விண்ணைத்தாண்டி வருவாயா”ஏ“கிளாஸ் வெற்றி....

எழுத்தாளர் பாலகுமாரன் சொல்லி இருப்பார்... காதல் என்பது பரஸ்பரம் விட்டு கொடுப்பது... சில சமயம் காதலையும்னு... சொல்லி இருப்பார்... என் மனைவியை காதலிக்கும் காலங்களில் நான் இப்படித்தான் சொன்னேன்...

நான் பத்தாவதுதான் படிச்சி இருக்கேன்...நான்வெஜ் நல்லா சாப்பிடுவேன்... சோ உனக்கு டை கட்டின மாப்பிள்ளை வீட்ல பார்த்தா.. நீ தாரளமா கல்யாணம் பண்ணிக்கோ.... எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று சொல்லி... அதன் பிறகு ஒரு வாரத்துக்கு என் மனைவி பேசாமல் இருந்துவிட்டு சமாதானபடுத்தி பேசும் போது, பேட் வேர்ட்சில் என் மனைவியிடம் நான் அதிகம் வாங்கி கட்டிக்கொண்டது வேறு விஷயம்....

வருஷம் 16 படம் பார்த்து விட்டு பொங்கலு பொங்கலு சாங்கில் நடிகை குஷ்பு வெள்ளை மேல்சட்டையும், வெள்ளை பாவடையும் போட்டுக்கு கொண்டு பூ பூக்கும் மாசம் தைமாசம் பாட்டுக்கு ஆடிய போது மனதை பறி கொடுத்து, சில வாரங்களுக்கு என் கற்பனையில் என் மனைவியாக வாழ்ந்தவர்.. என் பங்களா, இரண்டு குழந்தைகள், நான் குஷ்பு..... என்று சந்தோஷ கற்பனை வாழ்க்கை... இரவில் சில நேரங்களில் நான் யோசிக்கும் கற்பனை வாழ்க்கை செம சுவாரஸ்யம்....

குஷ்புவுக்கு பிறகு என் மனைவி கற்பனை கதாபாத்திரத்துக்கு பவித்திரன் இயக்கிய வசந்தகால பறவை படத்தின் நாயகி ஷாலி வெகுகாலம் இருந்தார்...அந்த படத்தை 5 தடவை பார்த்தேன்... இன்று செம காமெடியாக இருக்கின்றது...குஷ்புவிற்க்கு பிறகு வெகு காலம் அந்த இடத்தை ஆக்கிரமித்தவர் நடிகை ஷாலிதான்.... எனக்கு இருந்த தாழ்வு மணப்பான்மை காரணமாக எனக்கு காதல் என்பது இல்லை என்று நினைத்து வாழ்ந்த காலங்களில் எனக்கு ரொம்பவே உற்சாகத்தை கொடுத்து பல தமிழ் நடிகைகள்தான்...

அதன் பிறகு பல பெண்கள் உடன் காதல் ஏற்பட்டது...சிலவற்றை நானே தவிர்த்தேன்... காரணம் நான் செட்டில் ஆகாமல் இருந்ததும்..தங்கைகள் திருமணமும்.. குடும்ப பொறுப்புகளும்....


தமிழ் நாட்டை பொறுத்தவரை... ஒரு பெண்ணை உருகி உருகி காதலித்து அந்த பெண் வீ்ட்டில் ஒத்துக்கொள்ளாமல் பிரச்சனை என்று வரும் போது, அந்த பெண்ணும், வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை கல்யாணம் செய்து கொள்ளும் போது... திருமணத்துக்கு போய் வாழ்த்து சொல்லி விட்டு வரும் பக்குவம் நம் தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு இருக்கின்றது...???? ஒன்று அவளை வெட்டி போடுவோம்... அல்லது அவளை உருகி உருகி சொன்ன நண்பர்களிடமே அவனை தேவிடியா என்று உருவகபடுத்துவோம்....

இப்போது கூட தந்தி பேப்பரில் பார்த்து இருக்கலாம்... ஒருதலைகாதலுக்காக நாகர்கோவில் பக்கத்தில் தன்னை காதலிக்கவில்லை என்ற காரணத்துக்காக அந்த அழகு பெண்ணை கண்டந்துண்டமாக வெட்டி பொட்டு இருக்கின்றான் ஒரு வெறியன்...

காதல்என்பது ரொம்பவும் உயர்வான விஷயம்தான் பட் அது மட்டுமே வாழ்க்கை இல்லை....

பட் முதல் காதல் ... முதல் முத்தம்... இரண்டுமே சான்சே இல்லாத விஷயம்...உன்னை எனக்கு பிடிச்சி இருக்கு என்று ஒரு பெண் சொல்லும் போது கிடைக்கும் சந்தோஷம் இருக்குதே... அது போல சந்தோஷம் உலகத்தில் எதுவுமே இல்லைன்னு சொல்லுவேன்... அந்த ஒரு வார்த்தைக்காக நாயா பேயா கூட அலையலாம்.... எதையும் துணிந்து எதிர்க்கலாம்.. உலகத்துல அந்தனை ஆப்பிளைங்க இருக்கும் போது நம்மகிட்ட வந்து சொல்லும் போது ரத்தம் ஜிவ்னு ஏறும் பாருங்க... சன்சே இல்லை அதே பொண்ணுகிட்ட முத்தம் ரத்த குழாயே வெடிச்சிடும்....
காதலன் படத்துல ஒரு டயலாக் வரும்.. ஒரு பொண்ணு ஒன்னை லவ் பண்ணறான்னா? உன்கிட்ட ஏதோ ஒரு நல்ல விஷயம் இருக்குன்னு அர்த்தம்.... அது 90 பர்சென்ட் உண்மைதான்...

இப்படி காதலை பத்தி சொல்லிகிட்டே போகலாம்... கவுதம் இந்த படத்துல ஒரு சாதாரண காதலை ரொம்ப அழகா கவிதையா சொல்லி இருக்கின்றார்....

விண்ணைதாண்டி விருவாயா படத்தின் கதை இதுதான்...

கார்த்திக் (சிம்பு) இன்ஜினியரிங் முடித்து விட்டு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று வாய்பு தேடி அலைபவர்... அவர் இருக்கும் வீட்டின் ஹவுஸ் ஒனர் மாடியில் குடி இருக்கின்றார்... ஹவுஸ் ஒனர் மகள் ஜெசி( திரிஷா...) கிருஸ்டியன்... அவளை பார்த்தவுடனே காதல் வந்து விடுகின்றது...

1. வேலை வெட்டி இல்லாமல் இருக்கும் கார்திக்
2. அசிஸ்டென்ட் டைரக்டராக வாய்பபு தேடி அலையும் கார்த்திக்...
3.கார்த்திக்கை விட ஜெசிக்கு1 வயசு அதிகம்...
4.ஜெசியோட அப்பா வெட்டி பொட்டாலும் பொண்ணை இந்துவுக்கு அதாவது கார்த்திக்கு கட்டி கொடுக்கமாட்டார்...
5.ஜெசி குடும்பத்தை விட்டு கொடுக்க யோசிக்கும் பெண்... அப்படி விட்டு கொடுத்தாலும் சூழ்நிலை புரிஞ்சிக்காத பெண்..
6.சினிமாவை ரசிப்பவனுக்கு...சினிமாவை வெறுக்கும் பெண்காதலி
7.உலகத்துல எவ்வளோவோ பொண்ணுங்க இருக்கறப்ப ஜெசியை மட்டும் ஏன் பிடிக்கனும்?????
இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் போது இவுங்க ரெண்டு பேர் காதல் நிறைவேறியாதா? என்பதை சென்னையில் அராத்தல் கல்லூரி மாணவர்கள் படம் பார்க்க வராத சமயமாக பார்த்து படத்தை பார்த்து ரசியுங்கள்...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

படத்தின் விளம்பரஙக்ளிலேயே சொல்லி விட்டார்கள்.... இது ஒரு காதல்கதை... இதுவரை பார்த்த பார்த்து சலித்த காதலை மிக இளைமையாக கவுதம் தனது ஸ்டைலில் சொல்லி இருக்கின்றார்...

இந்த படத்தை காதலித்தவர்களும் காதலிக்கபடுபவர்களும் பார்த்தால் உடம்பில் ஒரு இளமை துள்ளலை உணரலாம்....

தொட்டி ஜெயா படத்துக்கு பிறகு நடிகர் சிம்புவை நான் மிகவும் ரசித்த படம் இந்த படம்தான்... சான்சே இல்லை என்ன மேனாரிசம்... கண்களில் ஒரு காதல் குறு குறுப்பை படம் முழுவதும் தெளிப்பதில் ஆகட்டும்.... சான்சே இல்லை... இதே போல் ஒரு ஆறு படம் நடித்தால் சிம்புதான் தமிழ் நாட்டின் அடுத்த காதல் இளவரசன் என்பதை எழுதிதருகின்றேன்......

சிம்பு ரொம்ப ஸ்டைலாக இருக்கின்றார்... உங்க அப்பன் கிட்ட போய் சொல்ல போறேன்னு சொல்லற இல்லை போய் சொல்லு... என்று சொல்வதாக இருக்கட்டும்....

தங்கை ரூமில் இருக்கும் திரிஷாவை பார்த்து விட்டு அசடு வழிய எதாவது கடலை போட வேண்டுமே என்று கேரளா கொழ புட்டு கடலை... நாம் இயல்பாக அநேக இடங்களில் அனு தினமும் பாத்த கடலைதான்...



திரிஷா எனக்கு ரொம்ப பிடித்த நடிகை.... புகழ் உச்சிக்கு போகும் முன்..யுகிசேது நடத்திய நையாண்டிதர்பார் நிகழ்ச்சிக்கு தனது தாயாருடன் வந்த போதே எனக்கு ரொம்ப பிடித்து போனது.. அந்த புரோகிராமின் மல்டி கேமரா செட்டப்பில் கேமரா அசிஸ்டென்டாக இருந்தேன்....

திரிஷா காட்டன் சாரி கட்டி சான்சே இல்லை...(இந்த வரி டைப் அடிக்கும் போதே நைட் பூவா கட் ஆனாலும் அகும் இருந்தாலும் சோறு கிடைக்காட்டியும் மனசுல பட்ட உண்மையை உறக்க சொல்லுவான் இந்த ஜாக்கி...)
ஒரு பாடல் காட்சியில் நைட்டியில் ஒரு கட் ஷாட்டில் பார்க்கும் போது பக்கத்து பிளாட்டில் இருந்து வந்து....

“அங்கிள் அப்பா ஹின்டு பேப்பர் வாங்கி வர சொன்னார்” என்று கேட்கும் பக்கத்து விட்டு சிறுமி போலவே இருக்கின்றார்.....
ஆனால் படத்தில் ரொம்ப ஒல்லியாக தெரிகின்றார்..காதல் காட்சிகளில் இளமையாக இருக்கின்றார்... சதை போடவேண்டும்.... முக்கியமான இடங்களில் எல்லாம்..... வேண்டாம்....சென்சார்...

நேத்து ரயில்ல கிஸ் அடிச்சப்ப எந்த மறுப்பும் சொல்லலையே ஏன்? என்று சிம்பு கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லமல் திரிஷா தடுமாறும் இடம் சிறப்பு..


தமிழ் திரைஉலகில் ஒரு பிரபல கதாநாயகி படம் நெடுக்க... முத்தம் கொடுக்கும் உதட்டை பற்றி கவலை படாமல் நடித்து இருப்பது தமிழ் சினிமாவுக்கு புதுசு.....

படத்தின் இளமை துள்ளலுக்கு பெரிய காரணம் மனோஜ்பரமஹம்சா ஒளிப்பதிவு.... மிக முக்கியமாக கேரளா நியூயார்க் அவுட்டோர் ஷாட்ஸ்...ஹோசான சாங் அந்த பேக்ரவுண்டு கட்டிடங்களும் சான்சே இல்லை... ஸ்டெடி கேம் அதிகம் யூஸ் செய்து இருக்கின்றார்கள்... அதே போல் நிறைய குட்டி குட்டி ஷாட்டுகள்.. காஸ்ட்யூம் செஞ்சு என நிறைய மெனெக்கெட்டு இருக்கின்றார்கள்...


திரிஷா கழுத்தில் இருக்கும் சிலுவை செயினை கூட மிக அழகாக கட்டி இருக்கின்றது.. மனோஜ் ஒளிப்பதிவு....ஆனால் திரிஷா உடன் தனிமையில் இருக்கும் சிம்பு கட்டி பிடித்தபடி இரண்டு நிமிடம் இருக்கும் போது சிம்புவின் கை திரிஷா உடலில் விளையாடும் காட்சிகளில் சில் அவுட்டில் தெரிகின்றது...கொஞ்சம் பிரைட் ஏத்தி இருக்கலாம்.....


படத்தை கவுதம் எப்போதும் போல நரேட்டிவ் ஸ்டைலில் கதை சொல்லி இருக்கின்றார்... அந்த உத்தியல் இருக்கும் ஒரே பிளஸ் நீங்கள் கதாபாத்திரத்துடன் ரொம்ப ஈசியாக ஒட்டிக்கொள்வீர்கள்...

ரயிலில் திரிஷாவிடம் முதல் முத்தம் கொடுக்கும் பெறும்... இடங்களில் இருவரின் உடல் மொழியை மிக அழகாக படம் ஆக்கி இருக்கின்றார்...இயக்குனர் கவுதம்...
காதலித்த திரிஷா சிம்புவை வெறுக்க சொல்லும் அற்பகாரணங்கள் ஏற்புடையதுஅல்ல என்றாலும்... இப்போது உள்ள பல பெண்கள் அப்படித்தான் இருக்கின்றார்கள்... என் கல்லூரியில் அப்படி பல பெண்களை நான் பார்த்து இருக்கின்றேன்... டிபிகல் சென்னை பெண்ணின் மனநிலையை மிக அழகாக சொல்லி இருக்கின்றார் இயக்குனர்.....

படத்தின் கிளைமாக்ஸ் யாரும் எதிர்பாராத ஒரு டுவி்ஸ்ட்தான் என்றாலும் இந்த படத்தின் கிளைமாக்ஸ்... dot the i என்ற படத்தின் கிளைமாக்ஸ் உத்தி போலவே எனக்கு தோன்று கின்றது....படத்தில் சிம்பு கதை சொல்ல போகும் இடத்தில் இந்த கதையில தலையை நடிக்கவச்ச நல்லா இருக்கும்... என்று சொல்வதும்... ஒரு ஆடிட்டோரியம் சண்டை காட்சியின் போது ஒருவன் ஷட்டரை பூட்ட போகும் போது... அந்த சீன் எல்லாம் இங்கவேனாம்டி என்று நக்கல் விட்டு இருக்கின்றார்கள்...

ரொம்ப நாட்களுக்கு பிறகு கிட்டியையும் பாபு அண்டனியையும் பார்க்க முடிகின்றது...பூவிழி வாசலிலே தாடி வில்லன்.. அப்படியும் தெரியலையா? சூரியன் படத்துல அபிலஷா கடற்கரையில ஜட்டி, பிராவோட கடற்கரையில ஓடவிட்டு கொலை பண்ண ஓடுவாரே அவர்தான் இந்த படத்துல திரிஷா வோட அப்பா....

படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு ரகுமானின் பாடல்கள் படத்துக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது நிஜம்.... தாமரையின் வரிகள் அற்புதம்....
முக்கியமாக அமெரிக்க வீதியில் உதட்டு முத்தம் திரிஷாவுக்கு கொடுத்த பிறகு அன்பில் அவன் சேர்த்த இதை மனிதரே வெறுக்காதீர்கள்... என்ற வரியும் உன்னைதான்டி எதையும் என்னால் யோசனை செய்ய முடியாதே என்ற வரிகள் ஒரு சோத்துக்கு பதம்........


டைட்டிலில் ரகுமான் பேர் போடும் போதும்.... மன்னிப்பாய பாடலில் ரகுமான் குரல் வரும் போதும் தியேட்டரி் விசில் சத்தம் காதை கிழிக்கின்றது... சான்சே இல்லை ரகுமான் சார்....

படத்தின் காதல் காட்சிகளின் போது தொடர்ந்து வரும் பின்னனி இசை கிளாசிக்....ஒரு வேளை இந்த இசைதான் இளமை துள்ளலோ...

உடைகள் நளினி ஸ்ரீராம்.. திரிஷாவின் உடை தேர்ந்து எடுப்புகளில் அதிக கவனம்... முக்கியமாக திரிஷா பாடல் காட்சியில் குளித்து விட்டு கரையேறும் போது மலையாள முன்டு போலான துணியை போர்த்தி வருவது அழகு...அதே போல் அந்த வெள்ளை கருப்பு சாரியும்... சிம்புவை ஹோட்டலில் மீட் பண்ண வரும் போது திரிஷாவின் டபுள் கலர் ஆரஞ் சாரி சூப்பர்....

எடிட்டர்....ஆண்டனி கத்தரி இந்த முறையும் ஷார்ப்...

போகிற போக்கில் சிம்பு நான் அசிஸ்டென்ட் டைரக்டரா, கவுதம் மேனன்கிட்ட சேர போறேன் என்று சொல்ல...எது, தமிழ் படத்துல அதிக இங்கிலிஷ் டயலாக் வைப்பாரே....? அவரு ரெண்டு வருஷத்துக்கு படமெடுப்பாரே என்று சொல்லி இயக்குனரே வாரிக்கொள்வது ரசிக்கும் டயலாக்...

படத்தில் காக்க காக்க கேமராமேன் கேரக்டரி்ல் நடித்து இருக்கும் நண்பர் பெயர் தெரியவில்ல்லை ஆனால் அவரின் வாய்ஸ் அந்த கேரக்டருக்கு பலம் என்பேன்....

அதே போல் திரிஷா நடக்கும் நடை சரியில்லை அது லாங் ஷாட்டில் பச்சை சுடிதார் அணிந்து நடக்கும் போது நன்றாக தெரிகின்றது... படத்தில் சிம்பு ஒரு டயலாக் சொல்லுவார்... அதில் திரிஷா நடையை ugly walk என்று சொல்லுவார்... நான் நினைச்சதை டயலாக்காகவும் வைத்து இருந்தார் இயக்குனர்...

கேஎஸ்ரவிக்குமார்.. டைரக்கடராகவே நடித்து இருக்கின்றார்.... அவர் எப்படி செட்டில் இருப்பாரோ... அதே போல் காட்சி படுத்திய விதம் அருமை....

படத்தின் என்ட் டைட்டில் சான்சே இல்லை... அது கொஞ்சம் உலகதரம்தான்....

அதே போல கவுதம் மேனன் அமெரிக்கா போய் படம் எடுக்கற சமாச்சாரம் எனக்கு தெரிஞ்சு போச்சி... இவரை லவ் பண்ண பொண்ணு அமெரிக்காவுல செட்டில் ஆயி இருக்கனும் .. பாரு நான் எந்தளவுக்கு வளர்ந்து இருக்கறேன் காட்டறதுக்கு கூட இருக்கலாம்... டோன்ட்பி சிரியஸ் சும்மா தமாசு....

படத்தின் சப்ஜெக்டே இருவர் காதல் என்பதால் அது அவர்களை சுற்றியே வருகின்றது... சிலருக்கு அதுவே போராக தெரிகின்றது.... கொரியன் பிலிம் மை சாசி கேர்ள் படத்தை நாம் கொண்டாடுவோம்.... காரணம் அது உலக சினிமா... ஆனால் அது போல் ஒரு படம் எடுத்தால் இரண்டாம்பாதி ரொம்ப போர் என்று சொல்லிவிடுவோம்.... ஆனால் இந்த படம் ஒரு இளமை துள்ளலானபடம் என்பதில் ஐயம் இல்லை.....அதனால்தான் இந்த படத்தை பார்த்தே தீர வேண்டிய படங்களின் லி்ஸ்ட்டில் சேர்த்து இருக்கின்றேன்...

ஒருவேளை எனக்கு பிடித்து உங்களுக்கு பிடிக்காமலும் போகலாம்... படம் பாத்து விட்டு பிடிக்கவில்லை என்றால் என்னை திட்ட வேண்டாம்....

படத்துக்கு ஏ சர்டிபிகேட் கொடுத்த பிறகு குழந்தைகளை அழைத்து போய் விட்டு நெளிய வைக்கின்றது என்று சொல்ல வேண்டாம்....


தியேட்டர் டிஸ்க்கி....

இந்த படத்தை ஓஎம்ஆர் ரோட்டுல இருக்கற அரவிந் எனும் படாவதி, தியேட்டர்ல இந்த படத்தை பார்த்து தொலைச்சேன்... படம் பார்க்க வந்த எல்லாரும் அந்த ரோட்ல இருக்கற காலேஜ்ல இருந்து கிளாசை கட்டு அடிச்சிட்டு வந்த பசங்க.... எல்லாத்துக்கும் கத்தி உயிரை எடுத்துட்டானுங்க...

சவுண்டும் அதிகம் இல்லை... இத்தனைக்கும் அந்த தியேட்டர் டிடிஎஸ்....சரி அதையாவது சகிச்சிக்கலாம்னு பார்த்தா? கியூப்ல ஓடற அந்த படத்தை புரஜெக்டரிலேயே ஓட்டலாம் அவ்வளவு டல்....ரியல் இமேஜ்காரர்கள் கவனிப்பார்களாக.... அதிக கத்தி உயிரை எடுத்த காரணத்தால.. பால்கனி டிக்கெட் எடுத்து விட்டு தலை தெறிக்க தரை டிக்கெட்டுக்கு வந்து ஸ்கிரினுக்கு பக்கத்துல வந்து உட்கார்ந்து பார்த்து தொலைச்சேன்.. ஏதோ ஜாலியா என்ஜாய் பண்ண கத்தலாம் விசில் அடிக்கலாம் அதுக்காக திரிஷா நடந்து வரும் போது கூடவா?...கத்தி ஆர்பாட்டம் பண்ணனும்.....

அதே போல அன்பில் அவள் சாங் போடும் போதே படம் முடிந்து விட்டதாக சில அவசர குடுக்கைகள் எழுந்து போய் கதவை பறக்க திறந்து வைத்து விட்டு சென்று விட்டார்கள்....

இது ஏ கிளாஸ் படமாக மட்டுமே இருக்கும்....பி சி சான்ஸ் கொஞ்சம் கம்மிதான்..

படத்தின் டிரைலர் மற்றும் படக்குழவினர் விபரம்...




பைனல் டிஸ்க்கி.....

படத்தின் முதல் ஷோ பார்த்து விட்டு ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் சார் ரிசல்ட் நல்லா இருக்காம்... நான் அடுத்து சங்கம் தியேட்டர் போய் பார்க்கிறேன்... என்று சொல்லும் போது சிம்பு....இவுங்க இப்படித்தான் சொல்லுவாங்க... திங்ககிழமைதான் ரிசல்ட் தெரியும் என்று சொல்வது சினிமாவின் நிதர்சன உண்மையை சொல்வது சிறப்பு....

தனது முதல் படத்தை இயக்கி திரிஷாவிடம் சிம்பு போட்டு காட்டி எதாவது தப்பா எடுத்து இருக்கேனா? என்று கேட்கும் போது...
“அப்படி எல்லாம் இல்லை பில்குட் மூவியா இருக்கு”
என்று திரிஷா சொல்லும் போது எனக்கு அது சரியாகவே பட்டது...உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை...

அன்புடன்
ஜாக்கிசேகர்
098402 29629

(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....?)

46 comments:

  1. Thanks for your review. But I am worried how can I see simbu for 2 hours just for Trisha, rahman, Tamarai, gowtham.

    I think you have missed one more good point, Thamarai+rahman combination has come up well. Thats is what my dream combination (Thamarai, rahman, shahul hameed)

    ReplyDelete
  2. ராம்ஜி நன்றி...

    நிறைய எழுதியதில் மறந்து போய் விட்டேன் திருத்தி விட்டேன்...

    ReplyDelete
  3. ராம்ஜி நன்றி...

    நிறைய எழுதியதில் மறந்து போய் விட்டேன் திருத்தி விட்டேன்...

    ReplyDelete
  4. அப்பாடி. விமர்சனத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு 45 வரிகளைப் படிக்க வைத்துவிட்டீர்களே..

    உங்கள் சுயசரிதையைத்தான் சொல்கிறேன்.. (:-

    ஆர்வத்தை இப்படியா அதிகரிப்பது?

    நல்ல விமர்சனம்.

    ReplyDelete
  5. நாளை இந்த படம் பாக்க போறேன், நன்றி உங்களின் விமர்சனத்துக்கு.

    ReplyDelete
  6. //படத்தின் இளமை துள்ளலுக்கு பெரிய காரணம் ரமேஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு//

    ??????

    ReplyDelete
  7. //படத்தின் இளமை துள்ளலுக்கு பெரிய காரணம் ரமேஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு//

    ??????--//

    நான் ஆதவன் லைட்டிங், கேமரா ஆங்கிள் , பேக்ரவுண்ட் கலர் போன்றவை சிறப்பாய் இருப்பதால் அப்படி சொன்னேன்...

    ReplyDelete
  8. அப்பாடி. விமர்சனத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு 45 வரிகளைப் படிக்க வைத்துவிட்டீர்களே..

    உங்கள் சுயசரிதையைத்தான் சொல்கிறேன்.. (:-

    ஆர்வத்தை இப்படியா அதிகரிப்பது?

    நல்ல விமர்சனம்//

    நன்றி டெக் சங்கர்...மிக்க நன்றி..

    ReplyDelete
  9. நாளை இந்த படம் பாக்க போறேன், நன்றி உங்களின் விமர்சனத்துக்கு//
    நன்றி சைவ கொத்து பரோட்டா.. பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் போய் வருங்கள்,...

    ReplyDelete
  10. //நான் ஆதவன் லைட்டிங், கேமரா ஆங்கிள் , பேக்ரவுண்ட் கலர் போன்றவை சிறப்பாய் இருப்பதால் அப்படி சொன்னேன்...//

    அதில்லை ஜாக்கி. ஒளிப்பதிவாளர் மனோஜ் என்று எங்கோ படித்த ஞாபகம்

    ReplyDelete
  11. //தமிழ் நாட்டை பொறுத்தவரை... ஒரு பெண்ணை உருகி உருகி காதலித்து அந்த பெண் வீ்ட்டில் ஒத்துக்கொள்ளாமல் பிரச்சனை என்று வரும் போது, அந்த பெண்ணும், வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை கல்யாணம் செய்து கொள்ளும் போது... திருமணத்துக்கு போய் வாழ்த்து சொல்லி விட்டு வரும் பக்குவம் நம் தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு இருக்கின்றது...???? ஒன்று அவளை வெட்டி போடுவோம்... அல்லது அவளை உருகி உருகி சொன்ன நண்பர்களிடமே அவனை தேவிடியா என்று உருவகபடுத்துவோம்....

    இப்போது கூட தந்தி பேப்பரில் பார்த்து இருக்கலாம்... ஒருதலைகாதலுக்காக நாகர்கோவில் பக்கத்தில் தன்னை காதலிக்கவில்லை என்ற காரணத்துக்காக அந்த அழகு பெண்ணை கண்டந்துண்டமாக வெட்டி பொட்டு இருக்கின்றான் ஒரு வெறியன்...

    காதல்என்பது ரொம்பவும் உயர்வான விஷயம்தான் பட் அது மட்டுமே வாழ்க்கை இல்லை....

    பட் முதல் காதல் ... முதல் முத்தம்... இரண்டுமே சான்சே இல்லாத விஷயம்...உன்னை எனக்கு பிடிச்சி இருக்கு என்று ஒரு பெண் சொல்லும் போது கிடைக்கும் சந்தோஷம் இருக்குதே... அது போல சந்தோஷம் உலகத்தில் எதுவுமே இல்லைன்னு சொல்லுவேன்... அந்த ஒரு வார்த்தைக்காக நாயா பேயா கூட அலையலாம்.... எதையும் துணிந்து எதிர்க்கலாம்.. உலகத்துல அந்தனை ஆப்பிளைங்க இருக்கும் போது நம்மகிட்ட வந்து சொல்லும் போது ரத்தம் ஜிவ்னு ஏறும் பாருங்க... சன்சே இல்லை அதே பொண்ணுகிட்ட முத்தம் ரத்த குழாயே வெடிச்சிடும்....
    காதலன் படத்துல ஒரு டயலாக் வரும்.. ஒரு பொண்ணு ஒன்னை லவ் பண்ணறான்னா? உன்கிட்ட ஏதோ ஒரு நல்ல விஷயம் இருக்குன்னு அர்த்தம்.... அது 90 பர்சென்ட் உண்மைதான்..//


    Nice preface.

    ReplyDelete
  12. "திருமணத்துக்கு போய் வாழ்த்து சொல்லி விட்டு வரும் பக்குவம் நம் தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு இருக்கின்றது...???? ஒன்று அவளை வெட்டி போடுவோம்... அல்லது அவளை உருகி உருகி சொன்ன நண்பர்களிடமே அவனை தேவிடியா என்று உருவகபடுத்துவோம்...."

    நிஜமான வரிகள்....

    ReplyDelete
  13. என்ன ஒரு விமர்சனம்...........! இப்படி நுணுகி நுணுகி .... அற்புதம் தல

    ReplyDelete
  14. பதிவு அருமை..பல இடங்களில் நான் எழுதியதோடு ஒத்துப் போகிறது..நேரமிருந்தால் என் பதிவுப்பக்கமும் வந்து போகவும்.. :))

    ReplyDelete
  15. அன்பு ஜாக்கி,
    நான் முடிந்தவரை எல்லா புது படங்களையும் , முதல் நாள் 3மணி ஷோ பார்த்துவிடுவேன். இந்த படமும்
    அப்படிதான். (காசி தியேட்டர் ). காலேஜ் பசங்க கூட்டம். காட்டு கத்தல். வசனமே புரியவில்லை.ஏறக்குறைய
    அதே மாதிரி தான் நீங்களும் பார்த்துரிக்கிரீங்கன்னு தெரிது. ஆனா எப்டி இவ்வளவு டீடைய்ல. amazing.superb

    ReplyDelete
  16. இதையே எழுதினேன்... ஆனால், நீங்க நிறைய மேட்டர் பேசி அசத்திட்டீங்க..

    படம் பாத்துட்டு ஏப்பம் விட்டா கூட காதல் கவிதையா வருது..

    ReplyDelete
  17. இந்த படத்தை காதலித்தவர்களும் காதலிக்கபடுபவர்களும் பார்த்தால் உடம்பில் ஒரு இளமை துள்ளலை உணரலாம்....//
    அதே அதே.

    முத்தம் கொடுக்கும் உதட்டை பற்றி கவலை படாமல் நடித்து இருப்பது தமிழ் சினிமாவுக்கு புதுசு..... //
    இதை நானும் நினைச்சேன். எழுத விட்டுப் போச்சு.

    இவுங்க இப்படித்தான் சொல்லுவாங்க... திங்ககிழமைதான் ரிசல்ட் தெரியும் என்று சொல்வது சினிமாவின் நிதர்சன உண்மையை சொல்வது சிறப்பு.... //
    ஆமா, அது ஒரு நல்ல எதார்த்தம்.

    ம், நல்லாருக்குங்க உங்க விமர்சனம். கடைசில வீட்டுல சாப்பாடு கிடைச்சதா, இல்லையா. :)

    ReplyDelete
  18. படத்தில் சிம்புவின் நண்பராக வருபவர் தயாரிப்பாளர்களில் ஒருவரான கணேஷ்..

    ReplyDelete
  19. //நான் ஆதவன் லைட்டிங், கேமரா ஆங்கிள் , பேக்ரவுண்ட் கலர் போன்றவை சிறப்பாய் இருப்பதால் அப்படி சொன்னேன்...//

    அதில்லை ஜாக்கி. ஒளிப்பதிவாளர் மனோஜ் என்று எங்கோ படித்த ஞாபகம்--//
    நன்றி ஆதவன் தவறை சட்டி காட்டியமைக்கு...திருத்தி விட்டேன்

    ReplyDelete
  20. நல்ல விஷயம் இருக்குன்னு அர்த்தம்.... அது 90 பர்சென்ட் உண்மைதான்..//


    Nice preface.//
    நன்றி தரன் மிக்க நன்றி..

    ReplyDelete
  21. "திருமணத்துக்கு போய் வாழ்த்து சொல்லி விட்டு வரும் பக்குவம் நம் தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு இருக்கின்றது...???? ஒன்று அவளை வெட்டி போடுவோம்... அல்லது அவளை உருகி உருகி சொன்ன நண்பர்களிடமே அவனை தேவிடியா என்று உருவகபடுத்துவோம்...."

    நிஜமான வரிகள்....//
    நன்றி அமுதா கிருஷ்ணன்.. வருகைக்கும் பகிர்தலுக்கும்..

    ReplyDelete
  22. என்ன ஒரு விமர்சனம்...........! இப்படி நுணுகி நுணுகி .... அற்புதம் தல//

    இராஜ நீங்க கூட உங்க தளத்துல அழகா இந்த படத்தை பத்தி எழுதி இருக்கிங்க.. பகிர்தலுக்கு நன்றி...

    ReplyDelete
  23. அன்பு ஜாக்கி,
    நான் முடிந்தவரை எல்லா புது படங்களையும் , முதல் நாள் 3மணி ஷோ பார்த்துவிடுவேன். இந்த படமும்
    அப்படிதான். (காசி தியேட்டர் ). காலேஜ் பசங்க கூட்டம். காட்டு கத்தல். வசனமே புரியவில்லை.ஏறக்குறைய
    அதே மாதிரி தான் நீங்களும் பார்த்துரிக்கிரீங்கன்னு தெரிது. ஆனா எப்டி இவ்வளவு டீடைய்ல. amazing.superb//

    சூர் ரொம்ப கஷ்டங்க பல வசனங்கள் புரியவே இல்லை... சிம்பு அவ பிரன்டை பாத்ததை விட பேக்கை பார்த்ததுதான் ரொம்ப அதிகம்... என்று சொல்லும் டயலாக் எனக்கு சுத்தமாக காதில் விழவில்லை... அதை நண்பர் ரமேஷ் நான் எழுதுவேன்னு நினைச்சி வேற இருக்கார்... அதை எழுதலைன்னதும் உடனே மெயில் அனுப்பிட்டாங்க...
    அடுத்த முறை மனைவியை அழைச்சிக்கி்னு நல்ல தியேட்டருக்கு போகனும்...

    ReplyDelete
  24. இதையே எழுதினேன்... ஆனால், நீங்க நிறைய மேட்டர் பேசி அசத்திட்டீங்க..

    படம் பாத்துட்டு ஏப்பம் விட்டா கூட காதல் கவிதையா வருது..//

    பப்பு ரொம்ப நாளைக்கு அப்புறம் இளமைய புதுப்பிச்சிக்க ஒரு படம் இந்த படம்னு சொன்ன அது மிகையி்ல்லை...

    ReplyDelete
  25. ஆமா, அது ஒரு நல்ல எதார்த்தம்.

    ம், நல்லாருக்குங்க உங்க விமர்சனம். கடைசில வீட்டுல சாப்பாடு கிடைச்சதா, இல்லையா. :)//

    விக்னேஷ்வரி அப்புறம் கெஞ்சி கூத்தாடி அடுரா ராமா டான்ஸ் எல்லாம் இடி ஒரு வழியா சாப்பிட்டுட்டேன்...

    ReplyDelete
  26. படத்தில் சிம்புவின் நண்பராக வருபவர் தயாரிப்பாளர்களில் ஒருவரான கணேஷ்//
    நன்றி கேபிள் தகவலுக்கு... அவுரு அமெரிக்காவில போட்டோ எடுததுக்கன அப்பயே எனக்கு ஒரு டவுட்... எப்படி இந்த காமெடி பிசை கூட்டிகிட்டு போனாங்கன்னு...

    ReplyDelete
  27. //கவுதம் இந்த படத்துல ஒரு சாதாரண காதலை ரொம்ப அழகா கவிதையா சொல்லி இருக்கின்றார்....//

    ம்ம்ம்ம் கவிதைகளை அவமானம் செய்யாதீங்க :(

    சாதாரண காதலை சொல்லி இருக்காரு. ஆனா.......

    ReplyDelete
  28. சினிமா பார்ப்பதையே நிறுத்திவிட்ட எனக்கு உங்கள் விமர்சனத்தைப் படித்ததும் இந்தப்படத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் நான் இருப்பதோ கர்நாடகாவில் ஏதோ ஒரு மூலையில் என்ன செய்ய?

    ReplyDelete
  29. //(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....?)//

    போட்டாச்சி போட்டாச்சி போட்டாச்சி

    ReplyDelete
  30. //அந்த ஒரு வார்த்தைக்காக நாயா பேயா கூட அலையலாம்.... எதையும் துணிந்து எதிர்க்கலாம்.. உலகத்துல அந்தனை ஆப்பிளைங்க இருக்கும் போது நம்மகிட்ட வந்து சொல்லும் போது ரத்தம் ஜிவ்னு ஏறும் பாருங்க... சன்சே இல்லை அதே பொண்ணுகிட்ட முத்தம் ரத்த குழாயே வெடிச்சிடும்....//

    இந்த வரிகளுக்காகவே உங்களுக்கு ஆயிரம் ஓட்டு போடலாம்.. ஆனால் ஒன்று தான் அல்லௌடு.. நான் என்ன செய்ய..

    எப்படி ஜாக்கி இப்படி உருகி உருகி எழுதுகிறீர்கள்..?

    மற்ற விமர்சனங்களை உங்கள் விமர்சனம் அதி நுட்பமானது.. அபாரமானது.. புகழ வார்த்தைகள் இல்லை..

    நன்றி...

    ReplyDelete
  31. //கவுதம் இந்த படத்துல ஒரு சாதாரண காதலை ரொம்ப அழகா கவிதையா சொல்லி இருக்கின்றார்....//

    ம்ம்ம்ம் கவிதைகளை அவமானம் செய்யாதீங்க :(

    சாதாரண காதலை சொல்லி இருக்காரு. ஆனா.......//

    நன்றி உயிரோடை உங்கள் கருத்துக்கு

    ReplyDelete
  32. சினிமா பார்ப்பதையே நிறுத்திவிட்ட எனக்கு உங்கள் விமர்சனத்தைப் படித்ததும் இந்தப்படத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் நான் இருப்பதோ கர்நாடகாவில் ஏதோ ஒரு மூலையில் என்ன செய்ய?//


    சனி,ஞாயிறு பெண்களுர் வாங்க...படத்தை பாருங்க... நண்பா...

    ReplyDelete
  33. SUPERRRAPU//

    நன்றி தமிழ்..

    ReplyDelete
  34. //(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....?)//

    போட்டாச்சி போட்டாச்சி போட்டாச்சி//
    நன்றி வரதராஜிலு

    ReplyDelete
  35. இந்த வரிகளுக்காகவே உங்களுக்கு ஆயிரம் ஓட்டு போடலாம்.. ஆனால் ஒன்று தான் அல்லௌடு.. நான் என்ன செய்ய..

    எப்படி ஜாக்கி இப்படி உருகி உருகி எழுதுகிறீர்கள்..?

    மற்ற விமர்சனங்களை உங்கள் விமர்சனம் அதி நுட்பமானது.. அபாரமானது.. புகழ வார்த்தைகள் இல்லை..
    //

    ரொம்ப புகழாதிங்க அப்பு எனக்கு கூச்சசுபாவம்...

    ReplyDelete
  36. படம் பார்க்க வேண்டிய அவசியமே இல்லாமல் செய்துவிட்டீர்கள். விமர்சனமே படம் பார்ப்பது போல இருக்கு.

    ReplyDelete
  37. //படத்தில் காக்க காக்க கேமராமேன் கேரக்டரி்ல் நடித்து இருக்கும் நண்பர் பெயர் தெரியவில்ல்லை ஆனால் அவரின் வாய்ஸ் அந்த கேரக்டருக்கு பலம் என்பேன்....//

    --His name is GANESH. Watched this movie with my wife. She love's ganesh's dialogue delivery. Initially, i thought he is really KAKA KAKA cinematographer and confirmed the same to my wife while watching the movie.Many of my friends are telling same to me.

    But when i googled it today, came to know that R.D.Rajasekha was worked on KAKKA KAKKA.

    ReplyDelete
  38. Pramaadhamaana review Boss!!!
    Padam chancey illa...apdi oru azhagiya oviyam!!!
    Theatre la vedala pasanga vidra alumbal thangala! ponnungalum salachavanga illa...
    edhuku sound vidradhune vevastha illama!!!

    coming to the movie...
    neenga sonna ellame apdiye 100/100 unmai!

    Love failure aanavanga unmaya avanga kaadhaloda compare panni anubavichu paaka koodiya movie!!!

    Gautham rocksssssssssss :

    ReplyDelete
  39. dr.jackie. unga writing style good. But alws you are using this word (chance illa.. chance illa).. athu mattum konjam kuraichukunga..boss.
    then unga wife night food cut pannagala???

    ReplyDelete
  40. hello jackie,
    movie enakku romba pidichirukku... then unga vimarsanam marupadium movie partha mathiriye iruku... oru amaithiyana love story... then vimarsanathirku mun oru munnurai really good...

    ReplyDelete
  41. படம் வெகு யதார்த்தம். ஒரே உணர்வு நிலையிலேயே படம் முழுவதும் உள்ளது. சிம்புவிடம் நல்ல மாற்றம்.

    ReplyDelete
  42. ஒரு சாதாரண காதலை ரொம்ப அழகா கவிதையா சொல்லி இருக்கின்றார்....

    ReplyDelete
  43. ஒரு சாதாரண காதலை ரொம்ப அழகா கவிதையா சொல்லி இருக்கின்றார்

    ReplyDelete
  44. Hi Jack,

    1st naal, 2nd show parthen (unga vimarsanam padicha apuram), anaku padam rombo pudichueurnthathu, nenga azhuthi erunthathu appadiye kan munnadi screenla oduchu... Yadharthamana Kadhai, Arputhamana Vimarsanam... Great...

    ReplyDelete
  45. நேத்துதான் ஜாக்கி இந்தப் படம் பாத்தேன்.. படம் மாதிரியே உங்க விமர்சனமும் அருமை.. அனுபவிச்சு எழுதியிருக்கீங்க.. எனக்கு படத்துல ரொம்ப முக்கியமான வசனமாப் பட்டது.. படம் பாத்துட்டு ஜெஸ்ஸி சொல்லும்.. "படத்துல என்ன ரொம்ப நல்லவளாக் காட்டியிருக்கே ஆனா நான் அப்படியில்ல" -ங்றது.. ஏனா எனக்கு ஜெஸ்ஸி ஒரு சுயநலவாதியாத் தோணுச்சு.. she just used him for her happiness..she did confused him like many other girls.. கண்டிப்பா one of the best love stories told in Tamil movie.....

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner