கற்றது களவு திரைவிமர்சனம்...

திருட்டுகள் பல வகைபடும் தினமும் பல வகையான நூதன திருட்டுகள் நடை பெற்றவண்ணம் உள்ளன... நேற்று அமைந்தகரையில் வீட்டில் தனியாக இருந்த வயதானபெண்மணியிடம்...ஒருவன் தான் தமிழ் நாடு மின்சாரதுறை ஊழியர் என்றும்....
உங்கள் வீட்டில் ஏற்படும் மின்கசிவினால்தான் இந்த பகுதியில் மின்தடை எற்படுவதாக சொல்லி... வீட்டின் உள்ளே நுழைந்து எல்லா இடத்தையும் செக் செய்வதாக நடித்து, வாட்டர் ஹீட்டர் மேல் இருந்துதான் பிரச்சனை... அதன் மேல் தங்கம் வச்சா என்ன பிரச்சனைன்னு கண்டுபடிச்சிடலாம்னு சொல்ல.. அந்த பாட்டியும் தன்னுடைய 4பவுன் செயினை கழட்டி கொடுத்து இருக்கு... இவனும் வாட்டடர் ஹீட்டர் மேல வைத்து விட்டு குடிக்க தண்ணி கேட்டு இருக்கின்றான்...அந்த அம்மா தண்ணி எடுத்துகினு வந்தவுடன் தண்ணீர் குடித்து விட்டு அபிட்டாகி இருக்கின்றான்...

சரி இந்த விஷயம் அந்த பெண்மணிக்கு தெரியாதா? தெரியும்... சில பேர் எவ்வளவு படிச்சவைனையும் நம்பற அளவுக்கு பேசுவாங்க...அதுக்கு ரொம்ப பிளஸ்பாயின்ட் அவுங்க அப்பாவி முகமும் ஒரு காரணமா இருக்கும்.....


நானே ஒரு டாகில்ட்டி பார்ட்டி எனக்கே ஒருத்தன் 50ரூபாய் அபிட் விட்டான்...காலையில் ஒருத்தன் மஞ்சள் வேட்டி மஞ்சள் சட்டை போட்டு இருந்தான்...அங்காளம்மனுக்கு கூழ் ஊத்த வேண்டும் ஊர் வசூல் இது என்று சொன்னான்... புது இடம் சரி எவ்வளவு என்றேன்.. ? நன்கொடை புத்தகத்தை கொடுத்தான் அதில் 1000,500, 200, எல்லாம் எழுதி இருந்தது..

ஊர்வசூல்னு செல்லற... நீ மட்டும் தனியா வந்து இருக்க...மத்த ஊர்காரங்க எல்லாம் எங்கே என்று கேட்ட போது பக்கத்து விட்டில் வசூலிப்பதாக சொன்னான்...

நானும் கழுவாத மூஞ்சியை வச்சிக்கினு... கதவு திறந்து பக்கத்து வீட்டுக்காரனை காலையில ரொம்ப டிஸ்டர்ப் செய்யவேண்டாம்னு... நான் தம்பி எனக்கு கடவுள் நம்பிக்கை எல்லாம் இல்லை ஊர் வசூல்னு சொல்லறதால...இந்தா 50ரூபாய் வச்சுக்கோ என்று சொல்லி நன்கொடை புத்தகத்தில் அணுஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவது போல் போட்டு தொலைத்து விட்டு, காலை பத்து மணிக்கு பக்கத்து அக்கத்து வீடுகளில் நீங்கள் அங்காளம்மன் கோவில் கூழ் திருவிழாவுக்கு எவ்வளவு கொடுத்திர்கள் என்று கேட்க...


அப்படி யாரும் வரவில்லை என்றும்.. இங்கு அப்படி ஒரு கோவில் இல்லை என்றும் சொல்ல அப்புறம்தான் அவன் எனக்கு மட்டும் ஸ்பெஷல்கூழ் ஊத்திவிட்டு சென்றது எனக்கு தெரிய வந்தது....இதே போல் ஒரு டகால்ட்டி பார்ட்டி பற்றிய கதைதான்... கற்றது களவு....

கற்றது களவு படத்தின் கதை என்ன?
கிருஷ்ணா மாணவர்களுக்கு பயனுள்ள ஒரு பேங்க் திட்டத்தை யோசித்து வைத்து இருக்க.. ஒரு தனியார் பேங்க் சேர்மேன் சந்தனபாரதியுடம், கிருஷ்ணா அந்த மாணவர் திட்டத்தை விவரிக்க அந்தபுராஜக்ட்டை தனது என்று சொல்லி சந்தானபாரதி பேர் வாங்கி கொள்கின்றார்..கிருஷ்ணாவை நம்ப வைத்து கழுத்து அறுத்த காரணத்தால் சந்தானபாரதியை பழி வாங்க கிருஷ்ணா ஏமாற்ற நேரம் பார்த்து கொண்டு இருக்க...


வீட்டில் டீச்சர் வேலை பார்க்க வேண்டும் என்று கட்டாய படுத்திய காரணத்தால்... ஹேர்ஹோஸ்டல் ஆக வேண்டும் என்ற கனவோடு சென்னை வரும் விஜயலட்சுமி(வேணி)....சென்னை வந்து கனவு சிதைந்து கிருஷ்ணாவிடம் நட்பாக... சந்தானபாரதியை ஏமாற்றுவதில் கிருஷ்ணாவுக்கு சின்ன சின்ன உதவி செய்ய ஆரம்பித்து, நிறைய திருட்டுகள் செய்து கொண்டே இருக்க....


இருவரும் ஒரு அரசியல் தலைவர் விஷயத்தில் மூக்கை நுழைக்க.. இவர்களை போலிஸ் என்கவுன்டரில் போட அலைகின்றது... அவர்கள் தப்பித்தார்களா? என்பது மீதி கதை...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....
இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது... ஆனால் அலிபாபா படத்துக்கு பிறகு கிருஷ்ணா நடிக்கும் படம்.. பட் அலிபாபா ஒரு நல்லபடம்...அந்த அளவுக்கு இதில் சுவாரஸ்யம் குறைவு என்பேன்...

அஜித் நடித்த தமிழ் பில்லா படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தன் தம்பி கிருஷ்னா நடித்த படம்...அவர்களின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா எடுத்து கொடுத்து இருக்கும் படம்...

கிருஷ்ணா இந்த படத்தில் அலிபாபா அளவுக்கு அதிகமாக கவரவில்லை...விஜயலட்சுமி சென்னை 28க்கு பிறகு நல்லவளர்ச்சி அடைந்து இருப்பது படத்தின் பிரேம்களில் தெரிகின்றது...

படத்தின் டைட்டில் பாடலை தவிர மற்றது ஏதுவும் சொல்லி கொள்வது போல் இல்லை...
படத்தின் பல இடங்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும் முழு படத்தையும் நகர்த்த அந்த சுவாரஸ்யம் மட்டுமே போதுமானதாக இல்லை...

இராமேஸ்வரம் சேசிங் காட்சிகள் ஒரு நல்ல ஆங்கில படத்தை கண்முன் விரிய வைக்கும் அளவுக்கு சேசிங் இருந்தது... அதன் பிறகான டுவிஸ்ட் படம் நெடுகிலும் இருந்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும்.....

டான்ஸ்மாஸ்டர் கல்யான் இதில் வில்லன் போலிசாக நடித்து இருக்கின்றார்... சில வசனங்கள் நன்றாக இரந்தாலும் சில மேனரிசங்களில் பேசும் வசனங்கள் திணிக்கபட்டவையாகவே இருக்கின்றன...

இராமேஸ்வரம் காட்சிகள் மற்றும் கல்யாண் மணலில் படுத்து இருக்கும் போது
எடுத்து இருக்கும் அந்த லாங் ஷாட்...கிளைமாக்ஸ்க்கு முன் ஒரு விட்டில் இருவரையும் தே ட போகும் அந்த சேசிங் காட்சிகள் நன்றாகவே இருக்கின்றன....
சும்மா இருக்கும் போது பொழுது போகவில்லை என்றால் இந்த படத்துக்கு போகலாம்.. சில இடங்களில் சுவாரஸ்யபடுத்தி இருக்கின்றார்கள்...

இயக்குனருக்கு இது முதல் படம் என்று நினைக்கின்றேன்.. சர்கஸ் சாங் எல்லாம் இடைச்செருகலாக துறுத்திக்கொண்டு தெரிகின்றன...
தியேட்டர் டிஸ்க்கி...

விருகம்பாக்கத்துல தேவிகருமாரிஅம்மன் ஒரு தியேட்டர் இருக்கு அதுல சக்தி கருமாரின்னு ஒரு தியேட்டர்... அந்த தியேட்டரை நீங்க பார்த்து இருப்பிங்க....

சண்டைக்கோழி படத்துல தியேட்டர்ல மீரா ஜாஸ்மீன் கத்தி கூச்சல் போடுவாங்களே... படம் கூட தலைகிழ ஓடுமே... அதே தியேட்டர்தான்...

இந்த படம் தலைகிழ ஓடலை பாதியா ஒடிச்சி... சரி மாத்துவான் மாத்துவான்
பார்த்த மாத்தலை வழக்கம் போல கத்தினதும் சிரி செய்யபட்டது..

கீழ இருக்கற தேவிகருமாரி அம்மன்.. சூப்பரா பண்ணிட்டாங்க.. மத்த ரெண்டு தியேட்டருக்கு எப்ப விடிவுகாலம்னு தெரியலை...

மேல் பக்கம் டைட்டில் கிளியரா தெரியுது... கீழ் பக்கம்... அவூட்ல தெரியது... படம் முழுக்க நிறைய அவுட்... புரஜக்டர் லென்ஸ் அரதபழசா போயிடுச்சி.. அதனால் ரசிச்சி நெத்தி வேர்வை நிலத்துல சிந்தின உழைப்பை ரசிக்க முடியலை.....

அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...

(FARGO) தொடர் கொலைகளை கண்டுபிடிக்கும் கர்பினி பெண் போலிஸ்...

இன்றைய சென்னை மாநகர பேருந்துகளில் நீங்கள் அடிக்கடி ஒரு விஷயத்தை காணலாம்... அது பெரியவர்கள் நின்று கொண்டு இருப்பார்கள்...இளையவர்கள் உட்கார்ந்து கொண்டு இருப்பார்கள்...சில பெரியவர்கள்.. எதை பற்றியும் கவலை படாமல் மிடுக்குடன் நின்று கொண்டு இருப்பார்கள்....சில பெரியவர்களால் நிற்க்க முடியாது அவர்களில் யாராவது ஒருவர் உட்கார இடம் கொடுக்கமாட்டார்களா? என்று கண்களில் வேதனையுடன் பார்பது கொடுமையாக இருக்கும்...

என் அம்மாவோடு பேருந்து பயணஙகளில் நான் பயணிக்கும் போது முன்று விஷயங்கள் பார்த்து என் அம்மாவை ரொம்பவும் மரியாதையாக பார்ப்பேன்..என் அம்மா பேருந்தில் ஏறினால் மூன்று விஷயங்களை கடை பிடித்து வந்தாள்...

பெரியவர்களில் பாலினம் பார்க்காமல் இடம் இல்லை என்றால் சட்டென எழுந்து நின்று இடம் தருவாள்...இரண்டாவதாக.... கர்பினியாக யார் பேருந்தில் ஏறினாலும்அவர்களுக்கு எழுந்து இடம் தந்து விடுவாள்...5கிலோமீட்டர் மற்றும் 25 கீலோமீட்டர் பயணம் செய்யும் லோக்கல் பேருந்துகள்தான்.. அதற்க்கே சீட்டுக்கு அடித்துக்கொள்வார்கள்...

மூன்றாவதாக எந்த பெண் கைகுழந்தையுடன் ஏறினாலும் கை குழந்தையுடன் ஏறும் பெண்ணின் கை குழந்தை சுமையை தான் வாங்கி வைத்துக்கொள்வாள்...அதுவும் லோக்கல் பஸ்ஸில் இடுப்பில் குழந்தையை வைத்துக்கொண்டு, பேருந்தில் பேலன்ஸ் இல்லாமல் ஆடியபடி டிக்கெட் எடுக்க முடியாமல் தடுமாறும் எத்தனையோ தாய்மார்கள் நீங்கள் பார்த்தபடி தேமே என்று உட்கார்ந்து இருக்கலாம்.....


இனி அப்படி செய்யாதீர்கள்... குழந்தை வைத்துக்கொண்டு நின்று வரும் பெண்ணின் கைகளில் உள்ள குழந்தையை வாங்கி வைத்துக்கொள்ள முயற்ச்சி செய்யுங்கள்....இதில் கொடுமை அந்த பெண்ணை படாத பாடு படுத்தி எடுத்து அவளுக்கு குழந்யை கொடுத்த கணவன்... அவளுக்கு கை வலிக்குமே... அந்த குழந்தையை நாம் சிறிதுநேரம் வைத்துக்கொள்வோம் என்ற எண்ணம் தாலி கட்டிய கணவனக்கு இருக்கவே இருக்காது.....

இதனாலே என் சிறுவயதில் எங்கள் ஊர் பேருந்து பயணங்களில் எங்கள் அம்மாவோடு நாங்கள் உட்கார்ந்து பயணித்ததே இல்லை... முதியவர்.. ஊனமுற்றோர்,கர்பினி பெண் போன்றவர்கள் எங்கள் அருகில் உட்கார்ந்து பயணித்து இருக்கின்றார்கள்...என் அம்மா அவள் எழுந்து இடம் கொடுத்து விடுவாள்...எனென்றால் என் அம்மா 5 பெற்றவள்...கர்பமாய இருக்கும் போது வலி வேதனை என்னவென்று அவளைவிட வேற யாரும் அதிகம் அறிய முடியாத ஒன்று....

அப்படி எழுமாத கர்பினியாக இருக்கும் ஒரு பெண் போலிஸ் அதிகாரி நகரில் நடக்கும் கொலையை இன்வெஸ்ட்டிங் செய்து கண்டுபிடிக்கின்றாள் என்றால் அது சாதாரண விஷயமா?..... என்ன பிரச்சனை என்றால் அவர்கள் கொடுர கொலையாளிகள் யாரையும் வைத்துப்பார்க்கமாட்டார்கள்....

FARGO படத்தின் கதை இதுதான்...


Jerry Lundegaard (William H. Macy) ஒரு கார் சேலஸ்மேன்... அவனுக்கு ஏகப்பட்ட கடன் பிரச்சனை... எப்படியாவது கடனை அடைக்க என்ன செய்யலாம் என்று மண்டையை பிச்சிகிட்டு யோசிக்கிறான்...அவன் மாமனார் அதிகம் பணம் உள்ளவர்அவருடைய கார் ஷாப்புலதான் இவன் விற்பனை பிரதிநிதி...

எப்படியும் கடனை அடைக்க பணம் வேனும்... அந்த பணத்தை அடைய என்ன செய்யலாம்னு ஜெர்ரி யோசிக்கறப்ப..... புது படத்துக்கு சத்தியம் தியேட்டர்ல இரண்டு டிக்கெட் புக்செய்வது போல் இரண்டு குற்றவாளிகளை புக் செய்யறான்... அதாவது அவன் மனைவியை கடத்தி அவன் மாமனார்கிட்ட இருந்து லட்சக்கணக்குல பணத்தை கறக்கறதுதான் அவன் திட்டம்....

அந்த ரெண்டு கிரிமினல்சும் ஒரு சுபயோக சுபதினத்துல ஜெர்ரி ஒய்ப் டிவி சிரியல் பார்த்துகிட்ட இருக்கறப்பவே அவளை கடத்துறானுங்க...அனா அவளை அவுங்க ரகசிய எடத்துக்கு அழைச்சிகிட்டு போகறதுக்குள்ள அவுங்க துப்பாக்கி பல பேரோட உயரை குடிக்குது... விடியலில் தூங்கி கொண்டு இருக்கும் ஏழுமாத கர்பினி பெண் போலிஸ் Marge Gunderson (McDormand)க்கு போன் வருதுஎம்ம நகரத்துல இப்படி இப்படி கொலை நடந்து இருக்கு... நீ எப்பிடி எப்பிடிகண்டுபிடிக்கபோறேன்னு? அந்த புள்ளதாச்சிபுள்ள எப்படி அந்த கொடுர கொலைகாரனை எப்படி கண்டுபிடிச்சான்னு உங்களுக்கு ஆர்வம் இருந்தா.... பார்த்து வைங்க...
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

கோயின் பிரதர்ஸ் படம் என்றாலே...அவர்களின் வில்லன்கள்.. பழி பாவத்துக்கு அஞ்சவே மாட்டார்கள்...உலகத்துக்காக அவர்கள் என்று நினைக்கமாட்டார்கள்...உலகமே அவர்களுக்காக படைக்கபட்டதாக நினைத்துக்கொள்பவர்கள்...

அதற்கு மிகச்சிறந்த உதாரணம் 4 ஆஸ்கார் வாங்கிய No Country for Old Men படத்தையும் அந்த படத்தின் வில்லனையும் சொல்லலாம்...

இந்த படம் ஒரு உண்மை சம்பவம்...படத்தின் அடிநாதத்தை வைத்துக்கொண்டு கேரகடர்களை மாற்றி எடுத்து இருக்கின்றார்கள்...

இந்த படம் அமேரிக்கா பிலிம் இன்ஸ்டியூட்ல 100 வருஷம் 100படம் வரிசையில இந்த படம் 84வது இடத்துல இருக்கு...

இந்த படத்துல நடிச்ச Marge Gunderson (McDormand)100 வருஷத்துல பெஸ்ட் கதாநயகன் வரிசை எண்...ரேங் 33...வது இடத்துல இருக்கார்

இந்த படத்தின் Roger Deakinsஒளிப்பதிவு நிச்சயம் பாராட்டபடவேண்டிய ஒன்று...படம் முழுக்க அவுட்டோர் காட்சிகள் எல்லாம் பனிமுடிய சாலைகளில் கதை நடப்பதாக இருப்பதால் பல சீன்களில் பனி அதிகம் இருப்பது போல் செட் போட்டு எடுத்தார்களாம்....

முக்கியமா ஜெர்ரி வீட்டுக்கு போக கார் எடுக்கும் போது ஒரு எம்டி லாங் ஷாட் இருக்கும்.. முதல்ல அது ஒரு வரைபடம் நாம நினைச்சிகிட்டு இருக்கும் போது அதுல ஜெர்ரி நடந்து போகும் அந்த ஷாட் சான்சே இல்லை

படத்தில் ஓ...யா, ஓ...யா என்று பேச்சுக்கு பேச்சு... ஒரு 3000 முறையாவது சொல்லி இருப்பார்கள்....

குட் சீன்....
ஜெர்ரி மனைவியை கடத்த வரும் இரண்டு கிரிமினில்களும் அந்த பெண்ணின் போராட்டமும்... அற்புதம்...

சம்பந்தம் இல்லாத ரெண்டு பேர் அந்த போலிஸ் கொலையை பார்த்துவிட்டு காரில் பறக்க... வில்லனும் அவனை துரத்த... அந்த காட்சி..


படத்தின் விருதுகளும் பரிந்துரையும்....

Awards and honors

Wins

* Academy Award for Best Actress - Frances McDormand
* Academy Award for Writing Original Screenplay - Joel and Ethan Coen
* BAFTA David Lean Award for Direction - Joel Coen
* Cannes Film Festival Award for Best Director - Joel Coen[2]
* New York Film Critics Circle Award for Best Film
* National Board of Review for Best Actress - Frances McDormand
* National Board of Review for Best Director - Joel Coen
* Screen Actors Guild Awards for Performance by a Female Actor in a Leading Role - Frances McDormand
* Writers Guild of America Award for Best Screenplay Written Directly for the Screen - Joel and Ethan Coen
* 2006 National Film Registry
Nominations

* Academy Award for Best Picture - Ethan Coen
* Academy Award for Directing - Joel Coen
* Academy Award for Best Supporting Actor - William H. Macy
* Academy Award for Best Cinematography - Roger Deakins
* Academy Award for Film Editing - Roderick Jaynes
* Golden Globe Award for Best Motion Picture - Musical or Comedy
* Golden Globe Award for Best Director - Motion Picture - Joel Coen
* Golden Globe Award for Best Actress - Motion Picture Musical or Comedy - Frances McDormand
* Golden Globe Award for Best Screenplay - Motion Picture - Joel and Ethan Coen
* Palme D'or
படத்தின் டிரைலர்...



படக்குழுவினர் விபரம்...

Directed by Joel Coen
Ethan Coen (uncredited)
Produced by Ethan Coen
Joel Coen (uncredited)
Written by Joel Coen
Ethan Coen
Starring Frances McDormand
William H. Macy
Steve Buscemi
Peter Stormare
Music by Carter Burwell
Cinematography Roger Deakins
Editing by Roderick Jaynes
Studio PolyGram Filmed Entertainment
Working Title Films
Distributed by Gramercy Pictures
Release date(s) March 8, 1996
Running time 98 minutes
Country United States
Language English
Budget $7,000,000 (est.)
Gross revenue $60,611,975


அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...

சிங்கம்.. அயன் படத்துக்கு பிறகு சன் குழுமத்துக்கு வெற்றிபடம்

அயன் படத்துக்கு பிறகு சன்குழுமத்துக்கு பேர் சொல்லிக்கொள்ளும்அளவுக்கு ஒரு வெற்றிபடம்...இப்போது வெளியாகி இருக்கும் சூர்யா நடித்த சிங்கம் திரைப்படம்...இது போலான படங்களை நீங்கள் 230வது தடைவையாக கூட நீங்கள் பார்த்து வைக்கலாம்...ஒரு பக்கா கமர்ஷியல் படம் இந்த படம்..... அதில் எந்த மாற்று கருத்தும் சொல்லமுடியாது... ஆனால் கதையை ரொம்ப விறுவிறுப்பாக சொல்லி இருக்கின்றார்கள்....

இந்த படத்தை நான் பார்க்க நினைத்த முதல் காரணம் அனுஷ்கா டிரைலரில் காதல் வந்தாலே பாடலில் எந்த ரியாக்சனும் இல்லாமல் சட்டென் சூர்யாவை பார்த்து கண் அடிப்பதும், உதடு குவித்து முத்தா கொடுப்பதும் ஏனோ எனக்கு ரொம்பவும் பிடித்து போய் விட்டது.. டேய் இதேல்லாம் ஒரு காரணமா என்று யாரும் கேட்க கூடாது.. நான் சொல்லிடுவேன் பலபேர் சொல்ல கூச்சபடுவாங்க அப்புடுத்தேன்...

சாமி படத்துக்கு பிறகு ஹரி இயக்கிய எந்த படத்தையும் நான் தியேட்டரில் போய் பார்த்தில்லை...

சிங்கம் படத்தின் கதை இதுதான்....

துரைசிங்கம் (சூர்யா)தூத்துக்குடியில நல்லூரில் எஸ் ஜ ... சொந்த ஊரில் வேலை குடும்பத்துடன் ஆட்டம் பாட்டத்துடன் வாழ்கின்றார்...சென்னைதாதா மயில்வாகனன்(பிரகாஷ்ராஜ் )ஒரு கேஸ் விஷயமா சென்னையிலிருந்து தூத்துக்குடி வந்து கையெழுத்து போட சோம்பேறிதனம் பட்டுகிட்டு அவர் பேருல வேற ஒருத்தன் கையெழுத்து போட.. பிரகாஷ்ராஜ் இன்னுடம 3 மணி நேரத்துல பிளைட்டை பிடிச்சாவது இங்கவந்து கையெழுத்து போடனும்னு சூர்யா சொல்ல அங்க ஆரம்பிக்குது வினை... வினை...அதே ஊருக்கு லீவுல நாசர் பொண்ணுங்கஅனுஷ்க்கா (காவ்யா)மற்றும் அவர் தங்கை வர.. அங்கே சூர்யாவுடன் காதல்...இப்படியா போவுது கதை... இதை இப்படியும் சொல்லலாம்....

இப்படி சொல்லாம... கீழ இருப்பது போலவும் சொல்லலாம்...எப்படி?

துரைசிங்கம்னு ஒரு நேர்மையான போலிஸ் அதிகாரி.. எப்படி படிபடியா அசிஸ்டென்ட் கமிஷ்னர் அளவுக்கு வளருகின்றார் என்பதே கதை....
படத்தின் சுவராஸ்யங்களில் சில.....

வழக்கமான திரைக்கதை...ஆனால் அதை கொடுத்த விதத்தில் சற்றே வித்தியாசபடுத்தி 2மணி நேரத்துக்கு மேல் நம்மை உட்கார வைக்கின்றார்...

உதாரணமாக செல்போன் மூலம் சில விஷயங்கள் திரைக்கதையில் சின்ன சின்ன டுவிஸ்ட்டாக வைத்து இருக்கின்றார்...

கமர்ஷியல் படம் கத்துவார்கள் என்று தெரிந்தாலும் கொஞ்சம் அதிகமாகவே கத்தி வைக்கின்றார்கள்.....

சூர்யாவின் மிடுக்கும் போலிஸ் உடையில் ஓடும் ஓட்டமும் ஒரு உண்மை போலிஸ்காரனை கண்முன் நிறுத்தி வைக்கின்றார்...முக்கியமா ஸ்டேஷனுக்கு வரும் பைக் சீன்...செம மேன்லினஸ்...வசனம் அதிகமா பேசி இருக்கின்றார்... இருந்தாலும் பல வசனங்கள் அட போட வைக்கின்றது..சிலது சினிமாதனமாக இருக்கின்றது...


கிராமத்தில் ஆரம்பிக்கும் கதை ஒரு பாடலை தவிர மற்ற பாடல்களில் சிட்டி வாசனை மூக்கை துளைக்கின்றது..

அனுஷ்கா காதல் காட்சிகளில் நன்றாகவே சோபிக்கின்றார்... பெரிய இடுப்பும் சின்ன தொப்புளுமாகஇருக்கும் அந்த இடுப்பு பிரதேசம் 360டிகிரிக்கு வளைந்து நெளிந்து அது என்னவல்லாமோ செய்கின்றது....

அனுஷ்காவின் காஸ்ட்டியும்களில் நன்றாக இருப்பது காதல் வந்தாலே சாங்கில் ரோஸ் கலரில் இருக்கும் ஒரு காஸ்ட்டியூம்...அற்புதம்...
அந்த சாங்கில் நிறைய ரிகர்சல் எடுத்து ஆடி இருக்க வேண்டும்...கழுத்து, முதுகு, இடுப்பு என எல்லா இடத்திலும் இருக்கும் வியர்வை உழைப்பை சொல்கின்றன...

அனுஷ்காவிற்க்கு ஒரு சில காட்சிகளில்ஒன்னுமே இல்லாதது போல் இருக்கின்றார்.. ஒரு சில காட்சிகளில் உருண்டு திரண்டு இருக்கின்றார் எப்படி என்று தெரியவில்லை...

வழக்கம் போல் தமிழ்சினிமாவின் அக்மார்க் முத்திரையாக சுமோ வாகனம் அடியாளின் வாகனம்தான் என்று 837வது முறையாக காட்சிபடுத்தபட்டுள்ளது...இந்த படத்துல சுமோ டாப்பே எகிறுகின்றது....

பிரகாஷ்ராஜ்... பொதுவாக கதநாயகன் எல்லா இடத்திலும் ஜெயிப்பான்.. வில்லன் முழிப்பான்.. ஆனால் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் கேரக்டருக்கு நல்ல ஸ்கோப்...தூத்துக்குடியில் கையெழுத்து போட வந்த இடத்தில் ஊர்காரர்கள் எகிறும் போது இவன் என்னப்பா ஒரே பில்லடப்பா இருக்கே என்று புலம்பும் போது மனதில் நிற்கின்றார்....


விவேக் கொஞ்சம் சிரிக்க வைக்கின்றார்...படத்தின் ரிலிப்இவர்தான்...எரிமலை எப்படி வெடிக்கும் சாங்.. சில இடத்தில் நன்றாக ஒர்க் அவுட் ஆகின்றது...

படத்தின் உச்சபட்ச காமெடி என்னவென்றால் என்னதான் சூர்யா பல சாலி என்றாலும் பீச்சில் அனுஷ்காவுடன் பேசி அடுத்து நடக்கும் ஒரு பைட்டில்... பஞ்சு மூட்டையை தூக்கி பின் பக்கம் போடுவது போல் அநாயாசமாக ஒருவனை தூக்கி போட்டு விட்டு நடந்து வருவார்...

அடியாளை அடிக்கும் போது சூர்யா ஆம்ஸ் காட்டுகின்றார் அதனால்ஏதோ கொஞ்சம் நம்பிக்கை வருகின்றது....

தமிழ் சினிமாவில் நண்பனுக்காக இறந்து போகும் பாத்திரத்தில் நடித்து அழிய புகழ் பெற்ற சந்திரசேகர் இடத்தை பிடிக்க ஒரு ஆள் வந்து விட்டார் அவர் மெட்டி ஒலி போஸ்... இந்த படத்திலும் கழுத்து அறுபட்டு சாகின்றார்....

படத்தின் ஆரம்பித்தில் வரும் ஐயனார் கோவில் செட் போட்டு அதில் ஒரு சண்டை காட்சியிம்... சில சீன்களையும் எடுத்து இருக்கின்றார்கள்...

பிரியன் ஒளிப்பதிவும், உழைப்பும் படம் நெடுகிலும்...தெரிகின்றது... நிறைய ஷாட் வைத்து இருக்கின்றார்கள்...

இந்த படத்தை பரபரபப்பாக ஒரு கமர்ஷியல் மசாலாவாக தொய்வு இல்லாமல் உட்கார வைப்பது எடிட்டிங் விடிவிஜயன்

இசை தேவிஸ்ரீபிராசாத்... இளமை துடிப்பை படம் நெடுகிலும் அலைய விட்டு இருக்கின்றார்...

ஹரி இந்த படத்தை கொஞ்சம் விறுவிறுப்பாகவே கொடுத்து இருக்கின்றார்... கொஞ்சம் கத்தலையும் அடிதடியை குறைத்து இருந்தால் இன்னும்சூப்பராக இருந்து இருக்கும்...

சூரியாவின் 25வது படம்....அதகளமாய் வந்து இருக்கின்றது...கொஞ்சம் சீற்றத்தை குறைத்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும்...

ஆனால் பார்க்கலாம்...

படத்தின் டிரைலர்...



படக்குழுவினர் விபரம்....
Directed by Hari
Produced by K. E. Gnanavel Raja
Starring Surya Sivakumar
Anushka Shetty
Prakash Raj
Nassar
Vivek
Music by Devi Sri Prasad
Cinematography Priyan
Editing by V. T. Vijayan
Studio Studio Green
Distributed by Sun Pictures(India)
Ayngaran International
(Worldwide)
Release date(s) 28 May 2010
Country India
Language Tamil
udget 15

தியேட்டர் டிஸ்க்கி....

இந்த படத்துக்கு பதிவர் நித்யா இரண்டு டிக்கெட் புக் செய்து வைத்து இருந்தார்... கடைசி நேரத்தில் அவர் வீட்டில் ஏசி பிட்டிங் செய்து கொண்டு இருந்த காரணத்தால் அவர் வரவில்லை....அதனால் ஒரு டிக்கெட்டை ஆட்டோ காரரிடம் விற்று விட்டேன்......

வெயில் அதிகம் இருந்த காரணத்தால் லேட்டாகதான் மக்கள் வந்தார்கள்...புது படம் முதல்நாள் ஆனால் பெரிய விசில், கைதட்டல்,பூ தூவுதல் எல்லாம் இல்லை...

நான் 3மணி ஷோவுக்கு போய் இருந்தேன்... எல்லாம் காலையிலேயே நடந்து முடிந்து விட்டதா அல்லது தியேட்டர் நிர்வாக கெடுபிடியா.. அல்லது 75 ரூபாய் டிக்கெட் விலை உயர்வா என்று தெரியவில்லை....

ஒரு ரோ முழுவதும் கல்லூரி மாணவிகள்... காக்க காக்கபடம் வந்த போது சூர்யாவை ஆதர்ச புருசனாக நினைத்துகொண்டவர்கள் போலும்....சூர்யா வந்த போது எல்லோர்வாயிலும்பல் தெரிந்தது.. சில பெண்கள் உற்சாகமாக கைதட்டினார்கள்...


அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...

சாண்ட்விச் அண்டு நான்வெஜ்18+(28•05•2010)

ஆல்பம்...
மெங்களுர் விமானநிலையத்தில் உறவினர்களை வரவேற்க்க வந்தவர்கள்.. தங்கள் உறவுகளை வாரி கொடுத்து விட்டு நிற்க்கின்றார்கள்...நிறைய காரணங்கள் அலசபட்டுக்கொண்டு இருந்தாலும் மாண்டவர்கள் மீண்டு வரப்போவதில்லை...நாம் நிறைய விஷங்களுக்கு சகித்து கொண்டு வாழ பழகிவிட்டோம்... லஞ்சம் கொடுக்க பழகிவிட்டோம்... எது நடந்தாலும் எனக்கு என்ன என்று கடந்து போக பழகிவிட்டோம்...


அதனால் இது போலான விஷயங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும்... அரசியல்வாதிகளை பொறுத்தவரை இது இன்னொரு கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சி அவ்வளவே...ஆனால் இது ஒரு பாடம்....என்ன இது கொஞ்சம் காஸ்ட்லியான விபத்து...

ஆனால் ரோட்டில் இந்தியாவில் சாலை விபத்துகளினால் பலியாகும் கதை தொடர்கதையாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது... இப்போதுதான் சென்னை திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் கேமரா பொறுத்தி கண் காணிக்க போகின்றார்களாம்...சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகவிட்டன....
===============
10 வகுப்பு பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வந்துவிட்டன... இன்னும் வாயில் கேக்கை வைத்துக்கொண்டு கேமராவுக்கு வாயை திறந்து கொண்டு இருக்கும் பள்ளி மாணவ மாணவிகளை பார்கக முடிந்தது...செய்தி சேகரிக்கும் நிருபர்கள் கேமரா மேன்கள் அடுத்த முறையாவது கேக்கை தின்று மகிழ்ச்சியுடன் பிள்ளைகள் சந்தோஷமாக இருப்பதை காட்டவும்... அல்லது போட்டோகிராபர்கள் கேக் வாயில் வைப்பது போன்று படம் எடுத்துவிட்டு அதன்பிறகு கேமராமேன்கள் அசைவுகளான படத்தை எடுக்கலாம்...
===============
ஒரு பக்கம் அந்த மொழி பேசும் மக்கள் உலகலாவிய அரங்கில் துன்பத்தை தொடர்ந்து சந்தித்த வண்ணம் உள்ளனர் மலேசியாவில் உதை... காலம்காலமாக இலங்கையில் அடிமை வாழ்க்கை...ஒரு போராளியின் தலையை அறுத்து புலி கொடி போர்த்தி சாகடித்த படங்கள் வெளியாகி உலகலாவிய அரங்கில் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்க...கேட்க நாதியில்லாமல் நடைபினமாய் இலங்கை தமிழ் மக்கள் ஆனால் அந்த மொழிக்கு ஒரு மாநாடு தாயகத்தில் கோலகலமாய் தொடங்க போகின்றது....வாழ்த்துக்கள்...
=============================
மிக்சர்


வாழ்த்துக்கள்...

பதிவர் கலையரசன் நேற்றில் இருந்து குடும்பஸ்தனாக மாறிவிட்டார்.. அவரின் திருமணத்துக்கு போய் இருக்க வேண்டும் ஆனால் எனக்கு எக்சாம் இருந்த காரணத்தால் என்னால் போக முடியவில்லை..... இருப்பினும் மணமக்கள் நீடுடி வாழ எல்லாம் வல்ல பரம் பொருளை பிராத்திக்கின்றேன்...நீங்களும் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவியுங்கள்...
===============
4வது முறையாக உலக சாம்பியன் பட்டம் பெற்ற நம்ம விச்சுவுக்கு அதான் நம்ம விஸ்வநாதன் ஆனந்துக்கு நமது வாழ்த்துக்களும் நன்றியும்....விமான நிலையத்தில் பேரும்திரளானவர்கள் எல்லாம் இல்லை... கொஞ்சம் பேர்தான் இருந்தார்கள்...நம்ம புத்தி அப்படித்தான்...

================
நன்றிகள்...
வெந்த புண்ணில் பிரபாபகரனை பாய்சாதீர்கள் பதிவுக்கு நிறைய நன்றிகடிதங்கள்...நாங்கள் நினைத்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள் என்பதாய் உருக்கமான கடிதங்கள் வந்தன...நான் என் சமுகத்தில் நடந்த நிகழ்வினை எழுது இருக்கின்றேன்...அவ்வளவே..மதுரை நண்பர் சுவாமி நேற்று கூட அலைபேசியில் என்னிடத்தில் அந்த பதிவை பற்றி தனது கருத்தைபகிர்ந்து கொண்டார்... பதிவர்கள் பலர் சாட்டில் வந்து தங்களது கருத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டனர்..
===========
ஒரு வழியாக எம்ஏ எக்சாம் முடிந்தது... வாழ்த்து சொன்ன அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்..நிறைய நாட்களுக்கு பிறகு பேனா பிடிப்பதால் முதல் நாள் எக்சாமின் போது பதட்டத்தில் கை நடுங்க ஆரம்பித்து விட்டது..கையெழுத்து ஹெமுராபியின் சித்திர வடிவ எழுத்துக்களை போல் இருந்தது...எக்சாம் முடிவில் ஒரு நண்பர் கூட்டம் எனக்கு நண்பர்களாகியது... அவர்களை முன்னமே பிராக்டிக்கல் எக்சாமில் சந்தித்து இருக்கின்றேன்..சதிஷ்,ஸ்ரீதர்,ஆஷா,அஞ்சனா,சந்தியா என்ற ஐவர் குழு...ஒரு வயதுக்கு பிறகு படிக்க வந்த இடத்தில் நண்பர்களாக மாறுவது என்பது சாத்திய குறைவுகளில் ஒன்றான விஷயம்...இரண்டு வருடங்களில் இந்த நண்பர்கள் குழு இனைந்தே இருக்கின்றது...இதில் ஸ்ரீதர் என் பிளாக்கை தினமும் வாசிப்பவர்...எல்லோரும் ஒரே கோர்ஸ் என்பதால் நண்பர்களானோம்...எக்சாமின் கடைசிநாளில் எல்லோரும் போரூர் ஆனந்தபவனில் கை நனைத்தோம்....இரண்டு நாளில் பழகிய என்னை அந்த நண்பர்கள் கூட்டத்தில் சேர்த்துக்கொண்டமைக்கு என் நன்றிகள்..
=============
இந்தவார சலனபடம்... ஒரு சின்ன போங்கு கதை...



===============
நெகிழவைத்த கடிதம்... நண்பருக்கு நன்றி..

Hai Mr. Jakcy Sekar…

Thanks for your each and every topics, paragraphs, words, letters and photos. Am really repressive about your way writing style. I too wanna write the comments & my opinions in your BlogSpot. I don’t know the Tamil typing and I am here in Oman, I am sending the URLs to my Tamil friends who are all staying in gulf..

Thanks for all Keep it up. All the very best … J

With Regards

Vijay

Oman Roads Engineering Co LLC
============================
படித்ததில் பிடித்தது...

ஏன்டா கபாலி ரொம்ப சேகமா இருக்கே...
யார் விட்ல திருடி என்ன பிரயோசனம் சாமி,கேத்தன் தேசாய் பற்றி கடைசிவரை தெரியாமல் போச்சே..

பி.விஜயராமன் ... இந்த வார விகடன் ஜோக்...
========================
பிலாசபி பாண்டி....
1.... எல்லோரும் எதாவது ஒரு எதிர்பார்புடன்தான் ஆரம்பிக்கின்றோம்... முடிவில் நல்லதோ கெட்டதோ ஏதாவது ஒரு எக்ஸ்பிரியன்ஸ் எல்லோருக்கும் கிடைக்கின்றது...

==================
2..பெட்ரோல் டீசல் எல்லாம் போட்டு வண்டி ஓட்ட பர்மிஷன் கொடுக்கற கவர்மென்ட் ஏன் டாஸ்மார்க்ல தண்ணி அடிச்சிட்டு மட்டும் வண்டி ஓட்டபாமிஷன் கொடுக்கமாட்டேங்குது...?????
========
3, உன்னை ரொம்ப நன்றாக பார்த்துக்கொள்ள கூடியவர்கள் இரண்டு விஷயத்தை நிச்சயம் செய்வார்கள்...
1.உன்னை ரொம்ப நன்றாக பார்த்துக்கொள்ளவும் செய்வார்கள்
2.அதே போல் உன்னை காயபடுத்தவும் செய்வார்கள்..
===============


நான்வெஜ்

கமலா நான் சொல்லறதை கேளு...தாலி கட்டி இருபது வருஷம் அகுது புருஷன் காலாவதி ஆயிட்டார்னு என் மேல வழக்கு எல்லாம் போடாதே... இதெல்லாம் கோர்ட்டில் தள்ளுபடி பண்ணிடுவாங்க...

செந்தமிழ்பிரயன் இந்தவார ஆனந்தவிகடன்...
============
ஒரு பொண்ணு காலில் விழுந்து நமஸ்காரம் செய்யும் போது என்ன தெரியும்...ஒன்னும் தெரியாது... அந்த பெண்ணோட கல்சர் தெரியும்... இந்த இடத்துல கற்பனையில தப்பா நினைச்சிங்க பாருங்க அதுல உங்க கல்சர் என்னான்னு தெரியுது...

சம்சாரத்தை மின்சாரம்னு சொல்லலாம் ஆனா சின்ன வீட்டை எப்படி சொல்லறது... யோசிங்க மச்சி.... ஜெனரேட்டர்னு சொல்லலாமா?

தீபக் மும்பை..
=========
ஜடஜ் நீ அந்த பெண்ணை கதற கதற கற்பழித்து இருக்கின்றாய்...
உனக்கு பைனாக ரூபாய் 11461யை அபராதமாக விதிக்கின்றேன்....
கபாலி...மைலார்ட் அது என்ன சொச்சமா ஒரு பைன்.. ரூபாய்11461????
ஜடஜ்....
10,000 ரேப்புக்கு
4பர்சன்ட் வாட்
10.2 பர்சன்ட் எண்டேர்டெயின்மேன்ட் டாக்ஸ்...
=================
அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...

மணிரத்னம்..மௌனராகம்.. கணவன் மனைவி அழகியல்

ஒரு சமுகம் நன்கு வளர்ச்சி பெற, குடும்பம் என்ற அமைப்பு ரொம்பவும் முக்கியமாகின்றது.. அதிலும் கணவன் மனைவி என்ற குடும்ப தேரின் அச்சானி மிக முக்கியமான ஒன்று...கணவன் மனைவி உறவு சிதைந்தால் அது ஒரு சமுகத்தின் சிதைவுக்கே வழி வகுக்கும்....

இந்தியாவில் 50 விழுக்காடுக்குமேல் நடக்கும் திருமணங்களில் விருப்பம் இல்லாமல் சொத்துக்கும், ஜாதிக்கும், கௌரவத்துக்கும் நடக்கும் திருமணங்கள்தான் அதிகம்...இந்தியாவில் நடக்கும் பல திருமணங்கள் பெற்றோரின் வற்புறுத்தலுக்காக நடக்கும் திருமணங்கள் அதிகம்....

என் நண்பி்யின் நண்பிக்கு 5 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது...பெண் பார்க்க வந்த போதே அந்த மாப்பிள்ளை பையனின் கண்களில் தப்பு இருப்பதாக சொல்லி, இந்த திருமணம் தனக்கு வேண்டாம் என்று எவ்வளவோ அந்த பெண் எடுத்து சொல்லி இருக்கின்றாள்... ஆனால் நல்ல வேலையில் இருப்பதாலும் சிவப்பு தோலாக அழகாக சுருள் முடியுடன்... கைநிறைய சம்பளம் வாங்கும் மாப்பிள்ளை என்று பெற்றோர் அந்த பெண்ணை தாரை வார்த்து கொடுத்துவிட்டனர்.....

திருமணத்துக்கு வந்த மணப்பெண்ணின் நண்பிகளிடம் கை குலுக்கி ஜொள்ளு வழிந்து கொண்டு இருக்கும் போதே அந்த பெண் தன்னை ஏதோ ஒரு விபரீதத்துக்கு தன்னை தயார் செய்து கொள்ள... முதலிரவில் அந்த சிவப்புதோல் அவள் ரசனைக்கு சற்றும் செவி சாய்ககாமல் உடைகளை கிழித்து.....

அந்த கைநிறைய சம்பளம்...கத்தாமல் இருக்கு அவள்வாயில் துணி வைத்து அன்று இரவு முழுவதும் 3 முறை உறவு வைத்துக்கொண்டு மன்னிக்கவும் இருவரும் மனம் ஒத்தால்தான் உறவு... அது கற்பழிப்பு..... மறுநாள் பெண் நானிகோனிவருவாள் என்று பார்த்தாள்...வண்டலூர் மிருகாட்சி சாலை சிங்கம் இருந்த கூண்டில் இருந்து வந்தவள் போல் கல்யாண பெண்இருக்க... என் நண்பியும் பெற்றோரும் கலங்கி நின்றனர்...


நன்றாக யோசி்த்து பாருங்கள்...பத்து வயதுக்கு மேல் தன் அம்மாவிடம் கூட எந்த பெண்ணும் தன் அந்தரங்க உறுப்புகளை காட்ட வெட்கபடும் போது..தாலிகட்டிய அன்றே... நாள் நட்சத்திரம் எல்லாம் பார்த்து மணட்பத்திலேயே சாந்தி முகூர்த்தம்...கொடுமையிலும் கொடுமை இல்லையா?...காலையில தாலி கட்டிவுட்டு... நைட்டு எல்லாத்தையும் அவுத்துட்டு படுன்னு சொன்ன அது எவ்வளவு பெரிய கொடுமை.....

நண்பி அவளை விளையாட்டாய் கலாய்க்க....அவள் விழியில் நீருடன் மதலிரவின் கதையை சொல்ல...அந்த ஓநாய்அந்த பெண்ணின் மார்பகம் எல்லாத்திலும் கடித்து வைத்து வெம்பிய கன்றி போன சுவடுகள் இருந்தனவாம்...மார்பு காம்பில் காயம்...சேகர் அதை பாத்துட்டு எனக்கு தலை அப்படியே சுத்திடுச்சி என்றாள் என் நண்பி...படிச்சவன் இப்படி கூட நடந்துக்குவானா? என்று என்னிடம் கேட்கபட்டது.... நான் சொன்னேன் மிருகதனத்துக்கு படிப்பு என்ன ?பாமரத்தனம் என்ன ? என்றேன்.....ஆனா இதெல்லாத்தையும் அவுங்க அம்மாகிட்ட சொன்ன போது... நிறைய செலவு பண்ணி கல்யாணம் பண்ணி இருக்கேன்...

ஒரு நாள்ல மாப்பிள்ளையை அப்படி எல்லாம் முடிவு செய்து விட கூடாது...சில பேர் அப்படி இப்படிதான் இருப்பார்கள் என்று அந்த விஷயத்துக்கு சப்பை கட்டு கட்டி அந்த பெண்ணை அதே சிங்கத்தின் கூட்டில் சமுதாய பேச்சுக்கும்...கௌவரவத்துக்கும் அந்த பெண்ணை இரையாக்கினார்கள்...

நம் நாட்டின் பெரும் சோகம் இதுதான்... நல்லவன் இல்லை என்று தெரிந்தாலும் சமுக நிர்ப்ந்தத்துக்கு அவனிடடே அட்ஜஸ்ட் செய்து கொள்ள போக சொல்லும் கொடுமை நம் நாட்டில் அதிகம்....

மூன்று மாதம் கழித்து பெண்ணை பார்க்க போக 50 பவுன் போட்டு கட்டி கொடுத்த பெண் ஒரு வேலைகாரி போல் இருப்பதையும்...வெறித்த விரீகளுடன் வரவேற்ற பெண்ணை பார்த்து பெற்ற வயிறு பற்றி எரிந்தது...

தினமும் சந்தேகத்தில் வீட்டில் சண்டையாம்...திருமணத்துக்கு வந்து அதிகம் பேசி சிரித்த கல்லூரி தோழனை சுட்டிக்காட்டி எத்தனை முறை அவனோடு மகாபலிபுரைம் போனே என்று சொல்லி சொல்லி டார்ச்சர் செய்வானாம்...நகத்தால் உடம்பில் கிள்ளி காயம்...

விவாகரத்து பெற்று அந்த பெண் இப்போது வேலைக்கு போய்கொண்டு இருக்கின்றாள்.. அவளிடம் மறு திருமணத்தை பற்றி பேசினால்... எல்லா ஆண்களையும் மிருகம் என்கின்றாள்... எந்த புத்தில் எந்த பாம்பு இருக்கும் என்று பயப்பட ஆரம்பித்து விட்டாள்...

ஆனால் இப்படி எல்லாம் இல்லாமல் அன்பாக அனுசரனையாக ஒரு கணவன் கிடைத்தால் எப்படி இருக்கும்....அதுவும் அதிர்ந்து பேசாமல்,முதலிரவில் முத்தம் கொடு்த்துக்கொண்டு இருக்கும் போது... பெண் தூக்கம் வருகின்றது என்று சொல்லும் போது, தூங்க முதலிரவில் எத்தனை கணவன் அனுமதி கொடுப்பான்...? மிக முக்கியமாக எனக்கு உன் முதல் காதல் பற்றி எனக்கு கவலையே இல்லை என்று சொன்னால் அந்த கணவன் தெய்வம் அல்லவா? அப்படி பட்ட ஒரு கணவனின் கதைதான் இந்த படம்....

மௌனராகம் படத்தின் கதை இதுதான்....



திவ்யா(ரேவதி) சுட்டிப்பெண்... வீட்டில் பெரிய பெண்... கல்லூரி படிக்கின்றாள்...அவளை பெண் பார்க்க டெல்லியில் மேனேஜராக வேலைபார்க்கும் சந்திரகுமார்(மோகன்) வருகின்றான்... திவ்யாவுக்கு திருமணத்தில் இஷ்டம் இல்லை என்று மாப்பிள்ளை சந்திரகுமாரிடம் சொல்ல போக.. இந்த ஓப்பன் டாக் தனக்கு பிடித்து இருப்பதால் இந்த கல்யயாணத்துக்கு சம்மதம் என்று பெற்றோரிடம் சொல்கின்றான்.....
திவ்யா தனக்கு திருமணம் வேண்டம் என்று மறுக்கின்றாள்... இந்த செய்தியால் திவ்யாவின் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்வருகின்றது....இதனால் திவ்யா திருமணத்துக்கு சம்மதம் சொல்ல....

திருமணம் நடந்து மணப்பெண் திவ்யா டெல்லியில் தனிகுடித்தனத்துக்கு போக... அங்கே தனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று சொல்லி கணவனிடம் விவாகரத்து கேட்கின்றாள்.. காரணம் கேட்கும் கணவனிடம் தனது முந்தைய காதலன் மனோகரை (கார்த்திக்) காதலித்து திருமணம் செய்து கொள்ள போகும் போது ஒரு விபத்தில் இறந்த கதையை சொல்ல...

கணவன் விவாகரத்து வாங்கி கொடுத்தானா...? இருவரும் மனம் ஒத்தார்களா? என்பதை தெலைகாட்சியில் சேனல் திருப்புகையில் ஏதாவது ஒரு சேனலில்... முக்கியமாக பொதிகையில் சேனலில் இந்த படத்தை பார்க்க வாய்ப்பு அதிகமாகவே இருக்கின்றது...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

இன்றைய நவீன சினிமாவின் ஜாம்பவான்கள் ஒன்றாக பணி புரிந்த படம்....

சினிமாவின் மொழியை அதிகம் யண்படுத்தும்தொழில்நுட்பவியலாலர்கள் நிறைந்தவர்கள் செய்த படம்....

ஒத்த அலைவரிசை உள்ள இயக்குனரும், ஒளிப்பதிவாளரும் இருவரும் இணைந்து செய்த படங்கள் ஏராளம்... இசைஞானியின் இசையோடு பயணித்த இவர்கள் படங்கள் 80க்கு பிறகு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தன....

எனக்கு சினிமா மீதான ஆசையை விதைத்த அக்னிநட்சத்திரம் படத்தை எடுத்த பிரம்மாக்களின் படம்...

இரண்டே பேரை வைத்துக்கொண்டு சுவரஸ்யமான திரைக்கதை அமைத்த படம்... அப்போது இந்த படத்தை பார்த்தவர்கள்...இரண்டு பேர் மட்டும் படம் முழுக்க பேசிக்கொண்டு இருக்கின்றார்கள்.. இந்த படம் ஓடாது என்று சொன்னார்களாம்....அப்படிய ஓடினாலும் ஏ சென்டரில் மட்டும்தான் என்று சப்பை கட்டு கட்டினார்களாம்....


செலவே இல்லாமல் எடுத்த படம்..... படத்தின் பெரும்பாலான காட்சிகள்... சென்னையின் மியூசியத்தில் எடுக்கபட்டது... கார்த்திக்கை விசாரிக்கும் போலிஸ்ஸ்டேசன், சாலை காட்சிகள்...அதே போல் இரவு நேரத்தில் டெல்லியில் ரவுடிகளிடம் இருந்து தப்பி மோகனை ரேவதி கட்டிபிடிக்கும் இடம் எல்லாம் சென்னையில் இரவு நேரத்தில் மியூசியம் எதி்ரில் உள்ள ரோட்டில் மேட்ச் பண்ணி எடுத்த காட்சிகள்தான்....இந்த படம் வந்த போது எனக்கு பதினோறு வயது... ஆனால் எனக்கு சென்னை பரிட்சயம் இல்லை... ஆனால் சென்னை வந்த போது பல இடங்களை பார்த்த போது நானே ஷுட் பண்ண இடங்களை கண்டுபிடித்தேன்... அதே போல் மௌனராகம் படக்குழுவினர் எவரோடும் நான் பேசியதில்லை....

என் அம்மா எதற்கு இந்த படத்தை அப்படி சிலாகித்து பார்த்தாள் என்பது இப்போது எனக்கு புரிகின்றது... ஆனால் அந்த வயதில் இந்த படம் என்னை பொறுத்தவரை செம போர்.... ஒரு சண்டை கூட இல்லை .. ரஜினிபடம் போல் ஒரு ஸ்டைல் இல்லை என்று வருத்தபட்டு நொந்த நூடுல்சாகி பார்த்த படம்....

ஒரு படத்தின் வெற்றி என்பது.. அந்த படத்தின் கதாநாயகியை சரியாக தேர்ந்து எடுத்தாலே பாதி வேலை முடிந்து விடும் என்று சொல்வார்கள்....முதல் காட்சியில் தூங்கி எழுந்து பல் தேய்காமல், காபி குடிக்க கருப்பு ஆப் சாரியில் வரும் ரேவதி... பக்கத்து விட்டு பெண் போல் இருப்பதும் சட்டென மனதில் ஒட்டிக்கொள்வதும் இந்த படத்தின் வெற்றி என்பேன்....

அதே போல் கல்யாணம் நடந்த காட்சி சிம்பிளான ஷாட்டுகளால் எடுத்து இருப்பார்கள்... ரேவதி மேல் மிட் ஷாட்டில் பாலோ செய்யும் கேமரா...அப்படியே ரேவதி சஜஷனில் மோகன் மாப்பிள்ளை உடையில்.. அப்படியயே தாலி கட்டி மாலை மாற்றி..

அடுத்த காட்சி அலங்கரிக்கபட்ட முதல் இரவு அறைக்குள் இருக்கும் பூச்சரத்தில் அடுத்த ஷாட் ஓப்பன் அகும்... செலவே இல்லாமல் கல்யாணம் நடத்தியதாக காட்டி இருப்பார்கள்... நிரம்ப கல்யாண கூட்டம், நேம் போர்டு, போட்டோ, வீடியோ, சப்பாடு என்று ஏதுவும் இருக்காது....

நெஞ்சை நெகிழவைத்த காட்சிகளும் வசனங்களும்.....(மணிரத்னம்)

முதலிரவுக்கு போகாமல் வேண்டாம் என்று அடம்பிடிக்கும் ரேவதியிடம் அம்மா சமாதானம் சொல்லும் போது...

உள்ளமாப்பிளை உனக்காக காத்துகிட்டு இருக்காரு...
அம்மா எனக்கு இது பிடிக்கலை... இது வேண்டாம்..
அவரை எனக்கு முன்ன பின்ன கூட தெரியாது...
அவரு உன்னை தொட்டு தாலிக்டடினவரு...
தொட்டு தாலிகட்டிட்டா? எல்லாம் முடிஞ்சி போச்சா??? இரண்டு நாளைக்கு முன்னாடி என்னை இப்படி அனுப்பி இருப்பியா? என்று கேட்கும் வசனம் அரேஞ்சிடு மேரேஜில் முதலிரவு பயத்தோடு இருக்கும் பெண்ணுக்கான நியாயமான கோபம்....

===========
முதன் முதலாக வீட்டில் உள்ளே வரும் மனைவியிடம் எல்லாம் விளக்கி வரும் மோகன்...

இது எல்லாம் செங்கல் சிமென்டால கட்டனது.. இதை வீட மாத்த வேண்டியது நீதான் எனும் போது...அதற்கு ரேவதி எனக்கு செங்கல் சிமெண்ட் போதும் என்ற இடம் திருமணத்தின் வெறுப்பை சொல்லும் இடங்கள்...

================
முதன் முதலாக ஓட்டலில் சாப்பிடும் போது கல்யாணத்தில் இஷ்டம் இல்லை என்று சொல்லும் மனைவியை பார்த்து குழந்தை ஏங்ன அழுதுகிட்டே பொறக்குது தெரியுமா? பூமிக்கு வரும் பயம் இல்லை... ஆனால்புது சூழ்நிலையில் தன்னை எப்படி பழக்கபடுத்க்கொள்வது எப்படி என்று பயத்தில் அழுகின்றது.. அதுமாதிரிதான் நீயும்... என்று சொல்லும் அந்த வசனம்...
==============
ஒரு நல்ல காட்சி......



தயவு செய்து கைய விடுங்க..
பயமா?
இல்லை பிச்சை...
நீங்க தொட்ட எனக்கு கம்பளி பூச்சி ஊறுவது போல் இருக்கின்றது...
என்று சொல்லும் காட்சியில் மோகனின் ரியாக்ஷன் ராஜாவின் பின்னனி இசை... அற்புதம்...
===========
ஐயோ அப்பா என்று ஓட்டலில் மறையும் ரேவதியிடம் வம்புக்கு இழுக்க மிஸ்டர் சத்திரமௌலி என்று அழைக்கும் அந்த காட்சி... இந்த படத்தின் மெயின் சீன் என்று சொல்லலாம்....
==============
லைப்ரேரியில் காதல் சொல்ல வந்த கார்த்திக்கிடம் ஊர் முழுக்க மைக் போட்டு சொல்லு என்று சொல்லு்ம் போது கார்த்திக் ஒரு சீரியஸ் ரியக்ஷன் கொடுத்து விட்டு பிரின்சிபல் ரூமில் இருந்து மைக்கில் சொல்லும் காட்சிகள் சுவாரஸ்யம் நிறைந்து ஒன்று.....
=============
வக்கிலிடம் விவாகரத்து பற்றி பேசும் போது.. வக்கில் உங்க ரெண்டு பேருக்கும் என்ன வேறுபாடு என்று கேட்க.....
வெறுபாடுன்னு ஏதும் இல்லை...பெரிசா ஈடுபாடு இல்லை என்று மோகன் சொல்லும் காட்சியின் வசனம் பலம்..
==============
விவாகரத்து கோர்ட்டில் அப்ளை செய்ததுமே...அதுவரை முன்பக்கத்தில் உட்கார வைத்து காரில் அழைத்து போன மனைவி ரேவதியை பின்பக்க கார் கதவை திறந்து விடுவது நல்ல பஞ்ச்...

அதன் பின் வரும் மனதை மயக்கும் பாடல்....


=============
விகாரத்து பைல் பண்ணி வீட்டுக்கு வந்து ஆபிஸ் நண்பர்கள் இருக்கும் போதே படுத்துக்கொள்ளும் ரேவதி அவர்கள் போன பிறகு சாரி கேட்டுவிட்டு என் மீது எந்த கோபமும் வருத்தமும் இல்லையா? என்று கேட்கும் போது.. குட் நைட் என்று ஒற்றை வார்த்தை சொல்லும் மோகனின் படித்த கேரக்டர் படு ஷார்ப்....
==========
இன்னைக்கு நீ இருக்கற காபி போட்டு தரே.. ஆனா ஒரு வருஷம் கழிச்சி என்று மோகன் முந்தைய காட்சிகளில் ரேவதி பேசும் எல்லா டயலாக்குக்கும் ஒரு பஞ்ச் வைப்பது விறு விறுப்பான காட்சிகள்..
=========
ஒரு நல்ல கணவன் மனைவி காட்சிக்கு ரேவதி முதன் முதலாக மோகனுக்கு காபி போட்டு கொடுக்கும் அந்த காட்சியை சொல்லலாம்...
=========
கையில் அடிப்ட்டு இருக்கும் மோகனுக்கு சாப்பாடு ஊட்ட முயற்ச்சி செய்யும் போது அதை தடுக்கும் போது.. ரேவதி நான் தொட்ட நீங்க ஒன்னும் கருகி போய் விட மாட்டிங்க என்று சொல்லும் போது... எனக்கு ஒன்னும் ஆகாது உனக்குதான் கம்பளிபூச்சி ஊர்வது போல் இருக்கும் என்று சொல்லும் இடம் ஆண்களின் கைதட்டல் வாங்கிய இடம்....
=========
இந்த படத்துக்கு பின் ஆண்கள் பெண்களை சற்று மரியாதையாக பார்த்தர்க்ள் என்று சொல்லலாம்...
==========
கணக்கு எல்லாம் போட்டு விட்டு ரேவதி நீங்க சொல்ல எதாவது இருக்கின்றதா? என்று கேட்க நாலு மணிக்கு டிரெயின் இரண்டுமணிக்கு வந்து அழைச்சிகிட்டு போறேன் என்று சொல்வது....
==========

ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம்....


கார்த்திக் மாலில் வேகமாக நடக்கும் போது லோ ஆங்கி்ளில் பாலோ செய்வது...
ராஷ்ட்ரபதி பவன் கோபுரத்தை லோ ஆங்கிலில் ரோட்டில் மீடியனி்ல் வைத்து சென்டரில் பியட் கார் வருவது போல் எடுத்த காட்சி அற்புதம்...

நிலவே பாடலில் பல ஷாட்டுகளில் நிலவு இருப்பது போல் லைட்டிங் செய்து எடுத்து இருப்பார்....

ரேவதி ஒயிட் காட்டன் சாரியில் தரையில் படுத்து இருப்பதையும்...அந்த பெண்ணின் வெறுமையை டாப் ஆங்கிளில் காட்டுவதும் நல்ல ஆங்கிள்...

இந்தியா கேட் அருகில் போய் ரேவதி ஆச்சர்யத்தோடு பார்க்கும் அந்த லோ அங்கில் ஷாட்....
எதெச்சையாக கார் நிறுத்தி புதர் பக்கம் ரேவதி நடக்கும் போது தாஜ்மகாலின் பின்புறத்தையும்....ரேவதி விழி விரிய பார்க்கும் தாஜ்மகால் லாங் ஷாட் எந்த படத்திலும் இந்த ஆங்கிலில் தாஜ்மகாலை நான் பார்த்து இல்லை...

இளையராஜா...

நல்ல சோறு போடுவாதாக சொல்லி, வீட்டுக்கு வேளையோடு மோகனை, ரேவதி வரச்சொல்லி விட்டு சிறுவர்களுடன் வீட்டை அழகுபடுத்தும் போது ஒலிக்கும் பின்னனி இசையின் சந்தோஷம் நமக்கும் ஒட்டிக்கொள்ளும்....

மஞ்சம் வந்த சாங்கில் புல்லாங்குழலில் இருந்து டிரம்பட்டுக்கு மாறும் அந்த பீட் சூப்பர்...

வாலியின் பாடல் வரிகள் அப்போதைய இப்போதைய இளைஞர்களின் தேசிய கீதம்....ராஜாவின் பின்னனி இசையை சுவைக்க...


படத்தின் வெற்றிக்கான உளவியல்காரணங்கள்.....

மோகனை போன்ற கணவன் தனக்கு வேண்டும் என எல்லா பெண்களும் ஆசைப்டடது...

கார்த்திக் போல ஒரு காதலன் தனக்கு வேண்டும் என வயது பெண்கள் நினைத்து....

ரேவதி போல தனக்கு ஒரு மனைவி குடும்ப பாங்காக இருக்க வேண்டும் என்று நினைத்த பல ஆண்கள்...ரேவதி போல் ஒரு காதலியை வேண்டி நின்ற ஆண்கள் இந்த படத்தின் வெற்றிக்கு வழி வகுத்தார்கள்.....

காட்டன் சாரியில் ரேவதி லட்சுமிகடாட்சம்....அதே போல் சிலி்வ் லெஸ் நைட்டியில் டெல்லி வீட்டில் சோ கியூட்...

ரேவதி, மோகன் வீட்டு மற்றும் ரேவதியின் பிறந்த வீட்டு பெட்ரூம் அற்புதமாக இருக்கும் இது போலான பெட்ரூம் இருக்க வேண்டும் என்று நான் ஆசைபபட்டு இருக்கின்றேன்...

தொப்புள்காட்டாத ரேவதி படத்தின் பலமும் மரியாதையும்....

கார்திக் உற்சாகம்...மோகனின் பெருந்தன்மை...ரேவதியின் குறுகுறுப்பு எல்லோரையும் வந்து ஒட்டிக்கொண்டது.....
எடிட்டிங்..
இரண்டு பேர் அதிகம் பேசுவதால் தேவையில்லா காட்சிகள் டிரிம் செய்யபட்டால்தான் உட்கார முடியும் அதற்க்கு லெனின் எடிட்டிங்ப டத்தின் ஜீவ நாடி...


படத்தில் கிளைமாக்சில் மோகன் ரயில் நிலையத்தில் உருண்டு ஓடி வருவது படத்தின் உச்சபட்ச காமெடி....படத்தில் காமெடி ஒன்றும் பெரிதாய் இல்லை...

அதை தவிர்த்து அதற்கு முன் நடக்கும் ரேவதி, மோகன் உரையாடல் நெஞ்சை நெகிழவைக்கும் கண்களை குளமாக்கும்...
இருப்பினும் காதலிப்பவரும்,திருமணமானவரும் இந்த படத்தை ஒரு முறை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.....

படக்குழுவினர் விபரம்...

Directed by Mani Ratnam
Produced by G. Venkateswaran
Written by Mani Ratnam
Starring Revathi
Mohan
Karthik Muthuraman
V. K. Ramasamy
Music by Ilaiyaraaja
Cinematography P. C. Sriram
Distributed by Sujatha Films
Release date(s) 1986
Running time 146 mins
Language Tamil
Gross revenue $1 million


குறிப்பு...
நான் எழுதும் விமர்சனத்தில் அதிக நேரம் ஐந்து மணி நேரம் எடுத்துக்கொண்டது இந்த படத்தின் விமர்சனம்தான்...

அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner