சேலம்வினுப்பிரியாவுக்கு அன்றைய தேவை ஆதரவான வார்த்தைகளே ... பெற்றவர்களே நம்பவில்லை என்பதுதான் அந்த பெண்ணின் தற்கொலைக்கு முக்கியமான காரணம்..
பேஸ்புக்கிற்கு போகாமல் படங்களை பதியாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று அடக்கம் ஒடுக்கமாக அந்த பெண் இருந்து இருந்தால் அந்த பெண் இறந்து போய் இருக்காது என்று பதறுபவர்களை பார்த்தால் மிரட்சியாக இருக்கின்றது..
APPA ( 2016 ) tamil movie review | சமுத்திரகனியின் அப்பா திரைவிமர்சனம்
அப்பா திரை விமர்சனம்…
==============
உங்கள் பிள்ளைகள்
உங்கள் பிள்ளைகள் அல்ல…
உங்கள் பிள்ளைககள்
உங்கள் பிள்ளைகள் அல்ல…
அவர்கள் அவர்களுடைய
வாழ்க்கையை வாழ வந்தவர்கள்.
உங்கள் பிள்ளைகள்
உங்கள் பிள்ளைகள் அல்ல
கலீல் ஜிப்ரான்.
எழுதிய இந்த வரியை
முன் வைத்துதான் அப்பா திரைப்படத்தை சமுத்திரகனி எடுத்து இருக்கின்றார்
Metro -2016 tamil movie review | மெட்ரோ திரைவிமர்சனம்
வேளச்சேரியில்
புழுதிவாக்கம் செல்லும் சாலையில் இரண்டு பெண்கள் வாங்கிங் போய்க்கொண்டு இருந்தார்கள்… என் கண் எதிரில் அப்போசிட்டில் வந்த பையன் ஒரு பெண்மணியின் கழுத்தில் இருந்து அசால்டாக செயினை அறுத்துக்கொண்டு பறந்தான்.. மனைவி குழந்தையோடு இருந்த காரணத்தால்
அவனை வேகமாக விரட்ட முடியவில்லை.ஆறு பவுன் செயின் நொடிப்பொழுதில்லை அவன் கையில் கழுத்தில்
காயத்தோடு அந்த பெண்மணி பறிதவித்து போய் இருந்தார்.… போலிசில் கம்ளெயின்ட் கொடுக்க
சொன்னேன்.. இல்லைங்க வீட்டுக்கு போலிஸ் வருவதை எங்க வீட்டுக்காருக்கு பிடிக்காது… அதனால்
கம்ளெயின்ட் கொடுக்கலை.. எல்லாம் என் தலையெழுத்து வாயை கட்டி வயித்தை கட்டி சேர்த்து வச்சது என்று அழுது புரண்டார்..
Now You See Me: The Second Act ( 2016 ) movie review
நவ் யூ சி மி
2
இப்ப நீ என்னை பாரு என்பதுதான் தமிழாக்கம்…அதை ஒரு மேஜிக்காரன்
சொன்னா எப்படி இருக்கும்ன்னு யோசிச்சி பாருங்க….
இந்த படத்தின்
முதல் பாகம்..2013 ஆம் ஆண்டு வெளியா‘கி பட்டையை
கிளப்பியது… நான்கு மேஜிக் நிபுனர்கள் ஒன்று சேர்ந்து பெரிய பண
பொக்கிஷத்தை எல்லோர் கண்களிலும் மெஜிக் செய்து அபிட் விடுகின்றார்கள் என்பதுதான்
கதை.
நண்பர் சுபாஷும் அசோக்கும்..
சில நண்பர்களை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது… அவர்களோடு வாழ்ந்த பால்ய காலங்கள் என்றைக்கு நினைவு படுத்தினாலும் சந்தோஷத்தை கொடுக்க கூடியது…

Labels:
இன்று பிறந்தவர்கள்,
வாழ்த்துகள்
The Conjuring 2 - 2016 - தி கான்ஜுரிங் 2 திரை விமர்சனம்.
கான்ஜுரிங் திரை
விமர்சனம்.
2013 ஆம் ஆண்டு வெளியான கான்ஜூரிங் ஹாரர் திரைப்படம் கொடுத்த அதிர்வை உலக சினிமா ரசிகர்கள்
அறிவார்கள்… தற்போது அதன் இரண்டாம் பாகம் வெளியாகி
மக்களை டரியல் ஆக்கி இருப்பதோடு அட்சரசுத்தமாய்
தமிழ் பேபேசுவது ,இன்னும் கூடுதல் சிறப்பு. காரணம் இந்த திரைப்படம் ண் உண்மை
சம்பவங்களை மையப்படுத்தி வெளி வந்துள்ளது…
நேஷனல் ஜியாகிராபி
1986களில்தான் எனக்கு முதன் முதலாக தொலைக்காட்சி அறிமுகம்... கடலூர் கூத்தப்பாக்கத்தில் காசுக்கடைக்காரர் வீட்டில் இருந்து பிளாக் அண்டு ஒயிட் டிவிதான் நான் பார்த்த முதல் டிவி...
சிவாஜி கேஆர் விஜயா நடித்த செல்வம் திரைப்படம்தான் நான் தொலைகாட்சியில் பார்த்த முதல் திரைப்படம்.. ஆனால் அந்த டிவியை 30 அடி தொலைவில்தான் பார்த்து ரசித்து இருக்கிறேன்...
Labels:
அனுபவம்,
சென்னை,
சென்னை வெள்ளம்
நேஷனல் ஜியாகிராபி பேட்டி
2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி....சென்னை பெருவெள்ளம் அப்படியான வெள்ளத்தை என் 22 வருட சென்னை வாழ்க்கையில் நான் இதுவரை கண்டதில்லை...
காலை எட்டு மணிக்கு டிவியில் சைதாப்பேட்டை பாலத்தில் அலை அடித்துக்கொண்டு இருக்கின்றது...
கணமும் தாமதியாமல் வீடியோ கேமரா எடுத்துக்கொண்டு செல்கிறேன்.. மக்கள் அகதிகளாக திரிகின்றார்கள்.. சிக்னல் வேலை செய்யவில்லை..
ரைட் செடு ராங் சைடு என்று எதும் இல்லை... மின்சாரம் இல்லை... கருனையுள்ளவர்கள் சாப்பாடு போடும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம்..
சாலையெங்கும் நீர்.....
நாகேஷ்வரராவ் பார்க் வெள்ளத்தில் மிதக்கின்றது.. அண்ணாசாலையில் வெள்ளத்தில் மக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு கயிறு கட்டி நடக்கின்றார்கள்...
எனது பைக்கில் உயிரை பணயம் வைத்து சைதாப்பேட்டை சென்று விட்டேன்...
சைதாப்பேட்டை பாலத்தில் கடல் அலை போல ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் அடித்துக்கொண்டு இருந்தது...
ஒன்பது மணியில் இருந்து இரண்டு மணி வரை அங்கே இருந்தேன்.. சைதை மறைமலை அடிகள் பாலம் மெல்ல மெல்ல மூழ்கும் காட்சியை படம் பிடித்தேன்.
ஜாக்கி சினிமாசின் சொத்து இதுதான்..
சினிமா ஈர்ப்புதான்.. ஆனால் இது போன்ற பதிவுகள்தான் எனக்கு பிடிக்கும்...
மெட்ரோ ரயில் பாலத்தின் மேல் ஏறி மழைக்கு நடுவே நின்று எடுத்ததும் பாலத்தை சுற்றி ஓடும் அசுர வெள்ளத்தின் ஊடே இடுப்பளவு நீரில் இறங்கி பயத்தோடு பனகல் மாளிகையை அடைந்ததும் வாழ்கையில் மறக்க முடியாதது...
சைதை பாலம் மூழ்கும் காட்சியை நான்கு மணி நேரம் காத்திருந்து பதிவு செய்தேன்..
அந்த வீடியோவை பார்த்து விட்டு நேஷனல் ஜியாகிரபி சேனலில் இருந்து அழைத்தார்கள்.. சில வீடியோ கிளிப்பிங்குளை கொடுத்தேன்...
எனது இண்டர்வியூவை எடுத்தார்கள்... தமிதுல் பேசுகின்றேன் என்று சொன்னேன்... ஆனால் ஆங்கிலத்தில் பேசினால் நலம் என்றார்கள்.
கொஞ்சம் வேர்த்து போய் தான் பேசினேன்...
வரும் வியாழன் இரவு மே ஐந்தாம் தேதி ஒன்பது மணிக்கு சென்னை வெள்ளம் பற்றிய ஆவணப்படம் ஒளிபரப்பாக இருக்கின்றது..
அதில் எனது பேட்டி இடம் பெறுகின்றது.. நண்பர்கள் பார்த்து விட்டு கருத்து கூறவும்.
இந்த வீடியோவை எடுத்த காரணத்தால்தான் நேஷனல் ஜியாகிரபி சேனலில் பேட்டி எடுத்தார்கள்.....
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
03/05/2015
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

Labels:
அனுபவம்,
தொலைக்காட்சி,
நேர்முகம்
Subscribe to:
Posts (Atom)












