விலைமாதர்களை விட மோசமான வட இந்திய மீடியாக்கள்....

ஒரு காமெடி ஸ்ட்டோரி சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். ஆனால் சிரிக்க கூடாது. நம் வரி பணத்தில் படித்து அமெரிக்காவில் செட்டிலான ஒரு இந்திய அமெரிக்கனை பொருளாதார பிரச்சனையால் ஒருவன் சுட்டு கொன்று விட்டான் .

உடனே வட இந்திய பத்திரிக்கைகள் இதுவரை பதினெட்டாவது இந்தியனை சுட்டு கொன்று விட்டார்கள்.நம் இந்தியர்களுக்கு பாதுகாப்பு அமெரிக்காவில் கேள்வி குறியாக இருக்கிறது என்று கூப்பாடு போட்டன.

இதே இந்தியாவில் ஆச்சி இட்லி பொடியில் இருந்து வருமானத்துக்கு ஏற்ற தரமான சோப்பான பவர் சோப்பு வரை இந்தியாவில் வரி கட்டி வாழ்க்கை நடத்தும் தமிழக மீனவர்களை, இதுவரை 4000க்கு மேற்பட்டவர்களை இலங்கை ராணுவம் சுட்டு கொன்று இருக்கறது. ஆனால் இது பற்றி எந்த வட இந்திய பத்திரிக்கையாவது கவலை தெரிவித்து இருக்குமா?

இந்த நாட்டில் படித்தவன் உயர்ந்த ஜாதி என்றால் ஒரு சட்டம்,
படிக்காதவன் தாழ்ந்த ஜாதி என்றால் ஒரு சட்டம் என்பது இன்னம் இருக்கத்தானே செய்கிறது.


அன்புடன் /ஜாக்கிசேகர்

18 comments:

  1. அந்த டோல் மாறி பசங்க இன்றல்ல நேற்றல்ல, தாராளமயம் ஆனதிலிருந்தே இருந்தே இப்படித்தான் பண்றானுங்க. அத நடத்தரவனுங்க தொண்ணூறு சதம் தமிழின எதிரிகள். அவர்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

    இவனுங்க ப்ரோகிராம் எல்லாம் எந்த லட்சணத்தில் இருக்குன்னா, ராத்திரியில கூத்தடிக்கிரவனுங்களுக்கு வெளக்கு புடிக்கிறது. பகல்ல பெரும்பகுதி சேர் மார்க்கெட்டில் பிக் பாக்கெட் அடிக்கிரவனுகள பேட்டி எடுக்கிறது, சமயங்கள்ல அரசியல் மாமாக்கல கூப்பிட்டு வச்சி கும்மி அடிக்கிறது, அதையும் விட்டா பிசாத்துக்கு புரியோஜனமில்லாத கொலை கேசை துப்பறியறது, இப்படித்தான்.

    இதுங்கதான் ஜனநாயகத்தின் நாலாவது தூணாம்! ஒரே ஆறுதல், இந்த கசமாலம் புடிச்ச டிவி சேனலை ஐந்து சத மக்கள் கூட பாக்கிறது இல்ல.

    ReplyDelete
  2. நியாயமான கேள்விகள் தான்!

    தமிழர்கள் மேல் மத்திய அரசுக்கு எப்போதுமே நல்ல அபிப்ப்ராயம் இருந்ததில்லை. ஆட்சிக்காக மாநிலம் தான் அங்கே கும்பிடு போட்டுகொண்டிருக்கிறது.

    ReplyDelete
  3. //அத நடத்தரவனுங்க தொண்ணூறு சதம் தமிழின எதிரிகள். // உண்மை.

    ReplyDelete
  4. நன்றி ஆட்காட்டி தங்கள் முதல் வருகைக்கும் சோகத்திற்க்கும்

    ReplyDelete
  5. மோகன் கந்தசாமி அவர்களே உங்கள் கோபமும் அதன் உண்மையான காரணம் சர்வ நிச்சயமாக உண்மைதான்

    ReplyDelete
  6. எல்லாம் தாராளமயமாக்குதலால் வந்த வினை தலைவா. நன்றி ராபின் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  7. நன்றி நித்யா தங்கள் வருகைக்கு பதிவு ஏதாவது போடுங்க தலைவரே

    ReplyDelete
  8. விலைமாதர்கள் மோசமானவர்களா...??

    ReplyDelete
  9. ஜாக்கி,

    பதிவின் கேள்வி நியாயமானதுதான். உண்மைதான்..

    ஆனால் தாங்கள் வைத்திருக்கும் தலைப்புதான் எனக்கு இடறுகிறது..

    விலைமாதர்களைவிடவும் மோசம் என்ற அர்த்தத்தில் எழுதியிருக்கிறீர்கள்.. விலைமாதர்கள் என்பவர்கள் என்ன மோசமானவர்களா..? அல்லது இழிவானவர்களா..? இது வேறொரு அர்த்தத்தை கொடுக்கிறது.. கவனிக்க மறந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்..

    ReplyDelete
  10. தங்கள் கேட்ட கேள்வி நியாயமானதுதான் ,. நான் தலைப்பை இப்படி வைத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்

    தலைப்பு இதுதான்

    அரசியல் வாதிகளை விட மோசமான வட இந்திய மீடியாக்கள்

    ReplyDelete
  11. மது ஒரு கோபத்தில் வந்த தலைப்பு. மற்றபர உங்கள் கேள்வி நியாயமானதே

    ReplyDelete
  12. மது ஒரு கோபத்தில் வந்த தலைப்பு. மற்றபடி உங்கள் கேள்வி நியாயமானதே

    ReplyDelete
  13. பதிவின் கேள்வி நியாயமானதுதான். உண்மைதான்..

    ஆனால் தாங்கள் வைத்திருக்கும் தலைப்புதான் எனக்கு இடறுகிறது..


    I agree...

    ReplyDelete
  14. சிவா எங்க போயிருந்திங்க ஆளையே கானோம்

    ReplyDelete
  15. நன்றி ராஜதுரை. தங்கள் வருகைக்கு . அடுத்த முறை தலைப்பு வைக்கும் போது யோசித்து வைக்கிறேன்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner