TRACKS-2013/உலக சினிமா/ஆஸ்திரேலியா/ 2736 கிமீ தனியாக பாலைவனத்தை நடந்தே கடந்த பெண்.



நடிகர்  விஜய் நடித்த  துள்ளாத  மனமும் துள்ளும்  திரைப்படத்தில்   இன்னிசை பாடி வரும்  இளம் காற்றுக்கு உருவமில்லை என்று வைரமுத்து எழுதிய  பாடலில் கடைசியில்  பாராவில்....


தேடல் உள்ள உயிர்களுக்கே
தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை
வாழ்வில் ருசியிருக்கும்
ஆடல் போல தேடல் கூட
ஒரு சுகமே...
 என்று முடியும்...
தேடல் உள்ள  உயிர்களுக்கே தினமும்  பசியிருக்கும் , தேடல் என்பது  உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும் என்று அற்புதமான வரிகளை எழுதி போட்டு தாக்கி இருப்பார் வைரமுத்து...
வாழ்வில் ருசி இருக்க வேண்டும் என்றால் தேடல் அவசியமாகின்றது... 

அது எல்லோருக்கும் சாத்தியப்படாது... தான் தோற்றுப்போன தொழிலில், அல்லது  கலையில் தன் வாரிசு ஜெயித்து காட்ட வேண்டும் என்றே அத்தனை தகப்பன்களும் விரும்புகின்றார்கள்.


 அதற்காகத்தான்  இரவு பகல்பராமல் உழைக்கின்றார்கள்... அல்லவா-?ஆனால் பெண்ணாக பிறந்து விட்டால்..??? அவ்வளவுதான்  இப்போதாவது படிக்க வைக்கின்றார்கள்.. 50 வருடத்துக்கு முன்னால்.... கால காலத்துக்கு ஒரு கால்  கட்டு போட்டு  அந்த பெண்ணை குனிந்த தலை நிமிராது, அவள் விருப்பம் அறியாது, அவளுக்கு என்ன தெரியும்? அவளுக்கு என்ன தெரியும் என்று  சொல்லி சொல்லியே  குப்பனுக்கோ சுப்பனுக்கோ கட்டிக்கொடுத்து , பிள்ளை பெக்கும் மெஷினாக உருமாற்றி.... 

30 வயதில்  கிழடு தட்டி... கணவனே கண் கண்ட தெய்வம் என்று சொல்லி பழுக்க முகத்தில் மஞ்சள் பூசி,  அப்படியே  கணவனின் உயிர் இருக்கும்  தாலியில் இன்னும் கொஞ்சம் மஞ்சளை தடவி, 

வெள்ளிக்கிழமை விரதம் இருந்து அடுத்த  கழுத்து புருசஷனுக்கு விரதம் இருந்தது போய் ,வயித்து புருஷனுக்கு விரதம் இருந்து ....மரிந்து  போவார்கள் நம்ம ஊர் பெண்கள்.... அது மட்டுமல்ல... அப்படித்தான் ஆட்டி வைத்தனர் நம் ஊர்க்காரர்கள்.

ஆனால்  1950 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பிறந்த  ராபின் டேவிட்சன் என்ற பெண்  அப்படி பத்தோடு பதினோன்றாக வாழும் வாழ்க்கையில்  விருப்பம் இல்லை... சாதிக்க வேண்டும் தேடல் வேண்டும் என்று தன் வாழ்க்கையை வகுத்துக்கொண்டார்...

 அவர் அப்பா தென் அமெரிக்கா பாலைவனம் மற்றும் காடுகளில் தங்கத்தை தேடுகின்றேன் பேர்வழி என்று வாழ்க்கையை தொலைத்து விட்டவர்....

ஆனால் அவரின் பெண்ணுக்கு தன் அப்பாவை போல இல்லாமல் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம்  மட்டும் எப்போதும் நெஞ்சில் தீயாய்   எரிந்துக்கொண்டு இருந்தது...

வேளாங்கன்னி கோவிலுக்கு  ஒரு கொடியை வைத்துக்கொண்டு நடந்தே    சாலையோரங்களில்  பயணம் செய்து கிடைத்த இடத்தில் படுத்து, கிடைத்த  வயல்களில் இருக்கும் மோட்டர் கொட்டைகைகளில்  குளித்து உடையை காய வைத்து ஒரு தேசாந்திரி போல நடந்து செல்வதை  நீங்கள் பார்த்து இருக்கலாம்..

 கன்யாகுமாரியில் இருந்து வேளாங்கன்னிக்கு  ஒருவர் நடந்தே தனது வேண்டுதல்களை  நிறைவேற்றுகின்றார் என்று  வைத்துக்கொள்வோம்.. மொத்தம் 450 கிலோ மீட்டர்... காரில் ஏழரை மணி  நேரத்தி  செல்லலாம்... நடந்தே சென்றால் ஒரு வாரம் ஆகும் என்று நினைக்கின்றேன்...

ஆனால் கன்யாகுமாரியில் இருந்து டெல்லி கன்டோன்மென்ட்க்கு 2793 கிலோ மீட்டர் தூரம் கொண்டது...  காரில் நிறுத்ததாமல்  சென்றால்  42 மணி நேரம்  ஆகும்... அதுவே சாலை ஓரமாக ஒரு வேண்டுதலுக்காக  நடந்து சென்றால் 2793 கிலோமீட்டரை நடந்தே கடக்க... எப்படியும் மாதக்கணக்கில் ஆகும் அல்லவா?


சார்    இதுவே பேத்தல்....

எவனாவது   கன்யாக்குமாரியில் இருந்து டெல்லிக்கு நடந்தே செல்வானா?

 தம்பி கன்யாக்குமாரியில் இருந்து டெல்லிக்கு ரோட்டு ஓரமா மக்கள் வாழும் பகுதி வழியே நடந்து போறதுக்கே பேத்தல்ன்னு  சொல்லறியே,..??

தண்ணியே இல்லாத பாலைவணத்துல... அதுவும்  ஒதுங்க நிழல்  கூட இல்லாத பொட்டல்  பாலைவணத்தில் ....நாலு ஓட்டகம் ஒரு நாயோடு   தனியா  ஒரு பெண்ணாக நடந்து போறது சாதராண விஷயமா?

 அது மட்டுமல்ல...

2750 கிலோ மீட்டர் அதாவது கன்யாக்குமாரியில் இருந்து  டெல்லி துரத்தை பாலவணத்தின் மூலமா  நடந்து  கடக்க வேண்டும் என்று சொன்னால் உங்களால் முடியுமா?

அதவும் ஆண் இல்லை.. தனி ஒரு பெண்ணாக ... சான்சே இல்லை என்று நீங்கள் சொல்லலாம்...  கதை விடுகின்றேன் என்று நீங்கள் கருதலாம்.

ஆனால் தனி ஒரு பெண்மணியாக 1977 ஆம் ஆண்டு  அஸ்திரேலியாவில்  ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் என்ற   ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் இருந்து Aboriginal Land வரை மொத்தம் 2736 கீலோ  மீட்டர்  பாலைவணத்தை நான்கு ஓட்டகம் மற்றும் தன் செல்ல நாயுடன்  ஒரு பெண் தணியாக கடந்தார் என்றால்  நம்முடிகின்றதா? 

அதுவும்  தொழில் நுட்பம் வளராத அக்காலத்தில்  ஆபத்து   என்றால் உதவிக்கு கூட ஆள் கிடைக்காத பாலைவண பகுதியில்  நடந்து கடப்பது என்பது சாத்தியமில்லாதது    என்றே நாம் நினைப்போம்...


 இதுவே  நம் ஆட்களிடம் இப்படி ஒரு பெண்மணி நடந்தே  பாலைவணத்தை 2736 கிலோ  மீட்டர் கடக்க போகின்றார் என்று நம்ம ஊர் பெரிசிடம் சொன்னால்....  அந்த பொண்ணுக்கு சூத்துக்கொழுப்பு என்று ஒரு வார்த்தையில்  முடிந்து விடுவார்கள்..ஹ

 ஒன்று இயலாமை....

நம்மால் செய்ய முடியாது... அதனால் யாராலும் செய்ய முடியாது என்று இறுமாப்பு.

பெண்தானே என்ன கிழித்து விட போகின்றாள் என்ற கேலி..

பாலைவணத்தில் இருக்கும் அபாயங்களை அறிந்த காரணத்தால் கூட அப்படி சொல்லி இருக்கலாம் .

ஆனால் இந்த உலகத்தில் முதல் அடி எடுத்து வைத்த அத்தனை பேரும் கேலிக்குள்ளாக்க பட்டுருக்கின்றார்கள்..

சமீபத்தில்  சில நாட்களுக்கு முன்   ஹாரி பாட்டர் படத்தில் வில்லனாக நடித்த இங்கிலாந்து  நடிகர்  David Legeno கலிபோர்னியாவின்   டெத் வேலியில்  இறந்து கிடந்தார்...

50 வயதாகும் David Legeno  ஒரு பாக்சர் .கட்டுடல்  கொண்டவர்... டிரக்கிங் செல்லும்  போது  இறந்து இருக்கலாம் என்றும் ,அவர் இறக்க காரணம் கடுமையான வெப்பம் என்று தெரிவித்துள்ளனர்.. 

காரணம் கலிபோர்னியா பாலைவணத்தில் 120 டிகிரி  அனாயசமாக  கொளுத்துமாம்..  வெயிலின் தாக்குதலில் இறத்ததோடு மட்டுமல்லாமல்  நான்கு நாட்கள் கழித்துதான்  அவரின் உடல் கண்டேடுக்கப்பட்டது...

இதை ஏன் இங்கே எழுதுகின்றேன்  என்றால் ஒரு பிரபல நடிகர்..  நவீன உபகரணம் கொண்ட இந்த  வாழ்வியல் சூழலில் பாலைவணத்தில் செல்லும் போது இறந்து இருக்கின்றார் என்றால்???

1977 ஆம்  ஆண்டு நான்கு ஒட்டகங்களுடன் தனியாக சென்ற ராபின் டேவிட்சன் தன்னம்பிக்கையை நினைத்து பாருங்கள்.

 ஆம் தன்னம்பிக்கைக்கு இந்த திரைப்படம் ஒரு உதாரணம்..

2736 கிலோ மீட்டரை நடந்தே அடர் பாலைவணத்தை கடக்க போகின்றேன் என்று  ராபின் சொன்ன போது? ஏன் கடக்க வேண்டும் என்று அவர்களின் உறவுகள் கேட்க ஏன் கடக்ககூடாது என்று எதிர் கேள்வி கேட்டு விட்டு அதற்கான  ஆயுத்த பணிகளை மேற்ககொண்டவர்...

ராபின் அலிஸ் ஸ்பிரிங்கில் சட்டென காசு கொடுத்து  நான்கு  ஒட்டகங்களை வாங்கி கொண்டு தன் செல்ல நாயோடு  பாவைவணத்தை கடந்து விடவில்லை....

 முதலில் ஒட்டகங்களோடு  இரண்டு வருடங்கள் பழகி  அதன் பழக்க வழக்கங்களை தெரிந்துக்கொண்டார்..
 அது மட்டுமல்ல...வேலை செய்தால் ஒட்டகம் தருகின்றேன் என்று ஒரு முதலாளி சொன்னதை வைத்து ஒட்டக பண்ணையில் வேலை பார்க்க.. கடைசியில் எதுவும் தராமல் ஏமாற்றி விடுகின்றான்.

அதே போல பாலைவணத்தை கடக்கவும், ஒட்டகம்  வாங்கவும் பயணத்துக்கு தேவையான பணத்துக்கு என்ன செய்யவது என்று கை பிசைந்து நின்றுக்கொண்டு இருக்கும் போது நேஷனல் ஜியாகரபி புகைப்படக்காரர் நண்பராகி  ராபினுக்கு ஸ்பான்சர் வாங்கி கொடுக்க...

 நான்கு ஒட்டகத்துடன் கடும் பாலைவண பகுதிகளில்  நடந்தே ஒன்பது மாதங்கள் 2736 கீலோ  மீட்டரை கடந்து   சாதனை படைத்தார்.
 பின்னாளில் அதனை டிராக்ஸ் என்று புத்தகமாக எழுத  புத்தக விற்பனையில் சாதனை படைத்தது...

புத்தகம் எழுத காரணம்.... சல்மான் ரூஷ்ட்டி கூட இந்த அம்மா கொஞ்சநாள் வாழ்ந்து இருக்காங்க...

தற்போது அந்த புத்தகத்தை  மையமான வைத்து ராபின் கதையை திரைப்படமாக எடுக்க...  டிராக்ஸ் திரைப்படம்  உலக திரைப்பட விழாக்களில் கொண்டாடும் படமாக மாறி இருக்கின்றது.

ஒரு பெண் நான்கு ஒட்டகம் ஒரு நாய்...
விஷூவலாக காட்ட பாலைவண மணலை தவிர வேறு  எதுவும் இல்லை... ஆனாலும் அசத்தி இருக்கின்றார்கள். சான்சே இல்ல.
 அற்புதமான திரைக்கதை...


 முதலில் நேஷன்ல் புகைப்படக்காரர்  ரிக் சாலமனிடம் வேண்டா வெறுப்பாக பழகினாலும் ஒரு கட்டத்தில் இருவரும் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு நெருக்கமாகின்றார்கள்.. பின்னாளில் அவர் எடுக்கும் புகைப்படங்கள்தான் ராபினுக்கு  ஆதாராமாக விளங்கின...

2736  கிலோ மீட்டர்  பாலை வண பயணத்தில்  மூன்று முறை ரிக் சாலமன்  ராபினை சந்திக்கின்றார்.

( படத்தில் கேமல் லேடி ராபின். அவர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த மிலா.)

ராபினாக Mia Wasikowska நடித்து இருக்கின்றார்... நான்  இல்லை...
 ஒரு  விருப்பம் இல்லாத ஆண்  என்றாலும் செய்த உதவிகள், தனிமை, அந்த தனிமையை போக்க காமம்.. என்று காமம்  உருவாகும்   விதத்தை மிக அழகாக காட்சி படுத்தி இருக்கின்றார் இப்படத்தின் இயக்குனர் John Curran

  பாலைவணத்தில் பழக்கப்பட்ட  ஒட்டகங்களை காட்டு ஓட்டகங்கள் தாக்க வரும் அப்போது  தயவு தாசன்யம் பார்க்காமல் சட்டு கொன்று விடுவது நல்லது.. அப்படி பரிதாபம் பார்த்து கொல்ல வில்லை என்றால்   உன் ஒட்டகத்தை  கொன்று விடும் ஒட்டகம் இல்லையென்றால் பாலைவணத்தில் நீயும் மடியவேண்டியதுதான்  என்று   ஒட்டகம் கொடுக்கும் பெரியவர்  தன் அனுபவத்தை    சொல்லி வழி அனுப்பி வைப்பது   கிளாஸ்.. 
அவர் சொன்னது போல பாலைவணத்தில் ஆபத்தை எதிர்நோக்குவது... தூங்கி எழுந்து பார்த்தால் ஒட்டகம் காணமல் போய்  பயந்து போய்  பாலைவணத்தில்   தேடுவது எனம் படம்  நெடுக சுவாரஸ்யங்கள்....

  நாம் வசிக்கும்  வீட்டில்  யாரும் இல்லையென்றால் கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு  ஜட்டி யோடும் சில நேரம்  இல்லாமலும்   சுந்திரமாக அலைவோம்  அல்லவா?

 அது போல பாலைவணத்தில் அவளும் ஒட்டகங்கள்தான் புழுக்கம் வேறு.. வெறும் ஜட்டி மட்டும் போட்டுக்கொண்டு மேலே ஒரு துண்டை போர்த்திக்கொண்டு ஒரு தேசாந்திரி போல நடந்து செல்வதும்... நடுவில்  இருக்கும் தண்ணீர் நிலைகளில் குளித்து மகிழ்வதும் கவித்துவமான காட்சிகள்.

நடுவில் பழங்குடி மக்கள் உதவி செய்வதும் அவர்களோடு அன்பு  பாராட்டுவதும்... பாதுக்காப்பற்ற பகுதியில் சில கிலோ மீட்டர்  பழக்குடி மக்களில்  இருந்து ஒரு பெரியவர்  துணைக்கு வருவதும் அவருக்கும் ராபினக்கும் உண்டான நட்பு என நெகிழ வைக்கின்றார்கள்..

  உடம்பு தோல் வரண்டு அது கொஞ்ச கொஞ்சமாக பாலைவண வெயிலில் கருகி  துவண்டு போய்  கடைசியாக தண்ணீரை பார்க்கும்  காட்சி இருக்கின்றதே சான்சே இல்லை.. நீங்களே சாதித்தது போல ஒரு மகிழ்ச்சி   தென்படும். அதுதான் அந்த படத்தின் வெற்றி...


ரிக் எடுத்த போட்டோக்கள் பத்திரிக்கையில் வந்த  காரணத்தால் ராபின்  சாதனையை  உலகம் உணர்ந்து அவரை பேட்டி எடுக்க வருவதும் அவருக்கு கேமல் லேடி என்று பட்டம் வழங்குவதும்  அசத்தல்
=========
 படத்தின் டிரைலர்.



=======

 படக்குழுவினர் விபரம்

Directed by John Curran
Produced by
Iain Canning
Emile Sherman
Screenplay by Marion Nelson
Based on Tracks 
by Robyn Davidson
Starring
Mia Wasikowska
Adam Driver
Music by Garth Stevenson
Cinematography Mandy Walker
Edited by Alexandre de Franceschi
Production
  company See-Saw Films
Distributed by Transmission Films
Release date(s)
29 August 2013 (Venice)
10 October 2013 (Adelaide)
19 September 2014 (United States)
Running time 110 minutes
Country Australia
Language English
Budget $12 million
======
பைனல்கிக்.
இந்த படம்  பயோகிராபிக்கல்  திரைப்படம் , உண்மை கதை  என்பதால் சுவாரஸ்யம் அதிகம்...  அபத்து  அதிகம் என்றதும் ரிஸ் எடுப்பது ஒரு விதமான தில்தான்.. அப்படிரிஸ்க் எடுக்கும் தில் எல்லா நேரங்களில் வெற்றி  பெற்று விட முடியாது... சில நேரத்தில் சறுக்கும்..
ரிஸ்க் என்பது சில நேரங்களில் சூழ்நிலைகளால்  அமையும்...  நில நேரம் நாமே தேர்ந்து எடுப்பது...
ஆனால் இப்படி ஒரு ரிஸ்க் எடுத்த காரத்தால்தான் 30 வருடங்களுக்கு பிறகு அஸ்திரேலியா பாலைவணத்தை கடந்த பெண்மணி பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றோம்..
 இந்த படம் கண்டிப்பாக  பார்த் தே தீரவேண்டிய திரைப்படம்.

தேடல் உள்ள உயிர்களுக்கே
தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை
வாழ்வில் ருசியிருக்கும்
ஆடல் போல தேடல் கூட
ஒரு சுகமே...

 என் வாழ்க்கையில் நான் ஒரு பெரிய ரிஸ்க்கினை எனது ஊட்டி ஹனி மூன் டிரிப்பின் போது எடுக்க... அது பெரிய கதை...

கதையை வாசிக்க விருப்பம் இருக்கின்றார்கள்..

 உங்கள் வாழ்க்கையில் இது போல  ஏதாவது ரிஸ்க் எடுத்து இருந்தால் பின்னுட்டத்தில்  சுருக்கமாக  பகிர்ந்து கொள்ளுங்கள்.

======
பிரியங்களுடன்


ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

1 comment:

  1. ஜாக்கி

    விமர்சனதிற்கு நன்றி. பார்க்கவேண்டிய படங்கள் லிஸ்ட்-இல் சேர்த்துக்கொள்கிறேன்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner