மெங்களுர் விமானநிலையத்தில் உறவினர்களை வரவேற்க்க வந்தவர்கள்.. தங்கள் உறவுகளை வாரி கொடுத்து விட்டு நிற்க்கின்றார்கள்...நிறைய காரணங்கள் அலசபட்டுக்கொண்டு இருந்தாலும் மாண்டவர்கள் மீண்டு வரப்போவதில்லை...நாம் நிறைய விஷங்களுக்கு சகித்து கொண்டு வாழ பழகிவிட்டோம்... லஞ்சம் கொடுக்க பழகிவிட்டோம்... எது நடந்தாலும் எனக்கு என்ன என்று கடந்து போக பழகிவிட்டோம்...
அதனால் இது போலான விஷயங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும்... அரசியல்வாதிகளை பொறுத்தவரை இது இன்னொரு கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சி அவ்வளவே...ஆனால் இது ஒரு பாடம்....என்ன இது கொஞ்சம் காஸ்ட்லியான விபத்து...
ஆனால் ரோட்டில் இந்தியாவில் சாலை விபத்துகளினால் பலியாகும் கதை தொடர்கதையாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது... இப்போதுதான் சென்னை திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் கேமரா பொறுத்தி கண் காணிக்க போகின்றார்களாம்...சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகவிட்டன....
===============
10 வகுப்பு பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வந்துவிட்டன... இன்னும் வாயில் கேக்கை வைத்துக்கொண்டு கேமராவுக்கு வாயை திறந்து கொண்டு இருக்கும் பள்ளி மாணவ மாணவிகளை பார்கக முடிந்தது...செய்தி சேகரிக்கும் நிருபர்கள் கேமரா மேன்கள் அடுத்த முறையாவது கேக்கை தின்று மகிழ்ச்சியுடன் பிள்ளைகள் சந்தோஷமாக இருப்பதை காட்டவும்... அல்லது போட்டோகிராபர்கள் கேக் வாயில் வைப்பது போன்று படம் எடுத்துவிட்டு அதன்பிறகு கேமராமேன்கள் அசைவுகளான படத்தை எடுக்கலாம்...
===============
ஒரு பக்கம் அந்த மொழி பேசும் மக்கள் உலகலாவிய அரங்கில் துன்பத்தை தொடர்ந்து சந்தித்த வண்ணம் உள்ளனர் மலேசியாவில் உதை... காலம்காலமாக இலங்கையில் அடிமை வாழ்க்கை...ஒரு போராளியின் தலையை அறுத்து புலி கொடி போர்த்தி சாகடித்த படங்கள் வெளியாகி உலகலாவிய அரங்கில் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்க...கேட்க நாதியில்லாமல் நடைபினமாய் இலங்கை தமிழ் மக்கள் ஆனால் அந்த மொழிக்கு ஒரு மாநாடு தாயகத்தில் கோலகலமாய் தொடங்க போகின்றது....வாழ்த்துக்கள்...
=============================
மிக்சர்
வாழ்த்துக்கள்...
பதிவர் கலையரசன் நேற்றில் இருந்து குடும்பஸ்தனாக மாறிவிட்டார்.. அவரின் திருமணத்துக்கு போய் இருக்க வேண்டும் ஆனால் எனக்கு எக்சாம் இருந்த காரணத்தால் என்னால் போக முடியவில்லை..... இருப்பினும் மணமக்கள் நீடுடி வாழ எல்லாம் வல்ல பரம் பொருளை பிராத்திக்கின்றேன்...நீங்களும் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவியுங்கள்...
===============
4வது முறையாக உலக சாம்பியன் பட்டம் பெற்ற நம்ம விச்சுவுக்கு அதான் நம்ம விஸ்வநாதன் ஆனந்துக்கு நமது வாழ்த்துக்களும் நன்றியும்....விமான நிலையத்தில் பேரும்திரளானவர்கள் எல்லாம் இல்லை... கொஞ்சம் பேர்தான் இருந்தார்கள்...நம்ம புத்தி அப்படித்தான்...
================
நன்றிகள்...
வெந்த புண்ணில் பிரபாபகரனை பாய்சாதீர்கள் பதிவுக்கு நிறைய நன்றிகடிதங்கள்...நாங்கள் நினைத்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள் என்பதாய் உருக்கமான கடிதங்கள் வந்தன...நான் என் சமுகத்தில் நடந்த நிகழ்வினை எழுது இருக்கின்றேன்...அவ்வளவே..மதுரை நண்பர் சுவாமி நேற்று கூட அலைபேசியில் என்னிடத்தில் அந்த பதிவை பற்றி தனது கருத்தைபகிர்ந்து கொண்டார்... பதிவர்கள் பலர் சாட்டில் வந்து தங்களது கருத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டனர்..
===========
ஒரு வழியாக எம்ஏ எக்சாம் முடிந்தது... வாழ்த்து சொன்ன அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்..நிறைய நாட்களுக்கு பிறகு பேனா பிடிப்பதால் முதல் நாள் எக்சாமின் போது பதட்டத்தில் கை நடுங்க ஆரம்பித்து விட்டது..கையெழுத்து ஹெமுராபியின் சித்திர வடிவ எழுத்துக்களை போல் இருந்தது...எக்சாம் முடிவில் ஒரு நண்பர் கூட்டம் எனக்கு நண்பர்களாகியது... அவர்களை முன்னமே பிராக்டிக்கல் எக்சாமில் சந்தித்து இருக்கின்றேன்..சதிஷ்,ஸ்ரீதர்,ஆஷா,அஞ்சனா,சந்தியா என்ற ஐவர் குழு...ஒரு வயதுக்கு பிறகு படிக்க வந்த இடத்தில் நண்பர்களாக மாறுவது என்பது சாத்திய குறைவுகளில் ஒன்றான விஷயம்...இரண்டு வருடங்களில் இந்த நண்பர்கள் குழு இனைந்தே இருக்கின்றது...இதில் ஸ்ரீதர் என் பிளாக்கை தினமும் வாசிப்பவர்...எல்லோரும் ஒரே கோர்ஸ் என்பதால் நண்பர்களானோம்...எக்சாமின் கடைசிநாளில் எல்லோரும் போரூர் ஆனந்தபவனில் கை நனைத்தோம்....இரண்டு நாளில் பழகிய என்னை அந்த நண்பர்கள் கூட்டத்தில் சேர்த்துக்கொண்டமைக்கு என் நன்றிகள்..
=============
இந்தவார சலனபடம்... ஒரு சின்ன போங்கு கதை...
===============
நெகிழவைத்த கடிதம்... நண்பருக்கு நன்றி..
Hai Mr. Jakcy Sekar…
Thanks for your each and every topics, paragraphs, words, letters and photos. Am really repressive about your way writing style. I too wanna write the comments & my opinions in your BlogSpot. I don’t know the Tamil typing and I am here in Oman, I am sending the URLs to my Tamil friends who are all staying in gulf..
Thanks for all Keep it up. All the very best … J
With Regards
Vijay
Oman Roads Engineering Co LLC============================
படித்ததில் பிடித்தது...
ஏன்டா கபாலி ரொம்ப சேகமா இருக்கே...
யார் விட்ல திருடி என்ன பிரயோசனம் சாமி,கேத்தன் தேசாய் பற்றி கடைசிவரை தெரியாமல் போச்சே..
பி.விஜயராமன் ... இந்த வார விகடன் ஜோக்...
========================
பிலாசபி பாண்டி....
1.... எல்லோரும் எதாவது ஒரு எதிர்பார்புடன்தான் ஆரம்பிக்கின்றோம்... முடிவில் நல்லதோ கெட்டதோ ஏதாவது ஒரு எக்ஸ்பிரியன்ஸ் எல்லோருக்கும் கிடைக்கின்றது...
==================
2..பெட்ரோல் டீசல் எல்லாம் போட்டு வண்டி ஓட்ட பர்மிஷன் கொடுக்கற கவர்மென்ட் ஏன் டாஸ்மார்க்ல தண்ணி அடிச்சிட்டு மட்டும் வண்டி ஓட்டபாமிஷன் கொடுக்கமாட்டேங்குது...?????
========
3, உன்னை ரொம்ப நன்றாக பார்த்துக்கொள்ள கூடியவர்கள் இரண்டு விஷயத்தை நிச்சயம் செய்வார்கள்...
1.உன்னை ரொம்ப நன்றாக பார்த்துக்கொள்ளவும் செய்வார்கள்
2.அதே போல் உன்னை காயபடுத்தவும் செய்வார்கள்..
===============
நான்வெஜ்
கமலா நான் சொல்லறதை கேளு...தாலி கட்டி இருபது வருஷம் அகுது புருஷன் காலாவதி ஆயிட்டார்னு என் மேல வழக்கு எல்லாம் போடாதே... இதெல்லாம் கோர்ட்டில் தள்ளுபடி பண்ணிடுவாங்க...
செந்தமிழ்பிரயன் இந்தவார ஆனந்தவிகடன்...
============
ஒரு பொண்ணு காலில் விழுந்து நமஸ்காரம் செய்யும் போது என்ன தெரியும்...ஒன்னும் தெரியாது... அந்த பெண்ணோட கல்சர் தெரியும்... இந்த இடத்துல கற்பனையில தப்பா நினைச்சிங்க பாருங்க அதுல உங்க கல்சர் என்னான்னு தெரியுது...
சம்சாரத்தை மின்சாரம்னு சொல்லலாம் ஆனா சின்ன வீட்டை எப்படி சொல்லறது... யோசிங்க மச்சி.... ஜெனரேட்டர்னு சொல்லலாமா?
தீபக் மும்பை..
=========
ஜடஜ் நீ அந்த பெண்ணை கதற கதற கற்பழித்து இருக்கின்றாய்...
உனக்கு பைனாக ரூபாய் 11461யை அபராதமாக விதிக்கின்றேன்....
கபாலி...மைலார்ட் அது என்ன சொச்சமா ஒரு பைன்.. ரூபாய்11461????
ஜடஜ்....
10,000 ரேப்புக்கு
4பர்சன்ட் வாட்
10.2 பர்சன்ட் எண்டேர்டெயின்மேன்ட் டாக்ஸ்...
=================
அன்புடன்
ஜாக்கிசேகர்
நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...
எல்லாம் நல்லா இருக்கு ஜாக்கி.
ReplyDeleteஎல்லா ஜோக்கும் அருமை.
ReplyDeleteஎக்சாம் எப்பிடி பண்ணிங்க ??
This comment has been removed by a blog administrator.
ReplyDelete/எல்லா ஜோக்கும் அருமை//
ReplyDeleteப்ரிட்சை முடிவு எப்பங்க?
//2..பெட்ரோல் டீசல் எல்லாம் போட்டு வண்டி ஓட்ட பர்மிஷன் கொடுக்கற கவர்மென்ட் ஏன் டாஸ்மார்க்ல தண்ணி அடிச்சிட்டு மட்டும் வண்டி ஓட்டபாமிஷன் கொடுக்கமாட்டேங்குது...?????//
ReplyDeleteஇத்தனைக்கும் பெட்ரோல் டீசல் எல்லாம் தனியார் விற்பனை செய்வது... அதை போட்டு வண்டி ஓட்டலாம்... ஆனால் அரசாங்கம் விற்கும் டாஸ்மாக் போட்டு வண்டி ஓட்டினால் அதே அரசாங்கம் அபராதம் விதிக்கிறது... அப்போ யாருமேல தப்பு? ஹி..ஹி..
//சம்சாரத்தை மின்சாரம்னு சொல்லலாம் ஆனா சின்ன வீட்டை எப்படி சொல்லறது... யோசிங்க மச்சி.... ஜெனரேட்டர்னு சொல்லலாமா?//
கரண்ட் கட்....அதான் இப்போ டிரென்ட்...
:) cool Bro
ReplyDeleteரொம்ப நல்லா இருந்தது சாண்ட்விச் எக்சாம் எப்படி எழுதியிருக்கீன்க சார்? வெற்றியடைய வாழ்த்துக்கள்.
ReplyDeleteDon't Judge Too Quickly
ReplyDeleteஅய்யோ car போச்சே!
சம்சாரத்தை மின்சாரம்னு சொல்லலாம் ஆனா சின்ன வீட்டை எப்படி சொல்லறது... யோசிங்க மச்சி.... ஜெனரேட்டர்னு சொல்லலாமா?/////intha ஜோக் கேபிளின் kothuparattavil paditha ஞாபகம் .....
ReplyDelete//உன்னை ரொம்ப நன்றாக பார்த்துக்கொள்ள கூடியவர்கள் இரண்டு விஷயத்தை நிச்சயம் செய்வார்கள்...
ReplyDelete1.உன்னை ரொம்ப நன்றாக பார்த்துக்கொள்ளவும் செய்வார்கள்
2.அதே போல் உன்னை காயபடுத்தவும் செய்வார்கள்..//
touching lines
நண்பர் கலைக்கு வாழ்த்துகள். எக்ஸாம் நல்லா எழுதுனீங்களா தல.
ReplyDelete//ஒரு பக்கம் அந்த மொழி பேசும் மக்கள் உலகலாவிய அரங்கில் துன்பத்தை தொடர்ந்து சந்தித்த வண்ணம் உள்ளனர் மலேசியாவில் உதை... காலம்காலமாக இலங்கையில் அடிமை வாழ்க்கை...ஒரு போராளியின் தலையை அறுத்து புலி கொடி போர்த்தி சாகடித்த படங்கள் வெளியாகி உலகலாவிய அரங்கில் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்க...கேட்க நாதியில்லாமல் நடைபினமாய் இலங்கை தமிழ் மக்கள் ஆனால் அந்த மொழிக்கு ஒரு மாநாடு தாயகத்தில் கோலகலமாய் தொடங்க போகின்றது....வாழ்த்துக்கள்...//
ReplyDeleteஇதச் சொன்னா உள்நோக்கம், உள்குத்துங்கறாங்க.
natpu paaraatiya ungalukku en nandri jackie
ReplyDeletejackie......ennudaya mail ungalukku kidaikirathaa.......
ReplyDelete