பகுத்தறிவா? பணமா?




மயிலை குளக்கரை ரோட்டில் நானும் யாழினியும் பைக்கில் வந்துக்கொண்டு இருந்தோம்.
மாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னே

போக வேணும் தாயே தடை சொல்லாதே நீயே என்று யாழினி பாடினாள்…
நான் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்து இருக்க வேண்டும். என்னைக்கு அப்படி இருந்து இருக்கோம்….இன்னைக்கு இருக்க..?


என் கால்கள்.


மதியம் இரண்டு மணிக்கு இரக்கமற்று காயும் வெயிலில் சாலிகிராமம் பிரசாத் லேபிள் இருந்து மயிலைக்கு டூவிலரில் செல்வது பெரும் கொடுமை. 

வேறு வழியில்லை கிளம்பியே ஆக வேண்டும்.
ஏவிஎம் சிக்னல் வடபழனி பஸ் டிப்போ சிக்னல் இரண்டையும் தாண்டுவதற்குள்ளே டரியல் ஆகி விட்டேன்..

போட்டோகிராபியில் பவுன்ஸ் லைட் என்று ஒன்று உண்டு.. அதாவது வெள்ளை தெர்மோக்கோள் அல்லது வெள்ளை சாட்டின் கிளாத்தின் மேல் ஒளியை பாச்சினால்… அது சப்ட்டாக ரிப்லைக்ட் செய்யும்… குளோசப் காட்சிகள் எடுக்க இந்த புவுன்ஸ் லைட் அதிகம் உதவும்…


பிரேக் அப்





பிரேக் அப்
=============


அது என்ன? அப்படின்னு ஒரு ஆர்வம் பரபரக்கின்றது.. இது இயல்பானதான் என்றாலும் என் கண்ணில் மட்டும்தான் இப்படியான விஷயங்கள் மாட்டித்தொலைக்கின்றன...

ரொம்ப நாள் கழிச்சி யாழினியோடு நாகேஷ்வரராவ் பார்க் போய் இருந்தேன். என்னை பொருத்தவரை மயிலையின் பொட்டானிக்கல் கார்டன் அதுதான்.

யாழினி விளையாடிக்கொண்டு இருந்தாள்...

Theri movie review | தெறி திரைப்பட விமர்சனம்.




தெறி திரைப்பட விமர்சனம்.

 ராஜாராணி கொடுத்த  அட்லியின் இரண்டாவது திரைப்படம். தாணு தயாரிப்பு….விஜய் போலிஸ் கேரக்டர்… இரண்டு ஹீரோயின்களாக  சமந்தா, எமி  என்றதும் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியது நிஜம். என்னதான் ராஜாராணி நன்றாக இருந்தாலும், மவுனராகத்தில் நாகசு செய்து ஓப்பேற்றப்பட்ட திரைக்கதை என்று விமர்சகர்ளால் விமர்சனம் செய்யப்பட்ட திரைப்படம்  அது. சரி  தெறி திரைப்படம் எப்படி?


நன்றி தமிழ் இந்து.


2012 ஆம்  ஆண்டில்  ஆரம்பிக்க வேண்டியது… ஆனால் அது  தள்ளி  தள்ளி போய் கடந்த வருடம்தான் யூடியூப் வலைதளம் ஆரம்பித்தேன்.
முதன் முதலில் நான் யூடியூப் சேனல் ஆரம்பிக்க  வேண்டும் என்று நினைத்த போது… எல்லோரையும் போல காம்பயரிங் செய்ய  ஒரு அழகான ஒரு ஆண் அல்லது பெண் காம்பயரர் சினிமாவை பற்றி  பேச  தேவை  என்றுதான் யோசித்தேன்..


நான்கு வயது யாழினியின் முதல் சினிமா விமர்சனம் ஜங்கிள் புக்

எனக்கு நான்கு வயது வரை பேச்சுவர வில்லையாம்அம்மாவுக்கு பெரிய வருத்தும். முதல் ஆம்புள புள்ளை இப்படி மக்கு மடசாம்பிராணி மாறி பேசாம கிடக்கே என்று வருத்தமோ வருத்தமாம்..


Jacobinte Swargarajyam Malayalam Movie Review | ஜேக்கபினின்டே சொர்க ராஜ்ஜியம் திரைவிமர்சனம்





ஜேக்கபினின்டே சொர்க ராஜ்ஜியம்

மலையாள படங்கள் எதையும் இப்போது விடுவதில்லை.. வாரத்துக்கு ஒரு பீல் குட் மூவியை கொடுக்கின்றார்கள். மகேஷின்ட பிரதிகாரம், டாவினின்டே பரிணாமம் இந்த வாரம் ஜேக்கப்பின்டே சொர்கராஜ்ஜியம். மலையாளிகள் மென்மையாக கதை சொல்வதில் அசத்துகின்றார்கள்..


Jithan 2 (2016) Movie Review | திரைவிமர்சனம்



ஜித்தன் 2

முதல்  பாகம்  நன்றாக இருந்த காரணத்தால் ஜித்தன் ரமேஷ் என்று ரமேஷுக்கு நாமகரணம் சூட்டிய திரைப்படம்..  தம்பி ஜீவா  ஜெயித்து விட்டடார்.. ரமேஷூக்கு இன்னும் பிரேக் வரவில்லை..

Sardaar Gabbar Singh (2016) Telugu Movie Review | சர்தார் கப்பர் சிங் திரைவிமர்சனம்.




70 கோடி முதலீட்டில் 44 வயது பவன் கல்யாண் நடிப்பில் வெளி வந்து இருக்கும் திரைப்படம் சர்தார் கப்பர் சிங்.

Oyee tamil movie review | ஓய் திரைவிமர்சனம்




சிறு முதலீட்டு படங்கள் மற்றும் ஆர்ட்டிஸ் வேல்யூ இல்லாத திரைப்படங்கள்  மீதான காதல் எனக்கு எப்போதும் உண்டு.. அதுவும் வழக்கமான கதையாக இருந்தாலும் அதை  எக்சிகியூட் செய்யும் விதத்தில் உண்மையாக உழைத்து இருந்தாலே போதும்… அந்த படத்தை பற்றி கண்டிப்பாக  பேசலாம் என்பது என் அபிப்பராயம்..

happy birthday jackiechan





Armour of God என்றொரு படம்  கடலூர் நியூசினிமாவில்  நான்ஒன்பதாம் வகுப்பு  படிக்கும் போது...1988 ஆம் ஆண்டு ரிலிஸ் ஆகியது…

 அப்படி ஒரு  ஆக்ஷன் படத்தை  நான் என் வாழ்க்கையில் அதுவரை கண்டதில்லை…


ஒரு வாய்ப்பு...


சரிங்கடா கலைஞர் பாலம் கட்டுனாலும் ஊழல் செய்வார்ன்னு சொல்லுவிங்க......

அட அம்மா ஊழல் செஞ்சாலும் பரவாயில்லை சென்னை போரூர் பாலத்தை கட்டி இருக்கலாம்ன்னு சொன்னா காடாறு மாதம் நாடாறு மாதம் சென்னையிலயும் கோடா நாட்டுலயும் ஆட்சி நடத்துனதுல அவுங்க மறந்து போய் இருக்கலாம்ன்னு அதுக்கும் சப்பை கட்டு கட்டுவிங்க.... அவுங்க ரொம்ப பிசின்னு...

சரி வாட் ஈஸ் த கன்குலுஷன்..

=========

ரெண்டு திராவிட கட்சியும்தான் சார் தமிழகம் கெட்டு போவ காரணம்...

சரி...

இப்ப என்ன செய்யலாம்-?

அதனால மாற்றத்துக்கு மக்கள் நல கூட்டனியை ஆதரிக்க வேண்டும்ன்னு சொல்றோம்.. சார்..

யார் தலைமையில..?

விஜயகாந்த தலைமையில சார்....

சரி.. அதுக்கு காரணம்..?

சார் அவருக்கிட்ட ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே சார்..

ஆஹான் கரெக்ட்தான்... ஆனா நான் ஒரே ஒரு கேள்வியை பத்திரிக்கையாளர் மற்றும் பொது மக்கள்கிட்ட கேட்கறேன்..

திமுக எதிர்ப்பு காரணமாக எதிர்கட்சி அந்தஸ்த்து கூட இல்லாம போச்சி திமுக...யாருக்கிட்ட எதிர்கட்சி தலைவர் பதவிவை கொடுத்தோம்..

விஜயகாந்கிட்ட..

இந்த ஐந்து வருடத்தில் அவர் எதிர்கட்சி தலைவராக சட்டசபையில் பேசிய சாதனைகள் என்ன? என்ன?

ஆறு மாதத்தில் கரெண்டு கொடுக்கறோம்ன்னு சொன்னவாங்க இன்னைக்கு வரைக்கும் தடையில்லா மின்சாரத்தை வழங்க முடியலை.. அதுக்கு எதிர்கட்சி தலைவரா அவர் எடுத்த போராட்டங்கள் என்ன?

அதற்கு ஆளும் கட்சியை தீர்வை நோக்கி செல்ல வைத்தாரா..?

பாகிஸ்தான் பார்டரில் வாசிம்கானிடம் ரைமிங்காக பேசும் அவர்.. சட்டசபையில் எத்தனை புள்ளி விவரத்தை அடுக்கி ஈழத்தாயை நிலை குலைய வச்சி இருக்கார்ன்னு சொல்ல முடியுமா-?

மநகூ கட்சி தலைவர் மேடையில் இருக்கின்றார்கள்.. நாலே நாலு பேர்தான்.. அவர்களை பெயரையே நினைவு படுத்தி சொல்ல முடியாதவர்..ஏற்கனவே எதிர்கட்சி தலைவர் பதவியை கொடுத்தும் எதையும் கிழிக்காதவர் முதல்வராகி என்ன செய்ய போகின்றார்.???

ஒரு வாய்ப்பு கொடுக்க இது என்ன மெரினா பீச்சுல பலூன் சுடற போட்டியா..?

இதுக்கு திராவிட கட்சிகளே வந்து தொலையாளாம்..

தம்பி தமிழ் நாட்டை திராவிட கட்சிகள்தான் அழிச்சிதுன்னு சொல்ற இல்லை..

ஆமாம்....

வட நாட்டு பக்கம் எல்லாம் போய் பார்த்து இருக்கிறியாப்பா..?

இல்லை?

பார்த்துட்டு வா.. நம்ம ஊரை சொர்கம்ன்னு சொல்லுவே...

அங்க எங்க போவனும்ன்னாலும் ரயிலுதான் அதிலும் டிக்கெட் எடுக்காம போவனுங்க...

நாம ரயிலை விட பேருந்து அதிகம் யூஸ் பண்ணறோம்...குக்கிராமத்தை போக்குவரத்து உள்கட்டமைப்பால் இணைத்து இருக்கோம்...கிராமம் தோறும் ஆரம்பசுகாரதார நிலையம் அமைத்து கர்பினிகள் மற்றும் தொற்று நோய் தடுப்பை மேற்க்கொண்டு நிறைய உயிர் இழப்பை குறைத்து இருக்கோம்... இது எல்லாம் திராவிட கட்சிகளின் சாதனை...

இதை விட நாங்க தமிழ்நாட்டை சிங்கப்பூரா மாத்துவோம்ன்னு யாராவது சொன்னா திட்ட வரைவ வெளியிட சொல்லி எத்தனை வருஷத்துலஅப்படி முடிப்பாங்கன்னு கேள்வி கேட்டு ஓட்டு போடுங்க.. அது சாத்தியம்னா.. இன்பேக்ட் நானே ஓட்டு போடறேன்..

அதனால யாருக்கு உங்க ஓட்டுன்னு முடிவு பண்ணிக்கோங்க.

இதுபுரிஞ்சா இந்த பதிவை ஷேர் பண்ணிங்க இல்லாட்டி அப்படியே போய் நீங்க சொல்றது போல ஒரு வாய்ப்பை கொடுங்க... சட்டசபையில காமெடி பார்க்க காத்துக்கிட்டு இருக்கேன்.

நன்றி.

ஜாக்கிசேகர்
07/04/2016


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

Bodinayakanur vetri theater is one of the Best Theaters of Tamilnadu | போடிநாயக்கனூர் வெற்றி திரையரங்கம்


கடலூர் கூத்தப்பாக்கத்துல முருகாலாயான்னு ஒரு தியேட்டர் கட்டினாங்க… குணா படம் எல்லாம் அதில்தான் ரிலிஸ்…. ஆனா அந்த தியேட்டர் இப்ப சன்முக கல்யாண மண்டபமா மாறிடுச்சி… அந்த தியேட்டர் கட்டறப்ப தினமும் போய் அந்த தியேட்டரை பார்ப்பேன்…


happy birthday my dear friend Anandhan Balasundaram





என் மீதான அக்கறை கொண்ட நண்பர்கள் நிறைய பேர் இருந்தாலும், அயனாவரம் அனந் கொஞ்சம் ஸ்பெஷல்…

I love cinema | சினிமா மீதான காதலும் சினிமா பார்த்தலும்.….


சினிமா மீதான காதலும் சினிமா பார்த்தலும்.….


என்னை பொருத்தவரை நான் என் கவலைகள் மறக்கும் இடம் எது என்றால் அது திரையரங்குகள் என்பேன். காரணம் இரண்டு மணி நேரம் யாரோ ஒருவருடைய காதலையோ காமத்தையோ நட்பையோ இருட்டில் வாழ்ந்து விட்டு வரலாம்.


Blue shirt | நீல சட்டை






அவன் நீல சட்டை அணிந்து இருந்தான்….. விலை உயர்ந்த பைக்…. வைத்து இருந்தான்… அநேகமாக அவன் சிட்டி சென்டர் ஐநாக்ஸ் பக்கத்த்தில் இருந்து வந்து கொண்டு இருக்க வேண்டும்..

நான் அப்போதுதான் வண்டியை கழுவிக்கொண்டு இருந்தேன்.. யாரும் வருகின்றார்களா என்பதை பார்த்து சளீர் என்று வாகனத்தின் மீது எறிந்ததேன்… நல்ல தண்ணீர்தான்.. இரண்டாவது முறை சரியாக சளீர் என்று அடிந்தேன்….


With Love -part 1 காதலுடன் பாகம் ஒன்று (நான் ரசித்தவை)




காதலுடன்........ part 1 (நான் ரசித்தவை)


காமம் என்பது எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?


நல்ல பசியில் முதல் நாள் இரவில் தண்ணீர் ஊற்றி வைத்த பழய சாதத்தை எடுத்து குண்டானில் எடுத்து போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அதில் கொஞ்சம் தயிரை சாஸ்திராப்புக்கு காட்டி எண்ணெயில் வறுத்த மோர் மொளகாயோ.. அல்லது அவசரத்துக்கு கிடைத்த சின்ன வெங்காயமோ எடுத்து ஒரு கடி வெங்காயமும் சோறுமாக சாப்பிட்டு கடைசியாக குண்டானில் இருக்கும் தண்ணீரை பசியடங்கும் மட்டும் குடித்துவிட்டு சின்ன ஏப்பம் விடும் போது ஒரு நிறைவு வரும் இல்லையா..? அப்படித்தான் காமம் இருக்க வேண்டும்..



Thank u All - நன்றிகள்




கடலூரில் எனக்கு தெரிந்து இனிப்புக்கடை என்று பார்த்தால் அது ரெயில்வே கேட் அருகில் இருந்த பனாரஸ் இனிப்புகடைதான்…

அந்த கடையில் இன்டியன் ஏர்லைன்ஸ் மகாராஜா பொம்மையும் காற்றில் அதன் தலை ஆடுவதையும் இனிப்பை விட நான் சிறு வயதில் பார்த்து ரசித்த விஷயங்கள்…

அதிக பட்சம் என் விருப்ப உணவு பதளை பதளையாக கண்ணாடி சட்டங்களுக்கு உள்ளே சிறைபட்டு இருக்கும் சோன்பப்டிதான் எனக்கு மிகவும் பிடித்த இனிப்புணவு

பேக்கரி ஐட்டம் என்றால் என்ன என்று கடலுர் மக்களை அறிய வைத்த இடம் எதுவென்றால் ஜானகிராம் பேப்பர் ஸ்டோர் எதிரில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்த விஸ்டம் பேக்கரியை குறிப்பிட்டு சொல்லலாம்.. அதன் பின் அகர்வால் அது இது என்று கடலூரில் தடுக்கி விழுந்தால் பேக்கரிகள் பெருகி விட்டன.

விஸ்டம் பேக்கரிதான் முதன் முதலில் காலை மாலையில் டிரை சைக்கிளில் பேக்கரி உணவுகளை வீடு தேடி எடுத்து வந்து விற்பனை செய்தது என்றால் அது மிகையில்லை… அது மட்டுமல்ல அதில் வரும் மீன் கேக் எனக்கு பிடித்தமானது.

எனது மற்றும் எனது தங்கை பிறந்தநாளுக்கு அப்பா ஐந்து கூடை கேக் வாங்கி வருவார் விடியலில் பல் விளக்கி குளித்து முடித்து அந்த இரண்டு ரூபாய் கூடைகேக்கிற்கு ஆவலாய் பறந்ததை நினைத்தால் சிரிப்பாக வருகின்றது.. அது மட்டுமல்ல..

முதலில் அதன் மேல் ஒட்டி இருக்கும் சிவப்பு கலர் பிளம்ஸ்களை சாப்ப்பிட்டு விட்டு அதன் பின் கூடை கேக்கை சாப்பிட்டு அந்த பேப்பரை அப்படியே போட்டு விட மனம் இல்லாமல் அதில் ஒட்டி இருக்கும் சிறு துகள்களை நக்கி புக்கி நக்கி வேலை செய்து அந்த பேப்பரில்தான் கூடை கேக் இருந்ததா என்று சந்தேகம் கொள்ளும் கிளினாக நக்கி அதனை தூக்கி போட்டால்தான் அந்த பிறந்த நாள் இனிய நாளாக அமையும்..அப்பா ஐந்து பேர் என்றால் ஐந்துதான் வாங்கி வருவார்.. கூடுதலாக ஒன்று என்று யோசிக்கவே முடியாது.


இப்போது போல அப்போது எல்லாம் நினைத்தால் பரிசுபொருளோ… அல்லது நினைத்தால் டிரிட் கல்சரோ கிடையாது… பிறந்தநாளைக்கு பரிசு பொருள் கொடுப்பது என்னை பொருத்தவரை தமிழ் திரைப்படங்களில் காட்டப்படும் ஒரு நிகழ்வு என்பதாகவும் அது என் வாழ்க்கையில் சாத்தியம் இல்லை என்று நினைத்து இருந்தேன். என்மனைவியை காதலித்த ஆரம்ப வருடத்தில்… இந்த பொண்ணோடுதான் வாழ வேண்டும் என்று முடிவு எடுத்த அந்த வருடத்தில் எனக்கு பிறந்தநாள் வந்தது… என் காதலிக்கு அன்றே பிறந்தநாள்… இரண்டு பேரும் பேருந்து நிலையத்தில் சந்தித்தோம்.. பர்த்டே பிரசன்ட் என்று ஒரு கேரி பேகை கொடுத்தாள்…


அதில் சிவப்புகலர் டீஷர்ட் இருந்தது.. நான் முதன் முதலாக வாங்கிய பிறந்தநாள் பரிசுபொருள் அதுவே… நானோ கருப்பு… டீசர்ட் சிவப்பு.. அது எனக்கு செட் ஆகாது என்றும் சிவப்பாக இருப்பவர்கள் போட்டால்தான் செட் ஆகும் என்று தெரிந்தும் நான் அந்த டீ ஷர்ட்டினை பல காலம் கறிக்கடை பாய் போல போட்டுக்கொண்டு அலைந்தேன்.


அதன் பின் நிறைய பிறந்தநாள் விழாக்கள் பரிசு பொருட்கள், ஸ்டார் ஓட்டல்களில் டின்னர் என்று வாழ்க்கை மாறினாலும்.. அந்த கூடை கேக் ஏற்படுத்திய பரவசம் சொல்லி மாளாது..


யாழினி பிறந்தநாளுக்கு நெருங்கிய நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தேன்.. 99 பர்சென்ட் பேர் வந்து யாழினியை வாழ்த்தினார்கள்.. என்னை நேசித்தவர்கள் தங்கள் வீடு போல பாவித்து களத்தில் இறங்கி இரவு உணவை வந்த விருந்தினர்களுக்கு பறிமாறினார்கள்..
50க்கு மேற்பட்டவர்கள் யாழினிக்கு பரிசு பொருட்களை கொடுத்தார்கள்.. பரிசு பொருட்களால் ஹால் நிரம்பி இருந்தது…


யாழினிக்கு எல்லா பரிசு பொருளையும் பிரித்து அதனை உடனே வெளியே எடுத்து கடை பரப்பி விட துடித்துக்கொண்டு இருந்தாள்… இரவு 50க்கு மேற்ப்பட்ட பரிசு பொருட்களையும் பிரித்து அடுத்து என்ன அடுத்து என்ன? என்று பிரித்துக்கொண்டே இருந்தாள்… பாரின் சாக்லேட், கதை புத்தகங்கள், கலர் பென்சில்கள், உடைகள், ஸ்கூல் பேக், லினோவா டேப்லெட், இயந்திர பொம்மைகள், டெட்டிபியர், என்று பிரித்து பார்த்து அடுக்கிக்கொண்டு ஆர்வம் மேலிட அடுத்து அடுத்து என ஆர்வமாய் இருந்தாள்…


ஒவ்வோரு பிறந்தநாளுக்கும் அப்பா என்ன வாங்கி வருவார் என்று ஆர்வம் மேலிட விடியலில் பல் விளக்காமல் ஆர்வத்தோடு போய் பையை திறந்து பார்த்தால்

வருடா வருடம் கூடை கேக்குள் என்னை பார்த்து ஏளனமாக சிரித்துள்ளன…


கடைசி வரை அடுத்து என்ன என்று பிரித்து ஆச்சர்யப்பட அப்பா வேற ஆப்ஷன் எங்களுக்கு கொடுத்ததே இல்லை.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
17/03/2016.


குறிப்பு


நேரம் ஒதுக்கி நேரில் வந்து வாழ்த்திய உறவுகளுக்கும் நண்பர்களுக்கு நன்றி.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

Natpadhigaram 79 movie review




கண்ணெதிரே தோன்றினால் திரைப்பட ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெகு நாட்களுக்கு  பிறகு வெளிவந்து இருக்கும் திரைப்பம் நட்பதிகாரம்  79… சரி நட்பதிகாரம் என்றால் என்ன? திருக்குறளில் நட்பை பற்றி புட்டு புட்டு வைக்கும் அதிகாரமே நட்புஅதிகாரம்.. அதன் வரிசை எண் 79 … ஆனாலும் என்னை பொருத்தவரை வித்தியாசமான  டைட்டில்தான்.


kadhalum kadanthu pogum movie review | காதலும் கடந்து போகும் திரைவிமர்சனம்




சூது கவ்வும்  திரைப்படத்துக்கு பிறகு இயக்குனர் நளன் இயக்கி  அவருடைய ஆஸ்தான ஹீரோ   விஜய் சேதுபதி நடித்து வெளி வந்து இருக்கும் திரைப்படம் காதலும் கடந்து போகும்.




கொரியாவில் வெளியான கேங்ஸ்டர் லவ்வர்  என்ற திரைப்படத்தின் அதிகார பூர்வ தழுவல்தான் இந்த திரைப்படம். 

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner