அவதார், சத்தியம்தியேட்டர்,மெரினாபீச்...

இன்றோடு இரண்டு லட்ச ஹிட்ஸ்கள் எமது தளத்துக்கு கிடைத்து இருக்கின்றது... பணிச்சுமை காரணமாக முன்பு போல் என்னால் தொடர்ந்து பதிவு எழுத முடியாவிட்டாலும்... எழுதிய பதிவுக்கு ஓட்டும் பின்னுட்டமும் போட்டு உற்சாக படுத்தும்.. உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

அன்புடன்
ஜாக்கிசேகர்



அவதார் படம் பற்றி எல்லோரும் சகட்டு மேனிக்கு படித்து முடித்து இருப்பீர்கள்..அல்லது பார்த்து முடித்து இருப்பீர்கள்... நேற்று ஒரு நாள் ஷுட்டிங் இல்லை என்பதால் என் மனைவியை ஆபிசில் விட போனேன்... போகும் போதே ஒரு பிட்டை போட்டேன்...

“பாரு உனக்கு 2 டூ10 ஷிப்ட் இருக்கறதால ஒரு படம் கூட பார்க்க முடியலை... கல்யாணத்துக்கு முன்ன தொடர்ந்து 6 மாசம் நைட் ஷோ பார்த்தவன் நானு”

என்று ஏதோ ஒரு பேச்சுக்கு சொல்ல... சட்டென போன் எடுத்தால் மேனேஜருக்கு போன் செய்தால்.... தலைவலி அதிகம் என்றாள் லீவ் வேண்டும் என்றாள்... உடன் வழக்கபட்டது....

மனதிற்க்குள் என்னை திட்டிக்கொண்டேன்... பாரு ஜாக்கி நீ வாயை வச்சிகிட்டு சும்மா இருந்து இருந்தா... அவ பாட்டுக்கு வேலைக்கு போய் இருப்பா... இப்ப பாரு... ஒரு 1000 ரூபாய்க்கு வேட்டு வைக்க போறா பாரு... என்று மனதுள் நினைத்துக்கொண்டேன்...

இந்த படத்தை படம் வெளிவரும் முன்னே நான்எங்கு பார்க்க வேண்டும் என்று ஆசைபட்ட இடம் ஹைதரபாத் மேக்ஸ் தியேட்டர்... அங்கு போய் பார்க்கும் அளவுக்கு பொருளாதார வசதி இடம் கொடுக்காத காரணத்தால் அந்த படத்தை சென்னை சத்தியம் அல்லது ஐநாக்சில் பார்க்க திட்டம் வைத்து இருந்தேன்... இந்த இரு தியேட்டாகள்தான் 3டி என்பதாலும்....

ஹாலிவுட் பாலா வேறு 3டி பற்றி அக்குவேறு ஆணி வேறாக எழுதி தள்ளுவதாலும் அந்த படத்தை கண்டிப்பாக 3டியில் பார்த்தே தீர வேண்டும் என்று சபதம் எடுத்துக்கொண்டேன்....

இரு தியேட்டர்களிலும் டிக்கெட்டை இணையத்தில் செக் செய்தால் இன்னும் 2 நாட்களுக்கு புல் என்று காட்டிக்கொண்டு இருந்தது... இருப்பினும் ஏதாவது கேன்சல் டிக்கெட் வரும் என்ற எதிர்பார்ப்பில் நானும் என் மனைவியும் சத்தியம் தியேட்டர் போனோம்... நம்பிக்கையே வாழ்க்கை அல்லவா???நாங்கள் போகும் போது ஷோ ஆரம்பித்து விட்ட படியால் மனைவி மதியத்துக்கு இரவுக்கு எடுத்க்கொண்டு வந்த சாப்பாட்டை மெரினா பீச்சில் வைத்து சாப்பிடுவோம் என்று என் மனைவி சொல்ல... நான் சேப்பாக்கம் பறக்கும் ரயில் நிலையத்துக்கு அருகே சாப்பிடலாம்.. மரங்கள் அடர்த்தியாக அமைதியாக இருக்கும் என்றேன்... பீச்சுக்கு அழைத்து போய் வேறு வேகு நாட்கள் ஆனதால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் எடுக்க தீர்மாணி்த்து மெரினா பீச் போனோம்...20 கோடி போட்டு அழகு படுத்தியதில் எந்த இடத்திலும் ஒரு நிழற்குடையே இல்லை... ஒரு மரமும் இல்லை... ஒரு மட்டையும் இல்லை...கண்ணகி சிலை பக்கத்தில் மட்டும் தான் மரம் இருக்கின்றது... அங்கு உட்கார்ந்து உடன் பிச்சைகாரர்கள் தொல்லை அதிகம் என்பதால் விவேகானந்தர் இல்லம் எதிரே உட்கார்ந்து சாப்பிட ஆரப்பித்தோம்...

இரண்டவாது உருண்டையை வாயில் வைக்கவில்லை இரண்டு காக்கைள் வந்து எங்கள் அருகில் வந்து உட்கார்ந்து தலையை சாய்த்து சாய்த்து பார்த்துக்கொண்டு இருந்தது... நானோ பராசக்தி சிவாஜி போல ஒரு உருண்டை சாம்பார் சாதம் வைக்க அவ்வளவுதான்.... ஹிட்சக்கின் பேர்ட் படத்தில் வருமே அது போல ஒரு பத்து பதினைந்து காக்கைள் அந்த இடத்தில் அமர்ந்து என் மனைவிக்கு சிறு பயத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்க....

சட்டென பைக் பிரேக்கிட்டு கிரிச்சிடும ஓலி கேட்க.. குழந்தை குழந்தை என்று சிலர் ஒடினார்கள்...அங்கு குழந்தை இல்லை... அந்த பைக் ஒட்டி வந்த பையன் கைகள் நடுங்க பின்னுபுறம் திரும்பி பார்க்க... அந்த இடத்தில் ஒரு பெண் உடல் அசைவற்று அந்த பெண் படுத்துக்கொண்டு இருப்பது போல் இருக்க... இரண்டு பேர் ஒடி் தூக்க.. முயற்ச்சிக்க... தூக்க முடியாமல் இருக்க... நான் சாப்பாடு தட்டை வைத்து விட்டு ஓடினேன்... அது மஞ்சள் கலர் அப்பாச்சி வண்டி... அந்த பெண்ணின் சுடிதார் ஷால் வண்டி சக்கரத்தில் சிக்கி.. வெகு வேகமாக வந்த காரணத்தால் கழுத்து லேசாக அறுபட்டு அந்த பெண் பயத்தில் மூச்சையாகி விட்டால்... எந்த அசைவும் இல்லை... நானும் பயந்து விட்டேன்...

கழுத்தில் இருக்கும் ஷாலை கழட்டி அவளை விடு வித்து வண்டியை விட்டு தூக்கும் போது பார்த்தேன் அந்த பெண்பிள்ளை... உட்கார்ந்த நிலையில் பயத்தில் சிறுநீர் கழித்து விட்டாள்... அதாவது அது தூக்கு போட்டுக்கொள்வதற்க்கு சமம்... அவளை கீழே இறக்கி அவள் கால் கைகளை சிலர் தேய்க்க நான் அவள் முகத்தில் எந்த அசைவும் இல்லை...

நான் அவள் முகத்தில் தண்ணீர் அடிக்க சொன்னேன் ஏனென்றால் என் கை சாப்பாட்டு கையாக இருந்தது....

தண்ணீர் அடிக்க ஆரம்பித்து அவள் சுய நினைவுக்கு வந்த உடன் எல்லோருக்கும் மகிழ்ச்சி.... அவள் ரொம்ப சின்ன பெண் தோற்றம்... காலேஜில் பஸ்ட் இயர் படிக்கலாம்... கையில் காலேஜ் பேக் வைத்து இருந்தாள்... பைக்கி்ல் ஏற்றி வந்தவனின் நண்பர்களை பார்த்த போது அவர்கள் காதில் கடுக்கனும், பின்புற முடியில் அலங்காரம் செய்தபடி இருந்தார்கள்.... எல்லோருமே அப்பாச்சி மஞ்சள் கலர் வண்டி வைத்து இருந்தார்கள்...

ரொம்ப சின்ன பெண்..இப்போதுதான் அவ்ள அங்கங்கள் வளர்ச்சி அடைய ஆரம்பித்து இருக்கின்றது... இருப்பினும்அந்த பெண்ணை எப்படியோ கரெக்ட் செய்து விட்டார்கள்......அதன் பிறகு ஒரு ஆட்டோவில் கழுத்து காயத்து வலி தாங்க முடியாமல் வலியின் அவஸ்த்தையின் ஊடே... அவள் ஆட்டோவில் பயணிக்க...
நான் என் மனைவியும் காக்கை கூட்டமும் உட்கார்ந்த இடத்துக்கு வந்து...அவளுக்கு கழுத்து காயத்தை பற்றி சொல்ல...


“ஏங்க இந்த பொண்ணு அவுங்க அப்பா அம்மாகிட்ட என்ன சொல்லி சமாளிக்கும்”?

என்று கேட்ட போது அந்த பெண்ணின் பாயின்ட் ஆப் வியூவில் பார்க்கும் போது ரொம்பவும் மனதுக்கு கஷ்டமாக இருந்தது... பெண் பிள்ளை என்பதால் அந்த கழுத்து காய வடு வேறு காலத்துக்கும் மறக்காது... என்ன செய்வது.. காதல் என்ற ஒற்றை வார்த்தையில் மயங்கி கிடக்கின்றது ...

ஷால் பறப்பதை பலரிடம் எடுத்து சொல்லி இருக்கின்றோம்.. என் மாமியார் சேலை வண்டி சக்கரத்தில் சுற்றி என் மாமனாருக்கு தலைலையில் அடிபட்டு ஒர வாரத்துக்கு விஹெச்எஸ்ல் கோமாவில் இருந்த அனுபவம் எங்களுக்கு உண்டு என்பதால் நாங்கள் ஷாலே, படவையோ பின்புறம் உட்கார்ந்து இருக்கும் பெண்ணுக்கு பறந்தால் அதிகம் பயப்படுவோம்... எச்சரிக்கை செய்யவோம்...

கடைசி வரை நிம்மதியாக சாப்பிட முடியவில்லை... மனைவி தேர்ந்து எடுத்த இடத்தை மெச்சி விட்டு, பாரிசில் சில வேலைகளை முடித்து விட்டு மீண்டும் சத்தியம் தியேட்டர் வந்தோம்...

டெம்ரவரி பார்க்கிங்கில் வண்டியை போட்டு விட்டு...கையில் டிக்கெட் இல்லாததால் டிக்கெட் கவுண்டருக்கு வரும் எல்லோருடைய கையையும் அவர்கள் அசைவையும்.. மிக உன்னிப்பாக பார்த்துக்கொண்டு இருந்தேன்... சிலர் டிக்கெட் கவுண்டர் அருகில் வரும் போது பாதியில் மடக்கி கேன்சல் டிக்கெட்டுகளை அள்ளினார்கள்...இரண்டு மூன்று டிக்கெட்டுகள் மிஸ்சாக ஒருவர் மூன்று டிக்கெட்டுகள் வைத்துக்கொண்டு விற்க்க வர நான் மூன்றையும் வாங்கி ஒன்றை விற்று விட்டு தியேட்டருக்குன் நானும் என் மனைவியும் சென்றோம்....

சத்தியம் தியேட்டரில் செரினாவில் டிக்கெட் கிடைத்தது...3டி என்பதால் டிக்கெட்டை கிழித்து கண்ணாடி கொடுத்து அனுப்ப சற்று நேரம் பிடிக்க அதற்க்குள் படத்தை போட்டு விட்டார்கள்... சனியன் பிடிச்சவர்கள்....120 ரூபாய் டிக்கெட் கண்ணாடிக்கு 20 ரூபாய் என்று ஒரு டிக்கெட் 140ரூபாய்... கொடுத்து படம் ஓடி நான் எதுக்கு பார்க்கனும்? நான் சரியான நேரத்துல அங்க இல்லைன்னா சொல்லலாம்.. ஆனா நான் குத்து கல்லு மாதிரி அங்கதானே இருந்தேன்.. ரெண்டு கதவு வழியா அனுப்பிச்சி இருந்தா எந்த பிரச்சனையும் இல்லை...யோசிக்குமா? சத்தியம்... நிர்வாகம்?????

இடைவேளையில் மக் பாப்கான் வாங்கினேன் ... விலை அறுபது ரூபாய் என் செத்துப்போன அம்மாவிடம் பாப்கான் விலையை சொன்னால்... உயிரோடு வந்து செருப்பை கழட்டி அடிப்பார்கள்.... ஒரு படம் சத்தியத்தில் பார்க்க இவ்வளவு யோசனைகளோடு இருக்க தினமும் எதை பற்றியும் வாரத்துக்கு 4 படம் சத்தியத்தில் பார்ப்பவர்க்ளை என்ன சொல்வது... வெகு சீக்கரத்தில் வளர வேண்டும்.....தினமும் சத்தியத்தில் படம் பார்க்கும் அளவுக்கு வாழ்க்கை பொருளாதாரம் உயர வேண்டும்...

நான் 3டியில் பார்க்கும் மூன்றாவது படம் இது.... முதல் படம் மைடியர் குட்டிச்சாத்தான்... இரண்டாவது படம் சில மாதங்களுக்கு முன் ஹைதராபாத்தில் மேக்ஸ் தியேட்டரில் பார்த்த கிருஸ்மஸ் கோரல் எனும் படம்...தற்போது இந்த படம்... 3டி படம் பார்க்கும் போது படம் ஓடும் போது 3டி கண்ணாடியை எடுத்து விட்டு படம் பார்க்கும் எல்லோரையும் பாருங்கள்.... எல்லோரும் பார்வை செக் செய்ய கண் கண்ணாடிக்கு வந்தது போல் இருப்பார்கள்... உங்கள் மனைவி குழந்தைகள் கூட தோற்றத்தில் உங்களிடம் அன்னியபட்டு இருக்கலாம்...


அவதார் படம் பெரிதாய் கவரவில்லை... இது பார்த்தே தீர வேண்டிய படம் என்பதில் சந்தேகம் இல்லை.. ஆனால் ஜேம்ஸ் கேமரோனின் இது போன்ற எண்ண வீச்சுகளை... அபைஸ் படத்தில் இருந்தே பார்த்துக்கொண்டு வருகின்றேன்... அதனால் பெரிய ஆச்சர்யங்கள் இல்லை என்றாலும் அந்த கற்பனை கலர்களுக்கும் ...அந்த காட்டின் இரவு நேர காட்சிகளுக்கும்...அதற்க்கான உழைப்புக்கும் அவதார் பட குழுவினருக்கு ஹேட்ஸ் ஆப்... படத்தில் பெரும்பான்மையான காட்சிகளில்.... நாவி கதாநாயாகியின் வெற்று சிறு மார்பு தரிசனம் கொடுத்துக்கொண்டே இருக்கின்றது........

இரவு படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டு அந்த கழுத்து அறுபட்ட சிறு பெண்ணின் நினைவுகளோடு நான் தூங்க...கனவில் அந்த சிறு பெண்ணின் அப்பா அந்த பெண்ணை எட்டி எட்டி உதைத்துகொண்டு இருப்பது போல் கனவு வந்து தொலைந்தது....



அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

44 comments:

  1. இப்படி நடக்கலாம் என்று பல சமயங்களில் நான் பயப்படுவதுண்டு சாலையில் பறக்கும் சால்களையும் பைக்குகளையும் காணும்போது......

    இதில் கொடுமை என்னவென்றால் மணம் ஆனா பெண்களும் தங்கள் சால்களை காற்றில் பறக்க விடுவதுதான்......

    நெறைய பேர்களுக்கு சைகை மூலம் தெரியப் படுத்திவிட்டு செல்வேன் சாலையில் பயணிக்கும்போது.....

    சினிமாவில் வேண்டுமானால் கதைநாயகி சால் பறக்கவிட்டு பைக்கில் காற்றில் கூட பறக்கலாம்...
    யதார்த்தத்துக்கு சரிப்பட்டு வரலேன்னா இழப்புகள் அதிகமாகும்...
    புரிஞ்சிகிட்டா சரி...
    கண்டிப்பா அந்த பொண்ணு இனி அப்பசே ல பயணிக்க மாட்டான்னு நம்பறேன்..!

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு.

    பெண்கள் நிலைமையை நினைத்தால் பாவமாக இருக்கிறது.

    ReplyDelete
  3. சத்யம்ல அரை லிட்டர் வாட்டர் பாட்டில் 20ருபாய், அவதார் படம் பார்க்க நான் செய்த செலவு 300ருபாய். தனியாதான் போனேன், படம் பார்த்து இவ்வளவு செலவாச்சுன்னு மனைவிகிட்ட சொன்னேன் செம டோஸ் கிடச்சுது பாஸ். 3D ஆசையால் வந்த வினை.

    அந்த பொண்ணு நிலைமை நினைச்சாதான் ஒரு பக்கம் கஷ்டமா இருந்தாலும், வயசு கோளறு என்னத்த சொல்ல ?

    ReplyDelete
  4. இது எல்லா இடத்திலும் நடப்பதுதான் உங்கள் பார்வையில் பல ஆங்கிளில் பார்த்ததை கச்சிதமாக எழுதிவிட்டீர்கள் ஜாக்கி சார்... அந்த விபத்து அந்த பெண்ணை தப்பிக்க விட்டதுன்னு நினைக்கிறீங்களா ...காப்பாத்திடிசின்னு ..நினைக்கிறீங்களா?? any how good post,,:))

    ReplyDelete
  5. அருமையான அனுபவம் உங்களுக்கு

    ReplyDelete
  6. திரைப்படங்களில் நடக்கும் சம்பவங்கள் போல இருக்கிறது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம்.

    ReplyDelete
  7. பைக் பெண், படம் இரு நிகழ்வுகளையும் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கல் சேகர்.

    ReplyDelete
  8. விபத்தைப் பற்றி விவரித்த விதம் நேரில் பார்த்தது போல இருந்தது. அந்த பெண் நன்றாக இருப்பாள் என நம்புவோம்.

    3 டிக்கெட் இருக்கும் போது 3ம் வாங்கி ஒன்றை விற்ற உங்களின் Presence of Mind வியப்படையச் செய்தது. நானாக இருந்தால் 2 டிக்கெட் போதும் என சொல்லி, அவன் விற்க தயங்கி.....


    நாவி கதாநாயகியையும் விடவில்லை நீங்கள் :-)

    3D கண்ணாடியை திருப்பிக் கொடுத்துவிட வேண்டுமா ?

    ReplyDelete
  9. 2 லட்சம் ஹிட்ஸ் சாதனைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. பாவம் அந்த பெண்....

    நீங்க நல்லா நோட் பண்றீங்க அண்ணே...

    ReplyDelete
  11. hmmmm fine sir.. antha ponnu pavam....
    then ungaludaya eluthu thiramai great

    ReplyDelete
  12. Hats off for Two Lakh hits. Nice Wrinting. Go Ahead.

    ReplyDelete
  13. அந்த பெண் பாவம் .................................. அவளும் கஷ்டப்பட்டு உங்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டால்.......

    ReplyDelete
  14. இது தாங்கள் மூன்று லட்சத்தை மிகவிரைவில் அடைவதற்கு வாழ்த்து ................

    ReplyDelete
  15. இரண்டு லட்சத்திற்கு வாழ்த்துக்கள்..
    நானும் வரும் ஞாயிறு அவதார்(சத்யமில்) மற்றும் மெரீனா போலாமுன்னு இருக்கேன்.. :)

    ReplyDelete
  16. 20 கோடி போட்டு அழகு படுத்தியதில் எந்த இடத்திலும் ஒரு நிழற்குடையே இல்லை.

    காதில் கடுக்கனும், பின்புற முடியில் அலங்காரம்

    அங்கங்கள் வளர்ச்சி அடைய ஆரம்பித்து இருக்கின்றது

    வெற்று சிறு மார்பு தரிசனம் கொடுத்துக்கொண்டே இருக்கின்றது.......

    ennnaaaaaaaaa observation poweruuuu?

    Good coverage and nice flow.

    அந்த பெண்ணை எட்டி எட்டி உதைத்துகொண்டு இருப்பது போல் கனவு....is it dream or wish? (I wish she should beaten...at least for carelessness...anyway we cannot stop the feeling in that age)

    ReplyDelete
  17. Wishes for 2 lakhs hits...your followers number are also increasing steadily. When I started to read your blog.. I am your 100th follower..now 292. Your regular and quality effort will take your blog to next stage.

    ReplyDelete
  18. 2 லட்சம் ஹிட்ஸ் சாதனைக்கு வாழ்த்துக்கள்.


    பெண்களுக்கான எச்சரிக்கை

    ReplyDelete
  19. ஜாக்கி அண்ணே கலக்கலான அனுபவ பதிவு, கூடவே இழையோடும் அறக்கோபம்,நக்கல்,மிகவும் ரசித்தேன். வாக்குகள் சேர்த்துவிட்டேன்.

    ReplyDelete
  20. சூப்பர் தல..நல்ல எழுதியிருக்கிங்க..

    ReplyDelete
  21. பெண்கள் எல்லாம் பேசாம் ஜீன்ஸுக்கு டாப்ஸூக்கும் மாறடிறது நல்லது.

    ReplyDelete
  22. நீங்க எழுதுறதே ஒரு படம் பாக்குற போல இருக்கு ...........

    ReplyDelete
  23. ////சில மாதங்களுக்கு முன் ஹைதராபாத்தில் மேக்ஸ் தியேட்டரில் பார்த்த கிருஸ்மஸ் கோரல் எனும் படம்///////

    அத்தனை.. எழுதின பின்னுமா அந்த பாடாவதி படத்துக்குப் போனீங்க?? :(

    ஒருவேளை அந்தப் பதிவை படிக்காம போய்ட்டீங்களா ஜாக்கி!!!
    =

    இரண்டு லட்சத்துக்கு வாழ்த்துகள்!! :) :)

    ReplyDelete
  24. அது இன்னாய்யா இது.. எப்பப் பார்த்தாலும் வொய்ப் கூடவே மெரீனா பீச்சுக்குப் போற..?

    லூஸா நீயி..?

    ReplyDelete
  25. ஹாய் ஜாக்கி ,நீண்ட நாள் ஆகிவிட்டது உங்களுக்கு எழுதி. மெரினாவில் உங்கள் அணுகுமுறை, சத்யம் தியேட்டரின் காட்சிகள் பிரமாதம். சாதாரண தியேட்டர் நிகழ்ச்சி கூட நீங்கள் எழுதும் போது ரசிக்கும் படி அழகாக அமைந்துவிடும்.2 லட்சம் ஹிட்ஸ் சாதனைக்கு இதுதான் காரணம்.

    //அது இன்னாய்யா இது.. எப்பப் பார்த்தாலும் வொய்ப் கூடவே மெரீனா பீச்சுக்குப் போற..?

    லூஸா நீயி..?//

    உண்மைத்தமிழனின் பின்னூட்டம் படீர்யென்று சிரிப்பாய் வரவழைத்தது.

    ReplyDelete
  26. சினிமாவில் வேண்டுமானால் கதைநாயகி சால் பறக்கவிட்டு பைக்கில் காற்றில் கூட பறக்கலாம்...
    யதார்த்தத்துக்கு சரிப்பட்டு வரலேன்னா இழப்புகள் அதிகமாகும்...
    புரிஞ்சிகிட்டா சரி...
    கண்டிப்பா அந்த பொண்ணு இனி அப்பசே ல பயணிக்க மாட்டான்னு நம்பறேன்..!//

    நன்றி லெமுரியன்.. விரிவான பின்னுட்டத்துக்கு... நானும் அப்படிதான் நினைக்கி்ன்றேன்..

    ReplyDelete
  27. நல்ல பகிர்வு.

    பெண்கள் நிலைமையை நினைத்தால் பாவமாக இருக்கிறது.//

    நன்றி அக்பர் சில நேரத்துல பாவமாதான் இருக்கு...

    ReplyDelete
  28. சத்யம்ல அரை லிட்டர் வாட்டர் பாட்டில் 20ருபாய், அவதார் படம் பார்க்க நான் செய்த செலவு 300ருபாய். தனியாதான் போனேன், படம் பார்த்து இவ்வளவு செலவாச்சுன்னு மனைவிகிட்ட சொன்னேன் செம டோஸ் கிடச்சுது பாஸ். 3D ஆசையால் வந்த வினை.

    அந்த பொண்ணு நிலைமை நினைச்சாதான் ஒரு பக்கம் கஷ்டமா இருந்தாலும், வயசு கோளறு என்னத்த சொல்ல ?//

    நன்றி ரெமோ.. கொள்ளையடிக்கும் தியேட்டர் என்றாலும் சுத்தமா வச்சிருக்கானுங்க...

    ReplyDelete
  29. இது எல்லா இடத்திலும் நடப்பதுதான் உங்கள் பார்வையில் பல ஆங்கிளில் பார்த்ததை கச்சிதமாக எழுதிவிட்டீர்கள் ஜாக்கி சார்... அந்த விபத்து அந்த பெண்ணை தப்பிக்க விட்டதுன்னு நினைக்கிறீங்களா ...காப்பாத்திடிசின்னு ..நினைக்கிறீங்களா?? any how good post,,:))///



    நான் காப்பாத்திடுச்சின்னு நினைக்கிறேன் பலா பட்டறை...

    ReplyDelete
  30. நன்றி ஸ்டார்ஜன்..

    நன்றி ராம் திருப்பூர்...

    நன்றி பின்னோக்கி ஹிட்ஸ் வாழ்த்துக்கு..

    ReplyDelete
  31. பைக் பெண், படம் இரு நிகழ்வுகளையும் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கல் சேகர்//

    நன்றி கோவி கண்ணன்.. மிக்க நன்றி... ஊர்ல எல்லோரும் சவுக்கியமா?

    ReplyDelete
  32. 3D கண்ணாடியை திருப்பிக் கொடுத்துவிட வேண்டுமா//

    கண்டிப்பாக கொடுத்து விட வேண்டும்..
    நன்றி பின்னோக்கி.. தொடர் வாசிப்புக்கு பின்னுட்டத்துக்கும் என் நன்றிகள்..

    ReplyDelete
  33. நன்றி ஜெட்லி

    நன்றி ராஜாராமன்

    நன்றி இராஜபிரியன்...

    நன்றி வினோத்..

    ReplyDelete
  34. இரண்டு லட்சத்திற்கு வாழ்த்துக்கள்..
    நானும் வரும் ஞாயிறு அவதார்(சத்யமில்) மற்றும் மெரீனா போலாமுன்னு இருக்கேன்.. :)//


    நன்றி மணி போயிட்டு வா என் சாய்...

    ReplyDelete
  35. அந்த பெண்ணை எட்டி எட்டி உதைத்துகொண்டு இருப்பது போல் கனவு....is it dream or wish? (I wish she should beaten...at least for carelessness...anyway we cannot stop the feeling in that age)//

    நன்றி ராஜ்குமார்.. நிறைய பதில் போட்டும் என்னால் பி்ன்னுட்டம் இட முடியவில்லை.. மன்னிக்கவும்

    ReplyDelete
  36. Wishes for 2 lakhs hits...your followers number are also increasing steadily. When I started to read your blog.. I am your 100th follower..now 292. Your regular and quality effort will take your blog to next stage.//

    நன்றி நீங்க ராஜ்குமார் தானே??? உங்கள் வாழ்த்துக்கு நன்றி

    ReplyDelete
  37. 2 லட்சம் ஹிட்ஸ் சாதனைக்கு வாழ்த்துக்கள்.


    பெண்களுக்கான எச்சரிக்கை//
    நன்றி சதிஷ்குமார் மிக்க நன்றி பின்னுட்டுத்துக்கு

    ReplyDelete
  38. ஜாக்கி அண்ணே கலக்கலான அனுபவ பதிவு, கூடவே இழையோடும் அறக்கோபம்,நக்கல்,மிகவும் ரசித்தேன். வாக்குகள் சேர்த்துவிட்டேன்.//

    நன்றி கார்த்தி மிக்க நன்றி

    ReplyDelete
  39. சூப்பர் தல..நல்ல எழுதியிருக்கிங்//
    நன்றி கோபி...

    ReplyDelete
  40. பெண்கள் எல்லாம் பேசாம் ஜீன்ஸுக்கு டாப்ஸூக்கும் மாறடிறது நல்லது.//

    உண்மை குடுகுடுப்பை நீங்கள் சொல்வது சரிதான் அது பாதுகாப்பான உடை என்றால் அது மிகையாகாது...

    ReplyDelete
  41. ////சில மாதங்களுக்கு முன் ஹைதராபாத்தில் மேக்ஸ் தியேட்டரில் பார்த்த கிருஸ்மஸ் கோரல் எனும் படம்///////

    அத்தனை.. எழுதின பின்னுமா அந்த பாடாவதி படத்துக்குப் போனீங்க?? :(

    ஒருவேளை அந்தப் பதிவை படிக்காம போய்ட்டீங்களா ஜாக்கி!!!
    =

    இரண்டு லட்சத்துக்கு வாழ்த்துகள்!! :)//

    என்ன பண்ணறது பாலா

    ஐமேக்ஸ் தியேட்டர் அதுக்கு அப்புறம் எப்ப வாய்ப்பு கிடைக்கும்னு தெரியலை... மதனால எந்த படமா இருந்தாலும் போய் தொலைய வேண்டிய கட்டாயம் என்ன செய்ய??

    நன்றி பாலா வாழ்த்துக்கு...

    ReplyDelete
  42. அது இன்னாய்யா இது.. எப்பப் பார்த்தாலும் வொய்ப் கூடவே மெரீனா பீச்சுக்குப் போற..?

    லூஸா நீயி..?//

    என்ன பண்ணறது.. வர்ரவங்களை தானே அழைச்சிகிட்ட போக முடியும்...??,

    ReplyDelete
  43. ஹாய் ஜாக்கி ,நீண்ட நாள் ஆகிவிட்டது உங்களுக்கு எழுதி. மெரினாவில் உங்கள் அணுகுமுறை, சத்யம் தியேட்டரின் காட்சிகள் பிரமாதம். சாதாரண தியேட்டர் நிகழ்ச்சி கூட நீங்கள் எழுதும் போது ரசிக்கும் படி அழகாக அமைந்துவிடும்.2 லட்சம் ஹிட்ஸ் சாதனைக்கு இதுதான் காரணம்.//

    ஆமான் கக்கு மாணிக்கம் நானே கேடக்கனும் நினைச்சேன் எங்க போன இவ்வளவு நாள் அதை சொல்லிபுடு..

    நன்றி இப்போதைய வருகைக்கு

    ReplyDelete
  44. அருமையான பகிர்வு ஜாக்கி சார்.

    //அது இன்னாய்யா இது.. எப்பப் பார்த்தாலும் வொய்ப் கூடவே மெரீனா பீச்சுக்குப் போற..?//

    அடுத்த வாட்டி போகும் போது இவரை கூட்டிட்டு போங்க.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner