
மன்மோகன் சிங் எப்படி அமெரிக்க அனுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற துடிக்கிறாறோ, அதே போல் கமல் நிருவை காதலித்த நாட்களில் துடித்து போனான்.
உலகத்தில் எல்லோரும் அழாகாக தெரிந்தார்கள் எல்லோரையும் நேசிக்க தொடங்கினான். உலகத்தில் எவறும் தவறு செய்யாதது போல் உணர்ந்தான். மொத்ததில் பருத்திவீரன் கார்த்தி போல் மாறி போய் இருந்தான்.
கடந்த மூன்று மாதகாலமாக தமிழக எதிர்கட்சி தலைவர் கோடநாட்டில் ஓய்வு எடுத்து ஜாலியாக இருப்பதுபோல் எதுபற்றியும் கவலை கொள்ளாது ரொம் ப ஜாலியான வாழ்க்கை வாழ்ந்தால் நிருபமா...எனெனில் கமல்தான் தினமும் செல்போனில் அவள் அழகை புகழ்கிறானே.
நடிகர் சத்யராஜ் மேல் புவனகிரியில் வசிக்கும் ஒருவன், இந்திய இறையான்மைக்கு வேட்டு வைத்தார் என்று பொதுநல வழக்கு போட்டு தமிழனுக்கு தமிழனே எதிரி என்று எப்படி மீண்டும் நிருபித்தானோ, அதே போல் கமலின் நண்பன் ஒருவன் கமல் பைனல் இயர் படிக்கும் போது நிருபமா அப்பாவிடம் போட்டு கொடுத்தான்.
உண்மை தமிழர்கள் எப்படி சுப்ரமணிய சுவாமியை பார்பார்களோ அதே போல் நிருவை அவள் வீட்டில் வெறுப்பாக பார்த்தார்கள் கமலின் தராதரம் தகுதி போன்றவை குறித்து கேள்வி எழுப்பபட்டது. எதிர்பார்த்த தகுதி இல்லாத காரணத்தில் நிரு பெற்றோர் கம்லை புறக்கனிக்க சொன்னார்கள். நிரு காதலித்தாலும் தொடர்ந்து பிரைன் வாஷ் செய்ததால் அவள் குழப்பிபோனாள் எனென்றால் நிருபமா பணக்கார பெண் என்று வாசகர்கள் எற்கனவே அறிந்ததுதான்
கமல் வீட்டில் அவன் காதல் தெரிந்த போது முதலில் தயங்னகினாலும் பின் தன் மகன் ஆசைக்கு குறுக்கே நிற்க்கவில்லை, ஒரே கேள்விதான் கேட்டார்கள்
“ ஏன்டா இந்த பொண்னு உனக்கு சரியா வருவாளா?” அது சொத்துள்ள பெண் என்பதற்க்கான கேள்வி அல்ல. அவள் உடை உடுத்தி கொண்ட விதம் கமல் பெற்றோரிடம் கேள்வியாக வந்தது.
கமல் எப்படியாவது அவளை கரம் பிடிக்க, நிறைய சம்பாதித்து அவள் எப்படி பிறந்த வீட்டில் இருந்தாலோ அதை விட இன்னும் சிறப்பாக அவளை வாழ
வைக்க உறுதி எடுத்தான் அவன் நேரம் அப்போதுதான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியா பக்கம் பார்வையை திருப்பிய நேரம் அது...
அப்போது அம்மா ஆட்சி தொழில் தொடங்க வந்த பன்னாட்டு நிறுவனங்களிடம்
100சி என்றால் பத்து சி எனக்கு என்று கணக்கு போட, எல்லோரும் பிடரியில் கால் பட துண்டை காணோம் துணியை காணோம் என பென்ஷனர் பாரடைஸ் பெங்களுர் ஓடினார்கள் அதனால் பெங்களுருக்கு கமலும் ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஐமேக்ஸ் தியேட்டர் எப்படி ஐதராபாத்துக்கு ஓடியதோ அதே போல் கமலின் நண்பர்கள் சிலர் ஐதராபாத்துக்கு ஓடினார்கள்.
கமல் நிரு உதட்டில் ஊர்வலம் நடத்தி இருந்தாலும் கல்லூரியில் முதல் மதிப்பெண் எடுத்ததால் பெங்களுருவில் அவனுக்கு மாதம்15000 சம்பளத்தில் வேலை கிடைத்தது கமல் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பாண்டிச்சேரி மகளிர் கல்லூரியில் நிரு கம்யுட்டர் சயின்ஸ் முடித்தால்.
பெங்களுரில் வேலை கிடைத்ததை போன் மூலம் விஷயத்தை சொன்னான் ஏனெனில் நேரில் சென்றால் தன் மனது அவளை பார்த்ததும் மாறி விட கூடாது என்பதற்க்காக. கமல் பெற்றோரிடம் ஆசி பெற்ற பெங்களுர் வந்து வேலையில் சேர்ந்த முதல்நாள் கமல் யோசித்தான்
தான் அவசரப்பட்டுவிட்டோமோ? நிருதான் பேரழகி என்று நம்பி இருந்தான், அவன் வேலை செய்த பன்னாட்டு நிறுவனத்தில் நிறைய நிருபமாக்கள் இருந்தார்கள்
காரணமே இல்லாமல் கொஞச்ம் வெயிட் பண்ணி இருந்தால் நல்ல செல்போன் வாங்கி இருக்கலாம் .... என்ற ஜோக் ஞாபகத்துக்கு வந்தது ..உங்களுக்கு தெரியுமா? அந்த ஜோக்???
(தொடரும்)
அன்புடன் /ஜாக்கிசேகர்