வாடகை வீட்டு சென்னை வாசிக்கு, வயிற்றில் கிலி....


சென்னைவாசிகளில் பல பேர் வாடகை வீ்ட்டில்தான் குடித்தனம் நடத்துகின்றனர்...நானும் வாடகை வீட்டில்தான் குடித்தனம் நடத்துகின்றேன்...விஷம் போல் ஏறும் விலைவாசியில் ஒவ்வொரு மாதமும் குடும்பம் நடத்துவதற்குள் விழி பிதுங்கி விடுகின்றது...

பருப்பு வகைகள் எல்லாம் ஆன்லைன் வர்த்தகத்தில் சேர்ந்து கொண்டு போடும் கும்மாளம் இருக்கின்றதே...யப்பா சொல்லி அழ ஒரு மாதம் போதாது...ஒரு கிலோ பருப்பு விலையை சொன்னால் செத்துப்போன என் அம்மா போட்டோவில் இருந்து இறங்கி வந்து...மார்பில் அடித்துக்கொண்டு மூற்ச்சையாகி விடுவாள்...

எல்லாவற்றையும் விட கல்வி கட்டணம் என்ற பெயரில் இந்த கல்லூரி மற்றும் பள்ளிகூடங்கள் அடிக்கும் பகல் கொள்ளையை எவரும் தடுக்க முடியவில்லை...குரோம்பேட்டையில் என் நண்பரின் தங்கை மகள் இப்போதுதான்.. எல்கேஜி போகின்றாள்.... அதற்கு அவர்கள் வசூலித்த தொகை 40,000 ரூபாய்... சாப்பாடு உள்பட என்று வேறு வெட்கம் இல்லாமல் சொல்கின்றார்கள்.......அந்த குழந்தை சிக்கன் டிக்காவும், மட்டன்பிரியானியும் தின்னு கிழிச்சிட போவுது பாருங்கள்....

பால் விலையை இப்போதுதான் மெல்ல உயர்த்தி அழகு பார்த்தது ஆளும் அரசு...

இது போல அன்றாட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற, மென்று முழுங்கி குடும்பம் நடத்தி வரும் நடுத்தர குடும்பத்தினர்...வாழ்வில் இடி போன்ற செய்தியை... இறக்கியுள்ளது... தமிழ்நாடு மின்சாரவாரியம்....அது அறிவித்து இருக்கும் மின்சார கட்டண உயர்வு...

பொதுவாக வாடகைக்கு விடும் ஹவுஸ் ஓனர்கள்...கொஞ்சம் மனசாட்சியை இலங்கை ராணுவம் போல் பரணில் வைத்து விட்டுதான் சிரித்து பேசுவார்கள்...

கேட்டை கொஞ்சம் வேகமாக சாத்தினால்... அதற்கு சத்தம்....

யாராவது விருந்தினர் வந்து விட்டால்... மோட்டர் இப்பதான் போட்டேன்... கொஞ்சம் கூட தண்ணியே இல்லை... இரண்டு பேருன்னு சொல்லி வாடகைக்கு வந்து 5,10ன்னு இதுங்க அடிக்கற கூத்து இருக்கே என்று புலம்புவது... என்று அடிக்கிகொண்டே போகலாம்...

இப்படி எல்லாம் எழு கடல் எழு மலைதாண்டிய அலுப்புடன் வாடகை வீட்டில் குடியிருந்தால்.. இப்போது மின்சார கட்டண உயர்வை அறிவித்து இருக்கின்றது...தமிழ்நாடு மின்சாரதுறை....

ஆனால் 200 யூனிட் மின்சாரம்... மாதம் ஒன்றுக்கு பயண்படுத்துபவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை என்கின்றது தமிழக மின்சார வாரியம்...

ஆனால் சென்னை மற்றும் தமிழகத்தின் பிறபகுதிகளில் உள்ள,எல்லா வாடகை வீடுகளிலும் சப் மீட்டர் வைத்தே பணம் வசூலிக்கின்றனர்.. இன்று சென்னையில் வாடகை வீட்டில் ஒரு யுனிட்டுக்கு வசூலிக்கபடும் தொகை முறையே 4.50, 5, 5.50,6 என்று இடத்துக்கு தக்கவாறு வசூலிக்கின்றார்கள்... இதில் சொந்த வீட்டுகாரர் அவர் வீட்டுக்கு வரும் கரண்ட் பில் தொகையை கட்டுவதே இல்லை ...
ஐந்து குடும்பம் வாடகைக்கு வீடு வைத்து இருக்கும் வீட்டு ஓனர்... வரும் மொத்த தொகையை எல்லோர் வீட்டுக்கும் பிரித்து அமவுண்ட் சொல்லி விட்டால்... இவர்கள் வீட்டு கரண்ட் பில்லையும் குடித்தனம் செய்பவர்களே கட்டும் சூழ்நிலை உருவாகின்றது... இந்த பூனைக்கு இதுவரை யாரும் மணி கட்ட முன் வரவில்லை

சற்றே யோசி்த்து பாருங்கள் இன்று மின்சாரத்தை உயோகபடுத்தாத பொருட்களே இன்று இல்லை... அந்தளவுக்கு இயந்திரங்களுடன் அடிமையாகிவிட்டோம்...

விலை உயர்வு ஏற்றுக்கொள்ள கூடியது என்றாலும்... இது போல் வீட்டு ஓனர்கள் அடிக்கும் மின்சார கட்டனத்தில் அடிக்கும், பகல் கொள்ளையை எவர் தடுப்பது?

நான் வாடகை வீட்டில் இருக்கும் போது மாதத்துக்கு கரென்ட் பில் 600 ரூபாய்... இப்போது நிறைய மின்சாதன பொருட்கள் உபயோக படுத்தியே இரண்டு மாதத்துக்கு 500 ரூபாய்தான் வருகின்றது....ஆனால் இது தனி வீடு... அதுதான் காரணம்...........
மாதா மாதம் மின்சார கட்டனத்தில் நடுத்தர மக்களிடம் இந்த ஹவுஸ் ஓனர்கள் அடிக்கும்... கொள்ளை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது....

எனது ஒரே கவலை என்னவென்றால் எனது பழைய ஹவுஸ் ஓனர் மின்சார உயர்வை பற்றி அரசு பரிசீலிக்கின்றது என்று தினத்தந்தியில் செய்தி வெளியான அடுத்த நாளே காரண்ட பில் மொத்த தொகையில் 2 ரூபாய் உயர்த்தி விடும் நல்லமனதுகாரர் ...


அன்புடன்
ஜாக்கிசேகர்
(உங்களுக்கு மேலே உள்ள தகவல்கள் நிறைவானதாக இருந்தால் ஒரு நிமிடம் எனக்காக செலவு செய்து வாக்களித்து விட்டு செல்லுங்கள்....வாக்குகள் மற்றும் பின்னுட்டமே கண் விழித்து டைப்பும் என்னை உற்சாகபடுத்தும்)
இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

42 comments:

  1. ஜாக்கி,

    இந்த வீட்டு அட்வான்ஸ் தொகை பற்றிச் சொல்ல ஒன்னும் இல்லையா?

    சென்னையில்தான் ஒரே அட்டகாசம். 10 மாத வடகை அட்வான்ஸ் தரணும். காலி செய்யணுமுன்னா பத்து மாசம் முன்பே நோட்டீஸ் கொடுக்க முடியுதா?

    வட இந்தியாவில் குறிப்பாக டெல்லி யில் ரெண்டு மாச வாடகைதான் அட்வான்ஸ். சண்டிகர் நகரில் இன்னும் சூப்பர். ஒரே மாத வாடகை அட்வான்ஸ்.

    நான் அங்கேதான் போய் இருக்கப்போறேன்:-)

    ReplyDelete
  2. இங்க பெங்களுர்ல இரண்டு மாதத்திற்கு முன்னாடிய மின் கட்டணம் ஏறிடிச்சு

    ReplyDelete
  3. //பருப்பு வகைகள் எல்லாம் ஆன்லைன் வர்த்தகத்தில் சேர்ந்து கொண்டு போடும் கும்மாளம் இருக்கின்றதே

    இந்த மாதிரி ஒரு கமெண்ட் போட, வால்பையன் டென்ஷனாகிவிட்டார் :)

    ReplyDelete
  4. 200 யூனிட்
    ஒரு பிரிட்ஜ், டிவி, வாஷிங் மெஷின் இருந்தாலே போதும், 200 யூனிட்டுக்கும் மேலே எகிறி விடும் :(

    ReplyDelete
  5. ஆமா வீட்டு அட்வான்ஸ் பத்தி ஒண்ணுமே சொல்லலையே சேகர்

    :)

    ReplyDelete
  6. உன்மைதான் சார், வீட்டு உரிமையாளர்கள் பண்ற ரவுசு தாங்க முடியாதுதான்.

    ReplyDelete
  7. நான் இருக்குற வீட்ல யூனிட்டுக்கு 5 ருபாய் வாங்குறானுங்க. என்ன பண்றது ?

    ReplyDelete
  8. ரொம்ப நிஜம்ங்க.....

    வீட்டு செலவுக்கு, போன மாசத்துல இருந்து, நார்ம்லா கொடுக்குற அமவுண்ட்ல இருந்து, கூடுதலா 25 % ஜாஸ்தி கேட்டு தங்கமணி போராட்டம் பண்றாங்க....

    ReplyDelete
  9. ரொம்ப நிஜம்ங்க.....

    வீட்டு செலவுக்கு, போன மாசத்துல இருந்து, நார்ம்லா கொடுக்குற அமவுண்ட்ல இருந்து, கூடுதலா 25 % ஜாஸ்தி கேட்டு தங்கமணி போராட்டம் பண்றாங்க....

    ReplyDelete
  10. //என் நண்பரின் தங்கை மகள் இப்போதுதான்.. எல்கேஜி போகின்றாள்.... அதற்கு அவர்கள் வசூலித்த தொகை 40,000 ரூபாய்... //

    பரவாயில்லையே கம்மியா இருக்கு...
    கோவையில் முதலில் 50 ஆயிரம், 3 மாதத்திற்கு ஒரு முறை 9000.

    //நான் வாடகை வீட்டில் இருக்கும் போது மாதத்துக்கு கரென்ட் பில் 600 ரூபாய்... //

    எல்லா இடத்திலும் இதே கதிதான்.. என்ன செய்வது தலை விதி...

    //பால் விலையை இப்போதுதான் மெல்ல உயர்த்தி அழகு பார்த்தது ஆளும் அரசு...//

    எப்பவுமே விலை ஏத்திதான் பழக்கும்... இறக்கி பழக்கமில்லை...

    //இரண்டு பேருன்னு சொல்லி வாடகைக்கு வந்து 5,10ன்னு இதுங்க அடிக்கற கூத்து இருக்கே என்று புலம்புவது//

    இது மட்டுமா இராத்திரி 10 மணிக்குள்ள வந்துடனும், வீடடில் சத்தம் போட்டு பேசக்கூடாது, வேகமா நடக்கக்கூடாது... இன்னும் பல...

    ஆபிஸ்ல பாஸ் வந்தாக்கூட எந்திரிக்கறது இல்லை... இவர்களைப் பார்த்தால் கூளை கும்பபிடு போட வேண்டியிருக்கு...

    ReplyDelete
  11. Good post.

    But we should accept the fact that salaries have also been increased, be its a salary of a s/ware engineer, BPO staff, or a manufacturing company mechanical engineer or be a lyricist or be an actor or be a musician or to a tailor or to carpenter.

    If I say the salary paid to Vijay, Nayandara, Trisha, GV Prakash, Shankar, Prabudeva, Tottta Darani to Rangarao or Sahasranaamam or Kaanchana or kaka radhakrishnan or to MR Raadha , they will also be shocked.

    ReplyDelete
  12. இரண்டு மாதத்திற்கு 200 யூனிட்டா? ஒரு மாதத்திற்கா? அரசு இலவச மின்சாரத்தினை நிறுத்தாமல் நம்மளிடம் வசூலிப்பார்கள். இந்த ஆண்டு முதல் நிறைய மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சி.பி.எஸ்.சி- க்கு மாற போகுது அதனால் கட்டணமும் உயர போகுது. சமச்சீர் கல்வி என்பது அரசாங்க பள்ளிகளில் மட்டும் தான் இருக்க போகுது.

    ReplyDelete
  13. துளசி.. நீங்க சொல்வது போல இரண்டு அல்லது மூணு மாச அட்வான்ஸ் டில்லியில் போதும் தான். ஆனா வருசா வருசம் 10 % வாடகையில் ஏத்திக்கிட்டே போவாங்க.. ஓகேவா///

    ReplyDelete
  14. // எனது பழைய ஹவுஸ் ஓனர் மின்சார உயர்வை பற்றி அரசு பரிசீலிக்கின்றது என்று தினத்தந்தியில் செய்தி வெளியான அடுத்த நாளே காரண்ட பில் மொத்த தொகையில் 2 ரூபாய் உயர்த்தி விடும் நல்லமனதுகாரர் ..//

    ipdi than irukranga most of the houseowners..

    but compared with chennai, bangalore house owners little bit gud.. (but ingayum rent-ku irukravanga veetla yarachum sethu poita 16th day kaariyam mudinchadhum veeta kaali pannidanum nu solra nalla manasu kara house owners-m irukranga ennamo avanga veetla ellam ehave vizhadhu-ndra mathiri), but advances, current bill ellam blore -la paravalla...

    //பொதுவாக வாடகைக்கு விடும் ஹவுஸ் ஓனர்கள்...கொஞ்சம் மனசாட்சியை இலங்கை ராணுவம் போல் பரணில் வைத்து விட்டுதான் சிரித்து பேசுவார்கள்...// - true

    example is gud.. :)

    ReplyDelete
  15. //ஒரு கிலோ பருப்பு விலையை சொன்னால் செத்துப்போன என் அம்மா போட்டோவில் இருந்து இறங்கி வந்து...மார்பில் அடித்துக்கொண்டு மூற்ச்சையாகி விடுவாள்...//

    நிஜம் , எங்க flat owner சொல்லாம கொல்லாம 1000 எதிட்டாறு . 11000 மாசத்துக்கு அழுறோம். sharing 2200 . ரத்தக்கண்ணீரே வரும் . மின்சார கொள்ள மட்டும் இல்ல .

    ReplyDelete
  16. உண்மைதான் ஜாக்கி, அந்த ஆயிரத்தில் ஒருத்தி சூப்பரோ சூப்பர்.. யாரு அந்த ஹேரோயின்?

    ReplyDelete
  17. ஜாக்கி,

    இந்த வீட்டு அட்வான்ஸ் தொகை பற்றிச் சொல்ல ஒன்னும் இல்லையா?

    சென்னையில்தான் ஒரே அட்டகாசம். 10 மாத வடகை அட்வான்ஸ் தரணும். காலி செய்யணுமுன்னா பத்து மாசம் முன்பே நோட்டீஸ் கொடுக்க முடியுதா?

    வட இந்தியாவில் குறிப்பாக டெல்லி யில் ரெண்டு மாச வாடகைதான் அட்வான்ஸ். சண்டிகர் நகரில் இன்னும் சூப்பர். ஒரே மாத வாடகை அட்வான்ஸ்.

    நான் அங்கேதான் போய் இருக்கப்போறேன்:-)--//



    இன்னும் எழுத நிறைய விஷயங்கள் இருக்கு டீச்சர்... அதுக்கு தனி பதிவே போடறேன்...

    இது கரண்ட் பில் திடிர்னு எறிடுச்சின்னா... வாடகை வீட்ல இருக்கறவங்க கஷ்டத்தை பதிவு பண்ண ஒரு பதிவு அவ்வளவே...

    நன்றி டீச்சர்...

    அட்வான்ஸ் கொடுமை சென்னையில் சகிக்க முடியாத அளவுக்கு அராஜகம் இருக்கு...

    ReplyDelete
  18. இங்க பெங்களுர்ல இரண்டு மாதத்திற்கு முன்னாடிய மின் கட்டணம் ஏறிடிச்சு//

    அப்படியா... அப்ப இந்தியா முழுதும் ஏத்தறாங்க போல இருக்கு....

    ReplyDelete
  19. உண்மைதான்./

    நன்றி சைவ கொத்து பரோட்டா...

    ReplyDelete
  20. /பருப்பு வகைகள் எல்லாம் ஆன்லைன் வர்த்தகத்தில் சேர்ந்து கொண்டு போடும் கும்மாளம் இருக்கின்றதே

    இந்த மாதிரி ஒரு கமெண்ட் போட, வால்பையன் டென்ஷனாகிவிட்டார் :)//அப்படியா???

    ReplyDelete
  21. 200 யூனிட்
    ஒரு பிரிட்ஜ், டிவி, வாஷிங் மெஷின் இருந்தாலே போதும், 200 யூனிட்டுக்கும் மேலே எகிறி விடும் :(// உண்மைதான் பின்னோக்கி... ஒரு மாசத்துக்கு 100 யூனிட் அவ்வளவுதான் கவர்மென்ட் கொடுக்கற கெப்பாசிட்டி...

    ReplyDelete
  22. ஆமா வீட்டு அட்வான்ஸ் பத்தி ஒண்ணுமே சொல்லலையே சேகர்

    :)//

    தேனம்மை அது ஒரு லட்ச ரூபா வயிற்று எரிச்சல்... அதுக்கு தனி பதிவு..

    ReplyDelete
  23. உன்மைதான் சார், வீட்டு உரிமையாளர்கள் பண்ற ரவுசு தாங்க முடியாதுதான்.//

    நன்றி ராம் திருப்பூர்...

    ReplyDelete
  24. நான் இருக்குற வீட்ல யூனிட்டுக்கு 5 ருபாய் வாங்குறானுங்க. என்ன பண்றது ?//
    தினேஷ் இந்த மாசத்துல இருந்து இன்னும் அதிகமாகும் பாருங்க...

    ReplyDelete
  25. ரொம்ப நிஜம்ங்க.....

    வீட்டு செலவுக்கு, போன மாசத்துல இருந்து, நார்ம்லா கொடுக்குற அமவுண்ட்ல இருந்து, கூடுதலா 25 % ஜாஸ்தி கேட்டு தங்கமணி போராட்டம் பண்றாங்க....//

    கபிலன் தங்கமணி என்ன செய்வாங்க பாவம்...

    ReplyDelete
  26. பரவாயில்லையே கம்மியா இருக்கு...
    கோவையில் முதலில் 50 ஆயிரம், 3 மாதத்திற்கு ஒரு முறை 9000.

    //நான் வாடகை வீட்டில் இருக்கும் போது மாதத்துக்கு கரென்ட் பில் 600 ரூபாய்... //

    எல்லா இடத்திலும் இதே கதிதான்.. என்ன செய்வது தலை விதி...
    //

    சங்கவி ரொம்ப நொந்து போய் எழுதி இருப்பதை என்னால் உணர முடிகின்றது..

    ReplyDelete
  27. மிகவும் சிரமம் தான். புரிந்துக் கொள்ளக்கூடிய நிலையில் அரசும் இல்லை, வீட்டுச் சொந்தக்காரர்களும் இல்லை.

    வீட்டு சொந்தக்காரர்கள் இதை கணக்கில் கொள்ளாவிட்டால் அவர்களது கணக்கு இடிக்குமே.

    ReplyDelete
  28. If I say the salary paid to Vijay, Nayandara, Trisha, GV Prakash, Shankar, Prabudeva, Tottta Darani to Rangarao or Sahasranaamam or Kaanchana or kaka radhakrishnan or to MR Raadha , they will also be shocked.//
    நன்றி குப்பன் உண்மைதான்...
    லட்சங்களில் சம்பளம் வாங்குபவர்களுக்கு எந்த கவலையும் இல்லை.. என் கவலை அன்னாடம் காட்சியாக... குடும்பம் நடத்துபவர்களை பற்றியதுதான்...

    காக்கா ராதாகிருஷ்ணன் நிச்சயம் மயக்கம் போட்டு அஜக்தா... என்பார்..

    ReplyDelete
  29. இரண்டு மாதத்திற்கு 200 யூனிட்டா? ஒரு மாதத்திற்கா? அரசு இலவச மின்சாரத்தினை நிறுத்தாமல் நம்மளிடம் வசூலிப்பார்கள். இந்த ஆண்டு முதல் நிறைய மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சி.பி.எஸ்.சி- க்கு மாற போகுது அதனால் கட்டணமும் உயர போகுது. சமச்சீர் கல்வி என்பது அரசாங்க பள்ளிகளில் மட்டும் தான் இருக்க போகுது.//

    இரண்டு மாசத்துக்கு 200 யூனிட் அமுதா அவர்களே... நீங்கள் சொல்வது உண்மைதான் சமச்சீர் கல்வியை பொறுத்தவரை...

    ReplyDelete
  30. துளசி.. நீங்க சொல்வது போல இரண்டு அல்லது மூணு மாச அட்வான்ஸ் டில்லியில் போதும் தான். ஆனா வருசா வருசம் 10 % வாடகையில் ஏத்திக்கிட்டே போவாங்க.. ஓகேவா///

    இங்கயும் அப்படித்தான்10 பர்சண்ட் மாத மாதம் இன்கிரிஸ்

    ReplyDelete
  31. but compared with chennai, bangalore house owners little bit gud.. (but ingayum rent-ku irukravanga veetla yarachum sethu poita 16th day kaariyam mudinchadhum veeta kaali pannidanum nu solra nalla manasu kara house owners-m irukranga ennamo avanga veetla ellam ehave vizhadhu-ndra mathiri), but advances,


    உண்மைதான் சஞ்சனா... என் மாமியார் வீடு மடிவாலாவில் இருக்கின்றது...5500க்கு போன சிங்கிள் பெட்ரூம்... இப்போது வருஷத்துக்கு 10 பர்சென்ட் ஏற்றி 6500க்கு வந்து இருக்கின்றது...அந்த விட்டை பார்த்தால் உங்களுக்கே வயிற்று எரிச்சலாக இருக்கும்...

    16ம் நாள் காலி செய்வது கொடுமையிலும் கொடுமை... நல்லகதிக்கே போகமாட்டானுங்க..

    நீங்க பெங்களுரா? பின்னுட்டத்துக்கு நன்றி

    ReplyDelete
  32. /ஒரு கிலோ பருப்பு விலையை சொன்னால் செத்துப்போன என் அம்மா போட்டோவில் இருந்து இறங்கி வந்து...மார்பில் அடித்துக்கொண்டு மூற்ச்சையாகி விடுவாள்...//

    நிஜம் , எங்க flat owner சொல்லாம கொல்லாம 1000 எதிட்டாறு . 11000 மாசத்துக்கு அழுறோம். sharing 2200 . ரத்தக்கண்ணீரே வரும் . மின்சார கொள்ள மட்டும் இல்ல .//

    நன்றி மதார்...

    சொல்லிட்டே ஏத்தினாலும் நாம ஒன்னும் செய்ய முடியாது... மீறி கேட்டா? இன்னம் மூனு மாசத்துல வீடு காலி பண்ணிக்கேங்கன்னு சொல்லிடுவாங்க...

    அதுக்கப்புறம் வீடு தேடி செட்லாவறதும் வீடு காலி பண்ணறதும் நினைக்கறப்பவே உடம்பு நடுக்குது...

    ReplyDelete
  33. உண்மைதான் ஜாக்கி, அந்த ஆயிரத்தில் ஒருத்தி சூப்பரோ சூப்பர்.. யாரு அந்த ஹேரோயின்?///

    யோவ் அசோக்கு உன்க்கு மெய்யாலுமே யாருன்னு தெரியாதா?

    ReplyDelete
  34. மிகவும் சிரமம் தான். புரிந்துக் கொள்ளக்கூடிய நிலையில் அரசும் இல்லை, வீட்டுச் சொந்தக்காரர்களும் இல்லை.

    வீட்டு சொந்தக்காரர்கள் இதை கணக்கில் கொள்ளாவிட்டால் அவர்களது கணக்கு இடிக்குமே.//
    நன்றி இராதாகிருஷ்னன்... வருகைக்கும் கருத்துக்கும்..

    ReplyDelete
  35. என்னண்ணே பண்றது இலவசத்திட்டங்களுக்கு இதுமாதிரி ஏதாவது செஞ்சித்தான் ஆகனும்........ வழக்கம் பொல் நாம் புலம்பித்தான் ஆகனும்......

    இன்னொரு மேட்டர் உங்களுக்கு தெரிநெதிருக்கும்....மறைமுக பஸ்கட்டண உயர்வு ......இப்போ சென்னையில் ஓடிக்கொண்டிருக்கும் மாநகரப்பேருந்துகளில் 50சதவீதத்திற்கும் மேல் சொகுசு பேருந்துகள்தாம்.............அதையும் முனகி கொண்டே ஏற்று கொண்ட நம்மால் இதையும் ஏற்றுதான் ஆகனும்

    ReplyDelete
  36. அட வீட்டுக்காரர்கள் மின் கட்டணத்தை இப்படி எல்லாம் வசூலிக்கிறார்களா? தெரியவே இல்லையே (இனி நானும் இந்த ஐடியாவை பயன்படுத்தலாம்னு நினைக்கிறேன் :) சும்மா பேச்சுக்கு).

    வீட்டுக்காரர்களை மட்டுமே குறை சொல்வதில் எந்த பயனும் இல்லை. வாடகைக்கு வருபவர்களும் பல பிரச்சினைகளை தருகின்றனர். அதைப்பற்றியும் கொஞ்சம் சொல்லியிருக்கலாமே!

    ReplyDelete
  37. அண்ணே சூபரான பதிவு , ஓட்டுக்கள் நேத்தே போட்டாச்சு, அதே குரோம்பேட் ஸ்கூலில் தான் என் மகளும் படிக்கிறா,அதுக்கே படு கிராக்கி.
    பணம் கட்ட முடியும்னால் தான் அப்ளிகேஷனே குடுப்பாங்க.
    ===============
    மின்கட்டணம் உயந்ததுன்னா இந்த ஆட்சிக்கு அவப்பெயர் நிச்சயம்,மக்களுக்கு எவ்ளோ இலவசம் குடுத்தாலும் பிரயோசனம் இல்லை, கடை நிலை மனிதனையும் நிச்சயம் பாதிக்கும்.வாடகைக்கு இருப்போர் ஒரு யூனிட்டுக்கு 9 ரூபாய் கொடுப்பது சாத்தியமா?

    ReplyDelete
  38. நல்லாச் சொன்னீங்க! அருமையான பதிவு!

    ReplyDelete
  39. என் சம்பளம் 5 இலக்கங்களை எத்தன உடனே, நான் வறுமைக் கோட்டுக்கு மேல வந்துட்டேன்னு சந்தோஷப் பட்டேன். ஆனா தலைய நேத்திக்கு மேல வெச்சு வானத்த வெறிச்சுப் பத்தா ஒண்ணுமே தெரியல... வருமைக் கோடு அவ்வளவு உயரத்துக்குப் போய்டுச்சு..
    நல்ல பகிர்வு ஜாக்கி...

    ReplyDelete
  40. இந்த வீட்டு உரிமையாளர்களிடம் வீட்டு வாடகை பாக்கி, நம்ம கொஞ்சம் முறுக்கி தான் போகணும்.
    அப்ப தான் பயம் நம் மேல் வரும்

    ReplyDelete
  41. "இந்த பூனைக்கு இதுவரை யாரும் மணி கட்ட முன் வரவில்லை" உண்மை தான் ஜாக்கி. சினிமாவில் சொல்ற மாதிரி “ இந்த அந்நியாயத்த
    தட்டி கேக்க ஆளெ இல்லயா “

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner