ஒரு வாய்ப்பு...


சரிங்கடா கலைஞர் பாலம் கட்டுனாலும் ஊழல் செய்வார்ன்னு சொல்லுவிங்க......

அட அம்மா ஊழல் செஞ்சாலும் பரவாயில்லை சென்னை போரூர் பாலத்தை கட்டி இருக்கலாம்ன்னு சொன்னா காடாறு மாதம் நாடாறு மாதம் சென்னையிலயும் கோடா நாட்டுலயும் ஆட்சி நடத்துனதுல அவுங்க மறந்து போய் இருக்கலாம்ன்னு அதுக்கும் சப்பை கட்டு கட்டுவிங்க.... அவுங்க ரொம்ப பிசின்னு...

சரி வாட் ஈஸ் த கன்குலுஷன்..

=========

ரெண்டு திராவிட கட்சியும்தான் சார் தமிழகம் கெட்டு போவ காரணம்...

சரி...

இப்ப என்ன செய்யலாம்-?

அதனால மாற்றத்துக்கு மக்கள் நல கூட்டனியை ஆதரிக்க வேண்டும்ன்னு சொல்றோம்.. சார்..

யார் தலைமையில..?

விஜயகாந்த தலைமையில சார்....

சரி.. அதுக்கு காரணம்..?

சார் அவருக்கிட்ட ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே சார்..

ஆஹான் கரெக்ட்தான்... ஆனா நான் ஒரே ஒரு கேள்வியை பத்திரிக்கையாளர் மற்றும் பொது மக்கள்கிட்ட கேட்கறேன்..

திமுக எதிர்ப்பு காரணமாக எதிர்கட்சி அந்தஸ்த்து கூட இல்லாம போச்சி திமுக...யாருக்கிட்ட எதிர்கட்சி தலைவர் பதவிவை கொடுத்தோம்..

விஜயகாந்கிட்ட..

இந்த ஐந்து வருடத்தில் அவர் எதிர்கட்சி தலைவராக சட்டசபையில் பேசிய சாதனைகள் என்ன? என்ன?

ஆறு மாதத்தில் கரெண்டு கொடுக்கறோம்ன்னு சொன்னவாங்க இன்னைக்கு வரைக்கும் தடையில்லா மின்சாரத்தை வழங்க முடியலை.. அதுக்கு எதிர்கட்சி தலைவரா அவர் எடுத்த போராட்டங்கள் என்ன?

அதற்கு ஆளும் கட்சியை தீர்வை நோக்கி செல்ல வைத்தாரா..?

பாகிஸ்தான் பார்டரில் வாசிம்கானிடம் ரைமிங்காக பேசும் அவர்.. சட்டசபையில் எத்தனை புள்ளி விவரத்தை அடுக்கி ஈழத்தாயை நிலை குலைய வச்சி இருக்கார்ன்னு சொல்ல முடியுமா-?

மநகூ கட்சி தலைவர் மேடையில் இருக்கின்றார்கள்.. நாலே நாலு பேர்தான்.. அவர்களை பெயரையே நினைவு படுத்தி சொல்ல முடியாதவர்..ஏற்கனவே எதிர்கட்சி தலைவர் பதவியை கொடுத்தும் எதையும் கிழிக்காதவர் முதல்வராகி என்ன செய்ய போகின்றார்.???

ஒரு வாய்ப்பு கொடுக்க இது என்ன மெரினா பீச்சுல பலூன் சுடற போட்டியா..?

இதுக்கு திராவிட கட்சிகளே வந்து தொலையாளாம்..

தம்பி தமிழ் நாட்டை திராவிட கட்சிகள்தான் அழிச்சிதுன்னு சொல்ற இல்லை..

ஆமாம்....

வட நாட்டு பக்கம் எல்லாம் போய் பார்த்து இருக்கிறியாப்பா..?

இல்லை?

பார்த்துட்டு வா.. நம்ம ஊரை சொர்கம்ன்னு சொல்லுவே...

அங்க எங்க போவனும்ன்னாலும் ரயிலுதான் அதிலும் டிக்கெட் எடுக்காம போவனுங்க...

நாம ரயிலை விட பேருந்து அதிகம் யூஸ் பண்ணறோம்...குக்கிராமத்தை போக்குவரத்து உள்கட்டமைப்பால் இணைத்து இருக்கோம்...கிராமம் தோறும் ஆரம்பசுகாரதார நிலையம் அமைத்து கர்பினிகள் மற்றும் தொற்று நோய் தடுப்பை மேற்க்கொண்டு நிறைய உயிர் இழப்பை குறைத்து இருக்கோம்... இது எல்லாம் திராவிட கட்சிகளின் சாதனை...

இதை விட நாங்க தமிழ்நாட்டை சிங்கப்பூரா மாத்துவோம்ன்னு யாராவது சொன்னா திட்ட வரைவ வெளியிட சொல்லி எத்தனை வருஷத்துலஅப்படி முடிப்பாங்கன்னு கேள்வி கேட்டு ஓட்டு போடுங்க.. அது சாத்தியம்னா.. இன்பேக்ட் நானே ஓட்டு போடறேன்..

அதனால யாருக்கு உங்க ஓட்டுன்னு முடிவு பண்ணிக்கோங்க.

இதுபுரிஞ்சா இந்த பதிவை ஷேர் பண்ணிங்க இல்லாட்டி அப்படியே போய் நீங்க சொல்றது போல ஒரு வாய்ப்பை கொடுங்க... சட்டசபையில காமெடி பார்க்க காத்துக்கிட்டு இருக்கேன்.

நன்றி.

ஜாக்கிசேகர்
07/04/2016


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

Bodinayakanur vetri theater is one of the Best Theaters of Tamilnadu | போடிநாயக்கனூர் வெற்றி திரையரங்கம்


கடலூர் கூத்தப்பாக்கத்துல முருகாலாயான்னு ஒரு தியேட்டர் கட்டினாங்க… குணா படம் எல்லாம் அதில்தான் ரிலிஸ்…. ஆனா அந்த தியேட்டர் இப்ப சன்முக கல்யாண மண்டபமா மாறிடுச்சி… அந்த தியேட்டர் கட்டறப்ப தினமும் போய் அந்த தியேட்டரை பார்ப்பேன்…


happy birthday my dear friend Anandhan Balasundaram





என் மீதான அக்கறை கொண்ட நண்பர்கள் நிறைய பேர் இருந்தாலும், அயனாவரம் அனந் கொஞ்சம் ஸ்பெஷல்…

I love cinema | சினிமா மீதான காதலும் சினிமா பார்த்தலும்.….


சினிமா மீதான காதலும் சினிமா பார்த்தலும்.….


என்னை பொருத்தவரை நான் என் கவலைகள் மறக்கும் இடம் எது என்றால் அது திரையரங்குகள் என்பேன். காரணம் இரண்டு மணி நேரம் யாரோ ஒருவருடைய காதலையோ காமத்தையோ நட்பையோ இருட்டில் வாழ்ந்து விட்டு வரலாம்.


Blue shirt | நீல சட்டை






அவன் நீல சட்டை அணிந்து இருந்தான்….. விலை உயர்ந்த பைக்…. வைத்து இருந்தான்… அநேகமாக அவன் சிட்டி சென்டர் ஐநாக்ஸ் பக்கத்த்தில் இருந்து வந்து கொண்டு இருக்க வேண்டும்..

நான் அப்போதுதான் வண்டியை கழுவிக்கொண்டு இருந்தேன்.. யாரும் வருகின்றார்களா என்பதை பார்த்து சளீர் என்று வாகனத்தின் மீது எறிந்ததேன்… நல்ல தண்ணீர்தான்.. இரண்டாவது முறை சரியாக சளீர் என்று அடிந்தேன்….


With Love -part 1 காதலுடன் பாகம் ஒன்று (நான் ரசித்தவை)




காதலுடன்........ part 1 (நான் ரசித்தவை)


காமம் என்பது எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?


நல்ல பசியில் முதல் நாள் இரவில் தண்ணீர் ஊற்றி வைத்த பழய சாதத்தை எடுத்து குண்டானில் எடுத்து போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அதில் கொஞ்சம் தயிரை சாஸ்திராப்புக்கு காட்டி எண்ணெயில் வறுத்த மோர் மொளகாயோ.. அல்லது அவசரத்துக்கு கிடைத்த சின்ன வெங்காயமோ எடுத்து ஒரு கடி வெங்காயமும் சோறுமாக சாப்பிட்டு கடைசியாக குண்டானில் இருக்கும் தண்ணீரை பசியடங்கும் மட்டும் குடித்துவிட்டு சின்ன ஏப்பம் விடும் போது ஒரு நிறைவு வரும் இல்லையா..? அப்படித்தான் காமம் இருக்க வேண்டும்..



Thank u All - நன்றிகள்




கடலூரில் எனக்கு தெரிந்து இனிப்புக்கடை என்று பார்த்தால் அது ரெயில்வே கேட் அருகில் இருந்த பனாரஸ் இனிப்புகடைதான்…

அந்த கடையில் இன்டியன் ஏர்லைன்ஸ் மகாராஜா பொம்மையும் காற்றில் அதன் தலை ஆடுவதையும் இனிப்பை விட நான் சிறு வயதில் பார்த்து ரசித்த விஷயங்கள்…

அதிக பட்சம் என் விருப்ப உணவு பதளை பதளையாக கண்ணாடி சட்டங்களுக்கு உள்ளே சிறைபட்டு இருக்கும் சோன்பப்டிதான் எனக்கு மிகவும் பிடித்த இனிப்புணவு

பேக்கரி ஐட்டம் என்றால் என்ன என்று கடலுர் மக்களை அறிய வைத்த இடம் எதுவென்றால் ஜானகிராம் பேப்பர் ஸ்டோர் எதிரில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்த விஸ்டம் பேக்கரியை குறிப்பிட்டு சொல்லலாம்.. அதன் பின் அகர்வால் அது இது என்று கடலூரில் தடுக்கி விழுந்தால் பேக்கரிகள் பெருகி விட்டன.

விஸ்டம் பேக்கரிதான் முதன் முதலில் காலை மாலையில் டிரை சைக்கிளில் பேக்கரி உணவுகளை வீடு தேடி எடுத்து வந்து விற்பனை செய்தது என்றால் அது மிகையில்லை… அது மட்டுமல்ல அதில் வரும் மீன் கேக் எனக்கு பிடித்தமானது.

எனது மற்றும் எனது தங்கை பிறந்தநாளுக்கு அப்பா ஐந்து கூடை கேக் வாங்கி வருவார் விடியலில் பல் விளக்கி குளித்து முடித்து அந்த இரண்டு ரூபாய் கூடைகேக்கிற்கு ஆவலாய் பறந்ததை நினைத்தால் சிரிப்பாக வருகின்றது.. அது மட்டுமல்ல..

முதலில் அதன் மேல் ஒட்டி இருக்கும் சிவப்பு கலர் பிளம்ஸ்களை சாப்ப்பிட்டு விட்டு அதன் பின் கூடை கேக்கை சாப்பிட்டு அந்த பேப்பரை அப்படியே போட்டு விட மனம் இல்லாமல் அதில் ஒட்டி இருக்கும் சிறு துகள்களை நக்கி புக்கி நக்கி வேலை செய்து அந்த பேப்பரில்தான் கூடை கேக் இருந்ததா என்று சந்தேகம் கொள்ளும் கிளினாக நக்கி அதனை தூக்கி போட்டால்தான் அந்த பிறந்த நாள் இனிய நாளாக அமையும்..அப்பா ஐந்து பேர் என்றால் ஐந்துதான் வாங்கி வருவார்.. கூடுதலாக ஒன்று என்று யோசிக்கவே முடியாது.


இப்போது போல அப்போது எல்லாம் நினைத்தால் பரிசுபொருளோ… அல்லது நினைத்தால் டிரிட் கல்சரோ கிடையாது… பிறந்தநாளைக்கு பரிசு பொருள் கொடுப்பது என்னை பொருத்தவரை தமிழ் திரைப்படங்களில் காட்டப்படும் ஒரு நிகழ்வு என்பதாகவும் அது என் வாழ்க்கையில் சாத்தியம் இல்லை என்று நினைத்து இருந்தேன். என்மனைவியை காதலித்த ஆரம்ப வருடத்தில்… இந்த பொண்ணோடுதான் வாழ வேண்டும் என்று முடிவு எடுத்த அந்த வருடத்தில் எனக்கு பிறந்தநாள் வந்தது… என் காதலிக்கு அன்றே பிறந்தநாள்… இரண்டு பேரும் பேருந்து நிலையத்தில் சந்தித்தோம்.. பர்த்டே பிரசன்ட் என்று ஒரு கேரி பேகை கொடுத்தாள்…


அதில் சிவப்புகலர் டீஷர்ட் இருந்தது.. நான் முதன் முதலாக வாங்கிய பிறந்தநாள் பரிசுபொருள் அதுவே… நானோ கருப்பு… டீசர்ட் சிவப்பு.. அது எனக்கு செட் ஆகாது என்றும் சிவப்பாக இருப்பவர்கள் போட்டால்தான் செட் ஆகும் என்று தெரிந்தும் நான் அந்த டீ ஷர்ட்டினை பல காலம் கறிக்கடை பாய் போல போட்டுக்கொண்டு அலைந்தேன்.


அதன் பின் நிறைய பிறந்தநாள் விழாக்கள் பரிசு பொருட்கள், ஸ்டார் ஓட்டல்களில் டின்னர் என்று வாழ்க்கை மாறினாலும்.. அந்த கூடை கேக் ஏற்படுத்திய பரவசம் சொல்லி மாளாது..


யாழினி பிறந்தநாளுக்கு நெருங்கிய நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தேன்.. 99 பர்சென்ட் பேர் வந்து யாழினியை வாழ்த்தினார்கள்.. என்னை நேசித்தவர்கள் தங்கள் வீடு போல பாவித்து களத்தில் இறங்கி இரவு உணவை வந்த விருந்தினர்களுக்கு பறிமாறினார்கள்..
50க்கு மேற்பட்டவர்கள் யாழினிக்கு பரிசு பொருட்களை கொடுத்தார்கள்.. பரிசு பொருட்களால் ஹால் நிரம்பி இருந்தது…


யாழினிக்கு எல்லா பரிசு பொருளையும் பிரித்து அதனை உடனே வெளியே எடுத்து கடை பரப்பி விட துடித்துக்கொண்டு இருந்தாள்… இரவு 50க்கு மேற்ப்பட்ட பரிசு பொருட்களையும் பிரித்து அடுத்து என்ன அடுத்து என்ன? என்று பிரித்துக்கொண்டே இருந்தாள்… பாரின் சாக்லேட், கதை புத்தகங்கள், கலர் பென்சில்கள், உடைகள், ஸ்கூல் பேக், லினோவா டேப்லெட், இயந்திர பொம்மைகள், டெட்டிபியர், என்று பிரித்து பார்த்து அடுக்கிக்கொண்டு ஆர்வம் மேலிட அடுத்து அடுத்து என ஆர்வமாய் இருந்தாள்…


ஒவ்வோரு பிறந்தநாளுக்கும் அப்பா என்ன வாங்கி வருவார் என்று ஆர்வம் மேலிட விடியலில் பல் விளக்காமல் ஆர்வத்தோடு போய் பையை திறந்து பார்த்தால்

வருடா வருடம் கூடை கேக்குள் என்னை பார்த்து ஏளனமாக சிரித்துள்ளன…


கடைசி வரை அடுத்து என்ன என்று பிரித்து ஆச்சர்யப்பட அப்பா வேற ஆப்ஷன் எங்களுக்கு கொடுத்ததே இல்லை.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
17/03/2016.


குறிப்பு


நேரம் ஒதுக்கி நேரில் வந்து வாழ்த்திய உறவுகளுக்கும் நண்பர்களுக்கு நன்றி.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

Natpadhigaram 79 movie review




கண்ணெதிரே தோன்றினால் திரைப்பட ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெகு நாட்களுக்கு  பிறகு வெளிவந்து இருக்கும் திரைப்பம் நட்பதிகாரம்  79… சரி நட்பதிகாரம் என்றால் என்ன? திருக்குறளில் நட்பை பற்றி புட்டு புட்டு வைக்கும் அதிகாரமே நட்புஅதிகாரம்.. அதன் வரிசை எண் 79 … ஆனாலும் என்னை பொருத்தவரை வித்தியாசமான  டைட்டில்தான்.


kadhalum kadanthu pogum movie review | காதலும் கடந்து போகும் திரைவிமர்சனம்




சூது கவ்வும்  திரைப்படத்துக்கு பிறகு இயக்குனர் நளன் இயக்கி  அவருடைய ஆஸ்தான ஹீரோ   விஜய் சேதுபதி நடித்து வெளி வந்து இருக்கும் திரைப்படம் காதலும் கடந்து போகும்.




கொரியாவில் வெளியான கேங்ஸ்டர் லவ்வர்  என்ற திரைப்படத்தின் அதிகார பூர்வ தழுவல்தான் இந்த திரைப்படம். 

உப்புக்காத்து. 33




அவன் பெயர் துரை/
ஒரே ஊர்/
ஒரே பள்ளி/
இரண்டு பேரும் ஒன்றாக படித்தோம். நான் என்றால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும் . துரைக்கு என்னை விட இரண்டு வயது அதிகம்.அவனுடைய ஒரே குறிக்கோள் நான் எப்படியாவது மிக பெரிய ஆளாக மாற வேண்டும் என்பதுதான்..

ஏழ்மையான எனது வீடு.. வீட்டுக்கு பெரியபையன்.அதன் பொருட்டு நான் முன்னறே வேண்டும் என்று துரை அதிகம் ஆசை கொண்டான்... அதே போல் எங்கு போனாலும் கூசினி ஆள் போல என்னையும் அழைத்துச்செல்வான்...


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (06-03-2016)







ஆல்பம்..

மாநிலத்தில் எப்படியோ…அதே போலத்தான் மத்தியிலும்..  கச்சா எண்ணெய் விலை அதளபாதாளத்துக்கு குறைந்த பே போதிலும் இன்னும் விலைக்குறைப்பு  செய்யமால்  இரண்டு ரூபாய் ஒரு ரூபாய் குறைத்து கண்ணா மூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டு இருக்கின்றது…. எல்லாத்தையும் விட கொடுமை என்னவென்றால்…. விஜய் மல்லைய்யா.. ஏழாயிரம் கோடி கடன் வாங்கி இன்னும் கட்டாமல் இருக்கின்றார்… அவரை புடிச்சி ஜெயில்ல போடுங்க எசமான்.. என்று ஸ்டேட் பேங்க் ஓப்பன் ஸ்டேட்மென்ட் விட்டும் கூட,.. அவர் மேல் இதுவரை பாஜாக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை…  அது மட்டுமல்ல…  சாதாரண குடிமகன் மேல்  சட்டம் தன் கடமையை செய்யும்…



spotlight ( 2015 ) movie review | மவுனத்தை கலைத்திடுங்கள்





 #spotlight
investigative journalism ங்கறதுஒரு கலைன்னு வெளி நாட்டுல சொல்லலாம்... ஆனா நம்ம ஊர்ல உயிருக்கு உத்திரவாதம் இல்லாத விஷயம்... investigative journalism ங்கறது சாதாரண விஷயம் இல்லை... உயிரை பணயம் வைக்கிற விஷயம்... உடல் பொருள் ஆவி அத்தனையும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும்...

முதன் முதலில் தமிழகத்தில் ஒருவன் எழுத்தை பார்த்து பயந்து போனது யாருக்கு தெரியுமா? எனக்கு தெரிந்து முன்டாசுக்கவி பாரதிக்குதான்.. குறித்துக்கொள்ளுங்கள் எனக்கு தெரிந்தவரை....... பாரதியை கைது செய்ய ஸ்கெட்ச் போட்டார்கள்... ஆனாலும் சுந்திர தாகத்தை தனது கட்டுரை மற்றும் கவிதைகள் மூலம் தமிழக மக்களுக்கு சுதந்திர தாகத்தை ஊட்டிக்கொண்டு இருந்தான்...

விடுதலை போராட்ட வீரர் வஉசிக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்ததை , இந்தியா என்ற வார ஏட்டிலும், பாலபாரதம் என்ற ஆங்கில இதழிலும் தோலுரித்து தொங்க விட்டுக்கொண்டு இருக்க..... 1918 ஆம் ஆண்டில் பாண்டிச்சேரியில் இருந்து வெளியேறிய போது தமிழ் நாட்டு எல்லையில் பாரதி கைது செய்யப்பட்டார்... 34 நாட்கள் காவலில் வைக்கபட்டு விடுதலை செய்யப்பட்டார்...


Irudhi Suttru movie review | இறுதி சுற்று திரை விமர்சனம்.



மணிரத்னம் பள்ளியில் இருந்து  வெளி வந்து இருக்கும்  அவருடையமாணவி சுதா கோங்கரா பிரசாத் இயக்கத்தில் நம்ம மேடி நடித்து வெளிவந்து  இருக்கும் திரைப்படம் இறுதி சுற்று.

தமிழ் பெண் இயக்குனர்கள் வரிசையில்  மேலும் ஒரு  எண்ணிக்கை சுதா வருகையினால் கூடி இருக்கின்றது.
மாதவன் ரொம்ப நாளைக்கு அப்புறம் காத்திருந்து  செய்து இருக்கும் திரைப்படம் இந்தியின் பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹீராணியின்  தூக்கத்தை கெடுத்து  மாதவன் அவரிடம் சொன்ன கதை..
கதையின் மேல் உள்ள ஈர்ப்பின் காரணமாக   இந்தி திரை வடிவத்தை வட இந்தியாவில் தன் பேனர் மூலம் ரிலிஸ் செய்கின்றார்...
====
இறுதி சுற்று திரைப்படத்தின் கதை என்ன,?
மாதவன் இந்திய பாக்சிங் விளையாட்டில்  சிறந்த கோச்... ஆனால் பாக்சிங்  ஆணையத்தில் உள்ள உள்  அரசியலில்  அவர் சிக்கி  சின்னபின்னமாகின்றார்.. அவரை டிகிரேட் செய்கின்றார்கள்... சென்னைக்கு அனுப்புகின்றார்கள்.. அங்கே இருக்கும்   யாரையாவது  உருவாக்கி தங்கம் வாங்கி காட்டு என்று சவால் விடுகின்றார்கள்... சவாலில் மாதவன் ஜெயித்தாரா -? இல்லையா? என்பதே இறுதிசுற்று திரைப்படத்தின் கதை..
===
 படத்தின் சுவாரஸ்யங்கள்..
மாதவன்  பின்னி இருக்கின்றார்..  சான்சே இல்லை...  அவர் ஹேர் ஸ்டைலே தேசாந்திரி லுக்கையும் அறிவு ஜீவித்தனத்தையும் கொடுக்கின்றது...  படத்துக்கு பெரிய பலம்...
மாதவனா இது என்று நடிப்பில் பின்னி இருக்கின்றார்.. மிக முக்கியமாக  இப்ப அவ வெளையாட நான் என்ன செய்யனும் என்று கேட்டு... வெற்று பேப்பரில்  கையெழுத்து போட்டு விட்டு டேய் நீ  இன்னும் திருந்தலை என்பதாக சொல்லும் அந்த கட்டம் சிம்ப்ளி சூப்பர் ...
ரித்திகா சிங்... இந்தியாவின்  ஏசியன் கேம்சில்   கலந்துக்கொண்ட உண்மையான பாக்சரையே... கதையின் நாயகியாக்கி இருக்கின்றார்கள்.. யார்  கிட்ட என்ன திறமை இருக்குன்னு யாருக்கு தெரியும்... யப்பா..  பாக்சர்  பொண்ணாங்க அது.. நடிப்புல பின்னி இருக்கா...  அந்த  குழந்தை தனம் எல்லோருக்கும் பிடிக்கும் அதை விட  இன்னும் பல   பேருடைய  தூக்கத்தை  கெடுக்கும்.
அப்பா மாதிரி இருக்கறவன் ஆயிரம் பேரு  தெரியும் எல்லார்க்கிட்டயுமா நான் ஐ லவ்யு சொல்லிக்கிட்டு திரியிறேன் என்று சொல்லும் அந்த காட்சி அருமை...
 உன் அக்கா வாழ்க்கையும் சேர்த்து கெடுக்க போற என்று சொன்னதும்... வெளியே போகாமல் பனிஷ்மென்ட் ஏற்றுக்கொண்டு கிரவுண்டை சுற்றி வருவதும்.. போலிஸ் ஸ்டேஷனில் மாஸ்டர் நீங்க என்ன சொன்னலும்  கேப்பேன் என்று சொல்லி கதறுவதும்..  செமை...
ஒரு லட்சம் கொடுத்துட்ட... கொஞ்சம் வெயிட் பண்ணி இருந்தா 25 ஆயிரத்துல முடிச்சி இருக்கலாம் என்று சொன்னதும்.. இரண்டு லட்சம் கூட கொடுப்பேன் என்று  மாதவன்  சொல்லும் அந்த காட்சியும்... அதற்கு நாசர்.. யோவ் நீ ரொம்ப நல்லவன்யா என்று சொல்ல மாதவன்... அதற்கு மாதவன் நான் பேசிக்கலி நான் நல்லவன்தான் உன் பார்வையில் நான் கேட்டவன் என்பதாக மேடி அழுத்தம் திருத்தமாக பார்த்து விட்டு செல்லும் அந்த காட்சி செமை.
 நாசர், ராதாரவி  இரண்டு பேருமே செமையாக பின்னி இருக்காங்க.
 அப்பா கேரக்டரில் வரும் காளி  வெங்கட்  பின்னி இருக்கின்றார்.. திருட்டு கேபிள் எடுக்கும் காட்சி நெகிழ்ச்சி

படத்துக்கு பெரிய பலம் சந்தோஷ்  நாரயணன் இசை...   சான்சே இல்லை.. மனுஷன்   பின்னி இருக்கார்... நிறைய காட்சிகள் நெகிழ்ச்சி அடைய அவருடை   பேக்கிரவுண்ட் ஸ்கோர்  ரொம்ப ஹெல்ப் செய்யுது.
 படத்தின் ஒளிப்பதிவாளர் சிவக்குமார் உதயன் கோணங்கள் அருமை.. மாதவன் சென்னைக்கு வரும் போது  சென்னையை பற்றி எடுத்து இருக்கும் மாண்டேஜ் ஷாட்டுகள் அருமை...
சதிஷ் சூர்யாவின் எடிட்டிங் பாக்சிங் காட்சிகளில் பின்னி  இருக்கின்றார்..
 படத்துல மைனஸ் சௌக்கார்  பேட் குடும்பம் நொச்சி குப்பத்தில் என்பதில் தான் நெருடல்

======
படத்தின் டிரைலர்




======
படக்குழுவினர் விபரம்..

Directed by    Sudha Kongara
Produced by    S. Sashikanth
C. V. Kumar (Tamil)
R. Madhavan (Hindi)
Rajkumar Hirani (Hindi)
Written by    Sudha Kongara
Sunanda Raghunathan
Arun Matheshwaran (Tamil dialogues)
Screenplay by    Sudha Kongara
Story by    Sudha Kongara
Starring    R. Madhavan
Ritika Singh
Music by    Santhosh Narayanan
Cinematography    Sivakumar Vijayan
Edited by    Sathish Suriya
Production
company
Y NOT Studios
UTV Motion Pictures
Thirukumaran Entertainment (Tamil)
Distributed by    Dream Factory (Tamil)
Rajkumar Hirani Films
Tricolour Films (Hindi)
Release dates
29 January 2016
Country    India
Language    Tamil
Hindi

========
பைனல் கிக்.
 எப்படி  பெண் இயக்குனர்களில் பிரியா கண்ட நாள் முதல் படத்தில் காதல் மூலம் நெகிழ வைத்தாரே..? அதே போல இயக்குனர் சுதா... ஆக்ஷன்  படத்தில் அசத்தி இருக்கின்றார்.. ஸ்போர்ட்ஸ் ஜானரில் தமிழில் இப்படி ஒரு  சிறப்பான படத்தை கொடுப்பார் என்று யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்...

பின்னி இருக்கின்றார்... சினிமா என்பது கூட்டுமுயற்சி என்பதை புரிந்து திறமையாளர்களை கண்டு பிடித்து   அவர்களது திறமையின் உச்சத்தை வெளிக்கொண்டு வந்துள்ளார்.. அதனாலே இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது... அதை விட  கதை விவாதத்துக்கு  இயக்குனர் பாலாவிடம் கூட  கருத்துக்களை கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன...


அதை விட மாதவன் அடிஷ்னல் ஸ்கிரின் பிளே ஒர்க் செய்து இருக்கின்றார்.... எல்லாவற்றையும் விட   நெகிழ்ச்சியான காட்சிகள் இந்த படத்துக்கு பெரிய  பலம் என்பேன்...  ஒரு திரைக்கதையை செல்லுலாய்டில் மாற்றும் வித்தை சுதாகோங்ரா பிரசாத்துக்கு கை வந்துள்ளது என்பேன்..

 எல்லவற்றையும் விட கிளைமாக்ஸ்  நெகிழ்ச்சியின் உச்சம்... ஆனால் அதை கையாண்ட விதத்தில்இந்த படம் ஜெயிக்கின்றது.. கிளைமாக் ரெபரன்சுக்கு சுதா வேறு எங்கும் அலையவில்லை.. மணிரத்னத்தின் திருடா திருடா கிளைமாக்சே போதுமானது..
வாழ்த்துகள் இறுதி சுற்று டீம்.


===
 படத்தின் ரேட்டிங்..
 பத்துக்கு எட்டு
======
வீடியோ விமர்சனம்.






#iruthisutrumoviereview

#iruthisutru
#SaalaKhadoos
#madhavan



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

Greetings thambi vimal | வாழ்த்துகள் டிசைனர் தம்பி விமல்



நம்ம கூட இருக்கும் பசங்க முன்னேறும் போது.. நம்ம ஜெயிச்சதா ஒரு சந்தோஷமும் மன நிறைவும் வரும் இல்லையா... ?

கெத்து எனப்படுவது யாதெனில் அது – ஜெயமோகன்.








நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான  புத்மஸ்ரீ   விருதினை எழுத்தாளர் ஜெயமொகன்  தனக்கு வேண்டாம் என்று மறுத்து இருக்கின்றார்…


 அவர் விருதினை பெற்று இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்றுஇணையம் எங்கும் பல்வேறு விதமான   விவாதங்கள் நடைபெற்று வருகின்றன…



salute air india | ஏர் இந்தியாவுக்கு வணக்கம்





வளைகுடா போர் 1990 ஆம் ஆண்டு … ஆகஸ்ட் ஒன்னாம் தேதி தொடங்குகின்றது..

ஒரு லட்சத்ததி எழுபதாயிரம் மக்கள் அகதிகளாக தவித்து போய் கிடக்க…அவர்களை அழைத்து வர இந்திய கவர்மென்ட் எடுத்து முயற்சிகள் உள் அரசியல்…
அலட்சியம் போன்றவற்றை மிக விரிவாய் விவரிக்கின்றது ஏர்லிப்ட் இந்தி திரைப்படம்.

Dear director bala | அன்புள்ள இயக்குனர் பாலாவுக்கு



தாரை தப்பட்டை

பார்க்க வேண்டிய திரைப்படம்தான்....

ஆனால்... கொஞ்சம் விரிவாய் பேசுவோம்

Tharai Thappattai (2016 ) tamil movie review | தாரை தப்பட்டை திரை விமர்சனம்

 


இசைஞானியின் ஆயிரமாவது திரைப்படம். அதனாலே படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு…  இளையராஜா அறிவிருக்கா சர்ச்சையில் சிக்கி  அவரை படுத்தி எடுத்துக்கொண்டு இருக்கும்  போது  தாரா தப்பட்டை திரைப்படத்தின் பாடல்கள்  வெளி வந்தவுடனே சமுக வலைதளங்களில்   அவரை  மீண்டும் கொண்டாட வைத்தன  அது மட்டுமல்லாமல் சசிக்குமார் புரொடெக்ஷன்  மற்றும் அவரே நடிக்கின்றார் என்பதும்… வரலட்சுமி போன்ற சிட்டி மார்டன் கேரக்டர் எப்படி  ஆட்டக்காரியாக ஆட முடியும் என்ற  கேள்விகள் எல்லாம் ஒரு சேர  எழ…படத்தின்  மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது என்றே சொல்ல முடியும்…
===

Rajini murugan ( 2016 ) Movie Review | ரஜினி முருகன் திரை விமர்சனம்.



வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இரண்டாம் பாகம்தான் ரஜினி முருகன் என்ற பெயரில் வெளிவந்துள்ளது.. இயக்குனர்  லிங்குசாமியின் எதிர்காலத்தை   தீர்மாணிக்கும் திரைப்படம் ரிலிஸ் தேதி சிக்கலில்  சந்தித்துத்து  இதோ அதோ என்று போக்கு காட்டி வெளி வந்து இருக்கும் திரைப்படம் ரஜினிமுருகன்.. நம்பி வாங்க சந்தோஷமா போங்க என்பதுதான் ரஜினி முருகன் திரைப்படத்தின் கேப்ஷன்… நம்பி வந்தவங்களை மோசம் செய்ததா இல்லையா? என்பதை இப்போது பார்ப்போம்.

Happy Birthday Pavithra ... தோழி பவித்ரா




  கடந்த வருடம் 2015  டிசம்பர் மூன்றாம் தேதி செம மழை...  சென்னையில் வெள்ள பாதிப்பு உக்ரமாக இருந்த தினம்.

நான் வேளச்சேரியில் வெள்ள நிவாரண பணிகள் செஞ்சிக்கிட்டே , வீடியோ எடுத்துக்கிட்டு இருக்கேன்.. அங்கதான் என் பிரண்ட் பவித்ரா வீடும்...

செம மழை வெளுத்து வாங்குது..

2015 ஆம் ஆண்டின் புதுமுக இயக்குனர் ரவிக்குமாருக்கு ... வாழ்த்துகள்





பொதுவா நம்ம கூட இருக்கறவங்க… முக்கியமா நம்மளை பொறாமையா பார்க்காம  அவங்க பாதையில போய் தில்லா  ஜெயிக்கறவங்களை  நமக்கு ரொம்பவே பிடிக்கும் அந்த  வரிசையில்  நேற்று இன்று நாளை திரைப்படத்தின் இயக்குனர்  தம்பி  ரவிக்குமாரும்  ஒருவர்…


சத்தமில்லாத சேவைகள் நண்பர் ரபிக்.




நண்பர் Rafeek பற்றி... சில வார்த்தைகள்..

கடந்த டிசம்பர்  மாதம் சென்னையை  அடித்து புரட்டி போட்ட பெருமழையில் ரபிக் குழுவினரின் பணி மெச்சதக்கது...

chennai international film festival 2016| சென்னை 13 வது உலக திரைப்பட விழா இனிதே துவங்கியது…




 13 வருடத்துக்கு முன்   பாண்டியை சேர்ந்த அன்பு என்ற உதவி இயக்குனர் உலக படவிழாவுக்கு  செல்வதாக இருந்தார்  வேலை பளுகாரணமாக அவர் செல்லவில்லை…அந்த டிக்கெட்டை என்னிடம் கொடுத்து  படங்களை பார்க்க சொன்னார்.. அதுதான் ஆயிரக்கணக்கான உலக திரைப்படங்கள் பார்க்கவும் அதை பற்றியும் எழுதுவும் விழுந்த முதல் விதை அதுதான்.

சென்னை புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் நகர்வலம்... 2016




 
புத்தாண்டு தினத்தின் இரவில் பழைய நியாபகங்கள் கிளிறிய படி சென்னையை வலம் வருவது வழக்கம்..
அப்படி  வேளச்சேரிக்கு சென்று கொண்டு இருந்த போது..

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner