குமுதம் ரிப்போர்ட்டருக்கு எனது நன்றிகள்..



இப்போது வெளியாகி இருக்கும் குஷ்பு அட்டடைபடம் போட்ட குமுதம் ரிப்போர்டரில் எனது கட்டுரை வெளியாகி இருக்குகின்றது....எவரைக்குற்றம் சொல்ல என்று ஒரு கட்டுரை சில  நாட்களுக்கு முன் நம் தளத்தில்  எழுதினேன்.. 


அதில் பெங்களுர் பயர் சர்விஸ் ஆட்களின் அலட்சியத்தால் ஒரு இளம் பெண் இறந்து போனதை பதிவு செய்து இருந்தேன்... அந்த கட்டுரையின் ஒரு பகுதியை குமுதம் ரிப்போர்டரின் நச் என்ற பகுதியில் வெளியிட்டு இருக்கின்றார்கள்.. 

கீழே நமது தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்று எழுதி இருந்தார்கள்..முதலில்  அதை பின்னுட்டத்தில் தெரிவித்த நண்பர் சரோ அவர்களுக்கு என் நன்றிகள்..ஆனால் அதை நான் நம்பவில்லை.. நேற்று  இரவு  வடகரைவேலன் அண்ணாச்சி போன் செய்து  தம்பி அப்துல்லா கட்டுரையை படித்து விட்டார் உங்களிடம் தகவலை சொல்ல சொன்னார் என்று சொன்ன போதுதான் நான் நேற்று பதினோரு மணிக்கு மேல் அலைந்து திரிந்து நம்பிக்கையுடன் அந்த புத்தகத்தை வாங்கி வாசித்தேன்.. கட்டுரை வெளியிட்ட குமுதம் ரிப்போர்ட்டருக்கு மிக்க நன்றி...

அந்த கட்டுரையை நான் பெங்களூரில் இருக்கும் போது பத்திரிக்கையில் வந்த தகவல்கள் அடிப்படையில் எழுதினேன்..நான் எழுதிய கட்டுரை கீழே.... எவரை குற்றம் சொல்ல வாசிக்க கிளிக்கவும்.



அந்த பெண் சாப்ட்வேர் கம்பெனியில் எஞ்சினியர்...நல்ல சம்பளம் இன்னும் திருமணமாகவில்லை.. வழக்கம் போல அவள் அலுவலகம் வருகின்றாள்... அவள் அலுவலகம் அமைந்து இருக்கும் இடம் மிகப்பெரிய ஆறு மாடிக்கட்டிடம்.. வேலை நேரத்தின் போது பெங்களூர் தீயணைப்புத்துறை வீரர்கள்.. தீயணைப்பு வாகனத்துடன் வந்து அந்த கட்டிடத்தில் இருக்கும் அனைவருக்கும்......... உங்கள் கட்டிடத்தில் தீ பிடித்தால் அவசரகாலத்தில்  நீங்கள் என்ன என்ன செய்ய வேண்டும் என்று விளக்க நிகழ்ச்சி செய்ய இருக்கின்றோம்.. உங்கள் ஒத்துழைப்பு வேண்டும் என்று தீயணைப்பு சொல்ல, நிர்வாகமும் அனுமதிக்கின்றது..

வேலை நேரத்தில் அத்தனை பேரும் கட்டிடத்தின் ஒரு மூலையில் நிற்க..... தீயணைப்பு துறை தனது டெமோவை அரங்கேற்றியது... நான்காவது மாடியில் நன்றாக தீ பிடித்து  எரிந்தால் எப்படி தப்பிக்க வேண்டும்..?நீங்கள் தீயணைப்பு துறையோடு எப்படி ஒத்துழைக்க வேண்டும் என்று டெமோ செய்துக்காட்ட நினைத்தது தீயணைப்பு துறை..

கயிற்றில் கட்டி ஒருவரை இறக்க வேண்டும்... யாரை அழைக்கலாம் என்று அவர்கள் நினைத்துக்கொண்டு இருக்கும் போது, அவர்கள் கண்ணில் திருமணமாகாத அந்த இளம் என்ஜினியர் பெண் மாட்டினாள்...

அவளை அழைத்த போது யப்பா எனக்கு மேல இருந்து கீழ பார்த்தாலே தலை சுற்றும்.. என்னை விட்டு விடுங்க.. என்று எவ்வளவோ சொல்லியும் அவளை வற்புறுத்தி அழைத்து வந்து கயிற்றில் கட்டி அவளை நான்காவது மாடியில் இருந்து இறங்க கீழே அவளது அலுவலக ஊழியர்கள் மற்றும் அந்த கட்டிடத்தின் வேலை செய்த ஆயிரக்கனக்கான ஊழியர்கள் முன்னிலையில் முன்றாவது மாடி அருகே கயிற்றில் தொங்கியபடி வரும் அந்த பெண் வரும் போது கயிறு அறுந்து அனைவர்  கண் எதிரில் மூன்று மாடி உயரத்தில் இருந்து தரையில் விழுந்து இறந்து போனார்... 

அந்த பெண் செய்த பாவம் என்ன? தீயணைப்புதுறை சொல்லுகின்றது.. இது விபத்து என்று....... இவ்வளவு அஜாக்கிரதையாக யாராவது டெமோ செய்வார்களா? கயிற்றில் இறக்கும் போது கீழே மெத்தை போன்றவற்றை வைக்க வேண்டும் என்பது விதி...ஆனால்  அதை பின்பற்றவில்லை... கயிறு அறுந்துக்கொண்டது எதிர்பாராத விதம் என்று ஒரு வாதத்துக்கு வைத்துக்கொண்டாலும்...கீழே மெத்தை விரிப்பு வைக்காமல் அலட்ச்சியமாக இருந்தது ஏன்? எந்த பாவமும் அறியாத, காலையில்  வேலைக்கு வந்த ஒரு அப்பாவிபெண்ணை சாகடித்து விட்டார்கள்.. விபத்து என்று கேஸ் பைல் ஆகிவிட்டது.. வழக்கம் போல  நாங்க என்ன செய்ய முடியும்..? அது ஒரு எதிர்பாராத விபத்து  என்று தீயனைப்பு வீரர்கள் கோர்ட்டில் சொல்லத்தான் போகின்றார்கள்...

சார் நாங்க நல்லது செய்யத்தான் டெமோ காட்ட வந்தோம்..ஆனா கயிறு அறுத்துகிச்சி.. நாங்க என்ன செய்ய முடியும்..?

ஆம் நீங்கள் என்ன செய்ய முடியும்--?? 

என்று நான் எழுதி இருந்தேன்..அதைதான் படங்களுடன் குமுதம் ரிப்போர்ட்டர் படங்களுடன் வெளியிட்டு இருக்கின்றது...

ஆனால் உண்மை வேறாக இருந்தது... பெங்களுரில் இருக்கும் வாசக நண்பி இளவரசி என்பவர் எழுதிய கடிதம் கீழே....

Dear Jackie sir,
I am from Bangalore and a regular reader of your blog. That girl who died was interested in social activities and was working in another branch of that company. She came to that branch on that day specifically to attend that fire-drill. And she volunteered as second person after a male colleague. It is sad that such a tragedy happened to her. I'm just writing this to ensure all my fellow readers should know the girl was interested in the fire-drill and came all the way there and was courageous enough to volunteer for climbing down the rope. Her death should not be told along with the fear and reluctance, because she didnt show any, atleast until the rope broke open.
And those fire-workers who were present had been suspended, except the fire-official who supervised the whole thing. It is all the same all over India, irrespective of the State. The people at the bottom get all punishment.

P.S:
That "Naked Fear" film review issue with Bhagya magazine, i found it on the day the magazine came to stands. But i was in my native, and i didn't have internet. So i couldn't inform you. Just thought of letting you know that your fans are out there wishing you well, even if they are not in contact.

Thanks,
Elavarasi Mahendiran
===================
படித்த உடன் தைரியமாக வந்த ஒரு வாலிண்டியரை கண் எதிரில் அலட்சியத்தின் காரணமாக கொன்று விட்டார்கள்.. எது எப்படி இருந்தாலும் இது பக்கவான அலட்சியமானஅயோக்கியதனம்.. இந்தியாவை தவிர வேறு எங்கிலும் இது போல நடக்காது...உண்மையை எனக்கு கடிதம் மூலம் தெரிவித்த இளவரசி மகேந்திரனுக்கு எனது நன்றிகள்..

சோசியல் அவர்நஸ்சில்  அதிகம் ஆர்வம் காட்டிய அந்த தைரியமான அப்பாவி பெண்ணின் ஆத்மா சாந்தியடைய  நாம் பிரார்த்திப்போம்...






நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

6 comments:

  1. congrats jackie for your report was published in Kumudam reporter... The same thing is happening in everywhere, particulary in fire-drill demo at various software companies without pre-caution.. thanks to share.... http://www.rishvan.com

    ReplyDelete
  2. I Bought the same edition of Kumudam Reporter and while reading that page i realised that it was from your blog....

    Keep Rocking dear Brother!!!

    ReplyDelete
  3. நன்றி சுரேஷ்,டகால்ட்டி,சதிஷ்... ரொம்ப கொடுமையான விஷயம் என்ன அப்படின்னா... அந்த கயிறு தாங்கும்னு நினைச்சோம்.. என்று சொன்னதுதான்.

    ReplyDelete
  4. Congrats Jackie-ji and Happy that your good work is recognized by Kumudham.

    ReplyDelete
  5. Thank you for acknowledging my comment Jackie Sir.
    And Congrats for the report getting published in print.

    Regards,
    Elavarasi Mahendiran

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner