காதல் என்றாலே கவிதைகள்தான்.....

ஏடுகள் நிறைகிறது
உன் இதழில்
பதிக்க இயலாததை
ஏடுகளில் பதிப்பதால்......


கடவுள் மிகவும் கஞ்சன்....
முத்தமிட இரு உதடுகள் சரி...
அதனை பெறவும்
இரு..
உதடுகள் தானா?!

புரையெறினால் யாரேனும் நினைபர்கலாம்...
எனக்கு புரையேறும் சமயம்...
நினைப்பது நீயாக வேண்டாம் என்றே வேண்டினேன்...
புரையேறும் நிமிடங்கள் மட்டுமே நீ என்னை
நினைப்பதை விரும்பாதவளாய்....



என் முன்றாம் காதலி எனக்கு எழுதிய காதல் கவிதைகள் இது......

அன்புடன்
ஜாக்கிசேகர்...

அனைவருக்கும் எனது காதல் தின நல்வாழ்த்துக்கள்......

10 comments:

  1. கவிதை நல்லாயிருக்கு ஜாக்கி. காதல் என்னவெல்லாம் செய்யுது பாருங்க.

    ReplyDelete
  2. அந்த புரை மேட்டர் சூப்பரு.

    ReplyDelete
  3. கவிதை மிக இயல்பு அருமை. வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  4. //கடவுள் மிகவும் கஞ்சன்....
    முத்தமிட இரு உதடுகள் சரி...
    அதனை பெறவும்
    இரு..
    உதடுகள் தானா?!//

    இது இது கவிதை...தல சூப்பர்

    ReplyDelete
  5. காதல் தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. கடைசி ட்விஸ்ட் நல்லாயிருக்கு :)

    ReplyDelete
  7. super brother..
    i really appreciate ur honour for telling their original owner of the poem

    ReplyDelete
  8. ம்ம்ம் ..... சரிதான் நல்ல இருக்குது தல

    ReplyDelete
  9. //என் முன்றாம் காதலி எனக்கு எழுதிய காதல் கவிதைகள் இது.....//

    இது வீட்டம்மாவிற்கு தெரியுமா ஜாக்கி... :))

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner