(பாகம்/7)பெண் பிறப்புறுப்பில் பல் வளர்ந்தால்? (teeth) ஆங்கில பட விமர்சனம்

கண்டிப்பாக வயது வந்தோறுக்கான பதிவு மற்றும் படம்.









மேட்டர் செய்யும் இடத்தில் ஒரு பெண்ணுக்கு பல் வளர்ந்து விட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். என்ன ஆகும்.?

பொதுவாக வாயில் உள்ள பல் எதற்க்கு? கணமான பொருட்களை கடித்து பின்பு ருசிக்க அல்லவா.
அதுவே உங்கள் வாயில் தேவையில்லாமல் யாராவது விரல் விட்டால் நறுக்கென்று கடிக்கமாட்டீர்கள். அதுதான் அதேதான் இந்த படத்தின் மைய கரு.

உலகலாவிய அளவில் பெண்ணுக்கு எதிரான வன் கொடுமைகள் தினந்தோறும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவளை பாதுகாக்கும் ஆண் சமுகம் பாதுகாப்பு கொடுப்பதாக சொல்லி கொண்டு அவளை ருசி பார்த்து விடுகிறது.


இதில் நெருங்கிய உறவுகளான அண்ணன், தம்பி, கொழுந்தன், சில இடங்களில் அப்பா இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். பொதுவாக நிறைய ஆண்களுக்கு பெண் உறுப்பு போதையான விஷயமாக இருக்கிறது. அது போதை ஏறும் பட்சத்தில் மகள் என்று பார்க்காமல் , மருமகள் என்று பார்க்காமல் தன் இச்சையை தீர்த்துகொள்கிறான்.

ஒரு பெண் இடங்கொடுக்காமல் அந்த இடத்தை அடைய நினைப்பது உலகின் மிக கேவலமான செயல் என்பேன்.

இன்னும் சில அறிவு ஜிவிகள் ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல்எத்தனை பேர் இருந்தாலும் அவளை அடைய முடியாது என்று சொல்லபவர்களும் உண்டு.இரண்டு பேர் கையை பிடித்து கொண்டால் இரண்டு பேர் காலை பிடித்து கொண்டால் மேட்டர் ஓவர்.

இன்னும் முரண்டு பிடித்தால் அடி வயிற்றில் ஓங்கி ஒரு குத்து அவ்வளவுதான்.
( சாமி சத்தியமா எனக்கு எந்த அனுபவமும் இல்லங்க. ஒரு காட்டுவாசி ஆங்கில படத்தில் பார்த்தது.)

ஒரு பெண்ணின் பிறப்புறுப்பில் தெரிந்தோ தெரியாமலோ அல்லது தெய்வ குத்தத்துடனோ பல் முளைத்து விடுகிறது. அவள் சந்திக்கும் போராட்டங்களை சுவைபட, சற்று காமெடி சற்று திகிலுடன் சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

டான் பதினெட்டு வயது பருவ பெண். அப்பா, அம்மா மற்றும் அண்ணனுடன் வாழ்கிறாள். டான் கிருஸ்த்துவ மதத்தை பரப்பும் ஒரு பேச்சாளினி. அதனால் தான் எப்போதும் கற்புடன் வாழ வேண்டும என்ற கொள்கை உடையவள்.


டானின் அண்ணன் எப்போதும் செக்ஸ் பற்றிய எண்ணங்களோடு வாழ்பவன். சில நேரங்களில்அவன் அம்மாவின் எதிரே கூட செக்ஸ் வைத்து கொள்ள தயங்காதவன்.

அம்மா இரும்பும் போது கூட மருந்து கொடுக்காமல் செக்ஸ் வைத்து கொள்வான் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.

டான் இயல்பிலேயே கூச்ச சுபாவம் மிக்கவள். அவளுக்கு டாபே என்ற நண்பன் பழக்க மாகிறான். ஒரு நாள் டான், டாபே மற்றும் சில நண்பர்களுடன் ஒரு அழகான நீர்வீழ்ச்சிக்கு செல்கிறாள். சில நாட்கள் கழித்து அதே நீர்வீ்ழ்ச்சி்க்கு டாபேயுடன் செல்ல நேர்கிறது.

ஒரு தனிமையான தருணத்தில் அவளை டாபே அடைய நினைக்கிறான். அவள் வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்து சொல்லியும் கெஞ்சியும் வலுக்கட்டயமாக அவளை புணர்கிறான்.

புணர்ந்து கொண்டு இருக்கும் போதே டாபே வீல் என்று கத்துகிறான். பயத்தில் ஆத்திரத்தில் எழுந்தவனுக்கு பிறப்புறுப்பே இல்லை அது பக்கத்தி்ல் துண்டாக கிடக்கிறது.

அதன் பிறகு அவள் தன் உடம்பில் இருக்கும் வித்தியாசத்துக்கு விடை காண டாக்ட்ரை போய் பார்க்கிறாள், டாக்டர் அவளை சோதனை செய்வதாக சொல்லி வாசலின் தடவி கை உறையுடன் டரன் பிறப்புறுப்பில் கை விடும போது டாக்டரின் கை விரல்களும் துண்டாகி விடுகின்றன.

டானுக்கு பிறப்புறுப்பில் வளர்ந்த பல் நீக்கப்பட்டதா? இன்னும் எத்தனை பேருடைய “அது” துண்டானது என்பதை திருட்டு டிவிடி அல்லது பர்மா பஜார் மார்க்கெட்டில் தேடிபிடித்து பார்க்கவும்.

படத்தை பற்றிய சில சுவாரஸ்யங்கள்....




உலகம் எங்கும் ஆண் மனநிலை என்ன என்பதை அற்புதமாக காட்டியிருக்கிறார்இயக்குநர் மிட்செல்.

இப்படி பிறப்புறுப்பில் பல் முளைக்கும் விஷயம் மட்டும் உண்மையாக இருந்தால் உலகில் எந்த பெண்ணும் அவள் விருப்பம் இன்றி புணரமுடியாது. அதே போல் உலகம் எங்கும் பெண்ணுக்கான வன்கொடுமை நடக்காது .

விபச்சாரம் எங்கும் நடக்காது.

உலகில் உள்ள ஆண்கள் பெண்ணை பயபக்தியுடன் நடத்திதான் ஆகவேண்டும். இல்லை என்றால் ஆணின் மேட்டர் கட் செய்யப்படும்.

ஜனத்தொகை உலகில் மட்டுப்படுத்தபடும். இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.

படத்தின் கிளைமாக்ஸ் சூப்பரோ சூப்பர். படம் பார்த்த ஜீவன்கள் பின்னுட்டத்தில் பதில் சொல்லி மகிழ வேண்டுமாய் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.



படத்தில் இந்த சப்ஜெக்ட்டுக்கு எந்த அளவுக்கு வேண்டுமானாலும் விரசம் காண்பித்து இருக்கலாம் ஆனால் அப்படி ஏதும் இல்லை. இதுவே ஒரு நல்ல இயக்குனருக்கான தகுதி.
இந்த படம் சுடன்ஸ் பிலிம் பெஸ்ட்டிவலில் இந்த படம் வெற்றி பெற்ற படம்.

இந்த படம் பார்த்த போது எனக்கு தோன்றிய எண்ணம் என்னவென்றால் உலகம் எங்கும் இருக்கும்பெண்களுக்கு பல் முளைக்கிறதோ இல்லையோ. இலங்கையில் உள்ள தமிழ் பெண்களுக்கு பல் முளைத்தால் சிங்கள ராணுவத்தின் கொடுர தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள ஏதுவாக இருக்கும் அல்லவா?. இது பைத்தியக்காரதனமான எண்ணம்தான் என்ன செய்வது.

இந்தியன் படத்தில் சுஜாதா வசனம் போல்.
புத்திக்கு தெரியும் விஷயம் மனதுக்கு தெரிவதில்லை.



Genres: Suspense/Horror and Teen
Running Time: 1 hr. 27 min.
Release Date: January 18th, 2008 (limited)
MPAA Rating: R for disturbing sequences involving sexuality and violence, language and some drug use.
Distributors:
Lionsgate, Roadside Attractions
U.S. Box Office: $346,342

(சன் டிவி)மாறன் சகோதரர்கள் சிந்திப்பார்களா???????


கலைஞரின் மனசாட்சியாக இருந்தவர் மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன். கடைசி வரை மாறன் தேவர் மகன் கமலஹாசன் போல் கலைஞரை எதிர்த்து பேசியதே இல்லை.

அவ்வப்போது கோபதாபங்கள் மாறனுக்கும் மாமா கலைஞருக்கும் ஏற்ப்பட்டாலும் ஒரு வாரம் கோபித்து கொண்டு மாமா வீட்டுக்கு வராமல் அப்புறம் தானே வந்து சமாதானப் படுத்திக்கொள்வார். எனென்றால் திட்டியது மாமா தானே?. ரோட்டில் போகிறவர் இல்லையே.

18 வருடங்களுக்கு முன்பு பூமாலை வீடியோ பத்திரிக்கை ஆரம்பித்து அதில் சினிமா செய்திகள் இயக்குநர் மற்றும் நடிகர் நடிகை பேட்டிகள் போன்றவையும் சினிமா தொடக்க விழாக்களையும் தொகுத்து வீடியோ கேசட்டாக தமிழகம் எங்கும் உள்ள வீடியோ கடைகளுக்கு வினியோகித்தார் கலா நிதி மாறன். அப்போது கடலூரில் ஒரு வீடியோ கடையில் நான் வேலை செய்துவந்தேன்.


ஆனால் வீடியோ கேசட் கடை காரர்கள் ஒன்று வாங்கி நிறைய காப்பி போட்டு விற்க்க அது தோல்வியில் முடிந்தது.

அதன் பிறகு சன் டிவி ஆரம்பித்து அது தமிழகத்தில் இன்றும் கோலாச்சி கொண்டு இருப்பதை யாவரும் அறிவர். அதற்க்கு கலாநிதி மாறனின் வியற்வையும் உழைப்பும், அவரின் அறிவும் திறமையுமே காரணம் என்றால் அது மிகையாகாது.

எல்லோருக்கும்தான் அறிவும் உழைப்பும் இருக்கிறது.
எல்லோராலும், எல்லோருக்கும் சாத்திய படுகிறதா? சாத்தியப்படாது. எனென்றால், திமுக என்ற அரசியல் செல்வாக்கு மட்டும் இல்லையென்றால் ஆசியாவின் இளம் தொழில் அதிபர் பட்டம் கிடைத்து இருக்குமா?


ஜெயா டிவிக்கு கூட அரசியல் செல்வாக்கு இருந்தது.
ஆனால் வியாபார உத்தி தெரிந்தவர் அங்கு யாரும் இல்லை அதனால் அது பெரிய அளவில் சோபிக்கவில்லை.

திமுக செல்வாக்கு உள்ள டிவி என்பதாலும் பொதிகைக்கு மாற்று வேண்டும் என்பதாலும் சன் கோலாச்ச ஆரம்பித்தது.


திமுக ஆதரவு டிவி என்பதலே கழகத்தினர் அதனை பார்த்து ரசித்து கொண்டாடினர்.


இப்போது இதன் இயக்குனர்கள் சொல்வது போல் நடுநிலை என்ற வார்த்தை மட்டும் 18 வருடங்களுக்கு முன்பு உபயோகப்படுத்தி இருந்தால், அறிவாலயத்தில் மட்டும் இல்லாமல் இருந்து இருந்தால், அது மட்டும் கோடம்பாக்த்தின் எதாவது ஒரு சாலையில் இருந்து இருந்தால்,இன்நேரம் சன் ஆபிஸில் வன்முறை வெறியாட்டம் நடந்து மதுரை தினகரன் பத்திரிக்கை கதி ஏற்பட்டு இருக்கும்.


மாறன் சகோதர்ர்கள் அப்போது அறிவாலய கோட்டைகுள்ளே வளர்ந்தார்கள். திமுக அரசியல் கேடயத்தை வைத்து மேலும் மேலும் முன்னேறினார்கள். அப்போது அவர்கள் நடு நிலை பேசவில்லை. பேசமாட்டார்கள் வியாபார உத்தியில் பேசவும் கூடாது. பேசியிருந்தால் அறிவாலய கோட்டையில் இருந்து அப்புறபடுத்தி இருப்பார்கள்.


தயாநிதி மாறன் யார்?
சைதை கிட்டு ,வெற்றி கொண்டான் போல் ஏதாவது கட்சி பொது கூட்டத்தையோ அல்லது கட்சி செயல்பாடுகளையோ மேடையில் பேசியவரா? இல்லை,
மாறன் இளைய மகன் அவ்வளவே.


கலைஞர் கைதின் போது முரசொலி மாறன், மத்திய அமைச்சராக இருந்த போதிலும்,
அந்த வயதிலும் வேட்டி அவுந்து வெள்ளை நிக்கர் வெளியே தெரிய போலிஸ் அடித்து இழுத்து போன போது, தன் தலைவனை காக்க போராடிய வேகம் மாறன் மகன்களிடம் எங்கு போனது.


வைகோ,
என் அப்பா கைதின் போது பழப்பு காட்டியவர் என்று சொல்லி சன்னில் காட்டாமல் விட்டதால்,
அந்த ஆளும் புழுங்கி புழுங்கி கடைசியில் ஜெ பக்கம் போனார்.
அப்படி அவர் போகாமல் இருந்து இருந்தால் இன்று ஜெயா டிவியில் மைனாரிட்டி திமுக என்ற வார்த்தை வந்து இருக்குமா? இப்போது என்னடாவென்றால் திமுக வெற்றிக்கு நாங்கள் காரணம் என்று நீங்கள் இப்போது சொல்கிறீர்கள்.


நீங்களும் காரணம்தான் அது மறுப்பதற்க்கில்லை அது உங்களின் செஞ்சொற்று கடன். அது உங்களின் கடமையும் கூட.

ஒரு சாதாரண திமுக தொண்டனுக்கு இருக்கும் கடமையை விட உங்களுக்கு அதிகமான கடமை இருக்கிறது .இன்னும் எழெழு ஜென்மத்துக்கு அந்த கடமை இருக்கிறது.

அரம்பத்தில் இருந்தே நடுநிலமை என்றால் அதுதான் உண்மையான ஆட்டம் இப்போது நடுநிலமை என்பது அழுகுனி ஆட்டம். அதைதான் அண்ணன் தம்பி இருவரும் செய்கிறீர்கள்.


நடுநிலை என்ற சொல்லோடு நீங்கள் சினிமா விமர்சனம் செய்து இருந்தால் எத்தனையோ படங்கள் ஓடி இருந்து இருக்கும் உங்களிடம் விற்க்காத படங்களை,
தமிழ் நாட்டில் இப்படி ஒரு படமே வரவில்லை என்று பொதுமக்கள் என்னும் அளவுக்குதானே படங்களை விமர்சனம் செய்வீர்கள் செய்து இருக்குறீர்கள் . உங்களாலும் தமிழ் திரைப்ட உலகம் அழிந்து என்றால் அது மிகை இல்லை


தமிழகத்தின் எல்லா பெட்டிகடைகளிலும் கடன் அன்பை முறிக்கும் என்று எழுதி வைப்பது போல்,
நீ வாழ பிறரை கெடுக்காதே என்ற அற்புதமான வாசகம் ஒன்று உண்டு. அது உங்களுக்கு தெரிய நியாயமில்லை.


ஒரு வேண்டுகோள் உங்கள் நடுநிலமைகளை கலைஞர் எனும் 85 வயது கிழவன் இறந்ததும் வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போதும் எப்போதும் நினைவு வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் உங்கள் அறிவால் சூட்சமத்தால் இந்த பெரிய வெற்றியை பெற்றுள்ளீர்கள். ஆனால், திமுக அரசியல் செல்வாக்கு மற்றும், அறிவாலய கோட்டையை கேடயமாக பயன் படுத்தி வளர்ந்தீர்கள் என்பதை மறவாதீர்கள் சகோதரர்களே.


வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா என்று திமுக பொது கூட்டங்களில் கூம்பு வடிவ ஒலி பெருக்கியில் ஹனிபா கணீர் குரலில் கேட்டு இருக்கிறேன். அது கலைஞர் விஷயத்தில் உண்மையும் கூட.


வளர்த்த கடாக்களுக்கும், வளரும் கடாக்களுக்கும் கலைஞர் மார்பு என்றால் கொள்ளை பிரியம்..............


அன்புடன்/ ஜாக்கிசேகர்

என் சக பதிவர்களுக்கும் என் பதிவை வாசிப்பவர்களுக்கும் என் நன்றிகள்


நேற்றுதான் எழுத தொடங்கியது போல் இருக்கிறது . ஆனால் அதற்க்குள் எவ்வளவு பிரச்சனைகள், எவ்வளவு சந்தோஷங்கள்.

என் எண்ணத்தை இந்தபூமியில் வாழும் பல லட்சக்கணக்கான தமிழர்கள் படித்து பத்து பதினைந்து நிமிடத்தில் பதில் பின்னுட்டமாக போடும போது நம் எழுத்துக்கு உடன்கொடுக்கப் படும் வரவேற்ப்பு எந்த எழுத்தாளனுக்கும் கிடைக்காத வரப்பிரசாதம் என்பேன்.

அதே போல் தவறு என்றால் உடன் அந்த தவற்றை சுட்டிக்காட்டும் வேகமும் எனக்கு ரொம்பவும் பிடித்தமானது.

பதிவு எழுத ஆரம்பித்து அதற்க்குள் 100 பதிவாகவிட்டது. இன்னும் நிறைய எழுத ஆசைதான் ஆனால் என்ன செய்ய நேரம் கிடைப்பதில்லை. இருப்பினும் இந்த மூன்று மாதத்தில்100 எனும் போது சற்று மலைப்பாகவும் , சந்தோஷமாகவும் இருக்கிறது.

இந்த நல்ல விஷயத்தை எனக்கு அறிமுகப்படுத்திய வலைபதிவர் நித்யகுமாரன் என்றென்றும் என் நன்றிக்கு உரியவர்.

தொடர்ந்து என் பதிவுகளை வெளியிட்டு வரும் தமிழ் மனம் மற்றும் தமிழ் வெளி, தமிலிஷ் போன்ற திரட்டிகளுக்கும், தொடர்ந்து என் எழுத்துக்களை படித்து தொடர்ந்து ஆதரவு கொடுக்கும்

மங்களுர் சிவா

வெண்பூ

வால்பையன்

நித்யகுமாரன்

குண்டுமாமா

போன்றவர்களுக்கு என் இதயம் கனிந்த நெஞ்சார்ந்த நன்றிகள்.

அதே போல் அதிஷா, முரளி கண்ணன், கிரி, போன்று என் வலைபதிவை படித்து தொடர்ந்து பின்னுட்டம் இட்டு என்னை ஊக்கப்படுததும் சக பதிவர் அனைவருக்கும் என் நன்றிகள்.


அமெரிக்காவில் தொடர்ந்து என் எழுத்தை தொடர்ந்து வாசிக்கும் நண்பர்களுக்கும் மற்றம் உலகம் எங்கும் காற்றை போல் வியாபித்து இருக்கும் தமிழ் சொந்தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இந்த சுவாரஸ்யமான எழுத்தை எழுத முக்கிய காரணம் என் அம்மமா ஜெயலட்சுமி என்னை சிறு வயதில் அதிகம் வாசிக்க கற்றுகொடுத்ததே முக்கிய காரணம் என்பேன் .


அதே போல் கடலூர் திருப்பாதிரிபூலியூர் ராமகிருஷ்னா பள்ளியில் உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் கற்றுக் கொடுத்த ஒன்றாம் வகுப்பு ஆசிரியை ரோஸ்லின் டீச்சருக்கும்,

கதை படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய தினத்தந்தி சிந்துபாத் எழுதும் சாகா வரம் பெற்ற எழுத்தாளருக்கும்,

பாக்கெட் நாவல் அறிமுகபடுத்தி தமிழகத்தில் படிப்பு சுவை ஏற்படுத்திய பாக்கெட் நாவல் அசோகனுக்கும்,

பத்தாம் வகுப்பு படித்த என்னை கிரைம் நாவல் படிக்க வைத்த எழுத்தாளர்கள் ராஜேஷ்குமார் அவர்களுக்கும், சுபா, பட்டுகோட்டைபிரபாகர் அவர்களுக்கும்.


எழுத்தின் சுவை மேலும் கூட்டி உலகம் பற்றி அறிவை விசாலப்படுத்திய எழுத்தாளர் ஏகலைவன் சுஜாதாஅவர்களுக்கும்,

வாழ்க்கை பற்றிய அறிவை புகட்டிய எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கட்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்

தமிழ் டைப்பில் என் சந்தேகங்களை தீர்த்து வைக்கும் என் தங்கை சுதாவடமலைக்கும்,

எப்போதும் கம்யூட்டரே கதியா? என்று கேள்வி கேட்டு வெறுப்பு ஏற்றாமல் என் எழுத்தை தொடர்ந்து வாசித்து நல்ல எழுத்துக்களுக்கு வாழ்த்து உடன் தெடரிவித்து ஊக்கப்படுத்தும் என் மனைவி சுதா சீனிவாசன் என்றென்றும் என் நன்றிக்கு உரியவர்கள்

சிறுவயதில் ஏழ்மை குடும்பத்தில் பிறந்து ஹாலிவுட் வசூல் சாதனைகளை முறியடித்த என் இன்ஸ்பிரேஷன் ஹாங்காங் நடிகர் ஜாக்கிசானும் என் நன்றிக்கு உகந்தவர்


தொடர்ந்து எழுத பலத்தையும் அறிவையும் கொடுக்கும் எல்லாம் வல்ல பரம் பொருளுக்கு என் நெடுஞ்சான் கிடையான நன்றிகள் பல.

அன்புடன்/ஜாக்கிசேகர்

பதிவர்கள் பதறியதை போல் வாரணம் ஆயிரம் அந்த அளவுக்கு மோசமில்லை....





நேற்று இரவு சென்னை சத்தியத்தில் வாரணம் ஆயிரம் படம் பார்க்க நானும் என் மனைவியும் சென்றோம்.

கற்றது தமிழில் ஒரு வசனம் வரும்சென்னையில இரண்டு பேர்தான் இருக்கான். ஒன்னுசத்தியம் தியேட்டர் உள்ள இருக்கறவன்.
இன்னொருத்தன் சத்தியம் தியேட்டர் வெளியில இருக்கறவன். நாரும் வெளியில இருக்கற ஜாதிதான். ஆனா நல்ல படம் வந்த அந்த தியேட்டர்ல பாக்கறதுதான் எனக்கு வசதி. எவன் தலையும் மறைக்காது, எவனும் நம்ம தலைமேல கால வச்சி படம் பார்க்க மாட்டான்.

ஒரு பெண் நல்ல பெரிய மார்புடன் டி சர்ட்டில் இருந்தாள்
stop thinking என்று டி சர்ட்டில் எழதி இருந்தாள் அதனாலே என் கற்பனை அதள பாதாளத்துக்க சென்றது. புது மனைவி என்னை கையை கிள்ளி எச்சரித்தால்.

சத்தியம் தியேட்டர் கார்ப்பரேட் கம்பெனி போல் மாறிவிட்டது. நமக்குள் ஒரு விதமான தாழ்மனப்பான்மையை அது ஏற்படுத்துகிறது என்பது நிஜம் .வந்த எல்லா பெண்களும் ஒரு வித அலட்டலுடன் இருக்கிறார்கள்.

சரி படத்தை பற்றி சில வரிகள்.....


இறந்து போன தந்தையையும் அவர் காதலையும் தனக்காக தன் தந்தை எந்தளவுக்கு புரிந்து விட்டு கொடுததார் என்பதையும் மகனின் நினைவுகளோடு விரிவதுதான் படத்தின் கதை.

பதிவர்கள் பதறிய அளவுக்கு படம் அந்த அளக்கு மோசமில்லை என்பதே நிதர்சன உண்மை.

தவமாய் தவமிருந்து, பாரஸ்ட்கம்ப் போன்ற படங்களை ஞாபகபடுத்தினாலும்.கம்பேர் பண்ணக்கூடாது.

காப்பி அடிப்பது நம்மவர்களுக்கு கை வந்த கலை என்றாலும் அந்த பழைய கள்ளை எப்படிபுதிய மொந்தையில் ஊற்றி கொடுக்கிறார்கள் என்பதே முக்கியமானது.



காதல் படத்தின் கதை என்ன?
பணக்கார பெண்ணும் ஏழை பையணும் காதலிப்பதுதான் கதை.
இது தான் ஒன்லைன் ஆடர். ஆனால் அந்த படத்தை எப்படி பிரசன்ட் பண்ணினார்கள் என்பதே முக்கியம்.


வாரணம் ஆயிரம் படம் அந்தளவுக்கு மெனெக்கெட்டு இருந்தாளும் இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் கோட்டாவியுடன் கண்ண்னில் நீர் வருவதை தவிர்க்க முடியவில்லை.

முதல் பாதியில் படம் ரொம்ப அற்புதம் பழகி போன கதைதான் என்றாலும் அதை கொடுத்த விதத்தில் கௌதம் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார் .

தவமாய் தவமிருந்து படம் குப்புசாமி அவர் தந்தையை பற்றிய படம் என்றால் வாரணம் ஆயிரம் சுரேஷ் அவர் தந்தை பற்றிய படம் எனலாம் .
குப்புசாமி தந்தை பற்றி படம் எடுக்கும் போது சுரேஷ் பற்றி படம் எடுக்க கூடாதா?

படத்தில் அசத்தலான இருண்டு பேர் சூர்யா மற்றொறுவர் சிம்ரன் அதுவும் அப்பா சூர்யா இறந்த போது சிம்ரன் நடிப்பு ரொம்பவும் அற்புதம்.


எப்படியாவது கௌதம் படத்திற்க்கு பணக்காரகளை கிடைத்து விடுகிறது.

இரயிலில் சமீரா ரெட்டியுடன் புரியும் ரொமான்டிக் சீன் ரொம்பவும் ரசிக்க தக்க அளவில் இருக்கிறது.

படத்தின் இசைதான் படத்திற்க்கு மிகப்பெரிய பலம்.

ஒரு காட்சிக்கும் மறு காட்சிக்கு டிசால் வ் டுயுரேஷன் எடிட்டிங்கில் வயிற்றெரிச்சலை ஏற்படுத்துகிறது.

அழகிய தீயே படத்தில் டைட்டானிக் படத்தை உல்ட்டாவாக சொல்வார்களே அது போல் சொல்லி இருக்கிறார்கள் என்று பொத்ததாம் பொதுவாக சொல்லி விட முடியாது.


கௌதம் படத்தின் பிற்பகுதியில் நிறைய கோட்டை விட்டு இருக்கிறார். எது எப்படி இருந்தாலும் படத்தை ரசிக்கதக்க அளவில் எடுத்துஇருக்கிறார் என்பதும் உண்மை


ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிகிறது பெரிய டைரக்டராக மாறி விட்டால் கதாநாயகன் காதலியை பார்க்க அமேரிக்காவுக்கும் போக வைக்க முடியும். ஆஸ்த்ரேலியாவுக்கும் போக வைக்க முடியும்.

மனது போர் அடித்தால் மனது சரியில்லை என்றால் காஷ்மீருக்கும் போக வைக்கமுடியும்.


அன்புடன்/ ஜாக்கிசேகர்

விலைமாதர்களை விட மோசமான வட இந்திய மீடியாக்கள்....

ஒரு காமெடி ஸ்ட்டோரி சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். ஆனால் சிரிக்க கூடாது. நம் வரி பணத்தில் படித்து அமெரிக்காவில் செட்டிலான ஒரு இந்திய அமெரிக்கனை பொருளாதார பிரச்சனையால் ஒருவன் சுட்டு கொன்று விட்டான் .

உடனே வட இந்திய பத்திரிக்கைகள் இதுவரை பதினெட்டாவது இந்தியனை சுட்டு கொன்று விட்டார்கள்.நம் இந்தியர்களுக்கு பாதுகாப்பு அமெரிக்காவில் கேள்வி குறியாக இருக்கிறது என்று கூப்பாடு போட்டன.

இதே இந்தியாவில் ஆச்சி இட்லி பொடியில் இருந்து வருமானத்துக்கு ஏற்ற தரமான சோப்பான பவர் சோப்பு வரை இந்தியாவில் வரி கட்டி வாழ்க்கை நடத்தும் தமிழக மீனவர்களை, இதுவரை 4000க்கு மேற்பட்டவர்களை இலங்கை ராணுவம் சுட்டு கொன்று இருக்கறது. ஆனால் இது பற்றி எந்த வட இந்திய பத்திரிக்கையாவது கவலை தெரிவித்து இருக்குமா?

இந்த நாட்டில் படித்தவன் உயர்ந்த ஜாதி என்றால் ஒரு சட்டம்,
படிக்காதவன் தாழ்ந்த ஜாதி என்றால் ஒரு சட்டம் என்பது இன்னம் இருக்கத்தானே செய்கிறது.


அன்புடன் /ஜாக்கிசேகர்

விடுதலைபுலிகளின் கதி பற்றி தினமலர் பத்திரிக்கைக்கு என்ன கவலை?


இன்று (16/11/08 )காலையில் தினமலர் நாளிதழின் வால் பேப்பர் பார்க்க நேர்ந்தது. பூநகரி கடற் படை தளத்தை இலங்கை ராணுவம் கைப்பற்றி வி்ட்டதால் ராஜபக்சேவை விட,நமது தமிழக நாளேடு தினமலர் வெற்றி கூத்தாடுகிறது.

தினமலர் பத்திரிக்கை நிறைய சமுக பிரச்சனைகளை அவர்களின் நக்கலோடு அலசினாலும் ஒரு இனம் பூண்டோடு அழிக்கப்ட்டு கொண்டு இருக்கும் போது தினமலரின் இந்த நக்கல் தேவை இல்லாதது.

விடுதலைபுலிகளின் கதி என்ன? என்று வால் பேப்பரில் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். தினமலரை பொறுத்தவரை அது தீவிரவாத இயக்கம். அவர்கள் எப்படி போனால் என்ன எவன் மயிரை புடுங்கினால் இவர்களுக்கு என்ன?

ஆக விடுதலைபுலிகள் கதி என்ன ? என்று அந்த கேள்வியோடு வால்பேப்பர் போட்டால் சர்க்குலேஷன் தமிழகத்தில் அதிகம் விற்க்கும் என்பதால்தானே. அந்த வால்பேப்பர்.
இது ஆடு நனைகிறதே என்று ஓநாய் வருத்தப்படட் கதையாக இருக்கின்றது. போதும் நீங்கள் வருத்தப்பட்டதும் கவலை பட்டதும்.

நீங்கள் நங்கநல்லுரில் நாலவது தெருவில் தெருவிளக்கு எரியவில்லை என்று எழுதுவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.



இந்த பொழப்புக்கு...........................................................................................................................................................................
..........................................................................................................................................................................
..........................................................................................................................................................................
.........................................................................................................................................................................
அவர் அவர்கள் கோபத்துக்கு ஏற்றது போல் கோடிட்ட இடத்தை நிரப்பிக் கொள்க.


அன்புடன் /ஜாக்கிசேகர்.

சட்ட கல்லூரி மாணவர்கள் உதை வாங்கும் போது போலிஸ் வேடிக்கை பார்த்தது சரியே...



போலிஸ் வேடிக்கை பார்த்தது சரி என்றே என் மனதுக்குபடுகின்றது. கடந்த காலங்களை புரட்டி பார்த்தோமானால் போலிஸ் சட்டகல்லூரி மாணவர்கள் மோதல் என்பது சக்காளத்தி சண்டையை விட கேவலமாகவே நடந்து இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

போனமுறை கூட ஹாஸ்டலில் கலவரம் என்றதும் தடியடி அடித்து கலைத்தது போலிஸ்.
எப்படி எங்கள் வளகத்துள் போலிஸ் வரலாம் எங்களுக்குள் சண்டை என்றால் நங்களே தீர்த்து கொள்வோம் நீங்கள் உள்ளே வர தேவையில்லை என்றும் இந்த கலவரத்தின் போது தடியடிக்கு உத்தரவு இட்ட போலிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும என்று இதே சட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டம் எல்லாம் நடத்தினார்கள்.

அப்படி கலவரத்தை கட்டு படுதத வந்தவனை நீ யோக்கியம் இல்லை எப்படிஉள்ளே வரலாம். என்றால் எவன் உள்ள வந்து காப்பாத்துவான்.




இப்போது அதே வளாகத்தில் நடந்த சண்டையில் உள்ளே போனால் நாங்க வெட்டிக்குவோம் குத்திக்கிவோம் உங்களுக்கு எனன வந்தது என்று திரும்பி போலிஸ் மீதே பபழியை போடுவார்கள் அதனால்தான் போலிஸ் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது.


பொதுவாக சட்டட கல்லூரி மாணவர்கள் என்றால்அராஜகத்தின் மொத்த உருவமாகதான் நமக்கு காட்சி அளித்து இருக்கிறார்கள். சட்டம் படிப்பதால் தான் என்னவோ பெரிய படுங்கிகள் போல்தான் அவர்களை எண்ணிக்கொள்வார்கள். வக்கிலாக மாறினால் கூட இந்த மனநிலை மாறாது. எப்போது பார்த்தாலும் ஸ்டிரைக் அடிப்பார்கள்.




பாரிஸ் முனை பகுதிக்கு போய் நிம்மதியாக பொருள் வாங்கி வரமுடியாது. ஆன் உன்னா உடனே ரோட்டுக்கு வந்து ஸ்டிரைக் செய்வார்கள்.

இந்த உதை கொடுத்த சம்பவத்தை பார்த்த எந்த பாரி முனை வியாபரியும் சந்தோஷப்பட்டே இருப்பான்.. அந்தளவுக்கு நொந்து நுடுல்ஸ் ஆக்கி இருக்கிறார்கள் சட்ட கல்லூரி மாணவர்கள்.

அதே போல் அந்த கல்லூரியில் காட்டு ஆற்று வெள்ளம் போல் கலந்து இருக்கும் ஜாதி அரசியல். எந்த நிலைபாட்டை எடுததாலும் அரசியல் தலைவர்கள் சப்போட்டுடன் எதிர்க்கும் ரவுடி மாணவர்கள்.

இந்த முறை உதைவாங்கும் போலி்ஸ் கை கட்டி வேடிக்கை பார்க்க காரணம் முன்பு இவர்கள்செய்த அராஜகத்துக்கு அதுவும் அவர்களுக்கு உள்ளே அடி கொடுதது அடி வாங்கும் போது வேடிக்கை பார்த்தது அவ்வளவுதான்.


இந்த சம்பவம் நடந்த மறுநாள் கோவை மாணவர்கள் அராஜகம் செய்ய கல்லூரி வளாகத்தில் போலிஸ் நுழைய எந்த போலிஸ் உள்ளே நுழைந்தாளும் தற்கொலை செய்து கொள்வேன் என்று சில மாணவர்கள்மாடி மேல் ஏறி ஷோ கட்டியதைதமிழ் மக்கள் எல்லோருக்கும் சன்நுயுஸ் காட்டியது. அதே போல் வேறு மாவட்டத்தில் நடந்த சட்ட கல்லூரி கலவரத்துக்கு சமாதானம் செய்ய போன இன்ஸ்பெக்டரை நெட்டி தள்ளி வெளியேற்றியது இதே மாணவ சமுதாயம்தான்.





பொதுவாக சட்ட கல்லூரிக்கு என்று வயது வரம்பு என்று ஏதும் இல்லை என்ற காரணத்தால் எவருக்கும் மாணவர்கள் என்ற எண்ணம் வரு வதில்லை அது மட்டும் அல்ல ஜாதி அரசியல் போன்றவை கலக்கும் போது அது இன்னும் அடங்கும் தன்மையை இழந்து விடு்கின்றது.

எவ்வளவு காரணம் சொன்னாலும் மிருகத்னமாக ஒரு மனிதன் உதை வாங்கும் போது பழைய கணக்கை தீர்ப்பதாக கை கட்டி வேடிக்கை பார்த்த போலிஸ் கண்டிக்கதக்கவர்கள்தான்.

கல்லுரி வளாகத்துக்குள் போலிஸ் வந்தால் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்ற காரணத்துக்ககாக அதை பாகிஸ்தான் பார்டர் போல் நினைத்து எல்லை மீறாத போலீஸ், அதுவும்கை கட்டி வேடிக்கை பார்த்த போது அவர்கள் காட்டு மிராண்டி மனநிலையில் இருப்பது போலவே தெரிகின்றது .

நான் கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.

சட்டம் படிக்க வந்தவன் கையில் கத்தி எப்படி வந்தது.
மாணவர்களின் பெற்றோர் தன் மகன் என்ன செய்கிறான் என்ற கேள்வி கேட்காமல் எப்போது வீட்டுக்கு வந்தாலும் கதவை திறந்து விடுவதும், கையில் காசு கேட்கும் போது எல்லாம் கொடுததால் இந்த மாதிரி பொறிக்கிதனம்தான் செய்யும்.
கலவரம் நடக்க போகிறது என்று ஒரு சன்டிவி கேமரா நிருபருக்கு தெரியும் போது கல்லூரி முதல்வர் என்ன மமாதா கோவிலில் மணி ஆட்டிக்கொண்டா இருந்தார்.

போலிஸை குற்றம் சொல்வதற்க்கு முன் மாணவர்கள் பெற்றோர் எல்லோரும் தண்டனைக்கு உரியவர்களே. அதே போல் இந்த சண்டையில் ஈடுபட்ட எல்லா மாணவர்களின் கல்வி தகுதியை உடனே ரத்து செய்ய வேண்டும் . அவர்கள் ஏதாவது ஆடுமாடு மேய்த்து பிழைத்து கொள்ளட்டும்.அந்த மாணவர்கள் படிக்க லாயக்கற்றவர்கள்


போதவாக ஒரு சொல்வடை உண்டு.

மாணவன் நல்லவன்
மாணவர்கள் கெட்டவர்கள்

அன்புடன் /ஜாக்கிசேகர்

சட்ட கல்லூரி மாணவர்கள் கோபம் நியாயமானது தானா?


சட்ட கல்லூரி மாணவர்கள் ஒரே கல்லூரியில் உடன் படிக்கும் மாணவர்களை கொலை வெறி தாக்குதல் நடத்தி மூன்றுமாணவர்களை நடை பினமாக்கி இருக்கிறார்கள்.எல்லோரும் இந்திய இறையான்மை காப்பபற்றுவதற்க்காக படித்து கிழிக்க இருப்பவர்கள்.


பிரச்சனை என்பது உப்பு சப்பு இல்லாத காரணமாகத்தான் இருக்கும்.
ஒன்றும் இல்லாத காரணத்திற்க்கே கொலை வெறி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள் என்றால்,
அதுவும் அடி பட்டு மயங்கியவனை பொலந்து கட்டும் இவர்கள் மனநிலையை பாருங்கள்.

படிக்கிற பையன் கையில் கத்தி இருக்க வேண்டிய அவசியம் என்ன? அப்படி இருக்கிறது என்றால் அது அப்படி என்ன தலை போககூடிய பிரச்சனை? அதற்க்கு வன்முறை ஒன்றுதான் தீர்வா?




அதே போல் என்ன இருந்தாலும் விடுதலைபுலிகள் ஆயுதம் தூக்கியது தவறு என்று நம்மவர்களில் படித்த பலர் சொல்ல கோட்டு இருக்கிறேன்.



படித்து சட்டத்தின் மூலம்எழை மக்களை காக்க வேண்டிய மாணவனின் கையில் கத்தி தடி போன்ற ஆயுதங்கள் . இந்தனைக்கு இலங்கை தமிழர்கள் போன்று பெரிய புலம் பெயர்ந்த வலியோ, சொந்த நாட்டில் அகதிகள் ஆக்கப்பட்டவேதனையோ ஏதும் இல்லாத மாணவர்கள் இவர்கள் சபிட்சமான வாழ்க்கை வாழ்ந்த இந்த மாணவர்களுக்கே இவ்வளவு கோபம் என்றால்? சொந்த நாட்டு மக்களை காக்க நினைத்த புலிகளுக்கு?


செருப்பு போட்டு இருப்பவனுக்குதான் அந்த செருப்பு கடிப்பதன் வலி தெரியும் என்பார்கள்.

பிறந்து வளர்ந்த நாட்டில் முன்றாம் தர குடிமக்களாக ஆக்கப்பட்டு, உரிமைகள் வேண்டும் என்று சாத்வீக முறையில் போரட்டாம் நடத்திய தமிழ் மக்களை நிராயுதபானியாக இருந்த போது அந்த கூட்டத்தில் கொலை வெறி தாக்குதல் நடத்தினார்களே சிங்களவர்கள், அப்போது எவ்வளவு கோபம் வந்து இருக்கும்.

காக்கும் என்ற இலங்கை அரசு கை கட்டி வெடிக்கை பார்க்கும் போது அந்த நாட்டு மக்கள் ஆயுதம் தூக்குவார்களா? மாட்டார்களா?

இப்போது கூட சட்டகல்லூரி மாணவர்கள் தாக்குதலை பக்கத்தில் வேடிக்கை பார்த்து கொண்டு நின்ற போலிஸ்சார் மீதுதான் போது மக்களின் ஒட்டு மொத்த கோபமும். அது போல்தான் ஒட்டு மொத்த தமிழர்களும்வெடிக்கை பார்த்த இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதங்கள் தூக்கினார்கள் இது பெரும் தவறா?


சின்ன பிரச்சனைக்கு கொலை வெறி தாக்குதல் நடத்தும் போது, தன் மனைவி தன் எதிரே கற்பழிக்கபடும் போதும், தன் தங்கையை எதிரில் ஆயுதம் வைத்து மிரட்டி கற்பழிக்க வைத்த போது எந்த அண்ணணும் பொங்கிதான் எழுவான்.


தன் சொந்த மக்கள் துரத்தி துரத்தி அடிக்கும் போது ஆவர்கள் ஆயுதம் தூக்கியதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் சென்னை சட்ட கல்லூரி மாணவர்கள் ஆயுதஙக்ளை தூக்கியது என்ன நியாயம்?

ஆனால் தொடர்ந்து தமிழில் சில ஏடுகள் தொடர்ந்து புலிகள் ஆயுதம் தூக்கியது தவறு என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.



எந்த பெரிய வேதனையையும் அனுபவிக்காதவனும் ஆயுதம் எடுக்கிறான். பெரிய இழப்புகளை சந்தித்தவனும் ஆயுதம் எடுக்கிறான்.

ஆனால் தெரிந்தோ தெரியாமலே நாம் அனைவரும் வன்முறை அரக்கனால் கட்டப்பட்டு இருக்கிறோம் என்பதே நிதர்சன உண்மை.


அன்புடன்/ ஜாக்கிசேகர்

(பாகம்/6) 13பேர் உயிரும் ஒரு துப்பாக்கி குண்டும்....


இருபது வருடங்களுக்கு முன்பு ஈவில் டெட் என்ற ஆங்கில படம் பார்த்து விட்டுவெளியே வந்த என் நண்பர்களிடம் கேட்டேன்

எப்படி மச்சான் படம் இருக்கு?
மச்சான் “பீ ”கழட்டிக்கிச்சுடா என்று பயத்தில் வயிறு கலக்குவதை அப்படி சொல்லுவார்கள்.

“பீ” என்ற வார்த்தை உங்களுக்கு புரியவில்லை என்றால் அதன்ஆங்கில வார்த்தை ஷிட்.
வேட்டையாடு விளையாடு என்ற படத்தில் சைக்கோ கொளையாளிகள் உபயோகப்படுத்தும் வாத்தைதான் அது.

அது போல் ஷிட் கழட்டிக்கும் படம்தான் “13டசாமேட்டி” என்ற பிரெஞ் மொழிப்படம்.



20 வயது சாபெஸ்ட்டின் எப்படியாவது பணம் ஈட்டி பெரிய நிலைக்கு உயர வேண்டும் என்ற ஆசை கொண்டவன்.
ஒரு வீட்டில் எடுபிடி வேலை சென்து வயிற்றை கழுவுகிறான் அந்த வீட்டின் எமானர் அதிகமான போதை பொருள் சாப்பிட்டதால் அவர் இறக்க நேர்கிறது. அனால் அவரை போலிஸ் கண்கானித்து கொன்டு இருக்கிறது இறந்த கணவனை அடக்கம் செய்த உடன் தன் கணவன் எதோ ஒரு விஷயத்தை தன்னிடம் மறைத்ததாகவும்அது என்ன என்று தெரியவில்லை என்ற அந்த பணக்காரரின் மனைவி சொல்வதை சாபஸ்ட்டின் கேட்கிறான். அந்த பணக்காரருக்கு வரும் கடிதத்தை செபஸ்ட்டின் மறைத்து வைக்கிறான்.



அந்த கடிதத்தி்ல் ஒரு ரயில் டிக்கட்டும் ஒரு ஹோட்டலின் புக் செய்யபட்ட அறை ரசீதும் இருக்கின்றது .

எதாவது ஒரு வகையில் மிக அதிகமான பணம் கிடைக்கும் என்ற காரணத்துக்காகதான் அங்கு செபஸ்ட்டின் செல்கிறான். அவனை போலீ்ஸ்ம் அவனை பின் தொடர்கின்றது.

அவன் அந்த கடிதத்தில் சொன்ன நேரத்துக்கு ஆள்ஆரவாரம் இல்லாத காட்டு பகுதியில் இறங்க வாரகை காரோட்டி அவனை ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கிறான்

அவன் சென்ற சில நிமிடங்களில் ஒரு தாடிக்காரன் காரில் வந்து 13 என்ற எண்னை காட்ட, செபஸ்ட்டின் அவனிடம் இருந்த 13 என்ற எண்னை காட்டியதும் செபஸ்ட்டி்னை காரில் ஏற்றிக்கொண்டு பல மைல்தூரத்துக்கு அப்பால் இருக்கும் காட்டு பங்ளாமுன் அந்த கார் நிற்க்க. இன்னும் பல கார்களில் பலகணவான்கள் இறங்குகிறார்கள்.
ஒருவயதான பணக்காரன் அந்த கார் ஓட்டி வந்த தாடிக்காரனிடம் என்ன சின்ன வயது பையனாக இருக்கிறான் என்று கேட்க ?

அவன் நாம் பயன் படுத்தும் சங்கேத வார்த்தைகள் சரியாக இருந்ததால் அவனை அழைத்து வந்தாக சொல்ல..

செபஸ்ட்டின் இடம் உனக்கு இந்த விளையாட்டு விளையாட சம்மதமா என்று கேட்கும் போது தனக்கு ஏதும் தெரியாது என் எஜமானுக்கு வந்த கடிதத்தை தான் எடுத்து வந்ததாக கூறுகிறான்.

எல்லா ஊரில் இருந்தும் ஆட்கள் வந்து விட்டதால் இந்த விளையாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று காட்டயப் படுத்த அது என்ன விளையாட்டு என்று தெரிய வரும் போது இந்த கட்டுரையின் முதல் பாராவில் வருவது போல் சபாஸ்ட்டி்னுக்கு ஷிட் கழுட்டி கொள்கிறது.

அது ரஷ்ய கிரிமினல்கள் ஒன்று சேர்ந்து விளையாடும் விளையாட்டு போட்டி.

மனிதாபிமானத்தை இலங்கை ராணுவம் எப்படி காலில் மிதித்து மனித உரிமை மீறுகின்றதோ அது போல் மனிதாபிமானத்தை மனித உரிமை மீறும் விளையாட்டு அது.

13 பேர் ரவுண்டாக நிற்க வேண்டும், அவர்களுக்க நடுவில் ஒரு குண்டு பல்பு தொங்கும் .




13பேர் கையிலும் ஒரே ஒரு துப்பாக்கி கொடுத்து அதன் உள்ளே ஒரே ஒரு குண்டு போட்டு அந்த துப்பாக்கி செம்பரை நன்றாக சுற்ற விட்டு ஒருவர் தலைக்கு பின் ஒருவர் துப்பாக்கி வைத்து ரப்பரி ரெடி ஜீட் என்றதும் அந்த குண்டு பல்பு எரியும் போது சுட வேண்டும். அதற்க்கு முன் அந்த பதிமுன்று பேரின் மீதும் பந்தயம் லட்சக்ணக்கில் கட்டி விளையாடும் விளையாட்டு. செத்தவர்களை ஓரம் தள்ளி விட்டுகடைசிவரை எவன் உயிரோடு இருக்கிறான் என்பதே விளையாட்டின் சுவாரஸ்யம்.
செபஸ்டின் உயிரோடு இருந்தானா?
செபஸ்ட்டினுக்க பணம் கிடைத்ததா?
அந்த வினையாட்டு போலிஸால் கண்டு பிடிக்கபட்டதா என்பதை திருட்டு டிவிடி அல்லது திருட்டு விசீடியில் கான்க.

படத்தை பற்றி சுவாரஸ்யங்கள்.

படம் முதலில் மெதுவாக ஆரம்பித்தாலும் பின்னால் நகம் கடிக்க வைக்கும் காட்சிகளுக்கு அந்த ஆரம்பம் தேவைதான்.

இந்த படம் 2005ல் வெளிவந்த படமாக இருந்தாலும் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டது.

கலரில் வந்து இருந்தால் இன்னும கூடுதலாக நகம் கடிக்க வைத்திருக்கும்



சாபஸ்ட்டினுக்கு என்ன ஆகும் என்பதை நிமிடத்துக்கு நிமிடம் நம்மை நகம் கடிக்கவும் சீட்டின் நுனிக்கே நம்மை அழைத்து சென்றது இயக்குநரின் திரைக்கதை வெற்றி.


உயிர் பயத்தில் விளையாட்டில் கலந்து கொள்ளதவர்களை போதை அதிகம் கொடுதது பயம் தெளிய வைத்து விளையாட வைப்பது ரொம்பவும் கொடுமையானது.


உயிர்பயத்தை அப்படியே செல்லுலாய்ிடில் பதின விட்ட இயக்குநர் பாராட்டுக்குறியவர்.


பின்னனி இசை அடக்கி வாசித்து துப்பாக்கி செம்பர்சுற்றும் சத்தத்தை கேட்க வைத்து குலை நடுங்க வைத்தது ரொம்பவும் அருமை.

இந்த படத்தை உங்கள் வீட்டு ஹோம் தியேட்டரில் நல்ல சவுண்டில் படம் பார்த்து விட்டு எனக்கு சொல்லுங்கள்.

பணம் ஜெயித்தவனிடம் கூட பணம் வாங்கும் போதும் அதை தூக்கி நாயிக்கு போடுவது போல் போட அதையும் நாய் போல் அந்த தாடிக்காரன் எடுத்துக்கொள்வது மனித தன்மையற்ற செயல்


அதிகாரம்,பணம் அதிகம் வரும் போது எதை பற்றியும் கவலை படாது எதற்க்கும் மனித மனம் துணியும் என்பதை ரொம்ப அற்புதமாக சொல்லி இருக்கும் இயக்நர் பாராட்டுக்குறியவர்


The film won the World Cinema Jury Prize at the 2006 Sundance Film Festival. It also won two awards at the 62nd Venice Film Festival



13 Tzameti is a 2005 film written and directed by Georgian filmmaker Géla Babluani. Tzameti is the Georgian word for thirteen. 13 Tzameti is the feature length directorial debut for Babluani. It also marks the acting debut of his younger brother Georges Babluani, who plays the film's protagonist Sébastien.









Music by The Troublemakers
Distributed by Palm Pictures
Release date(s) Flag of France February 8, 2006
Running time 86 min.
Language French
Budget


அன்புடன்/ ஜாக்கிசேகர்

இறையான்மை என்றால் என்ன? அந்த வார்த்தையை வைத்து எப்படி பொழப்பு நடத்தலாம்.


எழுத்தாளர் பட்டு கோட்டை பிரபாகர் அவர்கள் தொட்டால் தொடரும் என்ற அருமையான நாவலை எழுதினார் அதன் ஒவ்வோரு அத்தியாயத்திலும் காதல் என்பது என்று எழுதி விட்டு எதாவது எழுதுவார்

(உம்)
காதல் என்பது
வாயில் பிரஷ்உடன் கனவு கான்பது
காதல் என்பது
தபால்காரர் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருப்பது என்று எழுதி இருப்பார்

அது போல் இந்த இறையான்மை பற்றி எழுதினால் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்


இறையான்மை என்பது

1, அது பிங்பேக் தியரிபோல் புரியாதது.

2,அது காங்கிரஸ்காரர்கள் மட்டும் குத்துகை எடுத்து கொண்டு இருக்கும் சொல்.

3, இனி வரும்காலங்களிலும் அதை வைத்து காங்கிரஸ்காரர்கள் பிழைப்பு நடத்த
உதவ வேண்டிய சொல்


4 , காங்கரஸ்காரர்களான ஞானசேகரன் தங்கபாலு போன்றவர்கள் அந்த வார்த்தையை பயன் படுத்தியே பிழைப்பு நடத்தி பிழைக்கும் நாதியற்றவர்கள்.

5, இந்தியா, பங்களாதேஷ் தேசத்தில் மட்டும் காற்றில் பறக்க விட்ட சொல்.

6, இந்தியா டுடே மற்றும் தினமலர் இந்த இரண்டு பத்திரிக்கைகள் மட்டுமே அந்த சொல் படி நடப்பவை.

7, சுப்ரீம் கோர்ட் சொல்லியும் காவிரியில் கர்நாடக ஜலம் விடாததை பற்றி மேலுள்ள இரண்டு பத்திரிக்கைகளும்இந்திய இறையாண்மை பற்றி அலட்டிக்கொள்ளாதவை.

8,இறையான்மை மீறிய வைகோவை கூட்டனியில் வைத்துக்கொண்டே கைது செய்ய சொல்லி அறிக்கை வி்ட்டு தள்ளும் ஜெயலலிதா மிகவும் பாரட்டத்தக்கவர்.

9,இறையான்மை பற்றி பேசிக்கொண்டே இருக்கும் ஜெயலலிதா அரசு நிலமான டான்சி நிலத்தை வாங்கி நீதி மன்றத்தால் கண்டடிக்கப்பட்ட போது இந்திய இறையான்மையை காற்றில் பறக்க விட்டவர்

10, அந்த கட்சி எம் எல் ஏ எஸ்வி சேகர் இந்திய இறையபண்மையின் ஓட்டு மொத்த குத்தகைதாரர்.


11,சோ ராமஸ்சுவாமி இறையான்மை முகத்தில் முழிப்பார், இறையான்மையால் பல்துலக்குவார், இறையான்மை பெட்ஷீட்டால் போர்த்தி கொண்டு தூங்குபவர்.

12,நாம் போன்ற சாதரண மனிதாகள் எல்லாம் இறையான்மை சொல்லை உச்சரிக்க லாயக்கற்றவர்கள்

13, அது ஹிண்டு பேப்பர் வாசித்து ஐஐடியில் கோர்ஸ் முடித்து அடுத்த பிளைட்டில் அமெரிக்காக செல்லும் மேட்டுகுடி மக்கள் உபயோகப்படு்த்தும் சொல்
14, ஒரு வீட்டில் ஜெயா டிவி ஒடுகின்றது என்பதை வீட்டின்வெளியில் இருந்தே கண்டுபிடித்துவிடலாம். செய்தி நேரத்தின் போதுஇறையான்மை வார்த்தை நிமிடத்துக்கு 5முறை கேட்டால் சட்சாத் அது ஜெயாடிவிதான்.


15, இந்திராகாந்தி, எம்ஜி ஆர் போன்றவர்கள் விடுதலை புலிகளை வளர்த்து விட்டது மூலம் இறையான்மைக்கு துரோகம் செய்தவர்கள்

16,அந்த வார்த்தை பற்றி இன்னும் நிறைய எழுதலாம். ஆனால் நேரமின்மை காரணமாக பஞ்ச் டயலாக்குடன் முடிக்கிறேன்

17, இறையான்மை என்பது

பொங்கடா கொய்யாலுங்கலா வாயில் அசிங்கமா வருது.....


அன்புடன்/ ஜாக்கிசேகர்

பாகம்/5 அகதி வாழ்கை எப்படி இருக்கும்?


அகதியாக இருப்பது எவ்வளவு கொடுமையான செயல். அதுவும் கதியற்றவராக இருக்கும் போதுஇந்த படித்த நாகரிக உலகம் எப்படி எல்லாம் அந்த நாதி அற்ற கதியற்ற மனிதனை அலைகழிக்கிறது. இறையாண்மை என்ற பெயரில் அடிக்கும் கூத்துக்கள்அப்பப்பா கொடுமைடா சாமி.

அகதிகளின் வாழ்வு துயரங்களையும், அவர்களின் தாய் நாட்டு பாசத்தையும் தன் நாட்டு மக்களின் துயரம் பார்த்து ஏதும் செய்ய இயலாமல் அல்லல் படுவதும். தன் நாட்டு மொழியின் இரண்டொரு வார்த்தைகள் வெயிநாட்டுக்காரர் பேச கேட்டு புல்லரிப்பதும். தன் நாட்டு காலவரங்கள் என்று முடிவுக்கு வரும் என்று நித்தம் நித்தம் செத்து பிழைக்கும் கதியற்றவர்களின் வாழ்கை நிலை எவருக்கும் வர கூடாது.அது பற்றி இந்திய தமிழர்களுக்கு புரியாது. எனென்றால்

இந்திய தமிழர்கள் ஒருரூபாய்க்கு அரிசி வாங்கி வயிற்றை ரொப்பிக்கொள்ள முடியும்.

சுபிட்சமான வாழ்வு வாழ்வதால்
இழுப்பின் வலிகளை நம்மால் உணரமுடிவதில்லை. இரண்டு மணி நேர மின் வெட்டை நம்மால் தாங்க முடிவதில்லை. இப்படி சொல்லிகொண்டே போகலாம் .

அகதியாய் இருப்பவன் படும் பாடுகளை இவ்வளவு தத்ரூபமாக அழகாக சொன்னதில்லை என்பேன். படித்து விட்டால் பெரிய புடுங்கிகள் போல் நினைக்கும் சென்னைவாசிகளில் சிலர் இந்த படத்தை கட்டடாயம் பார்க்க வேண்டும்.
சட்டம் என்பது வேறு. மனிதாபிமானம் என்பது வேறு என்பதையும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மனிதனின் கேள்விக்குறியான வாழ்க்கை நிலையையும் மிக அற்புதமாக எதார்தத்துடன் காட்சி படுத்தி தன் ஒரு சினிமா பிதாமகன் என்பதை நிருபித்து இருக்கிறார் இயக்குநர்ஸ்பில்பெர்க்

படத்தின்

பெயர் டெர்மினல் படம் வெளியான ஆண்டு 2004
அதே போல் படத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் சத்தியம். நம்மில் எத்தனை பேர் செய்து கொடுத்த சத்தியத்துக்கு விசுவாசமாய் இருக்கிறோம்

விதி படத்தில் மேட்டர் முடிந்த உடன் பூர்ணிமா மோகனிடம் அப்ப நீங்க செய்த சத்தியம்?
சத்தியம் சக்கரை பொங்கல் வரட்டுமாடி பேதை பெண்ணே என்று மோகன் சொல்லுவார் இந்திய அரசியல் வாதிகள் சத்தியமும் சக்கரை பொங்கல் வகையை சார்ந்ததே.

படத்தின் கதையின் நாயகன் விக்டர் நவோஸ்கி (டாம்ஹாங்ஸ்)தன் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்துக்காக நாயாய் பேயாய் அலைவதும் ரொம்ப அற்புதமாகஅதன் அழகியல் மாறாமல் இயக்கிஇருக்கிறார்

விக்டர் நவோஸ்கி எனும் ஒருவன் ரஷ்யாவில் துண்டாடபட்ட நாடான க்ரோக்கிஷியாவில் இருந்து அமெரிக்காவின் நுயார்க் நகரில் இருக்கும் ஜான் எப் கென்னடி விமானநிலயத்தில் இறங்குகிறான் அவன் நியுயார்க் வந்ததன் நோக்கம் தன் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்திற்க்காக நியுயார்க் நைட்கிளப்பில் ஒருவரை சந்திக்க வேண்டும் அவ்வளவே.

அவன் கென்னடி விமான நிலயத்தில் இறங்கி வெளிவருவதற்க்குள் அவன் சொந்த நாடன க்ரோக்கோஷியாவில் உள் நாட்டு கலவரம் வெடித்து அரசாங்கம் கவிழ்ந்து விடுகிறது. இதனால் அவனின் சொந்த நாட்டு வீசா செல்லாமல் போகிறது.

அவன் திரும்பவும் சொந்த நாட்டிற்க்கு போகவும் முடியாது .அங்கே கலவரம்,நுயுயார்க் நகரத்தி்லும் கால் பதிக்க முரயாது எனெனில் கலவர நாட்டின் குடிமகன் அவன்நாட்டில் அவனுக்கு கொடுத்த வீசாகொடுத்த கவர்மென்ட் கலைந்ததால் அதுவும் முடியாது.

அவன் கென்னடி ஏர்போட்டில் இருந்து வெளியே ஒரு அடி எடுத்து வைத்தால் கூட கைது செய்து சிறையில் தள்ள ரெடியாக இருக்கிறது கென்னடி ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆட்கள்.


அவன் அந்த ஏர்போர்ட்டிலேயே காலம் தள்ள வேண்டிய நிலமை. அவன் எங்கு தங்குவான் அவனுக்குஎப்படி சாப்பாடு கிடைக்கிறது அதற்க்கு அவன் என்ன என்ன காரியங்கள் செய்கிறான் என்பதை சுவைபட சொல்லிஇருக்கிறார் இயக்குநர் இதற்க்கு நடுவில் விமான பணிப் பெண்ணான காத்தரீன் ஜீட்டா ஜோன்ஸ் மீது காதல் வேறு..


படித்தவர்கள்சட்டம் இருக்கிறது என்ற காரணத்தால் எப்படி எல்லாம் ஆட்டம் போடுகிறார்கள் என்பதையும் அதிகாரவர்கத்தில்இருப்பவர்களுக்கும்கீழ் நிலை மக்களுக்கும் உள்ளஇடைவெளிகளை மிக அற்புதமாக சொல்லி இருக்கிறார்.ஸ்பில்பெர்க்

அந்த ஏர்போட்டில் காலம் தள்ளும் போது அவனுக்கு நண்பர்களாக குப்தா எனும் இந்திய கிழவர்மற்றும் சிலரும் நட்பாகிறார்கள்.

ஒரு கட்டத்தில் அந்த கென்னடிஏர்போர்ட்டில் விக்டர் நவோஸ்க்கியை தெரியாதவர்களே இல்லை என்ற நிலமை. அதே போல் எர்போர்ட் அத்தாரிட்டி ஆபிஸர் விக்டர் நவோஸ்கியை கைது செய்து கங்கனம் கட்டி அலைவது. இவ்வளவு சிக்கல்களுக்கு நடுவில்

1. விக்டர் தன் தந்தைக்க செய்து கொடுத்த சத்தியத்தை நிறை வேற்றுகிறானா?

2. விக்டர் நியுயார்க் நகரத்தில் கால் பதித்தானா?

3.விக்டருக்கும் விமானபணிப்பெண்ணுக்கான காதல் என்னவாயிற்று?

4.விக்டருக்கு அந்த ஏர்போர்ர்டில் உதவி செய்தவர்களின் கதி என்ன?

வெள்ளி திரையில் கான்க அல்லது திருட்டு டிவிடி யில் காண்க....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில............

ஸ்பில்பெர்க் எடுத்ததில் இதுதான் குப்பை படம் என்று விமர்சிக்கிறவர்களும் இருக்கிறார்கள். ( நம்ம ஊரில் அன்பே சிவம் படம் குப்பை என்பது போல்)

படத்தில் காட்டப்படும் ஏர்போர்ட் அத்தனையும் செட்டு போட்டு எடுத்தார்கள் என்றால் நம்புங்கள் மக்களே...( புகைபடங்கள் மேலே உங்கள் பார்வைக்கு)


படத்தில் நடித்திருக்கும் குப்தா பாத்திர படைப்பு சென்னையில் பீடா கடை வைத்து இருந்தவரை சென்னை காவல் துறையினர் எப்படி எல்லாம் லஞ்சம் வாங்கி அவரை கொலைகாரனாக மாட்டினார்கள் என்று சொல்லும் போது நம் இந்திய மானமும் சென்னை மானமும் காற்றில் பறந்து விட்டது.

சட்டமா ?மனிதாபிமானமா? என்பதை க்ரொக்கோஷியா நாட்டில் இருந்து ஆயுர்வேத மருந்து தன் தந்தைக்கு எடுத்து வரும் போது அதை ஏஙர்போர்ட் நிர்வாகம் அனுமதி மறுக்க அதனை லாவகமாக பேசி விக்டர் அவனிடத்தில் சேர்பது அழகிலும் அழகு.

இந்த படத்தின் பாத்திர படைப்பு உண்மை சம்பவங்களின் அடிப்டையாக கொண்டது(The movie is based on the 18-year-stay of Mehran Karimi Nasseri in the Charles de Gaulle International Airport, Terminal I, Paris, France from 1988 to 2006.)


க்ரக்கோஷியா நாடு ஒரு கற்பனை நாடு.

தன் நாட்டில் கலவரம் ஏற்பட்டதை டிவியில் பார்க்கும் டாம் ஹங்ஸ் மொழி தெரியாமல் தவிப்பதும் கண்களில் நீர் மல்க அலைபான்வதும் அகதிகளின் வாழ்வில் நடக்கும் அப்பட்டங்களை அப்டியே செல்லுலாய்டில் வடித்து இருப்பார் இயக்குநர்.


குப்தாவாக நடித்து இருக்கும் இந்திய கிழவரின் நடிப்பு மிகை படுத்தாமல் இயல்பாய்இருக்கும்

படத்தின் இசை படத்தின் மிகப்பெரிய பலம்.

இந்த படம் கமெடி படம்தான் என்றாலும் மிக மெல்லிதான சோகத்தை படம் முழுக்க இழையோட விட்டுஇருப்பது இயக்குநரின் சாமர்த்தியம்.

இந்த படம் பார்க்கும் போது அகதியாய் இருப்பது எவ்வளவு கொடுமையான செயல் என்ன என்பது படம் பார்க்கும் போது நீங்கள் அறிவீர்கள்.

குவைத்திலருந்து இந்தியா வந்ததும் எர்போட்டில் செக்கிங் செய்து வெளி வருவதற்க்குள் தாவு தீத்துட்டான் பா என்று புலம்புகிறோம். அனால் அதே ஏர்போர்ட்டில் தங்கி வாழ்வது எவ்வளவு கொடுமையான செயல்.

ஏர்போர்ட் அகதி வாழ்கை கூட ஒரு விதத்தில் ஏற்றுக்கொள்ளலாம். இலங்க காடுகளில் மனைவி மக்களுடன் ராணுவத்தின் ஷெல் அடிப்புக்கு பயந்து பாம்பு மற்றும் கொடிய ஜந்துக்களுடன் வாழ்வது எவ்வளவு கொடுமை என்பதை எண்ணிபார்த்தால் எஸ் வி சேகர் போல் யாரும் தெனாவெட்டாக பேட்டி கொடுக்கமாட்டார்கள்




The Terminal

Theatrical release poster
Directed by Steven Spielberg
Produced by Steven Spielberg
Walter F. Parkes
Laurie MacDonald
Andrew Niccol
Written by Andrew Niccol
Sacha Gervasi
Jeff Nathanson
Starring Tom Hanks
Catherine Zeta-Jones
Music by John Williams
Cinematography Janusz Kaminski
Editing by Michael Kahn
Distributed by DreamWorks Pictures
Amblin Entertainment
Release date(s) June 18, 2004
Running time 128 min.
Country United States
Language English
French
Russian
Bulgarian
Budget $60,000,000
Gross revenue $219,417,255
Official website • IMDb • Allmovie


வாழ்வில் பார்க்க வேண்டிய படம்



அன்புடன் ஜாக்கிசேகர்

(பாகம்/5) அகதி வாழ்கை எப்படி இருக்கும்

அகதியாக இருப்பது எவ்வளவு கொடுமையான செயல். அதுவும் கதியற்றவராக இருக்கும் போதுஇந்த படித்த நாகரிக உலகம் எப்படி எல்லாம் அந்த நதி அற்ற கதியற்ற மனிதனை அலைகழிக்கிறது. இறையாண்மை என்ற பெயரில் அடிக்கும் கூத்துக்கள்அப்பப்பா கொடுமைடா சாமி.

அகதிகளின் வாழ்வு துயரங்களையும், அவர்களின் தாய் நாட்டு பாசத்தையும் தன் நாட்டு மக்களின் துயரம் பார்த்து ஏதும் செய்ய இயலாமல் அல்லல் படுவதும். தன் நாட்டு மொழியின் இரண்டொரு வார்த்தைகள் வெயிநாட்டுக்காரர் பேச கேட்டு புல்லரிப்பதும். தன் நாட்டு காலவரங்கள் என்று முடிவுக்கு வரும் என்று நித்தம் நித்தம் செத்து பிழைக்கும் கதியற்றவர்களின் வாழ்கை நிலை எவருக்கும் வர கூடாது.அது பற்றி இந்திய தமிழர்களுக்கு புரியாது. எனென்றால்

இந்திய தமிழர்கள் ஒருரூபாய்க்கு அரிசி வாங்கி வயிற்றை ரொப்பிக்கொள்ள முடியும்.

சுபிட்சமான வாழ்வு வாழ்வதால்
இழுப்பின் வலிகளை நம்மால் உணரமுடிவதில்லை. இரண்டு மணி நேர மின் வெட்டை நம்மால் தாங்க முடிவதில்லை. இப்படி சொல்லிகொண்டே போகலாம் .

அகதியாய் இருப்பவன் படும் பாடுகளை இவ்வளவு தத்ரூபமாக அழகாக சொன்னதில்லை என்பேன். படித்து விட்டால் பெரிய புடுங்கிகள் போல் டநினைக்கும் சென்னைவாசிகளில் சிலர் இந்த படத்தை கட்டடாயம் பார்க்க வேண்டும்.
சட்டம் என்பது வேறு. மனிதாபிமானம் என்பது வேறு என்பதையும், வாழ்வாதபாரம் பாதிக்http://2.bp.blogspot.com/_FDULgrSOClk/SQ1hFxxztBI/AAAAAAAAAno/dMeqVcmMo5I/s1600-h/catherine_zeta_jones1.jpgகப்ட்ட மனிதனின் கேள்விக்குறியான வாழ்க்கை நிலையையும் மிக அற்புதமாக எதார்தத்துடன் காட்சி படுத்தி தன் ஒரு சினிமா பிதாமகன் என்பதை நிருபித்து இருக்கிறார் இயக்குநர்ஸ்பில்பெர்க்

படத்தின்

பெயர் டெர்மினல் படம் வெளியான ஆண்டு 2004
அதே போல் படத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் சத்தியம். நம்மில் எத்தனை பேர் செய்து கொடுத்த சத்தியத்துக்கு விசுவாசமாய் இருக்கிறோம்

விதி படத்தில் மேட்டர் முடிந்த உடன் பூர்ணிமா மோகனிடம் அப்ப நீங்க செய்த சத்தியம்?
சத்தியம் சக்கரை பொங்கல் வரட்டுமாடி பேதை பெண்ணே என்று மோகன் சொல்லுவார் இந்திய அரசியல் வாதிகள் சத்தியமும் சக்கரை பொங்கல் வகையை சார்ந்ததே.

படத்தின் கதையின் நாயகன் விக்டர் நவோஸ்கி (டாம்ஹாங்ஸ்)தன் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்துக்காக நாயாய் பேயாய் அலைவதும் ரொம்ப அற்புதமாகஅதன் அழகியல் மாறாமல் இயக்கிஇருக்கிறார்

விக்டர் நவோஸ்கி எனும் ஒருவன் ரஷ்யாவில் துண்டாடபட்ட நாடான க்ரோக்கிஷியாவில் இருந்து அமெரிக்காவின் நுயார்க் நகரில் இருக்கும் ஜான் எப் கென்னடி விமானநிலயத்தில் இறங்குகிறான் அவன் நியுயார்க் வந்ததன் நோக்கம் தன் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்திற்க்காக நியுயார்க் நைட்கிளப்பில் ஒருவரை சந்திக்க வேண்டும் அவ்வளவே.

அவன் கென்னடி விமான நிலயத்தில் இறங்கி வெளிவருவதற்க்குள் அவன் சொந்த நாடன க்ரோக்கோஷியாவில் உள் நாட்டு கலவரம் வெடித்து அரசாங்கம் கவிழ்ந்து விடுகிறது. இதனால் அவனின் சொந்த நாட்டு வீசா செல்லாமல் போகிறது.

அவன் திரும்பவும் சொந்த நாட்டிற்க்கு போகவும் முடியாது .அங்கே கலவரம்,நுயுயார்க் நகரத்தி்லும் கால் பதிக்க முரயாது எனெனில் கலவர நாட்டின் குடிமகன் அவன்நாட்டில் அவனுக்கு கொடுத்த வீசாகொடுத்த கவர்மென்ட் கலைந்ததால் அதுவும் முடியாது.

அவன் கென்னடி ஏர்போட்டில் இருந்து வெளியே ஒரு அடி எடுத்து வைத்தால் கூட கைது செய்து சிறையில் தள்ள ரெடியாக இருக்கிறது கென்னடி ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆட்கள்.


அவன் அந்த ஏர்போர்ட்டிலேயே காலம் தள்ள வேண்டிய நிலமை. அவன் எங்கு தங்குவான் அவனுக்குஎப்படி சாப்பாடு கிடைக்கிறது அதற்க்கு அவன் என்ன என்ன காரியங்கள் செய்கிறான் என்பதை சுவைபட சொல்லிஇருக்கிறார் இயக்குநர் இதற்க்கு நடுவில் விமான பணிப் பெண்ணான காத்தரீன் ஜீட்டா ஜோன்ஸ் மீது காதல் வேறு..


படித்தவர்கள்சட்டம் இருக்கிறது என்ற காரணத்தால் எப்படி எல்லாம் ஆட்டம் போடுகிறார்கள் என்பதையும் அதிகாரவர்கத்தில்இருப்பவர்களுக்கும்கீழ் நிலை மக்களுக்கும் உள்ளஇடைவெளிகளை மிக அற்புதமாக சொல்லி இருக்கிறார்.ஸ்பில்பெர்க்

அந்த ஏர்போட்டில் காலம் தள்ளும் போது அவனுக்கு நண்பர்களாக குப்தா எனும் இந்திய கிழவர்மற்றும் சிலரும் நட்பாகிறார்கள்.

ஒரு கட்டத்தில் அந்த கென்னடிஏர்போர்ட்டில் விக்டர் நவோஸ்க்கியை தெரியாதவர்களே இல்லை என்ற நிலமை. அதே போல் எர்போர்ட் அத்தாரிட்டி ஆபிஸர் விக்டர் நவோஸ்கியை கைது செய்து கங்கனம் கட்டி அலைவது. இவ்வளவு சிக்கல்களுக்கு நடுவில்

1. விக்டர் தன் தந்தைக்க செய்து கொடுத்த சத்தியத்தை நிறை வேற்றுகிறானா?

2. விக்டர் நியுயார்க் நகரத்தில் கால் பதித்தானா?

3.விக்டருக்கும் விமானபணிப்பெண்ணுக்கான காதல் என்னவாயிற்று?

4.விக்டருக்கு அந்த ஏர்போர்ர்டில் உதவி செய்தவர்களின் கதி என்ன?

வெள்ளி திரையில் கான்க அல்லது திருட்டு டிவிடி யில் காண்க....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில............

ஸ்பில்பெர்க் எடுத்ததில் இதுதான் குப்பை படம் என்று விமர்சிக்கிறவர்களும் இருக்கிறார்கள். ( நம்ம ஊரில் அன்பே சிவம் படம் குப்பை என்பது போல்)

படத்தில் காட்டப்படும் ஏர்போர்ட் அத்தனையும் செட்டு போட்டு எடுத்தார்கள் என்றால் நம்புங்கள் மக்களே...( புகைபடங்கள் மேலே உங்கள் பார்வைக்கு)


படத்தில் நடித்திருக்கும் குப்தா பாத்திர படைப்பு சென்னையில் பீடா கடை வைத்து இருந்தவரை சென்னை காவல் துறையினர் எப்படி எல்லாம் லஞ்சம் வாங்கி அவரை கொலைகாரனாக மாட்டினார்கள் என்று சொல்லும் போது நம் இந்திய மானமும் சென்னை மானமும் காற்றில் பறந்து விட்டது.

சட்டமா ?மனிதாபிமானமா? என்பதை க்ரொக்கோஷியா நாட்டில் இருந்து ஆயுர்வேத மருந்து தன் தந்தைக்கு எடுத்து வரும் போது அதை ஏஙர்போர்ட் நிர்வாகம் அனுமதி மறுக்க அதனை லாவகமாக பேசி விக்டர் அவனிடத்தில் சேர்பது அழகிலும் அழகு.

இந்த படத்தின் பாத்திர படைப்பு உண்மை சம்பவங்களின் அடிப்டையாக கொண்டது(The movie is based on the 18-year-stay of Mehran Karimi Nasseri in the Charles de Gaulle International Airport, Terminal I, Paris, France from 1988 to 2006.)


க்ரக்கோஷியா நாடு ஒரு கற்பனை நாடு.

தன் நாட்டில் கலவரம் ஏற்பட்டதை டிவியில் பார்க்கும் டாம் ஹங்ஸ் மொழி தெரியாமல் தவிப்பதும் கண்களில் நீர் மல்க அலைபான்வதும் அகதிகளின் வாழ்வில் நடக்கும் அப்பட்டங்களை அப்டியே செல்லுலாய்டில் வடித்து இருப்பார் இயக்குநர்.


குப்தாவாக நடித்து இருக்கும் இந்திய கிழவரின் நடிப்பு மிகை படுத்தாமல் இயல்பாய்இருக்கும்

படத்தின் இசை படத்தின் மிகப்பெரிய பலம்.

இந்த படம் கமெடி படம்தான் என்றாலும் மிக மெல்லிதான சோகத்தை படம் முழுக்க இழையோட விட்டுஇருப்பது இயக்குநரின் சாமர்த்தியம்.

இந்த படம் பார்க்கும் போது அகதியாய் இருப்பது எவ்வளவு கொடுமையான செயல் என்ன என்பது படம் பார்க்கும் போது நீங்கள் அறிவீர்கள்.

குவைத்திலருந்து இந்தியா வந்ததும் எர்போட்டில் செக்கிங் செய்து வெளி வருவதற்க்குள் தாவு தீத்துட்டான் பா என்று புலம்புகிறோம். அனால் அதே ஏர்போர்ட்டில் தங்கி வாழ்வது எவ்வளவு கொடுமையான செயல்.

ஏர்போர்ட் அகதி வாழ்கை கூட ஒரு விதத்தில் ஏற்றுக்கொள்ளலாம். இலங்க காடுகளில் மனைவி மக்களுடன் ராணுவத்தின் ஷெல் அடிப்புக்கு பயந்து பாம்பு மற்றும் கொடிய ஜந்துக்களுடன் வாழ்வது எவ்வளவு கொடுமை என்பதை எண்ணிபார்த்தால் எஸ் வி சேகர் போல் யாரும் தெனாவெட்டாக பேட்டி கொடுக்கமாட்டார்கள்




The Terminal

Theatrical release poster
Directed by Steven Spielberg
Produced by Steven Spielberg
Walter F. Parkes
Laurie MacDonald
Andrew Niccol
Written by Andrew Niccol
Sacha Gervasi
Jeff Nathanson
Starring Tom Hanks
Catherine Zeta-Jones
Music by John Williams
Cinematography Janusz Kaminski
Editing by Michael Kahn
Distributed by DreamWorks Pictures
Amblin Entertainment
Release date(s) June 18, 2004
Running time 128 min.
Country United States
Language English
French
Russian
Bulgarian
Budget $60,000,000
Gross revenue $219,417,255
Official website IMDb Allmovie


வாழ்வில் பார்க்க வேண்டிய படம்



அன்புடன் ஜாக்கிசேகர்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner