Uppu Karuvadu -2015 movie review | உப்பு கருவாடு திரைவிமர்சனம்.









உப்புக்கருவாடு.


2004  ஆம் ஆண்டு அழகிய தீயே திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர்…  இயக்குனர்  ராதாமோகன்…

2004 ஆம் ஆண்டு நானும் எனது நண்பர் சுபாஷும் பாண்டி ராஜா  தியேட்டரில்  முதல்   நாள் முதல் காட்சிக்கு சென்று  அழகிய தீயே படத்தை பார்த்தோம்… 

காரணம் அந்த படத்தின் போஸ்டர்கள்  படத்தை பார்க்க வேண்டும்  என்ற எண்ணத்தை தோற்றுவித்தது எனலாம்…  இத்தனைக்கும் பெரிய ஸ்டார் காஸ்ட் அந்த படத்தில் இல்லை…

THIS NOVEMBER HEAVY RAIN AT CHENNAI மறக்க முடியாத மாமழை…23/11/2015





23/11/2015 அன்று இரண்டு மணிக்கு  ஆரம்பித்த மழை… இரவு பதினோரு மணிவரை கொட்டிதீர்க்க… 
முப்பது நாளில் பெய்ய வேண்டிய மழை மூன்று நாளில் பேய்ந்து விட்டது என்று அம்மா சொன்னதற்கு ஆமாம் சாமி  போட்ட போது புளியோதரையும் பொங்கலும் மழைக்கு  வீட்டில்  உட்கார்ந்து சுட சுட சாப்பிட்டவர்கள் எல்லாம் திங்கட்கிழமை வேலை  நேரம் எலிப்பொறியில் சிக்கியது போல   சிக்கிக்கொண்டார்கள்…

007 bond new movie Spectre review by jackiesekar | ஸ்பெக்ட்ர் திரைவிமர்சனம்






ஸ்பெக்ட்ர்..

 அங்க சுத்தி இங்க சுத்தி அடி மடியிலேயே கை வச்சானாம் என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள்… இந்த ஒன்லைன்தான் தற்போது வெளியாகி இருக்கும் பாண்ட் திரைப்படத்தின் ஒன்லைன் கதை.
உலகம் எங்கும் பெரும் எதிர்பார்ப்பை  ஏற்ப்படுத்திய பாண்ட் சீரிஸ்சின் 24 வது திரைப்படம் இந்த  ஸ்பெக்டர்…


Oru Naal Iravil tamil movie Review by jackiesekar | ஒரு நாள் இரவில் திரைவிமர்சனம்



சின்ன சபலம்… பெரிய பிரச்சனைக்கு ஊரு விளைவிக்கும்…. தென்மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மாவட்டம் அது..

 நேற்று வரை ஊரே கொண்டாடிய நல்லாசிரியர் அவர்… அவரை போன்ற ஒரு நேர்மையாளரை பார்க்கவே முடியாது… கணக்கு பாடத்தை அவர்  எடுக்க ஆரம்பித்தால் மர மண்டைக்கும் புரியும்  அளவுக்கு எடுப்பதில் வல்லவர்… அரசு ஒதுக்கும் நிதிகளை தன் வீட்டுக்கு ஒதுக்காத மாமனிதர், வயதுக்கு வந்த இரண்டு பிள்ளைகள்… ஆனாலும் காமம் என்பது பொல்லாதது.. அதை அடக்கி ஆள்வது  சிரமத்திலும் சிரமமான விஷயம்….  கொஞ்சம் யோசிக்கா விட்டாலும் முச்சந்தியில்  நிறுத்திவிடும் வல்லமை அதற்கு உண்டு.


chennai Kasimedu fishing harbor place to visit | must visit place Chennai | சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுகம்





  சென்னை திரையரங்குகளில் பத்து ரூபாய்  பாப்கானை…. காம்போ என்ற பெயரில் மனசாட்சியே இல்லாமல் 110 ரூபாய்க்கும், அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலை எம்ஆர்பி விலையை  விட அதிகமாக 40 ரூபாய்க்கு விற்கும் திரையரங்கிற்கு  மாதம் இரண்டு முறை  பொழுது போக்கிற்காக  குடும்பத்தோடு சென்றால் மாத பட்ஜெட்டில் நடுத்தர குடும்பத்து தலைவர்கள் தலையில் துண்டு போட்டுக்கொள்ள  வேண்டும்… திருட்டி விசிடியில் படம் பார்ப்பது மனித தன்மையற்ற செயல் என்று டுவிட்டரில் அலறும் நடிகர்கள் இந்த பகல் கொள்ளையை எதிர்த்து ஒரு வார்த்தை பேசுவதில்லை..


happy birthday nayanthara | இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நயன்தாரா.




நயன் என்று தமிழ் ரசிகர்களால்   செல்லமாக அழைக்கும் நயன்தாராவுக்கு இன்று பிறந்தநாள்…இதே நாளில் 1984 ஆம் ஆண்டு பெண்களூருவில் மன்னிக்கவும் பெங்களூருவில்  பிறந்தார் நயன்…  டயானா மரியம் குரியன் என்பது நயனின் இயற்பெயராகும்.



My Interview in News 7 channel | நியூஸ் தொலைக்காட்சியில் எனது நேர்முகம்.





தொலைகாட்சி விவாத நிகழ்ச்சிகளில் சினிமா விமர்சகர் என்ற டேக் லைனோடு தொடர்ந்து கலந்துக்கொண்டு வருகின்றேன்...

இதுவரை தொலைகாட்சி விவாத நிகழ்ச்சிகளில் பதிவு செய்யப்பட்டவைகளில் மட்டுமே நான் பங்கு பெற்று இருக்கிறேன்...

குறள் 110: அதிகாரம் : செய் நன்றி அறிதல்









நேத்து வரை வாக்கர் பாய்ஸ், போர இடம் வௌங்காது... துரோகி,சகோதரின்னு சரணாகதி அடைந்தவர், கூட இருந்தே குழி பறிப்பவர் ... அது  இதுன்னு வைகோவை  வெகு தீவிரமாக வசை பாடிய அத்தனை  திமுக உடன்பிறப்புகள் அத்தனை பேருமே...

எனக்கு ஒரு டவுட்


ஏஆர் ரகுமானின் ஜெய்ஹோ பேட்டியும்.... பார்த்திபனின்விகடன் பேட்டியும்... பார்த்தேன் படித்தேன்...

ரகுமானின் அம்மா அவர் வந்தார் ஆர்மோனியம் வாசிச்சார்ன்னு பேசறாங்க... அதை விட பார்த்திபன்... ராக்கி படம் பார்த்தார்... அவரோட விமர்சனம் எனக்கு தேவைன்னு பேட்டியில தன்னோட புள்ளைய அவர்ன்னு மரியாதைய விளிச்சி இருக்கார்....

ரகுமான் ராக்கி இரண்டு பேருமே சின்ன வயசுல வளரும் போதே அவர்ன்னுதான் அழைச்சி இருப்பாங்களோ..???


A Brief Talk by S.V.Shekhar | S.Ve சேகர் அவர்களுடன் விரிவாய் ஒரு நேர்முகம்



ஏசிமெக்கானிக்காக  சென்னை சவேரா ஓட்டலில்  ஒன்றரை வருடம்  பகுதி நேர வேலை..

சென்னை ரேடியோவில் முதல்  முறையாக  சினிமா ஒளிச்சித்திரம் வழங்கியவர்.

ஆடியோ என்ஜினியர்,

அதுவே பாலசந்தரிடம் ஒரு சீனில்நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது..

6000 முறை  நாடகம் போட்டதோடு இன்னமும் நாடகங்கள் வார  வாரம் மேடை ஏற்றுபவர்…

HE - அவன்






 மயிலை
30/10/2015
 இரவு பதினோரு மணி..
========
 தம்பியும்… தம்பி மனைவியும் வீட்டுக்கு வருகின்றார்கள் என்பதால் வீட்டிற்கு வெளியே நானும் யாழினியும் காத்திருந்தோம்..

 அந்த பையன்  காரணீஸ்வரர் கோவில் பக்கத்தில் இருந்து வந்துக்கொண்டு இருந்தான்… கருப்பு சட்டையும் வெள்ளை பேண்டுமாய்…
இன்  செய்து இருந்தான்…. நவநாகரிகமாய் இருந்தான்… 
 உதாரணத்துக்கு  சொல்ல  வேண்டும் என்றால்..?
 பார்க் ஓட்டல் பப்பில் இருந்து வெளி வந்த  பையனை போல இருந்தான்…



sanveg and nonveg | சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் | 28/10/2015




சாண்ட்வெஜ்  அண்டு நான்வெஜ்…28/10/2015
  ஆல்பம்.

மத்தியில் பிரதமர்   மோடி ரெஸ்ட் எடுக்காமல்இந்தியாவின்  வளர்ச்சிக்கா நாடு நாடாக சுற்றிக்கொண்டு இருக்கிறார்… பெஸ்ட்டிவல் தினம் என்பதால் தீபாவளிக்கு   சொந்த நாட்டுக்கு வந்துள்ளார்… 
 

Heritage Bridge Built by British at Tamilnadu | Koppadi Bridge | கோப்பாடி பாலம் அல்லது கோப்பாடி செட்



 கோப்பாடி பாலம்..

சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார் கோவில் செல்லும் வழியில் இருக்கும் சிறிய ஊராட்சியின் பெயர் குமராட்சி...

Beware - Dog Lovers | Pet Animal Lovers must Watch Video | True Story | ஒரு நெகிழ்ச்சிக் கதை





பெட் அனிமல் வச்சி இருக்கறங்க….   முக்கியமாக   நாய் பூனை வளர்க்கறவங்க கண்டிப்பாக பார்க்க வேண்டிய பகிர்ந்துக்க வேண்டிய  பதிவு இது..


கடலூர் நியூசினிமா தியேட்டர் எதிரில் தரைகாத்த காளியம்மன்  கோவில் இருக்கு… அதுக்கு பக்கத்து   கெடிலம் ஆத்து ஒரமா எனது  நண்பர் குமார் என்பவர் டிங்கர் ஒர்க்ஷாப்  வச்சி இருக்கார்… அவுங்க வீட்டுல ஆடு மாடுங்க கோழிங்க அதிகம்…

Naanum Rowdy Dhaan (2015) Movie Review by Jackie Sekar | நானும் ரவுடிதான் திரைவிமர்சனம்



நானும் ரவுடிதான்..


விஜய் டிவி விருது வழங்கும் விழாவில் யாருடன் உங்களுக்கு நடிக்க விருப்பம் என்று  விஜய்சேதிபதியிடம் கேட்டு வைக்க… அவரும் முகம் எல்லாம் வழிச்சலோடு நயன்தாரா என்று ரொம்ப கூச்சமாக அதே சமயம் கியூட்டாக சொன்னார்… 

10 Endrathukulla Movie review | 10 எண்றதுக்குள்ள திரைவிமர்சனம்.








 10எண்றதுக்குள்ள… 

1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணி திரைப்படத்தின் மூலம் சியான் விக்ரம்  தமிழ் திரையுலகில் கால் பதித்து 25 வருடங்கள் ஆகி விட்டன. அவருடைய முதல் படம் அக்டோபர் 17 ஆம் தேதி ரிலிஸ் ஆனாது..  25 ஆண்டுகள் கழித்து அவருடைய படமான பத்து எண்றதுக்குள்ள  அதே அக்டோபர் மாதத்தில் ரிலிஸ் ஆகின்றது…


happy anniversary


 
அது நடந்து ஏழு வருடங்கள் ஆகி விட்டன...
ரிசப்ஷன் தொடங்க இன்னும் பத்து நிமிடம் இருக்கும் போது மணமக்கள் சண்டை போட்டுக்கொள்கின்றார்கள்..
திருமணத்திற்கு வருபவர்களுக்கு தேங்காய் வெற்றிலை பாக்கு என தாம்புல பை போட்டுக்கொண்டு இருக்கும் உறவினர் பசங்கள் முதலில் அதிர்ச்சி அடைந்தாலு ம் தொடர்ந்து தாம்புல பை போட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்...
சண்டை என்றால் அப்படியான சண்டை...
ஆயிரத்து 500 பத்திரிக்கை மேல் வைத்தாகி விட்டது... ஆயிரத்துக்கு மேல் தேங்காய் தாம்புல பை ரெடியாகி கொண்டு இருக்கின்றது.,,
மாலை மூன்று மணியில் இருந்தே இரவு விருந்துக்கு சமையல் ஆட்கள் வியற்வை கசகசப்போடு மண்டபத்தில் சமைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்..

CHENNAI MYLAPORE VERY FAMOUS AND OLD KARPAGAMBAAL SWEET STALL | மயிலை கற்பகம்பாள் இனிப்பு கடை




கைமணம் நிகழ்ச்சியில் இன்று நாம் காண இருக்கும் கடை… மயிலையில் இருக்கும் கற்பகாம்பாள்   இனிப்பக கடையைத்தான் இந்த பக்கத்தில் பார்க்க  இருக்கிறோம்.


Nusrat Fateh Ali Khan birthday | இன்று நுசுரத் பதே அலிகான் அவர்கள் பிறந்த தினம்…




இன்று பாகிஸ்தான் பாடகர் நுசுரத் பதே அலிகான் அவர்கள் பிறந்த தினம்…
இந்தியா பாகிஸ்தான் ஒற்றுமையாக இருந்து பிரிந்து மூன்று மாதம் கழித்து பாகிஸ்தான் பஞ்சாபில் பிறந்தவர்…

இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் மட்டும் நுசுரத் பதே  அலிகானை அவரது வந்தே மாதரம் இசை ஆல்பத்தில் பாட வைக்காமல் இருந்து இருந்தால்.. என்னை போன்ற இசையறிவு அதிகம் இல்லாத கடலூர் கார பயலுக்கு இவரை பற்றி தெரியாமலே போய் இருக்கும்..

கவாலி இசையின் ராஜா என்று  இவரை இசை உலகம் போற்றுகின்றது…ஹைபிட்சில் கவாலி இசையில் பாடுவதில் வல்லவரான இவரை.. 50 வது பொன்விழா ஆண்டில்  ரகுமான் வெளியிட்ட இசை ஆல்பத்தில் நுசுரத்தின் பங்கும் இடம்  பெற்றது..

வழக்கம் போல  தானும் படுக்க மாட்டான்  தள்ளியும் படுக்கமாட்டன் என்பது போல நுசுரத் பதே அலிகானை  பாட வைத்தற்கு எதிர்பு கிளம்பியது…
 வந்தே மாதர்ம் இசை ஆல்பத்தில் "Gurus of Peace" பாடலை ரகுமானும் நுசுரத்தும் சேர்ந்து பாடி கலக்கினார்கள்….

வந்தே மாதரம் இசை ஆல்பமான மா துஜே சலாம் தயாரிப்பின் போது முதல் போடும் சோனி நிறுவனம் சொன்னது.. யாராவது பிரபலமானவரை உங்களோடு இணைந்து பாடச்செய்தால்.. இன்னும் இந்த ஆல்பம் சிறப்பாக இருக்கும்  அது மட்டுமல்ல.. இந்திய இசை உலகம் எங்கும் கூடுதல் கவனம் பெறும் என்றதோடு… டைட்டானிக் படத்தில்   உச்சஸ்தாயில் பாடும் செலின் டியோன் பெயரை   சோனி பரிந்துரைத்தது.. ஆனால் ரகுமான் அந்த பெயரை நிராகரித்ததோடு… எங்கள் தோழமை தேசமான பாகிஸ்தானில்  உள்ள பாடகர் நுசுரத்  பதே அலிகான் பாடினால் சிறப்பாக இருக்கும் என்றதோடு…தண்ணியும் எண்ணெயும் எப்போதும் ஒன்று சேராமல் எதிரும் புதிருமான   தேசத்தில் இருந்து முதல் முறையாக இரண்டு குரல்கள்  ஒன்றாக இணைந்தன.. அந்த பாடல்தான்… வந்தே மாதரம் ஆல்பத்தில் இடம் பெற்ற "Gurus of Peace"
 கருத்தாம்மாவில் வரும் போறாளே பொண்ணுதாயி பாடலை கொஞ்சம் நாகசு செய்து மாற்றி இருந்தார்…


பாடலின் துவக்கத்திலேயே  நுசுரத்  பதே அலிகான் கலக்கி இருந்தாலும்..2 ,27 இல் பின்னி இருப்பார்… 




 முதல் முறையாக  இந்த பாடலை கேட்ட போது இவர் யார் என்று அறிந்துக்கொள்ளும் ஆர்வம் வந்ததோடு புதிய குரல்….
பிறகு இணையத்தில் தேடி இவரை பற்றி அறிந்துக்கொண்டேன்…  வந்தே மாதரம் இசை ஆல்பம் வெளியான  தினம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி… சரியாக  ஐந்து நாட்கள் கழித்து கிட்னி செயல் இழப்பு காரணமாக இறந்து போனார்..


இந்தி பாடல்களில் அவர் பிரபலம்… ஆனால் கடைகோடி தமிழனுக்கு Nusrat Fateh Ali Khan அறிமுகப்படுத்தியதில் பெரும் பங்கு ரகுமானுக்கு உண்டு
உலகின் நம்பர் ஒன் தேடுதல் இயந்திரம் கூகுள்..  இவரது புகைப்படத்தை தேடுதல் இயந்திரத்தின் முகப்பில் வைத்து இவருடைய பிறந்த தினத்துக்கு மரியாதை செய்துள்ளது

இனிய பிறந்தநாள்  வாழ்த்துகள் ‘
Nusrat Fateh Ali Khan ji



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

CHENNAI BEST BURMA FOOD ATHO | சென்னை பாரிஸ்கார்னர் பர்மிய உணவு அத்தோ





கைமணம்  பகுதியில்...

இன்று நாம் சுவைக்க இருக்கும் உணவு அத்தோ.
அத்தோ  பர்மாவின் தேசிய உணவு….


Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner