பதிவர் சிங்கை கிரிக்காகவும், ரஜினிக்காகவும் நான் எடுத்த புகைப்படம்...


பதிவர் கிரிக்காக நான் எடுத்த புகைப்படம் இது...


பின் புற படத்தில் இயந்திர தனமாய் கையில் ரோஜாப்பூ வைத்து இருப்பவர் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர், இந்த வயதிலும் அடுத்தவன் பொண்டாட்டியோடு மன்னிக்கவும், ஜஸ்வர்யாராயோடு ஆடுபவர்.

கீழே பிளாட்பாரத்தில் உட்கார்ந்து இருப்பவர்கள் கொஞ்சமாக ஆசிர்வதிக்கபட்டவர்கள்.

ஊண் குருடு இல்லாமல் பிறந்து தனது அந்திம காலத்தில் மருமகள், மகனின் வசவுகளை ஏற்று வாழ்பவர்கள்,
தன் சோகத்தை ரோட்டோரத்தில் உட்கார்ந்துதன் வயது ஒத்த நண்பர்களுடன் பேசுபவர்கள்.

ஹீம் ரஜினியோட பிறந்த நேரம் அப்படி, பாருங்கள் கடவுளின் திருவிளையாடல்களை ஒரே பூமி ரத்தம் சதை அழுகை உணர்வு, காமம் எல்லாம் ஒன்றே ஆனால் வாழ்க்கை தரம் மட்டும்????????

ஆனால் ரஜினிக்கு இந்த வாய்ப்பு சும்மா ஒன்றும் கிடைக்கவில்லை அந்த அசுர வளர்ச்சிக்கு பின் நிறைய காயங்களும் வேதனைகளும் இருக்கிறது, ரஜினி பெங்களுருவில் பஸ் கண்டக்டர், அவர் சென்னை லாயாலோ கல்லுரியில் படிக்க வில்லை. அவர் அப்பா பெயர் ஒன்றும் எஸ் ஏ சந்திரசேகர் அல்ல....



ஆனாலும் ரஜினி கடவுளால் ஆசிர்வதிக்கபட்டவர்தானே....


நான் எடுத்த புகைபடங்களில் இந்த படமும் என் ரசனை பட்டியலில்....





அன்புடன்/ ஜாக்கிசேகர்

ஒரு மனிதனின் பரிணாம வளர்ச்சி, அரிய புகைபடங்களுடன் ..(இ மெயிலில் வந்த சோக்கு)

ஒரு மனிதனின் பரிணாமவளர்ச்சி..............................








அன்புடன்/ ஜாக்கிசேகர்

இந்தியாவில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததும் நடக்கும் பத்து புளித்து போன நிகழ்வுகள்.....


நேற்று முன் தினம் தலைநகர் டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பில் இதுவரை 30 பேர் உடல் சிதறி மடற்றும் 100க்கு மேற்பட்டவர்கள் பலியாக உள்ளனர்.



சில மாதங்களுக்கு முன் அகமதாபாத், பெங்களுர், சூரத் போன்ற இடக்ளில் குண்டு வெடித்து இறந்து போனது ஞாபகம் இருக்கலாம் அல்லது தமிழனாக இருக்கும் பட்சத்தில் அது மறந்து போய் இருக்கலாம்.இந்தியனாக இருக்கும் பட்சத்தில் அதை சகித்து கொண்டு இருக்கலாம். அல்லது பொதுவானாக இந்தியனாக இருந்தால் பக்கத்து வீட்டில்தானே நடந்தது நமக்கேன் கவலை என்ற உயர்ந்த பண்பு காரணமாகவும் நாம் மறந்து போய் இருக்கலாம்,


பெங்களுர், சூரத், அகமதாபத் போன்ற இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது எப்படி பொங்கி எழுந்து தீவரவாதத்தை அடக்குவதாக பாவித்து என்ன சூலுரைத்தார்களோ, அதே போல்தான் இப்போதும் பெரிய தலைவர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.


இதுவரை தீவரவாதத்தை அடக்க எந்த ஒரு முன் ஏற்பாடும் எடுத்ததாகதெரியவில்லை. உளவுதுறை என்ன மயிர் புடுங்கி கொண்டு இருக்கிறது என்பது புரியவில்லை.

இந்தியாவில் ஒவ்வோரு முறை குண்டு வெடிப்பின் போது கீழுள்ளவை நிகழும்...

1. குண்டு வெடிப்பு நிகழ்ந்ததும் உடல்களை உடனே அப்புறபடுத்தி உடனே லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிப்பார்கள்

2. காயம் பட்டவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறி ஒரு போட்டோ எடுத்து அதனை இந்தியா முழுவதும் வெளிவரும் பிராதன பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் வரும் படிபிரதமர் வட்டாரத்தினர் பார்த்து கொள்வார்கள்.

3.சோனியா காந்தியும் நேரில் போய் பார்க்கிறார் என்றால் குண்டு வெடிப்பு சேதம் அதிகம் என்று அர்த்தம்.

4. அத்வானி பொடா சட்டம் இருந்தால் தீவிரவாதமே நிகழாது என்று பேட்டி கொடுப்பார்.

5. இந்திய மீடியாக்கள் நான்கு நாட்கள் நாம் இருப்பது இந்தியாவிலா அல்லது இலங்கையிலா என்று தற்போது விஸ்காம் முடித்த வெள்ளை தோல் பெண்களை வைத்து மூண்றுநாள் ஓப்பாரி வைத்து விட்டு சல்மான்கான் யார் உதட்டில் இப்போது ஈரப்டுத்தி கொள்கிறார் என்பதை ஆராய போய் விடுகிறார்கள்.

6.கொஞ்சம் கோபம் உள்ளவர்கள் பத்திரிக்கையிலும் பிளாக்கிலும் எழுதி தன் கோபத்தை தீர்த்து கொள்கிறார்கள்.

7. எல்லா தலைவர்களும் கண்டனம் தெரிவிப்பார்கள்.

8.குண்டு வெடிப்பில் தன் உற்றாரை இழந்து வாடும் உறவினர்கள் மார்பில் அடித்துகொண்டு அழும் காட்சி மறுநாள் தினசரிகளில் நிச்சயம் இடம்பெறும்.



9. ஒருவாரம் கழித்து இறந்தவர் ஒருவருடைய சோக செய்தி வாரப் பத்திரிக்கையில் இடம்பெறும்.



10. இந்தியர்கள் பத்திரிக்கை, தொலைகாட்சி, வாரபத்திரிக்கைகளில் குண்டு வெடிப்பு செய்திகளை படித்து விட்டு பார்த்து விட்டு, த்சோ த்சோ என்று சொல்வார்கள் .


அடுத்த குண்டு வெடிப்பு நடந்ததும் இதே செயல்கள் இந்தியாவில் நிச்சயம் நடைபெறும் இந்தியர்கள் த்சோ, த்சோ சொல்ல காத்து இருப்பார்கள்...

அன்புடன்/ஜாக்கிசேகர்

திருமணம் முடிந்த சில மணித்துளிகளில்(புது மாப்பிள்ளை) மங்களுர் சிவா வீட்டில் நான்...


எல்லா பதிவர்களும் நேரில் மங்களுர் சிவாவை வாழ்த்தினாலும் அருகில் இருந்தும் என்னால் நேரில் சென்று திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை, வேலை முடிந்து அவர் அண்ணன் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து வாழ்த்து கூறினேன்.


மணமக்கள் இருவரும் எல்லா வல்ல இறைவன் அருளாள் நீடுடி வாழட்டும்.

வாழ்த்துக்கள் மங்களுர் சிவா, பூங்கொடி

அன்புடன்/ஜாக்கிசேகர்

வலைபதிவர்களுக்கு என் நன்றிகள்


கடந்த மூன்று மாதத்தில் நான் வலை பதிவு ஆரம்பித்து இதுவரை பத்தாயிரம் பேர் என் பதிவை இன்றோடு படித்து இருக்கிறார்கள். நீங்கள் தொடர்ந்து என் எழுத்துக்கு கொடுத்து வரும் ஆதரவு உங்களை எல்லோரையும் நினைக்கும் போது என்னை மெய் சிலிர்க்க வைக்கின்றன.


குடும்ப பாரத்தை தாங்க தூர தேசம் சென்று தன் கனவுகளை நனவாக்க இரவு பகல் பாராது உழைத்து, மனைவி பிள்ளைகளை நினைத்து தலையனைக்கு முத்தம் கொடுத்து விட்டு மல்லாக்க விட்டம் பார்க்கும் என் தமிழ் ரத்த சொந்தங்கள்.

தாய் நாட்டில் என்னதான் நடக்கிறது என்பதை அறிய விரிவாய் அலச விரிவாய் பேச இந்த வலை இனைப்பு மட்டும்தானே ஒரே வழி

என்னை பொறுத்தவரை தூர தேசத்தில் இருக்கும் என் ரத்த சொந்தங்களுக்கும் உள்ளுர் சொந்தங்களுக்கும் எதாவத செய்தியை என் பார்வையில் உங்களோடு பகிர்ந்து கொள்ள முடிகிறது என்பதே என்னை பொறுத்தவரை மகிழ்வான விஷயம்.

தொடர்ந்து எனக்கு அதரவு கொடுத்தும் பின்னுட்டம் இட்டும் என்னை உற்சாகப்படுத்தும்


எல்லோருக்கும் என் நன்றிகன்


அன்புடன் /ஜாக்கிசேகர்

மங்களுர் சிவா திருமணம் முடிந்ததும் பாடும் பாடல் என்ன?



நம்ம சக பதிவர் மங்களுர் சிவாவுக்கு வரும் 11 ம் தேதி சென்னை வடபழனியில் திருமணம் வெகு விமர்சியாக நடக்க இருக்கிறது. வலைபதிவர் சார்பாகவும் என் குடும்பத்தினர் சார்பாகவும், அவருக்கும் அவர் வாழ்கை துணைக்கும் எல்லாம் இனிதே நடக்க எல்லாம் வல்ல பரம் பொருளை வேண்டுகிறேன். இனிவரும் காலங்கள் வசந்தமாய் வாழ எல்லாவல்ல இறைவனை வேண்டுகிறேன்.

ஓ இன்னம் மேட்டருக்கு வரலியா? ஓகே நம்ம சிவா திருமணம் முடிந்து பாடும் பாடல்

“‘ஜெர்மணியில் செந்தேன் மலரே, தமிழ்மகனின் பொன்னே சிலையே காதல் தேவதையே, காதல் தேவதை பார்வை கண்டதும் நான் எனை மறந்தேன்....”

என்ன சிவா இந்த பாடலை தானே உங்கள் உதடு முனு முனுக்கும்.....?

வாழ்த்துக்கள் சிவா.


அன்புடன்/ ஜாக்கிசேகர்

(பாகம்/1) கால ஓட்டத்தில் காணமல் போனவைகள். (தொடர் விளையாட்டு)




ஹரிக்கேன் விளக்கு...




தமிழகம் முழுவதும் மின் வெட்டால் பொதுமக்கள் தினறி, கழுத்து வியற்வை,அக்குள் வியற்வை பிசு பிசுப்புடன், கலைஞர் கவர்மெண்ட்டை திட்டிக்கொண்டு இருக்கும், இந்த வேளையில் இது பற்றி எழுதுவது நல்லது என்பேன்.


பொதுவாய் இந்த மாதிரி விளக்குகளைஎல்லா கிராமங்களிலும் பயண்படுத்துவர்.
பொதுவாய் விவசாயிகள் இரவில் தண்ணீர் பாய்ச்சவும், இரவில் வரப்பு பார்த்த நடக்கவும் இந்த விளக்குகள் பயன்படும்.

இதற்க்கு ஹரிக்கேன் விளக்கு என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா? புயல் காற்றுகளின் போது அல்லது எந்த பயங்கர காற்றுகளுக்கும் ஈடு கொடுத்து அனைந்து போகாமல் வெளிச்சத்தை கொடுக்க வல்லது.
ஹரிக்கேன் என்றாலே புயல்தானே...


இதற்க்கு கடலுர் மற்றும் சற்று வட்டாரங்களில் இதற்க்கு லாந்தர் என்று பெயரிட்டும் அழைப்பர்.

இந்த விளக்குகளை மீனவர்களின் உற்ற தோழன் என்று சொன்னால் அது மிகையில்லை...

மின்சாரம் எட்டி பார்க்காத அந்த கால கட்டத்தில் எங்கள் அம்மா அந்த லாந்தர் விளக்கை சாயிந்திரம் 5 மணிக்கெல்லாம் எடுதது முந்தின நாள் இரவில் அந்த விளக்கு உழைத்து கலைத்ததால் அதன் கண்ணாடியில் கருப்பு சுவாலைகள் படிந்து இருக்கும். அந்த கரும் ஜுவாலைகளை துடைத்தால்தான் பளிச்சென ஒளி கிடைக்கும்.

கண்ணாடி தொடைக்கவும் கக்கூஸ் கழுவவும் ஸ்பிரே வராத அந்த காலத்தில் மதியம் சமையல் செய்து நீர்த்து போன வரட்டி
( மாட்டு சாணத்தில் செய்த எரி பொருள்) சாம்பலை எடுத்து அந்த குடுவை போன்ற கண்ணாடி குடுவை உள்ளே, சர்ம்பலை உள்ளே போட்டு துணியால் துடைத்ததும் அந்த குடுவை பளிச்சிடும் பாருங்கள் அடா அடா....

அப்போது என்ன சுட்டி டிவி குட்டி டிவி போன்ற போழுது போக்குகளா இருந்தது?. கவனம் சிதற, அதனால் எங்க அம்மா செய்யும் இந்த வேளையை இமை பிசக்காமல் பக்கத்தில் உட்கார்ந்து கவனித்து கொண்டு இருப்பேன்.

நம்ம எல்லோருக்கும் நாம் செய்யும் வேலையை பிறர் கவனித்தால் ஒரு தடிப்பு நம்மில் வந்து ஒட்டி கொள்ளுமே அது போல் கண்ணாடியை சாம்பலால் துடைக்கும் அந்த வேளையை, என் அம்மா ஏதோ அனு சக்தி ஓப்பந்தத்துக்கு கோப்பு ரெடி செய்வது போல் அந்த துடைக்கும் வேலையை செய்து கொண்டு இருப்பாள்.

இப்போதெல்லாம் லாந்தர் என்ற ஹரிக்கேன் விளக்குகளை ரஜினி,கமல் போல் அடிக்கடி பார்க்க முடிவதில்லை நடிகர் கார்த்திக்கை போல் எப்போதாவதுதான் கண்ணில் படுகின்றது.

ஆனால் அந்த விளக்கு வெளிச்சத்தில்தான் 50 பைசா அட்டை புத்தகத்தில்
அனா ஆவன்னா படித்தேன், தப்பாக எழுத்துக்களை படித்து, என் அம்மா மூஞ்சி ராட்சசியாக மாறி தலையிலும் தொடையிலும் கொலை வெறி தாக்குதல் நடத்தி தடுக்க முடியாமல் அழுது வீங்கிய கண்ணங்களுடன் வீட்டின் மூலையில் உட்கார்ந்து இருந்தது, இன்றும் என் நினைவின் ஈர அடுக்குகளில்.....


மழைகாலங்களில் அந்த லாந்தர் விளக்கு என் கூரை வீட்டின் நடு மையத்தில் உள்ள கொக்கியில் மாட்டி இருக்கும். அது காற்றில் அசையும் போதெல்லாம் எல்லா பொருட்களின் நிழல்களும் மாறுபாடு அடைந்து பக்கத்து சுவர்களில் தெரியும்.

அதுதெரியும் போது நீட்டி விழும் அந்த நிழல்களுக்கு எதாவது உருவங்களை உருவகப்படுத்தி நடு சாமம் வரை ரசிப்பேன்.

ஹரிக்கேன் விளக்கை தொட்டு பல வருடங்கள் ஓடி விட்டன இருப்பினும், அந்த மண்ணெண்னை வாசமும் அது சில நேரங்களில் பக் என்று பற்றிகொண்டதும் அலறி அடித்து அம்மாவின் தொடைகளை கட்டி கொண்டு பாதுகாப்பு தேடியதும்,விளக்கை சரி செய்து பயத்தை போக்க தலை முடி கோதி தூங்க வைத்ததை எப்படி மறப்பது.

ஹரிக்கேன் விளக்குக்கும் என் அம்மாவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது இருவருமே பணி செய்துவிட்டு பலன் எதிர்பார்க்ககாதவர்கள்.

என் அம்மா மட்டும் அல்ல, இன்னும் நிறைய குடும்பங்களின் அம்மாக்கள் ஹரிக்கேன் விளக்குகளாய் வீழ்ந்தும்,
இன்னும் வாழ்ந்தும் வருகிறார்கள்.

தன் மேல் தினமும் படியும் கரும்புகை ஜுவாலைகளை மறைத்தபடி....


என் பழைய பதியப்பாடாத வாழ்கையை பதிவில் பதிய வைக்க உரிமையோடு தொடர் ஓட்டத்தில் சேர்த்த மங்களூர் சிவா என் நன்றிக்கு உரியவர்.

அதே போல் என் அம்மாவின் கோபத்தையும், என் அம்மாவின் பாலு ஜுவல்லர்ஸ் புன்னகையும், ரொம்ப நாட்களுக்கு பிறகு லாந்தர் விளக்கின் மஞ்சள் வெளிச்சத்தை மனதில் உருவகப்படுத்தி, அதில் என் இறந்து போன என் இளைமைக்கால அம்மாமுகத்தை பொருத்தி யோசிக்க வைத்ததிற்க்கு என் கோடன கோடி நன்றிகள்.

நன்றி மங்களூர்சிவா..

அன்புடன் /ஜாக்கிசேகர்.

(பாகம் -4)ஒரு கார் டிரைவரும், ஒரு டிரக் டிரைவரும்... (DUEL) ஆங்கிலபட சினிமா விமர்சனம்



நிறையா பேரு இந்த படத்த பார்த்து இருப்பாங்க, அது மேட்டர் காதன்டி இந்த படம் பார்க்காதவங்களுக்கான நுவீஸ் இது
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

__ நம்ப டைனோசர் படம் எடுத்த ஸ்பீல் பெர்க் துரை எடுத்த பஸ்ட்டு எடுத்த பாயாஸ்கோப் இது , அந்த ஊர்ல மாமியார் மருமக சண்ட இல்லை அதனால மூக்கு சிந்த வைக்கிற சீரியல் எடுக்க சொல்லாம ஒரு படம் எடுக்க சொன்னாங்க , ஸ்பீல்பெர்க் தன் திறமைய நிருபிச்ச படம் .



கதை தக்கனுன்டுதான். ஒருத்தன் ஒரு சிவப்பு கலர் கார்ல ஏறிஒரு வேலை விஷயமா, கலிபோர்னியா பாலைவனம் வழியா ரொம்ப துரரம் கார்ல போறான் அப்போ ஒரு டேங்கர் லாரி அவனை காரை கிராஸ் பன்னுது அப்புறம் , போய் டிவிடி வாங்கி பாருங்கன்னா .



அஞ்சாதே படத்துல மொகம் காட்டாத மொட்ட பாஸ் கூட இந்த படத்தோட இன்ஸ்பிரேஷன்தான் . குறிப்பு செலவே இல்லாம படம் எப்படி சுவாரஸ்யமா எடுக்கறது எப்படின்னு இந்த படம் கத்துதரும் எல்லா ஊடகத் துறை மாணவர்களும் தவறாம பார்க்க வேண்டிய படம்
_

படத்தை பற்றிய சுவாரசிய தகவல்கள்....



படத்தில் ஒரு டிரக்கையும் காரை வைத்து ஒரு திரில்லர் தர முடியும் என்பதை திரையுலக பிதாமகர் ஸ்பீல் பெர்க் நிறுபித்தார் ..

முதலில் தொலைகாட்சி படமாக எடுத்து பின்பு இதை முழுநீள திரைப்படமாக மாற்ற பட்டது..

எல்லோர் மனதிலும் இருக்கும் ஆழ் மனது பயத்தை தன் கதைக்கு அடி நாதமாக எடுத்துக்கொண்டார்

படம் பார்த்து விட்டு எந்த லாரியும் ஹாரன் சத்தத்ததோடு நம்மை கடந்தால் ஈரக்குலை நடுங்கும்
_____________________________________________________________________________________
அன்புடன்- ஜாக்கி சேகர் _______________________________________

(பாகம்/3) பாம் வைக்கும் டீச்சர்...... HEAVEN 2002 திரைப்பட விமர்சனம்

பாம் வைக்கும் பள்ளிகூட டீச்சர்......





பாடம் சொல்லி கொடுக்கும் டீச்சர் பாம் வைத்தால் என்னவாகும்? அதுதான் ஹெவன் படத்தின் கதை ...

ஹெவன் படத்தின் கதை....
பிலிப்பா ஒரு பிரிட்டிஷ் டீச்சர் அவள் கணவன் மோசமான மருந்து உட் கொண்ட காரணத்தால் இறக்க நேர்கிறது.
அந்த ஊரில் இருக்கும் பெரிய டான் மருந்து கம்பெனி போர்வையில் போதை மருந்துகள் தயாரிப்பதால் அந்த மருந்து பிலிப்பா கணவன் நோய்க்காக எடுத்துகொள்ள,மருந்து ஓவர் டோஸ் ஆகி டீச்சர் பிலிப்பா கணவன் இறக்க நேர்கிறது.


இந்த உண்மை கண்டு பிடித்த டீச்சர் பிலிப்பா உண்மைகளை போலீ்ஸில் சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தானே அந்த டானை கொல்லநினைக்கிறாள். கொஞ்சம் கடுகு உளுத்தம் பருப்பு,கொஞ்சம் கடலை எண்ணையில், வறுத்த ரவை கொட்டி உப்புமா செய்வது போல் ஒரு பாம் தயாரிக்கிறாள். அந்த பாம் சிறிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது

(படத்தின் இயக்குநர் Tom Tykwer, கதநாயகனுக்கும் கதநாயகிக்கும் முக்கியமான காட்சி பற்றி விளக்குகிறார்)

அந்த பாம் வெடிக்கும் போது ஒருவர் மட்டுமே இறக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வண்ணம் தாயரிக்கப்பட்டது.

இந்த படத்தின் திரைக்கதை ஆசிரியர் Krzysztof Kieslowski அபார மூளை செயலாற்றலால்,டீச்சர் பிலிப்பா அந்த மருந்து கம்பெனி டானை கொல்வதற்க்காக வைக்கப்ப்ட்ட பாம் வெடித்து இரண்டு சிறுமிகள்அவர்களின் தகப்பன், மற்றும் ஒரு வேலைகார பெண்மணிஎன நால்வர் இறக்கிறார்கள். டீச்சர் கைது செய்யபடுகிறாள்.

அவளை என்கவுன்டர் செய்ய அதிகார வர்கம் ஆவலாய் பறக்கிறது,அவளுக்கு மொழிப்பெயர்பாளனாக வரும்
FILIPPO - Giovanni Ribisi கதாநாயகன்அவளை காப்பாற்றுகிறான். அவளோடு அவன் காதல் கொள்கிறான். அவர்கள் சிறையில் இருந்து தப்பிக்கிறார்கள்,அதன் பிறகு இருவரும் பிடரியில் கால் பட ஓடுகிறார்கள், ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

அவர்கள் போலீஸில் மாட்டி க்கொண்டார்களா?அல்லது தப்பித்தார்களா? என்பதை ரொம்பவும் அற்புதமாக அலுப்பு தட்டாமல் சொல்லி இருக்கிறார்கள்..



படத்தின் சிறப்புகள்...

1. விஷீவலாய் இந்தபடம் ஒரு அற்புதமான பொக்கிஷம்

2.டீச்சர் பாம் வைக்க போகும் ஆரம்ப காட்சிகள் எதிலும் தேவை இல்லாமல் டயலாக் வைக்காமல் விஷீவலாகவே திரைக்கதை அமைத்து இருப்பது...

3.பாம் எடுத்துக்கொண்டு அவள் ரோட்டில் போகும் போது லோவ் ஆங்கிளில் ஒரு பெரிய டவர் பில்டிங் காட்டும் போது, எங்க பாட்டி ஸ்டைலில் சொல்ல வேண்டும என்றால் நம் ஈரக்கொளையே நடுங்குது...

4. தன் வைத்த பாமில் இரண்டு குழந்தைகள் இறந்தது அறிந்து டீச்சர் மயக்கம் ஆவதும் கதாநாயகன் அவள் மேல் காதல் கொள்வதும் மிக இயல்பாய் எடுக்கப்பட்டு இருக்கிறது

5. பால் வண்டியில் தப்பிக்கும் போது அவர்கள் தப்பி விட்டார்கள் என்பதை பால் வேனின் பின்புறக்கதவு திறந்து நடு ரோட்டில் பால் கேன்கள் உருள்வது டைரக்டரின் திறமைக்கு சான்று....

6. படத்தின் ஒளிப்பதிவாளர் Frank Griebe இவர் படத்தின் இரண்டாவது ஹீரோ, முக்கியமாக ஹெவன் என்று பேர் போடும் அந்த ஒரு ஈகிள் ஐ வீயுவ் ஷாட் ஒன்று போதும்...

7. படத்தின் ஈகிள் ஐ வீயுவ் ஷாட் காட்சிகள் இந்த படத்துக்கு மிகப்பெரிய பலம் மற்றும் நல்ல வீஷீவல் டேஸ்ட் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அவர்கள் தப்பி போகும் ரயிலை டாப் ஆங்கிளில் காட்டுவதும் கொள்ளை அழகு...


8.இயக்குநர் Tom Tykwer காலத்தால் அழியாத ரன் லோ லா ரன் படத்தை எடுத்த பிதாமகர்.

9.இந்த படம் 2002 ஆம் ஆண்டு வெளிவந்தது ,94 நிமிடங்கள் ஓடும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் சிலருக்கு புரியாமல் போகலாம் அப்படி புரிய வில்லை என்றால் படத்தை மறுமுறை அவர்கள் பார்க்கவேண்டும்


10.இந்த படத்தை 60செகன்ட் பிரிவியு மற்றும் த வால் ஸ்டிரிட் ஜெர்னல் போன்ற பத்திரிக்கைகள் வெகுவாய் புகழ்ந்துள்ளன

இதுவாழ்வில்தவற விடாமல் பார்க்க வேண்டிய படம். எப்போது இந்த பதிவை படித்தாலும் இந்த படத்தை பார்த்தாலும் பின்னுட்டடடம் இட்டு என்னோடு உஙக்ள் சந்தோஷங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்....


உங்கள் கருத்து மற்றும் விமர்சனங்கள் எதிர்பார்த்து காத்து இருக்கும்...


அன்புடன்/ஜாக்கிசேகர்

(பாகம்/2) பார்த்தே தீர வேண்டிய படங்கள்..........


பார்த்தே தீர வேண்டிய படங்கள் ஒரு முன்னுரை..............





ஒரு படத்தை எப்படி பார்ப்பது என்று முதலில் நீங்கள் கற்றுக் கொள்ளவேண்டும்
ஒரு படத்தை எந்த இடையூறு இல்லாமல் பார்க்க வேண்டும். படம் பார்க்க வேண்டும். அதுவும் நல்ல படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே படம் பார்க்க வேண்டும். பல பிரச்சனைகளை வைத்துக்கொண்டு படம் பார்க்க வேண்டாம்.

ஒரு திரைப்படத்தின் ஆரம்ப பத்து நிமிடங்களை ஹீக் என்று அழைப்பார்கள் அதாவது எதோ எதோ பிரச்னைகள் மற்றும் மன நிலைகளில் படம் பார்க்க வரும் ரசிகனை, அந்த படத்தின் தொடக்க காட்சிகள் அந்த படத்தோடு அந்த ரசிகனை
கட்டி போட வேண்டும்.
பொதுவாக பத்து மணிக்கு படம் என்றால் ஒன்பது ஐம்பதுக்கு தியேட்டர் உள்ளே இருக்க வேண்டும். ஆனால் நம்மவர்கள் பத்து இருபதுக்கு உள்ளே வந்து எல்லாருடை காலை மிதித்து விட்டு படம் போட்டு எவ்வளவு நேரம் இருக்கும்?என்று நம்மிடம் எறிச்சலுட்டும் கேள்வியை கேட்டுவைப்பார்கள். “எவ்வளவோ சீக்கிரமாகதான் வந்தேன் கொஞ்சம் டிராபிக்ல மாட்டிகிட்டேன்”என்று நாம் கேட்காமலே விளக்கம் எல்லாம் தருவார்கள்.

நமது படங்கள் எல்லாம் முதலில் ஹீரோ என்ட்ரி உடனே ஒரு சாங் வைத்து விடுவார்கள். நம்மாளு ஒரு தம் போட்டு வெட்டி கதை பேசி எல்லாருடைய காலை மிதிச்சு படம் போட்டு பத்து நிமிஷம் இருக்குமா? என்ற கேனை கேள்வி கேட்கும் போதுதான் நம்ம டைரக்டர்கள் மெயின் சப்ஜெக்டுக்கு வருவாங்க...(உம்) ராமராஜன் படங்கள்

சரிசார் ஹீக் படங்களுக்கு எதாவது உம் கொடுங்கள் சார் .

ஓகே தனுஷ் நடிச்ச பொல்லாதவன் படம் பார்த்து இருப்போம் அதுல, எடுத்ததும் ஹீரோ திரையை பார்த்து சில வசனம் பேசுவார், நான் ரெண்டு பேரை போட்டுட்டன், ரெண்டு பேர் தப்பிச்சு என் வீட்டுக்கு போயிருக்காங்க, அவுங்க போறதுக்குள்ள நான் வீட்டுககு போகனும். எனக்கு கால்ல ஒரு வெட்டு வேற விழுந்து இருக்கு, என்று சொல்லி நடந்து வந்து, ஒரு பல்சர் பைக் அருகே ரத்தகாயங்களுடனும் கையில் கத்தியுடன் வந்து நிற்பார்.

ரத்தகாயங்களுடனும் நிற்க்கும் ஒரு ஹீரோ எல்லாத்துக்கும் இந்த “பல்சர்பைக்”தான் காரணம் என்று சொன்னால் உங்களுக்கே மனதில் கேள்வி வரும் எப்படி இந்த பைக் காரணமாக இருக்கும்என்ற கேள்விகளோடு கவனமாக கதை மேல் ஒன்றி படம் பார்க்க துவங்குவீர்கள்.

பொதுவாக பொல்லாதவன் வெற்றிக்கு அந்த கதையுடன் பார்வையாளனை கட்டி போட்ட விதம்தான் அந்த படத்தின் வெற்றிக்குகாரணம் தறுதலை புள்ள, காதல், அப்பனை எதிர்த்தல் போன்ற பல விஷயங்கள், பார்த்து பார்த்து சலித்து போன கதை என்றாலும், அதை வெற்றிமாறன் கொடுத்த விதம் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்பேன்.

பொல்லாதவன் படத்தின் கூடுதல் வெற்றிக் காரணம் நான் முன்பே சொன்னது போல் தமிழர்கள் 15 நிமிடம் படம் ஓடி பார்ப்பவர்கள் அதனால் பொல்லாதவன் படத்தின் முதல் பத்து நிமிடங்களை பார்க்கவில்லை என்றால் திரும்பவும் அந்த படத்தினை பார்த்தே ஆக வேண்டும் அதனால் கூட அந்த படம் ஓடி இருக்கும்
( சும்மா ஜோக்கு)


சரி ஒரு படம் எப்படி இருக்கவேண்டும்? இந்த பொருளாதார பிரச்சனைகள் மிகுந்த வாழ்வில் எந்த படம் இரண்டு மூன்று நாட்கள் அந்த படத்தின் பாதிப்பு தொடர்ந்து இருக்கிறதோ அதுதான் நல்லபடம். (உம்) காதல் திரைப்படம்.

சார் எங்களுக்கு ஷகிலா நடிச்ச கனவில் கில்மா கூடதான் என் நெஞ்சிலேயே மூணு நாலு, நாளைக்கு இருக்கு அது எப்படின்னு நண்பர் நித்யயயயா போல கேள்வி கேட்க கூடாது. அந்த மாதிரி படங்கள் உங்க நெஞ்சிலயும் இருக்கும்,உங்க கு.........இருக்கும்.
( உங்க குண்டக்க மண்டக்க கேள்வியிலயும் இருக்கும்னு சொல்ல வந்தேன்)

லெட்மீ கம் டு த பாயிண்ட்....
இப்போது நான் எழுத போகும் படங்கள் சத்யஜித்ரே காலத்து பழம்காலத்து படங்கள் அல்ல....

அதே போல் சோகத்தை மட்டும் பிரதானமாக கொண்ட படங்கள் அல்ல.பொதுவாய் பிளாக் அண்டு ஓயிட் படங்களை பற்றி நான் எழுத போவது இல்லை. நான் சொல்ல போகும் படங்கள் உங்களுக்கு அந்த படம் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும்.

எனென்றால்அவார்டுவாங்கும் எல்லா படங்களும் சூப்பர் படங்கள் அல்ல, போன உலக பட விழாவுக்கு முந்தய உலக படவிழாவின் போது எழுத்தாளர்கள் சுபா வை சந்தித்தேன், அவர்கள் இருவரும் என்னுடைய நண்பர்கள் அதிலும் பாலகிருஷ்னன் எப்போதும் என்னை நினைவில் வைத்து இருப்பவர்...

அவர்கள் ஒரு உக்ரென் நாட்டு படம் பாத்து விட்டு வெறுத்து போய் வெளியே வந்தார்கள் அந்த படத்தின் கதை என்னவென்று கேட்டேன் சார் ஒருத்தன் கேமராவை பத்து நிமிஷம் பார்த்துகிட்டே இருக்கான்சார் அப்புறம் இன்னொருத்தன் காட்டுறாங்க என்ற வெறுத்துபோய் சொன்னார்கள். சில படங்கள் படம் பார்த்தவர்களை வெறுக்க வைக்கும் படங்களும் இதில் அடங்கும்



நாம் அப்படி பட்ட படங்கள் இல்லாமல் ரொம்பவும் எல்லோரையும்,என்னையும் கவர்ந்த படங்களை இனி பார்ப்போம். நீங்கள் பின்னுட்டம் மற்றும் உங்கள் ஓட்டுக்களை வைத்தே என் கலைதாகம் அதிகரிக்கும்

அன்புடன்/ ஜாக்கிசேகர்

தர்மம் ஜெயித்தது, பசுபதி பாவம் சும்மா விடவில்லை



ரஜினி நடித்த குசேலன் என்றுகுசேலன் படத்தைவிளம்பர படுத்தி 60 கோடி ரூபாய்க்கு அந்த படத்தை சாய்மீரா நிறுவனத்திடம் கவிதாலயா விற்றது ஊருக்கே தெரிந்த கதைதான்

அதே போல் குசேலன் கதை உலகத்துக்கே தெரிந்த கதைதான்.
கிருஷ்ணரை பற்றிய கதை என்றால் ரஜினி நடித்த என்று போட்டு இருக்கலாம் அதில் யாருக்கும் எந்த ஆட்சேபனை இல்லை. ஆனால் குசேலன் பற்றிய கதையில் பசுபதி நடித்த என்று தான் வர வேண்டும் அதை விடுத்து ரஜினி என்ற மனிதரின் முகத்திற்க்காக படம் ஓட வேண்டும் என்பதால் பிரதான பாத்திரம் ஏற்று நடித்த பசுபதி இசை வெளியீட்டு விழாவில் புறக்கணிக்கப்பட்டார்


வியாபார உத்திக்காக கடைசி வரை பசுபதி இருட்டடிப்பு செய்யப்பட்டார். குசேலன் நாளை ரிலீஸ் என்ற நிலையில் அவர் போட்டோ சுவரொட்டிகளில்
தோன்ற ஆரம்பித்தார்... இது பற்றிய பதிவு ஏற்க்கனவே எழுதி இருக்கிறேன்


இந்த கூத்துக்ளை எல்லோரும் அறிந்ததுதான் இப்போது நஷ்டத்துக்கு ரஜினி பொறுப்பு ஏற்க்க வேண்டும் இல்லை என்றால் ரஜினி படத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் போர்க் கொடி உயர்த்தி உள்ளார்கள்

பசுபதி ரொம்பவும் சந்தோஷமாக இருப்பதாக தகவல்.............


அன்புடன்/ ஜாக்கிசேகர்

(பாகம்/1)அனைத்து வலைபதிவர்களுக்கும் ஒரு அறிவிப்பு....






பொதுவாய் நான் வலைபதிவுலகுக்கு வந்து மூன்று மாதங்கள்தான் ஆகின்றது. ஆனால் இதுவரை 9304 பேர் என் பதிவை வாசித்து விட்டார்கள்... என் எழுத்து ரசிக்க தக்கதாகவே இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். இறைவனுக்கும் நன்றி.எனக்கு தமிழ் புதினங்கள் வாசிக்க கற்று கொடுத்த என் அன்னைக்கும் என் நன்றிகள். சில விஷயங்களை சுவை பட எழுதிகிறேன் என்பது எனக்கே தெரிகின்றது .

என் பதிவுகளை மாற்று வலை பக்கத்தில் தொடர்ந்து இடம் கொடுக்கும் நண்பர்களுக்கும், மற்றும் பல வாசக நண்பர்கள் என் பக்கத்தினை லிங்க் கொடுத்து மற்றவருக்கு படிக்க உதவியாய் இருந்தவர்களுக்கும் என் நன்றிகள்


தொடர்ந்து என் பதிவை வெளியிட்டுவரும் தமிழ் மணத்துக்கு என் நன்றிகள் தேன்கூடு எப்போதாவதுதான் என் பதிவை வெளியிடுகிறது அதே போல்தான் தமிழ் கனிமை மற்றும் தமிழ் வெளி போன்றவைகள் எல்லாம்......




மூன்று மாதங்களுக்கு முன் என் வீட்டுக்கு எதெச்சையாக வந்த நண்பர் நித்யா
http://nithyakumaaran.blogspot.com/ பதிவை துவக்கி கொடுத்தார்.அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். எற்கனவே பதிவுகள் பற்றி தெரிந்து இருந்தாலும், என் தயக்கங்களை உடைத்து என்னை உற்சாகபடுத்தியது நித்யாதான்.

பொதுவாய் பிறர் வலைதளம் சென்றாலும் கருத்து மோதலில் சிக்காமல் இருக்கவே நான் ஆசைபடுபவன் இருப்பினும் என் எழுத்துக்ளை தொடர்ந்து வாசித்து பின்னுட்டம் இட்டும் உற்சாக படுததிவரும் பதிவர்கள், மங்களுர் சிவா, வெண்பூ,நித்யா,இவன், கிரி,போன்ற சில முகம் தெரியாத பதிவர்களுக்கு என் நன்றிகள்.

மங்களுர் சிவா ஒரு படி மேலே போய் அவர் பதிவில் எனது பதிவை இனைக்க அவர் பதிவு மூலமாக நிறைய பேர் வாசிக்கிறார்கள் திரு மங்களுர் சிவாவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்


நான் நிறைய படங்கள் பார்ப்பவன், நான் ஒரு கேமராமேன். நான் இதுவரை முன்று குறும்படக்ள் இயக்கி இருக்கிறேன். நான் இயக்கிய முதல் படம் துளிர் எனும் படம் மாநில அளவிலான குறும்பட போட்டியில் முன்றாம் பரிசு பெற்றது.

நிறைய உலக பட விழாக்களில் கலந்து கொண்டு இருக்கிறேன்.யார் யாரோ படங்களின் விமர்சனங்கள் எழுதும் போது,
நான் ரசித்த நெகிழ்ந்து போய் கண்களில் ஜலம் வைத்து பார்த்த படங்களை

“பார்த்தே தீர வேண்டிய படங்கள்”

எனும் தலைப்பில் எழுத போகிறேன் உங்கள் மேலான கருத்துக்களையும் ஆதரவுகளையும் கொடுக்க வேண்டுகிறேன்.

இதில் எந்த நாட்டு மொழிப்படமாக இருந்தாலும் அது இந்த வரிசையில் இருக்கும். அது வாசகர்கள் முன்பே பார்த்த படமாக கூட இருக்கலாம்.

எல்லா நல்ல படங்களையும் இந்த அடைப்புக்குள் சேர்க்க வேண்டும் என்பதே என் எண்ணம்

அன்புடன்/ ஜாக்கிசேகர்

நல்ல படங்களை புறக்கணி்க்கும் நம்மவர்கள்....


நல்ல படங்களை தமிழர்கள் புறக்கனிப்பது என்பது இன்று நேற்று நடக்கும் விஷயம்ல்ல , சில படங்கள் நல்ல விளம்பர படுத்தபட்டும் சரியாக ஓடாது. சில படங்கள் காதநாயகர்களின் ரசிகர்களின் போட்டியால் படங்கள் படு தோல்வி அடையும்

சில படங்கள் மிக நன்றாக இருந்தும் படம் வாங்கிய வினியோகஸ்தர்கள்,மற்றும் இயக்குநர்கள்,தயாரிப்பாளர்கள் அலட்சியத்தால் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களின், சினிமா பற்றிய புரிதல் காரணமாக படம் ஓடாமல் போய்விடும் அந்த வகையில் நேற்று சன் டிவியில் ஒளிபரப்பான கண்னா அந்த வகையை சார்ந்தது அல்லது மேலுள்ள லிஸ்ட்டில் சேர்க்கபட்டவை எனலாம்.

கண்னா படம் பற்றி ஒரு சிறு விமர்சனம்...

கோவையில் ஒரு பணக்காரர் பிரகாஷ்ராஜ் மற்றும் அவர் மனைவி சரண்யா இந்த தம்பதிகளுக்கு ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் பெண். மற்றும் ஒரு பையன் இருக்கிறார்கள்.பெண் ஊட்டிக்கு சுற்றலா செல்கையில் அங்கு கண்னா எனும் வாலிப வயதுடைய பையன், அந்த பெண்ணுக்கு பழக்கம் ஆகிறான். சுற்றுலா முடிந்து வந்தாலும் அந்த பையன் ஞாபகமாக இருக்கும் அந்த பெண் பெற்றோருக்கு தெரியாமல் ஊட்டிக்கு சென்று அந்த பையனை சந்திக்க விருப்புகிறாள் அந்த பத்தாம் வகுப்பு படித்த அந்த பெண் அந்த கண்னா என்ற பையனை சந்தித்தாளா? அந்த பத்தாம் வகுப்பு பருவ பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைகள் என்ன? என்பதுதான் கதை .


தமிழில் இந்த மாதிரி கதை முயற்ச்சிகள் எப்போதாவது அத்தி பூத்தாற் போல் நடக்கும் விஷயங்கள். இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு பிரகாஷ் ராஜுக்கு கொடுத்த சம்பளமாவது கிடைத்து இருக்குமா என்பது தெரியவில்லை.

பெண்னை கானோம் என்றதும் பிரகாஷ்ராஜ் ஒரு நடுத்தர தகப்பனின் அவஸ்தையை மிக அழகாக வெளிபடுத்தி இருக்கிறார் அதே போல் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷுலா பெரும்பாலான படங்களில் தன் மார்பையும், இடுப்பையும் நம்மி களம் இறங்கும் இவர் இந்த படத்தில் தன் நடிப்பை நம்மி களம் இறங்கி இருக்கிறார் அது நன்றாகவே கை கொடுத்து இருக்கிறார்.


பெண் கிடைத்த உடன் எந்த ஆர்பாட்டமும் இல்லாமல்அந்த பெண்னை அனைத்து கொண்டு தேற்றுகிறார்கள் பாருங்கள் அது ஒன்று போதும் இது நல்ல படம் என்று உணர்த்த...


படத்தை இயக்கிய திரு ஆனந் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.படத்தில் எந்த லாபமும் கிடைத்து இருக்காது.இருப்பினும் இந்த மாதிரி கதைகளை படமாக்க முன் வந்த தயாரிப்பாளருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்


அன்புடன் /ஜாக்கிசேகர்

விஜய் டிவியிடம் இருந்து மற்ற டிவிக்கள் கற்றுக் கொள்ள வேண்டும்

விஜய் டிவி சதந்திர தின நிகழ்ச்சிகள் நேற்று ஒளிபரப்பியது. அதில் அவர்கள் சாதனை செய்த தமிழர்களின் பெயர், மற்றும்அவர்கள் எந்த துறையில் சாதனை செய்தார்கள் என்ற தகவல்களை ஒளிபரப்பியதோடு அவர்களுக்கு விஜய் டிவி தனது நன்றியை தெரிவித்து “தமிழன் என்று சொல்லடா” என்று வீர முழக்கம் இட்டது. சாதனை செய்த தமிழர்களுக்கு அங்கிகாரம் அளிக்கும் விதமாக பாரட்டு சொன்னது மனதுக்கு மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது.

சாதனை தமிழர்களை நமது சுதந்திர தின நாளில் அவர்களை பெருமை படுத்திய விஜய் டிவிக்கு இந்த ஜாக்கிசேகரின் நெஞ்சார்ந்த நன்றிகள் பல....

தொடரட்டும் விஜய் டிவியின் சமுதாய பணிகள்
வாழ்த்துக்கள்

அன்புடன்/ ஜாக்கிசேகர்

(பாகம் 9) மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங்கிய சாப்ட்வேர் இளைஞனின் சோக கதை


கமல் விபத்தில் இறந்து பாடியை கமல் குடும்பத்தினர்பெற்று கல்பாக்கம் வந்து நிருவுக்கு தகவல் சொல்லினர். இனி நடந்தவைகளை சிறுதுளிகளாக பார்க்கலாம்


1. நிருவுக்கு கமல் இறந்த தகவல் சொன்னதும் அவள் எதையாவது கிடைத்ததை உடுத்தி வராமல் ஜீன்ஸ் பேண்டும் டீ ஷர்ட்டுமாக வந்த போது எல்லோரும் வாயடைந்து போனார்கள். அதுவும் இடுப்பில் பெல்ட் அணிந்து செல்போன் பவுச் மாட்டி வந்த போது இறுதி சடங்குக்கு வந்தவர்கள் மற்றும் பெண்கள் இது பற்றி அதிகம் பேசினர்.

2, கமல் இறப்பதற்க்கு முன்று மாதங்களுக்கு முன்பு நிரு சாயலில் உள்ள ஒரு பெண்ணை இ சி ஆர் ரோட்டில் ஒரு இளவயது ஆணுடன் பைக்கில் பார்த்ததாக சொன்ன போது கமல் அதை நம்ப மறுத்தான்

3. செய்தி கேள்வி பட்டதும் 15 டெம்போ டிராவலர் வேன்களில் எல்லாபெங்களுர் நண்பர்களும் பாலினம் பார்க்காமல் வயது வித்தியாசம் பார்க்காமல் வந்து சேர்ந்தனர்

4. இறுதி சடங்கு முழு செலவுகளை கமல் பெங்களுர் நண்பர்கள் ஏற்றனர்.

5. கமலின் பெண் குழந்தைகளை சாவுக்கு வந்தவர்கள் எல்லோரும் பரிதாபமாக பார்த்தனர்

6. நிரு என்னதான் உழுது புரண்டு அழுதாலும் அவள் இன்னும் ஒரு வருடத்தில் வேறு ஒருவனை நிச்சயமாக அவள் திருமணம் செய்து கொள்வாள் என எல்லா பெண்களும் சத்தியம் செய்யாத கறையாக பேசினார்கள்

7.பெங்களுர் நண்பர்கள் ஒரு நல்ல நண்பனுக்கு இப்படி ஒரு முடிவா என அழுது புரண்டனர்


8.கமல் குடும்பம் மற்றும் அவன் தெரு நண்பர்கள் , சுற்றம் எல்லோரும் எல்லா கடவுள்களையும் சபித்தனர்


9.கமல் பெங்களுர் நண்பர்கள் எல்லோரும் ரூபாய் 25 லட்சம் பணம் திரட்டிஇரண்டு மாதத்திற்க்கு பிறகு கமல் பெயரில் ஒருடிரஸ்ட் ஆரம்பித்து எழை குழந்தைகளுக்கு உதவி செய்ய ஆரம்பித்தனர். நிருவின் பெற்றோர் சாவுக்கு வந்து போனதோடு சரிஅதற்க்கு பிறகு அவர்கள் பிரேமில் வரவே இல்லை.


10.விபத்தில் கமலுடன் இருந்த நண்பன் இன்னமும் மனநல மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வருகிறான்


(முற்றும்)


அன்புடன்/ஜாக்கிசேகர்

இந்தியாவில் ராஜீவ்காந்தி, இந்திரா உயிர்கள் மட்டும்தான் நெய்யில் பொறித்ததா மற்ற உயிர்கள் எல்லாம் ????





மறைந்த இந்திய பிரதமர்கள் இந்திரா அவர் மகன் ராஜீவ் காந்தி ஆகியோர் இந்தியமண்ணில் கொடுரமாக கொலை செய்யப்பட்டார்கள். உடனே குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டார்கள். இரண்டு கொலைகளும்,ஒரு இனத்தை சீண்டி பார்க்க அது கொலைகளில் முடிந்தது.

ஆனால் மூன்று வருடத்தில் இந்தியாவில் இதுவரை 494 போ் குண்டு வெடிப்புகளில் இறந்தும் முற்றிலும் தீவரவாதத்தை வேரருக்கவும் வில்லை, முக்கிய குற்றவாளிகளை கைது செய்யவும் இல்லை.


பொற்கோவிலில் ராணுவத்தை நிறுத்தினார்பிரதமர் இந்திரா என்பது முதல் கொலைக்கான காரணம் .

கால ஓட்டத்தில் சிக்கியர்கள் மன்னிக்கப்பட்டார்கள். அந்த இனத்தை சேர்ந்த மன்மோகன்சிங் இன்று பிரதமர்.

ராஜீவ்காந்தி கொலை,அதே போன்ற ஒரு அரசியல் கொலைதான், இலங்கைக்கு இந்திய அமைதிபடை அனுப்பி ஜெயவர்தனே வஞ்சக சூழ்சசியால் இந்தியர்களை விட்டே தமிழர்களின் வீடுகள் மற்றும் கற்புகள் சூறையாட பட்டன. அதுதான் இரண்டாம் கொலைக்கான காரணம்.

னால் இன்று வரை,விடுதலைபுலி இயக்கம் இந்தியாவில் தடை செய்ய பட்ட இயக்கமாக இருக்கிறது. இந்தய மண்ணில் அவர்கள் செய்த செயலுக்கு அவர்கள் இன்றளவும் வருத்தம் கொள்கிறார்கள். இருப்பினும் அவர்களை நாம் மன்னிக்க தயாரில்லை.


ராஜீவ் மகள் பிரியங்கா காந்தியே அது ஒரு துன்பியலான சம்பவம் என்றாலும் தமிழக காங்கரஸ் காரர்கள் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் தமிழகத்தில் அரசியல் நடத்த அவர்களுக்கு இதை விட்டால் வேறு வழியில்லை


இந்த மூன்று வருடங்களில் 494 பேர் இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு இறந்து போய் உள்ளனர்
ஆனால் இதுவரை எந்த அமைப்பையும் தடை செய்யவில்லை, அப்படி தடை செய்தாலும் கண்கானிப்பு வலையத்துக்கு உட்படுத்த பட வில்லை.
எனென்றல் ஓட்டு போய் விடும் என்ற பயம்.

இதனால் பல இஸ்லாமிய சகோதரர்கள் குஜராத் கலவரம் போல் ஏதாவது ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சுகின்றனர்.
வேற்றுமையில் ஒற்றுமைகாணும் நமது நாடு இன்னும் கொஞ்சம் விழிப்பாக இருக்க வேண்டும்

இந்த மூன்று வருடத்தில் தீவிரவாதத்தால் இறந்து போன494 பேரும் இந்திரா,ராஜீவ் போல் ரத்தமும் சதையுமுள்ள மனிதர்கள் என்பதை நாம் மறக்ககூடாது.

இரண்டு மூன்று தாக்குதல் செய்த விடுதலைபுலிகள் மீது இன்றளவும் இந்தியாவில் தடை இருக்கிறது . ஆனால் நம்மோடு கலந்து பழகும் மக்களோடு மக்களாக தீவிரவாதிகள் கலந்து போய் உள்ளார்கள்

இந்தியாவில் பிறந்த அனைத்து உயிர்களையும் சமமாக நடத்தப்படவேண்டும் என்பதே என் வேண்டுகோள் அதில் ராஜீவ் உயிருக்கு ஒரு மதிப்பு மற்றவர்களுக்கு ஒரு மதிப்பு என்ற பாகு பாடு வேண்டாம்.
அதே போல் ராஜீவ் கொலையை நியாயப்படுததவில்லை.

அகமதாபாத் குண்டு வெடிப்பின் போது ஒரு முஸ்லீம் பெரியவர், டிவியில் பேட்டி கொடுக்கும் போது,பொது மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் எல்லோரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்த போது அந்த பெரியவர் கண்களில் பயம் தெரிந்தது. அது போன்ற நிலை இனி ஏற்படக்கூடாது இனி மத்திய அரசு முற்றிலும் விழிப்பாக இருக்கவேண்டும்,


இந்திய உளவுத்துறை துயில்கலைந்து எழ வேண்டும்....இந்தியாவில் எல்லா உயிர்களும் விலை மதிக்க முடியாதது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்


அன்புடன்/ஜாக்கிசேகர்

கமலின் மர்மயோகி திரைப்படநிழற்படங்கள் ........உங்களுக்காக.....



































எற்கனவே இந்த படங்கள் இனையத்தில் வெளிவந்து இருந்தாலும் இநத படங்
கள் பார்க்காதவர்களுக்கு

அன்புடன்/ ஜாக்கிசேகர்

(பாகம்..8) மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங்கிய சாப்ட்வேர் இளைஞனின் சோக கதை




(இது கொஞ்சம் கற்பனையும் நிறைய உண்மைகளும் கொண்ட கதை)





நிரு ஆறுமாத கர்பத்துடன் வேலைக்கு சென்றால், தினமும் காரில் நிருவை அவள் ஆபிஸில் விட்டுவிட்டு செல்வான்

பல சோதனைகள் மற்றும் வேதனைகளை தான்டி இரட்டை குழந்தைகளை நிரு பெற்றாள் நிரு அம்மாவுக்கு தகவல் சொல்லி அனுப்பபட்டது. அடுத்த பிளைட் பிடித்து தாயையும் சேயையும் பார்த்து விட்டு சென்றால் போகும் போது இரண்டு லட்சம் பணக்கட்டுயை நிரு அம்மா கமலிடம் கொடுத்தால் ,தேவையான பணம் இருக்கிறது , உங்கள் அன்பு மட்டும் போதும் என்றான்.

மாப்பிள்ளை ரொம்ப ஜென்டில் மேன் போல் நடந்து கொண்டதில் நிரு அம்மாவுக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. கொஞ்சம் நாள் கழித்து நிருவின் அப்பாவும் குழந்தையை பார்க்கும் சாக்கில் வந்து ஒட்டிக்கொண்டார்

அம்மா அப்பா ஒன்று சேர்ந்ததும் நிரு மப்பு தலைக்கு ஏறிசுத்தமாக மாமனார் மாமியாரை மதிக்காமல் எடுத்து எறிந்து பேசினால் சட்டென்று ஸ்டேட்டஸ் பற்றி பேச ஆரம்பித்தால்.

கலைஞருக்கு ராமதாஸ் கொடுத்த குடைச்சல் போல் நிருவின் அனைத்து செயல்களும் இருந்தன.
நிருவன் செயல்களால் வெறுத்து போன கமல் அம்மாவும் அப்பாவும் பெஙக்ளுர் வருவதை நிறுத்திக்கொண்டார்கள். இவன் மட்டும் இரண்டு அல்லது மூன்று வாரத்திற்க்கு ஒரு முறை சென்னை வந்து பார்த்து செல்வான்.

கமலு்க்கு சம்மபளம் ஏற்றப்பட்டது எவ்வளவு தெரியுமா ?மாதம் ஒரு லட்சத்துக்கு196 ஆறு ரூபாய் கம்மியாக சம்னளம் வாங்கினான்.

சசிகலா அடம் பிடித்து டான்ஸி நிலம் வாங்க சொல்லியது போல் நிரு கமலை அடம்பிடித்து பெங்களுரில் வீடு வாங்க சொன்னாள். கமல் சென்னையில் வீடு வாங்கலாம் என்று எவ்வளவோ சொல்லியும் கெஞ்சியும் காதில் நிருபோ்ட்டு கொள்ளவில்லை.

கமல்பெங்களுரில் 65 லட்சத்துக்கு வீடு வாங்கினான். அப்போதாவது குடம்பம் நன்றாக இருக்கும் என்று நம்பினான். இரண்டு குழந்தைகளை பார்த்து கொள்வதற்க்காக நிரு அம்மா தன் மகள் கூடவே இருந்தாள்.

ஆறுமாதம் கழித்து அவள் வேலைக்குசென்றாள். கமல் எவ்வளவோ எடுத்து சொல்லியும் நிரு வேலைக்கு சென்று வந்தால், காரில் நிருவை பிக்கப் பண்ண போகும் போது எல்லாம் எல்லோரும் இந்தியர்கள் மன நிலையில் நிருவை பார்த்தார்கள்.

(இந்தியர் மன நிலை என்பது, “தன் பொண்டாட்டியை எவனும் பார்க்க கூடாது, மத்தவன் பொண்டாட்டியை எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம்”)

நிருவுக்கு அப்படி பார்பது பிடித்து இருந்தது, கமலுக்கு அப்படி இருப்பது சுத்தமாக பிடிக்கவில்லை.

கமல்எதிர்பாராத அதிர்ச்சியாக திடிரென நிரு பிள்ளைகளுடன் சென்னை செல்வதாக கூறினாள்,அங்கே தன் கம்பெனி மாறுதல் உத்தரவு தந்து இருப்பதாகவும். மாதம் 40,000ஆயிரம் கிடைக்கும் வேலையை விட தான் தாயராக இல்லை என்றாள். அதற்க்கு மாமியார்காரியும் ஒத்து ஊதினாள்.

வேறு வழி இல்லாமல் கமலை விட்டு விட்டு நிருவும் குழந்தைகளும் சென்னையில் குடியேறினாள். பிள்ளைகளை சென்னையல் பிரபல பள்ளியில் எல் கே ஜி சேர்த்தாள்


இதற்க்குள் தன் தங்கைக்கும் தன் தம்பிக்கும் வெகு விமர்சியாக திருமனம் செய்து வைத்தான், பெங்களுர் நண்பர்கள் பலருக்கு கேட்காமலேயே உதவி செய்தான்,

மூளை கசக்கும் வேலை செய்து வீட்டுக்க வந்தால், தன் குழந்தைகளும் மனைவியும் சென்னையில் இருப்பதால்,தன் சொந்த வீட்டில் மிக வெறுமையாக உணர்ந்தான்.

மாதம் இரண்டு முறை பெங்களுரில் இருந்து கார்மூலம் சென்னை வந்து முதலில் கல்பாக்கம் போய் அம்மா அப்பாவை பார்த்து விட்டு பிறகு மாமியார் வீடு சென்று குழந்தைகளை பார்த்து விட்டு ஞாயிறு விடியலில் காரில் பெங்களுர் செல்வான். தனைக்கு சென்னையில் இருந்து பெங்களு்ரில் தங்கி வேலைபார்க்கும் நண்பர்கள் காரில் வருவார்கள்

சனிக்கிழமை மாமியார் வீட்டில் இருந்து ஞாயிற்று கிழமை தன் அம்மாவீட்டுக்கு தன் குழந்தைகள் மற்றும் நிருவை அழைத்தால் ரொம்பவே ஷோ காட்டுவாள். கமல் வீட்டில் இருக்கும் போது எப்போதும் உம் என்று உட்கார்ந்து இருப்பாள்

மாதம்ஒருலட்சம் வரை சம்பாதித்தும் தனக்கு ஏன் நிம்மதி இல்லை என்று புலம்பினான். பணம் மட்டும் இருந்தால் நிம்மதி இருக்கும் என்று சொன்னவர்களை கமல் புன்சிரிப்புடன் பார்த்தான். கமல் உனக்கு என்னடா கவலை பொண்டாட்டி 40,000 ஆயிரம் சம்பாதிக்கிறா, நீ ஒரு லட்சம் சம்பாதிக்கிற என்று கல்பாக்கம் நண்பர்கள் கேலி செய்யும் போது கமல் மனதுக்குள் அழுதான்...

கமல் தன் பிள்ளைகள் பேரில் 5 ஏக்கர் நில்ம் செங்கல்பட்டு அருகே நிலம் வாங்கி விட்டு தன் நண்பர்கள் மற்றும் அம்மா அப்பாவை பார்த்து விட்டு நிரு குழந்தைகளுடன் ஊர் சுற்றி விட்டு இரவில் தன் நண்பனுடன் காரில் பெங்களுர் நோக்கி பறப்பட்டான்
வாணயம்பாடிக்கு பக்கத்தில் ஒரு டீக்கடைக்கு சற்றுதள்ளி காரை நிறுத்தி விட்டு இயற்கை உபாதை முடித்து டீ குடித்து விட்டு காரில் முதலில் கமல் நண்பன் உட்கார கார் பின் புறமாக கமல் நடந்து வந்து டிரைவிங் சீட்டில் உட்கார எத்தனிக்கும் போது பெங்களுர் செல்லும் லாரி கண்இமைக்கும் நேரத்தில் கமல் மீது மோதியது சத்தம் பெரிதாகவும் கேட்கவில்லை .

காரில் உட்கார்ந்த கமல் நண்பன் ஏன் இன்னும் கமல் ஏறவில்லை என்று கார் விடடு இறங்கி காரை சுற்றி வந்து கமலை பார்த்த போது மூன்று நிமிடத்துக்கு முன் கலகலப்பாக பேசிய கமல் தன் ஒரு பக்க முகத்தை இழந்து ரத்த வெள்ளத்தில் துடிப்பதை பார்த்து அதிர்ச்சியில் கமல் நண்பன் தரையில் சாய,


ரொம்ப நேரமாக டீ குடித்து போயு்ம் அந்த கார் நகராமல் இருப்பதை பார்த்து டீகடைகாரர் மகன் கார் அருகே வந்து பார்த்த போது,
கமல் ஒரு ப்க்க முகம் சிதைந்து துடித்து கொண்டு இருப்பதையும் ஒருவர் சுய நினைவின்றி இருப்பதை பார்த்து ஆம்புலண்ஸ்க்கும் போலிஸிக்கும் தகவல் கொடுக்க,


ஆம்புலண்ஸ் மற்றும் போலீஸ் இரண்டும் சவகாசமாக வந்து சேர்ந்த போது கமல் நண்பன் பேய் பிடித்தது போல் பேந்த பேந்த விழிக்க,

கமல் என்ற, ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய சப்ட்வேர் இளைஞன் முகம் சிதைந்து ஏன் சாகிறோம் என்று தெரியாமலேயே செத்து போனான்

பொது மக்கள் கமலை“ பாடி” என்று அழைத்த போது கமலின் பெற்றோர் வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனை சவகிடங்குக்கு அலறலுடன் வந்து சேர்ந்தார்கள்.....

(தொடரும்)

ஜாக்கிசேகர்

பாலச்சந்தருக்கும், ரஜினிக்கும் கோடன கோடி நன்றிகள்...
















சென்னை நகரெங்கும் உச்ச நடிகர் ரஜினி நடிக்கும் குசேலன் பட சுவரொட்டிகள் இப்போதுதான் பார்க்க நேர்ந்தது,

அதில் பசுபதி என்ற நடிகர் கூட நடிக்கிறார் போல் தெரிகிறது. படத்தில் நடிக்கவில்லை என்றால் பட போஸ்டரில் வரமுடியுமா? என்ன..

பாடல் வெளியீட்டு விழாவில் கூட ரஜினி அவர்களின் படம் தவிர வேறு எவருடைய படமும் அதில் இல்லை,

குசேலன் கதை என்ன என்று சிறு வயது முதலே நன்றாக தெரியும் அவல் கொடுத்த கதையும் அல்வா கொடுத்த கதையும் எல்லோருக்கும் தெரிந்தததே...

அதே போல் ரஜினி அங்கிள் இங்க இங்க என்று அஹஹ என்று அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில்சிரிக்குமே அந்த பொண்ணு பேரு என்ன? மீனாவா அந்த பொண்ணு கூட நடிச்சிருக்குப்பா...

இருப்பினும் வியாபார தந்திரத்துக்காக பசுபதி படம் பாடல் வெளியீட்டு விழா சவரொட்டியில் விடுபட்டு இருக்கலாம்

இப்போதாவது பசுபதி படத்தை சுவரொட்டியில் சேர்த்தார்களே அதற்க்காக உச்ச நடிகர் ரஜினிக்கும், பெருமை நிகர் நிறுவனமான கவிதாலயா நிறுவனத்துக்கும் என் நன்றிகள்

சினிமா ஒரு கூட்டு முயற்சி என்று எங்கோ படித்ததாக ஞாபகம்...

இந்த சனியம் புடிச்ச ஞாபகம் இந்த மாதிரி வரி எல்லாத்தையும் சுதி மதி இல்லாம ஞாபகபடுத்தி தொலைக்குது




அன்புடன்/ ஜாக்கிசேகர்

இந்தியாவில் நடுத்தர குடிமக்கள் பயமின்றி உயிரோடு வாழ ஒரு எளிய வழி.....


புரூஸ் வில்லீஸ் மற்றும் சாமுவேல் ஜாக்சன் இருவரும் கலக்கிய படம் டைஹார்ட் பார்ட்3 அதே போல் இந்தியாவின் தொழில் நகரான சூரத் நகரில் 18 இடங்களில் வெடிக்காத குண்டுகள் கண்டுபிடித்து உள்ளது காவல்துறை அது மட்டும் வெடித்து இருந்தால் சொல்ல முடியாத அளவுக்கு உயிர் சேதம் பொருட் சேதம் ஏற்பட்டு இருக்கும்.


முக்கிய முடிவுகள் எடுக்க முதலமைச்சர் கூட்டம் ஏற்பாடு செய்து பல முக்கிய முடிவுகள் தீவிர வாதிகளுக்கு எதிராக ,எடுக்க உ ள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்தது ஆனால் இதுவரை கூட்டவில்லை....

ராஜசேகர ரெட்டி ஆப்பிரிக்காவில் இருக்கிறார், கருணாநிதி அமெரிக்காவில் இருக்கிறார், எடியுரப்ப ஆர்டிக் பிரதேசத்தில் இருக்கிறார் பாருங்கள் இன்னும் முதலமைச்சர் கூட்டத்தை கூட்டடவில்லை.

பொதுவாக இதுவரை 50 பேர்தான் செத்து இருக்கிறார்கள், இன்னும் சாவு எண்ணிக்கை கூடும் போது யோசிப்பார்பகள் போலும்......


நாளை பள்ளிகல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளதுசூரத் மாவட்ட நிர்வாகம்..



போர்கால நடவடிக்கை என்றால் என்ன என்று இதுவரை இந்திய அரசு உணரவில்லை


பெங்களுரில் வெள்ளிக்கிழமை இறந்த இரண்டு பேரை பற்றி நாம் என்ன பெரிதாக கவலைபட்டுவிட முடியும்...
அவர்கள் குழந்தைகளுக்கு என்ன செய்து விடமுடியும் இந்திய அரசு கொடுக்கும் நிவாரன பணம் ஒருலட்சம் ரூபாய். ஒரு
எல் கே ஜி சீட் கூட வாங்க முடியாது....


நாம் கையலாகத நடுத்தர வர்கம் தானே, மிஞ்சி போனால் பிளாக் எழுதலாம் அல்லது ஹின்டுவுக்கு லட்டர் டு தி எடிட்டர் எழுதலாம்

இந்தியராய் பிறந்து உயிரோடு இருக்க வேண்டும் என்றால் அடுத்த ஜென்மத்தில் , சோனியா ,மன்மோகன்சிங்,அத்வானி,சிவராஜ்பாட்டில்,பிரனாப்முகர்சி, லாலூ போன்றவர்களுக்கு மகனாக,மகளாக பிறப்பதை தவிர வேறு வழியில்லை.

எனக்கு இதுவரை இதை தவிர வேறு வழி தெரியவில்லை, உங்களுக்கு??????????????????????????????????????????????????????????????????????


அன்புடன்/ ஜாக்கிசேகர்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner