத்தை பார்த்தேன்.. புதுநகர்... ஒரு ஐந்து வருடத்தில் தோன்றிய குடியிருப்பு.... எல்லா கூரை வீடுகளும் பறந்து போய் கிடந்தன.. மக்கள் குளிரில் தவித்துக்கொண்டு இருந்தார்கள். மின்சாரம் இல்லை...
நான் சென்னை வந்து விட்டேன்.... 


ரோஸ்விக் பணம் 40 ஆயிரம் கலெக்ட் செய்து என் கசின் ஆக்கவுண்டுக்கு அனுப்பி விட்டான்...

தம்பி அப்துல்லாவிடம்  என்ன செய்வது என்று கேட்டேன்... பணத்தை எடுத்துக்கொண்டு பாதிக்ப்பட்ட இடத்துக்கு போவோம் என்ன வேனும்னு மக்களிடம் கேட்போம்..? அவுங்களுக்கு என்ன தேவையோ ?அதை வாங்கி கொடுத்து விட்டு வந்து விடுவோம் என்று சொல்லி கடலூருக்கு நான், அப்துல்லா,ஜோசப்பால்ராஜ் மற்றும் அப்துவின் நண்பர் முகமதுவோடு கடலூருக்கு சென்றோம். 


காரில் போகும் போதே....ஜோ... அண்ணே தானே புயலுக்கு பணம் கலெக்ட செய்யும் போது, என்கிட்ட பணம் இல்லை.. 40,000 ரோஸ்விக்கொடுத்தது.. எனது கசின் ஒரு ஆயிரம் மொத்தம் 41 ஆக இருந்தது.. ஜோசப் பால்ராஜ் ஒரு 4000 கொடுக்க..45 ஆயிரம் ரூபாய் ஆனது.. உடனே அப்து என் பங்குக்கு ஒரு 5000ரூபாய் போட்டு ரவுண்டா 50,000 ஆக்கிடுங்கன்னே என்று சொல்ல.. மொத்தம் 50,000 ரூபாய் கையில் இருந்தது.

பொதுவாக தானே புயலில் எல்லா நிவாரண உதவிகளும் கடற்கரை கிராமத்து மக்களுக்கு மட்டுமே அனைத்து உதவிகளும்  சென்று சேர்ந்தது.... வெளியூரில் இருந்து வரும் என்ஜீஓக்கள் கடற்கரை கிராமத்து பக்கம்தான் போகின்றார்கள்.. கடற்கரையில் இருந்து 5கிலோமீட்டர் தூரம் கூட பின்னோக்கி  சென்று உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்து இல்லை என்பதால் நான் கடலூர் கேப்பர் மலை ஜெயிலுக்கு  அருகாமையில் இருக்கும் மலைகிராமமான புதூருக்கு போய் பாதிக்கபட்ட இடத்தினை காட்டினேன்..


காரை விட்டு இறங்கியதும் மக்கம் சூழ்ந்துகொண்டார்கள்.. கீற்று வாங்கி கொடுக்கலாம்.. ஆனால் கூலி என்று அது எக்கேயோ பட்ஜெட் போய் கொண்டு இருந்தது.. பொதுமக்கள்.. எங்களுக்கு பசியாற ஏதாவது அரிசி பருப்பு வாங்கி கொடுங்க என்றார்கள்.. மொத்தம் 150 குடும்பம்பங்கள் வசித்தன..ஒரு குடும்பத்துக்கு 333 ரூபாய் செலவு  செய்யலாம்..

இரண்டு மணியில் இருந்து கடலூரில் பல கடைகள் ஏறி இறங்கினோம்.. 150  பாக்கெட் இப்போதைக்கு சாத்தியம் இல்லை ...அரிசி6கிலோ,சமையல் எண்ணெய் அரைலிட்டர், கடலை பருப்பு அரைக்கிலோ, துவரம் பருப்பு அரைக்கிலோ,மஞ்சள்,வெந்தியம்,கடுகு,உளுத்தம்பருப்பு,சீரகம் என எல்லாம் தலா 50 கிராம்  என்று ஒரு குடும்பத்துக்கு தேவையான சின்ன மளிகை லிஸ்ட் சொன்னோம்.. ஆனால் இன்னைக்கு சாத்தியம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.. 


சரி நீல்கிரிஸ்ல் போய்  கேட்டோம் அவர்கள்... நாங்கள் கொடுத்த அதே லிஸ்ட்டுக்கு 600ரூபாய் வரை  ஆகும் என்று தெரிவிக்க.. அப்து... அண்ணே.. நாமமுதலில் போன கடைக்கு போய் அட்வான்ஸ் கொடுத்து விட்டு ஊருக்கு போய் விடுவோம்..திரும்ப ஒரு நாள் வந்து ரிலாக்சா கொடுக்கலாம் என்று அப்து சொல்ல அந்த ஜடியா சரி என்று பட 25 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து விட்டு சென்னைக்கு நடையை கட்டினோம்..


திரும்ப அப்துவுக்கு வேலை... என்னாலும் வெளிவரமுடியாத வேலை...தங்கை ரோகிணி கல்யாணத்துக்கு திருக்கடையூர் செல்லும் போது ,அப்படியே கடலூரில் நிவாரண  பொருட்களை வழங்கிவிட்டு செல்லாம் என்பது பிளான்... அல்லது திருமணம் முடிந்து வரும் போது கொடுக்கலாம் என்று எல்லாம் பேசினோம்..ஆனால் ரோகிணி கல்யாணத்துக்கு செல்லும் நாளுக்கு முதல்நாள்தான் முதன் முறையா யாழினிக்கு   சென்னை நங்கநல்லூர் குருவாயூர் கோவிலில் சாப்பாடு கொடுக்க என் மனைவி  பணம் கட்டி இருந்தாள். ஆனால் அவர்கள் அடுத்தநாள் வரச்சொல்லிவிட்டார்கள்.. இந்த காரணத்தால் அப்போதும் பிளான் டிராப். நான் வராவிட்டாலும் நான் சொல்லும் இடத்தில் பொருளை வாங்கி மக்களிடம் சேர்பித்துவிடுங்கள் என்று சொன்னேன்.. ஆனால் திருமணத்துக்கு  போய் விட்டு அந்த பக்கம் வர  நேரத்தை அவர்களால் ஒதுக்க முடியவில்லை.,


14ஆம் தேதி செல்லலாம் என்று கன்பார்ம் செய்து திடிர் என்று அப்துவுக்கு அவசர வேலை இருந்த காரணத்தால், பிளான் கேன்சல். சரி மறு நாள் கிளம்பலாம் என்று  சொல்லிவிட்டேன்...
அன்று இரவு யாழினிக்கு அம்மை போட்டு விட்டது.. மறுநாள்15/02/2012 அன்று... நான் எதுவா இருந்தாலும் நாம போயிட்டு வந்துடலாம் என்று கிளம்பிவிட்டேன்... இந்த முறை நான் அப்துல்லா மட்டுமேசென்றோம்..

பேட்டை அருகே  இருக்கும் மில்லேனியம் பள்ளிக்கு பின்புறம் இருக்கும் புதூர் மலைகிராமத்துக்கு  சின்ன யானை வண்டியில் பொருட்களை ஏற்றிக்கொண்டு கிளம்பினோம்..இரண்டு நாளில் வந்து விடுவோம் என்று சொல்லி பேக் செய்யப்பட்ட பொருட்கள்..பல வீடுகளின் தாழ்வாரகளுக்கு ஜாகை மாற்றிக்கொண்டே இருந்தது..புதுநகருக்கு சென்னேறாம்..போகும் போது எனது நண்பர் சுபாஷை அழைத்துக்கொண்டேன்.. அங்கே ஜெயந்தி என்ற மகளீர்  சுய உதவிக்கு குழு பெண் தலைவியிடம் ஏற்கனவே 150குடும்பத்தினர் லிஸ்ட்டை எடுக்க சொல்லி இருந்தோம்..இதில் ரோட்டில் போனவன் வந்தவன் எல்லாம்  தனக்கும் ஒரு பை கிடைக்க வேண்டும் என்று நிறைய பிட்டு போட்டு பார்த்தார்கள்..


பெயர் வாசிக்க  வாசிக்க  வந்து பொருள் வாங்கி கொண்டு  சென்றாலும்.. வேலை  வெட்டி இல்லாத இரண்டு ஆண்கள் ஜெயந்தியை மிரட்டி தங்களுக்கு இன்னும் ஒரு மளிகை பை கிடைக்கவேண்டும் என்று தொல்லை கொடுக்க...அந்த பெண்மணியால் அவர்களை சமாளிக்கவே முடியவில்லை..


நான் கத்த ஆரம்பித்து விட்டேன்..ஏதோ வெளியூர்காரன்னு நினைச்சிகிட்டு இந்த டகுல் பாச்சா வேலை எல்லாம் விட வேண்டாம்..  நான் கூத்தப்பாக்கத்துகாரன்தான்.. சென்னைன்னு நினைச்சிகிட்டிங்களா? உங்களை எல்லாம் எனக்கு தெரியும் என்று கத்த கூட்டம் அமைதியாகியது.

நாங்கள் போன போது அந்த இடம் ரொம்ப மோசமாக இருந்தது.. டெல்லியில் இருக்கும் தொண்டு நிறுவணம் தற்போது அந்த இடத்தை சீர்படுத்தி வருகின்றது.. மளிகை பை வாங்க.. ஒரே வீட்டில் இருந்து மாமியார்,மாமனார்,மருமகள் நாத்தனார் எல்லாம் வரிசையில் இருந்து வாங்கி ஏமாற்ற வந்தார்கள்.. அவர்களை எல்லாம் இனம் கண்டு  உரிய பயணாளிகளிடம் பொருட்களை சேர்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.. அந்த இடத்தில் இருந்து பக்கத்து  கிராமத்துக்கு  போய் மேலும்  அரிசி மற்றும் மளிகைபொட்டலங்கள் வழங்கி விட்டு வந்தோம்..

குழந்தைக்கு அம்மை போட்டு இருந்த காரணத்தாலும் வீட்டில் என் மனைவிக்கு வேறு யாரும் உதவிக்கு இல்லை..இது போன்ற அனுபவமும் என் மனைவிக்கு புதியது.. குழந்தை முகம் எல்லாம் பொறிப் பொறியாக இருக்க..அவள் ரொம்பவே பயந்து போய்விட்டாள்.. இந்த நிலையில் நான் ஊருக்கு போவதில்  அவளுக்கு விருப்பமே இல்லை..இருப்பினும் வேறு வழியில்லை.. எத்தனை நாள்தான் தள்ளிக்கொண்டே போவது...?? அதனால் கிளம்பி விட்டேன்..  சென்னைக்கு நானும் அப்துவும் திரும்ப வரும்  போது நிறைய பேசிக்கொண்டு வந்த காரணத்தால் மனது லேசாகியது.. 

சிங்கையில் இருந்து கொண்டு நமக்கென்ன என்று இருக்காமல் மக்களுக்கு, உதவி செய்ய வேண்டும் என்று நினைத்த தம்பி ரோஸ்விக் அவர் நண்பர் செந்தில்குமார் இரண்டு பேருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..


தம்பி அப்துல்லா தன் பங்கிற்கு ஐந்தாயிரம் போட்டது மட்டும் அல்லாமல் இரண்டு நாட்கள் அவர் கார் எடுத்துக்கொண்டு வந்தது.. இரண்டு முறை கடலூர் வந்து சென்றதுக்கு டிசல் மற்றும் சாப்பாடு செலவு 2500 வரை அப்துல்லாவே ஏற்றுக்கொண்டார்...  நான்  உடல் உழைப்பை மட்டும் கொடுத்தேன்..


அன்பே சிவம் திரைப்படத்தில் ஒரு டயலாக் வரும்..


நானெல்லாம் ஆணி அடிக்கறதுக்கு பயண்படுற சுத்தி போல.. ஆணி அடிச்சதும் சுத்தியை ஓரமா வச்சிடுவாங்க.... அது போலத்தான் நான் என்று கமல் சொல்லுவார்.. இந்த நிவாரண  பொருட்கள் வழங்கியதில் நான், அப்துல்லா,இருவருமே  சுத்தியல்கள்தான்..


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

=========== 
குறிப்பு...


 வரும மார்ச் அல்லது ஏப்பரல் மாதம்  தேனி, கம்பம், மதுரை போன்ற இடங்களுக்கு  பென்னி குக் பற்றிய ஆவணப்படம் எடுக்க  செல்ல இருக்கின்றேன். இப்போதைக்கு பிரிபுரொடெக்ஷன் வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றது...


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

22 comments:

  1. தல குழந்தைக்கு விரைவில் சரியாகிவிடும் கவலை வேண்டாம் என்று தங்கைக்கு சொல்லுங்கள். அத்துடன் குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். காலை மாலை கருமாரியம்மன் கோவில் சென்று வழிபட்டு அதன் தீர்த்தத்தை குழந்தைக்கு கொடுக்க சொல்லுங்கள். விரைவில் குணமடைய கருமாரியம்மனை வேண்டிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  2. உதவி செய்ய பணம் கூட தந்துவிடலாம். ஆனால் அதை உரியவர்களிடம் சரியாக கொண்டு சேர்ப்பது லேசுப்பட்ட காரியமல்ல. அது குறித்த விஷயங்களை விவரமாக பதிவிட்டதற்கு நன்றி. அநியாயத்திற்கு நல்லவராக இருந்தால் நம்மை ஏமாற்றி பொருள் பறிப்பார் என்பதற்கு இப்பதிவும் ஒரு சாட்சி . அந்நேரத்தில் தாங்கள் சில போலிகளை அதட்டியதும் சரியே. ரோஸ்விக், ஜாக்கி மற்றும் 'வெண் சூரியன்' அப்து அனைவருக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  3. பாராட்டுக‌ள் ஜாக்கி, த‌ம்பி ரோஸ்விக், த‌ம்பிய‌ண்ண‌ன் !!!

    ReplyDelete
  4. Well done... Congrats.. Keep it up!!!

    We pray for your daughter!.

    ReplyDelete
  5. /*ரோஸ்விக், ஜாக்கி மற்றும் 'வெண் சூரியன்' அப்து அனைவருக்கும் பாராட்டுகள்.*/
    யாழினி - விரைவில் குணமடைய கருமாரியம்மனை வேண்டிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  6. நாம் எல்லோருமே சேர்ந்து கூவினால் விடியாமலா போய்விடும்? என்ற கேள்விக்கு நல்ல விடையை தந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் ஜாக்கி, அப்துல்லா, ரோஸ்விக், ஜோ!!!

    ReplyDelete
  7. நண்பர்களுக்கு வாழ்த்துகள்!

    //ஜாக்கி ஒருத்தனே ஓத்து சாட்டுபுட்டு மண்ணை வாரி விட்டுபுட்டான்னு ஏதாவது ஒரு நாதாரி பேசும்....//

    இந்தப் பதிவில் இந்த வரியை தவிர்த்திருக்கலாம் ஜாக்கி!

    ReplyDelete
  8. தக்க சமயத்தில் செய்யப்படும் உதவி உலகை விட பெரியது என்ற வள்ளுவனின் வாக்கிற்கிணங்க குழந்தையின் உடல் நிலையையும் பொருட்படுத்தாது பாதிக்கப்ப பட்ட மக்களுக்கு உதவி செய்த தங்கள் நல்ல எண்ணத்திற்கு இறைவன் என்றென்றும் உங்கள் கூட இருப்பான்.... குழந்தைக்கு சீக்கிரம் சரியாகிடும் அண்ணா கவலை பட வேண்டாம்...

    ReplyDelete
  9. அவங்களுக்கு கொடுத்துட்டு வரும் வழியில
    ஒரு நிம்மதி இருக்கும்.
    ஏதோ பெரிசா சாதிச்ச சந்தோசம் இருக்கும்ல
    ரொம்ப சந்தோசம்,

    ReplyDelete
  10. தர்மத்தின் தலைவனே ...போதுமா பில்டப் ...வாழ்த்துக்கள் ..அப்புறம் ஆவண படத்திற்காக நான் உங்களின் அழைப்பை எதிர் நோக்கி காத்து இருக்கிறேன்

    ReplyDelete
  11. நன்றி நண்பர்களே... காரில் போகும் போது இரண்டு டோல் கேட்டுக்கு வேண்டுமானால் டிக்கெட் எடுத்து இருப்பேன் மற்றபடி பெரிதாய் எந்த தொகையும் நான் கொடுத்து உதவவில்லை.. அப்படி மனம்குளிர பாராட்ட ரோஸ்விக் செந்தில்குமாரை பாராட்டுகள்.. அவர்கள் இல்லையேல் இந்த நிவாரண உதவி இல்லை..

    ReplyDelete
  12. அன்பின் ஜாக்கி,
    இந்த பேருதவிக்கு எனது சிங்கை நண்பர்கள் சார்பாக உங்களுக்கும், அப்துல்லா அண்ணனிற்கும் மற்றும் ஜோசப்-பிற்கும் மனமார்ந்த நன்றிகள். தொலைபேசியில் கூறியதுபோல, நிதி உதவி அளிக்க அந்த கணநேர மனம் போதும். உங்களது சூழ்நிலை எனக்கு நன்றாகத் தெரியும். யாழினியின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போதும் நீங்கள் மூன்று நாட்கள் இதற்காக செலவிடுவது அவ்வளவு ஒன்றும் சாதாரண காரியம் அல்ல. அப்துல்லா அண்ணனின் உதவும் மனம்குறித்தும் எனக்கு நன்றாகத் தெரியும். அவரது பங்கீடு 'அனைத்துவகையிலும்' இதில் சிறப்பு. ஜோசப் பால்ராஜ் இதில் பங்கேற்றதிலும் மிகுந்த மகிழ்ச்சி. உங்கள் மூவருக்கும், எனது அன்பும், நன்றிகளும். நேயமுள்ள மனிதர்களின் வாழ்த்துக்களும், பயனடைந்த சொந்தங்களின் வாழ்த்துக்களும் உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் நிறைவாக ஆசீர்வதிக்கட்டும்.
    அறிவித்தவுடன் நிதிஉதவி தந்த நண்பர்களுக்கும், இதில் நிதி கொடுத்து பங்கெடுத்த உங்கள் நண்பருக்கும், தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவேண்டும் என முன்னெடுத்த எம் நண்பர் செந்திலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
    எனது வெற்றி - இதற்கு உங்களையும், அப்துல்லா அண்ணனையும் தேர்ந்தெடுத்தது மட்டுமே. உங்களின் மீது எனக்கு அவ்வளவு நம்பிக்கை. ஒரு அளவிற்கு மேல் இதில் நம் நண்பர்களை சேர்த்தால் குழப்பங்கள் நேரும் என்பதால் தவிர்த்துவிட்டேன்.
    இந்த பதிவையும் கூட சில நண்பர்கள் விளம்பரம் என்ற ரீதியில் புரிந்துகொள்ளக்கூடும். இதுபோன்ற விளம்பரத்தில் எனக்கோ, உங்கள் இருவருக்குமோ மற்றும் எனது நண்பர்களுக்குமோ விருப்பமில்லை என்பதுதான் நிதர்சனம். இதுபோன்ற பதிவுகளைப் படிக்கும் நண்பர்களில் சிலர்(எனக்கும் கூட) உதவும் மனப்பான்மையை இன்னும் அதிகமாக வளர்த்துக்கொள்ள உதவும் என்பதால் இப்பதிவுடன் உடன்படுகிறேன்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  13. நீங்கள் தேர்ந்த்தெடுத்த இந்த கிராமம் மிகச்சரியானது என்று பலமுறை மனம் நெகிழ்ந்து அப்துல்லா அண்ணன் என்னிடம் தனிப்பட்டமுறையில் கூறியது என்னில் நிழலாடிக்கொண்டே இருக்கிறது.

    ReplyDelete
  14. தொண்டுள்ளம் கொண்ட உங்கள் குழுவினர்

    அனைவருக்கும் வாழ்துக்கள் . .

    ReplyDelete
  15. Jackie & abdullah i really appreciate both of u for helping the poor people affect by the recent cyclone,May god bless ur life with happiness forever with the greetings of poor people as well as for ur family members (Baby yalini)

    I am basically from thanjavur,now im in Riyadh (KSA) every day i used to visit ur blog & really ur blog is so simple but the words are very effective & informative.

    Keep it up jackie & abdullah for your efforts.

    Ur's Friendly,
    Shahul

    ReplyDelete
  16. Jackie & abdullah i really appreciate both of u for helping the poor people affect by the recent cyclone,May god bless ur life with happiness forever with the greetings of poor people as well as for ur family members (Baby yalini)

    I am basically from thanjavur,now im in Riyadh (KSA) every day i used to visit ur blog & really ur blog is so simple but the words are very effective & informative.

    Keep it up jackie & abdullah for your efforts.

    Ur's Friendly,
    Shahul

    ReplyDelete
  17. ஜாக்கி மற்றும் தோழமைகளுக்கு.....

    மிக அருமையான ஒரு வேலை செய்து இருக்கிறீர்கள்... அதற்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.....

    ReplyDelete
  18. Jackie,

    Great job. Kudos to you and your friends for undertaking such a noble act.

    Prayers for your daughter's speedy recovery. On the positive side, she will not get Chicken Pox ever in her life.

    ReplyDelete
  19. Jackie,

    Great job. Kudos to you and your friends for undertaking such a noble act.

    Prayers for your daughter's speedy recovery. On the positive side, she will not get Chicken Pox ever in her life.

    ReplyDelete
  20. நானெல்லாம் ஆணி அடிக்கறதுக்கு பயண்படுற சுத்தி போல.. ஆணி அடிச்சதும் சுத்தியை ஓரமா வச்சிடுவாங்க.... அது போலத்தான் நான் என்று கமல் சொல்லுவார்.. இந்த நிவாரண பொருட்கள் வழங்கியதில் நான், அப்துல்லா,இருவருமே சுத்தியல்கள்தான்.arumaiyana varthaigal.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner