தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை போக்குவரத்து போலீஸ் மற்றும் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் ஒரு வேண்டுகோள்...


சேலம் போய் வந்த பதிவை நான் இங்கு ஏற்கனவே எழுதியிருந்தேன். ஆனால் நாங்க நடுத்தெரு நாரயணனாக நின்ற கதை உங்களுக்கு தெரியுமா? தென்மாவட்ட தமிழர்கள் அனைவரும் அறிந்த கொடுமைதான் அது. அதாவது ஊளுந்தூர்பேட்டை ,விழுப்புரம் இடையே கடப்பது என்பது ஏழுமலை , ஏழுகடல் தான்டி செல்வது போன்ற மயிர்கூச்செரியும் சாகசபயணம்தான் அது. பொதுவாக உளுந்தூர்பேட்டை ரயில்வே கேட் போட்டுவிட்டால், அன்று சனிஸ்வரபகவான் நம் கூடவே வெகுதூரம் பயணிக்க போகிறார் எ ன்று பொருள். அந்த கேட் போட்டு விட்டால் சரியாக இரண்டு மணிநேரம் நம்ம பொன்னான நேரம் கோவிந்தாதான். அதன் பிறகு கேட் திறந்தாலூம் நம் டிரைவருங்க அவங்க பாதையில போகாம எதிர் திசையில் போய் எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு குடைச்சல் கொடுப்பார்கள்.சரியான திசையில் வரும் எதிரில் வந்து நந்தி போல் வரும் டிரைவர் அம்மாவைஇவர் தேவிடியா ஆக்குவார், உடனே இவர் அவர் அம்மா பிறப்புறுப்பை சந்தேக பட அவ்வளவுதான் ரோட்டில் கட்டி புரண்டு சண்டை இதனால் பல மணிநேரம் டிராபிக். தினமும் தேசிய நெடுஞ்
சாலையில் பல லட்சக்கணக்கான வாகனங்களில் மக்கள், தென்மாவட்டத்தில் இருந்து தினமும் வருகிறார்கள். அவரவருக்கு தலைநகரத்தில்பல வேலைகள்.இரவில் தூங்கி விடியலில் சென்னையில் இறங்கி காலை கடன் முடித்து , வந்த வேலை முடித்து இரவு தென் மாவட்ட பஸ் ஏற வேண்டும் . ஆனால் நடுவில் ஏற்படும் இந்த டிராபிக் இடைஞ்சலால் எல்லாம் கொலாப்ஸ் ஆகிறது . பேருந்து டிராபிக்கில்இருப்பது இரவு நேர பயணிக்கு தெரிவதில்லை நன்றாக தூங்குவதால் இந்த களேபரம் நடப்பது தெரியாமல், விடியலில் எழுந்து இன்னும் மதுராந்தகத்தில் பேருந்துபோகும் போது பயணி ‘‘மாட்டு வண்டி ஓட்றவனெல்லாம் டிரைவர் ஆயிட்டான்” என்று சலித்துகொள்கிறார்கள். இப்போது சாலை அகலப்படுத்தும் வேலை நடப்பதால் இன்னும் டிராபிக் அதிகம் இருக்கிறது. நாங்கள் சேலத்தில் இருந்து திரும்பி வரும் போது முன்று மணிநேரம் நடுரோட்டில் உட்கார்ந்து இருந்தோம். பல பயணிகள் நடு ரோட்டில் துண்டு விரித்து படுத்து விட்டார்கள். எதிர் திசையில் இருந்து வாகனம் வந்தால்தானே டிராபிக் கிளியர் ஆகும். சரி போக்கு வரத்து போலிஸார் என்ன செய்தார்கள் ? எவருமே இல்லை. நானும் நண்பர் அருனும் சென்று சில கிலோமீட்டர் நடந்து சென்று ஓரளவு டிராபிக் கிளியர் செய்தோம் .சென்னையில் டிராபிக் ரூல்ஸ் மீறியவர்களிடம் போலிஸார் வசூலித்த தொகை மட்டும் நாலு கோடிரூபாய் . எவனாவது அவசரத்துக்கு, அம்மா இருமலுக்கு விக்ஸ் மிட்டாய் வாங்க வந்தவனை ஹெல்மட் போடவில்லை என மிரட்டி பணம் பறிக்கதான் லாயக்கு. போலிஸ் பேட்ரோல் குவாலி்ஸ் கார்கள் அரசு வாங்கி கொடுத்து இருக்கிறது. 100 ஏசி ஹோன்டா சிட்டி கார்கள் சென்னையில் இருக்கிறது ஆனால் எங்காவது டிராபிக் என்றால் ஒருகார் கூட வந்து கிளியர் செய்யாது என்பது தான், நிதர்சன உண்மை . இதனால் உண்மையாய் உழைக்கும் போலிஸார் கூட பொதுமக்கள் அதிருப்திக்கு ஆளாகின்றனர். நெடுஞ்சாலை போலிஸார் நன்றாக பிரியானி சாப்பிட்டுவிட்டு சட்டையை அவுத்து போட்டுட்டு கை வச்ச பனியனோட புளியமரத்து நிழலில் தூங்குவதோடு சரி. அல்லது நீரோத் வாங்கியது போக மிச்சம் வைத்து இருக்கும் டிரைவர் படியை லாரி டிரைவர்களிடம் இருந்து ஓவர் லோடு என மிரட்டி லஞ்சம் வாங்கி பாக்கட் நிறப்புவதோடு சரி. திருச்சி, கள்ளகுறிச்சி, மதுரை போன்ற பக்கம் இருக்கும் பொது ஜனங்கள் உஙக்ள் சொந்தகாரர் யாரவது மருத்துவமனையில் இருந்து அவசரமாக மேல் சிகிச்சைக்கு சென்னை செல்ல வேண்டும் என்று சொன்னால் செலவு செய்து சென்னை வர வேண்டாம் , டிராபிக்கில் வந்து செத்துபோறதுக்கு அங்கேயே கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு இருங்க. ஆம்புலன்ஸ் செலவாவது மிச்சம் ஆகும். பொதுவாய் பயணம் செய்யும் டிரைவர்கள எதிர் பக்கம் செல்லாமல் இருந்தாலே டிராபிக் குறைந்து விடும் . அனால் நம்மால் அது போல் ஒழுக்கமாக வாகனம் ஓட்ட முடியாது ஏனென்றால் நாம் பச்சை தமிழர்கள் அல்லவா? நெடுஞ்சாலையில்ரூல்ஸ் மீறும் வாகனங்களிடம் வசூலிக்கும் தொகை நெடுஞ்சாலை போக்குவரத்து போலிஸார் எடுத்து கொள்ளட்டும் என்று ஒரு சட்டம் தமிழக அரசு கொண்டு வரட்டும். அப்புறம் பாருங்கள் டிராபிக்கே இருக்காது. போலிஸாரும் தவறு செய்யும் வாகனங்களை கண்ணில் விளக்கு எண்ணை ஊற்றி பார்பார்கள்.. சாலை அகலப்படுத்தும் பணி முடிந்தால் ஓரளவு டிராபிக் குறைவு சாத்தியம் அதுவரை ??????


அன்புடன் / கருத்து+ புகைபடம் ••• ஜாக்கிசேகர்

2 comments:

  1. சேகர்...

    அருமையான வெளிப்பாடு.

    கட்டுரை பிரமாதம்.

    அன்பு நித்யகுமாரன்

    ReplyDelete
  2. நன்றி நித்யா. உளுந்துர்பேட்டை தான்டும் அனைத்து பயணிக்கும் இந்த பதிவு நிச்சயம் பிடிக்கும்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner