தொடரும் துப்பட்டா மரணங்கள்...பெண்களே உஷார்.....





தமிழகம் முழுவதும் தாவணி செழித்து வளர்ந்து மகசூல் கொடுத்துக்கொண்டு இருந்த காலம் ஒன்று உண்டு...
ஆனால் 1990 ஆம் ஆண்டில் இருந்து முக்கியமாக, சன்டிவி மெல்ல வளர்ந்து  கேபிள்  டிவி என்ற புதிய  நாமகரணத்தோடு பட்டி தொட்டி எங்கும் பரவிக்கொண்டு இருந்த வேளையில் ஆடாத ஆட்டம்  ஆடிய தூர்தர்ஷனுக்கு ஆப்பு வைத்து அனுப்பிய அதே வேளையில், தமிழக மக்கள் முக்கிய வளர் பருவ பெண்கள்... தாவாணிக்கும்  ஆப்பு வைத்தார்கள்...

சென்னை நகர்ப்புற கலாச்சாரம்  கேபிள் டிவிக்கள் மூலம் பட்டி தொட்டி எங்கும் 1994க்கு பிறகு வெகு வேகமாக  பரவிக்கொண்டு இருந்த போது...தாவணியின்  ஆதிக்கத்துக்கு சர்வ  நிச்சயமாக  ஆப்பு வைக்கப்பட்ட காலம் அது...

 இடுப்பு தெரியாம இருக்க...ரெண்டு சேப்ட்டி பின் வச்சி  இடுப்புக்கு மேல இருக்கற ஜாக்கெட்டுல ஹூக்கு பின் பண்ணி  வச்சி இருப்பாங்க.. ..
முக்கியமா கடையில சேர்ல்ஸ் கேர்ள் வேலையில் இருக்கறவங்க... பெரும்பாலும் இப்படி இடுப்பு தெரியாம இருக்க படாத பாடு பட்டுக்கிட்டு இருந்தாங்க...

 மேல ஏறி பொருள் எடுக்கும் போது  மாராப்பு விலகும் என்பதாலும் இடுப்பு வெறித்து பார்த்துக்கொண்டு, பொருள்வாங்காமல்  கடலை போட்டுக்கொண்டு இருக்கும் ஜொள்ளு விடும் கஸ்டமர்களிடம் இருந்து தப்பிக்கவே இந்த ஏற்ப்பாடு...

 பேச்சு சுவாரஸ்யத்துல அவுங்களையும் அறியாம  ஒரு பக்க மார்பு தெரிய.. எதிர்ல இருக்கறவன் பார்வை வச்சிதான் டப்பக்குன்னு தாவணி மாரப்பை இழுத்து விட்டு சரி பண்ணிக்குவாங்க...  அது பெரும்  தொல்லை வேற...  

சமீபத்துல வயசுக்கு வந்த பொண்ணுக்கு கூட தாவாணியை சுத்தி...  விட்டு விடுவாங்க.. அதுங்க பாட்டுக்குனு  மாராப்பு தலைப்பை சரி பண்ணாம அலைஞ்சிக்கிட்டு இருக்குங்க... ஆத்தாக்காரி தலையோ  தலையோன்னு அடிச்சிக்கிட்டு, காதுல தேவ ரகசியம் போல சொல்லி மார்பு பக்கம் கவனம் கொள்ளும் படி தன் மகளுக்கு அறிவுறுத்துவா.. காரணம் இவ்வளவு நாள் அந்த  சின்ன பொண்ணு பாவடை சட்டை போட்டுக்கிட்டு சுத்திக்கிட்டு இருந்தவளை திடிர்ன்னு தாவணி கட்ட சொல்லி தலைப்பு மேல  கவனம் வைடின்னா?? எப்படி அது முடியும்..  --???


எப்படியும் அந்த சின்ன புள்ளை தாவணி  பக்காவா கட்டி பழக  சரியா இரண்டு மாசம் ஆவும்..  அதுக்குள்ள.. சில புள்ளைங்க வெவறமா.. எவன் எதுக்கு பார்க்கறான்?  எங்க பார்க்கறான்... ?ஆத்தா சொன்னது சரிதானா? என்று கிராஸ் எக்சாமின் வேற பண்ணி பார்க்குங்க.... அதுல பலிகடா பக்கத்து விட்ட  அக்கத்து வீடு உறவு பசங்கதான்...

அத்தை புள்ளை  யோக்கியமானவனாச்சே..?? அவன் எப்படி பார்க்கறான் என்று டெஸ்ட் வைத்து மாட்டிக்கொண்ட கதைகள் எல்லாம்... இரண்டு  பிள்ளை பெத்த உடன், தளர்ந்து, தைரியமாகி, பால்ய நினைவுகளை பகிர்ந்து கொண்ட  என்  தோழிகள் நிறைய பேர்...

கேபிள் டிவி ஆதிக்கம்......பட்டி தொட்டி எங்கும் கிளை பரப்பியவுடன்.. தொலைகாட்சியில் சென்னையை  காட்டும் பொழுது எந்த பெண்ணும்  தங்களை போல தாவணி கட்டிக்கொண்டு சேப்ட்டி பின்னுக்கு வேலை கொடுக்கவில்லையே என்று தோன்றிய அந்த வினாடி தமிழக பெண்கள் வட பெண்கள் அணியும் உடையான சுடிதாருக்கு மாறினார்கள்...


சுடிதார் கண்ணியமான உடை... இடுப்பு தெரியாது...  சேப்டி பின் வைத்து இழுத்து பின் குத்தி இடுப்பு பார்வையை மறைக்க   கவலைபடவேண்டாம்...
 பாவடை அணிந்து கொண்டு வெகு வேகமாக நடக்க முடியாது... கொஞ்சம் விரைவாக நடக்க வேண்டும் என்றால் கொஞ்சம் பாவடையை தூக்கி கொண்டுதான் ஓட வேண்டும்... அவ்வப்போது மாராப்பை சரி பண்ணிக்கொள்ள வேண்டும்... முக்கியமாக பேருந்தில் மாராப்பு தலைப்பு சிக்கிகொண்டால் அதோ கதிதான்...
பேருந்து , ரயில், தாண்ட , ஓட , குதிக்க, எல்லாத்துக்கு சவுரியமான உடையாக சுடிதார் விளங்கியது... தாவாணியில் மராப்பு இல்லாமல் வெறும் ஜாக்கெட்டுடன் நின்றால்    ஆக்வேர்டாக இருக்கு.. ஆட்டோமேட்டிக்கா  இரண்டு கைகாளாலும் மார்பை ஜாக்கெட்டோடு சேர்த்து  மறைத்துக்கொள்ள  மனது சொல்லும்... ஆனால் சுடிதாரில் ஷால் இல்லா விட்டால் கூட அப்படி ஒன்றும் பெரிதாய் ஆக்வேர்டாக  தெரியாது.... 

வீட்டில்  நெருங்கிய உறவுகள் வரும்  போது துப்பட்டா இல்லாமல் கூட இருக்கலாம்.. வெளிதெருவுக்கு போகும் போது துப்பட்டா அணிந்து கொள்ளலாம் என்ற சுதந்திரத்தை தாவணியை விட கூடிதார் கொடுக்க.. முக்கியமாக எப்ப எவன் இடுப்பை பார்ப்பான்,  மாராப்பு விலகியதை வெறிப்பான்னு சதா சர்வகாலமும் உடை மேலே  சிந்தனை வைக்காமல் மற்ற சிந்தனைகளில் பெண்களின் ஆற்றலை செலுத்த  சுடிதார் ஒரு அற்புத உடையாக விளங்கியது என்றால் அது மிகையில்லை.


உடை என்பது அவர் அவர் விருப்ப விஷயம் அதில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை... அது ஆபசமாக  மாறாமல்  பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான்  பொதுவான சித்தாந்தம்...

1994க்கு பிறகு தாவணிக்கு ஆப்பு வைத்து அனுப்பி, சுடிதார் தமிழகம் எங்கும் அகல கால்  பரப்பி  அரசாட்சி செய்ய... துப்பாட்டா என்ற வஸ்துவை வேற அடிக்கடி போட்டுத்தொலையுனுமா? என்று ஒரு சுபவேளையில் யோசிக்க...2005க்கு பிறகு துப்பட்டா இல்லாமல் பக்கத்து கடைக்கு மார்கெட் போன்ற பொது இடங்களுக்கு பெண்கள் வர ஆரம்பித்தார்கள்...

முன்னாடி துப்பட்டா இல்லைன்னா ஆக்வேடா தெரியுதுன்னு சொன்னவங்க... இப்ப துப்பட்டா இல்லாம வந்தாலும் ஒன்னும்  ஆக்வேடா தெரியலைன்னு பெண்களே சொல்லும் அளவுக்கு வந்துடுச்சி....

சரி ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு நீட்டி முழங்கிட்டேன் போல....

லெட் மீ கம்  டு த பாயிண்ட்.

சடிதாருக்கு துப்பாட்டா போடுங்க  அல்லது போடாத போங்க.... ஆனா அது மேல ரொம்ப ஜாக்கிரதையாக கவனம் வைங்க... அது உங்க கூடவே இருக்கற ஏமன்னு கூட  நினைச்சிக்கோங்க...

துப்பாட்டா சைக்கிள்ள சிக்கி விழுந்தவங்க நிறைய பேர்.... தாவணி கூட சைக்கிள்  செயின்ல சிக்கி இருக்கு.... புடவை தலைப்பு சைக்கிள் செயின்ல  சிக்கி இருக்கு... ஆனா உயிர் போனதில்லை.. 

சின்ன சின்ன சிராய்ப்பு...மானம் போய் இருக்கும்.. ஆனா உயிர் போனதில்லை... ஆனா சமீபகாலமா  துப்பட்டா  டூ வீலர் பைக்  சக்கரத்து சிக்கி கிட்டு உயிர்  இழக்கறது  சம்பவங்கள் தமிழகத்துல அதிகரிச்சிக்கிட்டு வருது...காரணம் சைக்கிள் வேகம் குறைவு உயிர் பிழைக்க வாய்பு அதிகம்.. ஆனா பைக் வேகம் அதிகம்... அதனால் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை....


உலகத்துல  எந்த   நாட்டு பைக்லயும்... செயின் கார்டு இருக்கற போல வடிவமைச்சதே இல்லை.. காரணம்.. அங்க பேண்ட், டிஷர்ட் அவ்வளவுதான்.. இங்கதான் புடவை தலைப்பு, தாவணி தலைப்பு சுடிதார் தலைப்பு எல்லாம் இருக்கு...அதனால் செயின் கார்டு போட்டுதான் முன்னாடி எல்லாம் பைக் வெளியே  அனுப்பிச்சானுங்க....

அப்படியும்  சுத்தற  சக்கரத்து கிட்ட புடவை தலைப்பை விட்ட பொறுமையா மாட்டும்... சுதாரிச்சி வண்டியை நிறுத்திடலாம்..ஆனா  செயின்ல மாட்டினா....? அவ்வளவுதான் கண நேரத்தில்  மரணம்,...  என்ன நடந்துச்சின்னு உணரும் முன் மரணம் என்பது எவ்வளவு கொடுமையானது...????

 சில வாரங்களுக்கு முன் திண்டிவனம் பக்கத்தில்  உள்ள சின்ன கிராமத்தில் அந்த இளம் பெண் காலையில் கண் விழித்து  எழுந்தாள்... எட்டாம் வகுப்போ பத்தாம் வகுப்போ சரியாக நினைவில்லை... பள்ளிக்கு கிளம்பினால்... பள்ளி வெகுதுரம் என்பதால் சொத்தக்கார பையனை அழைத்து டூவீலரில்  அழைத்து போய் பள்ளியில் விட்டு விட்டு வர  சொன்னார்கள் அவள் பெற்றோர்கள்..... அழைத்து  போனான்...

 போகும் வழியில் துப்பாட்டா வண்டி சக்கரத்தில் சிக்கி,  யோசிக்க கூட இடம் கொடுக்காமல் நொடியில்  அவள் மரணமடைந்தாள்... இப்போது அந்த பெண் உயிருடன் இல்லை.... வண்டி ஓட்டி சென்றவனின் நிலைமை, அந்த குடும்பத்தின் மனநிலையை  யோசித்து பாருங்க... திடின்னு கழுத்து இறுக்கி சாவறது, அதுவும் வாழ வேண்டிய வயசுல  இப்படி ஒரு மரணம் நினைச்சி பார்க்கவே கொடுமையா இருக்கு...
==========
 சில நாட்களுக்கு முன் பத்திரிக்கையில் வந்த செய்தி.. இது.. தன்  குடும்ப வறுமையை விரட்ட   சென்னை அம்பத்தூர் எஸ்டேட்டில் வேலைக்கு வந்த இளம் பெண் அவர்...கவனக்குறைவின் காரணமாக துப்பாட்டா மெஷினில்  மாட்டி  கழுத்து இருக்கி அவரும் ஸ்தலத்திலேயே இறந்து விட்டார்....காரணம் துப்பட்டா....என்னை பொறுத்தவரை மாணத்தை விட , துப்பாட்டா விட எனக்கு  உயிரே பிரதானம் என்பேன்... அதனால் அதிகம் கவனம் தேவை.
===================
சில வருடங்களுக்கு முன்ன நம்ம  சென்னை மெரினாவுல நான் என்  கண்ணு முன்னால நடந்த  சம்பவம்..... சின்ன பொண்ணு மிஞ்சி போன 15 வயசு இருக்கும் , அவன் காதுல கம்மல் எல்லாம் போட்டு இருந்தான்... எப்படியோ கரெக்ட் பண்ணி, பீச்சிக்கு மஞ்சள்  கலர் அப்பாச்சி பைக்ல அழச்சிக்கிட்டு வந்துட்டான்... அப்பாச்சி  வண்டி வந்த புதுசு.. அது ரேஸ் பைக் ஸ்டைல்  அப்படின்றதால... வண்டியில செயின் கார்டு இல்லை... 

அவன் கூட இன்னும் நாலைஞ்சி பசங்க வந்து இருந்தானுங்க... பொண்ணை மடக்கிட்டோம்ன்ற சந்தோஷம் அவன் முகத்துல குடி கொண்டு இருந்திச்சி.. அந்த பொண்ணுக்கும். சந்தோஷம் முதன் முறைய வெளி வந்த சந்தோஷமா கூட இருக்கலாம்.. 

அவன் வண்டியை இந்த பக்கமும் அந்த பக்கமும் முறிக்கி ஓட்டிக்கிட்டு இருந்தான்... பிரண்ட்ஸ்  கிட்ட பேசிட்டு எல்லோரும் கிளம்ப அவன்  வண்டி எடுத்தான் புருக்....    சட்டுன்னு அந்த பெண்ணோட அலறல் சத்தம்  அவள் துப்பட்டா கழுந்தை இறுக்கி வெட்டி, கழுத்துல இருந்த தோலு வைட்டி,   பயத்தில் சிறு நீர் கழித்து, முகம் வெளிறி.. சில நிமிடங்களுக்கு முன் குழந்தை போன்ற முகத்தில் மரண பயம் வந்து விட்டது.. வீட்டில் என்ன காரணம் சொல்லுவது...?? தோல் வைண்ட எரிச்சல் என  அந்த பெண் மரண விளம்புவரை சென்று தப்பித்தாள்..... 

இப்ப ஸ்டைல் அப்படின்ற பேர்ல ரேஸ் வண்டி எல்லாத்துலயும் செயின் கார்ட் அப்படின்ற ஆப்ஷனை எடுத்துட்டான்.. அதனால் ரேஸ்   வண்டி வச்சி  பொண்டாட்டி, லவ்வரை  அழச்சிக்கிட்டு போறவங்க ரொம்ப ஜாக்கிரதையா.. போங்க.


============                                            
துப்பாட்டாவுக்கு அவள் விகடன்  வாசகி சொன்ன கருத்து ஏற்ப்புடையது... வாசித்து பாருங்க..
===========
எங்கள் தெருவில் வசிக்கும் பெண், தன் இரண்டு குழந்தைகளையும் தினமும் டூவீலரில் பள்ளிக்கு அழைத்துச் செல்வார். துப்பட்டாவை எப்போதும் கழுத்தைச் சுற்றியே அணிந்துகொள்வது, அவரின் வழக்கம்.

சமீபத்தில் அப்படி டூவீலரில் சென்றபோது, துப்பட்டாவின் ஒரு முனை வண்டிச் சக்கரத்தில் மாட்டிக்கொள்ள, அது இவரின் கழுத்தை இறுக்க, நிலை தடுமாறி குழந்தைகளுடன் கீழே விழுந்துவிட்டார். துப்பட்டா இறுக்கியதில், கழுத்தெல்லாம் ரத்தக் காயம். அது குரல்வளையை நெறுக்கியிருந்தால்... என்ன ஆகியிருக்கும்? எவ்வளவு பெரிய ஆபத்தில் இருந்து அவர் தப்பித்திருக்கிறார்' என்பதை நினைக்கும்போதே பதைபதைப்பாக இருந்தது.

டூவீலரில் செல்லும் பெண்கள் துப்பட்டா, முந்தானை விஷயத்தில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பது பலமுறை பலவகைகளில் வலியுறுத்தப்பட்டாலும், சிலரின் கவனக்குறைவால் இதுபோன்ற விபரீதங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

கழுத்தைச் சுற்றிப் போட்டுக்கொள்வதைவிட, துப்பட்டாவை இருபுறமாகப் போட்டு, பின்னால் ஒரு முடிச்சுப் போட்டுக்கொள்வது பாதுகாப்பானது!

 வசந்தா மாரிமுத்து, சிட்லபாக்கம்

(அவள் விகடன் - 'அனுபவங்கள் பேசுகின்றன' பகுதியில் இருந்து)
=================
சென்னையில் ஆதார் அட்டை எடுக்க  சென்ற லாவண்யா மோகன் என்ற பெண் துப்பாட்டா  அணியவில்லை என்று திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றார்... இது போன்ற கொடுமைகளும்  நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன...

துப்பட்டா போட்டாலும் சரி போடாவிட்டாலும் சரி  அப்படி போட்டால் பின் பக்கம் முடி போட்டுகொள்ளுங்கள்....  அது  நல்ல செப்ட்டி மெத்தட்... என்ன தான் நானே வாய் கிழிய சொன்னாலும் வேலைக்கு போகும் அவசரத்தில் எங்க வீட்டு அம்மாவே நிறைய முறை இந்த தப்பை  செஞ்சி இருக்காங்க... வண்டி எடுக்கும் போது... எல்லாம் சரியா என்று கேட்டாலும், சில நேரத்தில் இப்படி நடந்து விடுகின்றது..  சிலர் துப்பட்டா பற்றி  எச்சரிக்கை செய்யும் போது அவர்களுக்கு நன்றி தெரிவித்து இருக்கின்றேன்...


ஆனால் சமீபத்தில் நண்பர் அபிலாஷ்  அவர்கள் முக நூலில் ஒரு செய்தியை வருத்தத்துடன் பகிர்ந்து இருந்தார்... யோசிக்க வேண்டிய விஷயம்தான்..

ஒரு ஆட்டோக்காரர் பைக்கில் போகிற அப்பா மற்றும் அவர் பின்னுள்ள இரு பெண்களில் ஒருவரது ஷால் சக்கரத்தில் படும் படி தொங்குவதை பார்த்து எச்சரிக்கிறார். அதற்கு அப்பா "நீ ஏன்யா அங்க பார்க்குறே. போடா பெரிசா சொல்ல வந்துட்டான்" என்று கத்துகிறார். ஆட்டோக்காரரின் முகம் செத்துப் போனது. ஆட்டோக்காரர் இதனை என்னிடம் பின்னர் சொல்லி புலம்பிக் கொண்டே வந்தார். "நாட்ல நல்லது பண்றவங்களை யாரும் மதிக்கறதே இல்லை... ".# தெளிவான அப்பா.

இப்படியான அப்பாக்கள், காதலன்கள், கணவன்கள், உலகின் தாங்களே அழகு பதுமைகள் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் பெண்களிடம் துப்பட்டா சக்கரத்தில் சிக்கிக்கொள்ளும் என்றால் நம்மை ஈனபார்வை பார்த்து விட்டுதான் செல்கின்றார்கள்...

தேள் கொட்டும் இயல்புடையது... 

நாம் காப்பாற்றும் இயல்புடையவர்கள் என்பதை மனதில் நிறுத்துவோம்...

ஆங்கிலத்தில் Whistleblower என்ற அழகான பிரேஸ் வாக்கியம்  ஒன்று உண்டு....

அதாவது பிரச்சனை வரும்  முன் குரல் கொடுங்கள் என்பதுதான்..
துப்பாட்டாவுக்கு எச்சரிக்கை செய்யும் நேரம் வந்து விட்டது....

ஈனப்பார்வை பார்த்தாலும் நாம் குரல்  கொடுப்போம்...

செவிமெடுப்பவர்கள்   எடுக்கட்டும் ....

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


குறிப்பு.
இந்த பதிவை பார்த்து மனதில் ஊன்றி, அஜாக்கிரதை காரணமாக முன் பக்கம் வாகனத்தில் செல்பவர் துப்பாட்டா  சக்கரத்தில் சிக்கும் முன்.. Whistleblower ஆக மாறினால் எனக்கும் நான் எழுதிய இந்த எழுத்துக்கும்   கோடி சந்தோஷம்...

உங்கள் பகுதிகளில்  இது போன்ற துப்பட்டா சம்பவங்கள் நடந்து இருந்தாலோ அல்லது பார்த்து இருந்தாலோ... தயவு செய்து பின்னுட்டத்திவ் பகிருங்கள்.. விழிப்புணர்வு அதிகரிக்கும்.

 நன்றி.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

17 comments:

  1. செத்தில் ஆதவன் என்ற நண்பர் எனது முகநூலில் பதிந்த செய்தி...

    நாமக்கலில் சில தினங்களுக்கு முன்பு நடந்தது .மறுநாள் ஆஸ்திரேலிய போக வேண்டிய பெண் .தன் மாமானார் வீட்டிற்கு தன் சகோதரனுடன் பல்சரில் செல்லும்போது துப்பட்டா சிக்கி அந்த இடத்திலே மரணம்...

    ReplyDelete
  2. ஈனப்பார்வை பார்த்தாலும் நாம் குரல் கொடுப்போம்...

    செவிமெடுப்பவர்கள் எடுக்கட்டும் .... THANK YOU FOR Whistleblow

    ReplyDelete
  3. Please take thuppada in the bag while going in a two wheeler after reaching the spot then
    we put the thuppada

    ReplyDelete
  4. Sir,
    One of my neighbor's first daughter died in the above said incident. After a great
    difficulty he overcame from that incident. After that he started a Charitable Trust on his
    daughter's name as "SWETHA EDUCATION AND CHARITABLE TRUST", Avadi and
    running Computer Basic Training centre in his area.

    ReplyDelete
  5. Sir,
    One of my neighbor's first daughter died in the above said incident. After a great
    difficulty he overcame from that incident. After that he started a Charitable Trust on his
    daughter's name as "SWETHA EDUCATION AND CHARITABLE TRUST", Avadi and
    running Computer Basic Training centre in his area.

    ReplyDelete
  6. Sir,

    My Neighbor's daughter died in the above said incident few years back.
    After a great difficulty he overcame from that incident. After that
    he started a Charitable Trust in his daughter name as “SWETHA EDUCATIONAL
    AND CHARITABLE TRUST”, Avadi and now he is successfully running a small
    Computer Training Institute in my area. What you say about this???

    ReplyDelete
  7. Sir,

    My Neighbor's daughter died in the above said incident few years back.
    After a great difficulty he overcame from that incident. After that
    he started a Charitable Trust in his daughter name as “SWETHA EDUCATIONAL
    AND CHARITABLE TRUST”, Avadi and now he is successfully running a small
    Computer Training Institute in my area. What you say about this???

    ReplyDelete
  8. Sir,

    My Neighbor's daughter died in the above said incident few years back.
    After a great difficulty he overcame from that incident. After that
    he started a Charitable Trust in his daughter name as “SWETHA EDUCATIONAL
    AND CHARITABLE TRUST”, Avadi and now he is successfully running a small
    Computer Training Institute in my area. What you say about this???

    ReplyDelete
  9. மிகவும் நல்லதொரு விழிப்புணர்வு பதிவு! நானும் சிலரை வாகனத்தில் செல்லும் போது எச்சரித்து இருக்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  10. வாழ்க்கையில ரொம்ப சந்தோஷமான தருனம் எதுன்னா.... நாம செய்ற வேலைக்கான அங்கீகாரம்தான்.... துப்பட்டா கட்டுரைக்கு நிறைய நண்பர்கள் போன் செய்து வாழ்த்துகளை தெரிவித்தார்கள்... அதுல ஒரு பெண்மணி எனக்கு அனுப்பிய விரிவான மெயில் உங்கள் பார்வைக்கு...

    பெண்கள் தங்கள் சுடிதார் துப்பட்டாவில் தயவு செய்து கவனம் கொள்ளவேண்டுமாய் கேட்டுக்கொள்ளுகின்றேன்...


    அன்புள்ள ஜாக்கி,
    வேறு யாருக்கோ அல்ல. நான் அப்போது உடுமலையில் இருந்தபோது எனக்கு நடந்த சம்பவம்.செகண்ட் ஷோ சினிமா பார்த்துவிட்டு என் அக்கா மகனோடு டூவிலரில் (Supraன்னு ஒரு வண்டி இருந்தது) வரும்போது ஷிபான் சேலை சக்கரத்தில் சிக்கி அவன் சுதாரித்து வண்டியை நிறுத்துவதற்குள் பத்து இருபது அடி இழுத்துச்செல்லப்பட்டு முகம், கை கால்கள் எல்லாம் சிராய்ப்பு. சக்கரத்தில் மாட்டிக்கொண்டிருந்த சேலையை இழுத்தால் வரவே மாட்டேன் என்கிறது. முழங்காலுக்குக் கீழுள்ள சதையில் ஒரு கயிறு போல சுருண்டு சிக்கிக் கொண்டு வரமாட்டேன் என்கிறது. இழுத்தால் இன்னும் இறுகிக்கொண்டு கழுத்தறுபட்ட ஆடுபோல் நான் கதற, என் அக்கா மகன் செய்வதறியாது திகைக்க, அந்த வழியாக வந்த ஒருவர் வண்டியிலிருந்து ஆக்ஸா பிளேடு எடுத்துக் கொடுத்து சேலையை அறுத்தபின்னால் பார்த்தால் சேலை முழங்காலுக்கு மேலே இருக்கிறது. (நல்லவேளையாக அகாலநேரமானதால் ரோட்டில் அதிக மக்கள் இல்லை) தன்னோட ஷர்ட்டைக் கழட்டி என் முழங்கால் மேல் போட்டு, நடுங்கிக் கொண்டிருந்த என்னை அந்த ராத்திரியில் ஜி.எச்.க்கு கொண்டுபோய்...ஒரு சின்ன அஜாக்கிரதையால் ஒரு வாரம் நான் பட்ட அவஸ்தை... அப்பப்பா...அதற்குப்பிறகு யாராக இருந்தாலும் இப்படி அஜாக்கிரதையாக செல்பவர்களை நான் வலியப்போய் எச்சரிக்கத் தவறுவதேயில்லை. இங்கே தில்லியில் பெண்கள் கொஞ்சம் உஷாரானவர்கள்தான். நம் ஊர்ப் பெண்களைப் போல் புடவைத் தலைப்பை நீ...ளமாக விடுவதில்லை. குளிர்காலத்தில் பின்னால் உட்காரும் பெண்கள் சால்வையை (ஸ்டால் என்ற சால்வை நூல் நூலாய் தொங்கும்) தொங்கவிட்டுச் செல்வதைப் பார்க்கும்போது பதைபதைப்பாய் இருக்கும்.


    உங்களோட ப்ளாக்கில் கமென்ட் பண்ண முடியவில்லை. அதனால்தான் மெயில் பண்ணுகிறேன்.


    -ஷமீம்

    ReplyDelete
  11. தகவலுக்கு நன்றி :)

    ReplyDelete
  12. இது மாதிரி டூ வீலரில் செல்பவரிடம் விரட்டி சென்று ,''ஷால் வீலில் மாட்ட போகிறது,'' என எச்சரிப்பாய்,அதே சமூக உணர்வு இன்றும் தொடர்கிறது. நன்றி

    ReplyDelete
  13. மிகவும் பயனுள்ள விழிப்புணர்வுப் பதிவு..உங்களுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் தகும்..

    ReplyDelete
  14. மிகவும் கருத்துள்ள ஒரு பதிவு. நாங்கள் ஸ்கூட்டரில் போகும் போது எனக்கு முன்னால் போகும் யாருடைய துப்பட்டா பறந்தால் சிறிது வேகமாக போய் துப்பட்டாவை சரி செய்து கொள்ளுமாறு சைகையில் அறிவித்து விட்டு தான் செல்வேன். சமூக நலனில் மிகவும் அக்கரை கொண்ட என் தோழி எனக்கு சொல்லிக் கொடுத்த பாடம். (In Delhi people used to say thanks or they will pass a friendly smile. But in Chennai, sorry no comments)

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner